Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கிற்கு 4 இலட்சம் கொரோனா தடுப்பூசிகள் தேவை : மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் 60 Views வடக்கு மாகாணத்தில் 4 இலட்சம் பேருக்குக் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தால் கோரிக்கை முன்வைக்கப் பட்டுள்ளது. தடுப்பூசிகள் வழங்கப்பட்டால் அவை இரண்டு வாரங்களுக்குள் வடக்கு மக்களுக்குச் செலுத்தி முடிக்கக் கூடியதாக இருக்கும் என்றும் சுகாதார சேவைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, சுகாதார முன்களப் பணியாளர்களுக்கு அஸ்ரா ஜெனெகா தடுப்பூசியின் முதலாவது செலுத்துகை கடந்த ஜனவரி மாத இறுதியில் ஏற்றப்பட்டது. அவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசி செலுத்துகை தற்போது ஏற்றப்பட்ட…

  2. வாகன இறக்குமதிக்கு தடை: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக இலங்கைக்கு வரும் ஆடம்பர வாகனங்கள்…! வாகன இறக்குமதிக்கு நாட்டில் இடைக்கால தடை விதித்த போதிலும் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இவை டொயோட்டா லங்கா நிறுவனம் வழியாக ஜப்பானில் உள்ள அதன் தலைமையகத்தில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உள்ளூர் மட்டத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகளை கண்காணிக்கும் பணிகளை ஒப்படைத்துள்ள புதிய உறுப்பினர்களுக்கு வாகனத்தை கொள்வனவு செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமர் கருவூலத்திற்கு அறிவுறுத்தியுள்ளார். இதேவேளை இவற்றைத்தவிர 50 அம்பியூலன்ஸ்கள், 50 தண்ணீர் லொரிகள் மற்றும் 50 டபு…

  3. இலங்கையில் வடக்கு பகுதியில் பலத்த காற்று, சூறாவளி 11 Views 25.05.21 வடக்கில் கடும் காற்று வீசும் என வளிமண்டலவியல் நிலையம் அறிவித்துள்ளது. வடக்குப் பகுதியில் பலத்த காற்று வீசுவதுடன், பயன்தரு மரங்களும் முறிந்து விழுந்துள்ளன. அடுத்த சில மணி நேரங்களில் வங்காள விரிகுடாவின் கிழக்கு மத்திய பகுதியில் உருவாகியுள்ள ´யாஸ்´ என்ற சூறாவளி கடும் புயலாக தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாட்டில் பலத்த காற்று வீச ஆரம்பித்திருப்பதாகவும் நாட்டின் தென் மேற்கு பகுதியில் மழை பெய்யும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது. …

  4. இரா.சாணக்கியனின் கோரிக்கையினையடுத்து ஊழியர்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய தனியார் ஆடைத்தொழிற்சாலை நிர்வாகம் நடவடிக்கை! மக்களினதும், ஊழியர்களினதும் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் தனது கோரிக்கையினையடுத்து மட்டக்களப்பிலுள்ள தனியார் ஆடைத்தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவிதுள்ளார். இன்று(புதன்கிழமை) விசேட காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ள இரா.சாணக்கியன் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “இன்றைய தினம் மட்டக்களப்பிலுள்ள தனியார் ஆடைத்தொழிற்சாலையின் கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பானவரிடம் நான் தொலைபேசி ஊடாக முன்வைத்த …

    • 0 replies
    • 172 views
  5. இன்று முதல், இரு நாட்களுக்கு... மதுபானம் மற்றும் இறைச்சி விற்பனைகளுக்கு முற்றாகத் தடை! வெசாக் தினத்தை முன்னிட்டு இன்று (புதன்கிழமை) மற்றும் நாளை நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகள் மற்றும் இறைச்சி கடைகள் என்பன மூடப்பட்டுள்ளன. குறித்த இரு தினங்களுக்கு மதுபானசாலைகள் மற்றும் இறைச்சி கடைகளை மூடுமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்தார். அத்தோடு, பல்பொருள் அங்காடிகளிலும் மதுபானம் மற்றும் இறைச்சி விற்பனை செய்யப்படக்கூடாது என்றும் மதுபானம் மற்றும் இறைச்சி விற்பனையை முற்றாக நிறுத்துமாறும் பிரதமர் குறிப்பிட்டிருந்தார். அதன்படி, நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகள் மற்றும் இறைச்சி கடைகள் என்பன …

