Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கான பரிந்துரைகள் எவையும் இல்லை – சிபோன் 21 Views ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பிரித்தானியா சமர்ப்பித்துள்ள தீர்மானத்தில் சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து பொறுப்புக் கூறலை முன்னெடுப்பதற்கான எந்த பரிந்துரைகளும் இல்லை என இன்று (18) பிரித்தானியா நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சிறீலங்கா தொடர்பான விவாதத்தின் போது பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் சிபொன் மக்டொனாக் தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானம் தோல்வியான தீர்மானம் அது ஏமாற்றம் தருகின்றது. அனைத்துலக நீதிமன்றத்திற்கு சிறீலங்காவை பாரப்படுத்துவதற்கான…

  2. சிங்கராஜ வனம் தொடர்பில் கருத்து வௌியிட்ட யுவதியிடம் வாக்குமூலம் பதிவு சிங்கராஜா வனப்பகுதியில் காடழிப்பு இடம்பெறுவதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை லக்‌ஷபதி நிகழ்ச்சியில் தெரிவித்த மாணவியிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். இரத்தினபுரி பிரதேச சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் கீழ் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

    • 0 replies
    • 441 views
  3. (எம்.மனோசித்ரா) இராணுவத்தில் சேவையாற்றிய போது படைகளுக்கு கட்டளையிட்டதைப் போன்று நாட்டை நிர்வகிக்க முடியாது என்று அமைச்சர் சரத் வீரசேகரவிடம் தெரிவிக்க விரும்புகின்றோம். மத்ரசா பாடசாலைகள் என்றால் என்ன என்பதை முதலில் அவர் புரிந்து கொள்ள வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், மத்ரசா பாடசாலைகளை தடை செய்ய வேண்டும் என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். இராணுவத்தின் சேவையாற்றிய போது படைகளுக்கு கட்டளையிட்டதைப் போன்று நாட்டை ஆட்சி செய்ய முடியாது என அவரிடம் தெரிவிக்க விரும்புகின்றோம். மத்ரசா பாடசாலைகள் என்றால் என்ன என்பதை அவர் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மத்ரசா பாடசாலைகள் என்பது ஏனைய மதங்களில் காணப்படும் அ…

  4. உறவுகளைத் தேடி உண்ணாநோன்பிருக்கும் தாய்மாருக்கு ரெலோ ஆதரவு 28 Views காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சர்வதேச நீதி கோரி திருகோணமலை மாவட்டத்தில் சிவன் கோயிலுக்கு முன்பாக முன்னெடுத்திருக்கும் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்துக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளது. குறித்த விடையம் தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் நிர்வாகச் செயலாளர் நித்தி மாஸ்டர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், ”போரின் இறுதியில் நடைபெற்ற வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர், இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றுக்கு ஐ நா மனிதவுரி…

  5. விடுதலை புலிகளின் உடமைகளை தேடி கிளிநொச்சியில் அகழ்வு பணி கிளிநொச்சியின் இரு வேறு இடங்களில் விடுதலைப்புலிகளின் உடமைகளைத் தேடி அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. பாரதிபுரம் பாடசாலைக்கு பின்பகுதியில் விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் குடியிருந்ததாக கருதப்படும் இரு வேறு இடங்களில், கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் குறித்த அகழ்வுப் பணிக்காக அனுமதி பெறப்பட்டு அகழ்வுப் பணிகள் நேற்று முன்னெடுக்கப்பட்டன. கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி. சரவணராஜாவின் கண்காணிப்பின் கீழ் குறித்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இரு அகழ்வுப் பணிகளிலும் எவ்விதமான பொருட்களும் அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், குறித்த பணியை இடைநிறுத்துமாறு நீதவான் …

