Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ் துப்பரவுத் தொழிலாளர்கள் : செய்யும் தொழிலைச் சொன்னால் ' அம்மா..அப்ப வெளிய நில்லுங்க' என்பார்கள்

    • 0 replies
    • 550 views
  2. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) பொலிஸ் அதிகாரங்களை எக்காரணம் கொண்டும் மாநகர சபைகள் கையில் எடுக்க இடமளிக்க முடியாது. நகர மேயருக்கும் இது பொருந்தும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சபையில் தெரிவித்தார். நாட்டின் சட்டத்தை முறைதவறி செயற்படுத்த அரசாங்கம் தயாரில்லை எனவும் அவர் கூறினார். யாழ். மாநகரசபை மேயர் மணிவண்ணன் கைது செய்யப்பட்டுள்ளமை குறித்து இன்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் தமிழ் எம்.பிக்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்பதை தெரிவிக்கும் போதே அமைச்சர்களான தினேஷ் குணவர்தன மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் இவ்வாறு கூறினார். இது குறித்து அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறுகையில், யாழ் மேயர் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம்…

  3. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) மக்கள் பிரதிநிதி என்ற வகையில் பாராளுமன்றத்தில் எனது பேச்சு, கருத்து சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ள இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க மீது சபாநாயகர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் சபையில் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து கூறும்போதே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். அவர் மேலும் கூறுகையில், கடந்த 7 ஆம் திகதி நான் இந்த சபையில் ஆற்றிய உரை தொடர்பில் 8 ஆம் திகதி தனது கருத்தை முன்வைத்த இராஜாங்க அமைச்சரான செஹான்சேமசிங்க, என்னை உடனடியாக குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணை செய்ய…

    • 1 reply
    • 651 views
  4. இலங்கையின் நான்கு பிரதான மீன்பிடித் துறைமுகங்களையும் அபிவிருத்திசெய்ய பிரான்ஸ் ஆர்வம்! இலங்கையில் உள்ள நான்கு பிரதான மீன்பிடித் துறைமுகங்களையும் அபிவிருத்தி செய்வதற்கு பிரான்ஸ் ஆர்வமாக உள்ளதாக அந்நாட்டு தூதுவர் எரிக் லெவரூட் தெரிவித்துள்ளார். கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் பிரான்ஸ் தூதுவர் எரிக் லெவரூட் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு நேற்று (புதன்கிழமை) கடற்றொழில் அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது. கடற்றொழில், நீர்வேளாண்மை ஆகிய துறைகளில் மேற்கொள்ளக்கூடிய அபிவிருத்தி தொடர்பாக இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டது. இதன்போது கருத்துத் தெரிவித்த பிரான்ஸ் தூதுவர், தென்பகுதியிலுள்ள காலி, பேருவளை, குடாவெல்ல மற்றும் குரானவெல்ல ஆகிய நான்கு மீன்பிடித் த…

  5. மணல் மாபியா குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றார் சாணக்கியன் மணல் மாபியாக்களின் செயற்பாடுகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார். பாதுகாப்பு ஆலோசனைக்குழுக் கூட்டம் நேற்று வியாழக்கிழமை பாராளுமன்ற கட்டத்தொகுதியில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றிருந்தது. இதன்போதே குறித்த விடயம் தொடர்பாக இரா.சாணக்கியன், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தார். வவுனியா மற்றும் அம்பாறையில் முன்னெடுக்கப்பட்டு வரும் சட்டவிரோத மண் அகழ்வு குறித்தும் இரா.சாணக்கியன், ஜனாதிபதியின் கனவத்திற்கு கொண்டு சென்றிருந்தா…

