ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142888 topics in this forum
-
Published by T. Saranya on 2022-02-01 10:16:03 (எம்.ஆர்.எம்.வசீம்) புதிய அரசியலமைப்பு திருத்தத்தில் மாகாணசபை முறை நீக்கப்பட்டுள்ளதா இல்லையா என எமக்கு தெரியாது. என்றாலும் மாகாணசபை தேர்தல் இடம்பெறாததால் மக்கள் பிரதிநிகள் இல்லாமல் பாரியளவில் நிதி மாகாணசபை மட்டத்தில் பரிமாறப்படுகின்றமை நல்லதில்லை. அதனால் அந்த நிதியை விரைவாக மக்கள் பிரதிநிதிகள் இருக்கும் நிறுவனங்களுக்கு வழங்குவதே உகந்தது என அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். புதிய அரசியலமைப்பில் மாகாணசபை தேர்தல் முறை நீக்கப்படுவது தொடர்பாக தெரிவிக்கப்படும் செய்தி தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், மாக…
-
- 0 replies
- 287 views
-
-
Published on 2022-02-01 11:59:29 கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது என மாவட்ட தொற்று நோயியலாளர் வைத்தியர் நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார். கடந்த நான்கு நாட்களில் மாத்திரம் தங்களை பரிசோதனை செய்தவர்களில் 200 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 50 பேர் மாணவர்களாக காணப்படுவதோடு, 16 வயதுக்குட்பட்டவர்கள் 43 பேரும்உள்ளடங்குகின்றனர். அத்தோடு இரண்டு கர்ப்பிணித் தாய்மாரும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என மருத்துவர் நிமால் அருமைநாதன்தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் தற்போது தொற்று பரவும் வேகம் அதிகமாக காணப்படுகின்றமையால் பொது மக்கள் கண்டிப்பாக சுகாதார நடை…
-
- 0 replies
- 191 views
-
-
நாட்டின் பல பாகங்களில் திடீர் மின்வெட்டு! by Dhackshala in இலங்கை, பிரதான செய்திகள் 71 0 A A 0 32 SHARES 1.1k VIEWS Share on FacebookShare on Twitter நாட்டின் பல பாகங்களில் தற்போது திடீர் மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நுரைச்சோலை லக்விஜய மின்னுற்பத்தி நிலையத்தின் 3 ஆவது மின்பிறப்பாக்கி கடந்த டிசம்பர் மாதம் முதல் செயலிழந்திருந்த நிலையில், சீர்செய்ய…
-
- 0 replies
- 272 views
- 1 follower
-
-
யாழ். போதனா வைத்தியசாலையில் பல்கலைக்கழக மாணவி உயிரிழப்பு! by shagan in இலங்கை, பிரதான செய்திகள் 70 0 A A 0 30 SHARES 1k VIEWS Share on FacebookShare on Twitter காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவி உயிரிழந்துள்ளதார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. அவர் அனுமதிக்கப்பட்ட போது பெறப்பட்ட குருதி மாதிரியை பரிச…
-
- 0 replies
- 351 views
- 1 follower
-
-
13ஐ நிராகரிப்போம் எனும் தொனிப்பொருளில் பேரணி January 30, 2022 ஒற்றையாட்சிக்கு உட்பட்ட 13ஐ நிராகரிப்போம் எனும் தொனிப்பொருளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் ஒழுங்கு செய்யப்பட்ட பேரணி நல்லூரில் தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில் ஆரம்பமாகி கிட்டுப்பூங்காவில் நிறைவடைந்தது. தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி தீபம் ஏற்றப்பட்டு பேரணி ஆரம்பமானது இந்த பேரணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர். https://globaltamilnews.net/2022/172475
-
- 59 replies
- 3.5k views
- 1 follower
-
-
மருதங்கேணி பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் இன்று காலை முதல் போராட்டம் கடந்த வியாழக்கிழமை காணாமல்போயிருந்த வடமராட்சி கிழக்கு மீனவர்கள் இருவரும் இன்று வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டனர்.இந்நிலையில் வடமராட்சி கிழக்கு – மருதங்கேணி பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு அப்பகுதி மீனவர்கள் இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை வீதிக்கு குறுக்காக மீன்பிடி படகுகள், மரக்குற்றிகள் என்பன போடப்பட்டு வீதி முற்றாக மறுக்கப்பட்டு போராட்டம் இடம்பெறுகின்றது. எமது கடற்பரப்பு இந்தியாவுக்கு விற்கப்பட்டதா’ –…
