ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143319 topics in this forum
-
தீவிரவாத குற்றச்சாட்டுகளில் கைதாவோரை புனர்வாழ்வுக்குட்படுத்தும் சரத்துக்கள் உள்ளடங்கிய விசேட வர்த்தமானியொன்று வெளியாகியது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதாவோரை புனர்வாழ்வுக்குட்படுத்தும் சரத்துக்கள் உள்ளடங்கிய அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால் கையெழுத்திடப்பட்டு 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் இவ் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடபட்டுள்ள ஒழுங்கு விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர் , பயங்கரவாத தடை சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்படுபவர்கள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படு…
-
- 0 replies
- 316 views
-
-
யாழ் மாவட்டத்தில் இவ்வாண்டின் மார்ச் மாதம் முதல் 11 நாள்களில் மட்டும் 101 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளார்கள். எதிர்வரும் நாள்களில் இங்கு இந்நோய் நிலமையானது தீவிரமடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். எனவே பொதுமக்கள் அனைவரும் தேவையற்ற ஒன்றுகூடல்கள், விழாக்கள், பயணங்களை தவிர்ப்பதுடன் கொரோனா தடுப்பு சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக பின்பற்றுமாறு அவர் கேட்டுள்ளார். இதுதொடர்பில் அவர் அனுப்பி வைத்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சுகாதார நடைமுறைகளானது சரியாக பின்பற்றப்படாத நிலையில் கொரோனா பரவல் தீவிரமடையுமென அஞ்சப்படுகின்றது. தீவிரமடைந்துவரும் கொரோனா தொற்று பரம்…
-
- 0 replies
- 323 views
-
-
இலங்கையில் புர்காவுக்கு தடை - உத்தரவில் கையெழுத்திட்டார் வீரசேகர இலங்கையில் புர்காவை தடை செய்வதற்கான உத்தரவில் கையெழுத்திட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். புர்காவை தடை செய்வது தொடர்பான யோசனையொன்று எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழு, புர்காவை தடை செய்யுமாறு பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையிலேயே புர்காவை தடை செய்வதற்கான உத்தரவில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கையெழுத்திட்டுள்ளார். https://www…
-
- 2 replies
- 419 views
-
-
மாகாண சபைகள் திருத்த சட்ட வரைபு அல்லது அதன் சிக்கல்களை நீக்கிவிட்டு விரைவில் தேர்தலை நடத்துங்கள் தேசியத்திற்கும் பாதுகாப்புக்கும் முன்னுரிமை அளித்து மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் ... பேராயரின் இணக்கத்துடனும் நம்பிக்கையின் அடிப்படையிலுமே உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழு முன்னெடுத்து செல்லப்பட்டது தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பான விடயங்கள் தவிர அறிக்கையில் உள்ள அனைத்தும் வெளிப்படுத்தப்பட்டது. ஒரு தேசியவாத அரசாங்கம் ஆட்சிக்கு வரும்போது செயற்பாட்டுக்கு வரும் எதிர் சக்திகளை விளங்கிக் கொள்ளுங்கள். மாகாண சபை தேர்தல் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள சட்ட வரைபு அல்லது அதில் உள்ள குழப்பங்களை நீக்கி மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற…
-
- 0 replies
- 377 views
-
-
சமூகத்தில் நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியை அடைய சிவபெருமான் அருள்புரிய வேண்டும் – ஜனாதிபதி! சமூகத்தில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியை அடைந்துகொள்வதற்கு சிவபெருமான் அருள்புரிய வேண்டும் என்று பிரார்த்திப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மஹா சிவாத்திரியை முன்னிட்டு ஜனாதிபதி இன்று (விாயழக்கிழமை) வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறித்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்த அவர், “கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலின் காரணமாக, இந்து பக்தர்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி மஹா சிவராத்திரி கிரியைகளில் ஈடுபட வேண்டியிருந்தது. அந்த கட்டுப்பாடுகளில் இந்த முறை சிறிது தளர்வு இருந்தாலும் கடந்த வருடத்தைப் …
