Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. (இராஜதுரை ஹஷான்) மாகாண சபை தேர்தல் குறித்து இந்தியாவின் நிலைப்பாட்டை கோருவதும், பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதும் பயனற்றது. அது குறித்து நாட்டு மக்களே தீர்மானம் எடுக்க வேண்டும் என அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார். மாகாண சபை தேர்தல் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் உருவாக்கத்திற்கு இந்தியா முன்னின்று செயற்பட்டது. காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபை தேர்தலை விரைவாக நடத்தி அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் உள்ளடக்கங்களை முழுமையாக செயற்படுத்துமாறு இந்தியா அண்மையில் குறிப்பிட்டுள்ளமை கவனத்திற்குரியது. மாகாண சபை தேர்தல் குற…

    • 1 reply
    • 442 views
  2. சுதந்திரபுரத்தில் அமைந்துள்ள தனது காணியினை மக்களுக்கு வழங்க ஆனந்தசங்கரி நடவடிக்கை! தந்திரபுரத்தில் அமைந்துள்ள தனது காணியினை அரசாங்கத்திடன் கையளிக்கும் பத்திரத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி ஒப்பிமிட்டார். முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் வீ.ஆனந்தசங்கரிக்கு 15 ஏக்கர் மத்தியவகுப்பு காணியாக இருந்தது. குறித்த காணியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் குடியேறி வசித்த வந்த நிலயைில் அக்காணியை தமக்கே பகிர்ந்து வழங்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் 2019ம் ஆண்டு காலப்பகுதியில் குறித்த காணியை மக்களிற்கு பகிர்ந்தளிக்குமாறு ஆனந்தசங்கரி எழுத்த…

  3. (எம்.எப்.எம்.பஸீர்) கட்டாரிலிருந்து 'வன் உம்மா ' ( ஒரே சமூகம்) எனும் பெயரில் வட்ஸ் அப் சமூக வலைத் தள குழு ஒன்றினை அமைத்து அதனூடாக அடிப்படைவாத கருத்துக்களை பகிர்ந்ததாக கூறப்படும் மேலும் இருவரை ரி.ஐ.டி. எனும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை காத்தாண்குடிக்கு சென்ற சிறப்பு ரி.ஐ.டி. குழுவினர் அவர்களைக் கைது செய்தனர். 28,29 வயதுகளை உடைய குறித்த இரு சந்தேக நபர்களும் தற்போது கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். இன்று கைது செய்யப்பட்ட குறித்த இருவரும் கட்டாரிலிருந்து…

  4. அரசிடம் நல்லபெயர் பெறுவதற்காக மக்களை வீதியில் விட்ட அதிகாரிகள் – சரவணபவன் அரசை நெருக்கடிக்குள்ளாக்கக் கூடாது என்ற நினைப்புடன் அரசை திருப்திப்படுத்தி மக்களைப் பட்டினிபோட்டு நடுத்தெருவில் விடும் வகையில் வடக்கு அதிகாரிகள் சிலர் செயற்படுகின்றனர் என இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனாத் தொற்றாளர்கள் அதிகரித்ததையடுத்து யாழ். நகர் மத்திய பகுதி மற்றும் திருநெல்வேலி பாற்பண்ணை கிராமம் என்பன முடக்கப்பட்டுள்ளன. அந்தப் பகுதி மக்களுக்கு அரச உதவிகள் எவையும் கிடைக்கவில்லை. அது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையில் மேல…

    • 0 replies
    • 654 views
  5. ஜோசப் ஆண்டகை பெயரில் புதிய சதுக்கம் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கருத்து 20 Views தமிழர்தாயகத்தில் ஒரு புனிதமான சதுக்கம் உருவாக்கி பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் பெயரிடப்பட வேண்டும் என வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொண்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். வவுனியாவில் கடந்த 1505 நாட்களாக சுழற்சிமுறை உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் போனவர்களின் உறவினர்களால் உயிரிழந்த பேராயர் இராயப்பு ஜோசப்பிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். தொடர்ந்…