  6. (எம்.எப்.எம்.பஸீர்) கொழும்பு துறைமுகத்துக்கு வட மேல் திசையில், 9.5 கடல் மைல் தூரத்தில், கொழும்பு துறைமுகத்துக்குள் நுழையும் நோக்குடன் நங்கூரமிடப்பட்டிருந்த சரக்குக் கப்பலில் பரவிய திடீர் தீ மிக மோசமான நிலையில் அக்கப்பலை ஆட்கொண்டுள்ளது. இந்நிலையில் நேற்று காலை குறித்த கப்பலில் தீ பரவலுக்கு இடையே இரு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் கப்பல் ஊழியர்கள் இருவர் இதன்போது காயமடைந்துள்ளனர். இந்நிலையில் காயமடைந்த கப்பல் ஊழியர்களான இந்தியர்கள் இருவரும் சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடர்படையினரால் அனுமதிக்கப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா கூறினார். அத்துடன் அக்கப்பலின் பணிக் குழுவில் இருந்த ஏனைய 23 பேரையும் பாதுகாப்…

  7. மட்டக்களப்பு கோட்டைப்பூங்காபகுதியில் மாநகர சபையினால் மரங்கள் அழிப்பு 5 Views மட்டக்களப்பு மாநகரசபையின் கோட்டை பூங்கா பகுதியில் இன்று இளைஞர்களினால் மரநடுகை வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை கோட்டை பூங்கா பகுதிக்கு வருகைதந்த இளைஞர்கள் இந்த வேலைத்திட்டத்தினை முன்னெடுத்தனர். அண்மையில் குறித்த பகுதியில் காட்சியளித்த மரங்கள் வெட்டப்பட்டதாக முகநூல்கள் ஊடாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் மட்டக்களப்பு இளைஞர்களினால் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோர் வருகைதந்…

    • 5 replies
    • 500 views
  8. தமிழகத்தின் செயற்பாட்டால் ஈழத்தமிழர்கள் பாதிக்கப்பட்ட அதேவேளை, ஈழத்தமிழர்களின் செயற்பாட்டினால் தமிழகமும் பாதிக்கப்பட்டிருந்ததாக அரசியல் ஆய்வாளர் ஜெயபாலன் தெரிவித்துள்ளார். ஐ.பி.சி செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில் பழைய சிந்தனைகளுடன் மாத்திரம் நாங்கள் இருந்தால் புதிய போக்கில் காலடி எடுத்து வைக்க முடியாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், கொழும்பில் நிர்மாணிக்கப்படும் துறைமுக நகர திட்டம் உருவாக்கம் என்பது, ஈழத்தின் மறு உருவாக்கத்திற்கான விதையாகவே தாம் பார்ப்பதாக மேலும் கூறியுள்ளார். https://tamilwin.com/article/portcity-project-is-the-reconstruction…

    • 3 replies
    • 738 views
  9. இந்தியாவை மிரட்டி வரும் கருப்பு பூஞ்சை தொற்றுடன் அம்பாறையில் ஒருவர் அடையாளம் காணப்பட்டார் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பரவிவரும் கருப்பு பூஞ்சை எனப்படும் கிருமி தொற்றானது மிக வேகமாக பரவி வருகிறது.இந்நிலையில், குறித்த கருப்பு பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.அதன்படி, குறித்த நபர் அம்பாறை பகுதியில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று அதிகாரி வைத்தியர் பிரசாத் கொலம்பகே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த கிருமி அதிகரிக்குமாக இருந்தால், நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மாத்திரமன்றி, மரணங்…

  10. அதிகரித்து வரும் கொரோனா: இலங்கைக்கு செல்லவேண்டாம் என அமெரிக்கா எச்சரிக்கை ஜப்பான் மற்றும் இலங்கையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை அடுத்து, அந்தந்த நாடுகளுக்கு பயணம் செய்வதற்கு எதிராக பயண ஆலோசனை எச்சரிக்கையை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதற்கமைய, இந்த வாரம் மேற்கொண்ட மதிப்பாய்வு நடவடிக்கையை அடுத்து 4 ஆம் எச்சரிக்கை மட்டத்துக்குள் அமெரிக்கா இலங்கையினை உள்ளடக்கியுள்ளது. இதேவேளை ஜப்பானுக்கான அனைத்து பயணங்களையும் அமெரிக்கர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையம் எச்சரித்துள்ளது. அத்தோடு குறித்த நாட்டிற்குச் செல்ல வேண்டியவர்கள் அங்கு பயணம் செய்வதற்கு முன்னர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறும் அறிவுறுத்த…

