Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்தப்படவுள்ள பொதுநலவாய மாநாட்டுக்கு கனேடியப் பிரதமர் ஸ்டீவன் ஹார்ப்பர் செல்லாமல் அங்கு அரச தூதுக் குழுவை மட்டும் அனுப்பும் தீர்மானம், கனடாவின் கொள்கை ரீதியான நிலைப்பாட்டுக்கு முரணானது என்று கனடாவின் எதிர்க்கட்சியான புதிய ஜனநாயகக் கட்சி கூறியுள்ளது. தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=21232

    • 0 replies
    • 505 views
  2. தமிழீழ தேசியத்தை தொலைத்து அவர்கள் தடம்மாறி பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தமிழ் தேசியம் பேச விளையும் இராணுவ துணைக்குழுக்களுடன் தமிழ் தேசியக்கூட்டமைப்பு கூட்டணி சேருவதா? என்று தமிழ் மக்கள் பலரும் விசனம் தெரிவித்துள்ளனர். தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கும் துணை இராணுவக்குழுக்களின் அரசியல் கட்சியான ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடாத்தியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீகாந்த தெரிவித்தள்ளார். தமிழீழ தேசியத்தை மறந்து சலுகைகளுக்காக விலை போன அரசியல் தலைவர்களுக்கு சற்றும் குறைவானவர்கள் தாம் இல்லை என்பதை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் அண்மைய நடவடிக்கைகள் இடம் பெறுவதாக தெரிவித்த லண்டனை சேர்ந்த கனகேந்திரன் எனும் தமிழர் இது போரின் போத…

    • 8 replies
    • 2k views
  3. 6,000 மாத்திரைகளுடன் பாகிஸ்தான பிரஜையொருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வைத்து இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். மாத்திரைகளை பயணப்பொதியில் மறைத்து வைத்து கொண்டுவந்தபோதே சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகள் மாத்திரைகளை மீட்டுள்ளதுடன் அவரையும் கைது செய்துள்ளனர். மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான இந்த மாத்திரைகள் மன நோயாளிகள் சிகிச்சை பயன்படுத்தப்படுகின்ற மாத்திரைகளாகும். எனினும், அந்த மாத்திரைகள் மாணவர்கள் பயன்படுத்துவதாக வதந்தி நிலவுகிறது. ஓமன் ஏர்வேஸ் விமானத்தில் மஸ்கட்டிலிருந்து இன்று காலை வந்தபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/74951-6000---.html

  4. கனடாவிலிருந்து வந்த பெண் விபத்தில் பலி : யாழில் சம்பவம் யாழ்ப்பாணம் மண்கும்பான் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் கனடாவில் இருந்து தாய் நாட்டிற்கு வந்திருந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ் விபத்து சம்பவத்தில் ஊர்காவற்றுறையை சொந்த இடமாகவும் தற்போது கனடாவில் வசித்து வந்தவருமாகிய விஜயரூபன் சர்மிளா (37வயது) எனும் பெண்ணே உயிரிழந்தவராவர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த பெண் இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து கனடாவில் குடியேறி அங்கே வசித்துவந்துள்ளார்.இவருக்கு 11வயது மற்றும் 3 வயதுகளில் இரு பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சொந்த நாட்டிற்கு தனது பிள்ளைகள் இருவருடனும் வருகை தந்துள்ளார். …

  5. (எம்.மனோசித்ரா) இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங் ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை இன்று புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். சிறப்பு விமானத்தில் நேற்று செவ்வாய்கிழமை இரவு இலங்கையை வந்தடைந்து சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங்கை பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ண தலைமையிலான குழுவினர் வரவேற்றனர். இருதரப்பு வர்த்தகம், முதலீடு, நிதியுதவி மற்றும் மூலோபாய ஒத்துழைப்பு போன்றவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை போன்று இரு தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புகளை அடுத்த கட்டத்திற்கு விரிவுப்படுத்துவது சீன பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயத்தின் முக்கிய ந…

  6. இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் பாராட்டு இலங்கையில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயற்பாடுகளை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் பாராட்டியுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்படவிருக்கும் பிரேரணைக்கு இலங்கையுடன் இணைந்து இணை அனுசரணை வழங்கவும் அமெரிக்கா இணக்கம் தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையில் சகல இனத்தவர்களிடையிலும் சமாதானத்தை ஏற்படுத்தவும் சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் குறித்தும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது. இலங்கை தொடர்பான பிரேரணையை …

