ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143319 topics in this forum
-
தமிழர்கள் கொல்லப்பட்டபோது கொழும்பு பேராயர் மௌனம் காத்தது ஏன்? – ஸ்ரீதரன் கேள்வி இறுதி யுத்தத்தின்போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டபோது கொழும்பு பேராயர், ஏன் மௌனமாக இருந்தார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் பேசிய ஸ்ரீதரன், அவரது மௌனம் தமிழர்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது எனவும் சுட்டிக்காட்டினார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மீது, மதம் கடந்து, மதத் தலைவர் என்ற அடையாளத்தை கடந்து மெல்கம் ரஞ்சித் ஆண்டகையினால் உதிர்க்கப்படும் வார்த்தைகள் இன்று பல மக்களுடைய புருவங்களை உயர்த்த வைத்துள்ளது என்றும் ஸ்…
-
- 1 reply
- 376 views
-
-
மலையக மக்கள் மொழியுரிமைக்கு வலுச்சேர்க்க வேண்டும் – துரைசாமி நடராஜா 112 Views ஒரு மனிதனின் உரிமைகளுள் மொழியுரிமை முக்கிய இடம் பெறுகின்றது. இவ்வுரிமையை உரியவாறு பாதுகாத்து முன் செல்வதால் சாதக விளைவுகள் பலவும் ஏற்படுகின்றன. எனினும் மலையகத்தைப் பொறுத்தவரையில், மொழியுரிமை பல்வேறு சந்தர்ப்பங்களில் மீறப்பட்டு வருகின்றது என்பதோடு, மக்களும் இது குறித்த விழிப்புணர்வு இல்லாதவர்களாக இருந்து வருகின்றமை வருந்தத்தக்க விடயமாக உள்ளது. மனிதனின் கண்டுபிடிப்புக்களுள் மொழி என்பது மிகச் சிறந்த கண்டுபிடிப்பாக விளங்குகின்றது. ஆதிகாலத்தில் சைகைகளின் மூலமாக கருத்துக்களை வெளிப்படுத்திய மனிதர்கள், இக்கட்டான நிலைமைகள் பலவற்றையும் எதிர்கொள்ள வேண்ட…
-
- 1 reply
- 388 views
-
-
இலங்கையில் 154 வருட பழைமையான Finlays தோட்டத்தில் உச்ச வரம்புகளை தகர்த்து முன்னோக்கி வந்த இரு பெண்கள் சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடுவதில் உலகெங்கிலும் உள்ள மக்களுடன், வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் பெண்கள் மற்றும் சிறுமிகள் அளித்த மகத்தான மற்றும் அத்தியாவசிய பங்களிப்புகள் குறித்து ஒரு கூட்டு புரிதலை உருவாக்க ஆராம்பிக்கிறது. பாலினத்தைப் பொருட்படுத்தாமல் சம உரிமைகள் மற்றும் வாய்ப்புக்களை மேம்படுத்துவதில் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்று, நிர்வாகத்தின் இடத்தில் உள்ளது. பெண்கள் இத்தகைய முக்கியமான பங்கினை வகிக்கும் பல துறைகளில், விவசாயம் மற்றும் தோட்டத் துறை ஆகியன அடங்கும், இருப்பினும், பொதுவாக, இங்கு கூட அவை பெரும்பாலும் கள நடவடிக்கைகளில் மட்டுமே உள்ளன, நிர்வாகப…
-
- 10 replies
- 1.3k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள், பிரித்தானியாவின் இலங்கைக்கான தூதுவர் சாரா ஹமில்டனை உத்தியோகப்பூர்வமாக சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்த சந்திப்பு இன்றையதினம் கொழும்பில் இடம்பெற்றுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோ கட்சியின் ஊடக பேச்சாளர் கு.சுரேந்திரன் தெரிவித்துள்ளார். குறித்த சந்திப்பின் போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் தொடர்பான விடயங்கள், அரசியல் தீர்வு, மாகாணசபை தேர்தல்கள், நில அபகரிப்பு, அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பேசப்பட்டதாகவும், குறித்த சந்திப்பு சுமார் இரண்டு மணி நேரம் இடம்பெற்றிருந்ததாகவும் கு.சுரேந்திரன் மேலும் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில் ரெலொ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன்…
-
- 0 replies
- 425 views