  6. சுற்றுலாமையத்தின் சட்டவிரோத கட்டடங்கள் இடிக்கப்படும்- நகரசபையில் இறுக்கமான தீர்மானம் 15 Views வவுனியா குளத்தில் அமைக்கப்பட்ட சுற்றுலா மையத்திற்குள் நகரசபையின் அனுமதியின்றி அமைக்கப்பட்ட அனைத்து கட்டடங்களும் இடிக்கப்படும் என இன்று இடம்பெற்ற சபை அமர்வில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வவுனியா நகரசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் இ.கௌதமன் தலைமையில் இன்று (18) இடம்பெற்றது. இதன்போது குறித்த சுற்றுலா மையத்திற்குள் சபையின் அனுமதியின்றி மேலதிக நிர்மானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக உறுப்பினர்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து அந்த கட்டடங்களை அகற்றுவதற்கு சபை தீர்மானம் எடுக்கவேண்டும் என்…

  7. நூருள் ஹுதா உமர்- இன‌ங்க‌ள் ம‌த்தியில் ஒற்றுமையையும், புரிந்துண‌ர்வையும் ஏற்ப‌டுத்துவ‌த‌ற்கு ப‌திலாக‌ எப்போது பார்த்தாலும் முஸ்லிம்க‌ளை "கிண்டு"வ‌தில்த்தான் அந்த‌ ஆட்சி முய‌ன்ற‌து. முஸ்லிம்க‌ள் என்ன‌ சாப்பிடுகிறார்க‌ள், என்ன‌ உடுக்கிறார்க‌ள், கொத்துக்குள் க‌ர்ப்ப‌த்த‌டை, ஜ‌ட்டிக்குள் க‌ர்ப்ப‌த்த‌டை, அபாயா, முக‌ம் மூடுத‌ல், அர‌பு ம‌துர‌சா, ஹிஸ்புல்லாவின் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம் என‌ இவ‌ற்றைத்தான் அர‌ச‌ ஊட‌க‌ங்க‌ளும் த‌னியார் ஊட‌க‌ங்க‌ளும் பேசின‌ என்று உலமா கட்சி தலைவர் முபாரக் அப்துல் மஜீதினால் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் க‌ட‌ந்த‌ 2015ல் நாட்டுக்கு ந‌ல்ல‌தொரு ஆட்சியை கொண்டு வ‌ர‌ வேண்டும் என்ப‌த‌ற்காக‌ சில‌ சிங்க‌ள‌ ம‌க்க‌ளும் ப‌ல‌ த…

    • 0 replies
    • 443 views
  8. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்திக்கப் போவதில்லை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஜனாதிபதியின் அறிவிப்புக்கு அமைவாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை தான் சந்திக்கவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார். ஆனால் நாம் அவரை ஒரு போதும் சந்திக்கப் போவதில்லை அவரை சந்திக்கும் விருப்பமும் இல்லை என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் தலைவி யோ.கனகரஞ்சினி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களின் உறவினர்கள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் பொறுப்புக் கூற வேண்டும் என தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். …

  9. இலங்கை ரூபாவின் பெறுமதி ஜனவரி முதல் மார்ச் வரையான காலப்பகுதியில் 5.2 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க டொலரொன்றின் பெறுமதி 201.75 ரூபா வரை அதிகரித்துள்ள நிலையில், இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ளது. ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி : டொலரின் விலை 201.75 ரூபாவாக அதிகரிப்பு | Virakesari.lk

    • 15 replies
    • 1.1k views
  10. வெளிநாட்டு சக்திகளுடன் தொடர்பா? – சுதந்திர ஊடகவியலாளரிடம் காவல்துறை விசாரணை 23 Views மட்டக்களப்பு மாவட்ட சுதந்திர ஊடகவியலாளர் ஒருவர் இன்று காவல்துறையினரால் விசாரணைக்குட்படுத்தப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடவியலாளர் ஒன்றியத்தின் பொருளாளரும் உழைக்கும் ஊடவியலாளர் சம்மேளனத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவருமான புண்ணியமூர்த்தி சசிகரனே இவ்வாறு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். இன்று காலை 10.00மணி தொடக்கம் 11.30மணி வரையில் மட்டக்களப்பு சிரேஸ்ட காவல் அத்தியட்சகர் காரியாலயத்தில் உள்ள குற்ற விசாரணைப்பிரிவில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் ஊடகவியலாளரின் வீ…

