Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தெல்லிப்பளை பிரதேச செயலருக்கு “நேர்மைக்கு மகுடம்” விருது January 11, 2022 தெல்லிப்பளை பிரதேச செயலருக்கு “நேர்மைக்கு மகுடம்” விருது வழங்கப்பட்டுள்ளது. ஊழல் மற்றும் இலஞ்சமற்ற ஒரு சிறந்த ஆளுமை மிக்க அரச சேவையாளருக்காக குறித்த விருது தெல்லிப்பளை பிரதேச செயலாளர் திரு. சண்முகராஜா சிவஸ்ரீக்கு இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற குறித்த விருது வழங்கும் நிகழ்விலையே விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனம் நேர்மையான அரச அலுவலர்களை கௌரவித்து பாராட்டி நேர்மைக்கு மகுடம் விருதுகளை வருடாந்திரம் வழங்கி வருகின…

  2. ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச விரைவில் தீர்மானமொன்றை எடுப்பாரென நம்புகின்றேன் என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது- மைத்திரிபால சிறிசேனவுக்கு அடைக்கலம் கொடுத்து அவரை பாதுகாத்து வைத்திருப்பதுதான் நாம் செய்யும் பெரும் தவறு. அதனால் பலர் எம்மீது கோபத்தில் உள்ளனர். எனவே, அவர் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட வேண்டும். அதனை ஜனாதிபதி செய்வார். ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெளியேறினால்கூட அது அரசின் இருப்புக்கு சவாலாக அமையாது. மைத்திரிபால சிறிசேன அப்பம் சாப்பிட்டுவிட்டு அந்த பக்கம் தாவிய பிறகு, நாம் புதிய கட்சியொன்றை உருவாக்கினோம். மஹிந்…

  3. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இந்திய மிளகாய் விநியோகஸ்தர்களுக்கான பணம் செலுத்தப்படவில்லை என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கைக்கான இந்திய இறக்குமதியாளர்கள் நிலுவைத் தொகையை செலுத்தாததால், கடந்த சில மாதங்களாக இந்திய மிளகாய் சந்தையில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இந்திய மதிப்பில் 250-300 கோடிக்கு மேல் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடனை செலுத்தாதது குறித்து இதுவரை முறைப்பாடுகள் எதுவும் பதிவாகவில்லை எனவும், அவ்வாறு முறைப்பாடு தெரிவித்தால் தங்களுக்கு கிடைக்க வேண்டிய பணம் கிடைக்காமல் போய்விடலாம் எனவும் விநியோகஸ்தர்கள் அஞ்சுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவு…

  4. இலங்கை கடற்படையே மாதகல் மீனவரை கொலை செய்துள்ளது என தமிழ் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இன்று யாழ்ப்பாணம் மாதகல் கடற்பரப்பில் சடலமாக மீட்கப்பட்டவரின் தலையில் பலத்த காயம் காணப்படுவதுடன், அவர் பயணித்த படகின் வெளி இணைப்பு இயந்திரம் சேதமடைந்துள்ளது. இதிலிருந்தே தெரிகிறது படகு வேண்டுமென்று மோதச் செய்யப்பட்டு அடாவடி படுகொலை நிகழ்துள்ளது என்று. இந்த அடாவடியை செய்தவர்கள் கடற்படையினர் என மக்கள் இங்கு தெரிவித்துள்ளனர். மீனவர் ஒருவர் விபத்து மூலம் உயிரிழந்தால் 24 மணித்தியாலங்களின் பின்னரே சடலம் கரையொதுங்கும், ஆனால் உயிரிழந்தவரின் உடல் சூடு கூட தணியவில்லை என உறவுகள் தெரிவித்துள்ளனர். இது தவிர இன்னமும் நீதவான் சடலத்தை வந்து…

  5. தமிழ் கட்சிகள் உட்பட மூன்று புதிய அரசியல் கட்சிகள் பதிவு – தேர்தல்கள் ஆணையகம் 2021 ஆம் ஆண்டுக்காக மூன்று புதிய அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது. இந்தக் கட்சிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதன்படி, தமிழ் மக்கள் கூட்டணி, புதிய லங்கா சுதந்திரக் கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி என்பன பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் கூட்டணி கட்சி வடக்கின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் பதிவு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. …