-
-
இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல’ – க.வி.விக்னேஸ்வரன் 97 Views இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல. தமிழர்கள் வந்தேறு குடிகள் அல்ல. அவர்கள் இன்று நாட்டைத் துண்டாடக் கேட்கவில்லை” என வாரத்துக்கொரு கேள்வி என்ற பதிவில் நீதியரசரும் நாடாளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் அவர் வழங்கியுள்ள கேள்வி பதிலில், கேள்வி: இந்து சமுத்திர வல்லரசுகளின் போட்டியில் சம்பந்தப்பட்ட தரப்புக்கள் அதிகாரப் பகிர்வு என்ற பெயரில் பிரிவினையைத் தூண்டப் பார்க்கின்றன என்று இலங்கை ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ச பகிரங்கமாகக் கூறியுள்ளாரே. அது பற்றிய உங்கள் பார்வை என்ன? பதில்: மேன்மைதகு ஜனாதிபதி அவர்களின் தப்பான சிந்தனையின் வ…
-
- 4 replies
- 926 views
-
-
மன்னார் மாவட்ட முன்னாள் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை காலமானார் மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை காலமானார். நோய்வாய்ப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் திருச்சிலுவை கன்னியர் மட வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த அவர் தனது 80 ஆவது வயதில் இன்று காலமானார். இறுதிக் கிரியைககள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று மன்னார் ஆயர் இல்லம் தெரிவித்துள்ளது. மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை ஆயர் பணியில் 25 வருடங்களை நிறைவுசெய்து இன்று வெள்ளிவிழாக் காண்கிறார். இவர் மன்னார் மறைமாவட்டத்தின் ஆயராக 1992ஆம் ஆண்டு முதல் …
-
- 58 replies
- 5.3k views
-
-
மட்டக்களப்பிற்கு ஒதுக்கப்பட்டதை எப்படி களுத்துறைக்கு மாற்ற முடியும் - நாடாளுமன்றத்தில் சீறினார் சாணக்கியன்! By கிருசாயிதன் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த இருதயவியல் பிரிவின் ஆய்வகத்திற்கான (Cardiology Unit - Cardiac Catheterization Laboratory) இதய வடிகுழாய் மற்றும் ஆஞ்சியோகிராம் கருவியினை களுத்துறை மாவட்டத்திற்கு எப்படி ஒதுக்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பியுள்ளார்.நாடாளுமன்றத்தில் நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற கேள்வி நேரத்தின் போதே அவர் இவ்வாறு கேள்வியில் எழுப்பியுள்ளார்.இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “சுகாதார அமைச்சரினை சில காலங்களுக்கு முன் ச…
-
- 0 replies
- 547 views
-
-
இலங்கைக்காக இந்தியாவிடமிருந்து கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸைப் பெறும் தீவிர முயற்சியில் யுனிசெப் நிறுவனம்! இந்தியாவிடமிருந்து கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸைப் பெறுவதற்கு ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) இந்தியாவுடன் தீவிர பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான துணை பிரதிநிதி எம்மா ப்ரிகாம், கோவாக்ஸ் வசதி மற்றும் யுனிசெஃப் ஆகியவற்றின் பங்காளிகள் இந்த விவகாரத்தில் மிக தீவிரமாக செயற்படுகின்றனர் எனத் தெரிவித்தார். இலங்கைக்கான அடுத்தக்கட்ட தடுப்பூசிகளைப் பெறுவதற்கு முடிந்தவரை விரைவுபடுத்தும் முயற்சியாக, இந்திய அரசாங்கத்துடனும் சீரம் இன்ஸ்ட்டியூட்…
-
- 0 replies
- 254 views
-
-