-
- 1 reply
- 456 views
-
-
தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய மின்சக்தி அமைச்சு தீர்மானம் தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கான பிரேரணை நாளை (திங்கட்கிழமை) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார். LIOC நிறுவனத்திடம் இருந்து நேரடியாக எரிபொருளை கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் இலங்கை மின்சார சபை ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். https://athavannews.com/2022/1264456
-
- 10 replies
- 552 views
- 1 follower
-
-
- க. அகரன் தற்போதைய நிலைமைகளை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு தெளிவுபடுத்தும் முகமாக அறிக்கையொன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தயார் செய்யப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் மத்தயிகுழுக் கூட்டம் வவுனியாவில் உள்ள தனியார் விடுதியில் நேற்று இடம்பெற்ற நிலையில் அதன் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த சுமந்திரன், “வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படும் பிரச்சினை தற்போது பூதாகாரமாக மாறியிருந்கின்றது. இது தொடர்பாக சில பொது அமைப்புகள் ஏனைய கட்சிகளுடன் இணைந்து பொது வேலைத்திட்…
-
- 0 replies
- 232 views
-
-
(ஜெ.அனோஜன்) இலங்கையில் மீண்டும் ஒரே நாளில் ஆயிரத்துக்கும் அதிமான கொவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி நேற்றை தினம் மேலும் 1,056 புதிய கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. சுமார் மூன்று மாதங்களுக்கு பின்னர் ஒரே நாளில் பதிவான அதிகபடியான தொற்றாளர்களின் எண்ணிக்கை இதுவாகும். சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, ஒமிக்ரோன் மாறுபாடு இப்போது இலங்கையில் பெரும்பாலான கொவிட் தொற்றாள்கள் தோற்றுவிக்கும் முக்கிய மாறுபாடாக மாறி வருகிறது. தற்சமயம் நாட்டில் உறுதிபடுத்தப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களது எண்ணிக்கை 610,103 ஆக உயர்வடைந்துள்ளது. இவற்ற…
-
- 0 replies
- 230 views
-
-
இந்திய பிரதமருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் பொய்யாக சில விடயங்கள் இருக்கின்றன – நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை வவுனியாவில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்ற நிலையில் அதன் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் 13வது திருத்தச்சட்டத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. இந்திய பிரதமருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் எமது மக்களை ஏமாற்றும் வகையில் பொய்யாக பிணையப்பட்டுள்ள சில விடயங்கள் இருக்கின்றன என தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்திய பிரதமர் மோடி கூட்டுறவு சமஸ்டி வேண்டும் என தெரிவித்துள்ளார். அதேபோன்று இம்முறை நடைபெற்ற சட்ட…
-
- 3 replies
- 382 views
-
-
11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கு – கரன்னாகொடவின் மனு ஏப்ரலில் விசாரணைக்கு! வடமேல் மாகாண ஆளுனர் அட்மிரல் வசந்த கரன்னாகொட தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் ஏப்ரல் 6 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கின் பிரதிவாதியாக தன்னை பெயரிட்டமைக்கு எதிராகவே குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தன்னை பிரதிவாதியாக பெயரிடும் தீர்மானம் ஆதாரமற்றது என்று சுட்டிக்காட்டும் வசந்த கரன்னாகொட அதனை இரத்து செய்யும் நீதிப் பேராணை கட்டளையொன்றை பிறப்பிக்குமாற…
-
- 0 replies
- 241 views
