ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143637 topics in this forum
-
செல்வந்தர்களால் முல்லைத்தீவில் தொடரும் காடழிப்பு July 2, 2021 Share 24 Views செல்வந்தர்களால் முல்லைத்தீவில் தொடரும் காடழிப்பு – அரச அதிகாரிகள் மீதும் குற்றச்சாட்டு முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பாரிய அளவில் காடழிப்பு இடம்பெற்று காணி அபகரிக்கப்பட்டு வருவதாகவும் இந்த செயற்பாடுகள் செல்வந்தர்களாளேயே இடம்பெறுவதாகவும் இதற்கு அரச அதிகாரிகள் உடந்தையாக செயற்படுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழ்வதற்கு ஒரு துண்டு காணி கூட இல்லாத சுமார் 3750 ஏழைக் குடும்பங்கள் தமக்கு வாழ்விடத்திற்கு ஒரு துண்டு காண…
-
- 4 replies
- 629 views
-
-
பயங்கரவாத தடைச் சட்டத்தின்... சில விதிகளை, மீள ஆராய நடவடிக்கை – ஐரோப்பிய ஒன்றியத்திடம் தெரிவித்தது இலங்கை! பயங்கரவாத தடைச் சட்டத்தின் சில விதிகளை மீள ஆராய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஐரோப்பிய ஒன்றியத்திடம் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நல்லிணக்கத்திற்கான முன்னேற்றம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்திடம் பிரஸ்தாபிக்கப்பட்ட போது, போதிய விளக்கம் வழங்கப்பட்டதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இலங்கை அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடன் உரிய மற்றும் பன்முக உரையாடலுக்காக தொடர்ச்சியாக பொறுப்புடன் செயலாற்றும். …
-
- 0 replies
- 343 views
-
-
பலாலியில்... மக்களின் விவசாய காணிகளில், இராணுவம் விவசாயம்! யாழ்ப்பாணம் பலாலி பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் விவசாய பண்ணையில் உற்பத்தி செய்யப்பட்ட மிளகாய்களை உள்ளூர் சந்தைகளில் விநியோகித்துள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். யாழ்.பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவின் வழிகாட்டலுக்கு அமைய “துரு மித்துரு நவ ரட்டக்” திட்டத்தின் கீழ் விவசாய உற்பத்தியில் தன்னிறைவை இலக்காக கொண்டு விவசாய பண்ணையில் மிளகாய் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளதாக இராணுவத்தினர் மேலும் தெரிவித்தனர். யாழ்.பாதுகாப்பு படைத்தலைமையகத்தை சூழவுள்ள பொதுமக்களின் பெருமளவான நிலப்பரப்பினை இராணுவத்தினர் கையகப்படுத்தி உயர் பாதுகாப்பபு வலயமாக அறிவித்துள்ளனர். அப்பகுதிக…
-
- 14 replies
- 1.3k views
- 1 follower
-
-
மருத்துவ அதிகாரிகளின் ஓய்வு பெறும் வயதெல்லை நீடிப்பு! அரச சேவையில் பணியாற்றும் மருத்துவ அதிகாரிகளின் ஓய்வு பெறும் வயதெல்லை 63 ஆக நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை இதற்கு முன்னர் 61 ஆக இருந்த நிலையில், குறித்த வயதெல்லை 63 ஆக நீடிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 20ம் திகதி, மருத்துவ அதிகாரிகளின் ஓய்வு பெறும் வயதை 63ஆக நீட்டிக்க ஓய்வூதிய சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1226066
-
- 0 replies
- 483 views
-
-
குரங்கின் கையில் பூமாலையாக மட்டக்களப்பு மாவட்டம் – சாணக்கியன் கவலை மட்டக்களப்பில் இன்று உள்ள ஆளும் கட்சி சார்ந்த அரசியல்வாதிகளின் நிலையானது குரங்கின் கையில் பூமாலை கிடைத்தது போன்று உள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று(வியாழக்கிழமை) மட்டக்களப்பிற்கு விஜயம் செய்துள்ள நிலையில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “இன்று மட்டக்களப்பின் நிலையானது குரங்கின் கையில் பூமாலை கிடைத்தது போன்று உள்ளது. மட்டக்களப்பு அரசியல்வாதிகளின் நிலைமை. அதிகாரத்தில் உள்ளவர்களின் நிலைமை. ஏன் என்றால் இன்றைய இந்த கூட்டத்திற…
-
- 0 replies
- 403 views
-
-