  6. இந்தியா தமிழ் தலைவர்களை விலைக்கு வாங்கியுள்ளது – கஜேந்திரன் குற்றச்சாட்டு இந்தியா தமிழ் தலைவர்களை விலைக்கு வாங்கி அவர்களை தங்களுடைய கூலிகளாக வைத்துக்கொண்டு தமிழ் மக்களுடைய பிரதிநிதிகள் என்ற பெயரிலேயே இந்த ஒற்றையாட்சிக்குள் தமிழர்களிடத்தில் இந்த செயல்பாட்டிற்கு துணை போய்க் கொண்டிருக்கிறார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரன் தெரிவித்தார். தமிழராய்ச்சி மாநாட்டிலே படுகொலை செய்யப்பட்ட அவர்களை நினைவு கூறும் நிகழ்வு தமிழாராய்ச்சி மாநாடு நினைவுத் தூபியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் அனுஷ்டிக்கப்பட்டது. பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஆட்சிக…

    • 9 replies
    • 718 views
  7. வவுனியாவில் பொலிஸாரின் ஏற்பாட்டில் மாபெரும் சிரமதானம்! வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் டி .தம்மிக்க விஜயசிறியின் ஆலோசனைக்கு அமைவாக தைத்திருநாளை முன்னிட்டு நகரில் மாபெரும் சிரமதானம் ஒன்று இன்று (செவ்வாய்க்கிழ்மை) காலை பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது . தைத்திருநாளை முன்னிட்டு நகரைத் தூய்மையாக வைத்திருப்போம் எனும் கருப் பொருளில் வவுனியா பழைய பேருந்து நிலையத்திலிருந்து முன்னெடுக்கப்பட்டுள்ள சிரமதானமானது கண்டிவீதி ,ஹொறவப்பொத்தான வீதி , புகையிரத வீதி , மன்னார் வீதி போன்ற வீதிகளிலிருந்து ஆரம்பமாகி இடம்பெற்றது . வவுனியா தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜே.ஏ.ஏ.எஸ்.ஜெயக்கொடி , வவுனியா வர்த்தகர் சங்கத்தினர், …

  8. Published by T Yuwaraj on 2022-01-10 11:26:17 நாட்டில் தற்போது அனைத்து அத்தியாவசிய பொருட்கள் மற்றும் இதர பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது செய்தித்தாள்களை அச்சிடுவதற்காகப் பயன்படுத்தப்படும் காகிதங்களுக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது சகல பத்திரிக்கை தொழிற்துறையினரும் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளனர். டொலர் தட்டுப்பாடு மற்றும், உலகளவில் காகிதங்களின் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி என்பன இதற்கு பிரதான காரணங்களாகும் என தெரிவிக்கப்படுகின்றது. இதன்காரணமாக செய்தித்தாள்களை அச்சிடுவதற்காகப் பயன்படுத்தப்படும் காகிதங்களின் விலையானது, கடந்த மாதத்தை காட்டிலும் இந்த மாதம் …

  9. Published by T. Saranya on 2022-01-10 12:49:37 (எம்.எப்.எம்.பஸீர்) சீனாவின் கறுப்புப் பட்டியலில் இருந்து தம்மை நீக்குமாறு இலங்கை மக்கள் வங்கி கோரிக்கை முன் வைத்துள்ளது. கடன் கடிதத்திற்கு அமைய சீன உர நிறுவனத்திற்கு 6.9 மில்லியன் டொலர் செலுத்தப்பட்டுள்ளதாக சீன தூதரகத்துக்கு அறிவித்தே மக்கள் வங்கி தன்னை கறுப்புப் பட்டியலில் இருந்து விடுவித்துக்கொள்வதற்கான கோரிக்கையை முன் வைத்துள்ளது. இந்நிலையில் இன்று (10) குறித்த கறுப்புப்பட்டியலில் இருந்து தம்மை நீக்கிக்கொள்ள எதிர்பார்ப்பதாக மக்கள் வங்கி அறிவித்துள்ளது. முன்னதாக ஒப்பந்தத்தை மீறி கடன் சான்று பத்திரத்திற்கான கொடுப்பனவை செலுத்தாமையால் மக்கள் வங்கியை கறுப்புப் பட்…