-
-
தமிழக மீனவர்களின் செயலை கண்டித்து யாழில் போராட்டம்! தமிழக மீனவர்களால் வடமராட்சி மீனவர்களின் வலைகள் அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளது. குறித்த செயலை கண்டித்து பாதிக்கப்பட்ட மீனவர்கள் இன்று (திங்கட்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டனர். வடமராட்சி, பருத்தித்துறை சுப்பர்மடம் பகுதியை சேர்ந்த மீனவர்களின் வலைகளே அறுத்து நாசமாக்கப்பட்டுள்ளது. அதனை கண்டித்து மீனவர்கள் சுப்பர்மட பகுதியில் வீதிமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வீதிகளில் படகுகளை , வலைகளை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் அவ் வீதி ஊடான போக்குவரத்துக்கள் முற்றாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. தமக்கான தீர்வு கிடைக்கும் வரையில் தாம் வீதியை மறித்து தொடர் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக பாதிக்கப்பட…
-
- 0 replies
- 203 views
-
-
மஹிந்தவின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எதுவும் திருடப்படவில்லை – நாமல்! பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எதுவும் திருடப்படவில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வைபவம் ஒன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எனினும், இணையத்தளங்கள் இவ்வாறான சம்பவங்களை தெரிவிப்பதாகவும் அதற்கு பதிலளிக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மஹிந்தவின் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எதுவும் திருடப்படவில்லை – நாமல்! – Athavan News
-
- 0 replies
- 214 views
-
-
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கிட்டுபூங்கா பிரகடனம் கிட்டுபூங்கா பிரகடனம் “தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13 ஆம் திருத்தத்திற்குள் முடக்கும் சதி முயற்சியை முறியடிப்போம்” என்ற நோக்கத்துடன்; தமிழ் மக்களினதும், வெகுசன அமைப்புக்களினதும் பங்குபற்றலுடன் நடைபெறும் தமிழ் தேசிய அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தும் போராட்டத்தில், 2022 தை 30 இன்று, கிட்டு பூங்காவில் நாம் அனைவரும் திரண்டுள்ளோம். சிங்கள பௌத்த மேலாதிக்க ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிவரும் தமிழ்த் தேசமானது - தனது அடிப்படையான அரசியல் உரிமைகளான வடக்கு கிழக்கு இணைந்த தாயகம், தமிழ்த் தேசம் அதன் இறைமை, சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்வில் எப்போதுமே உறுதியாக இருக்கும் என்ற செய்தியைச் சி…
-
- 0 replies
- 278 views
-
-
யாழ் பலாலி விமான நிலையம், கொரோனா காரணமாகவே பூட்டிக்கிடக்கிறது – அதில் அரசியல் இல்லை! January 30, 2022 யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் நாட்டில் ஏற்பட்ட கொரோனா காரணமாக மூடப்பட்டுள்ளதே தவிர வேறெந்த அரசியல் நோக்கங்களும் அல்ல என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், நாட்டில் ஏற்பட்ட கொரோனா சூழ்நிலை காரணமாக இலங்கையில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டிருந்தன அதே போல் யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் மூடப்பட்டிருந்தது. தற்பொழுது ஏனைய சில விமான நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன அதேபோ…
-
- 1 reply
- 208 views
-
-
ஜெனிவாவுக்கு அனுப்புவதற்கான அறிக்கை கூட்டமைப்பால் தயார் செய்யப்படுகின்றது – சுமந்திரன் காணி அபகரிப்பு உள்ளிட்ட விடயங்கள் உள்ளடக்கம் ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமை உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு தற்போதைய நிலைமைகளை தெளிவுபடுத்தும் முகமாக அறிக்கையொன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தயார் செய்யப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தமிழரசுக் கட்சியின் மத்தியக்குழு கூட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வவுனியாவில் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது. கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் …
