ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143612 topics in this forum
-
ராஜபக்ஷ அரசாங்கம் நாட்டு மக்களை நடு வீதிக்கு கொண்டு வந்து விட்டுள்ளது - மனோ கணேசன் (க.கிஷாந்தன்) ராஜபக்ஷ அரசாங்கம் நாட்டு மக்களை நடு வீதிக்கு கொண்டு வந்து விட்டுள்ளது. இயலாமையுடன் செயற்படும் இந்த அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்கு மக்கள் தயாராகிவிட்டனர் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். பொருட்களின் விலை உயர்வுக்கு எதிராக தலவாக்கலை நகரில் இன்று (16.10.2021) நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். தோட்டத் தொழிலாளர்கள், ஆசிரியர்கள், மீனவர்கள், விவசாயிகள் என அனைவரையும் ராஜபக்ஷ அரசாங்கம் நடுவீதிக்கு கொண்டுவந்துவிட்டது. ஏற்கனவே பொருளாதார பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள தோட்டத் தொழிலாளர…
-
- 0 replies
- 241 views
-
-
கிழக்கு மாகாண பாடசாலைகள் அனைத்து எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பம். கிழக்கு மாகாண பாடசாலைகள் அனைத்து எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பம் நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் -19 சூழ்நிலை காரணமாக ஒன்றரை வருடங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பிப்பதற்கான சகல வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், அனைத்து பாடசாலைகளிலும் சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், பாடசாலைகளில் குடிநீர் வசதி சுகாதார நடைமுறைகளை பின்பற்றுதல் போன்ற நடைமுறைகளை பேணுவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதில் கவனம் செ…
-
- 1 reply
- 290 views
-
-
எமது உரிமையினை வெல்வதற்கு பாரத தேசம் எமக்கு துணை நிற்க வேண்டும் – யாழ் மாநகர முதல்வர் எமது உரிமையினை வெல்வதற்கு பாரத தேசம் எமக்கு துணை நிற்க வேண்டும் என யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ். இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ் பொதுசன நூலகத்தில் இன்று இடம்பெற்ற அப்துல் கலாமின் 90 வது பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வி.மணிவண்ணன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், எமது உரிமை கோரிக்கையை வெல்வதற்கு பாரத தேசம் எமக்கு துணை நிற்க வேண்டும் எமது தந்தை நாடு என்ற அடிப்படையில் நமக்கு துணை நிற்க வேண்டும் என்ற கோரிக்கையை நான்விடுகின்றேன். ஒருபோதும் பாரத தேசத்தினுடைய நலன்களுக்கு முரணாக நா…
-
- 5 replies
- 545 views
-
-
-
அதுரலியே ரதன தேரர் கட்சியில் இருந்து நீக்கம் - தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வண. அதுரலியே ரதன தேரர் அபே ஜனபல கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் இதனை தெரிவித்துள்ளார். வண. அதுரலியே ரதன தேரரை கட்சியில் இருந்து நீக்குவதாக குறிப்பிட்டு அக்கட்சியின் பொதுச் செயலாளரால் கடிதம் ஒன்றை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=151796
-
- 0 replies
- 276 views
-
-
மாகாண சபை முறையை நீக்கி சிங்கள பௌத்த அரசியலமைப்பை கொண்டு வருவார்களோ என சந்தேகம் – நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் மாகாணசபைத்தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இணைந்து நீங்கள் வரவேண்டும் எனக் கேட்டால் என்னுடைய கடமை என ஏற்று களத்தில் குதிக்கத் தயாராக இருக்கிறேன் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் தேர்தல் சம்பந்தமாக எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. எல்லா கட்சிகளும் இணைந்து சில விடயங்களை அரசாங்கத்துடன் பேச முடியுமா என்பது தொடர்பாகவே ஆராயப்பட்டு வருகின்றது. அதில் தேர்தல் சம்பந்தமான பேச்சுக்கள் இதுவரை எழவில்லை என மேலும் தெரிவித…
-
- 0 replies
- 202 views
-
-
-
- 0 replies
- 652 views
-
-
ஆயுத கடத்தல் – விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் குறித்த விசாரணைக்கு இலங்கை ஒத்துழைப்பு பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்களை கடத்தல் மற்றும் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டமை தொடர்பாக கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக இலங்கை பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு இந்திய தேசிய புலானாய்வு முகமை இலங்கை அரசின் ஒத்துழைப்பை பெறுவதற்கு தீர்மானித்துள்ளதாக முன்னதாக தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் பாதுகாப்பு அமைச்சின் ஊடாகவும் புலனாய்வு பிரிவுகளின் ஊடாகவும் ஒத்துழைப்புகளை வழங்கவுள்ளதாக இலங்கை பாதுகாப்பு தரப்பில் தெ…