  10. மரக்கறி விலை சற்று வீழ்ச்சி - அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையம் Published by T. Saranya on 2022-01-10 14:10:50 நுவரெலியாவில் மரக்கறி விலை ஓரளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு விசேட அறிக்கையொன்றை வழங்கிய அவர், பண்டிகை காலம் நிறைவடைந்துள்ள நிலையில், நுவரெலியாவில் மரக்கறி விலை ஓரளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், விவசாயிகளின் கொள்வனவு விலையும் குறைந்துள்ளதாகவும், மற்றும் சிறிய இலாபத்தை வைத்துக்கொண்டு மொத்த விற்பனை விலையும் ஒரே நேரத்தில் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் 1 கிலோ முட்டைகோஸ் 165 ரூபாவாகவும், 1 கில…

  11. மைத்திரியின் கனவு நனவாகாது – சரத் பொன்சேகா புதிய அரசாங்கத்தை அமைக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கனவுகள் ஒருபோதும் நனவாகாது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ள கருத்திற்கு பதிலளிக்கும்போதே பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இதனைத் தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்றபோது வெளிநாட்டில் இருந்தமையினால் அதனை தடுக்க முடியாமல் போனது என கூறிய மைத்திரிபால இவ்வாறு கூறுவது ஏற்புடையதல்ல என்றும் குறிப்பிட்டார். மேலும் பொருளாதார பிரச்சினைகளினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் பதிப்படையச் செய்யும் வகையில் கருத்துக்…

    • 0 replies
    • 301 views
  12. நாட்டின் தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் பொருளாதார கொள்கைகள் காரணமாக ஏதோ ஒரு வகையில் நாடு வங்குரோத்து நிலைமைக்கு சென்றால், நாட்டில் முதலீடுகளை செய்துள்ள வெளிநாட்டவர்கள், தமது முதலீடுகளை வேறு நாடுகளுக்கு கொண்டு செல்லும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார கற்கைப் பிரிவின் பேராசிரியர் ஆனந்த (Prof.Ananda) தெரிவித்துள்ளார். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமது முதலீடுகளை வேறு நாடுகளுக்கு எடுத்துச் சென்றால், அதுவும் நாட்டின் பொருளாதாரத்தின் மீதான மரண அடியாக இருக்கும் எனறும் அவர் எச்சரித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் பேராசிரியர் ஆனந்த இதனை குறிப்பிட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு மொத்தமாக 7 ஆயிரம் மில்லியன் டொலர் கடனை …

    • 32 replies
    • 2.9k views
  13. தமிழ் தேசியக்கட்சிகளால் முன்னெடுக்கப்படும் முயற்சிக்கு எதிராக நிற்கமாட்டோம் – இராதாகிருஷ்ணன் இந்திய பிரதமருக்கு அனுப்படவுள்ள கூட்டு ஆவணத்தில் நாம் கையொப்பமிடாவிட்டாலும், தமிழ் தேசியக்கட்சிகளால் முன்னெடுக்கப்படும் முயற்சிக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும். அவர்களின் நடவடிக்கைக்கு எதிராக நிற்கமாட்டோம். என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தமிழ் பேசும் கட்சிகள் இணைந்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தன. அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பை பெறுவதற்கே ஆரம்பத்தில் இண…

  14. அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் எழுச்சிக்கு தலைமை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தயார் – யாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாச அரசாங்கத்திற்கு எதிரான பொதுமக்களின் அதிருப்தி தீவிரமடைவதால் இந்த அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் எழுச்சிக்கு தலைமை வழங்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளதென அக்கட்சித் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமன சஜித் பிரேமதாச தெரிவித்தார்.2023 நடுப்பகுதிக்குள் நாடாளுமன்ற தேர்தலை நடத்தவேண்டிய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்படும். ஆயினும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் இல்லாத பொதுவேட்பாளரை நிறுத்தும் ஆதரிக்கும் எண்ணம் கட்சிக்கு இல்லை. அரசாங்கத்திற்கு எதிரான பொதுமக்களின் அதிருப்தி தீவிரமடைவதால் இந்த அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் எழுச்சிக்கு தலைமை வழங…

