ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143617 topics in this forum
-
வட்டுவாகல் காணி சுவீகரிப்பு பிரச்சனை – ஜூலையில் மீண்டும் விசாரணை! February 9, 2022 கடந்த 2018ஆம் ஆண்டு, முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில், மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியை சுவீகரிக்க சென்ற நில அளவைத்திணைக்கள உத்தியோகத்தர்களை தடுத்து, அவர்களது வாகனத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழங்கு விசாரணை நேற்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. கோட்டாபய கடற்படை முகாமுக்கு முன்பாக மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக, வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக இந்த வழங்கு தொடரப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 114 views
-
-
போராடும் மக்களின் பசி தீர்க்கும் அம்மா உணவகம்- யேர்மனி பேர்லின். தமிழீழம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் மீனவர்கள் கொல்லப்பட்டதற்கான தொடர் போராட்டம் நடந்துகொண்டிருக்கின்றது. இப் போராட்டத்தில் பங்கு பெறும் பெண் தலமைத்துவக் குடும்பங்களுக்கு மூவாயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் நூறு குடும்பங்களுக்கு பேர்லின் அம்மா உணவகத்தினால் வழங்கிவைக்கப்பட்டது. Video Player 00:00 02:19 …
-
- 2 replies
- 275 views
-
-
Published by T Yuwaraj on 2022-02-09 21:33:24 (நா.தனுஜா) இலங்கையில் மீட்கப்படாத இந்திய மீன்பிடிப்படகுகளை அப்புறப்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பில் ஆராய்வதற்கான தமிழகத்திலிருந்து குழுவொன்று இலங்கைக்கு வருகைதரவிருப்பதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிவித்திருக்கின்றது. இலங்கையில் ஏலமிடப்பட்ட இந்திய மீன்பிடிப்படகுகள் தொடர்பில் வீரகேசரியினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: அண்மையில் இலங்கையில் ஏலமிடப்பட்ட இந்திய மீன்பிடிப்படகுகள் தொ…
-
- 3 replies
- 345 views
-
-
Freelancer / 2022 பெப்ரவரி 09 , மு.ப. 06:05 - 0 - 88 FacebookTwitterWhatsApp வெளிநாடுகளிலுள்ள தனது கறுப்புப் பணத்தை நாட்டுக்குள் கொண்டுவருவது மற்றும் தனக்கு நெருக்கமானவர்களை வழக்குகளில் இருந்து விடுதலை செய்வது ஆகியவற்றையே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொண்டு வருகிறார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று (08) இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் த…
-
- 0 replies
- 245 views
-
-
reelancer / 2022 பெப்ரவரி 09 , பி.ப. 12:51 - 0 - 109 FacebookTwitterWhatsApp எம்.றொசாந்த் அரைக் காற்சட்டையுடன் யாழ்.பல்கலைக்கழகத்திற்குள் வந்த மாணவனை கண்டித்த சிரேஷ்ட மாணவன் தாக்கப்பட்டமை தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த வாரம் யாழ்.பல்கலைக்கழகத்தினுள் கனிஷ்ட மாணவன் ஒருவர், பல்கலைக்கழக மாணவன் அல்லாத தன்னுடைய நண்பர் ஒருவருடன் அரைக் காற்சட்டை அணிந்து பல்கலைக்கழக வளாகத்தினுள் வந்துள்ளார். அதனை அவதானித்த மூன்றாம் மற்றும் நான்காம் வருட மாணவர்கள் …
-
- 3 replies
- 407 views
- 1 follower
-
-
Published by J Anojan on 2022-02-09 11:30:51 கொள்ளுப்பிட்டி மற்றும் தங்காலை பகுதிகளில் பதிவான இருவேறு சம்பவங்களில் ஜேர்மன் பெண்கள் இருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளனர். கொள்ளுப்பிட்டி பகுதியில் ஜேர்மன் பெண் ஒருவர் போதைப்பொருள் கொடுத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 32 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்காக 28 வயதான இலங்கை வர்த்தகர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட ஜேர்மன் பெண் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரான குறித்த வர்த்தகர், …
