ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143625 topics in this forum
-
முல்லைத்தீவு: தனிச்சிங்களத்தில் வழங்கப்பட்ட சாரதி அனுமதி விண்ணப்ப படிவம் 15 Views முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவட்ட செயலக வளாகத்திலுள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பிப்பதற்காக சென்ற வேளை தனிச் சிங்களத்தில் விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டுள்ளமையால் அதை நிரப்பமுடியாத நிலைக்கு சாரதிகள் தள்ளப்பட்டுள்ளார்கள். தமிழ்மக்கள் செறிந்து வாழும் முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று முன்தினம் எல்லை கிராமமான துணுக்காயில் இருந்து சுமார் 80 கிலோமீற்றர் துரத்தில் உள்ள மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்துக்கொள்வதற்காக சென்ற பெண் ஒருவருக்கு…
-
- 3 replies
- 614 views
-
-
கல்முனை தமிழ் பிரதேச செயலகம் தரமிறக்கல் : ஆளும் தரப்புடன் கூட்டமைப்பு முக்கிய பேச்சு : சமலுடனான சந்திப்பில் இணக்கம் (ஆர்.ராம்) கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தினை தரமிறக்கியமை தொடர்பாக உள்ளுராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சுடன் எதிர்வரும் மே 4 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கிய பேச்சுவார்த்தையொன்றை நடத்தவுள்ளது. அதுவரையில், கல்முனை தமிழ் பிதேச செயலகத்திற்கான புதிய பெயர்ப்பலகை உள்ளிட்ட இதர செயற்பாடுகள் அனைத்தையும் உடன் நிறுத்துமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் சமல் ராஜபக்ஷவுக்கும்ரூபவ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளான செல்வம் அடைக்கலநாதன்ரூபவ் கோவிந்தன் கருணாகரம், சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்…
-
- 2 replies
- 376 views
-
-
மாகாணசபைத் தேர்தல் இவ்வருடத்தில் இடம்பெறுவதற்கான சாத்தியமில்லை - திஸ்ஸ விதாரண உறுதி (இராஜதுரை ஹஷான்) மாகாணசபை தேர்தலை இவ்வருடம் நடத்தவதற்கான சாத்தியம் கிடையாது. தேர்தல் முறைமை குறித்து பிரதான கட்சிகளின் ஆலோசனைகளை மாத்திரம் கோராமல் சிறு கட்சிகளின் ஆலோசனைகளையும் கோருவது அவசியமானது. மாகாணசபை தேர்தலை விரைவாக நடத்த லங்கா சமசமாஜ கட்சி முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். மாகாண சபை தேர்தல் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மாகாண சபை தேர்தலை நடத்துவதில் பல சிக்கல் நிலை காணப்படுகிறது. . தேர்தலை விரைவாக நடத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் முயற்…
-
- 2 replies
- 275 views
- 1 follower
-
-
புதிய அரசியலமைப்பு உருவாகும் சாத்தியமில்லை :கோட்டா அரசும் சந்தர்ப்பத்தினை நழுவிட்டுவிட்டது - விஜயதாஸ ராஜபக்ஷ (ஆர்.ராம்) தற்போதைய அரசியல் சூழமைவுகளின் பிரகாரம் புதிய அரசியலமைப்பு உருவாக்குவதற்கு சாத்தியமில்லை என்று ஆளும் தரப்பின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கமும் புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதற்கான சந்தர்ப்பத்தினை நழுவவிட்டுவிட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியே செவ்வியின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன்…
-
- 1 reply
- 541 views
-
-
வடக்கு மாகாணத்தில் பொலிஸ் நிலையங்களுக்கு தமிழ் இளைஞர், யுவதிகளை இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை வடக்கு மாகாணத்தின் பொலிஸ் நிலையங்களுக்கு தமிழ் இளைஞர், யுவதிகளை இணைத்துக் கொள்வதற்கு பொலிஸ் தலைமையகம் அர்ப்பணிப்புடனான சேவையினை எதிர்காலத்தில் வழங்கும் என இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ் சிரேஷ்ட அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரித்துள்ளார்.அத்துடன், கடந்த சில ஆண்டுகளின் பத்தாயிரம் இளைஞர், யுவதிகளை பொலிஸ் ஆட்சேட்ப்பு இணைப்பில் இணைத்துக் கொண்டதாகவும், எதிர்வரும் 2023ஆம் ஆண்டு காலப் பகுதிக்குள் மேலும் 24 ஆயிரம் பேரை சேவையில் இணைக்க எதிர்பார்த்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். தமிழ் மொழி இளைஞர், யுவதிகள் பொலிஸ் நிலையத்தில் முழுமையான …
