ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143275 topics in this forum
-
மார்ச் 2ஆம் திகதியன்று நாடாளுமன்றத்தைக் கலைத்ததன் பின்னரான 6ஆம் திகதியன்று, இடைக்காலக் கணக்கறிக்கை மூலம் 12.29 பில்லியன் ரூபாயை அரசாங்கம் இரகசியமான முறையில் நிறைவேற்றியுள்ளதென, மக்கள் விடுதலை முன்னணி குற்றஞ்சாட்டியது. கொழும்பில் நேற்று (06) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி, நிதி அமைச்சு வெளியிட்டுள்ள அரச நிதி நிலைவரம் தொடர்பான அறிக்கையில் இதனைக் காணமுடிவதாகக் கூறினார். இடைக்காலக் கணக்கறிக்கை ஊடாக அரச செலவீனங்களுக்கான நிதி ஒதுக்கப்படுமாயின், அது தொடர்பில் நாடளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்த வேண்டுமெனத் தெரிவித்த அவர், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில், 12.29 பில்லியன் …
-
- 0 replies
- 480 views
-
-
’சமாதானத்தை ஏற்படுத்த தவறும் பட்சத்தில் எதிர்காலம் இல்லை’ அரசியல் தீர்வின் மூலம் ஒரு நிலையான சமாதானத்தை ஏற்படுத்த தவறும் பட்சத்தில் இந்நாட்டுக்கு எதிர்காலம் இல்லையென, எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார். ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான புதிய வதிவிடப் பிரதிநிதியான ஹனா சிங்கர் மற்றும் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு, இன்று (08) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டார். …
-
- 2 replies
- 607 views
-
-
’சம்பந்தன் விலக வேண்டும்’ புதிய அரசமைப்புத் தொடர்பான பணிகளை ஆரம்பிக்க முடியாவிடின், இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து இரா. சம்பந்தன் விலகுதல் நல்லது என, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தன்னுடைய டுவிட்டர் கணக்கில், பெரும்பான்மையினத் தலைவர்கள் மீது கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தி, அமைச்சர் நேற்று (17) வெளியிட்ட டுவீட்களிலேயே, இக்கருத்தை அவர் தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான முரண்பாடுகள், தமிழ் மக்களின் பிரச்சினை அன்று எனத் தெரிவித்த அமைச்சர், தமிழ் மக்களின் முன்னுரிமைப் பட்டியலில், இனப்பிரச்சினையே முதலிடம் வகிக்கிறது எனத் தெ…
-
- 0 replies
- 155 views
-
-
“ஜனநாயகவாதியான தந்தை செல்வாவின் பெயரை சொல்லிக்கொண்டு, வேடிக்கை பார்க்காமல் தமிழரசுக் கட்சியின் நிர்வாக செயலாளர் குலநாயகம், இரா.சம்பந்தனையும், சுமந்திரனையும் கட்சியில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் குலநாயகம், தன்னுடைய கட்சி சார்ந்த விடயங்களை ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தால், அது அவர் கட்சியின் பிரச்சினை என்று எனது கருத்தை கூற வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. ஆனால் அவர் என்னையும் சுமந்திரனையும் ஒப்பிட்டு என்னை விட ஒரு மோசமான கருத்தை சுமந்திரன் கூறியுள்ளதாக தெரிவித்துள்…
-
- 18 replies
- 2.3k views
- 1 follower
-
-
’சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்து என்பதை ஜனாதிபதி வெளிப்படுத்த வேண்டும்’ -செ.கீதாஞ்சன் “ஜனாதிபதி போர் காலத்தில் பாதுகாப்பு செயலாளராக இருந்த காரணத்தினால், நாட்டின் ஜனாதிபதி என்றவகையில் படையினரிடம் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படையாக தீர்வு காணவேண்டியுள்ளது” என்று, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். முள்ளியவளை தண்ணீரூற்று பகுதியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில், நேற்று (26), கட்சி தொண்டர்களுடனான சந்திப்பு ஒன்றினை நடத்தியுள்ளார் இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு …
-
- 0 replies
- 422 views
-
-
