Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. நாடாளுமன்ற உறுப்பினராக பசில் ராஜபக்ஷ இன்று பதவியேற்பு! ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்கவுள்ளார். இந்த நிலையில் அவருக்கு முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற படைக்கல சேவிதர் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். அவர் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்பதற்கு முன்னதாகவே அமைச்சராகப் பதவி ஏற்கவிருப்பதாகவும் அதன் காரணமாகவே அவருக்கு முன்வரிசை ஆசனம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட, பசில் ராஜபக்ஷவை நாடாளுமன்ற உறுப்பினராக்குவதற்கு வழியேற்படுத்தும் வகையில் நேற்று முன்தினம் பதவி விலகியிருந…

    • 10 replies
    • 1.1k views
  2. இணைந்து செயற்பட புதிய கட்டமைப்பு அவசியமில்லை July 8, 2021 தமிழ் கட்சிகள் இணைந்து அரசியல் ரீதியாகச் செயற்படுவதற்கு புதிய கட்டமைப்பு எதையும் உருவாக்க வேண்டிய தேவை ஏதும் இல்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நேற்றைய அரசியல் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டதாக அறிய வந்தது. இந்தத் தீர்மானத்தினால் தமிழ்த் தேசியக் கட்சிகளை ஒன்றிணைக்கும் ரெலோவின் தற்போதைய முயற்சி முளையிலேயே கருகும் சூழ்நிலை ஏற்பட்டிருப்பதாக அவதானிகள் கருத்துக் கூறுகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நேற்று மாலை 5 மணி தொடக்கம் சுமார் இரண்டரை மணி நேரம் இக்கூட்டம் நடை பெற்றது. கட்சித் தலைவர் மாவை சோ.சேனாதிராசா தலைமையில் நடைபெற்ற இந்தக்…

  3. காணாமல் ஆக்கப்பட்ட மகனை 26 வருடங்களாக தேடிய தந்தை மரணம் ! By கிருசாயிதன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பில் உறுப்பினராக இணைந்து தனது மகனை தேடி வந்த தந்தை ஒருவர் நேற்று (09-07-2021 ) சுகயீனம் காரணமாக மரணமடைந்துள்ளார் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்வர்களின் உறவினர்கள் அமைப்பின் வடக்கு,கிழக்கு மாகாணங்களின் பணிப்பாளர் திருமதி பத்மநாதன் கருணாவதி தெரிவித்துள்ளார்.இன்றையதினம் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த செய்தி குறிப்பிலையே அவர் இந்த விடையத்தை தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,கிளிநொச்சி பரந்தன் 11 ஆம் ஒழுங்கையை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான சின்னத்தம்பி இராசரத்தினம் என்பவரே சுகயீனம் காரணமாக நேற்று வெள்ளிக்கிழமை சாவடைந்துள்ளார்.வல…

  4. யாழ். சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் சடலமாக மீட்பு யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சாவகச்சேரி பிரதேச சபையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் போட்டியிட்டு உறுப்பினராக தெரிவாகியிருந்த இராமாவில் கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் கஜேன் (வயது 28) என்பரே உயிரிழந்துள்ளார். தூக்கில் தொங்கிய நிலையில் அவருடைய சடலம் காணப்பட்டுள்ளது. இந்நிலையில்,அவருடைய மரணம் கொலையா? தற்கொலையா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். சிவகுமார் கஜேன் யாழ்.மாநகர சபை முதல்வர் மணிவண்ணனுக்கு ஆதரவாக செயற்படுவதாக தமிழ் காங்கிரஸ் கட்சியினர…

  5. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு காணி அதிகாரமில்லை July 11, 2021 கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு காணிப்பிரச்சினை வருகின்ற போது அதில் தலையிடுவதற்கு அதிகாரமில்லை என்கின்ற விடயத்தை கூறி கல்முனை தெற்கு பிரதேச செயலகத்தை சார்ந்தவர்கள் மக்களை தூண்டுகின்றார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் சொறிக்கல்முனை பகுதியில் சனிக்கிழமை(10) மாலை இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் தனது கருத்தில் குறிப்பிட்டதாவது காணிப்பிரச்சினை வருகின்ற போது அதில் தலையிடுவதற்கு கல்முனை வடக்கு பிரதேச செ…