-
- 12 replies
- 1.3k views
-
-
வட மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே , திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் இன்று வியாழக்கிழமை வழிபாடுகளில் ஈடுபட்டார். 326 மில்லியன் ரூபா செலவில் இவ்வாலய புனரமைப்புபணிகளை இந்தியா மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். அத்தோடு, பல தசாப்தகாலமாக இலங்கை - இந்தியா இணைப்புப்பாலமாகவிருந்த ராமர்சேது பகுதியில் இந்திய உயர் ஸ்தானிகர் விசேட வழிபாடுகளில் ஈடுப்பட்டார். ஆயிரம் ஆண்டுகள் பழைமையான தொடர்புகளை உருவாக்குவதில் வரலாற்று கட்டமைப்புக்களின் வகிபாகத்தை நினைவுகூர்ந்த இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, இந்திய இலங்கை மக்களின் பிணைப்புக்கள் வலுவடையும் என குறிப்பிட்டார். இந்திய உயர்ஸ்தானிகர் வடக்க…
-
- 7 replies
- 805 views
- 1 follower
-
-
எங்கள் உயிர் போனாலும் பரவாயில்லை போராடிக்கொண்டே இருப்போம் :காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத் தலைவி வீதியில் இருக்கும் உரிமையே இல்லையென்றால் இலங்கை அரசிடம் இருந்து எந்த நீதியை நாங்கள் எதிர்பார்க்க முடியும். காணாமல் போன உறவுகளைத் தேடும் நாங்கள் இன்று உணவு தவிர்ப்புப் போராட்டக் கூடாரத்தையும் தேட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க மட்டக்களப்பு மாவட்டத் தலைவி அ.அமலநாயகி தெரிவித்தார். சர்வதேச நீதி கோரி மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயம் முன்பாக நடைபெற்று வரும் உணவு தவிர்ப்புப் போராட்டத்தின் 10ஆம் நாளான நேற்று பொலிஸாரினால் கூடாரங்கள் அகற்றப்பட்ட போதிலும் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்கையிலேயே அவர் இவ்வாற…
-
- 0 replies
- 233 views
-
-
அம்பிகையின் கோரிக்கைக்கு ஓரணியில் வலுச்சேர்ப்போம்! அம்பிகையின் கோரிக்கைக்கு ஓரணியில் வலுச் சேர்ப்போம் என ரெலோ இளைஞர் அணி தெரிவித்துள்ளது. இன்றைய தினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், ரெலோவின் இளைஞர் அணி தலைவருமாக சபா குகதாஸ் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அறிக்கையில் மேலும், இறுதிப் போரில் முள்ளிவாய்க்காலில் சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்புக்கு நீதி கிடைக்கு இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பராப்படுத்தும் தீர்மானத்துடன் பிரதான நான்கு கோரிக்கைகளை முன் வைத்து பிரித்தானிய அரசிடம் சாகும் வரை உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை இன்றுடன் 14 வது நாளாக நடாத்திவரும் பிரித்தானிய வாழ் தாயக உறவு அம்பி…
-
- 0 replies
- 243 views
-
-
யாழில் இடம்பெற்றுவரும் நீதி வேண்டிய உணவுத் தவிர்ப்புப் போராட்டத்திற்கு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேடுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் இன்றுடன் சனிக்கிழமை 14ஆவது நாளாகத் தொடர்கின்றது.நீதி வேண்டிய இந்தப் போராட்டம் நல்லூர் – நல்லை ஆதீனம் முன்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் நீதி வேண்டிய உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு தமது ஆதரவினை வழங்கி…
-
- 0 replies
- 241 views
-
-
தென்னாபிரிக்காவில் பரவிவரும் புதிய வீரியம் கொண்ட உருமாறிய கொரோனா வைரஸ் இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்காவில் பரவிவரும் புதிய வீரியம் கொண்ட உருமாறிய கொவிட்−19 (B.1.351) என்ற புதிய வைரஸ் வகையே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர மேலும் தெரிவித்தார். தன்ஸானியாவிலிருந்து இலங்கைக்கு வருகைத் தந்து, தற்போது தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த ஒருவரே இவ்வாறு இந்த புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. தென்னாபிரிக்காவில் பரவும் உருமாறிய கொரோனா வைரஸ் இலங்கையில் கண்…