Editorial / 2019 ஓகஸ்ட் 22 வியாழக்கிழமை, பி.ப. 01:43 -மு.தமிழ்ச்செல்வன் கடந்த ஆட்சிக் காலத்தில் இலங்கை மீது இருந்த சர்வதேசத்தின் அழுத்தம், தற்போது இல்லையென, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் தெரிவித்தார். இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் முதன்மை செயலாளரும் அமைதி, நல்லிணக்கத்துக்கான ஆலோசகருமான அமி ஓ பிரின், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவருமான மு. சந்திரகுமார் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு, சந்திரகுமாரின் கிளிநொச்சி அலுவலகத்தில், இன்று (22) நடைபெற்றது. இதன்போதே, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு சந்திரகுமார் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொ…
-
- 0 replies
- 728 views
-
-
உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான், தன்னை ஒருமுறை சந்தித்ததாக, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கூறினார். ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதல்கள் தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு முன்னாள், இன்று சாட்சியமளிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், 2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்கள் முடிவடைந்த பின்னர், அவருடைய அலுவலகத்துக்கு வருமாறு, சஹ்ரான் தனக்கு அழைப்பு விடுத்திருந்ததாகவும் அரசியல் ரீதியில், மேலும் சில முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் இணைந்து, அப்போது அவரைச் சந்தித்துப் பேசியதாகவும் கூறினார். அப்போது சஹ்ரான், தேசிய தௌஹ…
-
- 4 replies
- 1.2k views
-
-
’சி.விக்கு எதிரான நடவடிக்கை தமிழர்களுக்கு செய்யும் துரோகம்’ “வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக, இலங்கைத் தமிழரசுக் கட்சி எடுத்திருக்கும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கின்றோம். இந்த நடவடிக்கை, அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையே என்பதை இலங்கைத் தமிழரசுக் கட்சி மறுதலிக்க முடியாது” என, முற்போக்கு தமிழ்த் தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.விஜயகாந், நேற்று ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து பதவியைப் பறிக்க முற்பட…
-
- 0 replies
- 365 views
-
-
’சிங்களத்தில் தான் முதலில் எழுதவேண்டுமெனச் சட்டமில்லை’ க.கமல் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் காட்சிப்படுத்தப்படும் பாதாகைகளில், முதலில் தமிழில் எழுதுவது தவறில்லை எனத் தெரிவித்துள்ள அமைச்சர் மனோ கணேசன், சிங்களத்தில்தான் முதலில் எழுதவேண்டும் எனச் சட்டமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடக்கில் காட்சிப்படுத்தப்படும் பதாகைகள் குறித்துத் தெரிவித்த கருத்துத் தொடர்பில், நேற்று (21) கருத்து வெளியிடுகையிலேயே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். "வடக்கு, கிழக்கு பகுதிகளில் தமிழ் மக்களே அதிகம் வாழ்கின்றனர். எனவே, அப்பகுதியில் பாதாகைகளைக் காட்சிப்படுத்தும் …
-
- 0 replies
- 309 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தன்னுடன் நட்பு பாராட்டுவது போலவும் அன்புடன் பேசுவது போலவும் வெளிப்படுத்தி, தான் விடுத்த கோரிக்கைகளைக் கணக்கிலெடுக்காமல் உதாசீனம் செய்தார் என, வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சிரேஷ்ட ஊடகவியலாளராக குசல் பெரேராவின், "மஹிந்த - சிங்கள செல்பி" என்ற நூல் வெளியீடு நேற்று இடம்பெற்ற போது, அதில் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். குறித்த நூலில், மஹிந்த ராஜபக்ஷ, எப்போதும் நட்புறவுடனே உரையாடுவார் எனவும், அவர் எதற்கும் மறுப்புத் தெரிவிப்பதில்லை என்றும், தனது மனசாட்சியுடன் கூட அவர் மறுப்புக் கூறியிருக்க மாட்டார் எனவும் எழுத்தாளர் குறிப்பிட்ட விடயத்தைக் மேற்கோள…
-
- 0 replies
- 357 views
-
-