மட்டக்களப்பு விமான நிலையம் அதிக வசதிகளுடன் உருவாக்கப்படும் – பிரசன்ன மட்டக்களப்பு விமான நிலையம் அதிக வசதிகளுடன் கூடிய கவர்ச்சிகரமான உள்நாட்டு விமான நிலையமாக உருவாக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். மட்டக்களப்பு விமான நிலையத்திற்கு இன்று (வியாழக்கிழமை) மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்த வெளியிடுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். 1958ஆம் ஆண்டில் சிவில் சர்வீஸ் துறையின் கீழ் கட்டப்பட்ட இந்த விமான நிலையம் பின்னர் இலங்கை விமானப்படைக்கு 1983இல் ஒப்படைக்கப்பட்டது என அவர் குறிப்பிட்டார். கடந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் போது (2012), விமான நிலையத்தின் ஓடுபாதை உருவாக்கப்பட்டு உள்நாட்டு விமான நிலையமாக இயக்கப்பட்டதா…
-
- 0 replies
- 353 views
-
-
கிளிநொச்சி கண்டாவளை உமையாள்புரம் பிரதேசத்தில் அதிகளவில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்றுவருகின்றமை தொடர்பில் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். உமையாள்புரம் பிரதேசம் ஆனையிறவு கடல்நீரேரிக்கு அருகில் உள்ள கிராமம் இதன் காரணமாக கிராமத்தின் பெரும்பாலான பகுதிகள் உவராக காணப்படுகிறது. உவராக காணப்படும் பிரதேசத்தின் அளவு அதிகரித்து வரும் நிலையில் குறித்த பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மணல் இதனை விரைவுப்படுத்தும் எனத் தெரிவித்துள்ள பொதுமக்கள் கரைச்சி பிரதேச சபையின் கழிவு அகற்றும் பகுதியில் சட்டவிரோதமாக உழவு இயந்திரங்கள் மூலம் அகழப்படும் மணல் சேமிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து டிப்பர்களில் எடுத்துச் செல்லப்படுவதாகவும், தொடர்ச்சியாக இவ்வாறு இடம்பெற்று வருவதாகவும் பொதுமக்கள் தெர…
-
- 0 replies
- 317 views
-
-
(நா.தனுஜா) பயங்கரவாத்தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்து, தடுத்துவைக்கப்பட்டிருக்கும் கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜசீமிற்கு எதிரான ஆதாரங்கள் எவையும் இல்லாதவிடத்து அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் அவர் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் காலப்பகுதியில் அவரது மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்புச்சபை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியிருக்கிறது. http://cdn.virakesari.lk/uploads/medium/file/94523/amnesty_international_l_new.jpg இதுகுறித்து சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசியப்பிராந்தியப் பணிப்பாளர் யாமினி மிஷ்ரா இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநி…
-
- 0 replies
- 299 views
-
-
(ஆர்.யசி) பொருளாதார ரீதியாக நாடு பாரிய நெருக்கடி நிலையொன்றை சந்தித்துள்ளது, தற்போதுள்ள நிலையில் 2029 ஆம் ஆண்டு வரையில் யார் ஆட்சியில் இருந்தாலும் வருடத்திற்கு 4.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக செலுத்தியே ஆகவேண்டும். அடுத்த ஒரு வாரத்திற்குள் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தாவிட்டால் நாடே பாரிய நெருக்கடிக்குள் விழும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிக்கின்றார். http://cdn.virakesari.lk/uploads/medium/file/89712/Bandula.jpg நாட்டின் தற்போதைய கடன் நெருக்கடி நிலைமைகள் குறித்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில், இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் இருந்தே நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பல தடைகள் ஏற்பட்டுள்…
-
- 28 replies
- 1.3k views
-
-
யாழ்ப்பாணம் கோண்டாவில் செல்வபுரம் பகுதியில் நேற்றிரவு வாள்வெட்டுக்கு இலக்காகி ஒருவரின் துண்டாடப்பட்ட கை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவ வல்லுநர்கள் , மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவ சேவையாளர்களின் கூட்டு முயற்சியினால் மீண்டும் பொருத்தப்பட்டது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சத்திரசிகிச்சை கூடத்தில் நேற்றிரவு 10.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட சத்திரசிகிச்சை இன்று அதிகாலை 4 மணிக்கு வெற்றிகரமாக நிறைவடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது . யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒட்டுறுப்பு சத்திரசிகிச்சை ( Plastic Surgery ) வல்லுநர் இளஞ்செழிய பல்லவன் தலைமையில் நரம்பியல் சத்திரசிகிச்சை வல்லுநர் பொன்னம்பலம் ஆதித்தன் , மயக்க மருந்து மருத்துவ வல்லுநர் மற்றும் மருத்துவர்கள் தாத…