  6. பிள்ளையான் என்னை பார்த்து பயப்படுகின்றாரா , நாமலிடன் கேள்விகேட்ட சாணக்கியன் பிள்ளையான் என்னை பார்த்து பயப்படுகின்றாரா என்று அமைச்சர் நாமல் ராஜபக்சவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கேள்வியெழுப்பினார். பிரதமரின் அலுவலகத்தின் ஆலோசனைக்கமைவாக கிராமிய பொருளாதார மேம்பாட்டு தேசிய வேலைத்திட்டதின் சமூக அபிவிருத்தி உட்கட்டமைப்பு தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்றது. விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற குறித்த கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர். கூட்டத்தின் ஆரம்பத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு…

  7. இந்திய அரசின் உயர்கல்வி புலமைப்பரிசில் வாய்ப்புக்கள் http://www.samakalam.com/wp-content/uploads/2021/04/eduadvice-education-in-india-png-547_410.pngஇந்தியாவில் பட்டப் படிப்பு, பட்டப்பின் படிப்பு மற்றும் ஆராய்ச்சி / கலாநிதி கற்கை நெறிகளுக்கான புலமைப் பரிசில்களுக்கு கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் விண்ணப்பங்களை கோரியுள்ளது. இது தொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு: இந்தியாவில் பட்டப் படிப்பு, பட்டப்பின்படிப்பு மற்றும் ஆராய்ச்சி/கலாநிதி கற்கை நெறிகளுக்கான புலமைப் பரிசில்கள் கலாசார உறவுகளுக்கான இந்தியக் கவுன்சிலின் (ICCR) 2021-2022 கல்வி ஆண்டுக்கா…

  8. மக்களை நீங்கள் கொல்லவில்லை என்றால் ஏன் சர்வதேச விசாரணைக்கு பயப்படுகிறீர்கள்

  9. தமிழர்களின் குரலாக இருந்தவர் மறைந்த மன்னார் ஆயர்’ – தமிழ் சிவில் சமூக அமையம் 19 Views மறைந்த இராயப்பு ஜோசப் ஆண்டகை விடுதலை இறையியல் தத்துவார்த்தத்தை தனது வாழ்க்கையில் வாழ்ந்து காட்டினார் என தமிழ் சிவில் சமூக அமையம் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சிவில் சமூக அமையத்தின் தோற்றுனர்களில் ஒருவரும் அதன் முதல் அமைப்பாளருமான மன்னார் மாவட்ட முன்னாள் ஆயர் அதி வணக்கத்திற்குரிய கலாநிதி. இராயப்பு ஜோசப் அவர்களின் மறைவை ஒட்டி தமிழ் சிவில் சமூக அமையம் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது. அதில்,“23 வருடங்கள் கத்தோலிக்க திருச்சபையின் மன்னார் மறை ஆயராகவும் பல தசாப்த காலங்களாக தமிழ் சிவில் சமூக செயற்பா…

  10. (இராஜதுரை ஹஷான்) மாகாண சபை தேர்தல், அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் உள்ளிட்ட விடயங்களில் இந்தியா தலையிடுவது இலங்கையின் இறையான்மையை பலவீனப்படுத்தும். புதிய அரசியலமைப்பினை நடைமுறைப்படுத்தும் வரை மாகாண சபை தேர்தலை தொடர்ந்து பிற்போடுவது சாதகமாக அமையும். மாகாண சபை தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது என நாட்டு மக்கள் எவரும் போராட்டங்களை முன்னெடுக்கவில்லை. தேர்தலுக்கு செலவிடும் 500 கோடி நிதியை பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள நாட்டு மக்களுக்கு பகிர்ந்தளியுங்கள் என பௌத்த மத தலைவர்கள் ஜனாதிபதிக்கு வலியுறுத்தியுள்ளார்கள். உம்மாரே கஸ்சப தேரர், அபயராம விகாரையின் விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர், பெங்கமுவே ஆனந்த தேரர் ஆகிய 12 தேரர்கள் ஒன்றினைந்து மாகாண சபை தேர்தல் தொடர்…