கடந்த சில மாதங்களாக யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் களவாடப்பட்ட சுமார் 50 லட்சம் ரூபா பெறுமதியான பல உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறையினர், சந்தேக நபர்களை நாளையதினம் நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளனர். நிறுவனம், கடை, தேவாலயம் மற்றும் வீடு உள்ளடங்கலாக 7 இடங்களில் கொள்ளையிடப்பட்ட உபகரணங்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். யாழ்ப்ப…
-
- 0 replies
- 431 views
-
-
நாடு கடத்தப்பட்டு கைதானவர்களிடம் தீவிர விசாரணை- முக்கிய ஆதாரங்கள் சிக்கின! ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட இருவர் அண்மையில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டனர். இந்நிலையில், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட மடிக்கணினிகளை ஆய்வுக்கு உட்படுத்தியதில் குறித்த இருவரும் தீவிரவாத போதனைகளை முன்னெடுத்திருந்தமை தெரியவந்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் வசிக்கும் இலங்கை குடும்பங்களுக்கே இவர்களால் தீவிரவாத சித்தாந்தங்கள் குறித்த போதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவிக்கையில், “தீவிரவாதத்தைப் பிரசாரம் செய்ததற்காக ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட பின்னர் மாவனெல்…
-
- 0 replies
- 496 views
-
-
நாட்டின் பெயர் தனி சிங்கள பெயராகவும் சிங்களம் அரச கரும மொழியாகவும் அறிவிக்க வேண்டும் - சிரேஷ்ட பௌத்த மத தலைவர்கள் (இராஜதுரை ஹஷான்) உத்தேச புதிய அரசிலமைப்பில் நாட்டின் பெயர் தனி சிங்கள இனத்தை பிரநிதித்துவப்படுத்தவதாக காணப்பட வேண்டும். சிங்கள மொழி மாத்திரம் அரசகரும மொழியாக அறிவிக்கப்படுவதுடன், தமிழ், ஆங்கிலம் மொழிகள் இரண்டாம் மொழியாக காணப்பட வேண்டும் என்று சிரேஷ்ட பௌத்த மத தலைவர்கள் யோசனைகளை முன்வைத்துள்ளார்கள். அதிகார பகிர்வு எவ்வழியிலும் இடம் பெறகூடாது. ஒற்றையாட்சியின் அம்சங்களை பாதுகாக்க விசேட பொறிமுறை செயற்படுத்தப்பட வேண்டும் எனவும் பௌத்த மத சிரேஷ்ட தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். உத்தேச புதிய அரசியலமைப்பு தொடர்பிலான நிபுணர் குழுவினரிடம் முன்வைத்த…
-
- 11 replies
- 1.5k views
-
-
தனித்தமிழீழ நாட்டை இலங்கைத் தீவில் அமையுங்கள் என்றே பௌத்த தேரர்கள் கூறுகின்றனர் – மனோ தனித்தமிழீழ நாட்டை இலங்கைத் தீவில் அமையுங்கள் என தமிழர்களுக்கும் அதற்கு உதவுங்கள் என சர்வதேச சமூகத்துக்கும் தேரர்கள் மறைமுகமாகக் கூறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் குறித்த இன்று (திங்கட்கிழமை) முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள அவர், “கறுப்பு ஜூலை புகழ் கொண்ட ஒரு தேரர் உட்பட பெளத்த தேரர்களின் குழு மூன்று பிரேரணைகளை தேசிய அரங்கில் முன் வைத்துள்ளது. அதன்படி, நாட்டின் பெயரை ‘சிங்களே’ என மாற்றனும், அதிகார பரவலாக்கம் வேண்டவே வேண்டாம், சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி ஆகிய பிரேரணைகளை முன்வைத்துள்ளன. அதாவது இந்த தேரர்கள் மறைமுகமாக, ‘உங்களுக்கு இங்க…
-
- 1 reply
- 523 views
-
-
இலங்கையில் சீனத் தடுப்பூசிகள் இன்று முதல் பாவனைக்கு! இலங்கையில் இன்று (திங்கட்கிழமை) முதல் சீனத் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முன்னர் கூறியதைப்போன்று இலங்கையில் உள்ள சீனப் பிரஜைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். சீனாவிலிருந்து 6 இலட்சம் சினோபார்ம் கொரோனா தடுப்பூசிகள் கடந்த வாரம் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன. இதேவேளை இலங்கை மக்களுக்கு இந்த தடுப்பூசிகளை செலுத்துவது குறித்து விசேட நிபுணர் குழுவினால், ஆராயப்பட்டதன் பின்னர் தீர்மானிக்கப்படும் என்று ஔடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தெரிவித்துள்ளது. எனினும் இந்தத் தடுப்பூசிக்கு உல…