-
- 2 replies
- 395 views
-
-
(இராஜதுரை ஹஷான்) எதிர்வரும் மாதம் முதல் பல துறைகள் வங்குரோத்து நிலைமையினை அடையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்ட நிலையிலும் விசேட பெற்றோலுக்காக 60 தொடக்கம் 80 ருபா வரை வரி அறவிடப்படுவதுடன், டீசல் லீட்டருக்காக 20 தொடக்கம் 30 ரூபா வரை வரி அறவிடப்படுகிறது. இலங்கை மின்சார சபைக்கான டீசல் மற்றும் உராய்வு எண்ணெயின் விலை அதிகரித்துள்ளதால் இலங்கை மின்சார சபை பாரிய நிதி நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ளது. 24 மணித்தியாலமும் மின்சாரத்தை விநிய…
-
- 0 replies
- 162 views
-
-
கிளிநொச்சி பூநகரி கிராஞ்சி பகுதியில் எட்டு இந்திய மீன்பிடி றோலர்கள் 94300 ரூபாவுக்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளன. இன்று (09) கிராஞ்சி கடற்படை முகாம் பகுதியில் வைத்து குறித்த றோலர் படகுகள் கொழும்பில் மற்றும் கிளிநொச்சி கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள் குழுவினால் ஏலத்தில் விடப்பட்டது. இதன்போது ஏலத்தில் விடப்பட்ட அனைதது படகுகளும் மீள பயன்படுத்த முடியாத நிலையில் சேதமுற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. பூநகரியில் 8 இந்திய மீன்பிடி றோலர்கள் ஏலத்தில் | Virakesari.lk
-
- 5 replies
- 395 views
-
-
Published by J Anojan on 2022-02-09 16:23:22 16 வயது சிறுமியின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேலதிக நீதிவான் ராஜீந்திர ஜயசூரிய, மூன்று மாதங்களுக்கு பயணத்தடையை நீக்கியதுடன் பாராளுமன்ற உறுப்பினர் பதியுதீனின் கடவுச்சீட்டை விடுவிக்கவும் உத்தரவிட்டார். முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கொழும்பு பெளத்தாலோக்க மாவத்தை வீட்டில், வீட்டு வேலைகளுக்கு அமர்த்தப்பட்டிருந்த ஹட்டன் டயகம பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். சிறுமியின்…
-
- 0 replies
- 148 views
-
-
Published by T Yuwaraj on 2022-02-09 17:47:37 கொவிட் தொற்று நிலைமை காரணமாக இலங்கை மக்கள் கடந்த இரண்டு வருடங்களில் மாத்திரம் முகக்கவச கொள்வனவிற்காக 18,000 கோடிக்கும் அதிக தொகையை செலவிட்டுள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். நாட்டில் வாழ்க்கை செலவு பாரியளவில் அதிகரித்துள்ள நிலையில் அதனை ஈடுசெய்ய முடியாது நாட்டு மக்கள் இன்னல்களை அனுபவித்து வரும் நிலையில் முகக்கவச கொள்வனவிற்காக நாட்டு மக்கள் அதிக தொகையை செலவிட வேண்டியுள்ளதாக தெரிவித்த அவர், எதிர்வரும் காலங்களில் முகக்கவசங்களின் விலைகளை கட்டுபடுத்துவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இது …
-
- 1 reply
- 248 views
-
-
Published by J Anojan on 2022-02-09 18:10:22 ( எம்.எப்.எம்.பஸீர்) பிரபல மனித உரிமைகள் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் 667 நாட்கள் சிறைப்படுத்தலின் பின்னர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார். மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான மேனகா விஜேசுந்தர, நீல் இத்தவல ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம், ஹிஜாஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட CA/ PHC/APN/10/22 எனும் மனுவின் உத்தரவாக அவருக்கு பிணையளிக்குமாறு கடந்த 7 ஆம் திகதி அறிவித்தனர். அந்த உத்தரவுக்கு அமைவாக சிலாபம் மேல் நீதிமன்ற நீதிபதி குமாரி அபேரத்ன, ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை பிணையில் செல்ல அனுமதித்தார். அதன்படி, ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணை, 5 இலட்சம் ரூபா பெறுமதி…
