ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143626 topics in this forum
-
கல்விக்கான உரிமையைப் படுகுழியில் தள்ளுவதற்கு அரசாங்கம் முயற்சி - மக்களுக்கான புத்திஜீவிகள் பேரவை (நா.தனுஜா) கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கம் அதற்கு வேண்டிய சட்டங்களை பாராளுமன்றத்தில் அவசரமாக நிறைவேற்றிக்கொள்ளும் போக்கைக் காணமுடிகின்றது. அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தம், கொழும்புத்துறைமுகநகரப் பொருளாதார ஆணைக்குழுச்சட்டம் ஆகியவற்றின் வரிசையில் தற்போது ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்தையும் நிறைவேற்றி இந்நாட்டுமக்களின் கல்வி உரிமையைப் படுகுழியில் தள்ளுவதற்கு அரசாங்கம் முயன்றுகொண்டிருக்கின்றது என்று மக்களுக்கான புத்திஜீவிகள் பேரவை தெரிவித்துள்ளது. கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைக்காரியாலயத்தில் இன…
-
- 1 reply
- 439 views
-
-
(நமது நிருபர்) அண்மைக்காலத்தில் இடம்பெற்று வரும் எதேச்சையதிகாரமும் இராணுவமயமாக்கலும் எமது ஜனநாயகத்தின் அடித்தளத்தை ஆட்டம் காண செய்துள்ளன. இவை அனைத்தும் எமது அன்றாட வாழ்வில் இடம்பெறும் வன்முறைகளுக்கு எதிராக எம்மை மரத்துப்போக செய்துள்ளதுடன் எமது பிரஜைளின் ஒரு பகுதியினர் இலக்கு வைக்கப்படும் போதும் கூட எம்மை மௌனம் காக்க வைத்துள்ளன என்று பல்கலைகழக விரிவுரையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஹிஸ்புல்லா மற்றும் ஜஸீமின் தடுப்புகாவலானது நன்றாக திட்டமிடப்பட்ட முஸ்லீம்களுக்கு எதிரான பின்புலத்தில் ஒரு அணிதிரட்டல் செயற்பாடாக அந்த சமூகத்திற்கு களங்கம் ஏற்படுத்துவதையும் மற்றும் தனிமைப்படுத்துவதையும் நோக்காகக் கொண்டு இடம்பெறுகிறது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். நாட்டி…
-
- 0 replies
- 439 views
-
-
(இராஜதுரை ஹஷான்) புதிய நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள பஷில் ராஜபக்ஷவிற்கு இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து தெரிவித்துள்ளார். வாழ்த்து கடிதத்தை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவை நேரில் சந்தித்து கையளித்துள்ளார். கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் பின்னர் உலகளாவிய பொருளாதார மீட்சி என்ற பின்னணியில் பொருளாதாரத்துறையில் பரஸ்பர நலன்களுடன் தொடர்புடைய பல்வேறு விடயங்கள் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடியுள்ளனர். நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னர் சந்திக்கும் வெளிநாட்டு இராஜதந்திரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. கொவிட் -19 வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பூக…
-
- 0 replies
- 322 views
-
-
கிளிநொச்சி - பூநகரி பகுதியிலுள்ள சீன நிறுவனத்தின் கடலட்டைப் பண்ணையை அரசாங்கம் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்காவிட்டால், வடபகுதி மீனவர்களுடன் இணைந்து, சட்டவிரோதமான கடலட்டைப் பண்ணைகளை அமைப்போமென, வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்தார். யாழில், இன்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு கூறினார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், பூநகரி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சீன நிறுவனத்தின் கடலட்டைப் பண்ணை இன்னும் அகற்றப்படவில்லை எனவும் ஆகவே, இன்றிலிருந்து இன்னும் 2 வாரங்களுக்குள் அந்தப் பண்ணையை அகற்றுவதற்கான நடவடிக்கையை எடுக்க அரசாங்கம் தவறினால், தாங்களும் கடற்றொழிலாளர்களின் உதவி…
-
- 7 replies
- 803 views
-
-
செப்டெம்பர் மாதமளவில் நாட்டை முழுமையாகத் திறக்க எதிர்பார்ப்பு - இராணுவத் தளபதி (நா.தனுஜா) கொரோனா வைரஸ் பரவலானது எதிர்வரும் சில நாட்களில் மீண்டும் தீவிரமடையாதபட்சத்தில், எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் நாட்டை முழுமையாகத் திறப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக கொவிட் - 19 பரவலைக் கட்டுப்படுத்தல் மற்றும் ஒழித்தல் தொடர்பான தேசிய மையத்தின் தலைவர் இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். எதிர்வரும் செப்டெம்பர் மாதமாகும்போது நாட்டுமக்கள் அனைவருக்கும் கொவிட் - 19 முதலாம்கட்டத் தடுப்பூசி வழங்கிமுடிப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டை எப்போதும் முழுமையாக முடக்கிவைத்திருக்க முடியாது என்று சுட்டிக்காட்டிய ஜெனரல் சவேந்த…
