Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மன்னாரில்... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, 4 பேர் கடல் வழியாக... தனுஷ்கோடியை சென்றடைந்தனர்! இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவு, அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு வருகின்ற நிலையில் மேலும் மன்னாரில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை தனுஷ்கோடியை சென்றடைந்துள்ளனர். அண்மையில் மன்னார் மற்றும் வவுனியாவைச் சேர்ந்த 3 குடும்பங்களை சேர்ந்த 12 பேர் கடல் வழியாக தனுஷ்கோடி சென்றடைந்தனர். தமிழகத்திற்கு அகதிகளாக வந்த அவர்களை மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை )அதிகாலை மன்னார் முத்தரிப்புத்துறை யை சேர்ந்த ஒர…

  2. இந்த அரசாங்கம் பதவி விலகாது – போராட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு ஹரீன் கோரிக்கை! நாட்டின் நெருக்கடியை தீர்க்க நாடாளுமன்றம் தயாராக இல்லை என்பதால் அரசாங்கத்துக்கு எதிராக நடத்தும் போராட்டத்தை மக்கள் தொடரவேண்டும் என எதிர்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், தற்போதைய அரசாங்கம் பதவி விலகாது எனவும், அவர்கள் பதவி விலகும்வரை போராட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1275772

  3. பொருளாதார பிரச்சினை முடிவடையும் வரை.. நாடாளுமன்றத்திற்கு, சமூகமளிக்க போவதில்லை என அறிவித்தார் ஆளும் தரப்பு எம்.பி! நாட்டின் பொருளாதார பிரச்சினை முடிவடையும் வரை தான் நாடாளுமன்றத்திற்கு சமூகமளிக்க போவதில்லை என ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஷாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மூன்று மாத காலத்திற்கு தான் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்த போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1275759

  4. இலங்கை பொருளாதார நெருக்கடி: மத்திய வங்கி முன்னாள் ஆளுநருக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது ஏன்? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அஜித் நிவார்ட் கப்ரால் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலிற்கு வெளிநாடு செல்ல, கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்றைய தினம் (07) இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. குற்றவியல் நம்பிக்கை மீறல், வங்கியாளரினால் முன்னெடுக்கப்பட்ட குற்றவியல் நம்பிக்கை மீறல் மற்றும் குற்றவியல் சட்டம் மற்றும் பத்திரங்கள், பரிவர்த்தனைகள் கட்டளை சட்டத்தின் கீழ் நிதி மோசடி மற்றும் முறைகேடு இடம்பெற்றுள்ளமை உள்ளிட்ட 6 குற்…

  5. புதிய அமைச்சரவை.. அடுத்த வாரம், பதவியேற்கும் – ஆளும்தரப்பு அறிவிப்பு ! புதிய அமைச்சரவை அடுத்த வாரம் பதவியேற்கும் என ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர இதனை தெரிவித்தார். https://athavannews.com/2022/1275765

  6. சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு... சதொசயில், நிவாரணப் பொதி! சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக 5 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதியை சலுகை விலையில் வழங்கவுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, 5 கிலோ நாட்டரிசி, 5 கிலோ சம்பா அரிசி, 400 கிராம் பால்மா, ஒரு கிலோ சிவப்பு சீனி மற்றும் 100 கிராம் தேயிலை என்பன குறித்த பொதியில் உள்ளடங்குவதோடு, இந்த நிவாரணப் பொதி ஆயிரத்து 950 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சந்தை விலைகளுடன் ஒப்பிடுகையில், இந்த 5 பொருட்களின் கொள்முதல் விலையைவிட நுகர்வோர் 700 ரூபாய் அல்லது அதற்கு மேற்பட்ட நன்மைகளைப் பெறுவதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளர்து. http…

  7. திங்களும்... நாடாளுமன்றை கூட்டுங்கள் – ரணில் கோரிக்கை நாடாளுமன்றத்தை எதிர்வரும் திங்கட்கிழமை கூட்டுமாறு முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில் தீர்மானங்களை எடுப்பதில் நாடாளுமன்றம் அதிக ஈடுபாடு காட்ட வேண்டும் என குறிப்பிட்டார். அவரது இந்த கருத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜயதாச ராஜபக்ஷ மற்றும் எரான் விக்ரமரத்ன ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். https://athavannews.com/2022/1275827