-
- 8 replies
- 902 views
-
-
முல்லைத்தீவு காட்டுப் பகுதியில் வெடிப்புச் சம்பவம்- இளைஞன் உயிரிழப்பு, மற்றொருவர் காயம்! முல்லைத்தீவு காட்டுப் பகுதியில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு இளைஞன் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டுப் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் இரண்டு மணியளவில் இந்த வெடிப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெடிப்பபையடுத்து, 19 மற்றும் 20 வயதுடைய இரு இளைஞர்கள் காயமடைந்த நிலையில், முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி 19 வயதுடைய இளைஞன் உயிரிழந்துள்ளார். இதேவேளை, வெடிப்பு இடம்பெற்ற பகுதி அண்மையில் சுத்தம் …
-
- 0 replies
- 294 views
-
-
யாழில் 7 கோடி பெறுமதியான போதைப் பொருளுடன் நீண்டகால கடத்தல் குழு கைது! யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதிகளில் நீண்டகாலமாக ஹெரோயின், ஐஸ், குடு மற்றும் கஞ்சா கடத்தல் செய்துவந்த பிரதான சூத்திரதாரி உள்ளிட்ட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைதானவர்கள், யாழ். பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருநகர் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் கடல் வழியாக போதைப் பொருட்களை இலங்கைக்கு கடத்தி நீண்ட காலமாக யாழ். மாவட்டத்தில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ். மாவட்டக் குற்றத்தடுப்புப் பொலிஸ் பிரிவு பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான குழுவினருக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இந்தக் கடத்தல்காரர்கள் இன்று (ஞாயிற்றுக…
-
- 0 replies
- 345 views
-
-
வடபகுதி மீனவர்களுக்கு இராணுவத் தளபதி பிரியந்த பெரேரா எச்சரிக்கை 34 Views இந்திய மீனவர்களுடன் தொடர்புகளைப் பேண வேண்டாம் வடபகுதி மீனவர்களுக்கு இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா எசசரித்துள்ளார். இந்திய மீனவர்களுடன் இலங்கை மீனவர்கள் பேணிவரும் தொடரபுகள் காரணமாக வடபகுதியில் குறிப்பாக யாழ். மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவரமடையக் கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் என மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா எச்சரித்துள்ளார். யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கொரோனா தடுப்பு செயலணிக் கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில், “யாழ்ப்பாண மாவட்டத்திலுள…
-
- 1 reply
- 362 views
-
-
முடக்கலுக்கு செல்வது பொருளாதாரத்திற்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் - ஜனாதிபதி கொவிட் நோய்த் தொற்று பிரச்சினைக்கு இறுதி தீர்வு தடுப்பூசி மாட்டுமே ஆகும் எனத் தெரிவித்த ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவது மக்களின் பொறுப்பு என்றும் கூறியுள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாவது, கொவிட் 19 நோய்த் தொற்றுப் பிரச்சினைக்கு இறுதித் தீர்வு தடுப்பூசி மட்டுமேயாகும். மக்களுக்கு தடுப்பூசியை பெற்றுக்கொடுப்பதற்காக தயாரிக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டமொன்று அரசாங்கத்திடம் உள்ளது. இந்த சவாலை சிறப்பாக வெற்றிகொள்வதற்கு கொவிட் நோய்த் தொற்று பரவிய முதல் சுற்றின்போது செய்ததைப் போன்று சுகாதார அதிகாரி…
-
- 0 replies
- 222 views
-
-
கிழக்கில் தமிழர்களின் இனப் பரம்பலை திட்டமிட்டு குறைத்த அரசாங்கம் -கோவிந்தன் கருணாகரம் 16 Views கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்டு தமிழர்களின் இனப்பரம்பலை கடந்த காலத்தில் குறைத்த அரசாங்கம், இன்று இறுதியாக 74வீதம் தமிழர்கள் வாழும் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் இனப்பரம்பலை குறைப்பதற்காக மிகவும் சாதுரியமாக தங்களது காரியங்களை எல்லைப்புறங்களில் அரங்கேற்றி வருவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் குற்றம்சுமத்தியுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரடியனாறு,கதிரவன் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் கலாசார விளையாட்டு விழ…
