ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143319 topics in this forum
-
(நா.தனுஜா) மதரீதியான அடிப்படைவாதம் மற்றும் இனங்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபடுவோரை இருவருடகாலத்திற்கு விசாரணைகளின்றித் தடுத்துவைக்கக்கூடிய வகையில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஆணை உடனடியாக இரத்துச்செய்யப்பட வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. 'இலங்கை 'மத ஒருமைப்பாடின்மைக்கு வழிவகுக்கும் ஆணை சிறுபான்மை சமூகத்தை அச்சுறுத்துகின்றது' என்ற தலைப்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, மதரீதியான அடிப்படைவாதம் மற்றும் இனங்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டிற்கு…
-
- 0 replies
- 415 views
-
-
சர்வதேச விசாரணையை வலியுறுத்தி யாழில் இன்று பேரணி! இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறுகோரி, யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்துடன் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த போராட்டம், கிட்டுப்பூங்காவில் இன்று (புதன்கிழமை) முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகி பேரணியாகச் சென்று, தற்போது சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் இடம்பெற்றுவரும் நல்லை ஆதீனம் முன்பாக போராட்டம் நிறைவடையவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நீதிக்கான போராட்டத்தில், தமிழ்பேசும் மக்கள் அனைவரும் கலந்துக்கொண்டு, போராட்டத்துக்கு வலுச்சேர்க்க வேண்டும் என வடக்கு கிழக்கு பல்கழலைக் கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், குறித்…
-
- 2 replies
- 704 views
-
-
ஜெனிவா பிரேரணையில் 40 நாடுகள் கையொப்பம் – சிறிலங்காவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி 42 Views ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக பிரிட்டன் தலைமையிலான நாடுகளால் கொண்டுவரப்படும் பிரேரணையில் 40 நாடுகள் கையொப்பமிடவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால், பிரேரணையைத் தோற்கடிப்பது என்பது சிறிலங்காவுக்கு மிகவும் நெருக்கடியானதாக அமைந்திருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. பிரேரணையின் இறுதி வரைபு அரசாங்கத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில் கைச்சாத்திடவுள்ள நாடுகளில் மார்ஷல் தீவுகளும், மலாவியும் மட்டும்தான் ஐரோப்பியா அல்லாத நாடுகளாகும். தற்போது கையொப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட 40 நாடுகளில் பெரும்பாலானவை ஐர…
-
- 0 replies
- 620 views
-
-
ஆதாரங்களை பாதுகாக்கும் பொறிமுறை – திட்டவட்டாக நிராகரிக்கும் சிறிலங்கா அரசாங்கம் 25 Views போர்க் குற்றங்கள் குறித்த எதிர்கால விசாரணைகளுக்காக ஆதாரங்களை பாதுகாப்பதற்கான அமைப்பினை உருவாக்கவேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. அவ்வாறான பொறிமுறைக்கு அரசாங்கம் இணங்காது. அனுமதியளிக்காது என வெளிவிவகார செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். நாங்கள் வெளிப்படையாக இதனை நிராகரிக்கின்றோம். இது மனித உரிமை பேரவையின் ஆணைக்கு அப்பாற்பட்ட விடயம் என அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்தை நிராகரிப்பதற்கு இலங்கை தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சி;ன்…
-
- 0 replies
- 287 views
-
-
- நூருல் ஹுதா உமர் தீவிரவாதத்துக்கு காரணம் மொழி அல்ல. தமிழ் தீவிரவாதத்துக்கு காரணம் தமிழ் மொழியா? ஜேவிபி தீவிரவாதத்துக்கு காரணம் சிங்கள மொழியா? அரபு பேசுகின்ற சவூதியும் யமனும் சண்டை பிடிக்கின்றனர். இவர்களில் யார் தீவிரவாதி? பிரிட்டனும் அயர்லாந்தும் ஆங்கிலம் பேசும் நாடாக இருந்தும் இரண்டும் ஆயுதத்தால் சண்டை பிடித்தன. ஆகவே தீவிரவாதத்துக்கும் மொழிக்கும் சம்பந்தம் இல்லை. ஒவ்வொரு சமூகமும் அடுத்த சமூகத்தவர் விடயங்களில் மூக்கை நுழைக்காமல் ஒருவரை ஒருவர் மதித்து வாழ்ந்தால் தீவிரவாதத்தை இலகுவாக ஒழிக்கலாம் என என உலமா கட்சி தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்…