  6. அராஜகமான முறையில் அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது -சுமந்திரன் எதிர்ப்புப் போராட்டங்களை அரசாங்கம் கையாளுகின்ற முறையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாக கண்டிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார். போராட்டங்கள் நடத்துபவர்கள் கைது செய்யப்பட்டு தனிமைப்படுத்தல் என்ற நடவடிக்கையின் கீழ் தடுத்து வைக்கப்டுகின்றனர். இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில், “ஒரு ஜனநாயக சூழலிலே மக்கள் அரசாங்கத்திற்கு எதிராகவோ அல்லது யாருக்கோ எதிர்ப்பை காண்பிப்பதற்கான சூழல் நிச்சயம் இருக்கவேண்டும். கொரோனாவை சாட்டாக காண்பித்து கொண்டு, பாதுகாப்பு படையினரை ஏவிவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை…

  7. கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்த தனிமைப்படுத்தல் சட்டம்: இலங்கையை கடுமையாக சாடும் சர்வதேச மன்னிப்புச் சபை (நா.தனுஜா) இலங்கையில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தெரிவுசெய்யப்பட்ட அடிப்படையில் தனிமைப்படுத்தல் சட்டம் பிரயோகிக்கப்பட்டிருப்பதானது, கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஓர் கருவியாக அரசாங்கம் கொரோனா வைரஸ் பரவலைப் பயன்படுத்துவதை வெளிப்படுத்தியிருக்கிறது என்று சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. பொதுமக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மறு அறிவித்தல்வரை தடை செய்யப்படுவதாக கடந்த செவ்வாய்கிழமை பொலிஸ் தலைமையகத்தினால் அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கடந்த புதன்கிழமையிலிருந்து பல…

    • 1 reply
    • 308 views
  8. இராணுவ ஆட்சியை நோக்கி நகரும் இலங்கை நிதர்சன் வினோத் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலினின் கைது ஒரு ஜனநாயக படுகொலை என்பதோடு இலங்கை இராணுவ ஆட்சியை நோக்கி நகர்ந்து கொண்டிப்பதாகவும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளரும் சட்டத்தரணியுமான கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் இன்று (10) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கையில் ஜனநாயக படுகொலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. சேர் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு கல்லூரி சட்டமூலத்திற்கு எதிராக ஜனநாயக வழியில் அகிம்சை முறையில் எதி…

    • 1 reply
    • 348 views
  9. (நா.தனுஜா) இலங்கையின் மனித உரிமை நிலைவரங்கள் கடந்த 2020 ஆம் ஆண்டில் பெரிதும் மோசமடைந்திருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கும் பிரிட்டன், போரின் பின்னரான காலத்தில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டிருந்த நடவடிக்கைகளிலும் பாரிய பின்னடைவு ஏற்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. அதுமாத்திரமன்றி பயங்கரவாதத்தடைச்சட்டத்தை மீளாய்வு செய்வதாக அளித்த வாக்குறுதியையும்மீறி, 2020 ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் அச்சட்டத்தைப் பயன்படுத்தி வந்திருப்பதாகவும் பிரிட்டன் குற்றஞ்சாட்டியுள்ளது. இவ்வாறானதொரு சூழ்நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவக்கூடிய செயற்திட்டங்களில் முதலீடு செய்வதற்கும் சிவில் ச…

    • 4 replies
    • 732 views
  10. எல்லே குணவங்ச தேரர், தமிழ் மக்களுக்கு பகிரங்க அழைப்பு யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை உட்பட பல பிரதேசங்களிலுள்ள பெறுமதி மிக்க காணிகளை வெளி நாடுகளுக்கு விற்பனை செய்யும் அரசாங்கத்தின் முயற்சிகளை முறியடிக்க தம்முடன் இணைந்து செயற்படுமாறு நாட்டைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவரான எல்லே குணவங்ச தேரர், தமிழ் மக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்தப் பகிரங்க அழைப்பை விடுத்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், “இன ரீதியாக நாங்கள் பிரிந்திருந்தால் ஒருபோதும் எமக்கு சுதந்திரம் கிட்டாது. நாங்கள் பிரிந்திருக்கின்ற வரை சர்வதேச சக்திகள் எமது நாட்டுக்குள் பிரவேசித்து, நாட்டின் வளங்களைச் சூறையா…