  11. மொத்த விற்பனை சந்தையில் இராணுவத்தை ஈடுபடுத்தவும்-சுகாதாரப்பிரிவு பரிந்துரை 9 Views வவுனியா மொத்த வியாபார சந்தையில் இராணுவம் அல்லது விசேட அதிரடிப்படையினரை கடமையில் ஈடுபடுத்துமாறு சுகாதார பிரிவினரால் வவுனியா மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதாரபிரிவினர் தெரிவித்தபோது, நாட்டில் சந்தைகளின் மூலமாகவே தொற்று அதிகமாக பரவி வருகின்றது. வவுனியா மொத்தவியாபார சந்தை சிறிய இடமாக இருப்பதுடன், அதிகமான சனநடமாட்டம் உள்ள பகுதியாக காணப்படுகின்றது. குறித்த பகுதியில் காவல்துறை உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டாலும் காவல்துரையினரின் அறிவுரைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்காத நிலை ஏற்பட்டு…

  12. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை தொடர்ந்து பயன்படுத்தும் அரசு – #P2P இயக்கம் கண்டனம் 32 Views சிறீலங்கா அரசு தொடர்ச்சியாக பயங்கரவாத சட்டத்தினை பயன்படுத்தி தமிழ் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதையும் கைது செய்வதையும் வன்மையாக கண்டிக்கின்றோம் என பொத்துவில் தொடக்கம் பொலி கண்டி வரை மக்கள் பேரெழிச்சி இயக்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் குறித்த இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று (23.05.2021) மனித உரிமைகள் சிவில் சமூக செயற்பாட்டாளரும், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணைப்பாளர்களில் ஒருவருமான திரு.சபாரட்ணம் சிவயோகநாதன் (சீலன்) அவர்களின் திராய்மடு மட்டக்களப்பில…

  13. யாழ்ப்பாணத்தில்... இடம்பெற்ற, விபத்தில் இராணுவ சிப்பாய் உயிரிழப்பு யாழ்ப்பாணம்- ஊரெழு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இராணுவ சிப்பாய், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவதத்தில் வெலிமடையைச் சேர்ந்த குணசேகர (வயது 33) என்ற இராணுவ சிப்பாய் உயிரிழந்துள்ளார். யாழ்பாணத்தில் பணிப்புரிந்து வந்த அவர், கடந்த 19 ஆம் திகதி விடுமுறையில் பேருந்து ஊடாக தனது வீட்டை நோக்கி பயணித்தபோது, உரும்பிராய் பகுதியில் திடீரென வீதியின் குறுக்கே ஓடிய நாயினை அவதானித்த பேருந்து சாரதி உடனடியாக பிரேக் அடித்துள்ளார். இதன்போது பேருந்தில் இருந்த சிப்பாய், நிலைதடுமாறி வீதியில் விழுந்து படுகாயமடைந்த…

    • 1 reply
    • 337 views
  14. வடகிழக்கில் அபகரிக்கப்படும் தமிழர் நிலங்கள் – பாலநாதன் சதீஸ் 97 Views வாழ்விடங்களையும், வழிபாட்டிடங்களையும் இழந்து தமிழ் மக்கள் மீண்டும் நிர்கதியாய் நிற்கவேண்டிய நிலை இலங்கையில் அதிக தமிழ் மக்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் பரம்பலை மாற்றியமைக்கும் வகையில் திட்டமிட்டபடி இலங்கை அரசு, பல்வேறு அணுகுமுறைகளை கையாண்டு, தமிழ் மக்களின் காணிகளையும், வழிபாட்டு தலங்களையும் அபகரித்து வருகின்றது. யுத்தம் முடிவடைந்து பன்னிரு ஆண்டுகளை கடந்த நிலையிலும், இன்றும் இலங்கை நாட்டில் வேறு எந்தப் பகுதியிலும் இல்லாதவாறு வடக்கிலும், கிழக்கிலும் தமிழ் மக்களின் சொந்த நிலங்களையும், வழிபாட்டுத் தலங்களையும்…