’சிறு குழுவினரிடம் பொறுப்பைக் கையளித்தமையே குற்றம்’ "ஒரு சிறு குழுவினரிடம் முழுப்பொறுப்பையும் கையளித்தமையே நாம் செய்த பெரும் குற்றமாகும் என்பதை நாம் அனைவரும் ஒத்துக்கொள்ள வேண்டும்" என, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். அவர், ஊடகங்களுக்கு நேற்று அனுப்பியிருந்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருந்தது. இலங்கைவாழ் தமிழ் மக்களுக்கும், உலகளாவிய ரீதியில் பரந்துவாழும் இலங்கை தமிழ் மக்களுக்கும் விடுக்கும் அவசர அழைப்பு இதுவாகும். உணர்ச்சிவசப்பட்டும், பொய் அறிக்கைகள் மூலமும் பாதிக்கப்படாது, உண்மையை அறிந்துகொள்ள வேண்டுமென்பதற்காகவே இந்த அழைப்பு விடுக்கப்படுகிறது எனவும் அதில் குறிப்பி…
-
- 0 replies
- 246 views
-
-
தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் வகையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு சிவாஜிலிங்கத்துக்கு தேர்தில்ல போட்டியிடும் நோய் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, அதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்றார். ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஒழுங்குபடுத்தப்பட்ட மாபெரும் பிரசாரக் கூட்டம் இன்று (13) பிற்பகல் நல்லூரில் உள்ள சங்கிலியன் பூங்காவில் ஆரம்பமானது. இந்த கூட்டத்தில் உரையாற்றியபோது, இதனை தெரிவித்த மாவை, அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், “2010ஆம் ஆண்டும் ஜனாதிபதி தேர்தலில் சிவாஜிலிங்கம் போட்டியிட்டார். இப்பொழுது…
-
- 3 replies
- 772 views
-
-
’சீனாவுடன் செய்தது சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் அல்ல’ சீனாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தமானது, சுதந்திர வர்த்தக உடன்படிக்கை அல்ல எனத் தெரிவித்த அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ரமேஷ் பத்திரண, அது இருதரப்பு ஒப்பந்தம் மாத்திரமே என்று குறிப்பிட்டார். “சீன வெளிவிவகார அமைச்சருடன் அண்மையில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தமானது, கடந்த நல்லாட்சியில் கையெழுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களுள் ஒன்றா?“ என, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (11) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர், சுதந்திர நாடு என்ற ரீதியில் இ…
-
- 0 replies
- 253 views
-
-
’சுமந்திரனின் முடிவுகளால் கூட்டமைப்புக்கு சரிவு’ “போர்முடிவடைந்த பின்னர் ‘ஒற்றுமை’ என்பதே தமிழர்களுக்கு எஞ்சியிருக்கும் பலம் பொருந்திய ஆயுதமாகும். அதனை சிதைப்பதற்கு பேரினவாதிகள் வழிமீது விழிவைத்து காத்திருக்கின்றனர். எனவே பிரித்தாளும் சூழ்ச்சிக்குள் சிக்கும் வகையில் தமிழ்க்கட்சிகள் தீர்மானங்களை எடுக்ககூடாது” என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார். 2020 ஏப்ரல் இறுதி வாரத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் கொழும்பு, கம்பஹா மற்றும் மலையகத்தில் போட்டியிடுவது தொடர்பில் பரீசிலிக்கப்பட்டுவருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊ…
-
- 3 replies
- 827 views
-
-
’சுமந்திரனுக்கு ஆதரவு வழங்குவது யார்?’ க. அகரன் “தமிழ்ச் சமூகமானது, ஊடக சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக, பல ஊடகவியலாளர்களைப் பலி கொடுத்திருக்கின்றது. ஊடக சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் தமிழ் மக்களும் தமிழ் ஊடகவியலாளர்களும் கணிசமான பங்கைச் செலுத்தியிருக்கின்றார்கள். ஆனால், அண்மையில் அரசியலுக்கு வந்த சுமந்திரன், ஊடகங்கள் திருந்த வேண்டும் அல்லது திருத்தப்படுவீர்கள் என்று மிரட்டுவதானது, அதிகாரத்தின் உச்சாணிக் கொப்பிலிருந்து அவர் பேசும் பேச்சாக இருக்கின்றது” என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், இவர் யாருடைய ஆதரவின் பேரில் இத்தகைய மிரட்டல்களை விடுகிறார் எனவும் கேள்வியெழுப…