    • 16 replies
    • 779 views
  11. வட்டுவாகலில் கடற்படைக்காக மீண்டும் காணிகள் அபகரிக்கத் திட்டம் முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவை பிரிவுக்கு உட்பட்ட வட்டுவாகல் கிராமத்தில் 617 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை அங்கு நிலைகொண்டு அமைக்கப்பட்டிருக்கும் “வட்டுவாகல் கோட்டாபய கடற்படை கப்பல்” கடற்படை முகாமுக்கு அபகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு இதே பகுதியில் வர்த்தமானி அறிவித்தல் மூலம் நிலம் அபகரிக்கும் நோக்கில் நில அளவீடு செய்யும் அறிவிப்புக்கு மக்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். இந்நிலையில், கடந்த 8ம் திகதி அன்று திகதியிடப்பட்ட கடிதம் முல்லைத்தீவு பிரதேச நில அளவைத் திணைக்களத்தின் அரச நில அளவையாளர் …

  12. மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறப்பு மலைநாட்டில் பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இன்று அதிகாலை ஒரு வான்கதவு திறக்கப்பட்ட நிலையில் நீர்மட்டம் அதிகரித்ததால் இன்று காலை மேலும் இரு வான்கதவுகள் திறக்கப்பட்டன. இதனால் சென்கிளயர் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் அதிகரித்து ரம்மியமாக காட்சியளிக்கின்றது. அத்துடன், மேல் கொத்மலை அணைக்கட்டுக்கு கீழ் ஆற்றுப்பகுதியை பயன்படுத்துபவர்கள் விழிப்புடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளது. -மலையக நிருபர் கிரிஷாந்தன்- http://tamil.adadera…

    • 0 replies
    • 283 views
  13. இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து கடன் இலங்கையில் தடுப்பூசி திட்டங்களுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்த 150 மில்லியன் டொலர் கடனைப் பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இக்கடன் ஒப்பந்தத்தில் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கை வதிவிடப் பணிப்பாளர் சென்சென் ஆகியோர் கையெழுத்திட்டனர். தடுப்பூசிகளுக்கான செலவு, தடுப்பூசி அடிப்படையான கண்காணிப்பு பொறிமுறைகளை நிறுவுதல், குளிரூட்டப்பட்ட போக்குவரத்து வசதிகள் மற்றும் மருத்துவ கழிவு முகாமைத்துவம் ஆகிய நடவடிக்கைகளுக்கு இந்தக் கடன்கள் ஈடுகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://thinakkural.lk/article/1270…

    • 0 replies
    • 238 views
  14. ஐக்கிய தேசிய கட்சி தலைவர் பிரதமருடன் இரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவில்லை- ஐ.தே.க ஐக்கியதேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் மகிந்தராஜபக்சவுடன் இரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவில்லை என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்ககளில் வெளியாகியுள்ள படங்களை அடிப்படையாக வைத்து ஐக்கியதேசிய கட்சி இதனை தெரிவித்துள்ளது. ஐக்கியதேசிய கட்சியின் தலைவரும் பிரதமரும் ஒன்றாக இரவு உணவருந்துவதை இந்த படங்கள் காண்பித்துள்ளன. கொழும்பு கொள்ளுப்பிட்டியில உள்ள ரணில்விக்கிரமசிங்கவின் அயலவரின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஐக்கியதேசிய கட்சியின் தலைவரும் பிரதமரும் கலந்துகொண்டனர்- அவர்கள் அரசியல் பேச்சுவார்த்தைகளில் ஈடுப…