-
- 0 replies
- 348 views
-
-
சர்வதேச நிபுணர்களின்... பிரத்யேக கண்காணிப்புக் குழுவில், இலங்கை பிரதிநிதிகள் தவிர்ப்பு!!! ஜெனீவாவை தளமாகக் கொண்ட சர்வதேச நிபுணர்களின் பிரத்யேக விசாரணை மற்றும் கண்காணிப்புக் குழுவில் இலங்கை பிரதிநிதிகளை இணைக்கப்போவதில்லை என மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் குறித்த முடிவுக்கு இலங்கை அரசாங்கம் முறையான பதிலை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. உள்நாட்டு போருக்கு பின்னர் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட ஐந்தாவது தீர்மானத்தின் விதிகளை விரைவாக அமுல்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாக மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் சமீபத்தில் கூறியது. அதன்படி போரின் போது மற்றும் அதற்குப் பிறகான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தக…
-
- 0 replies
- 283 views
-
-
இலங்கையில் கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள்... ஜூன் முதல் ஜூலை மாதங்களில் காலாவதியாகின்றன!! இரண்டாவது டோஸை வழங்குவதற்கான ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் குறைந்த அளவிலான பங்குகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்து அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை. குறித்த தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்ற கிட்டத்தட்ட அரை மில்லியன் இலங்கையர்களில் 350,000 பேருக்கு செலுத்தக்கூடிய பங்குகள் மட்டுமே தற்போது கையிருப்பில் காணப்படுகின்றது. அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, தற்போது வரை மொத்தம் 925,242 பேருக்கு ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் குறித்த தடுப்பூசியின் 356,000 அளவுகள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் இந்த பங்குகளில் …
-
- 0 replies
- 209 views
-
-
தமிழ் தலைவர்கள் சந்தர்ப்பங்களை தவறவிட்டதே துன்பத்திற்கான காரணம் – மனோ 19 Views ஆரம்ப காலம் முதற்கொண்டு தமிழ்த் தலைவர்கள் தமக்கு கிடைத்த சந்தர்ப்பங்களை தவறவிட்டே வந்ததுடன், பல தவறுகளையும் செய்து வந்துள்ளனர் அதனால் தான் தமிழ் இனம் தற்போது பல நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து வருவதாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு மனோ காணேசன் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: இப்போ சரத் பொன்சேகாவை ஏன் பாராட்டினீர்கள்? அவரும் போர்க்குற்றவாளிதானே என ஒருதரப்பினர் என்னை இணைய-வெளியில் விமர்சனம் செய்கிறார்கள். சரத் பொன்சேகா, அதை செய்தார், இதை செய்தார் என குற்றப்பத்திரிக்கை எழ…
-
- 9 replies
- 883 views
-
-
நாடாளுமன்றின் குறைந்த செயற்திறன் கொண்டவர்களாக அடையாப்படுத்தப்பட்ட 10 எம்பிகள் பட்டயலை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான இணைய தளம் வெளியிட்டுள்ளது. இதன்படி பொது ஜன பெரமுன சார்பில் கருணாதாச கொடிதுவக்கு, நிபுண ரணவக்க, மர்ஜான் பலீல், ஜானக பண்டார தென்னகோன், ட்ரிரன் அலெஸ் ஆகியோரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,ஈழமக்கள் ஜனநாயக கட்சி சார்பில் கு.திலீபன்,முஸ்லிம் தேசிய கூட்டணி சார்பில் அலி சப்பிர் ரஹீம், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி தலைவர் சி.சந்திரகாந்தன் எனும் பிள்ளையான் ஆகியோர் இந்த 10 பேரில் காணப்படுகின்றனர். குறைந்த செயற்திறன் கொண்ட எம்பிகள் பட்டியலில் தமிழர் மூவர்! – உதயன் | UTHAYAN (newuthayan.com)
-
- 5 replies
- 776 views
-
-
