Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரச அராஜகத்துக்கு எதிரான எங்கள் போராட்டம் தொடரும் - ஜோசெப் ஸ்டாலின் கே .குமணன் கொத்தலாவல சட்ட மூலதின் ஊடாக இலவச கல்வியை இராணுவ மயப்படுத்த முயலும் அரசின் அராஜகத்துக்கு எதிரான எமது போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என கட்டாய தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார். எந்தவித நியாயமற்ற முறையிலேயே நாம் தடுத்து வைக்கப்பட்டிருந்தோம். எமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகவும், எமது விடுதலையை வலியுறுத்தியும் நாடு முழுவதும் ஜனநாயகப் போராட்டங்களை முன்னெடுத்த அனைத்துத் தரப்பினருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்" என்றும் அவர் குறிப்பிட்டார். "எமது பக்க நியாயங்களை மக்களுக்குத் …

  2. மட்டக்களப்பில் மேய்ச்சல் காணியில் இராணுவமுகாம் ; ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் அனுமதியுடன் இடம்பெறுகின்றதா? - இரா.துரைரெட்ணம் மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடைகளின் மேய்ச்சல் தரையின் 10 ஆயிரம் ஏக்கர் காணியை இராணுவ முகாமாக மாற்றுவதற்குரிய செயற்திட்டங்களை அரசு மேற்கொள்ளப்படுகின்றது தொடர்பாக ஆளும் தரப்பாக இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் இருவருக்கும் தெரியுமா ? அல்லது இருவருடைய அனுமதியுடன் மேற்கொள்ளப்படுகின்றதா? என ஈ. பி. ஆர். எல். எப் பத்மநாபா மன்ற தலைவரும் முன்னாள்; கிழக்குமாகாண சபை உறுப்பினருமான இரா.துரைரெட்ணம் கேள்வி எழுப்பியுள்ளார். மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள ஈ.பி,ஆர்.…

  3. தடுப்பு மையயங்களுக்கு நீதிபதிகளை அனுமதிக்க அரசாங்கம் மறுப்பு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை நீதிமன்றங்கள் மேற்பார்வை செய்வதற்கு அரசாங்கம் மறுக்கும் விடயமானது, காவலில் தொடர்ந்து சித்திரவதை செய்யப் படுவதற்கான அபாயத்தை அதிகரித்து ள்ளதாக சுட்டிக் காட்டப் பட்டுள்ளது. காவல் துறையைத் தவிர பல்வேறு தடுப்பு மையங்களிலும் தடுத்து வைக்கப் பட்டுள்ள சந்தேக நபர்களைப் பார்வையிட நீதிபதிகளை அனுமதிக்கும் சட்டத்தை இயற்றும் திட்டத்தை நீதி அமைச்சர் கைவிட்டுள்ளார். மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் உண்மையான அக்கறை இல்லாத அரசாங்கம், ஐரோப்பிய வரிவிலக்குகளை இழக்கும் அச்சுறுத்தலை எதிர் கொண்டு “சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் மோசடியில்…

    • 3 replies
    • 377 views
  4. இராணுவத்திற்கு அதிகாரங்களை அள்ளி வழங்கும் அரசாங்கம் - பிரதேசசபை உறுப்பினர் கனகையா தவராசா தற்போதைய கோட்டாபய அரசு இராணுவத்திற்கு அதிகாரங்களை அள்ளிவழங்குவதாகவும், இந்த நிலை நீடித்தால், சகல அதிகாரங்களையும் பெற்றுக்கொண்ட இராணுவத்தினர் ஒருகட்டத்தில் ராஜபக்ச குடும்பத்தையே சிறைக்குள்தள்ளவும் நேரிடலாம் எனவும், அவ்வாறே பல நாடுகளில் இடம்பெற்றுள்ளதாகவும் கரைதுறைப்பற்றுப் பிரதேசசபை உறுப்பினர் கனகையா தவராசா தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேசசபையின் ஜூலை மாதத்திற்கான அமர்வானது நேற்று வியாழக்கிழமை (15.07.2021) இடம்பெற்றது. இந்நிலையில் குறித்த அமர்வில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தினைக் கண்டித்து, சபையில் தீர்மானம் ஒன்றினை சமர்ப்பித்து கருத…