  15. தனியாக நின்று ஆளமுடியாது SLFPஐ கறிவேப்பிலையாக தூக்கி வீசி விட்டனர்! January 10, 2022 ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள், தேர்தலுக்குப் பின்னர், தன்னுடைய உறுப்பினர்களை கறிவேப்பிள்ளையாக தூக்கியெறிந்து விட்டனர் எனக் குற்றச்சாட்டியுள்ள முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன, ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் எவையும் இன்று வரையிலும் நிறைவேற்றப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், நாடே குழப்பத்துக்குள் சிக்கித் தவ…

  16. மூதூரில் டிப்பர் – பேருந்து மோதி கோர விபத்து : 26 பேர் வைத்தியசாலையில் திருகோணமலை – மூதூரில் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் 26 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைவட்டர தகவல்கள் தெரிவிக்கின்றன. மூதூர் – மட்டக்களப்பு வீதியில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில் இரு வாகனங்களின் சாரதியும் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1261009

  17. உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் 48 ஆவது நினைவு தினம்! யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 4 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் 48 ஆவது நினைவு தினம் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் அனுஷ்டிக்கப்பட்டது. மாநாட்டில் கொல்லப்பட்டவர்களில் நினைவாக, யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைக்கப்பட்டுள்ள நினைவாலயத்தில் நினைவஞ்சலி நடத்தப்பட்டது. இதன்போது அரசியல் கட்சி பிரதிநிதிகள் பொது மக்களை கலந்துகொண்டு அஞ்சலியை செலுத்தினர். 1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டின் இறுதிநாள் விருந்துபசார வைபவத்தின் போது வன்முறைக் கும்பலொன்றினால் நடத்தப்பட்…

  18. 13’ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துக ! - பிரதமர் மோடிக்கான ஆவணத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் பிரதான கோரிக்கை (ஆர்.ராம்) தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைக்கவுள்ள ஆவணத்தில் பிரதான கோரிக்கையாக அரசியலமைப்பில் உள்ள 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கூறப்பட்டுள்ளது. http://cdn.virakesari.lk/uploads/medium/file/119756/modi.jpg அத்துடன், 1987ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையின் ஆட்சிப்பொறுப்பில் மாறிமாறியிருந்த அரசாங்கங்கள் வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தையும் முழுமையாக நடைமுறைப்படுத்துமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமர் மோடிக்கு அனுப்புவதற்காக தயாரிக்கப்பட்ட ஆவணத்தில…

  19. கரையில் தென்படும் இயந்திர பாகங்கள் சண்முகம் தவசீலன் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன் கடற்கரைப் பகுதியில் மண்ணுக்குள் புதையுண்ட உழவு இயந்திரத்தின் பாகங்கள் சில மீனவர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளன. 2009 ஆம் ஆண்டு போரின் இறுதி நாட்களில் மக்களால் கைவிடப்பட்ட உழவு இயந்திரத்தின் பாகங்களாக இருக்கலாம் என மக்கள் தெரிவிக்கின்றனர். தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படும் நிலையில் கடற்கரையில் அலையின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந் நிலையில், புதுமாத்தளன் கடற்கரைப்பகுதியில் கடந்த காலத்தில் புதைக்கப்பட்ட அல்லது கடலில் அள்ளுண்டு போன உழவு இயந்திரத்தின் பாகங்கள் சில சனிக்கிழமை (08) காலை அடையாளம் காணப்பட்டுள்ளன. உழவு இய…

    • 1 reply
    • 395 views
  20. சீன அமைச்சருடன் ஜனாதிபதி பேசியது என்ன? சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான 65 வருடகால இராஜதந்திர உறவுகளை மேலும் பலப்படுத்தும் வகையில், சீன மக்கள் குடியரசின் வெளிவிவகார அமைச்சரும் அரச ஆலோசனைச்சபையின் உறுப்பினருமான வாங் யீ (Wang Yi) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது. ஜனாதிபதி அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது. கொரோனா காலத்தில் சீனாவின் உதவிகளுக்காக ஜனாதிபதி இதன்போது நன்றியை தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வரக்கிடைத்தமைக்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய சீன வௌிவிவகார அமைச்சர் நெருக்கமான நண்பன் என்றவகையில் சீனாவின் ஒத்துழைப்பு எப்போதும் கிடைக்கும் எனவும் இதன்போது ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார். கொவிட் தொற்று நோய்க்கு முகங்க…

