Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு சுற்றுலாப் பயணிகளின் வருகை இந்த வருடம் அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் மாத்திரம் ஒரு இலட்சத்து 4 ஆயிரத்து 989 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. குறிப்பாக கடந்த நவம்பர் மாதம் 44 ஆயிரத்து 294 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா தொற்று பரவல் காரணமாக விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டதன் மூலம், நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது. https://athavannews.com/2021/1255932

  2. புதிய பஸ் நிலையம் 15ஆம் திகதி நடைமுறைக்கு! தனியார் பஸ் சேவையின் 3 வகையான சேவைகள் (உள்ளூர் சேவைகள், வெளியூர் சேவைகள், கொழும்புக்கான இரவு சேவைகள்) எதிர்வரும் 15ஆம் திகதி தொடக்கம் புதிய பஸ் நிலையத்திலிருந்தே ஆரம்பிக்கப்படும் என்று பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தனியாரின் உள்ளூர் சேவை பஸ்கள், நெடுந்தூர பஸ் நிலையத்திலிருந்து புறப்பட்டு தற்போது இயங்கிவரும் இடங்களில் 10 நிமிடங்கள் தரித்துநின்று, பயணிகளை ஏற்றிச்செல்லும். அதேபோல் வெளியிடங்களிலிருந்து வரும் பிரயாணிகள் நெடுந்தூர பஸ் நிலையத்தில் இறக்கப்படுவர். இ.போ.ச. பஸ் நிலையத்திலிருந்து புறப்படும் வெளிமாவட்டங்களுக்குச்செல்லும், நீண்ட தூரத்துக்குப் பயணிக்கும் பெரிய பஸ்கள், மருத்துவமனை வீதியூடாக சத்திரச் சந்தியை …

  3. துப்பாக்கி முனையில் தமிழ் அரசியல் கைதிகள் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் தொடர்ப்பில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு விஷேட விசாரணைகளை ஆரம்பித்தது அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சிலருக்கு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.இதற்கமைய, விசாரணைகளை முன்னெடுத்த கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு, இதுவரை அனுராதபுரம் சிறையில் உள்ள இரு கைதிகள், 7 சிறை அதிகாரிகள் மற்றும் வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 9 சிறைக் கைதிகளிடம் வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளது…

  4. 2 ராணுவ அதிகாரிகளுக்கு அமெரிக்கா தடை December 11, 2021 இலங்கை ராணுவம் பல்வேறு போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளநிலையில் மனித உரிமை மீறலுக்காக 2 இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. 2008/2009 ஆம் ஆண்டுகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவத்துடன் தொடர்புடைய கடற்படை புலனாய்வு அதிகாரி சந்தன ஹெட்டியாராச்சி மற்றும் 8 தமிழர்களை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சுனில் ரத்நாயக்க ஆகியோருக்கே இவ்வாறு அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டு ள்ளது. மேலும் அவர்களது குடும்பத்தினரும் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு இலங்கை ராணுவ தளபதி சவேந்தி…

    • 7 replies
    • 1.3k views
  5. முல்லைத்தீவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்(காணொளி) Posted on December 10, 2021 by நிலையவள் 37 0 முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சர்வதேச மனித உரிமைகள் தினமான இன்று தமது உறவுகளின் உரிமைகளை வேண்டி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துவரும் முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் அமைந்துள்ள அலுவலகத்துக்கு முன்பாக இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் யுத்தம் முடிவடைந்த நாள் முதல் இன்று வரை 12 வருடங்களாக தமது …

    • 0 replies
    • 339 views
  6. ஏப்ரலில் மக்கள் உண்பதற்கு உணவு இருக்காது:பேராசிரியர் மெத்திகா வித்தானகே Posted on December 10, 2021 by தென்னவள் 13 0 எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் நாட்டில் மக்கள் உண்பதற்கு உணவு இல்லாத நிலைமை ஏற்படும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞானப் பீடத்தின் பேராசிரியர் மெத்திகா வித்தானகே எச்சரித்துள்ளார். பெரும் போக பயிர் செய்கையை ஆரம்பிக்க வேண்டும் என்ற போதிலும் அதற்கு தேவையான உரத்தை வழங்க அரசாங்கம் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். சேதனப் திரவ பசளையை மாத்திரம் பயன்படுத்துவதால், நாட்டுக்கு போதுமான அறுவடை கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது. பெரும் போகம் என்பது நாட்டுக்கு முக்கியமான அதிகளவ…