  11. உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்த பெண் சுகாதார தொண்டர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி! March 15, 2021 வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவந்த பெண் சுகாதார தொண்டர் ஒருவர் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம் 8ஆவது நாளாக இன்றும் (திங்கட்கிழமை) தொடர்கின்றது.இந்த போராட்டத்தில் ஈடுபட்டுவந்த யாழ்ப்பாணம் – நிலாவரை பகுதியை சேர்ந்த செல்லத்துரை கஜனி எனும் பெண்ணின் உடல்நிலை திடீர் என மோசமடைந்ததால் 1990 எனும் அவசர நோயாளர் காவு வண்டியின் மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்…

    • 3 replies
    • 415 views
  12. தமிழர்களின் காணிகளை அபகரிக்கவே... யாழில் இருந்து இரவோடு இரவாக ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்டன- சுமந்திரன் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் ஆவணங்கள், யாழ்ப்பாணத்திலிருந்து வெளியே கொண்டு செல்லப்படுகின்றமையை, அரசாங்கம் தமிழ் மக்களின் காணிகளை அபகரிப்பதன் ஒரு கட்டமாகவே தாங்கள் பார்க்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இளந்தலைவர்களை சந்திப்பதற்கு இந்திய தூதுவர் அதிக ஆர்வம் காட்டியமையினால் உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள், முன்னாள் ம…

  13. கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேச மக்கள் இன்று (17.03.2021) மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இன்று காலை வட்டக்கச்சி பிரதேசத்திலிருந்து உழவு இயந்திரங்களில் கிளிநொச்சி காக்கா கடைச் சந்திக்கு வருகை தந்த மக்கள், அங்கிருந்து ஏ9 வீதியூடாக மாவட்டச் செயலகத்திற்கு சென்று, மாவட்ட அரச அதிபர் மற்றும் பொலிஸ் உயரதிகாரிகளுக்கான கோரிக்கை மனுவும் கையளிக்கப்பட்டன. கடந்த 10 ஆம் திகதி வட்டக்கச்சி பிரதேசத்தில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் சமூக செயற்பாட்டாளர் ஒருவர் மரணமடைந்திருந்தார். மரணமடைந்த இரண்டு குழந்தைகளின் தந்தையான 31 வயதுடைய அருளம்பலம் துஸ்யந்தன் கிராமத்தின் நலன்களில் அக்கறையுள்ள, நற்பிரஜை எனவும், சிறந்த விளையாட்டு வீரர் எனவும் தெரிவிக்கும் பொதுமக்கள்…

  14. (நா.தனுஜா) மதரீதியான அடிப்படைவாதம் மற்றும் இனங்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபடுவோரை இருவருடகாலத்திற்கு விசாரணைகளின்றித் தடுத்துவைக்கக்கூடிய வகையில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஆணை உடனடியாக இரத்துச்செய்யப்பட வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. 'இலங்கை 'மத ஒருமைப்பாடின்மைக்கு வழிவகுக்கும் ஆணை சிறுபான்மை சமூகத்தை அச்சுறுத்துகின்றது' என்ற தலைப்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது, மதரீதியான அடிப்படைவாதம் மற்றும் இனங்களுக்கிடையிலான ஒருமைப்பாட்டிற்கு…

  15. சர்வதேச விசாரணையை வலியுறுத்தி யாழில் இன்று பேரணி! இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறுகோரி, யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்துடன் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது. குறித்த போராட்டம், கிட்டுப்பூங்காவில் இன்று (புதன்கிழமை) முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகி பேரணியாகச் சென்று, தற்போது சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் இடம்பெற்றுவரும் நல்லை ஆதீனம் முன்பாக போராட்டம் நிறைவடையவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நீதிக்கான போராட்டத்தில், தமிழ்பேசும் மக்கள் அனைவரும் கலந்துக்கொண்டு, போராட்டத்துக்கு வலுச்சேர்க்க வேண்டும் என வடக்கு கிழக்கு பல்கழலைக் கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், குறித்…