  8. நாடாளுமன்றுக்கு, ஜனாதிபதி இரகசியமாக வரவில்லை – அவர் பதவி விலக மாட்டார்: காஞ்சன இந்த வீர வசனத்தை முடிந்தால் எரிபொருள் வரிசையில் நிற்பவர்களிடம் கூறுங்கள் - எதிர்க்கட்சி! நாடாளுமன்றுக்கு ஜனாதிபதி இரகசியமாக வந்துவிட்டுச் செல்லவில்லை என்றும் மாறாக எதிர்க்கட்சிகளே ஜனாதிபதி வருவதை முன்னிட்டு ஒழிந்தார்கள் என்றும் இராஜாங்க அமைச்சரான காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அத்தோடு, அரசமைப்புக்கு இணங்க ஜனாதிபதி விலக மாட்டார் என்றும் அவர் எதற்காக பதவியிலிருந்து இராஜினாமா செய்ய வேண்டும் என்றும் கேள்வியெழுப்பினார். மேலும், ஜனாதிபதியும் பிரதமரும் எதிர்க்கட்சிகளுக்கு சந்தர்…

    • 3 replies
    • 188 views
  9. “ஜனாதிபதி பதவி விலகி.. ராஜபக்ஷ குடும்பமும், ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டும்” ஜனாதிபதி பதவி விலகி ராஜபக்ஷ குடும்பமு ம் ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மானப்பெரும கேட்டுக்கொண்டார். இன்று நாடாளுமன்றில் உரையாற்றிய அவர், “இந்த நாடு நன்றாகவே இருந்தது. மக்கள் கடந்த காலங்களில் வரிசையில் இருக்கவில்லை. இந்நிலையில் மக்களின் பேச்சை அரசாங்கம் செவிமடுக்காத காரணத்தினாலேயே இந்த விளைவு ஏற்பட்டது. உரப்பிரச்சினை, ஆசிரியர்களின் பிரச்சினை என்பவற்றில் மக்களின் குரலை அரசாங்கம் கேட்கவில்லை. தற்போது மக்கள், ஜனாதிபதியை வீட்டுக்குச் செல்லுமாறு கூறுகிறார்கள். இதனையேனும் அரசாங்கம் செவிமடுக்க வேண்டும். அரசாங்கம் அவ்…

    • 1 reply
    • 125 views
  10. அமெரிக்க டொலர் 321 ரூபாய், ஸ்டெர்லிங் பவுண்ட் 421 ரூபாய்..! மத்திய வங்கி இன்று வெளியிட்ட நாணய மாற்று விகிதங்களின்படி டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 321 ரூபாயாகவும் கொள்விலை 310 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. இதேவேளை ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 421 ரூபாயாகவும் கொள்விலை 407 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. யூரோ ஒன்றின் விற்பனை விலை 352 ஆகவும் கொள்விலை 340 ஆகவும் அதிகரித்துள்ளது என மத்திய வங்கி அறிவித்துள்ளது. https://athavannews.com/2022/1275832

  11. மொட்டுக் கட்சியும், சேவல் கட்சியும்... மலையக மக்களை ஏமாற்றியுள்ளது – வேலு குமார் மொட்டுக்கட்சி நாட்டை ஏமாற்றியது. சேவல் கட்சி மலையக மக்களை ஏமாற்றியது. இன்று இருவரும் சேர்ந்து நாடகம் ஆடுகின்றனர்.” என தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ர உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார். கண்டியில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”நாட்டு மக்கள் விரக்த்தியில் உள்ளனர். தாம் ஏமாற்றப்பட்டோம் என்ற வேதனையில் உள்ளனர். மலையக மக்கள் அதையும் தாண்டிய கோபத்தில் உள்ளனர். எந்த ஒரு அரசாங்கத்திலும் இடம்பெறாத பாராபட்சம், இந்த அரசாங்கத்தில் மலையக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. மொட்டு கட்…

  12. இலங்கையின்... தற்போதைய நிதியமைச்சர், அலி சப்ரியே – அரசாங்கம் நிதி அமைச்சர் பதவியில் அலி சப்ரி தொடர்ந்தும் நீடிப்பதாக இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதம் தற்போது நாடாளுமன்றில் இடம்பெற்று வருகிறது. இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நிதியமைச்சரொருவர் இல்லாதமை தொடர்பாக சபையின் கவனத்திற்கு கொண்டுசென்றபோதே இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்தார். அலி சப்ரியின் பதவி விலகலை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால், அவரே நிதி அமைச்சர் பதவியில் நீடிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். https://athavannews.com/2022/1275867