  7. நா.தனுஜா உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்கள் மட்டக்களப்பு வாழ் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் சமூகங்களின் மீது நீண்டகால அடிப்படையில் மிகமோசமான தாக்கங்களை ஏற்படுத்தியிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள 11 மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், தமது மதவழிபாடுகளை அச்சமின்றி முன்னெடுப்பதில் கிறிஸ்தவ சமூகம் முகங்கொடுத்துள்ள சவால்கள், கிறிஸ்தவ சமூகத்தின் மீது ஏனைய வடிவங்களில் பிரயோகிக்கப்படும் அடக்குமுறைகள், பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட முஸ்லிம் சமூகத்தைச்சேர்ந்த ஆண்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் எதிர்கொண்டுள்ள வாழ்வாதார நெருக்கடிகள் உள்ளடங்கலாக இவ்விரு சமூகங்களும் பல்வேறு வழிகளிலும் ஒடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். …

  8. ( எம்.எப்.எம்.பஸீர்) ' ஒரே நாடு - ஒரே சட்டம் ' ஜனாதிபதி செயலணியின் தலைவரும் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேர், இஸ்லாத்தையும் அல்லாஹ்வையும் அவமதித்து மத ஒற்றுமையை சீர் குலைக்கும் வண்ணம் கருத்து வெளியிட்டமை குறித்த வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். கொழும்பு பிரதான நீதிவான் புத்திக ஸ்ரீராகல இவ்வாறு அவரை விடுதலை செய்தார். ஞானசார தேரருக்கு எதிரான குறித்த விவகார வழக்கினை முன்னெடுத்துச் செல்வதில்லை என சட்ட மா அதிபர் தீர்மானித்து, அவரை விடுதலை செய்ய வழங்கியுள்ள ஆலோசனைக்கு அமைய, ஞானசார தேரரை வழக்கிலிருந்து விடுவிப்பதாக கொழும்பு பிரதான நீதிவான் அறிவித்தார். பொலன்னறுவை, சின்னவலப்பட்டியிலும் மெஹரகொடலெல்ல பகுதியிலும் ஊடகங்களுக்க…

    • 4 replies
    • 502 views
  9. எமக்கான நீதியினை இறப்பதற்கு முன் வழங்குங்கள்- காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் December 10, 2021 எமது உறவுகளுடன் வாழத்துடிக்கும் எமக்கான நீதியை நாம் இறப்பதற்கு முன் பெற வழி செய்யுமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் ஐநா மனித உரிமை ஆணையாளருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. வவுனியாவில் இன்று போராட்டம் மேற்கொண்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினரால் ஐ.நா மனித உரிமையாளர் ஆணையாளருக்கு எழுதப்பட்ட கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கை அரசின் படைகளாலும், துணை ஆயுதக்குழுக்களாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளைத் தேடும் தொடர் போராட்டம் இன்று 1750 வது நாளாக நடைபெற்றுக் கொண்டிரு…

  10. கொலைக்குற்றம் நிரூபிக்கப்பட்ட உங்கள் இனத்தவர்கள் வெளியே குற்றமற்ற தமிழ் இளைஞர்கள் உள்ளே; கஜேந்திரகுமார் December 10, 2021 “கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்ட உங்கள் இனத்தவர்கள் வெளியே குற்றமற்ற தமிழ் இளைஞர்கள் உள்ளே” என யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பாராளுமன்றத்தில் நேற்று குற்றஞ்சாட்டினார். நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நீதி அமைச்சு மீதான வரவு செலவுதிட்ட குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனைத் தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது: “திருகோணமலையில் சிங்களவர்களுக்காக தனிச் சிங்களத்தில் வழக்கு நடாத்துவதற்காக தனியான நீதவான் நீதிமன…