    • 1 reply
    • 357 views
  11. சீனா வழங்கிய 6 லட்சம் சினோபார்ம் கொரோனா தடுப்பூசி இலங்கையை வந்தடைந்தது. 11 Views சீனா இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கிய 6 லட்சம் சினோபார்ம் கொரோனா தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்தன. இந்த தடுப்பூசி, முதல்கட்டமாக இலங்கையில் வசிக்கும் சீன குடிமக்களுக்குத்தான் வழங்கப்படும் என்று தொற்றுநோய்ப் பிரிவின் பணிப்பாளர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். இலங்கையில் பல ஆயிரக்கணக்கான சீனர்கள் பணியாற்றி வருகிறார்கள். சீனாவிலிருந்து விமானம் மூலம் வந்த கொரோனா தடுப்பூசியை, சீன தூதரிடமிருந்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபாக்ச பெற்றுக் கொண்டார். உலக சுகாதார நிறுவனத்திடமிருந்து இந்த கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்தப் பிறகே, இது இலங்கை குடிமக்களுக…

  12. மட்டக்களப்பு மாநகரசபை தொடர்பில் இடைக்காலத் தடையுத்தரவு! மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வரினால் சபை அனுமதியுடன் பிரதி ஆணையாளருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தில் ஆணையாளர் தலையிடுவதை தடுக்கும் வகையில் இடைக்காலத் தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணியும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாநகர மேயரால், ஆணையாளருக்கு எதிராக இடைக்கால தடை எழுத்தாணை கோரி மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை இன்று (வியாழக்கிழமை)மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் ”மாநகர சட்டத்தின்படி மே…

    • 0 replies
    • 443 views
  13. தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் குறித்து அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும்- துரைரெட்னம் 0 ஜனநாயக ரீதியாக செயற்பட்ட அமைப்புக்களை தடை செய்தமை குறித்து இலங்கை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டுமென ஈ.பி.ஆர்.எல் .எப். பத்மநாபா மன்ற தலைவர் இரா.துரைரெட்னம் வலிறுத்தியுள்ளார். மட்டக்களப்பில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஜனநாயக ரீதியாக இயங்கும் அமைப்புக்கள் தமிழர்களாக இருந்தால், அவ்வமைப்புக்கள் குறித்து இலங்கை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண…

    • 0 replies
    • 246 views
  14. (எம்.மனோசித்ரா) சர்வதேசத்தில் தனிமைப்படுத்தப்படும் மிக ஆபத்தான நிலையில் இலங்கை உள்ளது என எச்சரித்துள்ள முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, கிணற்று தவளைகளாக வாழ்வதில் எந்த பயனும் கிடையாது. இதனை மையப்படுத்தியே தற்போது அரசாங்கத்தின் போக்கு காணப்படுவதாகவும் அவர் குற்றஞ்சுமத்தினார். பத்தரமுல்ல - கோட்டே சோலிஸ் ஹோட்டலில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் மேலும் கூறுகையில் , இலங்கையின் உள்நாட்டுப் போர் 2009 இல் நிறைவடைந்ததன் பின்னர் பல உலக நாடுகள் வாழ்த்துக்களை தெரிவித்தன. மறுபுறம் ஒரு மீறல்களை மையப்படுத்தி விசாரணைகளுக்கும் வலியுறுத்தின. குறிப்பாக வெள்ளை கொடி விவகா…

    • 2 replies
    • 573 views
  15. மாநகரசபை உறுப்பினர்களை கட்சியிலிருந்து விலக்கும் மனு தள்ளுபடி March 31, 2021 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் சிலரைக் கட்சியிலிருந்து விலக்கும் தீர்மானத்திற்கு வழங்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கக் கோரி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் செய்த மேன்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. யாழ் மாநகரசபை உறுப்பினர்கள் வி.மணிவண்ணன், பா.மயூரன் ஆகியோரை கட்சியிலிருந்து விலக்குவதாக அண்மையில் அகில இலங்கை காங்கிரஸ் அறிவித்தது. இதற்கு எதிராக யாழ் மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் வி.மணிவண்ணன், பா.மயூரன் தாக்கல் செய்த மனுவையடுத்து, அவர்களை கட்சியை விட்டு நீக்கும் முடிவிற்கு இடைக்கால தடைவிதிக்கப்பட்டது. இந்த தடைக்கு எதிராக, அகில இலங்கை த…

