ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143613 topics in this forum
-
கிளிநொச்சி - கௌதாரிமுனை மக்களுக்கு வயல் காணி பகிர்ந்தளிப்பு கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைமைப் பொறுப்பை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்ற ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு இன்று (01-10-2021) பூநகரி கௌதாரிமுனை மக்களுக்கு வயல் காணிகள் வழங்கப்பட்டன. கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரின் இணைப்பாளர் வை.தவநாதன் தலைமையில், பூநகரி பிரதேச செயலாளர் கிருஷ்ணேந்திரன், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பூநகரி பிரதேச அமைப்பாளர் இராசலிங்கம், கௌதாரிமுனை கடற்றொழிலாளர் சங்கத் தலைவர் பகீரதன், பிரதேச செயலக காணி உத்தியோகத்தர்கள், கிராமசேவையாளர் இணைந்து சீட்டிழுப்பு முறையில் சுமார் 100 ஏக்கர் காணியை பயனாளிகளுக்கு பகிர்ந்தளித்தனர். க…
-
- 0 replies
- 327 views
-
-
ஆரியகுளத்தின் மத்தியில் இந்து- பௌத்த மண்டபம்?நாக விகாரையின் விகாராதிபதி முயற்சி புனரமைக்கப்படும் யாழ்ப்பாணம் ஆரியகுளத்தின் நடு மத்தியில் ‘இந்து – பெளத்த மண்டபம்’ என்ற பெயரில் பெளத்த சின்னங்களையும் உட்புகுத்தி, ஒரு கட்டமைப்பை ஏற்படுத்த யாழ்ப்பாணம் நாக விகாரையின் விகாராதிபதி நடவடிக்கையை எடுத்து வருகின்றார். இதற்கு யாழ்ப்பாணம் மாநகர சபையின் அனுசரணையையும் அவர் கோரியுள்ளார். என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் யாழ். மாநகர முதல்வர் மணிவண்ணன், இந்தவெளிப்படையாக செயற்படவில்லைஎன குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன அவர் வேண்டும் என்றே ஒளிப்பதால், அவரது ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் இந்த ஆரியகுளம் புனரமைப்புத் திட்டத்தின் கடைசிக் கட்டத்தில் இந்த மண்டப அமைப்பும் இடம் பெறலாம…
-
- 0 replies
- 320 views
-
-
இலங்கையுடன்... முக்கிய உடன்படிக்கையில், இந்திய நிறுவனம் கைச்சாத்து! கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை கூட்டாக அபிவிருத்தி செய்யும் உடன்படிக்கை ஒன்றில் இந்தியாவின் அதானி குழுமம் அதன் உள்ளூர் வர்த்தக பங்காளியான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் இலங்கை துறைமுக ஆணையகம் ஆகியவற்றுடன் இன்று (வியாழக்கிழமை) கையெழுத்திட்டுள்ளது. குறித்த உடன்படிக்கை 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டிய முதலீடாகும் என கூறப்படுகின்றது. மேலும், மேற்கு முனையம் 35 வருட கட்டுமானம் மற்றும் பரிமாற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. அதானி குழுமத்தின் அறிக்கையின்படி, மேற்கு துறைமுக முனையம் ஆயிரத்து 400 மீற்றர் நீளம் மற்றும் 20 மீற்றர் ஆழம் கொண்டதா…
-
- 2 replies
- 368 views
-
-
“இன்று சிறுவர்கள் தினம் இல்லை கறுப்பு தினம்” October 1, 2021 சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் ஐக்கியநாடுகள் உயர்ஸ்தானிகரின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்திற்கு முன்னால் இன்றைய தினம் காலை 9.15 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது இதன்போது அண்மையில் ஜனாதிபதி, ஐக்கிய நாடுகள் சபையில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக கடும் எதிர்ப்புதெரிவிக்கப்பட்டதுடன், அதற்கெதிராக கோஷங்களும் எழுப்பப்பட்டன. இன்று சிறுவர்கள் தினம் இல்லை கறுப்பு தினம். அதிகமான சிறுவர்கள் காணாமல் போயுள்ள நிலையிலே இன்றைய சிறுவர் தினத்தினை நாங்கள் கறுப்பு நாளாகவே கொண்டாடுகின்றோமென வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் இணைப்பாளர் …
-
- 0 replies
- 435 views
-
-
யாழ். மக்களுக்கான இரு பெரும் குடிநீர் திட்டங்கள் : பிரதமர் மஹிந்த ஆரம்பித்து வைக்கிறார் யாழ்ப்பாணம் மற்றும் பளை பகுதிகளில் 60,000 குடும்பங்களைச் சேர்ந்த மூன்று இலட்சம் மக்களுக்கு ஒரு நாளைக்கு 24000 கன மீற்றர் சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுக்கும் இரண்டு பாரிய நீர் வழங்கல் திட்டங்கள் தொடக்கி வைக்கப்பட உள்ளன. பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தலைமையில், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதி, மெய்நிகர் தொழில்நுட்பம் ஊடாக இந்த தொடக்க நிகழ்வு (Virtual inauguration) இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் தாளையடியில் நிர்மாணிக்கப்படும் SWRO கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் வேலைத்திட்டம் தொடக்கி வைக்கப்பட உள்ளதுடன், நயினாதீவில் முழுமையாக நிறைவுசெய்யப்பட்ட நீர் விநியோக திட்டம் …