-
- 1 reply
- 194 views
-
-
Published by J Anojan on 2022-01-30 14:06:38 பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட (அரசியல் கைதிகள்) 27 பேர் விரைவில் விடுவிக்கப்படவுள்ளனர். இதற்கான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். நீதிக்கான அணுகல் நடமாடும் சேவைக்காக யாழ்ப்பாணம் வந்துள்ள அவர், தனியார் விடுதியில் அழைக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோது இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். 'பயங்கரவாத தடைச் சட்டம் தற்போது திருத்தப்படுகின்றது. எதிர்காலத்தில் அதனை முழுமையாக மாற்றியமைக்கும் திட்டமும் இருக்கின்றது' என்று அவர் குறிப்பிட்டார். அத்துடன் அரசியல் கைதிகள் என்று சட்டத்தின் அடிப்படையில் எவரும் இல்லை என…
-
- 1 reply
- 303 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) தமிழீழ விடுதலை புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்பதே தமது முக்கிய நோக்கம் என தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பிலான அடுத்த கட்டம் குறித்து சட்ட மா அதிபரின் ஆலோசனை இதுவரைக்கிடைக்கவில்லை என பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர். கடந்த 28 ஆம் திகதி வெள்ளியன்று இது குறித்த வழக்கு கொழும்பு பிரதான நீதிவான் புத்திக சி. ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே, திட்டமிடப்பட்ட குற்றங்கள் தடுப்புப் பிரிவினரால் இந்த விடயம் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் மன்றில்…
-
- 1 reply
- 283 views
-
-
Published by T Yuwaraj on 2022-01-30 16:04:27 பதுளை – அட்டாம்பிட்டிய உமாஒயாவிற்கு நீர் வழங்கும் கிளை ஆறானா கெரண்டி எல்ல ஆற்றில்நீராடிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், நீரில் அடித்துச் சென்று காணாமல் போன ஐவரில், நான்கு பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் தற்போது ஐந்தவாது யுவதியின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது. நீரில் அடித்துச் செல்லப்பட்ட ஐவரில் நால்வரின் சடலங்கள் நேற்று (29) மாலை கண்டெடுக்கப்பட்ட நிலையில், சற்றுமுன்னர் யுவதி ஒருவரின் சடலத்தை மீட்டுள்ளதாக அட்டாம்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர். அட்டாம்பிட்டிய தோட்ட பகுதியை சேர்ந்த ராஜா டேவிட் குமார் (23), சிவ சுப்ரமணியம் காஞ்சனா (21), பவாணி (22), சிந்து (18) மற்…
-
- 0 replies
- 354 views
-
-
Published by T Yuwaraj on 2022-01-30 16:52:12 (நா.தனுஜா) இலங்கையில் தற்போது இடம்பெற்றவரும் மீறல்கள் தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ள பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள், தமிழர்களுக்கான உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதை முன்னிறுத்தி தம்மால் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர். தமிழர்களுக்கான பிரித்தானியாவின் அனைத்துக்கட்சிப் பாராளுமன்றக்குழுவின் ஆண்டறிக்கையில், இலங்கையில் கடந்தகாலங்களில் இடம்பெற்ற மீறல்கள் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தல், நீதி மற்றும் பொறுப்புக்கூறலை நிலைநாட்டல் என்பன தொடர்பில் பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும்…
-
- 0 replies
- 195 views
-
-