கொழும்பு துறைமுக நகரம் என்பது முற்றுமுழுதாக சீனாவிற்காக இலங்கை தீவிற்குள்ளேய உருவாக்கப்பட்ட மற்றுமொரு தீவு என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தற்போது நாடு இருண்ட யுகத்தை நோக்கி நகர்ந்துக்கொண்டிருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார். எமது ஐ.பி.சி தமிழின் அரசியல் நிகழ்ச்சியொன்றில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலத்தில் விஜயதாஸ ராஜபக்ச யாரை காப்பாற்றியதாக பெருமைக் கொண்டாரோ தற்போது அவரிடமிருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நிலையேற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். எனினும் தற்போது விஜயதாஸ ராஜபக்ச ஜனாதிபதியை பற்றி கூறிய அனைத்து விடயங்களும் உண்மையானவையே என்றும் தெரிவ…
-
- 1 reply
- 597 views
-
-
ரிஷாட் பதியுதீன், அவரது சகோதரர் வீடுகள் நள்ளிரவு சுற்றிவளைப்பு – அதிகாலை இருவரும் கைது 2 Views அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் இன்று அதிகாலையில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர். நள்ளிரவில் அவர்களுடைய வீடுகளை சுற்றிவளைத்த குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கடுமையான சோதனைகளை மேற்கொண்ட பின்னர் இன்று அதிகாலை அவர்களை கைது செய்தனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாகவே அவர்கள் இருவரும் கைதானதாக பொலிஸார் தெரிவித்தனர். ரிஷாட் பதியுதீனை கைது செய்வதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் நள்ளிரவில் அவரது இல்லத்தை சுற்றிவளைத்துள்ளதாக…
-
- 8 replies
- 935 views
- 1 follower
-
-
கொழும்புத் துறைமுக நகர சட்டமூலம் தொடர்பிலும் இது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு பற்றியும் விளக்குகிறார் எம். ஏ. சுமந்திரன்
-
- 3 replies
- 388 views
-
-
சர்வதேச விசாரணை தேவை என்பதை உணர்த்தும் அரசின் நடவடிக்கை – கஜேந்திரகுமார் 25 Views கோட்டாபய அரசாங்கம் தமிழ் மக்கள் கோரும் சர்வதேச குற்றவியல் நடவடிக்கைகளை நியாயமானவை என்பதை நிரூபிக்கும் வகையில் செயற்பட்டுள்ளது. தற்போதுள்ள அரசாங்கம் ஜனாதிபதி ஆணைக்குழுக்களை உருவாக்கி நியாயமான தீர்ப்பு முறையில் நம்பிக்கை இல்லை என்பதை உணர்த்தியுள்ளது. இதனைத்தான் தமிழ் மக்களும் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் கூறுகின்றனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விச…
-
- 1 reply
- 957 views
-
-
நயினாதீவில்... தேசிய வெசாக் நிகழ்வுகள், திட்டமிட்டவாறு நடைபெறும்! தேசிய வெசாக் நிகழ்வுகள் திட்டமிட்டவாறு நயினாதீவு நாக விகாரையில் இடம்பெறும் என யாழ்.மாவட்ட செயலர் க. மகேசன் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் எதிர்வரும் நாட்களில் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக, யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார். அதன் போது ஊடகவியலாளர் , நாக விகாரையில் தேசிய வெசாக் நிகழ்வுகள் நடைபெறுமா ? என கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதில் அளிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், தேசிய வெசாக் நிகழ்வு என்பது தேசிய நிகழ்வு. அதனை நிறுத்துவது தொடர்பில் எமக்கு எந்த அறிவுறுத்தலும் எமக்கு கிடைக்கப்பெறவில்லை. அதனால் நிகழ்வு …
-
- 11 replies
- 955 views
-
-
புத்தரின் சின்னங்களைக் காட்டி நிலங்களை அபகரிக்கும் நீங்கள் பொலநறுவை, அனுராதபுரத்தில் இந்து ஸ்தாபனம் அமைக்கும் நிலம் தருவீர்களா? - கோவிந்தன் கருணாகரம் April 24, 2021 கௌதம புத்தரின் பௌத்த சின்னங்கள் இருப்பதாகக் அடையாளம் காட்டி நிலங்களை அபகரிக்கின்றீர்கள். இந்து மன்னர்கள், ஆட்சி புரிந்த பொலநறுவை, அனுராதபுர பிரதேசங்களில் இந்து தாபனம் அமைக்க நூறு ஏக்கர் காணியை தர முடியுமா என்று கேள்வி எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ( ஜனா) கல்முனை பிரதேச தரம் இறக்கல், போர்ட் சிற்றி பிரேரணைக்கு ஆதரவு பெறவா என்றும் பாராளுமன்றத்தில் வினவியுள்ளார்.அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரித்து தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்…
-
- 0 replies
- 376 views
-
-