-
- 26 replies
- 2.3k views
-
-
நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனின், கைது தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை! நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன்உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டமை மற்றும் மன்னாரில் கடற்படையினரால் பொதுமக்கள் தாக்கப்பட்மை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சொந்த பிரேரணை அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், யாழ்ப்பாணத்தில் கடந்த 23.09.2021 அன்று நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் அவர்களது கைதுக்குரிய காரணம், கைது செய்ய…
-
- 0 replies
- 282 views
-
-
லொகான் ரத்வத்தைக்கு எதிராக, அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல்! இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தையின் அநுராதபுர சிறை அச்சுறுத்தல் சம்பவம் தொடர்பில் SCFR 297/2021 அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எட்டு தமிழ் அரசியல் கைதிகளினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுதாரர்கள் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ சுமந்திரனும் சட்டத்தரணி கேசவன் சயந்தனும் ஆஜாரராகவுள்ளனர். https://athavannews.com/2021/1242070
-
- 0 replies
- 303 views
-
-
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கம் – கடுமையான கட்டுப்பாடுகள் அமுல்! நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 4 மணியுடன் நீக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஓகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி இரவு 10 மணிமுதல் நாட்டில் அமுலாக்கப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம், கட்டம் கட்டமாக நீடிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், 41 நாட்களுக்குப் பின்னர் கடுமையான கட்டுப்பாடுகளுடன், ஊரடங்குச் சட்டம் இன்று அதிகாலை நீக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டாலும் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் அமுலில் இருக்குமென இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்ர சில்வா தெ…
-
- 0 replies
- 219 views
-
-
உற்சவங்கள் மற்றும் விருந்துபசார நிகழ்வுகளுக்கு தடை- இரவு நேர ஊரடங்கு அமுல் : விசேட அறிவிப்பு வெளியானது! நாடு, நாளை (வெள்ளிக்கிழமை) முதல் திறக்கப்பட்டாலும் இரவு நேர ஊடரங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி அத்தியாவசியமற்ற எந்தவொரு செயற்பாடுகளும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அனுமதி வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாளை முதல் 15ஆம் திகதி வரை பதிவுத் திருமணங்களில் 10 பேர் மாத்திரம் கலந்துகொள்ள முடியுமெனவும் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் உற்சவங்கள், கேளிக்கை நிகழ்வுகள் மற்றும் விருந்துபசார நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பொது போக்குவரத்து சேவைகளின்போது ஆசனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்பவே பயணிகளை ஏற்றி…
-
- 0 replies
- 213 views
-
-
யாழ். வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் பற்றைக்குள் 217 கிலோ கிராம் மஞ்சளை பதுக்கிவைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவிலிருந்து கடத்திவரப்பட்ட மஞ்சள், தீருவிலிருந்து வேறு இடத்துக்கு மாற்றத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அவற்றைக் கடத்தி வந்த குற்றச்சாட்டில் 26,28 மற்றும் 46 வயதுகளையுடைய மூவர் கைது செய்யப்பட்டனர். பொலிஸ் சிறப்புப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தக் கடத்தல் முறியடிக்கப்பட்டதாக தெரிவித்த பொலிஸார், சந்தேக நபர்கள் மூவரும் நீதிமன்ற நடவடிக்கைக்காக சுங்கப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர் என்று கூறினர். நாட்டில் மஞ்சள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில்…