-
- 2 replies
- 296 views
-
-
13 ஆவது திருத்தத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவது முட்டாள்தனம் என்கின்றார் சம்பந்தன் 13 ஆவது திருத்தத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவது படுமுட்டாள்தனமான செயற்பாடு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். அரசமைப்பில் முதன்முறையாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் 13ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது என சுட்டிக்காட்டினார். இதைத் தேசிய இனப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வாக ஏற்கமுடியாது என்றாலும் இதைத் தீர்வுக்கான முதல் படியாக வைத்துக்கொண்டு முன்னோக்கி செல்லவேண்டும் என கூறினார். இந்நிலையில், 13ஆவது திருத்தத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவது முட்டாள்தனமான செயற்பாடு என்றும் இது இருப்பதை இழக்க செய்யும் நடவடிக்கை என…
-
- 2 replies
- 251 views
-
-
கச்சதீவுக்கு இந்திய பக்தர்களை அனுமதிப்பது தொடர்பான கோரிக்கைகளை உரிய தரப்புகளுக்கு அனுப்பியிருக்கின்றோம் – மகேசன் கச்சதீவு திருவிழாவுக்கு இந்திய பக்தர்கள் செல்வது தொடர்பான கோரிக்கைகளை நாங்கள் உரிய தரப்புகளுக்கு அனுப்பியிருக்கின்றோம். அங்கிருந்து அனுமதி கிடைக்கும் பட்சத்தில் இந்தியாவிலிருந்தும் பக்தர்கள் பங்கேற்க முடியும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். கச்சதீவு திருவிழா தொடர்பில் ஊடகவியாளர் கேள்வி எழுப்பிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,எதிர்வரும் மார்ச் மாதம் 11ஆம் 12ஆம் திகதிகளில் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம் நடைபெறவுள்ளது. இதன் ஆரம்பக்கட்ட கூட்டத்திலேயே சுகாதார நிலைமை…
-
- 2 replies
- 322 views
-
-
ஆர்ப்பாட்டம் காரணமாக சுகாதார அமைச்சில் பதற்றநிலை..! ஆர்ப்பாட்டக்காரர்கள் சுகாதார அமைச்சின் வளாகத்துக்குள் பிரவேசித்துள்ளதால், அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பள அதிகரிப்பு மற்றும் பணி நிரந்தரம் போன்ற பல கோரிக்கைகளை முன்வைத்து டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர் சங்கத்தினால் இன்று (புதன்கிழமை) விஹார மஹாதேவி பூங்காவுக்கு அருகில் எதிர்ப்பு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது. அதன்பின்னர் அவர்கள் சுகாதார அமைச்சின் வளாகத்திற்குள் சென்று தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், குறித்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதாகவம் பொலிஸாரும் அதிரடிப்படையினரும் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. …
-
- 0 replies
- 236 views
-
-
ஹிட்லர் மற்றும் புட்டின் போன்றவர்களை பின்பற்றி ஆட்சி செய்யுமாறு ஜனாதிபதியிடம் பொதுஜன பெரமுன கோரிக்கை! சர்வாதிகாரி ஹிட்லர், ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் போன்றவர்களை பின்பற்றி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சி செய்ய வேண்டுமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர். ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் இந்த விடயம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாரச்சி தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாம் ஜனாதிபதியை நேரில் சந்தித்து தற்போதைய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினோம். நாம் அவரிடம் தனிப்பட்ட ரீதியில் கோரிக்கை ஒன்றை முன்வைத்தோம். ஜனாதிபதி ஆட்சி பொறுப்பினை ஏற்றுக்கொண்டபோது மக்கள் ஹிட்…