  11. ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கை யாப்பு உருவாக்கத்திற்கு முரணானது; சுமந்திரன் எம்.பி. December 10, 2021 மாகாண சபை முறைமையின் ஊடாக அதிகாரங்களை மாகாணங்களுக்கு பகிர்வோம், மாகாணங்களுக்கு ஏற்ற சட்டங்களை அவர்களே உருவாக்கும் அதிகாரத்தை வழங்குவோம் என சர்வதேசத்திற்கு வாக்குறுதி வழங்கிவிட்டு ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கையை வகுப்பது நியாயமானதல்ல. இது தற்போதைய அரசியல் அமைப்பு உருவாக்கத்திற்கு முரணானது அத்துடன் சர்வதேசத்திற்கு கொடுத்த வாக்குறுதிகளை மீறும் செயல் எனத்தெரிவித்த தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான எம்.ஏ.சுமந்திரன் .இந்த ஒரேநாடு ஒரே சட்டம் செயலணியில் சுய மரியாதையை கொண்டுள்ள எந்த தமிழரும் அங்கம் பெற முடியாது எனவும் கூறினார். …

  12. Courtesy: திபாகரன் ஜனநாயகத்தின் உயரிய விழுமியமாகவும், கூர்முனையாகவும் அமைவது தோல்விக்குப் பொறுப்பேற்று பதவி விலகுவதாகும். அவ்வாறு பதவி விலகும்போது மற்றவர்களுக்குப் பொறுப்பு உணர்வு இயல்பாகவே ஏற்படும். அது தோல்வியிலிருந்து மீண்டு எழுந்து வெற்றியின் பக்கம் செல்வதற்கான புதிய வழிகளை அவர்கள் கண்டுபிடிக்க உதவும் அல்லது கண்டு பிடிக்க முயற்சிப்பார்கள். இதன் மூலம் புதிய ஆளுமைகள் பல முனைகளிலிருந்தும் தோற்றம் பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்பதே இதனுடைய அடிப்படைத் தத்துவமாகும். தோல்விக்குப் பொறுப்பேற்றல் என்பது ஜனநாயகத்தின் உயரிய விழுமியமும், நாகரிகமுமாகும். அது ஒரு மனிதனின் பொதுவாழ்வில் தனக்கு இருக்கின்ற பொறுப்புக்களையும், பண்பாட்டையும், உயரிய சமூகப் பொறுப்பைய…

  13. கஞ்சா சாகுபடியை அனுமதித்து இலங்கையில் சட்டமியற்ற முயற்சி: 'போதை பொருளா மூலிகையா' என விவாதம் ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கொலம்பியாவில் மருத்துவ கஞ்சா சாகுபடி. கஞ்சா ஏற்றுமதி செய்யும் வகையில், கஞ்சா செய்கையை (சாகுபடியை) முன்னெடுப்பதற்கான சட்டத்தை உடனடியாக வகுத்து, அதனை சட்டமாக்குமாறு இலங்கை நாடாளுமன்றத்தில் யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி மூலமாக நாடாளுமன்றத்துக்கு தேர்வாகி, ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு ஆதரவு வழங்கி வரும் நாடாளுமன்ற உறுப்பி…

  14. எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலை இலங்கை கடற்பரப்பில் இருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை! எக்ஸ்ப்ரஸ் பேர்ள் கப்பலை (MV X-PRESS PEARL) இலங்கை கடற்பரப்பில் இருந்து அகற்றுவதற்காக, ஒரு கப்பல் இலங்கை கடற்பரப்பை சென்றடையும் என்று கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் (MEPA) இன்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளது. அதன்படி, குறித்த கப்பல் 2022 ஜனவரி 19 அல்லது 20ஆம் திகதிகளில் சென்றடையுமென அந்த ஆணையம் தெரிவித்துள்ளது. கொழும்பு துறைமுகத்தை அண்மித்த பகுதியில் எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் கடந்த ஜுன் மாதம் தீ விபத்துக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1255707

  15. மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம் ஒன்றை இன்று (வெள்ளிக்கிழமை) காலை முன்னெடுத்திருந்தனர். மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத்தின் ஏற்பாட்டில், மன்னார் பேருந்து தரிப்பிடத்திற்கு முன் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச் சந்திரா தலைமையில் இடம்பெற்ற குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், அருட்தந்தையர்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், மன்னார் நகர சபையின் தலைவர், உப தல…