  7. விடுதலைப்புலிகளின் ஈழ மருத்துவ பிரிவில் 9 எம்.பி.பி.எஸ் மருத்துவர்களும், ஈழ மருத்துவ பயிற்சி பாடசாலையில் பயிற்சி பெற்ற 20 மருத்துவர்களும், 40 தாதிமாரும், 400 ஊழியர்களும் பணியாற்றியதாக வவுனியா நலன்புரி நிலையம் ஒன்றில் தங்கியிருந்த போது, கைதுசெய்யப்பட்ட ஈழ மருத்துவ பிரிவின் தலைவர் மனோஜ் என்ற செல்வவிநாயகம் குவேந்திரராஜா தெரிவித்துள்ளார். காவற்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். விடுதலைப்புலிகளின் மருத்துவ அணியின் பிரதானியாக டொக்டர் அன்ரி என அழைக்கப்படும் எம்.பி.பி.எஸ் மருத்துவரான பத்மலோசினி செயற்பட்டுள்ளார். இவர் விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளரும், அதன் மூத்த உறுப்பினருமான கரிகாலனின் மனைவி என தெரிவிக்கப்ப…

  8. இந்தியா - ராமேஸ்வரம் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரண்டாயிரத்து ஐந்நூறு மீனவர்களை இலங்கை கடற்படையினர் வழிமறித்து விரட்டியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், http://tamilworldtoday.com/?p=23927

    • 0 replies
    • 386 views
  9. மலேசியாவில் கைதானதாகக் கூறப்படும் கே.பி கோட்டாபயவின் விட்டுக்கே முதலில் சென்றார் வடக்கில் உள்ள மக்கள் தமது வீடுகளில் திருமண வைபவங்களையும், மரண சடங்குகளை சுதந்திரமாக செய்து கொள்ள kpமுடியாத நிலையில் உள்ளனர். அதற்கு இடமளிக்கப்படுவதில்லை. இந்த மக்கள் தமது கிராமத்தில் மரண நிவாராண சங்கத்தைக் கூட ஏற்படுத்தி கொள்ளும் இடமளிக்கப்படுவதில்லை. போர் முடிந்த போதும், வட பகுதி மக்கள் எவ்விதமான சுதந்திரமும் இன்றியே வாழ்கின்றனர். கைதுசெய்யப்பட்டவர்கள் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. எனினும் விடுதலைப்புலிகள் அமைப்பில் தலைவர்களாக இருந்தவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கே.பி. என்பவர் பிரபாகரனுக்கு பின்னர் தலைவராக இருந்தவர். அவர்தான் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வெடி மருந்துக்கள…

  10. இலங்­கையை வென்­று­வி­ட­மு­டி­யும் என்று பன்னாட்டுச் சமூகத்துக்கு ஒரு நப்பாசை இருக்கிறது அதனோடு ஒட்டியோடி வெற்றி பெறவேண்டும் என்கிறார் சுமந்திரன் எம்.பி அதை­ வி­டுத்து அவர்­களை அடித்து விரட்­டு­கின்ற அடி­முட்­டாள்­த­ன­மான காரி­யங்­க­ளில் தமி­ழர்­கள் ஈடு­ப­டக் கூடாது. இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், கட்­சி­யின் பேச்­சா­ள­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார். வட­ம­ராட்சி கிழக்கு கட்­டைக்­காட்­டுப் பிர­தே­சத்­தில் நேற்று நடை­பெற்ற நிகழ்­வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­வித்­தார். அவர் அங்கு மேலும் தெரி­வித்­த­தா­வது: காணா­மற்­போ­னோர் விவ­கா­ரம் முடி­வுக…

  11. மக்களின் பயணங்களைக் கண்காணிப்பு புதிய நடைமுறை திகதி: 01.07.2009 // தமிழீழம் இலங்கைக்கு உள்ளேயும், வெளியேயும் செல்வோர் பற்றிய விபரங்களைக் கண்காணிக்க, சிறீலங்கா அரசு புதிய நடைமுறைகளை அமுல்படுத்தியுள்ளது. இதன் ஒரு அங்கமாக துறைமுகம், மற்றும் வானூர்தி நிலையத்தின் நிருவாகப் பணிகள் குடிவரவு - குடியகல்வு திணைக்களத்திடம் கையளிக்கப்படுகின்றன. பொது நிருவாக சபையின் கீழ் இருந்த இந்த நிருவாகங்களைப் பெறுவதன் மூலம் மக்களை இலகுவாகக் கண்காணிக்க முடியும் என, குடிவரவு - குடியகல்வு திணைக்களப் பொறுப்பாளர் பி.பி.அயக்கோன் தெரிவித்தார். திருகோணமலை துறைமுகத்தின் நிருவாகம் இன்று கையளிக்கப்பட இருப்பதுடன், அதனைத் தொடர்ந்து ஏனைய துறைமுகங்களும், வானூர்தி நிலையமும் கைமாற்றப்படவுள்ளன.…