-
- 0 replies
- 513 views
-
-
-எஸ்.நிதர்ஷன் ஈபீஆர்எல்எப் அமைப்பின் தலைவரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் இணைப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் அரசியல் விபச்சாரி என, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் - கொக்குவிலில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போது, ஐ.நாவுக்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வரைபில் இனப்படுகொலை என்ற வசனத்தை உள்ளடக்கவில்லை என்றும், சர்வஜன வாக்கெடுப்பை கNஐந்திரகுமார் விரும்பவில்லை என்பது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை சுரேஷ் பிரேமச…
-
- 1 reply
- 627 views
-
-
பார்வையாளனாக அடிக்கடி களத்திற்கு வந்துபோனாலும் நீண்ட காலத்திற்குப்பின் மீண்டும் களஉறவுகளுடன்தொடர்பு கொள்ளச் சந்தர்ப்பம்கிட்டியது. இணையத்தில் உலாவரும்போது தற்செயலாக ’சுவடி’ suvadi எண்மிய நூலகம் பற்றிய தகவல்களை அறியக்கூடியதாக இருந்தது. அழிவின் அதி உச்சங்களைக் கண்ட எம் சமுதாயத்தின் இளையதலைமுறையினர் தாங்கள் தலை நிமிர்ந்து நிற்பதற்குத் தேவையான கல்வி அறிவைப் பெற்றுக் கொள்ள எம்மாலான உதவிகளைச் செய்யவேண்டியது எம் ஒவ்வொருவரதும் கடமையாகும் இந்த வழியில் அவர்கள் அவர்கள் எம்மிடமிருந்து பணஉதவியை எதிர்பார்க்கவில்லை. ஆனால் தங்களுக்குத் தேவையான தொழில்நுட்ப உதவிகள் ஆலோசனைகள் மற்றும் நூலகத்திற்குத் தேவையான மின்னாவணமாக்கப்பட்ட நூல் சஞ்சிகை பத்திரிகை பிரசுரம் அறிக்கைகள் ஆய்வ…
-
- 4 replies
- 1.2k views
-
-
டி.ஷங்கீதன் கொழும்பில் வாழ்கின்ற மலையக இளைஞர், யுவதிகள், ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவதற்குத் தயாராக வேண்டும் என்று, விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சர் வே.இராதாகிஷ்ணன் தெரிவித்தார். அதேபோன்று கொழும்பில் வாழ்கின்ற மலையக இளைஞர், யுவதிகளுக்கு உரிய வகையில் விடுமுறை வழங்கி வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு, கொழும்பு வாழ் வர்த்தகர்களும் முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் வெற்றியை உறுதி செய்யுமுகமாக, தமிழ் முற்போக்குக் கூட்டணி, கொழும்பு வர்த்தகர்களுடன் ஏற்பாடு செய்திருந்த சந்திப்பு, கொழும்பு தாஜ்சமுத்ரா விருந்தகத்தில், நேற்று (31) நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரைய…
-
- 1 reply
- 438 views
-
-
’ஜனாதிபதி தந்தை’ ... ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மூத்த மகளான சதுரிகா சிறிசேனவால் எழுதப்பட்ட 'ஜனாதிபதி தந்தை' நூல், கொழும்பு பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (15) காலை வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்துகொண்டார். http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/ஜனாதிபதி-தந்தை/46-203844
-
- 1 reply
- 653 views
-
-
’ஜனாதிபதி தான் முதலாவது சாட்சி’ Editorial / 2018 ஒக்டோபர் 01 திங்கட்கிழமை, மு.ப. 05:30 Comments - 0 -எஸ்.நிதர்ஷன் இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போர் தொடர்பாக உண்மைகள், தமக்குத் தான் தெரியும் என ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தெரிவித்துள்ள நிலையில், உண்மையைக் கண்டறிவதற்கான பொறிமுறையில், ஜனாதிபதியே முதலாவதாகச் சாட்சியமளிக்க வேண்டும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது. அத்தோடு, உண்மையைக் கண்டறியும் வரை, பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பான முயற்சிகளை எதிர்ப்பதாகவும், அக்கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனது இல்லத்தில் நேற்று (30) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, செய்தியாளர…
-