  16. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் பயணித்த பஸ் விபத்து கொழும்பு வெள்ளவத்தையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பஸ்ஸொன்று விபத்துக்கு உள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று இரவு யாழ்ப்பாணம் நோக்கி குறித்த பஸ் புறப்பட்டுள்ள நிலையில், அனுராதபுரம் மதவாச்சி பகுதியில் வீதியை விட்டு விலகி வயலொன்றில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளனதாக கூறப்படுகின்றது. இந்த சம்பவத்தில் 74 வயதுடைய ஒருவர் உயிரிழந்துடன் 8 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையினாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். …

  17. கடந்த இரு மாதங்களுக்குள் 40 தொடக்கம் 45 வரையான தமிழ் இளைஞர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழே தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் கடந்த இரு மாதங்க ளுக்குள் 40 தொடக்கம் 45 வரையான தமிழ் இளைஞர்கள் ‘புலிகளின் மீள் எழுச்சி’ என்ற பெயரில் செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத் தின் கீழே தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் 20 வயது, 22 வயது இளைஞர்களாவர். இவர்கள் விடயத்தில் சட்டமாஅதிபர் திணைக்களம் கவனம் செலுத்தி அவர்களின் விடுதலைக்கு நடவடிக்கை எடுகக் வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் வன்னி மாவட்ட எம்.பி.யுமான ரிஷாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்தார். 2009 ஆம் ஆண்டில் இவர்கள் 10 வயதைக் கொண்டவர்களாகவே இருந்திருப்பார்கள். இன்று…

  18. 2021 ம் ஆண்டிற்கான தலை சிறந்த ஆசிரியத்துவத்திற்கான விருதினை யாழ். இந்துக் கல்லூரி ஆசிரியர் பெற்றுக் கொண்டார் 2021 ம் ஆண்டிற்கான தலை சிறந்த ஆசிரியத்துவத்திற்கான BIC Crystal Pen விருதினை யாழ். இந்துக் கல்லூரி ஆசிரியர் இ.இரமணன் பெற்றுக் கொண்டுள்ளார். உலகளாவிய ரீதியில் அனைத்து நாடுகளிலுமிருந்து ஒவ்வொரு பிராந்தியங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட பத்து வெற்றியளர்களில் யாழ். இந்துக் கல்லூரி ஆசிரியர் இ.இரமணன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மேலும் இவ்விருதின் பிரகாரம் யாழ் இந்துக் கல்லூரிக்கு 5000 யூரோ பணமும் (ரூ. 1,150,000.00) 1000 அமெரிக்கடொலர் பெறுமதியான பொருட்களும் நன்கொடையாக வழங்கப்பட இருக்கின்றது. இதேவேளை இடர் கா…

  19. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதானவர்கள் விடுதலை செய்யப்படுவர்! December 10, 2021 பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ சபைக்கு அறிவித்ததோடு, அதற்காக சில சட்ட முறைகளை பின்பற்ற வேண்டியிருக்கிறது. அதனை நீதி அமைச்சர் அலி சப்ரி செய்து வருகிறார் எனவும் கூறினார்.வரவு செலவு திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனின் உரைக்குக் குறுக்கிட்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், உங்களது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்களுக்கு ஒருபோ…

  20. அந்நியச் செலாவணியை ஈட்டும் முக்கிய துறையாக ஆயுர்வேதம் அடையாளம் Posted on December 9, 2021 by தென்னவள் 15 0 தற்காலத்தில் சுதேச மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைமைக்கு அதிகபட்ச கேள்வி நிலவுவதால், அந்தியச் செலாவணியை ஈட்டும் பிரதான துறையாக அவை அடையாளம் காணப்பட்டுள்ளன என்று தெரிவித்த ஆயுர்வேத ஆணையாளர் கலாநிதி எம்.டீ.ஜே.அபேகுணவர்தன, அதற்கான பல்வேறு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார். “சர்வதேசத்தை நோக்கி சுதேச மருத்துவம்” என்ற தொனிப்பொருளில், ஜனாதிபதி ஊடக மையத்தினால் இன்று (09) நடத்தப்பட்ட வீடியோ தொழில்நுட்பத்தினூடான ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். சுதேச மர…