-
- 3 replies
- 521 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) கம்பஹா மாவட்டம் - அத்தனகல்ல பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் வைத்து கூரிய கத்திகளுடன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள், கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த ஐவரும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 72 மணி நேர தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், அவர்கள் யாழ். ' ஆவா ' குழுவுடன் தொடர்பில் இருந்த சந்தேக நபர்கள் என தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். அத்துடன் அந்த ஐந்து பேரில் இருவர், தமிழீழ விடுதலை புலிகளின் உறுப்பினர்களாக இருந்து புனர்வாழ்வு பெற்று சமூக மயப்படுத்தப்பட்டவர்கள் எனவும் சி.சி.டி.யின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நேற்று (29)…
-
- 2 replies
- 474 views
-
-
(நா.தனுஜா) அரசாங்கம் கடந்த 20 மாதகாலத்திற்குள் 1,25,747 கோடி ரூபா பணத்தை அச்சடித்திருக்கின்றது. இவ்வாறு எவ்வித மட்டுப்பாடுகளுமின்றி பணத்தை அச்சிடுவதானது வரலாற்றில் முன்னொருபோதுமில்லாத வகையிலான மிகப்பாரிய நிதிநெருக்கடியை நோக்கி இலங்கை தள்ளப்படுவதற்கு வழிவகுத்திருப்பதாக ஊவா, மத்திய மற்றும் தென்மாகாணங்களுக்கான முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியம் போன்ற ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்டமைப்புக்களிடமிருந்து உதவிகளைப் பெறுவதனைவிடுத்து, நாட்டின் தேசிய சொத்துக்களை விற்பனைசெய்தல், தமக்கு நெருக்கமானவர்களுக்கு நன்மைகளை ஏற்படுத்திக்கொடுத்துவிட்டு திறைசேரியை வெற்றிடமாக்கல் உள்ளடங்கலாக அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளினால் நாட்…
-
- 2 replies
- 404 views
-
-
யாழ். பல்கலை மாணவர்களின் எதிர்பார்ப்பிற்கு சாதகமான தீர்வு ; வெற்றிடங்களை நிரப்புவதற்கும் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல் யாழ்.பல்கலைக் கழகத்தில் இடைநிறுத்தப்பட்ட கலாச்சார சுற்றுலா சிறப்புக் கற்கை நெறியினை தொடர்வதற்கு ஆவண செய்யுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் பாதிக்கப்பட்ட மாணவர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பாக சாதமான தீர்வு எட்டப்பட்டதுடன் வடக்கு கிழக்கு கல்விச் சமுகம் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளன. குறிப்பாக, வடக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளுக்கான வெற்றிடங்கள், ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பொருத்தமானவர்கள் நியமிக்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால…
-
- 1 reply
- 327 views
-
-
ஊரடங்குச் சட்டம் நீக்கப்படும் நிலையில், பொதுமக்கள் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறி ஒன்றுகூடினால், தொற்றாளர்களின் எண்ணிக்கையும் இறப்புகளின் எண்ணிக்கையும் மேலும் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன என, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார். அத்துடன், தடுப்பூசி பெற்றவர்களாக இருந்தாலும், சுகாதார நடைமுறைகளை தொடர்ச்சியாக பின்பற்றுவது அவசியமாகும் எனவும், அவர் கூறினார். யாழ்ப்பாணத்தில், இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், வடக்கு மாகாணத்தில், தற்போது வரை 36 ஆயிரத்து 356 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டு உள்ளனர் எனவும் இறப்புகளை பார்த்தால் வ…
-
- 0 replies
- 242 views
-
-
இந்தியாவின் அத்துமீறிய செயற்பாடுகளுக்கு எதிராக ஜெனிவாவினுடைய கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக நேற்றுமுன்தினம் மாலை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமையகத்திற்கு முன்னால் இந்தியாவிற்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பிய செய்தியில் இந்தியா தங்களுடைய அரசியல் நிலைப்பாட்டை உலக அரங்கில் தக்கவைத்துக் கொள்வதற்கு மற்றும் தெற்காசிய நாடுகளில் உள்ள பெரிய, சிறிய நாடுகளையெல்லாம் தங்களுடைய (இந்தியா) கண்பார்வையில் கீழ் வைத்துக் கொள்ள வேண்டும் அதாவது இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம் போன்ற நாடுகளையெல்லாம் தொடர்ந்து தங்களுடைய (இந்தியா) கட்டுப்பாட்டிற்குள் வைக்க வேண்டும் என்பதற்…
