Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஆண்டான்குளம் கிராம மக்களுக்கு வன ஜீவராசிகள் திணைக்களம் அச்சுறுத்தல் 33 Views முல்லைத்தீவு குமுளமுனை ஆண்டான்குளம் கிராம மக்களின் காணிகளுக்கு செல்ல வன ஜீவராசிகள் திணைக்களம் அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர். கிராமத்தில் குடியேறி வாழ்ந்த ஒருவரை கைது செய்துள்ளதோடு குடும்ப பெண்ணொருவரையும் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரி தாக்க முற்பட்டுள்ளார் என்று குற்றம் சுமத்தப்படுகின்றது. 1984 வரை எல்லை கிராமமாக பல குடும்பங்கள் வாழ்த்த சொந்த ஊருக்கு செல்லமுடியாத நிலையை ஆண்டான்குளம் கிராம மக்கள் எதிர்கொண்டுள்ளனர் https://www.ilakku.org/?p=45527

  2. 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு குறித்த வர்த்தமானி வெளியானது! பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாயாக நிர்ணயித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. தேயிலை மற்றும் இறப்பர் சார் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாயாக நிர்ணயித்தே குறித்த வர்த்தமானி தொழில் அமைச்சரின் செயலாலரினால் நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது. குறித்த தீர்மானமானது, எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதி முதல் செல்லுபடியாக வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பள நிர்ணய சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய, குறைந்த பட்ச நாளாந்த சம்பளமாக 900 ரூபாயாகவும் வரவு – செலவுத்திட்ட சலுகைக் கொடுப்பனவாக 100 ரூபாயாகவும் சேர்த்து நாளாந்த சம்பளம் 1000 ரூபாயாக அதிகர…

  3. யாழ்ப்பாணத்தில் இன்று (25) கொரோனாத் தொற்றாளர்கள் அதிக அளவில் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தின் நகர மத்தியை அண்மித்த முக்கிய பகுதிகள் முடகக்ப்படுவதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது. சற்றுமுன்னதாக கூடிய கொரோனா தடுப்பு செயலணியே குறித்த தீர்மானத்தினை அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம் மாநகரின் வேம்படிச் சந்தியில் இருந்து மின்சார நிலையம் அமைந்துள்ள பகுதியும், மின்சார நிலைய வீதியில் கே.கே.எஸ். வீதியிலிருந்து வைத்தியசாலை வரையும், கே.கே.எஸ் வீதி சத்திரச் சந்தியிலிருந்து முட்டாஸ் கடைச் சந்தி வரையும் முடக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் மாநகரில் பாடசாலைகளில் தொற்று அடையாளம் காணப்பட்ட மாணவர்கள் பயிலும் வகுப்புகளும் 10 நாட்களுக்கு இடைநிறுத்தப்படுகிறது. …

  4. யாழ். புத்தூரில் தொல்பொருள் திணைக்களத்தால் அகழ்வாரய்ச்சி - ஒன்று திரண்ட மக்கள் யாழ்ப்பாணம் - வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட புத்தூர் பகுதியில் தொல்பொருள் திணைக்களத்தினரால் தற்போது அகழ்வாராய்ச்சி பணிகள் முன்னெடுக்கப்படுகின்றது. கடந்த மாதம் அகழ்வராய்ச்சி பணி இடம்பெறும் போது எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து குறித்த அகழ்வாராய்ச்சியானது நிறுத்தட்ட நிலையில் இன்றைய தினம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதியில் அதிகளமான மக்கள் ஒன்றுகூடியுள்ளதை அவதானிக்க முடிந்துள்மையும் அங்கு குழப்பமான நிலை உருவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், யாழ்ப்பாணம் - வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்குட்பட்ட புத்தூர் பகுதிய…