  13. IMF உடன், கலந்துரையாடலை நடத்துமாறு... ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்து! அமைதியான முறையில் ஒன்றுகூடும் சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரம் ஆகியவை இடம்பெற்றால் அவை ஜனநாயகத்தின் இரு தூண்கள் என உறுப்பு நாடுகளின் கூட்டு அறிக்கையூடாக ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது. மேலும் அனைவரும் நிதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் அவசரகாலநிலை பிரகடனம் இரத்து செய்யப்பட்டமை சாதகமான நடவடிக்கை என்றும் ஐரோப்பிய ஒன்றிய ம் அறிக்கை ஒன்றின் ஊடக அறிவித்துள்ளது. இலங்கை மக்களைப் பாதித்துள்ள தற்போதைய நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஆக்கபூர்வமான மற்றும் ஜனநாயக வழிகளை ஆராயுமாறு அனைத்துத் தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளது. இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் நிலைய…

  14. ஆனமடுவ- வடுவத்தேவ குளத்துக்கு அருகிலுள்ள காணியொன்றிலிருந்து, ஒரு வருடத்துக்கு முன்னர் காணாமல் போன வெள்ளவத்தையைச் சேர்ந்த வர்த்தகரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 12 மணித்தியால தேடுதலின் பின்னர், ஒரு வருடமாக நீடித்த மர்மம் துலங்கியது. 58 வயதான அண்ணாமலை பழனி என்ற வர்த்தகரின் சடலமே கடந்த 4ஆம் திகதி மீட்கப்பட்டது. வர்த்தகரின் சடலம் பாயில் சுற்றப்பட்டு, புதைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து சடலத்தை பிரேத பரிசோதனைக்காக புத்தளம் நீதிமன்ற மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு நீதவான் உத்தரவிட்டார். கொல்லப்பட்ட அண்ணாமலை பழனி, 15 வருடங்களின் முன்னர் தனது மனைவி, பிள்ளைகளுடன் இத்தாலி சென்றுள்ளார். அங்கு வர்த்தகத்தில் ஈடுபட…

  15. அவசரகால நிலைமை பிரகடனம், ஊரடங்கு சட்டம் சமூக வலைத்தள இடையூறு சட்டவிரோதமானவை - சுமந்திரன் ( எம்.எப்.எம்.பஸீர்) ஜனாதிபதி அவசரகால சட்டத்தை பிரகடனம் செய்ததும் அதனை பாராளுமன்றின் அனுமதிக்காக முன் வைக்க வேண்டும். எனினும் இங்கு அச்சட்டம் பாராளுமன்ற அனுமதிக்காக முன் வைக்கப்படாது ஏப்ரல் 5 ஆம் திகதி மீளப் பெறப்பட்டுள்ளது. அதனால் ஜனாதிபதி அவசரகால சட்டத்தை பிரகடனம் செய்தமை, ஊரடங்கு சட்டம் பிறப்பித்தமை, பாதுகாப்பு அமைச்சின் கோரிக்கைக்கு அமைய, தொலைதொடர்புகள் ஒழுங்குபடுத்தல்கள் ஆணைக் குழு ஊடாக சமூக வலைத் தளங்களின் செயற்பாட்டுக்கு ஏற்படுத்தப்பட்ட இடையூறுகள் என்பன சட்டத்துக்கு முரணனாவை. என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் இன்று (7) உயர் நீதிமன்றில் வாதிட…

    • 1 reply
    • 361 views
  16. பஷில் தலையிடாமல் இருந்தால் பிரச்சினைகளுக்கு முரண்பாடற்ற தீர்வு காணலாம் : திஸ்ஸ விதாரண (இராஜதுரை ஹஷான்) மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி உட்பட பொருளாதார நிபுணர்கள் அடங்கிய பலதரப்பு விவகாரங்கள் மற்றும் கடன் நிலைபேற்றுத்தன்மை தொடர்பான ஆலோசனை குழுவை ஜனாதிபதி நியமித்துள்ளமை காலம் கடந்த தீர்மானமாக காணப்பட்டாலும் வரவேற்கத்தக்கது. பொருளாதார மீட்சி தொடர்பிலான தீர்மானங்களில் முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ தலையிடாமல் இருந்தால் பிரச்சினைகளுக்கு முரண்பாடற்ற தீர்வு காணலாம் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார். பலதரப்பு விவகாரங்கள் மற்றும் கடன் நிலைபேற்றுத்தன்மை தொடர்பான ஆலோசனை குழு தொடர்பில் வினவிய…

  17. ‘திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில்... பேருந்து இயங்காது – இப்போதே ஊர்களுக்கு செல்லுங்கள்’: பேருந்து உரிமையாளர்கள் சங்கம்! நாட்டில் நிலவும் டீசல் தட்டுப்பாடு காரணமாக, புத்தாண்டு பண்டிகையை கொண்டாடும் வகையில், கிடைக்கப்பெற்றுள்ள பேருந்துகளில் ஏறி தமது சொந்த ஊர்களுக்கு செல்லுமாறு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் மக்களிடம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, போதிய எரிபொருள் வழங்கப்படாவிட்டால், எதிர்வரும் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பேருந்துகளை இயக்க முடியாது என தெரிவித்தார். நாட்டில் கடந்த சில நாட்களாக தனியார் பேருந்து தொழில்துறை வீழ்ச்சியடைந்துள்ளதால்…

