Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரசியல் மாற்றத்தில்... எமக்கு, நம்பிக்கையில்லை -காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள். அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் வீட்டுக்கு அனுப்பக்கோரி இடம்பெறும் போராட்டங்கள் காரணமாக காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நன்மை என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கேள்வியெழுப்பியுள்ளனர். இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாவதி ஆனந்தநடராஜா இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை சிங்கள மக்களால் சமாளிக்க முடியாதுள்ளது . 69 லட்சம் மக்களால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதியையும் அவர்களது குடும்பத்தினர…

  2. அரசாங்கத்திற்கு எதிரான... நம்பிக்கையில்லாப் பிரேரணை, 19ஆம் திகதி கையளிக்கப்படும் – எதிர்க் கட்சி. அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் எதிர்வரும் 19ஆம் திகதி (செவ்வாய்கிழமை) கையளிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், இந்தப் பிரேரணை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என தெரிவித்தார். தவறினால் புதன் கிழமை பிரேரணையை கையளிக்கவுள்ளதாக தெரிவித்த அவர், இந்த நாடாளுமன்ற வாரத்தின் முதல் இரண்டு நாட்களுக்குள் அது கையளிக்கப்படும் என்றும் அவர் கூறினார். ந…

  3. இலங்கையை தரமிறக்கிய உலகின் நிதித் தரப்படுத்தும் நிறுவனங்கள் April 17, 2022 அனைத்துலக நிதித் தரப்படுத்தும் நிறுவனங்கள் இலங்கையை மேலும் தரமிறக்கியுள்ளன. எஸ் அன் பி எனப்படும் நிதித் தரப்படுத்தும் நிறுவனம் இலங்கையை சி.சி.சி என்ற தரத்தில் இருந்து சி.சி நிலைக்கு தரமிறக்கியுள்ளது. இந்த நிரலானது இறுதி நிலையில் இருந்து மூன்றாவது தரமாகும். அதேசமயம், பிற்ஸ் எனப்படும் நிதித் தரப்படுத்தும் நிறுவனம் இலங்கையை சி.சி என்ற தரத்தில் இருந்து சி என்ற நிலைக்கு தரமிறக்கியுள்ளது, இது முற்றான வீழ்ச்சிக்கு முதல்படியில் உள்ள நிலையாகும். இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார, அரசியல் மற்றும் சமூக உறுதித் தன்மையற்ற நிலையைத் தொடர்ந்து இந்த நிறுவனங்கள் இலங்…

  4. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் செவ்வாயன்று : சுமந்திரன் (ஆர்.ராம்) ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்படும் ஜனாதிபதிக்கு எதிரான குற்றவியல் பிரேரணை மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஆகியவை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை எடுக்கப்படவுள்ளது. இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கையில், ஜனாதிபதிக்கு எதிரான குற்றவியல் பிரேரணை மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழு கூட்டம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. இதன்போ…

  5. காணாமல் போனவர்களின் உறவுகளுடன்... ஒருநாள், போராடுங்கள் – சிங்களவர்களுடன் போராட செல்லும்... தமிழ் இளைஞர்களுக்கு, சிறிதரன் அழைப்பு காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுடன் ஒருநாள் போராடுமாறு சிங்கள இளைஞர்களுடன் இணைந்து போராட செல்லும் தமிழ் இளைஞர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தர்மபுரம் பகுதியில் கண்டாவளை பிரதேச பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போதே அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “ சிங்கள இளைஞர்களுடன் போராட்டத்திற்கு செல்ல தயாராகும் இளைஞர்களிடம் நான் பகிரங்கமாக கேட்கிறேன். இத்தனை நாட்களாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தெருக்களில் போராடிக்கொண்டு இருக்கிறார்…

  6. புதிய பிரதமராக... பதவியேற்கவுள்ளதாக, வெளியான தகவல் – நாமல் விளக்கம் பிரதமர் பதவிக்கு தான் நியமிக்கப்போவதாக வெளியான தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவையென்றும் அமைச்சுப்பதவியை தான் எதிர்பார்க்கவில்லை என்றும் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். சமகால நிலைமைகள் தொடர்பாக தமிழ் ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்கின்றேன். பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. எரிபொருட்கள் உள்ளிட்டவை இலகுவாக பெற்றுக்கொள்வதில் அசௌகரியமான நிலைமைகள் உள்ளன. இந்தப் பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வினை காண வேண்டியுள்ளது. மக்களின்…