  12. மஹிந்த ராஜபக்ஷ கண்ணீர் சிந்துவார் : பிரதமர் ரணில் விக்ரமசிங்க (க.கமலநாதன்) 2018 ஆம் ஆண்டில் வரவிருக்கும் வெசாக் பண்டிகை தினத்தின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கண்ணீர் சிந்த வேண்டிய நிலை ஏற்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கிரிபத்கொடையில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இதற்கு முன்னர் ஒரு தடவை நான் வெளிநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த சந்தர்பத்தில் ஆட்சியை மாற்றி காட்டுகிறேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சவால் விடுத்திருந்தார். ஆனால் அவர் அதனை செய்யவ…

  13. பலாலி விமான நிலைய அபிவிருத்திக்கு இந்தியாவிடமிருந்து 300 மில்லியன் நிதியுதவி (எம்.மனோசித்ரா) பலாலி சர்வதே விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக இந்தியாவிடமிருந்து 300 மில்லியன் ரூபா நிவாரணத்தைப் பெற்றுக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் இந்திய அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்படவுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் , பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார். குறித்த அமைச்சர…

    • 27 replies
    • 2.1k views
  14. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சிவநாதன் கிசோர் அவர்கள் கடந்த மாதம் சிறி லங்காப் பாராளுமன்றத்தில் நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு மீதான வாக்களிப்பின் போது நடுநிலைமை (?) வகித்ததன் ஊடாக தமிழ் மக்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்படும் ஒரு நபராக மாறியுள்ளார். இது தொடர்பில் அவர், அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கிய செவ்வியில் தனது நிலைப்பாடு தொடர்பில் ஒளிவுமறைவு இன்றி விளக்கியிருந்தார். அவரே தனது செவ்வியில் ஒத்துக் கொண்டதைப் போன்று, இன்றைய நிலையில் வன்னியிலே வதை முகாம்களில் சொல்லொணாத் துயரை அனுபவிக்கும் எம் தமிழ் உறவுகளின் நலவாழ்வுதான் எமது கரிசனைக்குரிய அதி முக்கியத்துவம் வாய்ந்த விடயம் என்பதில் எனக்கும் …

  15. மாகாணசபைத் தேர்தலுக்காக பாரியளவில் செலவு 04 ஆகஸ்ட் 2013 இம்முறை மாகாணசபைத் தேர்தலுக்காக பாரியளவில் செலவிட வேண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணசபைத் தேர்தலுக்காக ஆயிரத்து ஐநூறு மில்லியன் ரூபா செலவிடப்பட உள்ளதாக தேர்தல் செயலகம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இதற்கு மேலதிகமாக வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்துவதற்கு மேலும் 20 மில்லியன் ரூபா தேவைப்படுவதாகத் தெரிவித்துள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி நடைபெறவுள்ள தேர்தல்களை கண்காணிப்பதற்கு 11 சர்வதேச கண்காணிப்பாளர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஏ.எல்.ரட்நாயக்க தெரிவித்துள்ளார். சர்வதேச கண்காணிப்பாளர்களாக யாரை நியமிப்பது என்பது குறித்து எதிர்வரு…

  16. மே மாத முற்பகுதியில் "London Times" ஏட்டிலும், அதன் இணையத்தளத்திலும் இலங்கையின் போர் முயற்சிகட்கு உறுதுணையாக நிற்பதும் உலக நாடுகள் அனைத்தையும் விடப் பெருமளவில் பொருளாதார உதவி வழங்கி வருவது சீனா தான் என்று வலியுறுத்தும் ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. வழமையாக முற்போக்கான ஏகாதிபத்திய விரோதத் தகவல் எதையுமே தமிழாக்குவதில் தமிழ் ஊடகவியலாளர்கட்கு அக்கறையில்லை. உலக நிகழ்வுகள் பற்றிய கட்டுரைகள் பெரும்பாலும் ஏதாவது இந்திய இணையத்தளத்திலிருந்தாவது அப்படியே எடுத்தாளப்பட்டு உரிய நன்றி கூறல் இல்லாமல் "நன்றி - இணையம்" என்ற சொற்களுடன் வெளிவருகின்றன. மேற்கூறிய கட்டுரை 10-05-2009 ஞாயிறு தினக்குரலில் மிகக் கவனமாகத் தமிழாக்கப் பட்டுள்ளது. இவ்வாறான அக்கறை பிற விடயங்களிலும் இனிமேற் கொண்ட…