    • 2 replies
    • 589 views
  5. விமல் வீரவன்சவிற்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு! அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்படவுள்ளது. ‘Dampal Daruwo’ என்ற தேசிய அமைப்பினால் இவ்வாறு முறைப்பாடு செய்யப்படவுள்ளது. புகையிலை, ஆல்கஹால் ஆணைய சட்டத்தின் விதிமுறைகளை மீறும் வகையில் செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இவ்வாறு முறைப்பாடு செய்யப்படவுள்ளது. அண்மையில் அமைச்சர் வீரவன்ச தலைமையில் கறுவாபட்டை சிகரெட் அறிமுகம் செய்து வைக்கப்பட்டிருந்தது. இதன்போது அமைச்சர் விமல் வீரவன்ச அறிமுகம் செய்யப்பட்டிருந்த குறித்த சிகரெட்டை வாயில் வைத்திருந்தமை பல்வேறு சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் தொடர்ந்தும் கண்டனங்க…

  6. (நா.தனுஜா) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்பட்ட 46/1 பிரேரணை நேற்று முன்தினம் 11 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இது போரின் பின்னரான காலப்பகுதியில் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் என்பவற்றை வலுப்படுத்துவதற்கு சர்வதேச சமூகம் வழங்கிவரும் தொடர்ச்சியான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது என்று பிரிட்டன், கனடா மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன. கனடா அந்தவகையில் இதுகுறித்து கனடாவின் வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேர…

  7. அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர்களின் நிலஅபகரிப்பினை நிறுத்த வேண்டும் – சாணக்கியன் வடக்கு, கிழக்கில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொல்பொருள் என்ற பெயரில் தமிழ் மக்களின் வளங்கள் சுரண்டப்படுவதற்கு உறுதுணையாக இல்லாமல் அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இன்று வடக்கு, கிழக்கினை பிரதிநிதித்துவப்படுத்தும் நான்கு நாடாளுமன்ற உறுப்…

    • 1 reply
    • 453 views
  8. உருத்திரபுரம் சிவன் ஆலயத்தில் அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் : த.தே.கூ 39 Views கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் ஆலயத்தில் தொல்லியல் திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்படும் அகழ்வாராச்சிப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு சபையில் வலியுறுத்தியுள்ளது. கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் ஆலயத்தில் தொல்லியல் திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்படும் அகழ்வாராய்ச்சிப் பணிகளால் அங்குள்ள மக்கள் மிகவும் கோபாவேசமடைந்துள்ளனர் எனவும் கடந்த 22 ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் இவ்விடயத்தில் பொறுப்பான அமைச்சர் உடனடி கவனம் செலுத்த வேண்டுமெனவும் தமிழ்த் தேசியக் க…

  9. தொல்பொருள் அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் பங்கேற்குமாறு கூட்டமைப்பிற்கு அழைப்பு! தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளுடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் பங்கேற்குமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கலந்துரையாடல் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க இந்த அழைப்பை விடுத்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையின்போது, தொல்பொருள் அகழ்வுகள் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறிதரன், சார்ள்ஸ் நிர்மலநாதன் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் உள்ளிட்ட பலர் கேள்வியெழுப்பியிருந்தனர். அதற்குப் பதிலளித்து உரையாற்…

  10. தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் பொருளாதார தடை விதிக்கப்படாது – அரசாங்கம் நம்பிக்கை மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்க முடியாது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஒரு நாட்டிற்கு எதிரான பொருளாதாரத் தடைகளை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையால் மட்டுமே விதிக்க முடியும் என்றும் அவர் கூறினார். ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரங்களைக் கொண்ட பெரும்பான்மையான உறுப்பு நாடுகளின் ஆதரவு இலங்கைக்கு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேள…

    • 0 replies
    • 318 views
  11. தமிழ் சமூகத்திற்கு உள்ள பெரிய மூலதனம் கல்வி மட்டும்தான் – பொலிஸ் பொறுப்பதிகாரி ஜயந்த தமிழ் சமூகத்திற்கு உள்ள பெரிய மூலதனம் கல்வி மட்டும்தான் அதனை தமிழ் சமூகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எச்.டபிள்யூ.கே. ஜயந்த தெரிவித்தார். மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பாடசாலை அதிபர் கே. பாஸ்கரன் தலமையில் மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட…