  7. போராட்டங்களை... கட்டுப்படுத்த, இராணுவம் – பாதுகாப்பு அமைச்சு விளக்கம் அமைதியான போராட்டங்களை கட்டுப்படுத்த இராணுவ அதிகாரத்தை பயன்படுத்தப் போவதில்லை என பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். மேலும், ஜனநாயக ரீதியில் நடைபெறும் அமைதியான போராட்டங்களை ஒடுக்க இராணுவம் அனுப்பப்பட மாட்டாது என்றும் அறிவித்துள்ளார். சட்டவிரோதமான உத்தரவுகளை அமுல்படுத்துவதற்கு முன்னர் பல தடவைகள் சிந்திக்குமாறு பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவ தளபதி சவேந்திர சில்வாவிடம்பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கோரியிருந்தார். இந்நிலையில் இதற்கு பதிலளித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) அறிக்கை ஒன்றினை வெளியிட்டு பாதுகாப்பு அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. மேலும் நாட்டின்…

  8. சபாநாயகரிடம்... நம்பிக்கையில்லாப், பிரேரணை.. கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பேரணி! அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் விரைவில் சமர்பிக்க ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளது. பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் அதனை கையளிக்க நேற்றிரவு இடம்பெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதேவேளை அரசாங்கத்தின் மக்கள் விரோத செயற்பாடுகளுக்கு எதிராக கண்டியில் இருந்து கொழும்பு வரை நடை பயணப் போராட்டத்தை ஏற்பாடு செய்வது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. 24ஆம் திகதி கண்டியில் ஆரம்பமாகும் குறித்த நடை பயணப் போராட்டம் மே 1ஆம் திகதி கொழும்பை செ…

  9. திங்கட்கிழமைக்குள்... எரிபொருள் விநியோகம், வழமைக்குத் திரும்பும்! திங்கட்கிழமைக்குள் எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. 37,500 மெட்ரிக் தொன் பெற்றோலை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று நாட்டை வந்தடைந்ததுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 41,000 மெட்ரிக் டன் டீசல் ஏற்றிச் செல்லும் கப்பல் வந்துள்ள நிலையில் எரிபொருளை இறக்கும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. https://athavannews.com/2022/1276913

  10. காலிமுகத்திடலில்... முன்னெடுக்கப்படும் போராட்டம், மகிழ்ச்சியாக... நேரத்தை செலவு செய்வதற்காகவே – கெஹெலிய! காலிமுகத்திடலில் இளைஞர்கள் கூடி முன்னேடுக்கும் போராட்டம் மகிழ்ச்சியாக நேரத்தை செலவு செய்வதற்காகவே தவிர சிறந்த நோக்கங்களிற்காக இல்லை என கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். இதேவேளை கோட்டா கோ ஹோம் என்பதன் அர்த்தம் குறித்து கேள்வி எழுப்பியுள்ள அவர், அரச தலைவர் பதவி விலகினால் ஆட்சிபொறுப்பை யார் ? ஏற்பது போன்ற விடயங்கள் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை எனவும் குற்றம்சாட்டினார் . மேலும் ஆட்சி கட்டமைப்பு இல்லாமல் நாட்டை பின்னோக்கி செல்ல அனுமதிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார். எந்த அரசியல்வாதியும் நாட்டை வேண்டுமென்றே வங்குரோத்து நிலைக்கு …

  11. 9ஆவது நாளாகவும்.. தொடரும், எழுச்சிப் போராட்டம் அரசியல் கட்சிகளின் தலையீடுகள் இன்றி, ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்படும் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் இன்று 09 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் கொழும்பு காலி முகத்திடலுக்கு வருகை தந்து பொதுமக்கள் இந்த போராட்டத்திற்கு தமது ஆதரவை வழங்கி வருகின்றனர். ஜனாதிபதியை பதவியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதேவேளை, காலிமுகத்திடலில் போராட்டம் இடம்பெறும் பகுதியில் நேற்று விளக்குகளால் ‘‘Go Home Gota’’ என அலங்கரிக்கப்பட்டு வேண்டுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது . https://athavannews.com/2022/1276850

  12. சர்வதேச நாணய நிதியத்துடன்... பேச்சுவார்த்தை – அலி சப்ரி, அமெரிக்காவுக்கு பயணம்! சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைக்காக நிதியமைச்சர் அலி சப்ரி உள்ளிட்ட குழுவினர் அமெரிக்கா நோக்கி பயணமாகியுள்ளனர். இந்த குழுவில் நிதியமைச்சருடன், மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோரும் இணைந்துள்ளனர். அதன்படி, அமெரிக்காவின் வொஷிங்டனில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் தலைமையகத்துக்கு செல்லும் அவர்கள், ஏப்ரல் 19 முதல் 24ஆம் திகதி வரை சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுவுள்ளனர். சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தை வெற்றியடையும் பட்சத்தில் இலங்கைக்கு 4 பில்லியன் அமெர…