-
- 8 replies
- 927 views
-
-
மன்னார் பேசாலையில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் கடற்கரையை அண்டிய கரவலைப்பாடு பகுதியில் இறால் பண்ணை அமைப்பதற்காக அவ்விடத்துக்கு வருகை தந்திருந்தபொழுது அங்கு எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றது. இது குறித்து தெரியவருவதாவது, இன்று வியாழக்கிழமை காலை மன்னார் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளுடன் தென் பகுதியிலிருந்து வருகை தந்திருந்தவர்கள் மன்னார் மாவட்டத்தில் அதிக மீனவ சமூகம் கொண்ட பேசாலை பகுதியில் இவர்களுக்கு உரிமையான கரவலைப்பாட்டு பகுதிக்கு அண்டிய பகுதியில் இறால் பண்ணை அமைப்பதற்கான முயற்சியை மேற்கொண்டது இவ் மீனவ சமூகத்துக்கு தெரிய வந்தது. இதை அறிந்த பேசாலை மீனவ சமூகம் இவ் இறால் பண்ணை இவ்விடத்தில் அமையுமானால் கரவலையை நம்பி வாழும் மீனவ சமூகத்துக்கு இது ப…
-
- 0 replies
- 467 views
-
-
சிங்கள மற்றும் தமிழ் மொழி ஊடகவியலாளர்களுக்கும் பாலியல் துன்புறுத்தல் 22 Views இலங்கை ஊடகங்களில் சில பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களை எதிர்நோக்கிய விடயம் ஆங்கில மொழி ஊடக நிறுவனங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படவில்லை என நாட்டின் முன்னணி ஊடக அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. ஆங்கில மொழி ஊடகங்களில் பணியாற்றும்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் இந்த சம்பவங்கள் குறித்து, சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தாலும், சில சிங்கள மற்றும் தமிழ் மொழி மூல ஊடக நிறுவனங்களிலும் இதேபோன்ற சூழ்நிலைகள் காணப்பட்டதை தாங்கள் சுட்டிக்காட்ட விரும்புவதாக, இலங்கை இளம் ஊடகவியலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. …
-
- 0 replies
- 335 views
-
-
தொடர்பாடலை மேம்படுத்தும் இணைப்பு செயலி ஒன்றை வடிவமைத்த முன்னாள் போராளியின் மகன்! கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பொன்னகர் கிராமத்திலுள்ள புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளியின் மகனான சுபாஸ்சந்திரபோஸ் சுகிர்தன் என்ற கலைப்பிரிவு மாணவன் இணைப்பு செயலி ஒன்றை வடிவமைத்துள்ளார். குறித்த செயலியை வடிவமைக்க ஆரம்பித்தபோது, அதற்கான பெயரிடலை திட்டமிடாமையால் தனது பெயரை அதற்கு சூட்டியுள்ளார். குறித்த செயலி ஊடாக பயன்பாட்டில் உள்ள ஏனைய செயலிகள் போன்று, தரவுகளை பரிமாறுதல், காணொளி தொடர்பாடல் உள்ளிட்ட விடயங்களை அதில் உள்ளடக்கியுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார். மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள சிவபாதகலையகம் பாடசாலையில் சாதாரண …
-
- 1 reply
- 323 views
-
-
குரங்கின் கையில் பூமாலை போல் மட்டக்களப்பு - சாணக்கியன் கவலை! மட்டக்களப்பில் இன்று உள்ள ஆளும் கட்சி சார்ந்த அரசியல்வாதிகளின் நிலையானது குரங்கின் கையில் பூமாலை கிடைத்தது போன்று உள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார். அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மட்டக்களப்பிற்கு இன்று விஜயம் செய்துள்ள நிலையில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “இன்று மட்டக்களப்பின் நிலையானது குரங்கின் கையில் பூமாலை கிடைத்தது போன்று உள்ளது. மட்டக்களப்பு அரசியல்வாதிகளின் நிலைமை. அதிகாரத்தில் உள்ளவர்களின் நிலைமை. ஏன் என்றால் இன்றைய இந்த …
-
- 0 replies
- 505 views
-
-
செந்திலின் தலையீட்டால் இரத்தினபுரி த.ம.விக்கு புதிய காணி இயற்கை அனர்த்தங்களினால் பாதிப்புக்கு உள்ளாகிய இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்தின் பாடசாலை கட்டிடத்தை மீள் நிர்மாணம் செய்வதற்காக, 5 ஏக்கர் காணியை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் பெற்றுக்கொடுத்துள்ளார். கடந்த 03 வருடங்களாக இயற்கை அனர்த்தங்களால் இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலய கட்டிடங்கள் தொடர்ச்சியாக பாதிப்புக்கு உள்ளாகியதுடன், மாணவர்களும் கல்விச் செயற்பாடுகளை தொடர முடியாது கடும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலேயே இருந்தது வந்தனர். …