  6. பொன்சேகாவை... கழுதை, என்று அழைத்தமைக்கு.. மன்னிப்பு கோரினார் சமல்! அமைச்சர் சமல் ராஜபக்ஷ இன்று நாடாளுமன்றத்தில் நடந்த வார்த்தைப் போரின்போது முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை கழுதை என்று அழைத்தமைக்கு மன்னிப்பு கோரினார். நாடாளுமன்றத்தில் இன்று காலை (வியாழக்கிழமை) அமைதியின்மை ஏற்பட்டிருந்தது. அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் பெயரைக் குறிப்பிட்டு சரத் பொன்சேகா ஒரு சில கருத்துக்களை பகிர்ந்திருந்தார். இதன்காரணமாக இருவருக்கும் இடையில் வார்த்தைப் போர் இடம்பெற்றிருந்தது. 2010 மற்றும் 2015 ஆண்டுகளுக்கிடையில் தான் அன்றைய அரசாங்கத்தால் அநியாயமாக நடத்தப்பட்டேன் என சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார். மேலும் தனக்கு விதிக்கப்பட்ட தேவையற்ற தண்ட…

  7. அடிப்படைவாதத்தைக் கற்பித்ததாக மௌலவி மற்றும் பாடசாலை ஆசிரியர் கைது! அடிப்படைவாதத்தைப் போதித்ததாக இருவர் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம், ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த அரபுக் கல்லூரி மௌலவியும், பாடசாலை ஆசிரியர் ஒருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று (புதன்கிழமை) கைதுசெய்யப்பட்டதுடன் விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பயங்கரவாதப் புலனாய்வுத் தடுப்புப் பிரிவினர், முஸ்லிம் அடிப்படைவாத போதனை மற்றும் தீவிரவாதச் செயற்பாடு தொடர்பாக மேற்கொண்டு வந்த விசாரணையின் ஒரு கட்டமாகவே இவர்கள் கைதாகியுள்ளனர். இதன்படி, கடந்த 2018ஆம் ஆண்டு க.பொ.த. …

  8. தமிழ் அரசியல் கைதியின் தாயொருவருக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல்! தமிழ் அரசியல் கைதி ஒருவரின் தாயாருக்குத் தொலைபேசி ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. தமிழ் அரசியல் கைதி ஒருவரின் தாயாரான கோண்டாவில் கிழக்கில் வசிக்கும் தேவராசா தேவராணி, அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தொடர்ந்து போராடி வருகிறார். இவர் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக ஒழுங்குபடுத்தப்படும் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு தனது கோரிக்கையை முன்வைத்து வருகிறார். இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்டு கைதிகளுக்க…

  9. யாழ். மாநகர சபை காவல் படையின் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு பொலிஸார் உத்தரவு யாழ்ப்பாணம் மாநகர சபையால் காவலாளி சேவையை நடத்துவதற்கே பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில், காவல் படை என்ற பெயரில் அரச துறையில் ஐவரை கடைமைக்கு அமர்த்தியமை தொடர்பிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டது.அத்துடன் தமிழீழ காவல்துறையின் சீருடையை ஒத்த சீருடைய அணிந்தமை தொடர்பில் கடமைக்கு அமர்த்தப்பட்ட ஐவரையும் வாக்குமூலம் வழங்க அழைக்குமாறு பொலிஸாரால் கோரப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ். மாநகர சபை காவல் படையின் கடமைகளை உடனடியாக நிறுத்துமாறு மாநகர சபைக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.அத்தோடு, காவல் படையின் சீருடையைப் பெற்று அதனை கொழும்புக…

  10. சமஷ்டி அரசமைப்பின் மூலமாகவே நாட்டைப் பாதுகாக்க முடியும் – நிபுணர் குழுவிடம் விக்கி 58 Views சமஷ்டி அல்லது கூட்டாட்சி முறைமையிலான அரசமைப்பு உருவாக்கப்பட்டதால்தான் இந்த நாடு பேரழிவிலிருந்து மீண்டெழுந்து அமைதி, சமாதானம், அபிவிருத்தி, நல்லிணக்கம் ஆகிய உயர் வழிகளில் மேலுயர முடியும் என புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான நிபுணர் குழு முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி தெரிவித்திருக்கின்றது. கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத் தொகுதியில் உள்ள அரசியலமைப்பு நிபுணர் குழுவின் கலந்துரையாடல் மண்டபத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற மேற்படி சந்திப்பில் தமிழ் மக்கள் தே…