  16. இலங்கை அரசாங்கம் வடகொரியா போன்று செயற்பட முடியாது – மங்கள ஐ.நா. தீர்மானம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் வடகொரியா, வெனிசுவேலா அல்லது எரேட்ரியா போன்று செயற்பட முடியாது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 2015 ஆம் ஆண்டில் ஐ.நா.வின் 30/1 தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்குவது மற்றும் பிற விடயங்கள் குறித்து விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இலங்கை அரசாங்கம் தனது இராஜதந்திரத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டுமே தவிர மோதலில் அல்ல என குறிப்பிட்ட மங்கள சமரவீர, இராஜதந்திரம் ஊடாக அனைத்து வகையான தீர்வுகளுக்கும் விடை கிட்டும் என்றும் சுட்டிக்காட்டினார். இலங்கையின் பொருளாதாரம் மந்த ந…

  17. கத்தோலிக்க தேவாலயங்களைச் சுற்றியுள்ள முக்கிய இடங்களுக்கு விசேட பாதுகாப்புத் திட்டம் ஈஸ்டர் ஞாயிறு தினத்தை கருத்தில் கொண்டு கத்தோலிக்க தேவாலயங்களைச் சுற்றியுள்ள முக்கிய இடங்களுக்கு விசேட பாதுகாப்புத் திட்டம் அடுத்த சில நாட்களில் அமுல்படுத்தப்படவுள்ளது. அந்தந்த பகுதிகளில் உள்ள பாதுகாப்பு நிலைமைகள் குறித்து அறிக்கையினை வழங்க இராணுவத் தலைமையகம் அறிவித்துள்ளது என இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்துள்ளார். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களுக்கு மேலதிக பாதுகாப்பு வழங்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். https://athavannews.com/2021/1206407

  18. உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இலக்கான... சியோன் தேவாலயத்தை நேரில் சென்று பார்வையிட்டார் அமெரிக்க உயர்ஸ்தானிகர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இலக்கான சியோன் தேவாலயத்தை அமெரிக்க உயர்ஸ்தானிகராலயத்தின் உயர் அதிகாரி அன்டோனி எப்.ரேன்சுலியும் அவரது குழுவினரும் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். நேற்று (புதன்கிழமை) மட்டக்களப்பு சியோன் தேவாலயத்துக்கு திடீர் விஜயத்தினை மேற்கொண்ட அன்டோனி எப்.ரேன்சுலியும் அவரது குழுவினரும் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக ஆலய நிர்வாகத்தினரிடம் கேட்டறிந்துக்கொண்டனர். மேலும் நல்லாட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட மீள் கட்டுமான பணிகள் இடைநடுவில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக ஆலய நிர்வாகத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து இவை…

  19. ’நியாயப்படுத்தல்களை அரசாங்கம் ஏற்காது’ மகேஸ்வரி விஜயனந்தன் மேற்குல நாடுகளுக்கு அடிபணிந்து அரசாங்கம் செயற்படாமை காரணமாகவே எமக்கு எதிராக அடிப்படையற்ற போலிக் குற்றச்சாட்டுகள், மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டன என்று தெரிவித்த அமைச்சர் உதயகம்மன்பில, அக்குற்றச்சாட்டுகளை நாம் உத்தியோகபூர்வமாக நிராகரித்துள்ளோம் என்றும் எனவே, அந்தக் குற்றச்சாட்டுகளை நியாயப்படுத்த முன்வைக்கும் எந்தவொரு விடயத்தையும் அரசாங்கம் என்ற ரீதியில் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்றார். இதேவேளை, மஹரகம பிரதேசத்தில், நேற்று முன்தினம் (29) பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், சாரதியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு, கதைய…