-
- 5 replies
- 773 views
- 1 follower
-
-
முல்லைத்தீவில் வீசிய கடும் காற்று கன மழை வீடுகள் பல சேதம் 16 Views முல்லைத்தீவு மாவட்டத்தின் ஓட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாங்குளம் பனிக்கன்குளம் கிழவன்குளம் பகுதிகளில் கனமழையுடன் வீசிய கடும் காற்று காரணமாக பல வீடுகள் பாதிக்கப் பட்டிருக்கின்றன. நேற்று மாலை நான்கு முப்பது மணி அளவில் குறித்த கிழவன்குளம் , பனிக்கன்குளம், மாங்குளம் பகுதிகளில் கன மழை பொழிந்தது. இதன்போது திடீரென வீசிய கடும் காற்று காரணமாக பல வீடுகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டு பல சேதங்களை ஏற்படுத்தி இருக்கின்றது. மேலும் வீடுகளுக்குளும் மழைநீர் புகுந்து பல பொருட்களும் நாசமாகி உள்ளன. கிழவன்குளம் பகுதியில் வாழ்வாதாரத்திற்காக…
-
- 0 replies
- 331 views
-
-
இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர் யாழிலும், வவுனியாவிலும் போராட்டம் 1 Views மூன்று அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர், மதிய உணவு இடைவேளை பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தை இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் முன்னெடுத்துள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக தமது போராட்டத்தை ஆரம்பித்த இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர், வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் வரை பேரணியாக சென்று ஆளுநருக்கான மகஜரினை கையளித்திருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறைகளுக்கமைய வங்கி ஊழியர்களின் பயிற்சிக் காலத்தை 2 வருடங்களுக்கு மட்டுப்படுத்துக , அதிகாரிகளே பயிற்சிக் காலத்தினை நீடித்து வங்கி ஊழியர்க…
-
- 0 replies
- 313 views
-
-
யாழ்ப்பாணம் – சென்னைக்கு இடையில் விரைவில் விமான சேவைகள் ஆரம்பம்: அரசாங்கம்! யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்துக்கும் இந்தியாவின் சென்னைக்கும் இடையில் அடுத்த சில மாதங்களுக்குள் பயணிகள் விமான சேவைகளை மீண்டும் தொடங்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. மாலைத்தீவை தென்னிந்திய இடங்களுடன் இணைக்கும் விமான நடவடிக்கைகள் இலங்கை வழியாக தொடங்கப்படும் எனவும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரனதுங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பல விமான நிறுவனங்கள் ஏற்கனவே இலங்கை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் யாழ்ப்பாண விமான நிலையம் மூன்று கட்டங்களில் அபிவிருத்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.…
-
- 0 replies
- 378 views
-
-
இலங்கை மக்களின் அன்றாட உணவுப் பொருட்களில் நச்சு இரசாயனங்களின் ஆதிக்கம்! By Sayanolipavan இலங்கை மக்கள் உணவுப் பொருட்களின் ஊடாக நச்சுப் பொருட்களை அதிகளவில் உள்ளெடுத்து வருவதாக அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளார் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் மருத்துவ நிபுணர் அநுருத்த பாதெனிய. உலகில் உணவுகளின் மூலம் இரசாயன நச்சுப் பதார்த்தங்களை மிகக் கூடுதலான அளவில் உள்ளெடுப்பவர்கள் இலங்கை மக்கள்தான் என்ற மற்றொரு அச்சமூட்டும் தகவலையும் மருத்துவர் அநுருத்த பாதெனிய குறிப்பிட்டுள்ளார்.பாரதூரமான இந்த அதிர்ச்சி தருகின்ற தகவலானது சாதாரண ஒரு நபரிடமிருந்து வந்திருந்தால் அதை எம்மால் புறக்கணித்து விட முடியும். ஆனால் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்க…