  11. ஒற்றையாட்சி பெருந்தோல்வி ; கூட்டாட்சி அல்லது சமஷ்டியே உகந்த தீர்வு புதிய அரசியலமைப்பு தொடர்பாக தமிழ்மக்கள் தேசிய கூட்டணி யின் யோசனை தற்போது நடைமுறையிலுள்ள ஒற்றை ஆட்சி முறையைக் கைவிட்டு கூட்டு சம்மேளன முறைமையிலான ஏற்பாட்டை உள்ளீர்த்துக்கொள்ளுமாறு தமிழ் மக்கள் தேசிய கூட்டணி யோசனை தெரிவித்திருப்பதுடன் இந்த சமஷ்டி முறைமையில் இலங்கை நான்கு மாநிலங்களாக இருக்க முடியுமென்றும் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையின் புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் நிபுணர் குழுவை நேற்றுப் புதன்கிழமை சந்தித்தபோது இந்த யோசனையை முன்வைத்திருக்கும் வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் யாழ் மாவட்டஎம்.பி.யான சி. வி. விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இந்த யோசனையி…

    • 0 replies
    • 259 views
  12. வெளியே வா’ பொன்சேகாவுக்கு சமல் சவால் ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் எம்.பி பதவி பலவந்தமாக பறிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி எதிரணியினர் சபைக்குள் எதிர்ப்பு இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளால் சபை நடவடிக்கைகள் சில நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த எதிர்ப்பு நடவடிக்கையின் போது, ஆளும்கட்சியின் உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றன. பதற்றமான நிலைமையில், அமைச்சர் சமல் ராஜபக்ஷவுக்கும் எதிர்க்கட்சியின் எம்.பியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் கடுமையான வாக்கு…

    • 0 replies
    • 518 views
  13. சிங்கள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் சாணக்கியன்! சீன ஆக்கிரமிப்பினால் எதிர்காலத்தில் சிங்கள சமூகத்திற்கு இடையிலேயே கிளர்ச்சியொன்று உருவாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ´இலங்கையர்கள் குறித்து வெளிநாட்டவர் மத்தியில் நல்லதொரு எண்ணப்பாடு உள்ளது. இலங்கையர்கள் இரக்கம் கொண்டவர்கள், நல்லவர்கள் என்ற நல்லதொரு விம்பம் உள்ளது. இலங்கையர்கள் வெளிநாட்டவர்களிடம் அன்பாக இருந்தாலும் கூட சக இலங்கையர்களிடம் அவ்வாறு இருப்பதில்லை. 1949 ஆம் ஆண்டில் …

    • 0 replies
    • 564 views
  14. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி இனங்காணப்பட்டுள்ளதாக அரசாங்கம் தகவல் 48 Views உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகளாக இருவர் இனங்காணப்பட்டுள்ளனர் என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். உயித்த ஞாயிறு தாக்குதலாளிகளின் பிரதான சூத்திரதாரிகளை கண்டறியுமாறு அரசுக்கு எதிர்க்கட்சிகள் கடும் அழுத்தம் கொடுத்துவரும் நிலையில் இன்று மாலை கொழும்பில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இவ்வாறு தெரிவித்துள்ளார். தற்போது சிறையிலுள்ள மௌலவி. மொஹமட் இப்ராஹிம் முகமது நௌபர் மற்றும் ஹஜ்ஜுல் அக்பர் ஆகிய இருவருமே பிரதான சூத்திரதாரிகளா…

    • 2 replies
    • 508 views
  15. சர்வதேச நீதிமன்றத்தின் முன்னால் இலங்கையைகொண்டு செல்ல முடியாது என்பதற்காக இலங்கை அலட்சியமாகயிருக்க முடியாது -ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானம் தொடர்பில் நாடு ஐக்கியப்பட்டுஒருமித்த நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் அல்லது விளைவுகளை எதிர்கொள்ளவேண்டும் என ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி சகி கலகே தெரிவித்துள்ளார். ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் விசாரணை பொறிமுறை தொடர்பில் மாற்றுக்கருத்துக்கள் எவையும் காணப்படக்கூடாது என அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் ஜெனீவாவின்நிகழ்ச்சி நிரலில் இருக்கின்றோம்,நாங்கள் அச்சுறுத்தல்கள் …