-
- 2 replies
- 439 views
-
-
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் அமெரிக்க கப்பல் தரித்து நிற்பதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியுள்ளது- ஜேவிபி குற்றச்சாட்டு கெரவலப்பிட்டிய மின் நிலையம்தொடர்பில் இலங்கைசெய்துகொண்ட உடன்படிக்கை காரணமாக கொழும்பு துறைமுகத்திற்குஅருகில் அமெரிக்கா தனது கப்பலொன்றை நிறுத்திவைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது என ஜேவிபி குற்றம்சாட்டியுள்ளது. ஜேவிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜெயதிச செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ளார். இதன் காரணமாக இலங்கைக்கு மாத்திரமல்ல இந்து சமுத்திரம் முழுவதற்கும் ப…
-
- 0 replies
- 322 views
-
-
திவிநெகும நிதி மோசடி - மற்றுமொரு வழங்கில் இருந்து பெசில் விடுதலை 2015 திவிநெகும நிதி மோசடி வழக்கில் இருந்து அமைச்சர் பெசில் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் திவிநெகும பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரூபா 36.5 மில்லியன் அரசாங்க நிதியைப் பயன்படுத்தி, கடந்த 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது, பஞ்சாங்கம் மற்றும் GI குழாய் விநியோகித்த வழக்கில் இருந்தே குறித்த இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, கடந்த 2015 ஜனாதிபதித் தேர்தலின் போது, திவிநெகும அபிவிருத்தி நிதியத்திற்கு சொந்தமான ரூ. 2,292 மில்லியன் நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக குற்ற…
-
- 0 replies
- 278 views
-
-
இந்தியக் கடற்றொழிலாளர்களின்... சட்ட விரோத, தொழில்முறை நிறுத்தப்பட வேண்டும்: டக்ளஸிடம் சுப்பிரமணியம் சுவாமி தெரிவிப்பு இந்தியக் கடற்றொழிலாளர்களின் விவகாரத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிலைப்பாட்டினை புரிந்து கொள்வதாக இந்திய மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் இந்திய அரச தலைவர்களுக்கு தெளிவுபடுத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்திய மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். குறித்த சந்திப்பின் போது, இந்தியக் கடற்றொழிலாளர்களின் விவகாரம் குறித்து விரிவாக ஆ…
-
- 2 replies
- 372 views
-
-
ஜனநாயகம் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளமையை ஜனாதிபதி புரிந்துகொண்டிருப்பது அவரது அண்மைய உரையின் மூலம் வெளிப்பட்டுள்ளது - சமூக நீதிக்கான தேசிய இயக்கம் (நா.தனுஜா) அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தின் ஊடாக நிறைவேற்றதிகாரத்தை மேலும் வலுப்படுத்தியதன் விளைவாக நாட்டின் ஜனநாயகம் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளமையை ஜனாதிபதி புரிந்துகொண்டிருப்பது அவரது அண்மைய உரையின் மூலம் வெளிப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய அரசியலமைப்பானது நாட்டுமக்களின் நலனை முன்னிறுத்தி, எவ்வித மறைமுக அல்லது தனிப்பட்ட நோக்கங்களுமின்றி உரிய கௌரவத்துடன் தயாரிக்கப்படுவதுடன் கடந்தகாலத் தவறுகள் மீளவும் இடம்பெறாதிருப்பதனை உறுதிப்படுத்தவேண்டும் என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கம் வலியுறுத்தியுள்ளது. ஜ…
-
- 0 replies
- 278 views
-
-
கூட்டமைப்புக்கு கூட்டுத் தலைமையே தேவை ; வலியுறுத்துகிறார் செல்வம் அடைக்கலநாதன் October 15, 2021 சம்பந்தனின் காலத்தின் பின் கூட்டுத்தலைமையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயல்படும். சுமந்திரனின் தனிப்பட்ட கருத்தை பெரிய விடயமாகப் பார்க்கத் தேவையில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை மன்னாரில் அவரின் அலுவலகத்தில் நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பதவி தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்த கருத்துத் தொடர்பில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சியான ரெலோவின் தலைவர் த…
-
- 0 replies
- 212 views
-
-
தமிழ் இளைஞர்கள்... புலனாய்வு அச்சுறுத்தலால், நாட்டைவிட்டு வெளியேற முயற்சிக்கின்றார்கள் – சிறீதரன் தமிழ் இளைஞர்கள் புலனாய்வு அச்சுறுத்தலால் நாட்டைவிட்டு வெளியேற எத்தனிக்கின்றார்கள் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இலங்கைக்கான கனேடியத் தூதுவரிடம் தெரிவித்தார். இலங்கைக்கான கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினான் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் காரியாலயத்தில் இன்று (வியாழக்கிழமை) சந்தித்தார். இந்த சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களால் தமிழர்கள் தற்போது அரச இயந்திரங்களால் நசுக்கப்படும் முறை தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது தமிழர்கள் தமது உணர்வுபூர்வமான நினைவுகளை மேற்கொள்வத…