    • 2 replies
    • 263 views
  5. யாழ். உள்ளிட்ட நாட்டின் பல இடங்களுக்கும் பரவிய டெல்டா! கொழும்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் பல இடங்களில் 19 பேர் கொரோனா வைரஸின் டெல்டா திரிபுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, பிலியந்தலை, கொழும்பு ஆகிய இடங்களில் டெல்டா திரிபுடன் கூடிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜெயவர்த்தனபுரா பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் கல்வி பயிலும் பிலியந்தலையைச் 22 வயதான ஆணொருவரும் இவர்களில் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, நாட்டில் இதுவரை 38 பேர் கொரோனா வைரஸின் டெல்டா திரிபுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்…

  6. ஜோசப் ஸ்டாலின் உட்பட்ட 31 பேர் கைது – பல்கலைக்கழக ஊழியர் சங்கம் கண்டனம் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் முக்கிய தலைவரான தோழர் ஜோசப் ஸ்டாலின் உட்பட்ட தொழிற்சங்கவாதிகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் 31 பேர் வரை நேற்று (08.07.2021) கொழும்பில் இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றில் பிணையில் விடுவிக்கப்பட்ட போதும் நீதிமன்ற உத்தரவை மீறி கோரோனோ தனிமைப் படுத்தல் முகாமொன்றுக்கு அழைத்துச் செல்லப் பட்டுள்ளமை கண்டிக்கத் தக்கது என பல்கலைக் கழக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குறித்த ஆர்ப்பாட்டமானது ஜோன் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்…

  7. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக இலங்கையில் பல இடங்கள் திறப்பு! இலங்கையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக தற்போது பல இடங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன என இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. புனித பல்லின கோயில், பேரதெனிய தாவரவியல் பூங்கா, யால தேசிய பூங்கா, பின்னவலை யானைகள் சரணாலயம், ஹார்டன் சமவெளி தேசிய பூங்கா, மின்னேரியா தேசிய பூங்கா, மிரிச மற்றும் சிங்கராஜ வனம் ஆகியவை இவ்வாறு திறக்கப்பட்டுள்ளன. வனவிலங்கு பூங்காக்கள் மற்றும் ஏனயை இடங்கள் திறக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து, பார்வையாளர்களுக்காக பல தளங்கள் இப்போது திறக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுல…

    • 9 replies
    • 1.1k views
  8. கிளிநொச்சிக்கு... "டபிள் புரொமோஷன்" – மனந்திறந்தார் ரூபவதி கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணப்புக் குழுவின் இணைத் தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டிருக்கின்றமை ஒரு வரப்பிரசாதம் என தெரிவித்துள்ள கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், இதனை கிளிநொச்சி மாவட்ட மக்களுக்கான டபிள் புரொமோஷன் எனவும் தெரிவித்துள்ளார். பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் நலிவுற்ற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட ‘இயக்கி’ உணவு விற்பனை நிலையத்தின் திறப்பு விழாவில் இன்று(வியாழக்கழமை) சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி அமைப்பின் நிதிப் பங்களிப்பில் ‘இயக்கி’ என்…

    • 6 replies
    • 574 views
  9. மட்டக்களப்பு - களுதாவளையில்... 21 சிறுவர்கள் உட்பட, 22 பேருக்கு கொரோனா மட்டக்களப்பு- களுதாவளை பகுதியிலுள்ள சிறுவர் இல்லம் ஒன்றில், 21 சிறுவர்கள் உட்பட 22 பேருக்கு கொரரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து குறித்த சிறுவர் இல்லமும் மூடப்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த இல்லத்திலுள்ள மாணவர்கள் சிலருக்கு காய்ச்சல் ஏற்பட்டமையினால், அவர்கள் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளனர். இதன்போது அந்த மாணவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில், கொரனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து ஏனைய சிறுவர்களுக்கும், அங்கு கடமையாற்றுபவர்களுக்கும் அன்டிஜன் பரிச…

  10. ஐக்கிய அமெரிக்க டொலர், பிரச்சினையிலிருந்து இருந்து அரசாங்கத்தால் தலையை தூக்கிக்கொள்ள முடியவில்லையெனத் தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் எம்.பியான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அரசாங்கம்டொலரை விழுங்கிவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.“டொலர், கைவசம் இன்மையால், கொழும்பு துறைமுகத்துக்கு வந்திருக்கும் எரிபொருள் அடங்கிய கப்பலும் சிக்கிக்கொண்டுள்ளது” என்றும் தெரிவித்துள்ளார். எரிபொருள்களுடன் வந்திருக்கும் அந்தக் கப்பலுக்கு டொலரை செலுத்தாவிடின், எரிபொருள்களை எடுத்துக்கொண்டு திரும்பிச் சென்றுவிடும் என்றும் எச்சரித்துள்ளார்.இலங்கை தற்போது அந்நிய செலாவணி பற்றாக்குறையை மையமாகக் கொண்ட பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. தற்போது நமது அந்நிய செலாவணி இருப்…