    • 4 replies
    • 476 views
  16. புலிகளால் கூட ஒரே நேரத்தில்... 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ் விடுதலைப் புலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை என அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றிய அவர், ஈஸ்டர் தாக்குதலுக்கு பின்னணியில் உள்ள சக்திகள் குறித்து தேசியமற்றும் சர்வதேச ரீதியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் கூறினார். ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக இதுவரை 97 பேர் அளவில் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்றும் 36 விசாரணைகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன என்றும் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டார். அரசாங்கம் யாரையும் பாதுகாக்கவோ குற்றங்களை மூடி மறை…

    • 1 reply
    • 506 views
  17. ஒரு இனத்தை மையப்படுத்தி அதனை அடக்க முற்படவேண்டாம் - ரிஷாத் பதியுதீன் (ஆர்.யசி,எம்.ஆர்.எம்.வசீம்) நாட்டில் ஒரு இனத்தை மாத்திரம் இலக்குவைத்து அடக்க முற்படக்கூடாது. இஸ்லாத்துக்கு எதிராக ஒருசில மதகுருமார்கள் செயற்படுகின்றார்கள். அவர்களை கட்டுப்படுத்த தவறினால் அதுவே நாட்டில் இடம்பெறும் பேரழிவுகளுக்கு காரணமாக அமையலாம் என ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஏப்ரல் தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை மீதான நான்காவது நாள் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டிலே ஒரு இனத்தை மையப்படு…

  18. “கூட்டு சமஷ்டி முறைமையே தீர்வாக அமையும்”: புதிய அரசியல் அமைப்பு வரைபு நிபுணர்குழுவிடம் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தல் இலங்கையின் நீண்டகால அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின், புதிய அரசியல் அமைப்பில் கூட்டு சமஷ்டி முறை உள்வாங்கப்பட வேண்டும் என புதிய அரசியல் அமைப்பு வரைபு நிபுணர்குழுவிடம் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அமைந்துள்ள புதிய அரசியல் அமைப்பு வரைபு நிபுணர் குழுவினரை இன்று சந்தித்த போதே அவர் இதனை கூறியுள்ளார். ஒற்றை ஆட்சியின் கீழ் பெரும்பான்…

    • 1 reply
    • 252 views
  19. புதிய சட்டமூலம் நிறைவேறியதும் மாகாணசபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் தீர்மானம் SayanolipavanApril 8, 2021 மாகாணசபைத் தேர்தலை வெகுவிரைவில் நடத்த அரசாங்கம் தீர் மானித்துள்ளதாகவும் அதற்கமைய புதிய சட்ட மூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர் மேலும் காலம் தாழ்த்தாமல் வெகு விரைவாகத் தேர்தலை நடத்தும் நிலைப் பாட்டில் அரசாங்கம் உறுதியாகவுள்ளதெனவும் அமைச்சரவை பேச்சாளர் கெெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் தெளிவானதொரு தீர்மானம் எடுக்கப் பட்டுள்ளது. எமது தேர்தல் பிரசாரத்திற்கமைய விருப்பு வாக்கு முறைமையை நீக்கி, 70வீதம் தொகுதிவாரி முறைமையின் அடிப்படையிலும் 30வீதம் விகிதாசார முறைமையினடிப்படையிலும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்வைக்கப்பட்டுள்ள பரி…

  20. தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைக் காரணமாக 30 வருடகால யுத்தம் இடம்பெற்றது – இரா.சாணக்கியன் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட வன்முறைக் காரணமாக 30 வருடகால யுத்தம் இடம்பெற்றது. அதேபோன்று முஸ்லிம் சமூகம் இன்று பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளது.இவ்வாறான பிரச்சினைகளை வைத்துக் கொண்டு அரசியல் செய்ய முற்படக்கூடாது. அரசாங்கம் தனது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள 2021 ஆம் ஆண்டளவில் இன்னொரு தாக்குதலுக்கும் திட்டமிட்டால் கூட சந்தேகப்படுவதற்கில்லை.ஏனெனில், இவர்கள்தான் கடந்த காலங்களில் சஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியவர்கள். அவரைப் போன்ற ஒருவர் மீண்டும் இந்த அரசாங்கத்துக்கு கிடைத்திருக்கலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன…