    • 5 replies
    • 1.1k views
  17. கிளிநொச்சி கண்டாவளை உமையாள்புரம் பிரதேசத்தில் அதிகளவில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்றுவருகின்றமை தொடர்பில் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். உமையாள்புரம் பிரதேசம் ஆனையிறவு கடல்நீரேரிக்கு அருகில் உள்ள கிராமம் இதன் காரணமாக கிராமத்தின் பெரும்பாலான பகுதிகள் உவராக காணப்படுகிறது. உவராக காணப்படும் பிரதேசத்தின் அளவு அதிகரித்து வரும் நிலையில் குறித்த பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மணல் இதனை விரைவுப்படுத்தும் எனத் தெரிவித்துள்ள பொதுமக்கள் கரைச்சி பிரதேச சபையின் கழிவு அகற்றும் பகுதியில் சட்டவிரோதமாக உழவு இயந்திரங்கள் மூலம் அகழப்படும் மணல் சேமிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து டிப்பர்களில் எடுத்துச் செல்லப்படுவதாகவும், தொடர்ச்சியாக இவ்வாறு இடம்பெற்று வருவதாகவும் பொதுமக்கள் தெர…

  18. சிறிலங்காவின் தென்மாகாண சபைக்கு அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் தேர்தலில் ஆளும் கட்சியின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் புதல்வர் நாமல் ராஜபக்ச போட்டியிடுவார் என வெளியான தகவல்களை மறுத்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேம ஜயந்த, அடுத்த பொதுத் தேர்தலிலேயே அவர் போட்டியிடலாம் எனவும் தெரிவித்திருக்கின்றார். "நடைபெறவிருக்கும் தென்மாகாண சபைக்கான தேர்தலில் அரச தலைவரின் மகன் போட்டியிடமாட்டார். ஏனெனில் அதில் போட்டியிடுவதில் எந்த அர்த்தமும் இருக்கப்போவதில்லை. அடுத்த பொதுத் தேர்தலில் அவர் போட்டியிடுவதற்கான வாய்ப்புக்களே அதிகமாக இருக்கின்றது. பொதுத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதத்தில் நடைபெறவிருக்கின்றது. பெல…

    • 0 replies
    • 489 views
  19. மக்களுக்கு பிரச்சினைகள் இருந்தால் அது பற்றி கலந்துரையாடி ஜனநாயக வழியில் அவற்றுக்கு தீர்வுகாண தான் எப்பொழுதும் தயாராகவே இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நுவரெலியா நகரில உள்ள கிரகறி குளத்திற்கு அருகில் அமைந்துள்ள பூங்காவின் இரண்டாம் பகுதியை இன்று திறந்து வைத்து உரையாற்றும் போது ஜனாதிபதி இதனை கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், கட்சி நிற பேதமின்றி மேற்கொள்ளப்படும் அபிவிருத்தியின் போது மக்களிடம் இருந்து எதனையும் எதிர்பார்க்க போவதில்லை. அரசாங்கம் இன்றைய தினத்தை விட மறுநாளை சந்தித்தே அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகிறது. அரசாங்கத்துடன் ஒத்துழைப்புடன் நடந்து கொண்டே தமது கிராமம் மற்றும் பிரதேசத்தின் அபிவிருத்திகளை செய்து கொள்ள வேண்டுமேயன்றி, மோதல்களை…

    • 9 replies
    • 569 views
  20. த.மு.கூவின் கூட்டத்தில்... டி.ஷங்கீதன், பா.திருஞானம் தமிழ் முற்போக்கு கூட்டணியின் மேதின கூட்டம், தலவாக்கலையில் தற்போது நடைபெற்று வருகின்றது. இக்கூட்டத்தில், அமைச்சர்களாக பா.திகாம்பரம், மனோ கணேசன், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்களான அ.அரவிந்தகுமார், எம்.திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர் எம்.உதயகுமார், சரஸ்வதி சிவகுரு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர். .இராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்களான அ.அரவிந்தகுமார், எம்.திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர் எம்.உதயகுமார், சரஸ்வதி சிவகுரு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர். …