-
- 0 replies
- 221 views
-
-
ஈஸ்டர் தாக்குதல்: அரசாங்கம் மக்களை ஏமாற்ற நினைக்கக்கூடாது – கர்த்தினால் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் மந்தக் கதியில் இடம்பெறுவதாகவும், அரசாங்கம் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டு மக்களை ஏமாற்ற நினைக்கக்கூடாது என்றும் கொழும்பு பேராயர் கர்த்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். கொழும்பு, ஆயர் இல்லத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மேலும் கூறியுள்ளதாவது, “ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான தற்போதைய நிலவரம் மற்றும் விசாரணைகள் தொடர்பாக நாம் ஜனாதிபதிக்கு எழுத்து மூலமான ஆவணமொன்றை அனுப்பியுள்ளோம். அனைத்து விடயங்களையும் ஆராய்ந்தே இந்த ஆவணத்தை தயார் செய்துள்ள…
-
- 2 replies
- 283 views
-
-
விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பு- ஊடகவியலாளர் நிலாந்தனிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணை விடுதலைப் புலிகள் அமைப்பு மற்றும் முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் தயாமோகன் ஆகியோருடன் தொடர்பா என பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவு அதிகாரிகள், மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர் நிலாந்தனிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் மீனகம் இணையத்தளத்தை நடத்துவது நீங்களா எனவும் தடுப்பு மற்றும் விசாரணை பிரிவு அதிகாரிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மட்டக்களப்பு மாவட்ட பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவுக்கு, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரும் சுயாதீன ஊடகவியலாளருமான செ.நிலாந்தன் நேற்று (திங்கட்கிழமை) அழைக்கப்பட்டிருந்தார். இவ்வாறு அழைக்கப…
-
- 0 replies
- 361 views
-
-
சீனாவின் ஊடுருவல்: இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பகையை ஏற்படுத்தும்-ஞா.ஸ்ரீநேசன் அபிவிருத்தி என்கின்ற போர்வையில் சீனாவின் இலங்கை மீதான ஊடுருவல் என்பது நிச்சயமாக இந்தியாவிற்கும் இலங்கைக்கும் பாரியதொரு பகையை ஏற்படுத்தும் ஒரு செயற்பாடாக இருக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு ஊடக மையத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், சீனா தற்போது வடபுலம் யாழ்ப்பாணம் வரை ஊடுருவி இருக்கின்றது. பூநகரியில் கௌதாரிமுனையில் இப்போது கடலட்டை வளர்க்கும் ஒரு பண்ணையை ஏற்படுத்தி இருக்கின்றார்கள். இதுகூட இங்கு இருக்கின்ற மக்களு…
-
- 7 replies
- 685 views
-
-
இலவசக் கல்வியை... இராணுவ மயப்படுத்துவதற்கு, அனுமதிக்க முடியாது- இலங்கை ஆசிரியர் சங்கம் இலவசக் கல்வியை இராணுவ மயப்படுத்துவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாதென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட இணைப்பாளர் வேலு இந்திரச்செல்வன் தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இலவசக்கல்வியின் உரிமையை பாதுகாப்பதற்காக நாம் தொடர்ந்து குரல் எழுப்பி வந்திருக்கின்றோம். இந்நிலையில் இலவசக்கல்வியை தனியார் மற்றும் இராணுவ மயப்படுத்துவதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மேலும் இத்தகைய செயற்பாட்டுகளுக்கு எதிராக கல்வி சமூகம் தொடர்ந…
-
- 1 reply
- 331 views
-
-
வவுனியா பல்கலை கழகத்திற்கு முதலாவது துணைவேந்தர் நியமனம் வவுனியா பல்கலைக்கழகத்தின் முதலாவது துணைவேந்தராக கலாநிதி ரி.மங்களேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்பல்கலைகழகத்தின் வவுனியா வளாகம் வவுனியா பல்கலைகழகமாக கடந்தமாதம் தரமுயர்த்தப்பட்டிருந்தது. எதிர்வரும் 8 ஆம் மாதத்தில் இருந்து பல்கலைக்கழகத்தின் அனைத்து செயற்பாடுகளும் உத்தியோக பூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்நிலையில் பல்கலைகழகத்தின் முதலாவது துணைவேந்தராக ஏற்கனவே முதல்வராக கடமை வகித்த கலாநிதி ரி.மங்களேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் தெல்லிப்பளையை சேர்ந்த இவர் 1999 ஆம் ஆண்டு வவுனியா வளாகத்தில் விரிவுரையாளராக தனது கடமையினை ஆரம்பித்திருந்தார். பின்னர் வளாகத்த…