-
- 0 replies
- 929 views
-
-
யாழ். இந்தியத் துணைத்தூதருக்கு பிரதமரின் இந்துமத விவகார இணைப்பாளர் பாராட்டு (சி.எல்.சிசில்) யாழில் இந்தியத்துணைத் தூதராக தற்போது பணியில் இருக்கும் பாலச்சந்திரன் அவர்கள் தென்னமெரிக்காவின் இந்திய வம்சாவளி மக்கள் செறிந்து வாழும் சூரினாம் நாட்டுக்கு இந்தியாவின் அடுத்த தூதராக நியமிக்கப்பட்டமைக்கு பிரதமரின் இந்துமத விவகார இணைப்பாளர் சிவஸ்ரீ இராமசந்திர குருக்கள் பாபுசர்மா தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; கடந்த மூன்று ஆண்டுகள் யாழில் இந்திய துணைத்தூதராகப் பணியாற்றி வரும் இவர், சூரினாம் நாட்டிற்கு தூதராக மட்டுமின்றி கரீபியன் நாடுகளான பார்படோஸ், செயின்ட…
-
- 0 replies
- 253 views
-
-
கிழக்கில் தொடரும் தமிழினக்குறைப்பு வேலைத்திட்டம் – பலப்படுத்தவேண்டிய அவசியம் உணரப்படுமா – மட்டு.நகரான் July 1, 2021 Share 2 Views வடகிழக்கு மாகாணத்தின் நிலைமைகள் தொடர்பில் பல்வேறு விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டு வரும் போதும், அவை தொடர்பில் எந்தளவுக்கு கவனம் செலுத்தப்படுகின்றது என்பது கேள்விக் குறியாகவே உள்ளது. கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்த வரையில் தமிழர்களின் விகிதாசாரத்தினைக் குறைப்பதற்கு மிகவும் திட்டமிட்ட வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது தொடர்பில் நாங்கள் பல தடவைகள் சுட்டிக் காட்டியிருந்தோம். ஆனால் அது தொடர்பில் போதுமான கவனத்தினை யார…
-
- 0 replies
- 449 views
-
-
பாலியல் குற்றச்சாட்டு: சாட்சிகளை மறைக்கும் முயற்சியில் மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் July 1, 2021 Share 24 Views விசாரணைகளுக்காக மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு மாற்றப் பட்டசெங்லடி பிரதேச செயலாளர் நல்லையா வில்வரெட்ணம், அவருக்கு எதிரான சாட்சிகளை இல்லாமல் செய்யும் முயற்சியில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது. செங்கலடி பிரதேச செயலாளர் நல்லையா வில்வரெட்ணம், அவர்களுக்கு எதிராக பாலியல் குற்றச்சாட்டுக்கள் உட்பட இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கள், காணி ஊழல் குற்றச்சாட்டுக்கள் என பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. …
-
- 0 replies
- 278 views
-
-
புதிய... செயலியினை, உருவாக்கினார் யாழ். இந்துக் கல்லூரி மாணவன்! யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் தரம் 10 இல் கல்வி கற்கும் நக்கீரன் மகிழினியன் என்ற 15 வயது மாணவன் வட்ஸ்அப் மற்றும் வைபர் ஆகிய செயலிகளுக்கு இணையான புதிய வகை செயலி ஒன்றை உருவாக்கியுள்ளார். mSquard என்ற செயலி தொலைத் தொடர்பாடல் துறையில் ஒரு முக்கியமான செயலியாக தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிறுவயதிலிருந்தே மென்பொருள் விஞ்ஞானியாக வரவேண்டும் என்று தனது கல்வியைத் தொடர்ந்த இந்த மாணவன் கடந்த ஒரு மாத காலமாக நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருந்த பயணத் தடையினை சிறந்த முறையில் பயன்படுத்தி வீட்டிலிருந்து இந்த புதிய செயலியை கண்டுபிடித்துள்ளார். மிகத்துல்லியமான முறையில் படங்கள் மற்றும் வீடியோக்கள் மற்றும் த…
-
- 26 replies
- 1.7k views
- 1 follower
-
-
இந்தியாவின்... பகையினை, சம்பாதிக்ககூடிய நிலையினையே... தற்போதைய அரசாங்கம் ஏற்படுத்தி வருகின்றது – கூட்டமைப்பு! இந்தியாவின் பகையினை சம்பாதிக்ககூடிய நிலையினையே தற்போதைய அரசாங்கம் ஏற்படுத்தி வருகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்த வெளியிட்டுள்ள அவர், ‘இலங்கையானது சீனாவின் மாகாணம் போன்று செயற்படுவதை மேற்குலக நாடுகளுக்கோ இந்தியாவுக்கோ விரும்பத்தகாத செயலாக உள்ளது. வடகிழக்கில் சீனர்களின் ஆதிக்கத்திற்கு இந்த அரசாங்கம் இடமளிக்கின்றது என்றால் நேரடியாக இந்தியாவி…