    • 0 replies
    • 322 views
  12. போர்க் குற்றங்கள் குறித்த ஆதாரங்களை சேகரித்து பாதுகாத்து வைக்கும் அதிகாரம் மிஷேல் பாசிலெட்டுக்கு வழங்கப்பட்டுள்ளது 50 Views இலங்கையில் நடந்ததாகக் குற்றம் சாட்டப்படும் போர்க்குற்றங்கள் குறித்த ஆதாரங்களை சேகரிக்கவும் பாதுகாத்து வைக்கவும் ஐநா மனித உரிமைகள் சபையில் தலைவர் மிஷேல் பாசிலெட்டுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இலங்கை அரசு மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் இடையே 26 ஆண்டுகள் நடைபெற்ற இந்த உள்நாட்டுப் போரில் 80 ஆயிரம் பேர் முதல் ஒரு இலட்சம் பேர் வரை உயிரிழந்ததாக ஐக்கிய நாடுகள் மன்றம் கருதுகிறது. ஐநா மனித உரிமை மன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கை அரசு “பொறுப்புக்கூற வைக்கப்படுவதற்குத் தடையாக” …

  13. சீன தடுப்பூசியை இலங்கையில் விநியோகிக்கும்போது சீன பிரஜைகளுக்கே முன்னுரிமை! சீன கொரோனா தடுப்பூசியை விநியோகிக்கும்போது இலங்கையிலுள்ள சீன பிரஜைகளுக்கே முதலில் முன்னுரிமை வழங்கப்படுமென இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோ புள்ளே குறிப்பிட்டுள்ளார். சீன அரசாங்கம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதாவது இலங்கை சீனாவிலிருந்து தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்காகவே சீன அரசாங்கத்தின் இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார். இந்நிலையில் இலங்கையிலுள்ள சீன பிரஜைகளின் எண்ணிக்கை குறித்தும் இன்னும் கணக்கிடப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2021/1203699

    • 8 replies
    • 672 views
  14. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்ற மேற்குல நாடுகளால் பெரும்பான்மை வாக்குகளைப் பெற முடியவில்லை – அரசாங்கம்! இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றிக்கொள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் பெரும்பான்மை வாக்குகளை பெற முடியவில்லை என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உள்ள 47 உறுப்பு நாடுகளில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு அவர்களால் 22 வாக்குகளை மாத்திரமே பெற முடிந்ததாகவும் 25 வாக்குகளைப் பெறமுடியாமல் போனதாகவும் தெரிவித்துள்ளார். 11 நாடுகள் வாக்களித்துள்ளன என்பதுடன்…

    • 5 replies
    • 575 views
  15. எம்.றொசாந்த் யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி மணிவண்ணனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. யாழ்ப்பாணம் நெல்லியடியில் கடந்த 20ஆம் திகதி நடைபெற்ற திருமண வைபவத்தில் கலந்து கொண்ட ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில், அந்த திருமண வைபவத்தில் கலந்து கொண்டவர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. அதனடிப்படையில் இன்றுக்காலை மு தல்வரிடமும் பி.சி.ஆர் பரிசோதனைக்காக மாதிரிகள் பெறப்பட்டன. அவற்றின் முடிவில் முதல்வருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதியாகியுள்ளது. அதேவேளை ,20ஆம் திகதிக்கு பின்னர் தன்னுடன் நேரடியாக தொடர்புகளை கொண்டிருந்தோர். தம்மை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி கொள்ளுமாறும் , சுகாதார பரிசோதகர்களுக்கு தங்களது விபரங்களை வழங்குமாறும் …