- 0 replies
- 602 views
-
-
’ஜெனீவா செல்ல தயங்கமாட்டோம்’ “முஸ்லிம் சமூகத்துக்கு உள்நாட்டில் எந்த நியாயமும் கிடைக்காவிடின், ஜெனீவா வரை சென்று நீதி கேட்பதற்கும் நாங்கள் தயங்கப்போவதில்லை. அமைச்சுப் பதவியை தூக்கி எறிவதற்கும் நான் தயாராகவே உள்ளேன்” என்று, கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார். அம்பாறை, சாய்ந்தமருதுவில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் பிரதித்தலைவர் கலாநிதி ஜெமீலின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இலவச மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு மேலும் கூறிய அவர், “முஸ்லிம் சமூகத்தின் மீதான வன்முறைகளும் தாக்குதல்களும் உடனடியாக நிறுத்தப்படல்…
-
- 2 replies
- 444 views
-
-
’ஞானசாரரை கண்டுபிடிக்க இராணுவத்தை அனுப்புவேன்’ பொதுபல சேனா அமைப்பின் ஞானசார தேரரைக் கண்டுபிடிப்பதற்கு, தேவைப்படுமாயின் இராணுவப் புலனாய்வுப் பிரிவையும் பயன்படுத்த உத்தரவிடவுள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/ஞானசாரரை-கண்டுபிடிக்க-இராணுவத்தை-அனுப்புவேன்/150-198387
-
- 0 replies
- 259 views
-
-
தடுப்பூசி ஏற்றுவதால் பாலியல் பலவீனம் மற்றும் மலட்டுத்தன்மை ஏற்படுவதாக ஒருசிலர் கூறும் கருத்துக்களுக்கு எந்தவொரு விஞ்ஞான ரீதியான அடிப்படையும் இல்லையென கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சமுதாய மருத்துவ விஞ்ஞானம் தொடர்பான பேராசிரியர் மஞ்சு வீரசிங்க சுட்டிக்காட்டினார். விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்படாத அவ்வாறான தவறான கதைகளுக்கு ஏமாறாமல் புத்திசாதுரியமாக நடந்து கொள்வதன் மூலம் நபர்களையும் அதேபோல் நாட்டையும் பாதுகாக்க முடியும் என்றும் குறிப்பிட்டார். தடுப்பூசி ஏற்றலுக்கு எதிராக ஒரு சிலர் வர்த்தக நோக்கங்களுக்காக பரப்பி வரும் மூடநம்பிக்கைகளுக்கு ஏமாறாமல் சந்தர்ப்பம் கிடைக்கும் போது இன்னும் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாத இளைஞர்கள் முதலாம் கட்ட கொவிட் தடுப்பூசியை…
-
- 0 replies
- 255 views
-
-
தனித் தமிழ் தொகுதி அல்லது முஸ்லிம் தொகுதி என்ற அடிப்படையிலான தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பான சவாலை வெற்றிகொள்ள முடியாதெனத் தெரிவித்த தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார், இத்தேர்தல் முறைமை மாற்றத்தில், தமிழ்ப் பேசும் சிறுபான்மைச் சமூகம் பாரிய சவாலை எதிர்நோக்கியுள்ளது என்றார். இன்று இந்த நாட்டில், புதிய தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பான கலந்துரையாடல்கள் ஆரம்பித்திருக்கின்ற நிலையில், எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலுக்கான முறைமையாக மட்டும் இதனை நோக்க முடியாது என்றும் மாகாண சபை தேர்தலுடன், இனி வரும் பொது த் தேர்தலுக்கான தேர்தல் முறைமையும் இதனுடன் தொடர்புபடுகின்றது என்றும் அவர் எடுத்துரைத்தார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர…
-
- 0 replies
- 472 views
-
-
-சுப்பிரமணியம் பாஸ்கரன் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை, இலங்கை மீறினாலும் அதை நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென்ற தமிழரசு கட்சியின் தீர்மானமானது, வெறும் கண்துடைப்புக்கானதென, கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளின் இணைப்பாளர் பத்மநாதன் கருணாவதி குற்றஞ்சாட்டினார். கிளிநொச்சியில், இன்று (24) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், இலங்கை அரசாங்கம், தமது பிள்ளைகள் தொடர்பான நீதியை பெற்று தராதெனவும் ஓ.எம்.பி அலுவலகத்தை நிறுவி, அதன் ஊடாக சில உதவிகளை வழங்கி, தம்மை ஏமாற்ற நினைப்பதாகவும் சாடினார். ஆனால், தாம் சர்வதேசத்தையே நம்பி நிற்பதாகத் தெரிவித்த அவர், இலங்கை அரசாங்கத்…
-
- 0 replies
- 319 views
-