-
- 1 reply
- 345 views
-
-
அஸாத் சாலியின் வாகனத்திலிருந்து துப்பாக்கி மீட்பு! கைது செய்யப்பட்டுள்ள மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் சாலியின் வாகனத்திலிருந்து துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிபொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் அதற்கான தோட்டாக்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் சட்டத்திற்கு முரணான கருத்துக்களை முன்வைத்ததாக குறிப்பிடப்பட்டு, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார். சட்டமா அதிபரின் ஆலோசணைக்கமைய அவர் நேற்று(செவ்வாய்கிழமை) மாலை கைதுசெய்யப்பட்டிருந்தார். மேலும், உயிர…
-
- 0 replies
- 319 views
-
-
அரபு நாடுகளின் நண்பனாகக் கூறும் இந்த அரசு, புர்காவை தடைசெய்து இனவாதிகளுக்கு இனிப்பூட்டுகிறது’ – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்! 20 Views புர்காவைத் தடைசெய்யும் தீர்மானத்தை அரசாங்கம் உடனடியாக வாபஸ்பெற வேண்டுமென்றும், இனவாதிகளைத் திருப்திப்படுத்தும் இவ்வாறான செயற்பாடுகள், சர்வதேசத்திலிருந்து எமது தாய்நாட்டை தனிமைப்படுத்தும் சூழலையே ஏற்படுத்துவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, முஸ்லிம்களை இலக்கு வைக்கும் இவ்வாறான நிகழ்ச்சி நிரல்களை, அரசாங்கம் கைவிடுவதாகத் தெரியவில்லை. ஆட்சிக்கு வர உதவிய இனவாதிகளைத் திருப்திப்படுத்தவே, …
-
- 1 reply
- 299 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்ல – இரா.சாணக்கியன் 11 Views அபிவிருத்தி என்ற பெயரில் காணிகள் பறிபோவதற்கு நாங்கள் அனுமதி வழங்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். களுவாஞ்சிக்குடி பிரதேச சபை அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று இடம்பெற்றிருந்தது. அமைச்சர் சீதா அரம்பிபொல ஒரு நிகழ்ச்சியின் போது Vocational Training and Skills Development Ministry இனால் IT Incubation Centre (கணனிகளுடன் கூடிய) கொடுப்பதற்கான விடயம் குறித்து தெரிவித்த கருத்து தொடர்பாக இதன்போது பேசப்பட்டது. இந்தநிலையில் இதனை களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்த…
-
- 0 replies
- 290 views
-
-
சட்டவிரோதமான முறையில் கடல்வழியாக படகில் கனடா செல்ல புத்தளம் – கற்பிட்டி, குரக்கன்ஹேன வீடு ஒன்றில் தங்கியிருந்த 24 பேர் கடற்படையால் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் மட்டக்களப்பை சேர்ந்தவர்கள் என்றும், பயணிக்க பயன்படுத்திய லொறி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது எனவும் கடற்படை தெரிவித்தது. இவர்களில் தாயும் இரண்டு சிறு பிள்ளைகளும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. சட்டவிரோதமாக கனடா செல்ல காத்திருந்த 24 பேர் கைது! – உதயன் | UTHAYAN (newuthayan.com)
-
- 101 replies
- 9.5k views
-
-
யாழ். பேரணி வெற்றி பெற ஆதரவை வழங்க வேண்டும் என அன்போடும் உரிமையோடும் வேண்டுகோள் விடுக்கிறேன் – யாழ்.மாநகர முதல்வர் யாழ்ப்பாணத்தில் நாளைய தினம் நடைபெறவுள்ள போராட்டத்திற்கு வடக்கு , கிழக்கு மக்கள் உணர்வு பூர்மாக கலந்து கொண்டு போராட்டம் வெற்றி பெற ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்க வேண்டும் என யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.அந்த போராட்டத்தில் அனைத்து தரப்பினரையும் கலந்து கொள்ளுமாறு மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக கிழக்கு மாகாணத்தில் இருந்தும் பெருமளவான மக்கள் வரவுள்ளனர். எனவே வடக்கு கிழக்கு தமிழ் மக்களிடம் அன்போடும் உரிமையோடும் வேண்டுகோள் விடுக்கிறேன் , இ…
-
- 1 reply
- 241 views
-
-