  21. காங்கேசன்துறைக்கு சொகுசு ரயில் சேவை கொழும்பில் இருந்து காங்கேசன்துறைக்கு பயணிக்கும் பயணிகளுக்காக சகல வசதிகளுடன் கூடிய சொகுசு ரயில் சேவை இன்று (09) ஆரம்பிக்கப்பட்டது. இந்த ரயில் தினமும் காலை 5.10 மணிக்கு கல்கிசையில் இருந்து புறப்பட்டு அன்றைய தினம் மதியம் 12.17 மணிக்கு காங்கேசன்துறையை சென்றடையும். காங்கேசன்துறையில் இருந்து பிற்பகல் 1.15 மணிக்குப் புறப்பட்டு இரவு 8.25 மணிக்கு கல்கிசை சென்றடையும் என்று தெரிவிக்கப்படுகிறது. நவீன தொழில்நுட்பத்துடன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட இந்த ரயிலில் 10 பெட்டிகள் மற்றும் 02 பவர் என்ஜின்கள் உள்ளன. இந்த ரயிலில் பயணிகளுக்கு வசதியான இருக்கைகள், உணவருந்துவதற்கான பகுதி, டிவி சேவை மற்றும் நவீன கழிப்பறை வசதிகள் உள…

    • 24 replies
    • 1.6k views
  22. சீன வெளிவிவகார அமைச்சருடன் பிரதமர் சந்திப்பு! சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று காலை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பில் இருதரப்பு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், சீனாவில் மருத்துவம் கற்கும் பெருமளவிலான இலங்கை மாணவர்கள் மீண்டும் சீனாவுக்கு திரும்புவது குறித்து கவனம் செலுத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். அத்துடன் சுற்றுலா, முதலீடு, கொரோனா நிவாரணம் மற்றும் கொரோனா பிந்தைய ஏற்பாடுகள் போன்ற விடயங்களும் கலந்துரையாடப்பட்டதாக மஹிந்த ராஜபக்ஷ அந்தப் பதிவில் கூறியுள்ளார். https://athavannews.com/2022/…

  23. தமிழ் தேசியக்கட்சிகளால் முன்னெடுக்கப்படும் முயற்சிக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும் – இராதாகிருஷ்ணன் இந்திய பிரதமருக்கு அனுப்படவுள்ள கூட்டு ஆவணத்தில் நாம் கையொப்பமிடாவிட்டாலும், தமிழ் தேசியக்கட்சிகளால் முன்னெடுக்கப்படும் முயற்சிக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும். அவர்களின் நடவடிக்கைக்கு எதிராக நிற்கமாட்டோம்.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். நுவரெலியாவில் இன்று ( ஞாயிற்றுக்கிழ்மை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறி…

    • 0 replies
    • 239 views
  24. சஜித் பிரேமதாச நயினாதீவுக்கு விஜயம்! எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) நயினாதீவுக்கு விஜயம் செய்த சஜித் பிரேமதாச நாகவிகாரைக்குச் சென்று வழிபாடுகளை மேற்கொண்டு விகாராதிபதியிடம் ஆசிகளை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்திலும் விசேட வழிபாடுகளை மேற்கொண்டார். இதன்போது, சஜித் பிரேமதாசவின் மனைவி ஜெலனி பிரேமதாச, மாத்தறை நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண, உமாச்சந்திர பிரகாஷ் ஆகியோரும் கலந்துகொண்டனர். https://athavannews.com/2022/1260891

  25. தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் குழப்பகரமான நிலைமை! தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் குழப்பகரமான நிலைமையொன்று தோன்றியுள்ளதாக அக்கட்சியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று(சனிக்கிழமை)தமிழர் விடுதலைக் கூட்டணியினுடைய கூட்டமொன்று கிளிநொச்சியிலுள்ள அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது கட்சியினுடைய செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி உட்பட கட்சியினுடைய உறுப்பினர்கள் பலரும் கலந்துரையாடிபோது இடைநடுவே ஆனந்தசங்கரி, வெளியேறியதாகவும் அதன் பின்னர் அங்கு கூடியிருந்த ஏனைய உறுப்பினர்கள் புதிதாக ஒரு தற்காலிகமான ஒரு நிர்வாகத்தை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக இன்று மாலை 6 மணியளவில் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.