    • 2 replies
    • 708 views
  16. ஜெனிவா பிரேரணையில் 40 நாடுகள் கையொப்பம் – சிறிலங்காவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி 42 Views ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக பிரிட்டன் தலைமையிலான நாடுகளால் கொண்டுவரப்படும் பிரேரணையில் 40 நாடுகள் கையொப்பமிடவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால், பிரேரணையைத் தோற்கடிப்பது என்பது சிறிலங்காவுக்கு மிகவும் நெருக்கடியானதாக அமைந்திருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. பிரேரணையின் இறுதி வரைபு அரசாங்கத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில் கைச்சாத்திடவுள்ள நாடுகளில் மார்ஷல் தீவுகளும், மலாவியும் மட்டும்தான் ஐரோப்பியா அல்லாத நாடுகளாகும். தற்போது கையொப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட 40 நாடுகளில் பெரும்பாலானவை ஐர…

  17. ஆதாரங்களை பாதுகாக்கும் பொறிமுறை – திட்டவட்டாக நிராகரிக்கும் சிறிலங்கா அரசாங்கம் 25 Views போர்க் குற்றங்கள் குறித்த எதிர்கால விசாரணைகளுக்காக ஆதாரங்களை பாதுகாப்பதற்கான அமைப்பினை உருவாக்கவேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. அவ்வாறான பொறிமுறைக்கு அரசாங்கம் இணங்காது. அனுமதியளிக்காது என வெளிவிவகார செயலாளர் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். நாங்கள் வெளிப்படையாக இதனை நிராகரிக்கின்றோம். இது மனித உரிமை பேரவையின் ஆணைக்கு அப்பாற்பட்ட விடயம் என அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்தை நிராகரிப்பதற்கு இலங்கை தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சி;ன்…

  18. - நூருல் ஹுதா உமர் தீவிர‌வாத‌த்துக்கு கார‌ண‌ம் மொழி அல்ல‌. த‌மிழ் தீவிர‌வாத‌த்துக்கு கார‌ண‌ம் த‌மிழ் மொழியா? ஜேவிபி தீவிர‌வாத‌த்துக்கு கார‌ண‌ம் சிங்கள‌ மொழியா? அர‌பு பேசுகின்ற‌ சவூதியும் ய‌ம‌னும் ச‌ண்டை பிடிக்கின்ற‌ன‌ர். இவ‌ர்க‌ளில் யார் தீவிர‌வாதி? பிரிட்ட‌னும் அய‌ர்லாந்தும் ஆங்கில‌ம் பேசும் நாடாக‌ இருந்தும் இர‌ண்டும் ஆயுத‌த்தால் ச‌ண்டை பிடித்த‌ன‌. ஆக‌வே தீவிர‌வாத‌த்துக்கும் மொழிக்கும் ச‌ம்ப‌ந்த‌ம் இல்லை. ஒவ்வொரு ச‌மூக‌மும் அடுத்த‌ ச‌மூக‌த்த‌வ‌ர் விட‌ய‌ங்க‌ளில் மூக்கை நுழைக்காமல் ஒருவ‌ரை ஒருவ‌ர் ம‌தித்து வாழ்ந்தால் தீவிர‌வாத‌த்தை இல‌குவாக‌ ஒழிக்க‌லாம் என என உல‌மா க‌ட்சி தலைவர் மௌலவி முபாற‌க் அப்துல் ம‌ஜீத் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்…