-
- 1 reply
- 493 views
-
-
இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் கைதாகியுள்ளார்! வஹாப் மற்றும் ஜிஹாத் வாதங்களை பரப்பும் செயற்பாட்டில் ஈடுபட்டதாக தெரிவித்து ‘இலங்கை ஜமாஅதே இஸ்லாமி’ அமைப்பின் முன்னாள் தலைவர் ஒருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மாவனெல்லை பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடைய ரசீத் ஹஜ்ஜுல் அக்பர் என்பரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பு தெமட்டகொட பிரதேசத்தில் வைத்து இவரை கைது செய்துள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவினர், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 303 views
-
-
உண்ணாவிரதப் பந்தலை அகற்றி காவல்துறையினர் அட்டகாசம்! 30 Views மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டிருந்த உண்ணாவிரதப் பந்தலை அகற்றி காவல்துறையினர் அட்டகாசம் செய்வதாக பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கம் தெரிவித்துள்ளது. சட்டத்தை மதித்து வீதி ஓரத்தில் யாருக்கும் எந்த வித பாதிப்பும் இன்றி அகிம்சை ரீதியாக முன்னெடுக்கப்படும் போராட்டத்தை அச்சுறுத்தும் வகையில் தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்ட காவல்துறையினர் செயற்பட்டு வருகின்றனர். மட்டக்களப்பு மாவட்ட மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் நடைபெற்று வரும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை முடக்கும் நோக்க…
-
- 2 replies
- 700 views
-
-
(எம்.நியூட்டன்) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய உயர்ஸ்தானிகர் நீதி வேண்டி தொடர் போராட்டத்தில் ஈடுபடும் தங்களை சந்திக்காமல் சென்றது ஏன் என போராட்டத்தில் ஈடுபடுவோர் கவலை வெளியிட்டுள்ளனர். இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேடுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 13வது நாளாக நேற்றும் தொடர்கின்றது. நீதி வேண்டிய இந்த போராட்டம் நல்லூர் - நல்லை ஆதீனம் முன்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. நேற்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்கலே மரியாதை நிமித்தம…
-
- 0 replies
- 275 views
-
-
தமிழர் தேசத்துக்கு பெருத்த ஏமாற்றம் – நிராகரிக்கின்றோம் : ஐ.நாவில் சமர்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவு தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சிறிலங்காவுக்கு மேலும் ஒரு காலநீடிப்பினை வழங்கி, பொறுப்புக்கூறலை நீர்த்துப் போகச் செய்கின்ற வகையில், ஐ.நா மனித உரிமைச்சபையில் சமர்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவினை முற்றாக நிராகரிப்பதாக தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், நீதிக்காக போராடும் தமிழர் தேசத்துக்கு இது பெருத்த ஏமாற்றத்தை தருவதாக அமைகின்றது எனத் தெரிவித்துள்ளது. தீர்மானம் என அமைந்த முதல் வரைவு தமிழர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை தருவாக அமைந்திருந்த நிலையில், சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு பாரப்படுத்த வேண்டும் என…
-
- 0 replies
- 352 views
-
-
யாழ். காணி மறுசீரமைமப்பு ஆணைக்குழுவின் ஆவணங்கள் அனுராதபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன! யாழ்ப்பாணத்தில் உள்ள காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் அலுவலகத்தில் இருந்த ஆவணங்களின் ஒரு தொகுதி அனுராதபுரத்திற்கு அனுராதபுரம் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இதனை காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் வடக்கு வலய பணிப்பாளர் தி.விமலன் உறுதிப்படுத்தியுள்ளார். வடக்கு மாகாணத்திற்கான காணி சீர்திருத்தத்திற்கான பிராந்திய அலுவலகம் இதுவரை காலமும் யாழ். கச்சேரியிலிருந்து செயற்பட்டு வந்த நிலையில், குறித்த அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள் இரவோடு இரவாக, மின்சாரம் தடைப்பட்டிருந்த நேரத்தில் மாற்றப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதல…