    • 1 reply
    • 546 views
  15. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசுடன் பேச்சு – தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர் அறிக்கை 21 Views தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம் தொடர்பில் கட்சி, கொள்கை பேதம் கடந்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து அரசாங்கத் தரப்புடன் பேசியுள்ளமை எமக்கு ஒரு சிற்றாறுதலைத் தருகின்றது என தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர், உறவினர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர், உறவினர்கள் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், “தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் முற்போக்கு கூட்டணி ஆகிய கட்சிகளை சேர்ந்த 12 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்தின் அயலுறவுத்துறை அமைச்சரும் சிரேஸ்ட அரசியல் வாதியுமான தின…

  16. சிவில் சமூக செயற்பாட்டாளர்களை குறிவைத்துள்ள அரசு 20 Views பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணைத்தலைவர் சிவயோகநாதனிடம் (சீலன்) பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் இன்று 3 மணி நேர தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ளனர். சிவில் சமூக செயற்பாட்டாளரான இவரிடம் புலிகள் மீளுருவாக்கம் தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்ததை அவரின் குடும்பத்தினரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை 11 மணியளவில் அவரது வீட்டுக்கு, தம்மை பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் என அடையாளப்படுத்தி விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அவரது வரலாறு முழுவது கேட்டறிந்த அவர்கள் புலிகள் மீளுருவாக்கம் தொடர்பாக க…

  17. இலங்கையின்... புதிய சட்டமா அதிபராக தமிழர்! இலங்கையின் புதிய சட்டமா அதிபராக சஞ்சய் ராஜரத்தினத்தை நியமிக்க நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் முன்மொழிவை ஏற்று நாடாளுமன்றத் தெரிவுக்குழு இந்த ஒப்புதலை அளித்துள்ளதாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019, மே 10இல் சட்டமா அதிபராகப் பொறுப்பேற்ற ஜெனரல் தப்புல டி லிவேராவின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், பதில் மன்றாடியார் நாயகம், ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சய் ராஜரத்தினம் சட்டமா அதிபராகப் பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சோசலிசக் குடியரசாக அறிவிக்கப்பட்டதற்குப் பின்னர் இலங்கையின் சட்டமா அதிபரா…

  18. தொற்றுநோயியல் பிரிவில்... முடிவெடுப்பது, மூன்று வைத்தியர்கள் மட்டுமே! கொரோனா தொற்று பரவல் குறித்து சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவுக்கு உத்தியோகப்பூர்வமாக நியமிக்கப்பட்ட 10 வைத்தியர்களின் மூவர் மட்டுமே முடிவுகளை எடுத்து வருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் கொரோனா தொற்று தொடர்பான உத்தியோகப்பூர்வ தரவுகளை தொற்றுநோயியல் பிரிவு வெளியிட வேண்டும் என்றும் ஆனால் அவர்கள் இப்போது வரை தங்கள் வேலையைச் செய்வதாகத் தெரியவில்லை என்றும் அச்சங்கத்தின் தலைவர் அனுருத்த பாதெனிய தெரிவித்தார். கொரோனா தொற்று தொடர்பான அனைத்து முடிவுகளும் அவர்களால் எடுக்கப்பட வேண்டும் என அந்த மூன்று வைத்தியர்களிடமும் ஒரு அணுகுமுறை காணப்படுவதாகவும் அவர்கள் மற்ற மரு…

  19. துறைமுகநகர வாக்கெடுப்பில் சந்தேகம் – பொதுஜன பெரமுனவின் முறைப்பாடு குறித்து ஆராய்வு! கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பாக இடம்பெற்ற இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு குறித்து முறைப்பாடளிக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்களை கணக்கிடும் இலத்திரனியல் அமைப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் அதிகாரிகளால் நேற்றைய தினம் இந்த பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சபாநாயகரின் கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பாக கடந்த 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு இடம்பெற்ற…

  20. கொரோனா வைத்தியசாலைக்கு சென்று உணவின் தரம் குறித்து ஆராய்ந்த சாணக்கியன்! மட்டக்களப்பு பெரியகல்லாறு பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற்றுவரும் வைத்தியசாலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இன்று(ஞாயிற்றுக்கிழமை) திடீர் விஜயம் செய்திருந்தார். கொரோனா வைத்தியசாலையில் கொரோனா நோயாளர்களின் பிரச்சனை தொடர்பாகவும் வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகள் மற்றும் பிரச்சனைகள் குறித்தும் அவர் இதன்போது ஆராய்ந்துள்ளார். குறித்த வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து பலரும், இரா.சாணக்கியனின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தனர். இந்தநிலையில் குறித்த வைத்தியசாலைக்கு உணவினை விநியோ…