-
- 0 replies
- 258 views
-
-
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் இன்று (14.10.2021) பிணையில் விடுதலை செய்யப்பட்டார். இதேவேளை அவரது வீட்டில் பணியாற்றி வந்த சிறுமி ஹிஷாலினி மரணித்தமை தொடர்பிலும் கைதுசெய்யப்பட்ட விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரிஷாத் பதியுதீன் இன்று வியாழக்கிழமை பிணையில் விடுதலை செய்யப்பட்டார் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சுமார் 6 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல கொழும்பு கோட்டை நீதிவான் பிரியந்த லியனகே உத்தரவிட்…
-
- 5 replies
- 756 views
-
-
நாட்டை வந்தடைந்தார் சுப்பிரமணியன் சுவாமி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பிற்கமைய பாரதீஜ ஜனதாக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி மற்றும் அவரின் நண்பர் ஜெகதீஷ் ஷெட்டி ஆகியோர் மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இன்று செவ்வாய்கிழமை இலங்கையை வந்தடைந்துள்ளனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது குடும்பத்தினரின் நவராத்திரி விழாவில் பங்கேற்குமாறு விடுத்த அழைப்பிற்கமையவே இன்று இலங்கையை வந்தடைந்துள்ளனர். விமான சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி. வீ. சானக்க தினுஷான் மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் ஆ…
-
- 6 replies
- 757 views
-
-
இலங்கை போலீஸ் ஒருவர் காலணியுடன் இந்து கோயிலுக்குள் சென்றதாக சர்ச்சை 2 மணி நேரங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலுள்ள ஆலயங்களுக்குள் போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் பாதணியுடன் பிரவேசித்த சம்பவம் பாரிய எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை போலீஸ் மாஅதிபர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை இன்று (13) மேற்கொண்டிருந்தனர். இதன்போது, போலீஸ் மாஅதிபருடன் சென்ற உயர் போலீஸ் அதிகாரியொருவர், பாதணியுடன் ஆலயத்திற்குள் சென்றுள்ளதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படமொன்றை பகிர்ந்து, அதிகளவானோர் தமது எதிர்ப்புக்களை வெளியிட்டு வருகின்றனர். இவ்வாறு பாதணியுடன் ஆலயத்திற்குள் செல்லும் போலீஸ் அதிகாரியின் புகைப்படங்கள்…
-
- 4 replies
- 571 views
- 1 follower
-
-
(நா.தனுஜா) சீரான தலைமைத்துவம் இல்லாத நாடாக இலங்கை மாறியிருக்கின்றது. அரசியலில் தன்னை விடவும் தனது தமையனுக்கே அதிக அனுபவம் இருக்கின்றது என்று ஜனாதிபதி கூறுகின்றார். அவ்வாறெனில் அவர் எதற்காக ஜனாதிபதித்தேர்தலில் போட்டியிட்டார்? தேர்தல் பிரசாரத்தின்போது, 'அனைத்தையும் என்னால் மாத்திரமே செய்யமுடியும்' என்று ஏன் கூறினார்? என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்குக்கூட்டணியின் தலைவருமான மனோகணேசன் கேள்வி எழுப்பியுள்ளார். அதுமாத்திரமன்றி கடந்த இருவருடங்களில் தாம் தவறிழைத்திருப்பதை ஏற்றுக்கொண்டு அதனை எதிர்வருங்காலங்களில் திருத்திக்கொள்வதாகப் பேசிய ஜனாதிபதியினால் கடந்த வாரம் இராணுவத்தின் 72 ஆவது வருடப்பூர்த்தியை முன்னிட்டு அநுராதபுரத்தில் திறந்த…
-
- 0 replies
- 492 views
-
-
13 வது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்தியதன் பின்னர் மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் – செல்வம் 13 வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடை முறைப்படுத்தியதன் பின்னர் மாகாண சபை தேர்தலை நடத்துவது என்பது தான் சிறந்ததாக அமையும். இந்தியா இவ்விடயத்தில் முனைப்புடன் செயல்பட வேண்டும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கோரிக்கை என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ”இந்தியாவின் அழுத்தம் காரணமாக மாகாண சபை தேர்தலை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மாறி மாறி ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை தெரிவிக்க…
-
- 0 replies
- 295 views
-
-