  18. ஜனாதிபதி கோட்டா – முன்னாள் பிரதமர் ரணில்... தனிப்பட்ட சந்திப்பு!! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதனை அடுத்து ஜனாதிபதிக்கும் முன்னாள் பிரதமருக்கும் இடையிலான தனிப்பட்ட சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றதாக ஐக்கிய தேசியக் கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச நாணய நிதியம் தொடர்பான விடயங்கள், இலங்கையின் தற்போதைய நிதி நிலை மற்றும் புதிய அரசாங்கத்தை அமைப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு பலதடவைகள் கோட்டபாய ராஜபக்ஷ, ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விட…

  19. அலரிமாளிகையினை... முற்றுகையிட்டு, போராட்டம் – பலப்படுத்தப்பட்டது பாதுகாப்பு! அலரிமளிகைக்கு முன்பாக தற்பொழுது பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. அரசாங்கத்திற்கு எதிரான குறித்த போராட்டத்தின் போது வீதி தடைகளைத் தகர்த்து ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னோக்கி நகர முயற்சித்துள்ளனர். இதனை தடுக்கும் வகையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1275688

  20. புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு – நிதி அமைச்சராக மீண்டும் மஹிந்த? புதிய அமைச்சரவை இன்று (வெள்ளிக்கிழமை) அல்லது நாளை பதவியேற்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், புதிய நிதி அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளகத் தகவல்களை மேற்கோள்காட்டி சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதேநேரம், சமல் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்பமாட்டாது எனத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும் முன்னைய அமைச்சரவை அமைச்சர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளன என தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக இருந்த சரத் வீரசேகரவிற்கு பதவி வழங்கப்படுவதில்லை எனவும்…

  21. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்பாக... வைத்தியர்கள், போராட்டம் ! யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் முன்பாக ஒன்றுகூடி வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அத்தியாவசிய மருந்துகள் இல்லை, சுகாதார கட்டமைப்பு சீர்குலைவு, இலவச மருத்துவம் ஆபத்தில் உள்ளது போன்ற பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் அவர்கள் ஏந்தியிருந்தனர். அரசாங்கத்தின் மோசமான நிதி நிர்வாகம் காரணமாக அத்தியாவசிய மருந்துகள் இல்லாமல் சுகாதார கட்டமைப்பு சீரழிந்து வருகின்றது என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக மக்களின் உயிர்கள் ஆபத்தில் உள்ள…

  22. புத்தாண்டில்... மின்வெட்டு, அமுல் படுத்தப்படாது என அறிவிப்பு! ஏப்ரல் மாதம் 13 மற்றும் 14ம் திகதிகளில் மின்சாரம் தடை ஏற்படுத்தப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். சித்திரை புத்தாண்டு தினங்களை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1275706

  23. 26 அமைச்சர்களின் இராஜினாமா.... வர்த்தமானி, மூலம் அறிவிப்பு! 26 அமைச்சர்கள் இராஜினாமா செய்துள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத்தினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, வெளிவிவகார, கல்வி, நெடுஞ்சாலைகள் மற்றும் நிதி ஆகிய அமைச்சுகளுக்கு நான்கு அமைச்சர்களை நியமிப்பதற்கான மற்றுமொரு வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1275696

  24. மத்திய வங்கியின்... புதிய ஆளுநராக, நந்தலால் வீரசிங்க நியமனம் மத்திய வங்கியின் ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று(வியாழக்கிழமை) மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இருந்து தனது நியமனக் கடிதத்தினை பெற்றுக்கொண்டார். அத்துடன், நிதியமைச்சின் செயலாளராக மஹிந்த சிறிவர்தனவும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். https://athavannews.com/2022/1275680

  25. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு... விரைவில் கவிழும் – வீ. இராதாகிருஷ்ணன் தற்போது இலங்கை மக்களும் கொதித்தெழுந்துள்ளனர். எனவே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு விரைவில் கவிழும் என நாடாளுமன்ற உறுப்பினர் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு, தொடர் மின்வெட்டு, பொருட்கள் விலையேற்றம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்நிலைமையை உருவாக்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் தலவாக்கலையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு சூளுரைத்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, ” மக்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.