-
- 0 replies
- 262 views
-
-
தம்பட்டை பகுதியில் அதிரடிப்படைமுகாம் எதற்கு? மட்டு.மாவட்ட எம்.பி.இரா.சாணக்கியன் கேள்வி (வி.ரி.சகாதேவராஜா) மக்கள்செறிந்துவாழும் தம்பட்டையில் அதிரடிப்படைமுகாம் அமைக்கப்பட்டுவருகின்றது. மீண்டும் ஓர் இருண்ட யுகத்திற்குள் செல்கின்றோமா? அபிவிருத்தி என்ற போர்வையில் எமது பல பிரதேசங்களின் வளங்கள் அபரிக்கப்படுகின்றது. எமது வடக்கு கிழக்கு மக்களை ஏமாற்றி கடந்த காலத்திலே வாக்குகள் பெற்றெடுத்த ஆளுந்தரப்பு அரசியற் பிரமுகர்கள் யாரும் இவை தொடர்பில் குரல்கொடுத்ததாகத் தெரியவில்லை.இதுதானா ஆளுந்தரப்பு தமிழ்அரசியல்வாதிகளின் அபிவிருத்தி? இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வியெழுப்பியுள்ளார்.. சாணக்கியன் எம்.பி. மேலும் க…
-
- 0 replies
- 216 views
-
-
மிருசுவிலில் 40 ஏக்கர் மக்கள் காணியை இராணுவத்திற்காக அபகரிக்க முயற்சி – எதிர்த்து போராட்டம்! தென்மராட்சி – எழுதுமட்டுவாள் வடக்கு (ஜே/34) கிராம சேவகர் பிரிவில் மிருசுவில், ஆசைப்பிள்ளை ஏற்றப்பகுதியில் பொது மக்களுக்குச் சொந்தமான 40 ஏக்கர் காணியை 52வது இராணுவ படைப் பிரிவின் பயிற்சி முகாம் அமைப்பதற்காக நில அளவீடு செய்து சுவீகரிக்கும் முயற்சி இன்று (5) சற்றுமுன் முன்னெடுக்கப்பட்டது. நில அளவைத் திணைக்களத்தினால் இந்த நில அளவீட்டு சுவீகரிப்பு முயற்சி முன்னெடுக்கப்பட்டது. இந்த சுவீகரிப்பு முயற்சியை முன்னதாக அறிந்த நிலையில் காலை 9 மணிக்கு சம்பவ இடத்திற்கு சென்ற காணி உரிமையாளர்கள், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் திரண்டு எதிர்ப்பு வெளியிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்…
-
- 0 replies
- 367 views
-
-
ஏப்ரல் கிளர்ச்சியின் 50ஆவது நினைவு தினம் இன்று 1971ஆம் ஆண்டு இடம்பெற்ற ஏப்ரல் கிளர்ச்சியின் 50ஆவது நினைவு தினம் இன்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்படுகின்றது. அந்தவகையில் ஹம்பந்தோட்டை கம்பாஹா, பொலனறுவை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் அந்த போராட்டத்தின் போது உயிரைத் தியாகம் செய்தவர்களை நினைவு கூறும் விதமாக பல நிகழ்வுகளை மக்கள் விடுதலை முன்னணி ஏற்பாடு செய்துள்ளது இதற்கமைய இன்று மாலை 3.30 மணியளவில் குறித்த மாவட்டங்களில், மக்கள் விடுதலை முன்னணியினை சார்ந்தவர்களின் ஆதரவின் கீழ் நினைவுச் சடங்குகள் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அக்கட்சியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க, ஹிங்குரகொட பகுதியில் விசேட உரை நிகழ்த்தவுள்ளார். நாட்டின் வரலாற்றிலும் தமிழ் …
-
- 0 replies
- 309 views
-
-
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தேங்காய் எண்ணெயின் ஆபத்து குறித்து எச்சரிக்கும் விஜயதாச ஒரு பில்லியன் தேங்காய் எண்ணெய் துகள்களில் 10 க்கும் மேற்பட்ட எப்லடொக்சின் துகள்கள் இருந்தால், அது மனித உடலுக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தேங்காய் எண்ணெய் தொடர்பில் விஜயதாச ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “பரிசோதிக்கப்பட்ட எண்ணெய் மாதிரிகளில், ஆறு மாதிரிகள் 10 மற்றும் 14 இன் எப்லடொக்சின் மதிப்பை விட அதிகமாக இருந்தன, அவை ஐந்து மதிப்பை மீறின. அதில் எட்டு மாதிரிகளில் எப்லடொக்சின் இல்லை. அதாவது ஒரு பில்லியன் தேங்காய் எண்ணெய் துகள்களில் 10 க்கும் மேற்பட்ட எப்லடொக்சின் துகள்க…