  13. மின்வெட்டு... அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த அறிவிப்பு! நாட்டில் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நாளையும் இரண்டு மணித்தியாலங்கள் 15 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இரண்டு நாட்களிலும் மாலை 6 மணிக்கு பின்னர் மின்வெட்டு அமுல்படுத்தப்படாதென அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இதன்படி, காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியிலேயே மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. https://athavannews.com/2022/1276865

  14. நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி – கூட்டாக தீர்மானிக்க 10 தமிழ் கட்சிகள் இணக்கம்: சிறிகாந்தா நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பாக அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து பொதுவான குழு ஒன்றினை அமைத்து அதனூடாக செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி சிறிகாந்தா தெரிவித்தார். நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் நேற்று (சனிக்கிழமை) தமிழ்க் கட்சிகள், சிவில் அமைப்புக்கள், அரசியல் ஆய்வாளர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் இடம்பெற்றது. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் தொடர்பிலேயே 10 தமிழ் கட்சிகள் கூடி ஆராய்ந்திருந்தன. இந்த கலந்துரையாடலுக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவி…

  15. உகாண்டா சர்ச்சை - ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் விளக்கம் 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் கொழும்பில் இருந்து உகாண்டாவின் Entebbe சர்வதேச விமான நிலையத்திற்கு 102 தொன் அச்சிடப்பட்ட காகிதங்களை கொண்டு செல்வதற்கான முன்பதிவு கிடைத்ததாக ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விமானப் பொதி முழுமையாக வணிக செயற்பாடாக அமைந்ததுடன், அதனூடாக விமான நிறுவனத்திற்கும் நாட்டிற்கும் அந்நிய செலாவணியை கொண்டு வருவதற்கான சந்தர்ப்பம் கிடைத்ததாக நிறுவனம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உகாண்டா அரசாங்கத்தின் முன்பதிவிற்கமைய, பாதுகாப்பான அச்சிடும் செயற்பாட்டை மேற்கொள்ளும் இலங்கை உள்ளிட்ட உலகின் பல்வேறு தொழிற்சாலைகளுக்கு, அச்சிடப்பட்ட உகாண்டா நாட்டின் நாணயத்தாள்களை கொண்…

  16. இலங்கை பொருளாதார நெருக்கடி: "வீட்டில் சீனி கூட இல்லை, புதுவருடம் கொண்டாடுவது எப்படி?" யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, இந்துராணி பாரிய பொருளாதார நெருக்கடிக்குள் இலங்கை சிக்கித் திணறிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ் - சிங்கள சித்திரைப் புது வருடம் இன்று பிறந்திருக்கிறது. நாளாந்த அடிப்படைத் தேவைகளுக்கான செலவுகளையே ஒப்பேற்ற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் இலங்கை மக்களில் கணிசமானோருக்கு புது வருடத்தைக் கொண்டாடும் வசதியும், மனநிலையும் இருப்பதாகத் தெரியவில்லை. குறிப்பாக வருமானம் குறைந்த ஏழைகளின் வீடுகளில் புதுவருடத…

  17. பசில் ராஜபக்சவுக்கு... கொரோனா. முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் சிகிச்சைகளுக்காக அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் கூறப்படுகிறது. https://athavannews.com/2022/1276719

    • 10 replies
    • 596 views
  18. ஜெட் விமானத்தில்... நாட்டை விட்டு, பசில்... வெளியேறவில்லை – விமான நிலையம் உறுதிப்படுத்தியது ! பசில் ராஜபக்ஷ இன்று சனிக்கிழமை இரத்மலானை கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தனியார் ஜெட் விமானத்தில் நாட்டை விட்டு வெளியேறினார் என்ற செய்திகளை விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் மறுத்துள்ளது. இந்த இக்கட்டான நேரத்தில் பொருளாதாரத்திற்கு உறுதுணையாக இருக்கும் இந்த சர்வதேச பயணிகளின் உரிமையை பாதுகாக்கும் வகையில் தவறான தகவல்களை பரப்புவதை தவிர்க்குமாறு அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ , அமெரிக்காவின் கீழ் பதிவு செய்யப்பட்ட தனியார் ஜெட் விமானத்தில் இரத்மலானை விமான நிலையம் ஊடாக நாட்டை விட்டு வெளியேறியதாக செய்தி…

    • 4 replies
    • 290 views
  19. பொருளாதார பின்னடைவு, யுத்தகுற்றம் மற்றும் ஊழலுக்கு பொறுப்பேற்று... ஜனாதிபதி பதவி விலகவேண்டும் – சுமந்திரன்! பொருளாதார பின்னடைவு, யுத்தகுற்றம் மற்றும் ஊழலுக்கு பொறுப்பேற்று ஐனாதிபதி பதவி விலகவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ராஜபக்ஷ இருட்டு அகன்று போக வேண்டும். இனமதமொழி வேறுபாடின்றி ஜனாதிபதி பதவி விலக வேண்டுமென மக்கள் கோருகின்றனர். அந்தவகையில் தற்போது ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுவரும் போராட்டத்…