  21. வன்னியில் போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக புலம்பெயர்ந்த மக்களால் திரட்டி 'வணங்காமண்' கப்பல் மூலம் அனுப்பப்பட்ட பொருட்கள் இந்த வார இறுதியில் உரியவர்களுக்கு விநியோகிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 484 views
  22. தகுதி கூடிய வடக்கு முதலமைச்சரை விட எட்டாம் ஆண்டு படித்த வடமேல் மாகாண முதலமைச்சர் சிறப்பாக மாகாணத்தை கொண்டு நடத்துகிறார் – தவராசா இலங்கையில் உள்ள முதலமைச்சர்களில் தகுதி கூடிய முதலமைச்சர் என்றால் அது வடக்கு முதலமைச்சர்தான். அது அனைவருக்கும் தெரியும். அண்மையில் கல்வி அமைச்சருடன் வட மேல் மாகாணத்தில் வயம்ப எனும் இடத்தில் கூட்டம் ஒன்றுக்கு சென்றிருந்தேன். அங்கு குறிப்பிட்டுள்ளார்கள் அந்த முதலமைச்சர் எட்டாம் ஆண்டுதான் படித்தவர் என்று. ஆனால் அவர் அந்த மாகாணத்தை சிறப்பாக கொண்டு நடத்துகின்றார் இதற்கு தகுதி அல்ல முக்கியம் ஆளுமைதான் காரணம் அவரிடம் ஆளுமை இருக்கிறது. இதனை பல இடங்களில் நான் சுட்டிக்காட்டியிருக்கிறேன். அதுமாதிரிதான் வடக்கு கல்…

    • 1 reply
    • 229 views
  23. ‘மேதகு’ திரைப்படத்தை தரவிறக்கிய இருவர் கைது (சி.எல்.சிசில்) தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட ‘மேதகு’ தமிழ்த் திரைப்படத்தை இணையத்தளத்தில் தரவிறக்கம் செய்து விற்பனை செய் தனர் என்ற குற்றச்சாட்டில், நுவரெலியா குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியா, ஹாவாஎலிய பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே கைது செய்யப் பட்டுள்ளனர். நுவரெலியா, பிரதான பஸ் தரிப்பிடத்தில் வியாபார நிலையமொன்றை நடத்தி வரும் நபரொருவரும் அவரது நண்பர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். நுவரெலியா, கார்கில்ஸ் கட்டிட வளாகத்திலுள்ள பிரதான ச…

  24. சிறிலங்கா வெளிவிவகாரத்துறை அமைச்சின் செயலாளர் பாலித கோகன்ன, ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தரப் பிரதிநிதியாக நியூயோர்க்கில் நியமனம் பெற்றதை அடுத்து அவரது பதவிக்கு யார் அடுத்து நியமிக்கப்படப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தனது புதிய பதவியை பொறுப்பேற்றுக் கொள்வதற்காக கோகன்ன அடுத்த மாத தொடக்கத்தில் புறப்பட உள்ள நிலையில், அவரது பதவியைப் பொறுப்பேற்கப் போகும் அடுத்த நபர் யார் என்பது இதுவரை தெளிவாகவில்லை என்று கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஐ.நா. சபையின் சிறிலங்காவுக்கான நிரந்தரப் பிரதிநிதியாகப் பதவி வகித்துவரும் பாலிக்ககார தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பாகவே, தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த வார இறுதியில் நாடு திரும்புகிறார். இதனை அடுத்து கோ…

    • 0 replies
    • 642 views
  25. மோடியின் நிகழ்வில் மஹிந்த (க.கம­ல­நாதன்) பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விமல் வீர­வன்­சவை முன்­ன­ி­லைப்­ப­டுத்தி வெளி­யாகும் கறுப்­புக்­கொடி செய்­திகள் உண்­மைக்கு புறம்­பா­­ன­வை­யாகும். இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடி பிர­தம அதி­தி­யாக கலந்து ­கொள்ளும் வெசாக் தின நிகழ்­வு­களில் நானும் கலந்­து­கொள்வேன். எனக்கு எந்த தடையும் கிடை­யாது என முன்னாள் ஜனா­தி­ப­தியும் குரு­நாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ளார். ருவன்­வெல்ல, கோன­கல்­தெ­னிய, அரி­ய­சிந்­தா­சி­ரம விஹா­ரையில் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்து கொண்­டதன் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.