-
- 7 replies
- 1.6k views
-
-
8 தமிழ் கைதிகள் அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் சிறைச்சாலைகள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையின் செயற்பாட்டினால், தங்களுடைய அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக கூறி, தமிழ் அரசியல் கைதிகள் எட்டுப்பேர், உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் SCFR 297/2021 செய்துள்ளனர். தங்களுடைய சட்டத்தரணி மொஹான் பாலேந்திரன் ஊடாக தாக்கல் செய்துள்ளனர். ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஆகிய இருவரும் இந்த வழக்கில் ஆஜராகுவர். https://www.tamilmirror.lk/செய்திகள்/8-தமிழ்-கைதிகள்-அடிப்படை-உரிமை-மீறல்-மனுத்தாக்கல்/175-281970
-
- 0 replies
- 323 views
-
-
சிலர் தோற்றுப் போன பின்னர் அரசியல் வெற்றிக்காகவே தமிழ்த் தேசியம் என்கின்ற ஆடையை அணிந்துள்ளார்கள்! சி.சந்திரகாந்தன் சிலர் தோற்றுப் போன பின்னர் அரசியல் வெற்றிக்காகவே தமிழ்த் தேசியம் என்கின்ற ஆடையை அணிந்துள்ளார்கள். இன்று அதைத் தக்க வைத்துக் கொள்வதற்காக இளைஞர்களை உசுப்பேற்றுகின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமாகிய சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். இன்று(29) புதன்கிழமை போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஆணைகட்டியவெளி சின்னவத்தை 02 கிலோமீட்டார் வீதி கொங்கறீற்று வீதியாகப் புனரமைப்பு செய்து மக்கள் பாவனைக்காகக் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். …
-
- 1 reply
- 416 views
-
-
’நாட்டின் கல்வி மட்டத்தில் கடைசி நிலையிலிருந்து முன்னேறுகிறது வடக்கு’ ஆளுநர் தெரிவிப்பு! ’நாட்டின் கல்வி மட்டத்தில் கடைசி நிலையிலிருந்து முன்னேறுகிறது வடக்கு’ ஆளுநர் தெரிவிப்பு! இலங்கையின் கல்வி மட்டத்தில் வடக்கு மாகாணம் 9ஆவது அதாவது கடைசி நிலையிலிருந்து தற்போது முன்னேறிக்கொண்டிருப்பது அண்மை பரீட்சை முடிவுகளின்படி உறுதியாகியுள்ளது என்று வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது வடக்கு மாகாணத்தின் பல கிராம மட்ட பாடசாலைகளின் பரீட்சை முடிவுகள் மிகப்பெரிய நம்பிக்கையைத் தந்துள்ளது. ஏற்கனவே வெளியாகியிருந்த கல்வி உயர்தரப்பரீட்சை முடிவுகளின் பிரகாரம் ஒன்பதாவது இடத்திலிருந்து வ…
-
- 0 replies
- 295 views
-
-
பிரிட்டனுடன் நெருக்கமான உறவுகளை பேண விரும்பும் இலங்கை! ஐக்கிய இராச்சியத்துடனான இலங்கையின் நெருக்கமான மற்றும் நல்லுறவுகளைத் தொடர்வது விரும்பத்தக்கதும், சாத்தியமானதுமாகும் என்று வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். ஐக்கிய இராச்சியத்திற்கான உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனை கொழும்பில் சந்தித்துள்ள வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், அவருடன் திறந்த மற்றும் விரிவான கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். அமைச்சர் பீரிஸ் மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்கான உயர்ஸ்தானிகர் ஆகிய இருவரும் இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்குமிடையிலான நெருங்கிய இருதரப்பு உறவுகள் தொடர்பான பல முக்கிய விடயங்கள்…
-
- 0 replies
- 436 views
-
-
மாகாணங்களுக்கிடையிலான தடை, இரு வாரங்களுக்கு நீடிப்பு? மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு இன்னும் சிறிது காலம் நீடிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மருத்துவர் அதிகாரிகள் சங்கம் அரசாங்கத்திடம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டில் தற்போது அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு நாளை காலை நீக்கப்படவுள்ள நிலையிலேயே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன், சிகை அலங்கார நிலையங்கள், பார்கள், இரவு விடுதிகள் ஆகியன ஒரு மாதத்துக்கு பின்னரே திறக்கப்பட வேண்டும் எனவும் வைத்திய அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதேவேளை, மாகாணங்களுக்கிடையில் இன்னும் இரு வாரங்களுக்கு ரயில் மற்றும் பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படாது எனவும், மாகாணத்துக…