கூட்டாட்சி என்ற சொல்லைக்கூட விரும்பாத அரசாங்கம் தற்போது இலங்கைக்குள் சீன இராச்சியத்தை தோற்றுவிக்க முயற்சிக்கிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர், அதிகாரப்பகிர்வு தொடர்பில் இந்த அரசாங்கமே பரவலாக கருத்துக்களை தெரிவித்தது. அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர பாடுபட்ட தேரர்கள் மாகாணசபை முறைமையை முற்றாக எதிர்க்கின்றனர். எனினும் இந்தியாவின் அழுத்தம் காரணமாக அதனை நடத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. கூட்டாட்சி என்ற சொல்லைக்கூட விரும்பாத அரசாங்கம் தற்போது இலங்கைக்குள் சீன இராச்சியத்தை தோற்றுவிக்க முயற்சிக்கிறது. அன்றி தமிழீழத்…
-
- 14 replies
- 1.1k views
-
-
ஒன்றிணைந்து யாழில் கொரோனாவை தடுப்போம்! - யாழ் இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா அனைவரும் இணைந்து யாழ் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவோம் என மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தெரிவித்தார். இன்று யாழ்ப்பாண மாவட்டத்தில் இடம்பெற்ற விசேட கொரோனா தடுப்பு செயலணி கூட்டத்தில் கலந்து கொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்போது நாட்டில் அதிதீவிரமாக பரவும் கொரோனா நோயை கட்டுப்படுத்துவதற்கு தேசிய ரீதியாக எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்தல், தொற்றினை கட்டுப்படுத்துவதற்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் எவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ளல். வடக்கு மாகாணத்தில் கொரோனா கட்டுப்பாட்டினை எவ்வா…
-
- 0 replies
- 356 views
-
-
11 மாணவர்களை கடத்தி கொலைசெய்து கடலில் போட்டனர் : பல பரபரப்பு தகவல்களை வெளியிட்டார் பொன்சேகா (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பிரஜாவுரிமையை பறித்து அரசாங்கத்திற்கு எதிரான அழுத்தங்களில் இருந்து தப்பித்துக்கொள்ளவே அரசியல் பழிவாங்கல் ஜனாதிபதி ஆணைக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது பதினொரு மாணவர் படுகொலை, அவன்கார்ட் ஊழல் வாதிகள் என முக்கியமான குற்றவாளிகளை விடுதலை செய்யும் நோக்கமும் இவர்களுக்கு உள்ளதென எதிர்க்கட்சி உறுப்பினர் சரத் பொன்சேகா சபையில் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கைமீதான முதலாம் நாள் விவாதத்தில் உரையாற்றும்…
-
- 13 replies
- 1.1k views
-
-
நல்லூர் கந்தனை தங்கத்தினால் அலங்காரம் செய்தவர்களில் ஒருவரான இரத்தினசபாபதி சிவசண்முகநாதன் கோவிட் தொற்றால் உயிரிழந்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையில் இரண்டு வார காலம் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி கடந்த 19ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.அவரின் உடலம் அன்றையதினமே தகனம் செய்யப்பட்டுள்ளது. சிவசண்முகநாதன் யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர் ஆவார். சமகாலத்தில் தென்னிந்தியாவில் சினிமா தொழில் துறை சார்ந்த சில நிறுவனங்களுக்கு உரிமையாளராக செயற்பட்டுள்ளார். நல்லூர் கந்தனின் உற்சவமூர்த்திகளை அலங்காரம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அத்துடன் நல்லூர் கந்தனின் ஆறுமுகசுவாமி பகுதியை பொன்னால் செய்த வேலைப்பாடுகளை இந்தியாவிலும் நல்லூரிலும் முன்னின்று வழி…
-
- 21 replies
- 2.2k views
-
-
புலிகளை மீள உருவாக்க முயன்றதாக யாழில் நால்வர் கைது! இந்தியாவில் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட நபர்களுடன் உரையாடல் தொடர்பு இருந்ததாகவம் புலிகளை மீள உருவாக்க முயன்றதாகவும் குற்றஞ்சாட்டி இன்று (17) அதிகாலை யாழ்ப்பாணத்தில் பயங்கரவாத விசாரணை பிரிவால் (ரிஐடி) நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் நோக்குடன் குழுக்களை அமைத்துச் செயற்பட்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பாதுகாப்பு தரப்பால் தெரிவிக்கப்படுகிறது. இளவாலை பொலிஸ் பிரிவில் இருவரும், கோப்பாய் மற்றும் பலாலி பொலிஸ் பிரிவுகளில் தலா ஒருவரும் என நால்வர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டனர். நால்வரும் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு அழைத்து…
-
- 27 replies
- 2.5k views
-