-
- 0 replies
- 333 views
-
-
இலங்கையில் ‘டெல்டா’ தொற்றாளர்களது எண்ணிக்கை அதிகரிப்பு – சுகாதார அமைச்சு இலங்கையில் மேலும் 6 பேருக்கு டெல்டா கொரோனா பிறழ்வு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்தார். இதன்படி நாட்டில் இதுவரை 24 டெல்டா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார். கொரோனாத் தொற்றிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு பொதுமக்கள் உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்தநிலையில், நாட்டில் டெல்டா கொரோனா வைரஸ் பிறழ்வு பரவியுள்ளமை தொடர்பில் ஆராய்வதற்காக மற்றுமொரு ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது என ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் தெரிவித்த…
-
- 0 replies
- 374 views
-
-
இலங்கையின் அரச நிறுவனங்களில் கிட்டத்தட்ட 80% நிறுவனங்கள் ராஜபக்ச குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளது இலங்கையின் தற்போதைய அரசாங்கம் ராஜபக்ச குடும்பத்தின் நிறுவனமாக மாறி வருவதாக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. இலங்கையில் ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்சவின் மூன்று சகோதரர்கள் அரசாங்கத்தில் உயர் பதவிகளை வகித்து வருவதாகவும் இவர்களின் புதல்வர்களுக்கும் அதிகாரமிக்க பதவிகள் வழங்கப்பட்டுள்ளன எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. இலங்கையின் நிதியமைச்சராக பசில் ராஜபக்ச பதவியேற்றுள்ளமை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை இது, குடும்ப ஆட்சியை உறுதிப்படுத்தும் நடவடிக்கை எனவும் கூறியுள்ளது. கோட்டாபய ராஜபக்ச இலங்கையின் ஜனாதிபதியாக பதவி வகிப்பதுட…
-
- 0 replies
- 379 views
-
-
சுகாதாரம், கல்வி, தொழில் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கள் கைமாறவுள்ளதாக தகவல்? ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவை விரைவில் முழுமையாக மறுசீரமைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்போது சுகாதாரம், பொதுமக்கள் பாதுகாப்பு, கல்வி உள்ளிட்ட அமைச்சு பதவிகள் கைமாறவுள்ளதாக தெரியவருகின்றது. அத்துடன், அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் வகிக்கும் அமைச்சுகளின் கீழுள்ள விடயதானங்களும் மாற்றியமைக்கப்படவுள்ளதாக அரச உயர்மட்ட வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பஸில் ராஜபக்ச நிதி அமைச்சராக பதவியேற்றுள்ள நிலையில் நாட்டின் எதிர்கால அபிவிருத்தி மற்றும் பொருளாதார இலக்குகளை விரைவில் அடைவதை…
-
- 0 replies
- 188 views
-
-
15 வயது சிறுமி, இணையத்தில் விற்பனை : விசாரணையை மூடிமறைக்க திட்டம் என எதிர்க்கட்சி குற்றச்சாட்டு 15 வயது சிறுமி பாலியல் நடவடிக்கைகளுக்காக இணையத்தில் விற்கப்பட்ட சம்பவம் குறித்து பொலிஸ் விசாரணையை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை நிறுத்த சில அழுத்தம் கொடுக்கின்றன என்றும் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சி எதிர்ப்பை தெரிவிப்பதாகவும் ரோஹினி குமாரி விஜேரத்ன கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அனைத்து சந்தேக நபர்களையும் சட்டத்தின் முன் ஆஜர்படுத்தி…
-
- 0 replies
- 223 views
-
-
ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையை இழக்கும் அபாயம் இல்லை – அமைச்சர் தினேஷ் இலங்கை ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகையை இழக்கும் அபாயம் இல்லை என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே இவ்வாறு கூறினார். மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அரசாங்கத்தையும் இராணுவ வீரர்களையும் காட்டிக்கொடுக்க முயன்றவர்களே இவ்வாறு அவதூறு பரப்பி வருவதாகவும் கூறினார். மேலும் இந்த விடயம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டார். https://athavannews.com/2021/1228240
-
- 0 replies
- 244 views
-
-