  16. இலங்கைக்கு எதிர்காலத்தில் இருள் சூழ்ந்த நிலைமை ஏற்படலாம் – பிரதீபா மஹனாமஹேவா 33 Views இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டமையானது எதிர்காலத்தில் இலங்கைக்கு இருள் சூழ்ந்த நிலைமையை ஏற்படுத்துவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், மூத்த சட்டத்தரணியுமான பிரதீபா மஹனாமஹேவா தெரிவித்துள்ளார். அதேபோன்று, எதிர்வரும் காலங்களில் இலங்கை அரசாங்கம் குறித்த பரிந்துரைகளை நிறைவேற்றாத பட்சத்தில், நாட்டிற்கு எதிராக பாதுகாப்பு சபையின் ஊடாக பொருளாதார தடைகளை ஏற்படுத்துவதற்கான சாத்தியங்களும் காணப்படுவதாக அவர் தெரிவிக்கின்றார். ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை…

  17. (எம்.மனோசித்ரா) புர்கா தடை குறித்து பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. இதுவரையில் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை. இவ்விடயத்தை மதரீதியானதாக மாத்திரம் அவதானிக்கக் கூடாது. தேசிய பாதுகாப்பினை அடிப்படையாகக் கொண்டு அவதானிக்க வேண்டும் என்று அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்று ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் , புர்கா தடை விவகாரத்தை மத ரீதியான விடயமாக மாத்திரம் பார்க்கக் கூடாது. தேசிய பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டு அவதானிக்க வேண்டும். ஐந்து நட்சத்திர ஜனநாயக நாடுகள் கூட புர்காவிற்கு தடை விதித்துள்ளன. அவ்வாறான நாடுகள் தேசிய பாதுகாப்பை அடிப்படையாகக் கொண்டே இந்த தீர…

  18. ‘சர்வதேச கண்காணிப்பு வலையமைப்புக்குள் மீண்டும் இலங்கை வந்து விட்டது’ என்ற பட்டவர்த்தனமான உண்மையை அரசாங்கம் கண்ணை கட்டி, கணக்கு வித்தை காட்டி சிங்கள மக்களிடம் மறைக்க முயல்கிறது. சிங்கள மக்களுக்கு இதை எடுத்து கூற, முன்னாள் நல்லிணக்க துறைசார் அமைச்சர் என்ற முறையில் நான் கடமைப்பட்டுள்ளேன். இலங்கையை கண்காணித்து, இலங்கை பற்றிய வாய்மொழி அறிக்கையை எதிர்வரும் செப்டம்பர்/அக்டோபரிலும், எழுத்து மூல அறிக்கையை அடுத்த வருடம் பெப்ரவரி/மார்ச்சிலும் சமர்பிக்கும்படியும், அதையடுத்து, இலங்கை திருந்தாவிட்டால் பொறுப்பு கூறல் தொடர்பாக அடுத்து எடுக்கப்பட வேண்டிய காத்திரமான நடவடிக்கைகளை அடுத்த வருடம் செப்டம்பர்/அக்டோபரில் சிபாரிசு செய்யும்படியும், ஐநா மனித உரிமை ஆணைக்குழு (UNHRC) தீர்மான…

  19. இலங்கையில் இன மற்றும் மத சிறுபான்மையினத்தவர்களின் உரிமைகள் மதிக்கப்படவேண்டும் ; நீண்ட கால பாதுகாப்பிற்கு இது அவசியம்: அமெரிக்கா இலங்கையில் இன மற்றும் மத சிறுபான்மையினத்தவர்களின் உரிமைகளை மதிக்க வேண்டும் என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் ஜலினா போர்ட்டர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்கான மனித உரிமை பேரவை தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்றே மனித உரிமைகளை மதிப்பதிலும் எதிர்கால அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கு அர்ப்பணிப்பதிலுமே இலங்கையின் நீண்டகால பாதுகாப்பும் பொருளாதார வள…