-
- 7 replies
- 443 views
-
-
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல் இலங்கை – இந்திய உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் அடுத்தடுத்து பல விஜயங்கள் இடம்பெற்று வருகின்றன.இதன் ஒரு பகுதியாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்ய வாய்ப்புவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இலங்கையுடனான உறவை மேலும் வலுப்படுத்தும் இந்தியாவின் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த விஜயங்கள் பார்க்கப்படுகின்றன. நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோர…
-
- 7 replies
- 430 views
-
-
பீரிஸின் இந்திய விஜயத்தில் நடந்தது என்ன? அமைச்சர் ஜி.எல். பீரிஸின் இந்திய விஜயம் வெற்றிகரமாக நிறைவடைந்ததாக வெளிவிவாகர அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் 2022 பெப்ரவரி 06 – 08 வரை இந்தியாவிற்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளிநாட்டு அமைச்சராகப் பதவியேற்றதன் பின்னர், இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. சுப்ரமணியம் ஜெய்சங்கரின் அழைப்பின் பேரில், வெளிநாட்டு அமைச்சர் தனது முதலாவது விஜயத்தை புது தில்லிக்கு மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது, வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ், இந்திய வெளிவிவகார அமைச்…
-
- 0 replies
- 275 views
-
-
இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிக மற்றும் சிறீதரன், சாள்ஸ் சந்திப்பு ஈழத்தமிழர்களின் அரசியல் எதிர் காலம் குறித்தும், தமிழ் மக்களின் ஏகோபித்த அரசியல் அபிலாசையான நிலையான அரசியற்தீர்வைப் பெறுவதில் ஏற்படுத்தப்படும் காலதாமதமானது, தமிழர்களின் நில உரித்துக்களை வன்பறிப்புச் செய்து, தமிழர்களின் இருப்பைக் கேள்விக்குட்படுத்தும் சமநேரத்தில் இந்தியாவின் அரசியல், இராஜதந்திர நகர்வுகளிலும் தாக்கம் செலுத்தக்கூடும் என்பதால், தமிழர்களுக்கான நிரந்தர அரசியல்தீர்வில் இந்தியாவின் வகிபாகம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பது குறித்து இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் வினோத் ஜேக்கப்புக்கும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ச…
-
- 0 replies
- 150 views
-
-
யாழ். மாவட்டம் டெங்கு அபாய வலயமாக மாறியது டெங்கு காய்ச்சலுக்ககான புள்ளி விபரத்தின் படி யாழ். மாவட்டம் டெங்கு அபாய வலயமாக காணப்படுகின்றது என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.எனவே பொதுச் சுகாதார பரிசோதகர்கள், கிராம உத்தியோகத்தர்கள், ஏனையோருடன் இணைந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் ஒன்றிணைந்து செயற்படுமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம் என மேலும் தெரிவித்தார். எமது மாவட்டத்தில் மலேரியா அபாயம் இருந்தபோதும் தற்போது அது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பொது மக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறும் யாழ். மாவட்டத்தைப் பொறுத்தவரையில் சமகாலத்தில் டெங்கு காய்ச்சல் அதிகமாகவே காணப்படுகின்றது என யாழ். மாவட்…
-
- 0 replies
- 181 views
-
-
வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர் பரிசோதனை யாழில் இடைநிறுத்தம்! February 9, 2022 வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர் பரிசோதனைகள் நாளை முதல் மறு அறிவித்தல் வரை யாழ் போதனா வைத்தியசாலையில் இடைநிறுத்தப்படுவதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் நந்தகுமாரன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர் பரிசோதனைகளை வைத்தியசாலையில் மேற்கொள்வதில் சிக்கல் காணப்படுவதால் மறு அறிவித்தல் வரை அவை இடைநிறுத்தப்படுகிறது என்றார். https://globaltamilnews.net/2022/172875