  21. புலிகளின் தலைவரின் படத்தை அலைபேசியில் வைத்திருந்தவர் விளக்கமறியலில்! April 8, 2021 தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் ஒளிப்படத்தை அலைபேசியில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. கோப்பாய் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அவர் விசாரணைகளின் நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 120ஆம் பிரிவின் கீழ் வெறுப்பைத் தூண்டுதல் அல்லது எத்தனித்தலின் கீழ் இளைஞன் மீது பி அறிக்கையை கோப்பாய் பொலிஸார் தாக்கல் செய்தனர். வழக்கை வி…

  22. (இராஜதுரை ஹஷான்) ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையினை எதிர்வரும் 21 ஆம் திகதிக்குள் செயற்படுத்தாவிடின் வீதிக்கிறங்கி போராடுவதாக மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை குறிப்பிட்டுள்ளதை ஏற்றுக் கொள்கிறோம். கத்தோலிக்க மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள முடிகிறது. குற்றவாளிகளை சட்டத்தில் முன்னிலைப்படுத்த முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகள் மீது கத்தோலிக்க மக்கள் நம்பிக்கைகொள்ள வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார். கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், பொ…

    • 1 reply
    • 441 views
  23. வவுனியாவில் காணாமல் போன தனது மகனைத் தேடிவந்த தந்தை ஒருவர் சுகவீனம் காரணமாக இன்று மரணமடைந்துள்ளார். வவுனியா தாலிக்குளம் பகுதியை சேர்ந்த சந்தணம் ராகவன் வயது 65 என்ற தந்தையே மரணமடைந்துள்ளார். இவரது மகன் ராஜ்குமார் கடந்த 2008 ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டிருந்தார் . அவரைத்தேடி வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களில் குறித்த தந்தை கலந்து கொண்டு தனது மகனை கண்டுபிடிப்பதற்காக தொடர்ச்சியாக போராடியிருந்தார். இந்நிலையில் மகனை காணாமலேயே அவர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மகனைத்தேடிய தந்தை மரணம் ! தொடரும் துயரம் ! | Virakesari.lk

  24. (எம்.மனோசித்ரா) அமைச்சரொருவர் முன்வைக்கும் எந்தவொரு யோசனையும் உடனடியாக சட்டமாக்கப்பட மாட்டாது. அமைச்சரவையில் முன்வைக்கப்படுகின்ற யோசனைகளில் காலத்திற்கு உகந்தவை தொடர்பில் மாத்திரமே துரித நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றை ஊடகவியலாளர் சந்திப்பின் போது கேட்டப்பட்ட கேள்விக்குக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். கேள்வி : புர்கா தடை மற்றும் இளைஞர்களுக்கான இராணுவ பயிற்சி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் அமைச்சர் சரத் வீரசேகரவால் வெளியிடப்பட்ட கருத்துக்கள் , நாட்டில் தற்போது காணப்படுகின்ற பிரச்சினைகளை மறைத்து மக்களை ஏமாற்றுவதற்காகவா? அந்த யோச…

  25. அத்துமீறும் இந்திய மீனவர்களின் படகுகளை அழித்துவிடுங்கள் – பொது மீனவர் சம்மேளனம் வலியுறுத்தல் 25 Views இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழையும் இந்திய மீன்பிடிப் படகுகளை அழித்துவிடுமாறு அகில இலங்கை பொது மீனவர் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் ரத்ன கமகே வலியுறுத்தியுள்ளார். இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு இந்திய மீன்பிடி படகுகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அண்மையில் கடற்றொழில் அமைச்சர் கூறியிருந்தார். இது குறித்து ஊடகங்களிடம் அவர் கருத்து தெரிவிக்கையில், வடக்கு கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் உரிமை இதன் மூலம் மீறப்படும் . கடற்றொழில் அமைச்சர் அவரின் கூற்றை மீளப்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.