-
- 0 replies
- 344 views
-
-
யாழ்ப்பாணம்- சென்னைக்கு இடையிலான விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை! கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்ட யாழ்ப்பாணம்- சென்னைக்கு இடையிலான நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்க அரசாங்கம் தயாராகி வருகின்றது. இதேவேளை இரத்மலானை- யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு இடையே உள்நாட்டு விமான சேவையையும் விரைவில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். பலாலி மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்களை சர்வதேச விமான நிலையங்களாக அபிவிருத்தி செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்திய அரசின் உதவியுடன் 300 மில்லியன் ரூபாய் செலவில், புனித மடு மாதா தேவாலயத்தில் யாத்திரிகர்களுக்கான 144 இடைத்தங்கல் வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல்…
-
- 0 replies
- 438 views
-
-
சர்வதேசத்தை புறந்தள்ளி செயற்பட்டால் பேராபத்து ஏற்படும் – எச்சரிக்கும் சம்பந்தன்! இலங்கை இராணுவத்தினர் போர்க்குற்றங்களை இழைக்கவில்லையெனில் அது தொடர்பான விசாரணைக்கு ஏன் அஞ்சுகின்றீர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கேள்வி எழுப்பியுள்ளார். ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘இலங்கையில் இறுதிப்போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பரிகாரம் கிடைக்க வேண்டும் என்பதும் எமது வேண்டுகோளாகும். இதை நாம், 2009இல் போர் நிறைவுக்கு வந்தத…
-
- 10 replies
- 594 views
-
-
உலகில் எங்கும் இலங்கையைப் போன்றதொரு முட்டாள்தனமான கொள்கைகளை உடைய நாடு கிடையாது என சர்வோதய அமைப்பின் தலைவர் கலாநிதி ஏ.ரீ.ஆரியரட்ன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், இந்த நாட்டுக்கு நாள் தோறும் வெளிநாடுகளில் வேலை செய்து கையில் எந்தப் பணமும் இன்றி பலர் நாடு திரும்புகின்றனர்.எனது மகன் வெளிநாடு ஒன்றின் விமான சேவை நிறுவனமொன்றின் பணிப்பாளர், அவருக்கு கோவிட் இல்லை. அவர் எங்களைப் பார்வையிட வந்து நான்கு ஐந்து நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்கின்றார். தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஹோட்டலுக்கு இரண்டு லட்சத்திற்கும் மேல் செலவிட வேண்டும் விமான டிக்கட்டுக்கு சில …
-
- 0 replies
- 433 views
-
-
எங்களது உறவுகளைத் தேடும் உரிமை எங்களுக்கு இருக்கின்றது-அ.அமலநாயகி 17 Views “எங்களது உறவுகளை தேடும் உரிமை எங்களுக்கு இருக்கின்றது,எங்களது உறவுகளுக்கு என்ன நடந்தது என்று கேட்கும் உரிமை எங்களுக்கு இருக்கின்றது“ என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவி அ.அமலநாயகி தெரிவித்தார். மேலும் வீதியோரங்களில் இருந்து தங்களது உறவுகளை தேடமுடியாத நிலையிலேயே தாங்கள் இன்று கண்ணீர்விட்டு வருவதாகவும் அவர் கூறினார். மட்டக்களப்பு,மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் தமிழர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு சர்வதேசத்தின் நீதியை எதிர்பார்த்து முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்…
-
- 0 replies
- 282 views
-
-
http://static2.tamilmirror.lk/assets/uploads/image_09057ea04d.jpgசெ. கீதாஞ்சன் முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கோணமடு பிள்ளையார் கோவிலில், 30 ஆண்டுகளுக்குப் பின்னர், இன்று (11) காலை சிவராத்திரி வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. 1990ஆம் ஆண்டுக்குப் பின்னர், ஸ்ரீ கோணமடு பிள்ளையார் கோவில் புனர்நிர்மானம் செய்யப்பட்டு, இம்முறையே சிவராத்திரி வழிபாடுகள் சிறப்புற நடைபெற்றுள்ளன. இதன்போது, முள்ளியவளை, தண்ணீருற்று, குமுழமுனை கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பலர் வழிபாடுகளில் கலந்கொண்டனர். அத்துடன், அப்பகுதியில் பொலிஸாரும் படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டதாக, மக்கள் தெரிவித்தனர். Tamilmirror Online || 30 ஆண்டுகளின் பின்னர்…