    • 6 replies
    • 508 views
  11. கொழும்பு பயணித்த பேருந்துகள் திருப்பி அனுப்பப்பட்டன July 14, 2021 யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த வடபிராந்திய போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஈரப்பெரியகுளம் சோதனைச் சாவடியுடன் திருப்பி அனுப்பப்பட்டது. அத்தியாவசிய தேவைகளின்றி பயணித்தவர்களை ஏற்றிச் சென்றதன் காரணமாக பேருந்து திருப்பி அனுப்பப்பட்டது. மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை வரும் 19ஆம் திகதிவரை நடைமுறையில் உள்ளது. எனினும் அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் ஊழியர்கள் மற்றும் அத்தியாவசிய தேவை உடையவர்கள் மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க பேருந்து மற்றும் தொடருந்து சேவைகளுக்கு இன்று தொடக்கம் மட்டுப்படுத்தப்பட்டளவில் அனுமதியளிக்கப்பட்டது. அதனடிப்படையில் யாழ்ப்பா…

    • 3 replies
    • 449 views
  12. இலங்கைக்கு மேலும் 1.6 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகளை வழங்க சீனா தீர்மானம் இலங்கைக்கு மேலும் 1.6 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகளை வழங்க சீனா தீர்மானித்துள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு நன்கொடையாக குறித்த தடுப்பூசி தொகை வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனூடாக தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை மேலும் துரிதப்படுத்த முடியும் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு மேலும் 1.6 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகளை வழங்க சீனா தீர்மானம் (adaderana.lk)

  13. புதிதாக... 7 பேர், ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமனம் நாட்டில் பதிதாக 7 பேர் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக மன்றாடியார் நாயகமாக பதவி வகிக்கும் 7 பேரே இவ்வாறு ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மிலிந்த குணதிலக்க, ஹரிப்பிரியா ஜயசுந்தர, விக்கும் ஆப்ரூ, ஷானக்க விஜேசிங்க, ரவிந்திர பத்திரனகே, நெரின் புள்ளே மற்றும் சேத்திய குணசேகர ஆகியோர் ஜனாதிபதி சட்டத்தரணிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஜன…

  14. தடுப்பூசி செலுத்தப்பட்ட... 3 இலட்சம் பேரின் தரவுகளில் சிக்கல் – இராணுவத் தளபதி! கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட 3 இலட்சம் பேரின் தகவல்கள் தொடர்பிலான தரவுகளில் சிக்கல்கள் நிலவுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சிங்கள ஊடகமொன்றில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். முதல் தடுப்பூசி திட்டத்தின் போது சுகாதாரத் துறையினரால் தரவுகளை சேகரித்த சந்தர்ப்பத்தில் பெரும்பாலும் இந்த பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2021/1228556

  15. கிளிநொச்சி, அறிவியல்நகர் யாழ். பல்கலைக்கழக வளாகத்துக்கு, புலிக்குளத்திலிருந்து தண்ணீரை வாய்க்கால் மூலம் பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகளை, மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரும், கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா உறுதிசெய்தார். முன்னதாக 2013 ஆம் ஆண்டு, யாழ் பல்கலைக்கழகத்துக்கென அறிவியல்நகர் பகுதியில் 568 ஏக்கர் காணியை அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் பேசிப் பெற்றுக்கொடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தற்போது பல்கலைக்கழகத்துக்கான நீர் விநியோகத்துக்கான ஏற்பாடுகளையும் செய்துகொடுத்துள்ளார். புலிக்குளத்திலிருந்து அறிவியல்நகர் வளாகத்துக்கு வாய்க்கால் மூலம் தண்ணீர் பெற்றுக்கொள்ளும் திட்டத்திற்கான கோரிக்கை, அறிவியல்நகர் யாழ் பல்கலைக்கழக வளாகத்தினர…