  21. இரண்டு வாரங்களாவது நாட்டை முழுமையாக முடக்க வேண்டும் – பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் கோரிக்கை இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் கட்டுப்படுத்த குறைந்த பட்சம் இரண்டு வாரங்களாவது நாட்டை முழுமையாக முடக்க வேண்டும் என்று பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.நாட்டில் அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடுகள் ஓரளவு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்திய போதும் தற்போதைய நிலைமையைக் கட்டுப்படுத்த அது போதாது என்று பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண ஊடகங்களிடம் தெரிவித்தார். நாம் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதால் அனைவரும் சிந்தித்துச் செயற்படுவதுடன், நாட்டுக்கு ஏதாவது நல்லது செய்யும்படியும் அவர…

  22. சுகாதார செயலாளரின் முன்னெச்சரிக்கை கடிதம் – சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம் 8 Views சுகாதாரத் துறைகளில் பணியாற்றும் அதிகாரிகளுக்குச் சுகாதார செயலாளரினால் வெளியிடப்பட்ட முன்னெச்சரிக்கை கடிதமானது தொற்றுநோய் தொடர்பான உண்மைத் தகவல்களை மறைக்கும் முயற்சியாகும் என சுதந்திர ஊடக இயக்கம் கண்டித்துள்ளது. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வெகுசன ஊடகங்களின் செய்தி வெளியிடுதல் தொடர்பில் அரச அதிகாரிகளுக்கு தாக்கத்தை விளைவிக்கும் ஸ்தாபன விதிக் கோவைகளை மேற்கோள் காட்டி, அவற்றை புறக்கணிக்கும் அனைத்து அதிகாரிகளுக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரியப்படுத்தும் சுகாதாரத் துறை செயலாளரினால் ஒப்…

  23. கொரோனா தடுப்பு மருந்து – தமிழர் தாயகப் பகுதிகள் அரசாங்கத்தால் புறக்கணிப்பு 7 Views இலங்கையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அரசாங்கத்தின் தடுப்பு மருந்துகள் வழங்கல் திட்டத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இலங்கையில் இது வரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 161,242 ஆக அதிகரித்துள்ளது. அதே வேளை மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 1,133ஆக உயர்வடைந்துள்ளது. இதன் காரணமாக இலங்கையில் கொரோனாவுக்கான தடுப்பு ஊசி ஏற்றும் செயற்பாடுகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வடகிழக்கு மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி ஏற்றுவதற்கான எந்த…

  24. மரண சடங்கில் கலந்துகொண்டவருக்கு கொரோனா- குடும்பத்தினர் உள்ளிட்ட 8 பேர் தனிமைப்படுத்தலில்! யாழ்ப்பாணம்- பருத்தித்துறையில் இடம்பெற்ற மரண சடங்கில் கலந்துகொண்ட ஒருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதை தொடர்ந்து உயிரிழந்தவரின் குடும்பத்தினர் உள்ளிட்ட 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அண்மையில் பருத்தித்துறையில் நடைபெற்ற மரண சடங்கில் கலந்து கொண்ட ஒருவருக்கு பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்பின்னர்,அவருடன் தொடர்பினை பேணியவர்களை இனங்கண்ட சுகாதார பிரிவினர், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தினர். அதாவது மரணமானவரின் குடும்ப அங்கத்தினர், மரண சடங்கு கிரிகைகள் செய்த குருக்கள், அவருடைய உதவியாளர் உள்ளிட்ட 8 பேரை தனிமைப்படுத்தலுக்க…

    • 1 reply
    • 497 views
  25. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: கைது செய்யப்பட்ட 10 பேரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு 12 Views மட்டக்களப்பு கல்குடா காவல்துறை பிரிவிலுள்ள நாகர்வட்டை கடற்கரையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு கடந்த 18 ம் திகதி சுடர் ஏற்றிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 10 பேரையும் எதிர்வரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 18 ம் திகதி நீதிமன்ற தடை உத்தரவை மீறி கல்குடா காவல்துறை பிரிவிலுள்ள நாகர்வட்டை கடற்கரையில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கு தீபச் சுடர் ஏற்றி கடலில் பூக்களைத் தூவி அஞ்சலி செலுத்திய அதனை படம் எடுத்து முகநூலில் பதிவு செய்த 10 பேரை பயங்கரவாத …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.