-
- 1 reply
- 246 views
-
-
வடக்கில் 680 ஆரம்ப பாடசாலகளை உடன் ஆரம்பிக்க நடவடிக்கை! September 30, 2021 வடக்கு மாகாணத்தில் 200 மாணவர்களுக்கு உள்பட்ட 680 பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ள என்று வடமாகாண ஆளுநர் திருமதி சறோஜினிதேவி மன்மதராஜா சார்ள்ஸ் தெரிவித்தார். வடமாகாணத்தில் வெளிமாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு தனியான பேருந்து சேவையை வழங்கவும் அனுமதி பெறப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இதுதொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், கல்வி அமைச்சுக்கும் மாகாண ஆளுநர்களுக்கும் இடையே இடம்பெற்ற கூட்டத்தில் 200 மாணவர்களுக்கு உள்பட்ட தரம் ஒன்று தொடக்கம் தரம் 5 வரையான ஆரம்ப பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்ட…
-
- 0 replies
- 247 views
-
-
இலங்கைக்கு... விஜயம் மேற்கொள்கின்றார், இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியா- இலங்கை நாடுகளுக்கு இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள அழுத்தங்களுக்கு மத்தியில் குறித்த விஜயம் அமைய உள்ளதுடன், எதிர்வரும் ஒக்டோபர் 2 ஆம் திகதி முதல் 5ஆம் திகதி வரை ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா இலங்கையில் தங்கிருப்பார் எனவும் இந்திய ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. குறித்த விஜயத்தின்போது ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முக்கிய அமைச்சர்களுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த வாரம் தான், இந்தியாவும் இலங்கையும் பலதரப்பட்ட பிரச்…
-
- 0 replies
- 300 views
-
-
நாட்டில்... தினமும், 5 ஆயிரம் மெற்றிக் தொன் உணவு வீண்விரயம் செய்யப்படுவதாக தகவல்! நாட்டில் தினமும் 5 ஆயிரம் மெற்றிக் தொன் சமைக்கப்பட்ட மற்றும் சமைக்கப்படாத உணவு வீணாகிறது என சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். குறித்த தொகை ஆண்டுக்கு 1.3 பில்லியன் தொன். நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பயிர்களில் நூற்றுக்கு சுமார் 40 சதவீதம் வீணடிக்கப்படுகின்றது. சுமார் 5,000 மெற்றிக் தொன் சமைக்கப்பட்ட, சமைக்கப் படாத உணவு ஒவ்வொரு நாளும் குப்பையாக வீசப்படுகிறது. இந்த நிலை நாட்டுக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பாகும்.“ எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2021/1242003
-
- 0 replies
- 239 views
-
-
60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும்... பூஸ்டர் தடுப்பூசி! 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி ஏற்றுவதற்கு தொற்று நோய் தொடர்பான தேசிய ஆலோசனைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “30 – 60 வயது பிரிவினருள் நோய்களினால் பீடிக்கப்பட்டவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது. அத்துடன், புற்றுநோய், சிறுநீரக நோய், சீறுநீரக சத்திர சிகிச்சை மேற்கொண்டோர் என நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி ஏற்றுவதற்கு அனுமதி கிடைத்துள்ளது. இதற்கு மேலதிகமாக சுக…
-
- 0 replies
- 176 views
-
-
முறையான முகாமைத்துவம் இல்லாவிட்டால் பேராபத்து ஏற்படும் என எச்சரிக்கை! நாட்டில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் காணப்பட்ட கொரோனா அச்சுறுத்தல் நிலைமை தற்போது குறைவடைந்திருந்தாலும், தற்போதைய நிலைமையை முறையாக முகாமைத்துவம் செய்யாவிட்டால் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் காணப்பட்டதை விட அதிக அபாய நிலைமை ஏற்படக் கூடும் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் பதில் பணிப்பாளர் விசேட வைத்தியர் சமித்த கினிகே எச்சரிக்கை விடுத்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாட்டிலுள்ள மொத்த சனத்தொகையில் இதுவரையில் 53 சதவீதமானோர் ம…
-
- 0 replies
- 200 views
-