  16. மன்னாரில்... 3 கத்தோலிக்க, சொரூபங்கள் மீது தாக்குதல்! மன்னார் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மூன்று இடங்களில் அமைந்துள்ள கத்தோலிக்க சிற்றாலய சொரூபங்கள் மீது இன்று (புதன்கிழமை) அதிகாலை அடையாளந்தெரியாத நபர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மன்னார் வயல் வீதி பகுதியில் காணப்படுகின்ற இரு சொரூபங்களும் மன்னார் பள்ளிமுனை பிரதான வீதியில் அமைக்கப்பட்ட சொரூபம் ஒன்றும் உள்ளடங்களாக மூன்று சொரூபங்கள் மீது கற்கள் வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் போது குறித்த சொரூபங்கள் வைக்கப்பட்டுள்ள கண்ணாடி கூடு உடைந்து சேதமாகியுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில், மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வ…

    • 1 reply
    • 302 views
  17. யாழ். மாவட்டத்திற்கான நன்னீரை பெறறுக்கொள்ளும் திட்டம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு யாழ்.குடாநாட்டிற்கு நன்னீரை கொண்டு செல்லும் திட்டம் தொடர்பாக 1962 ஆம் ஆண்டு காலப் பகுதியில் ஆறுமுகம் திட்டம் பிரஸ்தாபிக்கப்பட்ட போதிலும், ஆனையிறவு கடல் நீரேரியில் பருவ கால மீன்பிடித தொழிலில் ஈடுபடுவோரின் எதிர்ப்பின் காரணமாக கைவிடப்பட்டடிருந்தது.இந்நிலையில், குறித்த திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி ஆனையிறவு கடல் நீரேரியில் 23 வீதமான பகுதியை மறித்து அணை அமைத்து, திட்டத்தினை முன்னெடுப்பது தொடர்பாக தற்போதைய அரசாங்கத்தினால் பிரஸ்தாபிக்கப்பட்டு வருகின்றது. இதேவேளை இரணைமடு, கல்மடு, விசுவமடு, உடையார்கட்டு போன்ற குளங்களில் இருந்த…

    • 9 replies
    • 584 views
  18. இலங்கைக்கு... 1.45 மில்லியன் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளை வழங்க ஜப்பான் முடிவு இலங்கையில் கொரோனா பரவுவதைத் தடுக்க உதவும் வகையில் உலக சுகாதார அமைப்பின் கொவேக்ஸ் திட்டத்தின் மூலம் இலங்கைக்கு 1.45 மில்லியன் டோஸ் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளை வழங்க ஜப்பான் முடிவு செய்துள்ளது. இந்த தடுப்பூசிகள் ஜப்பானில் இருந்து எதிர்வரும் வாரங்களில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் விதமாகவும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் முடிந்தவரை பலருக்கு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள தடுப்பூசிகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கான ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஜப்பானிய தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கையில் தடுப்பூசி திட்டத்தை மேலும…

    • 1 reply
    • 225 views
  19. புலிகளை ஊக்குவித்த குற்றச்சாட்டில் கட்டாரிலிருந்து நாடு கடத்தப்பட்டவர் கைது! July 13, 2021 விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவித்த குற்றச்சாட்டில் கட்டாரிலிருந்து நாடு கடத்தப்பட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவற்துறை அறிவித்துள்ளது. 41 வயதுடைய இவர் முள்ளியாவளை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், தீவிரவாத ஒழிப்பு பிரிவினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். https://globaltamilnews.net/2021/163353

    • 3 replies
    • 550 views
  20. தமிழினப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணாமல் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த முடியாது -சிவாஜிலிங்கம் July 15, 2021 தமிழினப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணாமல் எந்த விற்பன்னர்களாளும் இலங்கையின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த முடியாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். பசில் ராஜபக்ஷ நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ளது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கும் போது, நிதியமைச்சராக திரு பசில் ராஜபக்ஷ பொறுப்பேற்றால் என்ன எவர் பொறுப்பேற்றால் என்ன இலங்கையினுடைய பொருளாதாரம் அகல பாதாளத்தை நோக்கி பயணிக்கிறது. இதை தூக்கி நிறுத்துவது…