விமலின் அமைச்சு பிடுங்கப்படும்? ஆளும் கூட்டணிக்குள் குழப்பம்! சர்ச்சைக்குரிய கொத்தலாவலை பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்ட மூலத்திற்கு விமல் வீரவன்ச கடும் எதிர்ப்புத் தெரிவித்து, அதனை எதிர்த்து வாக்களிக்கப் போவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. கொத்தலாவலை பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்ட மூலத்திற்கு எதிராக வாக்களிக்கப் போவதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. விமல் வீரவன்சவின் கட்சி உறுப்பினரும், இராஜாங்க அமைச்சருமான ஜயந்த சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார். அமைச்சர் சமல் ராஜபக்சவிடம் விமல் வீரவன்ச இதனைத் தெரிவித்துள்ளார் – விமல் வீரவன்சவின் எதிர்ப்புக் காரணமாக இந்தச் சட்ட மூலத்தை ஆகஸ்ட் மாதம் வரை பிற்போட்டுள்ளது எ…
-
- 0 replies
- 248 views
-
-
தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை கட்சியின் தலைமைப்பதவியிலிருந்து நீக்குவதற்கான முயற்சி எதுவும் இடம்பெறவில்லை – மாவை Digital News Team 2021-07-12T10:27:58 தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தனை கட்சியின் தலைமைப்பதவியிலிருந்து நீக்குவதற்கான முயற்சிகள் எவையும் இடம்பெறவில்லை என கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மோர்னிங்கிற்கு தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தை சேர்ந்த அரசியல்வாதியொருவர் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை கைப்பற்ற முயல்கின்றார் என நான் தெரிவிக்கவில்லை என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். நான் அன்று இந்திய தூதுவரை சந்திப்பதற்காக கொழும்பிலிருந்தேன் அவ்வாறான நிலையில் நான் எப்படி யாழ்ப்பாண…
-
- 5 replies
- 417 views
-
-
முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட வட்டுவாகல் கிராமத்தில் 617 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை அங்கிருக்கும் கோட்டாபய ராஜபக்ஷ கடற்படை முகாமுக்காக அபகரிக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன எனத் தெரிவித்துள்ள வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான துரைராசா ரவிகரன் தமிழ் மக்களின் காணிகள் அவ்வாறு அபகரிக்கப்படுமாயின் மக்களோடு இணைந்து எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் இறங்குவோம் என எச்சரித்தார். முல்லைத்தீவு பிரதேச நில அளவைத் திணைக்களத்தின் அரச நில அளவையாளர் பா.நவஜீவன் 08.07.2021 ஆம் திகதியிடப்பட்ட கடிதம் ஒன்றின் மூலமாக காணிகளை மீண்டும் அளவீடுசெய்து கடற்படைக்கு வழங்க இருப்பதாக காணிகளுக்குரிய தமிழ் மக்களுக்கு அறிவித்தல் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். …
-
- 0 replies
- 325 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ். கனகரத்னத்தின் மகனான கனகரத்தினம் ஆதித்தியனுக்கு எதிராக பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் கொலை முயற்சி தொடர்பில் பயங்கரவாதத்தடைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் சாட்சி விசாரணைகளுக்கு திகதி குறிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 19.22.26.27 மற்றும் 28 ஆம் திகதிகளில் தொடர்ச்சியாக ஐந்து தினங்களுக்கு இந்த விசாரணைகளை நடாத்த கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. அதன் அடிப்படையில் அரச சாட்சிகளுக்கு குறித்த தினக்களில் மன்றில் ஆஜராக அறிவித்தல் அனுப்புமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் இஸ்ஸதீன் நீதிமன்ற பதிவாளருக்கு உத்தரவிட்டார். ஜனாதிபதி சட்டத்தரணி கே.வ…
-
- 0 replies
- 296 views
-
-
ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சட்டவிரோத கைதுகளை கண்டித்தும் கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்தில் அரசாங்கத்திற்கு எதிராக தற்போது ஆர்ப்பாட்டமும் பேரணியும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பல தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருந்தன. இதன் போது அரசாங்கத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டதுடன் எதிர்ப்பு பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரணியிலும் ஈடுப்பட்டனர். நாட்டின் கல்விக்கட்டமைப்பை சீர்குலைக்கக்கூடிய ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எ…