தொல்லியல் திணைக்களத்தால் கிளிநொச்சியில் குறிவைக்கப்படும் மற்றுமொரு சிவனாலயம்..! கிளிநொச்சியில் அமைந்துள்ள உருத்திர புரீச்சகம் சிவனாலய வளாகத்தில் தொல்பொருள் ஆய்வுக்குரிய ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. அதன்படி எதிர்வரும் 23 ஆம் திகதி குறித்த பகுதியில் அகழ்வாராச்சி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த கோவில் வளாகம் இன்று (செவ்வாய்க்கிழமை) துப்பரவு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த கோவில் அமைந்தள்ள வளாகத்தில் பௌத்த சின்னங்கள் காணப்புடுவதாக ஏற்கனவே தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலயைில் குருத்தூர் மலை விவகாரத்தின் பின்னர் குறித்த பகுதிக்கு பௌத்த துறவி ஒருவரும், பொலிஸாரும் சென்று பார்வையி…
-
- 0 replies
- 1k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வளங்களை சில அரசியல் வாதிகள் சூறையாடுவதற்கு சதி செய்து வருகின்றனர். இதை தடுத்து நிறுத்த மக்களை அணி திரளுமாறு முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம், வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா .துரைரெத்தினம் இன்று (16) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சுகாதாரம், கல்வி இரண்டையும் ஒரு சிலர் பணத்திற்காக விற்பதையும், கனியவளங்கள், உல்லாச துறைக்கான இடங்கள், ஆழ்கடல்மீன்பிடி, மணல் அகழ்வு, கால்நடைகள் கொள்வனவு, புதிய மதுபான சாலைகள் திறத்தல். அத்தோடு, அரசவளமான காணிகளை கையகப்படுத்துதல், மகாவலிக் காணி, வனவிலங்கு திணைக்…
-
- 0 replies
- 278 views
-
-
தலைமன்னாரில் கோரம்: 10 பேர் காயம் தலைமன்னாருக்கு அருகில் ரயிலுடன் பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். http://static2.tamilmirror.lk/assets/uploads/image_42d2996885.jpg Tamilmirror Online || தலைமன்னாரில் கோரம்: 10 பேர் காயம் மன்னாரில் ரயிலுடன் மோதி பேருந்து விபத்து – 20இற்கும் மேற்பட்டோர் காயம் http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/03/IMG-20210316-WA0009.jpg மன்னார் – தலைமன்னார் ரயில் கடவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 2 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் 20இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என அங்…
-
- 4 replies
- 604 views
-
-
கவனயீர்ப்புப் போராட்டங்கள்: பொத்துவில் முதல் பொலிகண்டி வரை மக்கள் இயக்கம் அழைப்பு 15 Views தமிழ் இனத்தின் மீதான இனவழிப்புக்கு சர்வதேச நீதி கோரி தமிழர் தாயகமான வடக்கு,கிழக்கில் தொடர்ச்சி யாக நடைபெற்று வரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டங்களுக்கு வலுச் சேர்க்கும் வகையில் யாழ்.நல்லூரிலும், மட்டக்களப்பிலும் முன்னெடுக்கப்படவுள்ள கவனயீர்ப்புப் போராட்டங் களுக்கு ஆதரவளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை (P2P) மக்கள் பேரெழுச்சி இயக்கம் இந்த அழைப்பை விடுத்துள்ளது. இது தொடர்பில் அந்த இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், …
-
- 2 replies
- 458 views
-
-
கடந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் ரணிலுக்கு ஐ லவ்யூ சொன்னவர்கள் தற்போது வீரவசனம் பேசுகின்றார்கள். இவ்வாறு ரணிலுக்கு ஐ லவ்யூ சொல்லியதால் பயன் ஒன்றுமேயில்லை என மாவட்ட இராஜாங்க அமைச்சர் ச.வியாமேந்திரன் தெரிவித்தார். நீர்ப்பாசன செழுமை தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு போரதீவுப் பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புதுமுன்மாரிசோலையில் பதினெட்டு மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்படவுள்ள அணைக்கட்டுக்கான அடிக்கல் நடும் நிகழ்வு இன்று பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகி, தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அபிவிருத்தி குழுவின் உப தலைவர் ப.சந்திரகுமார் உதவி திட்டமிடல் பணிப்பாளர் ச.சசிகரன் மற்றும் பொறியிலாளர்கள் கலந்து கொண்ட…