-
- 5 replies
- 354 views
-
-
இலங்கை விமானங்கள்... துருக்கியில், தரையிறங்கத் தடை! இலங்கை உள்ளிட்ட ஐந்து நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு துருக்கி அரசு தடை விதித்துள்ளது. துருக்கி உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளது. அதன்படி, பங்களாதேஷ், பிரேசில், தென்னாப்பிரிக்கா, இந்தியா, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்துள்ளது. மேலும் மறு அறிவிப்பு வரும் வரையில் இந்தத் தடை அமுலில் இருக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் புதிய மாறுபாடுகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சகம் மேலும் கூறியுள்ளது. சுகாதார அமைச்சின் பரிந்துரைகளைத் தொடர்ந்து, இந்த நாடுகளில் இருந்து நிலம்…
-
- 0 replies
- 374 views
-
-
கப்பல் தீ விபத்து – இதுவரையில் 200 கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழப்பு! தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலால் கடல்சார் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புகளின் காரணமாக 200 கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழந்துள்ளன. இந்த விடயம் தொடர்பாக சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம் கொழும்பு நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார். இதற்கமைய, 176 ஆமைகள், 4 திமிங்கிலங்கள் மற்றும் 20 டொல்பின்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பை அண்மித்தப் பகுதியில் கடந்த மாதம் எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்துக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1225990
-
- 0 replies
- 460 views
-
-
சீன நிறுவனத்தின், கடலட்டை வளர்ப்பு நிலையத்தினை பார்வையிட்டார் கஜேந்திரன்! கிளிநொச்சி பூநகரியில் அமைந்துள்ள சீன நிறுவனத்தின் கடலட்டை வளர்ப்பு இடம்பெறும் பகுதியை நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் உள்ளிட்ட குழுவினர் நேற்று(செவ்வாய்கிழமை) பார்வையிட்டிருந்தனர். இதன்போது குறித்த கடலட்டை பண்ணையில் சீனர்கள் எவரும் இருந்திருக்கவில்லை என ஆதவனின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார். ஆனாலும் அங்கு அவர்கள் தங்கியிருந்தமைக்கான ஆதாரங்கள் தொடர்ந்தும் காணப்படுவதுடன், குறித்த நிறுவனத்தில் பணி புரியும் தமிழ் பேசும் நபர்கள் அங்கு தங்கி இருந்தமையை அவதானிக்க முடிந்தது. அத்துடன், அங்கு சீன மொழியில் எழுதப்பட்டிருந்த உணவு பொதிகளையும் அவதானிக்க முடிந்ததுடன், மின்சார கட்டமை…
-
- 0 replies
- 545 views
-
-
கப்பல் விபத்தினால்... பாதிக்கப் பட்டுள்ளவர்களுக்கு, டக்ளஸ் தேவானந்தாவினால்.. உபகரணங்கள் வழங்கி வைப்பு! எக்ஸ்பிறஸ் பேர்ள் கப்பல் விபத்தின் காரணமாக தொழில் உபகரணங்களை இழந்த கடற்றொழிலாளர்களுக்கு தொழில் உபகரணங்களை வழங்குவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதற்கமைய, தொழில் உபகரணங்களை வழங்கி வைக்கும் செயற்பாடு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இன்று(புதன்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டது. கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்கா மற்றும் அமைச்சு அதிகாரிகள் கலந்து கொண்டனர். https://athavanne…
-
- 8 replies
- 782 views
-
-
காணாமல் போனவர்களின், உறவினர்களினால்... வவுனியாவில் ஆர்ப்பாட்டம்! காணாமல் போனவர்களின் உறவினர்களினால் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று(புதன்கிழமை) சுகாதார நடைமுறைகளை பின்பற்றி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றிருந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களினால் ‘எங்கே எங்கே உறவுகள் எங்கே“, “கையில் ஒப்படைக்கப்பட்ட உறவுகள் எங்கே“ என்று கோசங்களை எழுப்பியவாறும் பதாதைகளை தாங்கியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1225950
-
- 0 replies
- 372 views
-