-
- 1 reply
- 356 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கையில் இயங்கும் பதினொரு அமைப்புகள் அரசாங்கத்தினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றை தடைசெய்வதுடன் அந்த அமைப்புகளின் தலைவர்களை கைது செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர சபையில் தெரிவித்தார். நாட்டின் தேசிய பாதுகாப்பை கருத்தைக் கொண்டு புர்காவை உடனடியாக தடை செய்யவும், இஸ்லாமிய பாடப்புத்தகங்களில் உள்வாங்கப்பட்டுள்ள வஹாபி, சலபி கொள்கைகளை நீக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் சபையில் சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் தீர்மானத்தை சபையில் முன்வைத்து கருத்துக்களை கூறிய போத…
-
- 0 replies
- 412 views
-
-
( ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கையின் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மத அமைப்பான ஜம்-இயத்துல் உலமா சபை வஹாபிசத்தை அங்கீகரித்துள்ளதாகவும், இஸ்லாமிய வஹாபிசத்தை அடியோடு ஒழிக்க கட்சி பேதமின்று ஒன்றிணைய வேண்டும் எனவும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர் சபையில் ஆவேசமாக தெரிவித்தார். அதேபோல் இலங்கையில் திட்டமிட்ட முஸ்லிம் மயமாக்கல் இடம்பெற்றுக்கொண்டுள்ளது. நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு முஸ்லிம் குடியேற்றங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஆளும் கட்சி கொ…
-
- 0 replies
- 300 views
-
-
(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) இறுதி யுத்தத்தில் எமது மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இன அழிப்புக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும், பொறுப்புக்கூறலை நிறைவேற்ற வேண்டும் என பதினொரு ஆண்டுகளாக நாம் வலியுறுத்திக்கொண்டுள்ளோம், அதனையே இரண்டு ஆண்டுகளில் கிறிஸ்தவ சமூகம் இன்று கேட்கும் நிலைமை உருவாகியுள்ளது. எனவே உள்ளக விசாரணை பொறிமுறையில் நம்பிக்கை இல்லை என்பதை இன்று நிரூபனமாகிவிட்டது எனவும் பொறுப்புக்கூறலை நிறைவேற்றுவதில் இராச்சியம் தோற்றுவிட்டது எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் சபையில் தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஆளும் கட்சி கொண்டுவந்த சபை ஒத…
-
- 5 replies
- 675 views
-
-
வீட்டுத் திட்ட நிலுவைத் தொகையை வழங்க ஏற்பாடு செய்யுங்கள்-அரசாங்கத்திற்கு செல்வம் அடைக்கலநாதன் கடிதம் 21 Views தொடங்கப்பட்டு நிறைவுக்கு எட்டாத வீட்டுத்திட்ட நிலுவைத் தொகையை வழங்குமாறு வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பிரதமருக்கு கடிதம் மூலம் கோரியுள்ளார். இன்று அவர் பிரதமர் மகிந்த ராஜபக்சேவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், “முன்னாள் வீடமைப்பு மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் காலப்பகுதியில் மன்னார்,வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களிலும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை ஊடாக ஆரம்பிக்கப்பட்ட வீட…
-
- 0 replies
- 431 views
-
-
வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்கள் வீதி மறியல் போராட்டம் 20 Views வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக இன்று இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டு, அப்போதைய ஆளுநர் எடுத்த முயற்சியின் பயனாக வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்களுக்கு சுகாதாரப் பணியாளர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கி வைக்கப்பட்டது. எனினும், குறித்த நியமனத்தில் முறைகேடு இடம்பெற்றதாகப் பாதிக்கப்பட்ட சுகாதாரப் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக அந்த நியமனங்கள் அனைத்தும் இடைநிறுத்தப் பட்டுள்ளன. இதையடுத்து நிரந்தர நியமனக் கடிதம் பெற்ற சுக…
-
- 0 replies
- 249 views
-