Published by T Yuwaraj on 2022-01-30 13:57:48 (எம்.எம்.சில்வெஸ்டர்) நாட்டில் கொரோன வைரஸ் தொற்று மீண்டும் தலை தூக்குவதற்கு சுகாதார அமைச்சின் தவறான வழிக்காட்டதல்களே காரணம். கொரோனா வைரஸ் தொற்றின் புதிய பிறழ்வை நாட்டுக்குள் வருவதை தடுப்பதற்கு சுகாதார அமைச்சு சரியான வழிக்காட்டுத்தல்களை நடைமுறைப்படுத்த தவறியமையே இதற்கு காரணம் என மருத்துவ ஆய்வக அறிவியல் கல்வியகத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார். டெல்டா, ஒமிக்ரோன் உள்ளிட்ட ஏதேனும் வைரஸ் தொற்றுக்கள் நாட்டினுள் வருவதை தடுப்பதற்கு மிகவும் இலகுவான வழிவகைகள் இருந்தபோதிலும், சுகாதார அமைச்சு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாததன் காரணமாக நாட்டினுள் ஒமிக்ரோன் வை…
-
- 0 replies
- 193 views
-
-
யாழில் மகாத்மா காந்தியின் 74ஆவது நினைவு தினம் மகாத்மா காந்தியின் 74ஆவது நினைவு தினம் இன்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பாணத்தில் நினைவுகூரப்பட்டது. அகில இலங்கை காந்தி சேவா சங்கம் மற்றும் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ். போதனா வைத்தியசாலை முன்றலில் உள்ள மகாத்மா காந்தியின் உருவச்சிலை அமைந்துள்ள இடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது காந்தியின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தின் அதிகாரபூர்வ வெளியீடான காந்தீயம் பத்திரிகை நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனால் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் இந்திய துணைத்தூதரக பதில் தூதர் ராம் மகேஷ், நாடாளுமன்ற உறுப்பினர்களா…
-
- 8 replies
- 402 views
-
-
இன்று முதல் மீள திறக்கப்படுகிறது சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்! சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் மீள ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக 90 ஆயிரம் மெட்றிக் டன் மசகு எண்ணெய் அடங்கிய கப்பல் கொழும்பு துறைமுகத்தைக் கடந்த தினத்தில் வந்தடைந்தது. இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர சேவையாளர் சங்கத்தின் தலைவர் ஜகத் விஜேகுணரத்ன, துறைமுகத்திற்குக் கொண்டுவரப்பட்ட மசகு எண்ணெய் தற்போது இறக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். அத்துடன் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தொடர்ந்து செயற்படுமாயின் மின்சார உற்பத்திக்குத் தேவையான உலை எண்ணெய் உள்…
-
- 0 replies
- 312 views
-
-
இஸ்லாம் பாடப்புத்தகங்கள் மீளப்பெறப்படுவதன் நோக்கம் என்ன? இம்ரான் எம்.பி கேள்வி கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் அச்சிட்டு விநியோகிக்கப்பட்ட இஸ்லாம் பாடநூல்களை மீளப் பெறப்படுவதன் நோக்கம் என்ன என்பதை நீதி அமைச்சர் அலிசப்ரி உள்ளிட்ட அரசிலுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார். ஞானசார தேரர் தலைமையிலான ஒரேநாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் பரிந்துரைக்கமைய இஸ்லாம் பாட நூல்கள் மீளப் பெறப்படுவதாக ஊடகங்களில் செய்தி வெளிவந்துள்ளது. கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால்…
-
- 0 replies
- 200 views
-
-
சீனாவின் முகவர்களா? தமிழ் தேசிய மக்கள் முன்னணி சீனா எதிர்பார்பதை நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்கின்றனர் என– பா- உ- கோவிந்தன் கருணாகரன் தெரிவிப்பு– (கனகராசா சரவணன்;) நாங்கள் இந்தியாவின் முகவர்கள் என சித்தரிக்கின்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணரே அப்போ நீங்கள் யாரது முகவர்கள்? நீங்கள் சீனாவின் முகவர்களா? சீனா எதிர்பார்பதைதானே நீங்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்கின்றீர்கள். எனவே 13 ஊடக தமிழ் மக்களின் இருப்பை கூட இல்லாமல் செய்யும் இவர்களை தமிழ் மக்கள் விரட்டியக்க வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்க செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார். மட்டக்களப்பு கண்ணகி அ…
-
- 0 replies
- 234 views
-