-
- 0 replies
- 242 views
-
-
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். http://cdn.virakesari.lk/uploads/post/featured_image/81858/thumb_asath.jpg சட்ட மா அதிபரின் ஆலோசனையின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அசாத் சாலி கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அசாத் சாலி கைது | Virakesari.lk
-
- 0 replies
- 502 views
-
-
பசில் ராஜபக்ஷவுக்கு அதிகாரப்பகிர்வு தொடர்பான சரியான மேம்பட்ட விளக்கமிருப்பதாக நான் கருதவில்லை- சுமந்திரன் பசில் ராஜபக்ஷவிற்கு அதிகாரப்பகிர்வு தொடர்பான சரியான மேம்பட்ட விளக்கமிருப்பதாக நான் கருதவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். SLVLOGக்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார் பேட்டியில் அவர் தெரிவித்துள்ளதாவது; …
-
- 0 replies
- 237 views
-
-
புர்கா தடை உள்ளிட்ட ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்த விடயங்கள் ஏப்ரல் மாதத்திற்குள் செயற்படுத்தப்படும்: அரசாங்கம் ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட அனைத்து யோசனைகளும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதிக்குள் செயற்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, மத்ரஸா பாடசாலை மற்றும் புர்கா தடை, அடிப்படைவாதத்துக்கு எதிரான புதிய சட்டங்கள் உருவாக்கல், விசாரணை அறிக்கைகளை நாளாந்தம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்ற கட்டமைப்பில் விசேட பொறிமுறையை ஏற்படுத்தல், அடிப்படைவாத செயற்பாடுகளை கண்காணிக்க அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் விசேட பிரிவை நிறுவல் ஆகிய விடயங்கள் குறித்து துரித நடவடிக்கைகளை முன்னெடுக்குமா…
-
- 1 reply
- 282 views
-
-
விமானத்தின் பிஸ்னஸ் கிளாஸ் இருக்கைக்காக காத்திருந்தார் மைத்திரி – பொன்சேகா சாடல் http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2019/06/sarath-fonseka-maithripala.jpg ஈஸ்டர் தாக்குதல்களைத் தொடர்ந்து சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்புவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வணிக வகுப்பு இருக்கைக்காக (business class) காத்திருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார். சிங்கப்பூரிலிருந்து மதியம் 3 மணிக்கும் இரவு 9 மணிக்கும் இரண்டு விமானங்கள் இலங்கைக்கு வந்திருந்த போதும் முன்னாள் ஜனாதிபதி அந்த இரண்டிலும் நாடு திரும்பாமல் சிங்கப்பூர் எயார்லைன்ஸ் விமானத்தில் காலை 12 மணிக்கு புறப்பட்டதாக கூறினார். …
-
- 0 replies
- 298 views
-
-
மியன்மார் இராணுவ ஆட்சியோடு இலங்கை அரசு உறவாட வேண்டாம் – மட்டக்களப்பில் போராட்டம் மியன்மார் இராணுவ ஆட்சியோடு இலங்கை அரசு உறவாட வேண்டாம் எனவும் மியன்மாரில் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் பாதுகாக்குமாறும் கோரி மட்டக்களப்பில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு – காந்தி பூங்காவில் வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண பொது அமைப்புகள், ஒன்றிணைந்து இந்த போராட்டத்தை இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுத்தன. இந்தக் கவனயீர்ப்பு போராட்டத்தில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களைச் சேர்ந்த சிவில் அமைப்புகள், போரினால் பாதிக்கப்பட்ட சமூகப்பிரிவினர், பெண்கள் அமைப்புகள் மற்றும் இலங்கையின் வடக்கு…
-
- 0 replies
- 268 views
-
-