-
- 0 replies
- 337 views
-
-
ஜனவரி மாதத்திற்குள் மேலும் ஒரு தொகுதி அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவர் – சுரேன் இராகவன் எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் இன்னுமொரு தொகுதி அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்குத் தாயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் இராகவன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இடம் பெற்ற ஊடகச் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “கைதிகள் தொடர்பில் எடுத்த முயற்சி காரணமாக 16 கைதிகளை அண்மையில் விடுதலை செய்திருக்கிறோம். இதன் பணி மேலும் தொடரும். எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் இன்னுமொரு தொகுதி கைதிகளை விடுதலை செய்வதற்கு தாயாராக இருக்கிறோம். அவர்கள் விடுதலை பெறவேண்டும். அ…
-
- 0 replies
- 198 views
-
-
தமிழ் மக்களின் உறுதுணையாக இருப்பது இந்தியாவே.: எதிர்காலம் குறித்து சீனா தீர்க்கமான முடிவெடுக்க வேண்டும் - சிறிதரன் எம்.பி அவசர கடிதம் (ஆர்.ராம்) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்த தீர்மானத்தினை சீனா எதிர்த்தமை தமிழ் மக்களுக்கு அதிருப்பதியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் வரலாற்றுக்காலம் முதல் தமிழ் மக்களுக்கு உறுதுணையாக இருப்பது இந்தியாவே ஆகும். அவ்வாறான நிலைமைகளை புரிந்துகொண்டு சீனா தனது எதிர்காலச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் இலங்கைக்கான சீனத்தூதுவர் குய் ஜென்ஹோங்கிற்கு அவசர கடிதமொன்றை அனுப்பியுள்ளார். அக்கடிதத்தின் முழுவடிவம் வருமாறு, கிளிநொ…
-
- 10 replies
- 922 views
- 1 follower
-
-
போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டமைக்கு அமெரிக்கா கண்டனம். ஒன்றுகூடும் உரிமையானது பொதுமக்கள் அமைதியான ஆர்ப்பாட்டங்களை நடத்தும் உரிமையை உள்ளடக்கியது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. கடந்த வாரம் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்ட பலர் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த விடயம் குறித்து டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபைக்கான வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் மேற்கண்டவாறு கூறினார். அதில், தமது உணர்வுகளைப் பகிர்ந்துகொள்வது உள்ளிட்ட பல்வேறு உரிமைகள் ஒன்றுகூடும் உரிமையில் உள்ளடங்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக கொரோனா தொற்றினை கட்டுப்படு…
-
- 0 replies
- 676 views
-
-
ஆவாவிலிருந்து பிரிந்தது ஜி குழு – செல்வபுரம் வன்முறையில் ஜி குழுவே ஈடுபட்டது! July 4, 2021 கோண்டாவில் செல்வபுரம் பகுதியில் இடம்பெற்ற வன்முறைக்கு ஆவா குழுவிலிருந்து பிரிந்து ஜி குழுவை உருவாக்கியமையே காரணம் என்று பொலிஸார் தெரிவித்தனர். செல்வபுரம் பகுதிக்குள் புகுந்து 9 பேரை வாளினால் வெட்டி படுகாயப்படுத்தியமை மற்றும் ஸ்டியோ ஒன்றுக்கு தீவைத்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் 3 பிரதான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 13 சந்தேக நபர்கள் தேடப்பட்டு வருவதுடன், அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாத்து வருபவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாகப் காவற்துறையினர் கூறினர். கோண்டாவில் செல்வபுரம் பகுதிய…
-
- 49 replies
- 3.3k views
- 2 followers
-
-
ஆட்சியைக் கவிழ்க்கலாம் என கனவு காண வேண்டாம் – பசில் ராஜபக்ஷ ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஆட்சியைக் கவிழ்க்கலாம் என கனவு காண வேண்டாம் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, எதிரணிக்கு பதிலுரை வழங்கியுள்ளார். நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர், தான் அமைச்சராக பதவி ஏற்றவுடனேயே இந்த ஆர்ப்பாட்டங்களை எதிரணியினர் தீவிரப்படுத்தியுள்ளனர் என்றும் சுட்டிக்காட்டினார். குறிப்பிட்ட ஒரு சிலரைக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசை ஒருபோதும் கவிழ்க்க முடியாது என்றும் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டா…
-
- 3 replies
- 591 views
-