    • 1 reply
    • 479 views
  20. ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்களை அனுமதிப்பதற்கான யோசனையொன்றை இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்தியாவிடம் முன்வைத்துள்ளார். சில கட்டுப்பாடுகளின் கீழ் இந்திய மீனவர்களை இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்து, கடற்றொழிலில் ஈடுபடுவதற்கான அனுமதியை வழங்கும் வகையில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிபிசி தமிழிடம் தெரிவித்தார். அனுமதி பத்திர நடைமுறையொன்றை அறிமுகப்படுத்தி, அதனூடாக இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்க தான் யோசனை முன்வைத்ததாகவும் அவர் கூறுகின்றார். இந்த அனுமதி பத்திர நடைமுறையானது, நாட்டு படகுகளுக்கு மாத்திரமே செலு…

  21. சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான ஒரு கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுவரித் திணைக்களத்தின் சாவகச்சேரி நிலைய பொறுப்பதிகாரி அசோகரட்ணத்தின் அறிவுறுத்தலில் மதுவரிப் பரிசோதகர் வசீகரனின் தலைமையில் மல்லாகம் மற்றும் பருத்தித்துறை மதுவரி நிலைய அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் நேற்று மாலை முன்னெடுத்த சிறப்பு சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து உயிர்க்கொல்லி போதைப்பொருளான ஹெரோயின் ஒரு கிலோ கிராம் கைப்பற்றப்பட்டது. அதன் பெறுமதி சுமார் ஒரு கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. வட்டுக்கோட்டையைச் சேர்ந்த சந்தேக நபர்கள் இருவரும் இன்று மல்லாகம் நீதிவான் நீதிமன்றில்…

  22. இன்று முதல் சில பிளாஸ்திக் மற்றும் பொலித்தீன் பயன்பாட்டுக்கு தடை நாட்டில் சில வகையான பிளாஸ்திக் மற்றும் பொலித்தீன் பயன்பாட்டுக்கு இன்று முதல் தடை விதிக்கப்படவுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சு தெரிவித்துள்ளது. பொலித்தீன் மற்றும் பிளாஸ்திக்கினால், சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் நீண்டகால பாதிப்புகளைக் கவனத்திற்கொண்டு மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. பயிர்ச்செய்கைக்காக பயன்படுத்தப்படும் விவசாய இரசாயனம் அடங்கிய போத்தல் மற்றும் பக்கற்றுகள் என்பன தடை செய்யப்பட்டுள்ளன. அத்துடன், பொலித்தீன் மற்றும் பிளாஸ்திக்கைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் காது துடைப்பான்கள் முழுமையாகத் தடை செய்யப்பட்ட…

    • 0 replies
    • 279 views
  23. 6000 வாள்கள் தொடர்பில் விசாரணை செய்ய இரு விஷேட குழுக்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் இந்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 6000 ம் வாள்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் அடிப்படையில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விஷேட இரு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (31) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கோரி கர்தினால் மெல்கம் ரஞ்சித் தாக்கல் செய்த ரீட் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்பத்தில் சட்டமா அதிபர் சார்ப்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி அவன்தி பெரேரா இதனை தெரிவித…

    • 0 replies
    • 561 views
  24. Aboutதேர்தல் முறைமை நிச்சயமாக மாற்றப்படவேண்டும்- மாவை மாகாணசபை தேர்தலை நடாத்துவதற்கு முன்பாக தேர்தல்முறைமை என்பது கட்டாயமாக மாற்றப்படவேண்டும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். மட்ட…

    • 0 replies
    • 280 views
  25. வீட்டுத்திட்டத்தில் அரசாங்கத்தால் நிர்க்கதியாக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்கள் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையூடாக வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் கைவிடப்பட்ட நிலையில் பெருமளவான மக்கள் நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 2018 ஆம் ஆண்டு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையூடாக மன்னார் மாவட்டத்தில் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் தற்போது வரை முழுமையடையாத நிலையில் காணப்படுகின்றது. புதிய அரசாங்கத்தினால் புதிய வீட்டுத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு பூரணப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் 2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத்திட்டங்கள் தொடர்சியாக கைவிடப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றது. வறுமைக்கோட்டின் கீழ் உள்ள குடும்பங்ளையே குறித்த வீட்டுத்தி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.