    • 0 replies
    • 206 views
  15. எரிபொருள் விநியோகத்துக்கான... பொறுப்பு, சீனாவுக்கு வழங்கப்படாது – கம்மன்பில! எரிபொருள் விநியோகத்துக்கான பொறுப்பை சீனாவுக்கோ அல்லது வெளிநாட்டு நிறுவனமொன்றுக்கோ வழங்குவது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சீனாவுக்கோ அல்லது வெளிநாட்டு நிறுவனங்களுக்கே எரிபொருள் விநியோக நடவடிக்கையை ஒப்படைப்பது தொடர்பில் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், இது தொடர்பில் கலந்துரையாடல்கூட இடம்பெறவில்லை. இதனை மிகவும் பொறுப்புடனேயே கூறுகின்றேன் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். https://athavann…

  16. நவாலி பீற்றர் தேவாலய படுகொலை நினைவேந்தல் நவாலி சென் பீற்றர் தேவாலயத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபியில் எம்.கே சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் கடந்த 1995ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09ஆம் திகதி விமான படையினர் வீசிய குண்டு வீச்சில் இடம்பெயர்ந்து தேவாலயத்தில் தஞ்சம் புகுந்திருந்த குழந்தைகள் பெண்கள் உள்ளிட்ட 147 இற்க்கும் அதிகமான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு தூபியில் மலரஞ்லி செலுத்தி சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர். இதேவேளை குறித்த பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன், தேவாலய வளாகத்தினுள் இராணுவத்தினரும் கடமை…

  17. பாடசாலைகளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் மீள ஆரம்பிக்க தீர்மானம் யாழ்ப்பாணத்தில் 5,957 ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் உள்ளிட்ட பாடசாலை உத்தியோகத்தர்களுக்கு கொரோனாத் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் மாவட்டத்திலுள்ள 14 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் 10,354 ஆசிரியர்கள் உள்ளிட்ட பாடசாலை உத்தியோகத்தர்கள் உள்ளதாக விபரங்கள் வழங்கப்பட்டுள்ளன.இவர்களில் 5,957 பேருக்கு கொரோனாத் தடுப்பூசியின் முதலாவது டோஸ் நேற்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் மீள ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவி…

  18. யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம்! July 10, 2021 பல கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது. புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைத்து அரசியல் கைதிகளையும் உட விடுதலை செய்!, கொரோனா திறைமறைவில் எங்களை வதைக்கதே, அனைவருக்கும் தடுப்பூசி வழங்கு, பாதுகாப்பு வழிகளைச் செய்து பாடசாலைகளை தொடங்கு, உணவுப் பொருட்கள் – எரிபொருட்களின் விலையை உடனே குறை!, விவசாயிகள் – மீனவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிக்குத் தீர்வு காண்!, மற்றும் நிறுத்து நிறு…

  19. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்... முக்கியஸ்தர் ஒருவருக்கு, பொலிஸாரினால் அழைப்பாணை. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தரான ப.தவபாலனிடம் விசாரணை ஒன்றினை முன்னெடுப்பதற்கு பொலிஸாரினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடு காரணமாக பெரும்பான மக்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்திருந்தனர். இத்தகைய மக்களுக்கு, தன்னார்வாளர்களினால் பல உதவிகள் வழங்கப்பட்டிருந்தன. அந்தவகையில் மஸ்கெலியாவில் கொரோனா இடர்காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, வவுனியாவில் பொருட்களை சேகரித்து தமிழ் தேசிய மக்கள் முண்ணனி ஊடாக ப.தவபா…

    • 2 replies
    • 455 views
  20. பசில் ராஜபக்சவுக்கு... ஆசி வேண்டி, யாழில்... விசேட பூஜை வழிபாடு! கலாநிதி யோகராஜன் அறக்கட்ட அமைப்பின் யாழ் மாவட்ட இணைப்பாளர் ந.யோகராஜனின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில், பசில் ராஜபக்சவுக்கு ஆசி வேண்டி விசேட பூஜை வழிபாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்து, பௌத்த, கிறிஸ்தவ மதகுருக்களின் பங்குபற்றுதலுடன் பசில் ராஜபக்சவிற்கு ஆசி வேண்டி விசேட பூஜை வழிபாடு இடம்பெறுகின்றது. https://athavannews.com/2021/1227366