  20. ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 46/1 தீர்மானம் குறித்து ஸ்காபறோ-ரூஜ் பார்க் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி ஹரி ஆனந்த சங்கரி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: ஜெனிவாவில 22 பெரும்பான்மை வாக்குகள் ஆதரவாகவும், 11 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டும், 14 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமலும் நிறைவேற்றப்பட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் இலங்கையில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக் கூறலை அடைவதற்கான முக்கியமான ஒரு முன்னேற்றப்படியாகும். பொறுப்புக்கூறலை முன்னேற்றுவதற்கு இலங்கை தவறியுள்ளதை இந்தத் தீர்மானம் காட்டுகிறது. இந்தத் தீர்மானம் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள்…

    • 0 replies
    • 428 views
  21. மனித உரிமைகள் பேரவை - இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்கக்கூடிய நிலையில்லை மனித உரிமைகள் பேரவையில் நேற்று (23) நிறைவேற்றப்பட்ட பிரேரணை ஊடாக இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்கக்கூடிய நிலைமை இல்லை என்று அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான சந்திப்பு இன்று காலை அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்றது. இந்த மாநாட்டில் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகமாக செயற்படும் ருவன் சத்குமாரம் கலந்துகொண்டார். இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் மூலம் நிறைவேற்றப்பட்ட பிரேரணை ஊடாக இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கப்படுமா? என கே…

    • 0 replies
    • 482 views
  22. ஐ.நா.வில் தங்கள் கொள்கைகள் தோற்கடிக்கப்பட்டதை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும் – ஜே.வி.பி. அரசாங்கம் தனது பெருமையை ஒதுக்கி வைத்துவிட்டு, அவர்களின் கொள்கைகள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் தோற்கடிக்கப்பட்டன என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. இன்று (புதன்கிழமை) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க, இந்த அரசாங்கம் தற்போது மனித உரிமைகளை பாதுகாக்க முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதன்பிரகாரம் அரசியலமைப்பின் 20 வது திருத்தத்தை இரத்து செய்தல், இராணுவ மயமாக்கல் மற்றும் ஊடகங்கள் மீதான அட…

    • 0 replies
    • 236 views
  23. அரசாங்கத்தின் இயலாமை காரணமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது – திஸ்ஸ அத்தநாயக்க இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தைகளை நடத்த முடியாத அரசாங்கத்தின் இயலாமை காரணமாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இலங்கைக்கு எதிராக வாக்களித்த ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளும் பிற நாடுகளும் பொருளாதாரத் தடைகள் விதிக்க வழிவகுக்கும் என அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். ஆரம்பத்தில் இருந்தே குறித்த தீர்மானம் தொட…

    • 0 replies
    • 215 views
  24. ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான பிரேரணை – வாக்கெடுப்பு இன்று! ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்பு இன்று (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது. இலங்கையின் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு என்ற தலைப்பிலான குறித்த பிரேரணைக்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ள நிலையில், பிரேரணை குறித்த விவாதம் இடம்பெறவுள்ளது. விவாதத்தின் நடுவில், சில நாடுகள் தலையீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், பிரேரணை மீதான வாக்கெடுப்பு பெரும்பாலும் நாளை இடம்பெற வாய்ப்புள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். குறித்த பிரேரணையை பிரித்தானியா தலைமையிலான ஜேர்மனி, கனடா, வட…

  25. பொறுப்புக்கூறலுக்கு முக்கியமான முன்னேற்றப்படி – ஹரி ஆனந்தசங்கரி 26 Views “ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் இலங்கையில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக்கூறலை அடைவதற்கான முக்கியமான ஒரு முன்னேற்றப்படியாகும். பொறுப்புக்கூறலை முன்னேற்றுவதற்கு இலங்கை தவறியுள்ளதை இந்தத் தீர்மானம் காட்டுகிறது” என கனடாவின் ஸ்காபறோ-ரூஜ் பார்க் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்திருப்பதாவது: “ஜெனிவாவில் 22 பெரும்பான்மை வாக்குகள் ஆதரவாகவும், 11 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டும், 14 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமலும் நிறைவேற்றப்பட்ட ஐக்கிய நாட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.