11 இளைஞர்கள் கடத்தல் வழக்கில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தொடர்ந்தும் முன்னெடுக்கப் போவதில்லை என சட்டமா அதிபர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு அறிவித்தார். ஆகஸ்ட் மாதத்தில் முன்னாள் கடற்படைத் தளபதிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அவரது அலுவலகம் தொடராது என்று சட்டமா அதிபர் திணைக்களம் கொழும்பு மேல் நீதிமன்றின் சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றுக்கு அறிவித்திருந்தது. 2008-2009 ஆம் ஆண்டுகளில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று கப்பம் பெற்றுக்கொண்டு காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில் வசந்த கரன்னாகொட பிரதான சந்தேக நபர்களில் ஒருவராக கருதப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த ந…
-
- 1 reply
- 469 views
-
-
வடக்கில், வேலைவாய்ப்பின்னமையே... வன்முறைகள், போதைப்பொருள் பாவனை அதிகரிக்க காரணம்! வடக்கில் வேலையில்லாப் பிரச்சினை காரணமாகவே வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதாக பொலிஸ் மா அதிபர் தன்னிடம் தெரிவித்ததாக யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேர்னாட் ஞானப்பிரகாசம் தெரிவித்தார். வடக்கிற்கு விஜயம் மேற்கொண்ட பொலிஸ் மா அதிபர் யாழ் மறைமாவட்ட ஆயரை நேற்று (புதன்கிழமை) மாலை ஆயர். இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினர். குறித்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் யாழ் ஆயர் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்போதைய பொலிஸ் மா அதிபர் எஸ்.எஸ். பியாக, டி.ஐ.ஜியாக யாழ் மாவட்டத்தில் கடமையாற்றி இருந்த ஒருவர் அவருக்கு யாழ்ப்பாணம் நன்றாக தெரியும். யாழ்ப்பாண ம…
-
- 0 replies
- 234 views
-
-
இலங்கை கடற்பரப்பிற்குள்... சட்டவிரோதமான முறையில் பிரவேசித்த, 23 இந்திய மீனவர்கள் கைது! இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசித்து மீன்பிடியில் ஈடுபட்ட 23 இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணம்- பருத்தித்துறையில் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் இந்திக்க டி சில்வா தெரிவித்தார். கிழக்கு கடற்பரப்பின் வெற்றிலைக்கேணி பகுதியில் வைத்து அவர்கள் நேற்று (புதன்கிழமை) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதன்போது, அவர்கள் பயணித்த இரண்டு படகுகளும் கடற்படையினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்தார். கைதானவர்கள், காங்கேசந்துறை மடிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட ப…
-
- 0 replies
- 249 views
-
-
பரம்பரை சொத்தை... தங்களது சொத்து, என்று கூறுபவர்களுக்கு அனுமதிப்பத்திரத்தின் பெயரை மாற்றுவது பெரிய விடயமல்ல – சாணக்கியன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாம் தம்பிமுத்துவின் வீட்டையே தங்களது வீடு என்று கூறுகின்றவர்களுக்கு அனுமதிப்பத்திரத்தின் பெயரை மாற்றுவது பெரிய விடயமல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள முதியோர் சங்கம் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கம் ஆகியவற்றுக்கு சாணக்கியனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் பிளாஸ்ரிக் கதிரைகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவ…
-
- 0 replies
- 277 views
-
-
கையடக்கத் தொலைபேசி கைப்பற்றப்பட்ட சம்பவம் – ரிஷாட்டை சிறைச்சாலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனிடமிருந்து கையடக்கத் தொலைபேசி கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக அவர் மீண்டும் சிறைச்சாலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். இந்த விடயம் தொடர்பாக சிறைச்சாலைகள் பேச்சாளர் சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், தொலைக்காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக நேற்று சிறைச்சாலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார். இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை எதிர்வரும் 24 ஆம் திகதி சிறைச்சாலை நீதிமன்றில் மீண்டும் முன்னிலைப்பட…
-
- 0 replies
- 262 views
-
-
அர்ஜுன் மகேந்திரன் இன்றி... வழக்கை முன்னெடுக்க அனுமதி கோரிய சட்டமா அதிபர் ! மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் கார்திய புஞ்சிஹோ இல்லாமல் 2015 பிணைமுறி மோசடி வழக்கை முன்னெடுத்துச் செல்ல அனுமதி வழங்குமாறு கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றிடம் சட்டமா அதிபர் கோரியுள்ளார். குறித்த வழக்கு இன்று (புதன்கிழமை) கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த கோரிக்கையை சட்டமா அதிபர் முன்வைத்தார். இலங்கை அரசாங்கத்திற்கு 688 மில்லியன் இழப்பை ஏற்படுத்திய 2015 பெப்ரவரி மாதத்தில் 27 ஆம் திகதி இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கின் சந்தேகநபர்களாக குறித்த இருவரும் பெயரிடப்பட்டுள்ளனர். …
-
- 0 replies
- 318 views
-