  20. தேசிய அரசாங்கம் அமைக்கப் பட்டாலும்... அமைச்சுப் பதவியை, ஏற்க மாட்டோம். – சுமந்திரன்.- தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைச்சுப் பதவியை ஏற்பதற்கான சாத்தியங்கள் இல்லையென எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று நடைபெற்ற தமிழரசு கட்சியின் அரசியல் குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். மேலும் நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறைமையை அரசாங்கம் தானாகவே முன்வந்து இரத்து செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டை பிரதமர் மஹிந்தவிடம் நேரில் முன்வைத்ததாகவும் அவர் கூறினார். பொருளாதார நெருக்கடியால் அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் இருந்து மீள்வதற்கான …

    • 27 replies
    • 1.1k views
  21. " கோட்டா கோ கமவில் " துரித இணைய வசதிக்காக நிர்மாணிக்கப்பட்டது இணையக்கோபுரம் (நா.தனுஜா) அரசாங்கத்திற்கு எதிராகத் தொடர்ச்சியாகப் போராட்டம் இடம்பெற்றுவரும் காலிமுகத்திடல் - 'கோட்டா கோ கம' பகுதியில் இணைய வலையமைப்பு வசதி மிகவும் மந்தகரமான முறையில் காணப்பட்டுவந்த நிலையில், அதனை நிவர்த்திசெய்யும் விதமாக போராட்டக்காரர்களால் புதிதாக இணையக்கோபுரமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளடங்கலாக ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு வலியுறுத்தி கடந்த சனிக்கிழமை கொழும்பு - காலிமுகத்திடலில் ஆரம்பமான போராட்டம், பல்வேறுபட்ட புத்தாக்க சிந்தனைகளுடன் மிகவேகமாக விரிவடைந்துவருகின்றது. அந்தவகையில் 'கோட்டா கோ கம' எனப்பெயரிடப்பட்டுள்ள போராட்டம்…

    • 9 replies
    • 606 views
  22. கொழும்பு... பங்குச் சந்தை, மூடப்படுகின்றது. கொழும்பு பங்குச் சந்தை தற்காலிகமாக ஐந்து நாட்களுக்கு மூடப்படவுள்ளதாக பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை (18) முதல் 5 நாட்களுக்கு கொழும்பு பங்குச் சந்தை மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் நிலைமையை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக குறித்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. https://athavannews.com/2022/1276828

  23. 6 ஆவது நாளாகவும்... தொடரும், மக்கள் எழுச்சிப் போராட்டம் ! கொழும்பு – காலிமுகத்திடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள மக்கள் எழுச்சிப் போராட்டம் இன்று(வியாழக்கிழமை) ஆறாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஜனாதிபதி உள்ளிட்ட முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு விரைவில் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று கோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த சனிக்கிழமை கொழும்பு, காலி முகத்திடலில் பாரிய அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகிய நிலையில், நேற்றும் கொட்டும் மழைக்கு மத்தியில் இரவோடு இரவாக மக்கள் எழுச்சிப் போராட்டம் தொடர்கின்றதோடு ஏராளமான இளைஞர் யுவதிகள் குறித்த …

  24. எரிபொருள் தட்டுப்பாடு – சுற்றுலாப் பயணிகளும் போராட்டம். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அம்பலாங்கொட கஹவாவில் சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று இன்று (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எரிபொருள் பற்றாக்குறையால் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்ய முடியவில்லை என தெரிவித்தே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். https://athavannews.com/2022/1276273

    • 12 replies
    • 726 views
  25. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை பேதங்களின்றி முன்னெடுக்க ஒன்றிணையுங்கள் April 16, 2022 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை உணர்வெழுச்சியுடன் பேதங்களின்றி முன்னெடுப்பதற்கு ஒன்றிணையுமாறு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு வடக்கு, கிழக்கு அழைப்பு விடுத்துள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு வடக்கு, கிழக்கு விடுத்துள்ள ஊடக அறிக்கையில், தமிழினம் இலங்கை அரசாலும் அதன் நேச நாசகார சக்திகளாலும் திட்டமிட்டு 2009 இல் கொன்றொழிக்கப்பட்ட நாளை, மருந்தையும் உணவையும் தடைசெய்து தமிழரைத் தலைவணங்க வைக்க முயன்று தோற்று யுத்த சூனிய வலயங்கள் என்று உத்தியோக பூர்வமாக வலையங்களை அறிவித்து நரித்தனமாக மக்களை அவ்வலயங்களுள் ஒன்றுகூட்டி …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.