ஆட்சி மாற்றமே நோக்கம் தமிழர்களுடைய நீதியல்ல – பிரேரணை குறித்து உருத்திரகுமாரன் 30 Views சிறிலங்காவில் ஆட்சி மாற்றத்தினை நோக்காக கொண்டே பிரித்தானியா தலைமையிலான கூட்டு நாடுகளால், ஐ.நா மனித உரிமைச்சபையில் சமர்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவு அமைந்துள்ளதென தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், இது தமிழர்களது நீதிக்கானதல்ல எனவவும் தெரிவித்துள்ளார். தீர்மான வரைவின் 9வது சரத்தினை சுட்டிக்காட்டி, இது நீதிவிசாரணையும் பொறுப்புக்கூறலுக்கான பொறிமுறையினை சிறிலங்காவிடமே கையளிப்பதாக அமைகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2014ம் ஆண்டு தீர்மானம் வழங்கிய ஆணைக்கமைய, ஐ.நா ஆணையாளர் அலுவலகம் மேற்கொண்ட விசாரணை…
-
- 0 replies
- 242 views
-
-
பிள்ளையான் மற்றும் , தம்பிகளின் விசமத்தனமான பொய்ப் பிரசாரத்திற்கான உண்மைப் பதில் ! ஆவணங்கள் இணைப்பு விசமத்தனமானதும் , வெறும் பொய்யானதுமான பிரச்சாரங்கள் மூலமாக மக்களை ஏமாற்றும் செயற்பாட்டினை MPகளும் சில தம்பிகளும் , அரசியல் தேவைக்காக செய்து வருவதை அறிய முடிகிறது . அண்மையில் வவுணதீவுப் பிரதேசத்திலுள்ள காலபோட்ட மடுவில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட சந்திரகாந்தன் பா. உ மூலமாக பிரசார நோக்கில் தவறான விடயமொன்று கூறப்பட்டுள்ளது . அது பற்றி அக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் என்னிடம் கூறியிருந்தார்கள் . மேலும் அப்பேச்சு நேரலை மூலமாகவும் அம்பலமாகியது. அதாவது முன்னாள் பா.உ சிறிநேசன் சொந்தவூருக்கான வீதியையே அமைக்கவில்லை இவர்கள் எப்படி மாவட்டத்தை அபிவிருத்தி செ…
-
- 0 replies
- 284 views
-
-
தமிழர்களுக்கு தீர்வு வழங்க முடியுமென்றால் பசில் ராஜபக்ஷவை ஆதரிக்கத் தயார் – சுமந்திரன் இலங்கையில் 2024ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பசில் ராஜபக்ஷவால் தமிழர்களின் அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் தேர்தல் விஞ்ஞாபனம் முன்வைக்கப்படுமாக இருந்தால் அவரை ஆதரிக்கத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார் . கொழும்பு சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். தொடர்ந்து அவர் தெரிவிக்கையில், “கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்த தேர்தல் விஞ்ஞாபனத்தை விடவும் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில்…
-
- 1 reply
- 302 views
-
-
நிந்தவூரில் 7 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான கள்ள நோட்டுக்களுடன் மூவர் கைது! நிந்தவூரில் 7 இலட்சத்தி 50 ஆயிரத்திற்கும் அதிகமான கள்ளநோட்டுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வாழைச்சேனை இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய அக்கரைப்பற்று பொலிஸார் மூவரையும் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைதானவர்கள் நிந்தவூர் பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கி இருந்து இவ்வாறான சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ளனர். கைதாகிய குறித்த சந்தேக நபர்கள் தங்கிய வீட்டில் இருந்து பிறின்டர் மற்றும் கணனி உள்ளிட்ட 5000 ரூபா நோட்டு பணம் அச்சிடும் தாள்கள் அச்சிடப்பட்ட பணம் என்பன மீட்கப்பட்டுள்ளன. மேலும் இவ்வாறு கைதான நபர்கள் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை…
-
- 0 replies
- 311 views
-
-
15 பில்லியனுக்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்திய சீனி மோசடி – விசேட விசாரணைகள் ஆரம்பம் சீனி மோசடி தொடர்பாக விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் மோசடி தொடர்பான ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, விசாரணைகளுக்காக குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, இந்த விடயம் தொடர்பில் விசேட கணக்காய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் திணைக்களம் தெரிவிக்கின்றது. இதற்காக திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்றை ஈடுபடுத்தியுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். சீனி இறக்குமதியின்போது 15.9 பில்லியன் ரூபாய் வரி மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உற…
-
- 0 replies
- 454 views
-