    • 0 replies
    • 217 views
  21. பெண்கள் அமைப்பு கவனயீர்ப்பு பேரணி Posted on December 9, 2021 by தென்னவள் 17 0 ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி, கிழக்கு மாகாண பெண்களால் ஒன்றிணைக்கப்பட்ட அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பின் ஏற்பாட்டில், கவனயீர்ப்புப் பேரணி, இன்று (09) காலை முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு – கல்லடி பாலத்திலிருந்து கல்லடி பாலத்திலிருந்து பறை, மேளம் முழங்களுடன் ஆரம்பமான இப்பேரணி, மட்டக்களப்பு பிரதான பஸ் நிலையம் வரையில் வருகைதந்ததுடன், அங்கு தமது கோரிக்கைகளை வலியுறுத்தும் அரசாங்கத்துக்கான மகஜர் வாசிக்கப்பட்டது. சிறுபான்மையினருக்கு எதிராகப் பிரயோகிக்கப்படும் ஆயுதமாகவுள்ள பயங்கரவாத தடைச்சட்டம் கட்டாயமாக நீக்கப்படுவதுடன், அச்சட்டம்…

    • 0 replies
    • 364 views
  22. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலையத்தில் உள்ள அடையாளங்கள் தமிழர்களின் அடையாளங்கள் என்பதை சிங்கள தரப்பினர் ஏற்றுக்கொண்டு இன ரீதியான செயற்பாடுகளை அனுமதிக்காது, தொடர்ச்சியாக இந்துக்கள் இங்கு வழிபட அனுமதிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் சபையில் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை, வாய்மூல வினாக்களுக்கான விடைகள் நேரத்தில் கேள்வி எழுப்பிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன், இலங்கையில் தமிழர்கள் பௌத்தர்களாக இருந்தார்கள் என்பதை முதலில் சிங்கள தரப்பினர் ஏற்றுக்கொள்ள வேண்டும். சிங்கள இதிகாசங்களில் தமிழர்கள்…

  23. லியோ நிரோஷ தர்ஷன்) பிரதமர் பதவி வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் மூழ்கின்ற கப்பலில் ஏறும் அளவிற்கு மனநலம் பாதிக்கப்படவில்லை என்றும் கட்சியின் மறுசீரமைப்பு பணிகளை விரைவில் முழுமையடைய செய்யுமாறும் ஐக்கிய தேசிய கட்சியினருக்கு ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கட்சி உறுப்பினர்களுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர் , ஏடுகளில் எழுதப்பட்ட கணக்கு விபரங்களில் எவ்விதமான பலனும் இல்லை. மக்களிடம் பணம் இல்லை என்பதே யதார்த்தமான உண்மை. மக்கள் மயப்பட்ட பொருளாதாரத்தை நோக்கிய விரைவாக செல்ல வேண்டும். நல்லாட்சி காலத்தில் அதிகமான கடன் தொகை செலுத்தியமையால் அபிவிருத்தி வேகம் மட்டுப்பட்டது. ஆனால் மூன்று வேளையும் உணவை மக்க…

  24. தமிழ் பிரதேச சபை அமைக்க அமைச்சரிடம் கோரிக்கை புத்தளம், உடப்பு பிரதேசத்தில் தமிழ் மக்கள் செறிந்து வாழுகின்ற பிரதேசங்களை இணைத்து புதிய பிரதேச சபை ஒன்றினை உருவாக்கித் தருமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சிக் கட்டு பிதேச சபைத் தலைவர் தட்சணாமூர்த்தி தலைமையில் உடப்பு பிரதேச சமூக பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் நேற்று (08) சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடினர். இதன்போது, உடப்பை சூழவுள்ள பிரதேசத்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில், தமிழ் பிர…

    • 0 replies
    • 250 views
  25. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - 63 பேருக்கும் விளக்கமறியல் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட ஸரானின் சகோதரி, சியோன் தேவலாய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட 63 பேரையும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் காணொளி மூலமாக இன்று (09) திகதி உத்தரவிட்டார். கடந்த 21.4.2019 உயிர்த்த ஞாயிறன்று இடம் பெற்ற தாக்குதலின் பின்னர் ஸஹ்றான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் இவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரேலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தின் காத்தான்குடியை சேர்ந்த 65 பேரை கைது செய்தனர். அதேவேளை ஸார…

    • 0 replies
    • 401 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.