  21. கல்வித்துறையிலும் இராணுவத்தை பலப்படுத்தி ஏனைய மாணவர்கள் நிராகரிக்கப்படும் நிலை ; சாணக்கியன் நாட்டின் சகல துறைகளும் இராணுவ மயமாக்கலுக்கு உற்படுத்தப்பட்டு வருவதைப்போல நாட்டின் உயர்கல்வியும் இன்று இராணுவ மயமாக்கலுக்கு உள்ளாகியுள்ளதென தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் சபையில் தெரிவித்தார். 1970 களில் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தும் நிலைக்கு தள்ளப்பட காரணம் இந்த கல்வி முறையில் ஏற்பட்ட நிராகரிப்பாகும். 1948 ஆம் ஆண்டில் இருந்து பல்வேறு பிரச்சினைகள் இருந்தாலும் கூட கல்வித்துறையில் ஏற்பட்ட தலையீடுகள் காரணமாகவே எமது தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தும் நிலைக்கு தள்ளப்பட்டனர் எனக் குறிப்பிட்ட அவர், கல்வி என்பது ஒரு நாட்டின் ம…

    • 1 reply
    • 289 views
  22. FacebookTwitterWhatsApp பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எம்.யுமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் முக்கியமான சந்திப்பொன்று நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. இராப்போசனத்துடன் இடம்பெற்ற இந்த சந்திப்பில், பிரதமரின் பாரியாரும் கலந்துகொண்டிருந்தார். இதன்போது பல முக்கியமான விடயங்கள் குறித்து, இருவரும் கலந்துரையாடினர் என அறியமுடிகின்றது. Tamilmirror Online || மஹிந்த –ரணில் முக்கிய சந்திப்பு

    • 7 replies
    • 520 views
  23. இந்த வல்லூறுகளிடம் இருந்து பாடசாலை மாணவிகளை எப்படி காப்பது? இலங்கை போலீசார், இன்று நாட்டின் மிகப்பெரிய மொபைல் நிறுவனம் ஒன்றின் 29 வயதான மார்க்கெட்டிங் அலுவலகர் ஒருவரை கைது செய்துள்ளனர். பாடசாலை ஒன்றின் அதிபர் கொடுத்த முறைப்பாட்டின் படியே இந்த கைது நடந்துள்ளது. கோரோனோ காலத்தில், வீட்டில் இருந்து படிக்கும் பிள்ளைகளுக்கு, zoom பேக்கஜ் மற்றும் வசதிகளை இலவசமாக வழங்குவதாக நிறுவனம் அறிவித்து இருந்தது. அப்படி வழங்கப்பட்ட பெண் பிள்ளைகளை இலக்கு வைத்து, அவர்களுக்கு போன் செய்து, அவர்களை, மிரட்டியோ அல்லது, இலவசமாக புது போன் தருவதாக ஆசை காட்டியோ, அவர்களது, நிர்வாண படங்களை தர வைத்துள்ளார். இலவசமாக போன் பெற, அழைக்கப்படும் இடத்துக்கு வந்த மாணவிகளை தவறா பயன் படுத…

    • 4 replies
    • 663 views
  24. ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளை மக்கள் நிராகரிக்க வேண்டும்; ஜே.வி.பி. “தற்போதைய ராஜபக்ஷாக் களுடைய அராசாங்கத்தின் மக்கள் மீதான அடக்கு முறைகள் துரிதமடைந்து கொண்டிருக்கின்றன. இதற்கான எடுத்துக் காட்டாக நாடாளுமன்ற முன்றலில் இடம் பெற்ற ஆர்பாட்டத்தின் போது தொழிற் சங்கத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கைது செய்யப் பட்டமையைக் குறிப்பிடலாம்” என ஜே.வி.பி.யின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரர் தெரிவித்தார். மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் அலுவலகத்தில் நேற்று இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது; “தற்போதைய ராஜபக்ஷா க்களுடைய அராசாங்கத்தின் மக்கள…

    • 1 reply
    • 429 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.