-
- 0 replies
- 154 views
-
-
இலங்கை தமிழர்களுக்கு தீர்வு – இந்தியா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு இலங்கை தமிழர்களுக்கான தீர்வாக அதிகாரப்பரவல் மிகவும் முக்கியமானது என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக சென்றுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸூடனான சந்திப்பின்போதே இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் மேற்கண்ட விடயத்தை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நெருக்கமான மற்றும் நட்புறவை மேலும் வ…
-
- 4 replies
- 448 views
-
-
Nirosh / 2022 பெப்ரவரி 08 , பி.ப. 07:06 - 0 - 11 FacebookTwitterWhatsApp இலங்கை கடற்பரப்பில் இழுவைமடி வலைத் தொழிலில் ஈடுபடுவதை முற்றாக இல்லாதொழிக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருப்பதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்தியக் கடற்றொழிலாளர் பிரதிநிதிகளுடன் இன்று(08) நடத்திய காணொளி மூலமான கலந்துரையாடலிலேயே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தமிழகத்தில் அமைந்துள்ள இந்தியாவிற்கான இலங்கையின் துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்த கடற்றொழிலாளர் பிரதிநிதிகள…
-
- 3 replies
- 423 views
-
-
Published by T. Saranya on 2022-02-07 15:47:38 (நா.தனுஜா) மனித உரிமைகள் தொடர்பான ஐரோப்பிய ஒன்றியப்பாராளுமன்ற உபகுழுவில் என்னால் வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து மிகுந்த அதிருப்தியடைகின்றேன். இவ்வறிக்கையானது இணையவழி வன்முறைகள் உள்ளடங்கலாக இனவாத சிந்தனையுடைய நபர்கள் எனக்கெதிராக வன்முறைகளிலும் துஷ்பிரயோகங்களிலும் ஈடுபடுவதற்கு வழிவகுக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார். அதுமாத்திரமன்றி தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட…
-
- 0 replies
- 181 views
-
-
(எம்.ஆர்.எம். வசீம்,இராஜதுரை ஹஷான்) நாட்டில் வெளிநாட்டு கையிருப்பு வரையறுக்கப்பட்டதை தொடர்ந்து மருந்து பொருட்கள் இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் எதிர்வரும் மூன்று மாத காலத்திற்குள் மருந்து தட்டுப்பாடு தீவிரமடைந்து, பல நோயாளிகள் மருந்தில்லாமல் உயிரிழக்க நேரிடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தும் அதிகார சபை சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகள் மீதான விவாதத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். தற்போதைய சூழ்நிலைமையில் நாடு பாரிய நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளது. அத்தியாவசிய உணவு பொ…
-
- 1 reply
- 284 views
- 1 follower
-
-
Published by T. Saranya on 2022-02-08 16:09:17 கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் -------தீவு, களுதாவளை, களுவாஞ்சிகுடி, ஒந்தாச்சிமடம்உள்ளிட்ட கடற்கரை ஓரங்களில் பல வெளிநாடுகளின் பெயர் பொறிக்கப்பட்ட கழிவுகள் கரை ஒதுங்குவதாக பொதுமக்களும், மீனவர்களும் தெரிவிக்கின்றனர். காலணிகள் வெற்றுப் போத்தல்கள், குளிர்பான போத்தல்கள், மூங்கில்கள் உள்ளிட்ட பல பொருட்கள் கடலலையில் அள்ளுண்டு கரையொதுங்குகின்றன. இதனால் சூழலுக்குப் பாதிப்புக்கள் ஏற்படுவதாகவும், கடற்கரையை இரசிக்க வருபர்களுக்கும் இக்கழிவுகள் பெரும் தடையாகக் காணப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு கரையொதுங்கும் சில வெற்றுப்போத்தல்களில் மியன்மார் என ஆங்கில மொழியில் எழுதப்பட…
-
- 0 replies
- 186 views
-