-
- 1 reply
- 200 views
-
-
இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடை விதிக்கவில்லை -இந்தியா கொரோனா தடுப்பூசிகளுக்கு இந்தியா எந்த ஏற்றுமதி தடையும் விதிக்கவில்லை என இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புது டில்லியில் உள்ள இந்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சமீபத்தில் கொரோனா தடுப்பூசிகளுக்கு எந்தவொரு ஏற்றுமதி தடையும் விதிக்கவில்லை என தெளிவாகக் கூறியதாகக் குறிப்பிட்டார். உலகின் பல்வேறு பிராந்தியங்களில் உள்ள பல நாடுகளுக்கான தடுப்பூசி ஏற்றுமதி கடந்த வாரமும் நடந்துள்ளன என்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. மேலும் எந்தவொரு நாடும…
-
- 0 replies
- 259 views
-
-
கொழும்பு துறைமுக நகரத்தில் பணிபுரியும் 1000 சீன பிரஜைகளுக்கு தடுப்பூசி! கொழும்பு மாநகர சபையில் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்பட்ட சினோபார்ம் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் மூலம் இலங்கையில் உள்ள சீன நாட்டினருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அதன்படி, கொழும்பு துறைமுக நகரத்தில் பணிபுரியும் 1000 சீன பிரஜைகளுக்கு இன்று தடுப்பூசி செலுத்தப்படுவதாக அதிகாரி ஒருவர் ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்தார். சீனா நன்கொடையாக வழங்கிய 6 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் கடந்த வாரம் இலங்கைக்கு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1207570
-
- 0 replies
- 345 views
-
-
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற சஹால் மங்கல்ய நிகழ்வு புத்தருக்கு முதல் அறுவடை வழங்கும் வருடாந்திர சஹால் மங்கல்ய நிகழ்வு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது. அனுராதபுரத்திலுள்ள ஜெய ஸ்ரீ மகா போதியில் குறித்த நிகழ்வு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளது. 54ஆவது தேசிய சஹால் மங்கல்யாவை, விவசாய அமைச்சகம் மற்றும் வேளாண் சேவைகள் துறை ஆகியன இணைந்து, அட்டமாஸ்தானதிபதி டாக்டர் வென் பல்லேகம சிரினிவாச நாயக்க தேரர் வழிகாட்டலில் நடத்தின. பெரும்பாலான விவசாயிகள், சஹால் மங்கல்யாவில் கலந்துகொண்டு, ஆசீர்வாதங்களைப் பெற்றனர். மேலும் பாரம்பரியத்தின் படி, தங்கமுலாம் பூசப்பட்ட கிண்ணத்தில் நிரப்பப்பட்ட அரிசி, ஜெய ஸ்ரீ மகா போதி முன் வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து…
-
- 0 replies
- 182 views
-
-
வெள்ளைவானை விட்டது வேறு எவரோ | என்னை பற்றி வெள்ளை வானை வைத்து பொய் பரப்பினர் – ஜனாதிபதி கோத்தாபய By Sayanolipavan என்னைப் பற்றி பொய்களைப் பரப்ப ஒழுங்கமைக்கப்பட்ட பிரச்சாரம் உள்ளது. இது உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சக்திகளினால் செய்யப்படுகின்றது. முன்னர் வெள்ளை வான்கள் மற்றும் சுறாக்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டேன். இப்போது சூழல் தொடர்பில் குற்றஞ்சாட்டப்படுகிறது.இவ்வாறு இன்று (3) வவுனியாவில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்தார்.வெடிவைத்தகல்லு கிராமத்தில் போகஸ்வெவ மகா வித்தியாலய வளாகத்தில் இடம்பெற்ற கிராமத்துடன் உரையாடல் நிகழ்வில் இதனை தெரிவித்தார். மேலும்,“இந்தவறிய மக்களின் பிரச்சினைகள் சிலருக்கு புரிவதில்லை. அவர்கள் இங்கு வருவதுமில்லை. மஹிந்த ஜன…
-
- 1 reply
- 450 views
-