  21. யானை, வேலிகளை... பராமரிக்கும் தன்னார்வ படையணி ஆரம்ப திட்டம் குறித்த பிரதமரின் முக்கிய அறிவிப்பு வெளியானது! காட்டு யானை – மனித மோதலை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைகளுக்கமைய யானை வேலிகளை பராமரிப்பை சமூகத்தினரின் பங்களிப்பு மற்றும் உள்ளூர் பங்குதாரர்களின் பங்களிப்புடன் தன்னார் படையணியிடம் வழங்கும் ஆரம்ப திட்டத்தை குருநாகல் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களிலிருந்து ஆரம்பிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணித்துள்ளார். காட்டு யானை – மனித மோதலை கட்டுப்படுத்துவதற்கு மின்சார வேலிகளை அமைப்பது தொடர்பில் அலரி மாளிகையில் நேற்று(செவ்வாய்கிழமை) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். வனஜீவராசிகள் பாதுகாப்பு …

  22. பூச்சாண்டிகளை... புறந்தள்ளி, மக்களுக்கான திட்டங்கள் தொடரும் – கௌதாரிமுனையில் டக்ளஸ். பூச்சாண்டிகளினால் மக்களுக்கு நன்மைகளை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களை தடுத்து நிறுத்த முடியாது என தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நியாயமான கருத்துக்கள் இருக்குமாயின் அவை பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். கௌதாரிமுனையில் இலங்கை சீன கூட்டு நிறுவனத்தினால் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை குஞ்சு வளர்க்கும் நிலையத்தினை இன்று(புதன்கிழமை) பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், “கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதன் மூலம் எமது பிரதேச மக்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புக்களையும் பொருளாதார நன்ம…

  23. கல்விக்கான உரிமையைப் படுகுழியில் தள்ளுவதற்கு அரசாங்கம் முயற்சி - மக்களுக்கான புத்திஜீவிகள் பேரவை (நா.தனுஜா) கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கம் அதற்கு வேண்டிய சட்டங்களை பாராளுமன்றத்தில் அவசரமாக நிறைவேற்றிக்கொள்ளும் போக்கைக் காணமுடிகின்றது. அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தம், கொழும்புத்துறைமுகநகரப் பொருளாதார ஆணைக்குழுச்சட்டம் ஆகியவற்றின் வரிசையில் தற்போது ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்தையும் நிறைவேற்றி இந்நாட்டுமக்களின் கல்வி உரிமையைப் படுகுழியில் தள்ளுவதற்கு அரசாங்கம் முயன்றுகொண்டிருக்கின்றது என்று மக்களுக்கான புத்திஜீவிகள் பேரவை தெரிவித்துள்ளது. கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் இன…

  24. (நமது நிருபர்) அண்மைக்காலத்தில் இடம்பெற்று வரும் எதேச்சையதிகாரமும் இராணுவமயமாக்கலும் எமது ஜனநாயகத்தின் அடித்தளத்தை ஆட்டம் காண செய்துள்ளன. இவை அனைத்தும் எமது அன்றாட வாழ்வில் இடம்பெறும் வன்முறைகளுக்கு எதிராக எம்மை மரத்துப்போக செய்துள்ளதுடன் எமது பிரஜைளின் ஒரு பகுதியினர் இலக்கு வைக்கப்படும் போதும் கூட எம்மை மௌனம் காக்க வைத்துள்ளன என்று பல்கலைகழக விரிவுரையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஹிஸ்புல்லா மற்றும் ஜஸீமின் தடுப்புகாவலானது நன்றாக திட்டமிடப்பட்ட முஸ்லீம்களுக்கு எதிரான பின்புலத்தில் ஒரு அணிதிரட்டல் செயற்பாடாக அந்த சமூகத்திற்கு களங்கம் ஏற்படுத்துவதையும் மற்றும் தனிமைப்படுத்துவதையும் நோக்காகக் கொண்டு இடம்பெறுகிறது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். நாட்டி…

  25. (இராஜதுரை ஹஷான்) புதிய நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள பஷில் ராஜபக்ஷவிற்கு இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து தெரிவித்துள்ளார். வாழ்த்து கடிதத்தை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவை நேரில் சந்தித்து கையளித்துள்ளார். கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் பின்னர் உலகளாவிய பொருளாதார மீட்சி என்ற பின்னணியில் பொருளாதாரத்துறையில் பரஸ்பர நலன்களுடன் தொடர்புடைய பல்வேறு விடயங்கள் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடியுள்ளனர். நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னர் சந்திக்கும் வெளிநாட்டு இராஜதந்திரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. கொவிட் -19 வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பூக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.