  19. அஸாத் சாலியின் வாகனத்திலிருந்து துப்பாக்கி மீட்பு! கைது செய்யப்பட்டுள்ள மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் சாலியின் வாகனத்திலிருந்து துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிபொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் அதற்கான தோட்டாக்களே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் சட்டத்திற்கு முரணான கருத்துக்களை முன்வைத்ததாக குறிப்பிடப்பட்டு, மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார். சட்டமா அதிபரின் ஆலோசணைக்கமைய அவர் நேற்று(செவ்வாய்கிழமை) மாலை கைதுசெய்யப்பட்டிருந்தார். மேலும், உயிர…

  20. அரபு நாடுகளின் நண்பனாகக் கூறும் இந்த அரசு, புர்காவை தடைசெய்து இனவாதிகளுக்கு இனிப்பூட்டுகிறது’ – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்! 20 Views புர்காவைத் தடைசெய்யும் தீர்மானத்தை அரசாங்கம் உடனடியாக வாபஸ்பெற வேண்டுமென்றும், இனவாதிகளைத் திருப்திப்படுத்தும் இவ்வாறான செயற்பாடுகள், சர்வதேசத்திலிருந்து எமது தாய்நாட்டை தனிமைப்படுத்தும் சூழலையே ஏற்படுத்துவதாகவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, முஸ்லிம்களை இலக்கு வைக்கும் இவ்வாறான நிகழ்ச்சி நிரல்களை, அரசாங்கம் கைவிடுவதாகத் தெரியவில்லை. ஆட்சிக்கு வர உதவிய இனவாதிகளைத் திருப்திப்படுத்தவே, …

    • 1 reply
    • 300 views
  21. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அபிவிருத்திக்கு எதிரானவர்கள் அல்ல – இரா.சாணக்கியன் 11 Views அபிவிருத்தி என்ற பெயரில் காணிகள் பறிபோவதற்கு நாங்கள் அனுமதி வழங்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். களுவாஞ்சிக்குடி பிரதேச சபை அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று இடம்பெற்றிருந்தது. அமைச்சர் சீதா அரம்பிபொல ஒரு நிகழ்ச்சியின் போது Vocational Training and Skills Development Ministry இனால் IT Incubation Centre (கணனிகளுடன் கூடிய) கொடுப்பதற்கான விடயம் குறித்து தெரிவித்த கருத்து தொடர்பாக இதன்போது பேசப்பட்டது. இந்தநிலையில் இதனை களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்த…

  22. சட்டவிரோதமான முறையில் கடல்வழியாக படகில் கனடா செல்ல புத்தளம் – கற்பிட்டி, குரக்கன்ஹேன வீடு ஒன்றில் தங்கியிருந்த 24 பேர் கடற்படையால் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் மட்டக்களப்பை சேர்ந்தவர்கள் என்றும், பயணிக்க பயன்படுத்திய லொறி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது எனவும் கடற்படை தெரிவித்தது. இவர்களில் தாயும் இரண்டு சிறு பிள்ளைகளும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. சட்டவிரோதமாக கனடா செல்ல காத்திருந்த 24 பேர் கைது! – உதயன் | UTHAYAN (newuthayan.com)

  23. யாழ். பேரணி வெற்றி பெற ஆதரவை வழங்க வேண்டும் என அன்போடும் உரிமையோடும் வேண்டுகோள் விடுக்கிறேன் – யாழ்.மாநகர முதல்வர் யாழ்ப்பாணத்தில் நாளைய தினம் நடைபெறவுள்ள போராட்டத்திற்கு வடக்கு , கிழக்கு மக்கள் உணர்வு பூர்மாக கலந்து கொண்டு போராட்டம் வெற்றி பெற ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்க வேண்டும் என யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.அந்த போராட்டத்தில் அனைத்து தரப்பினரையும் கலந்து கொள்ளுமாறு மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக கிழக்கு மாகாணத்தில் இருந்தும் பெருமளவான மக்கள் வரவுள்ளனர். எனவே வடக்கு கிழக்கு தமிழ் மக்களிடம் அன்போடும் உரிமையோடும் வேண்டுகோள் விடுக்கிறேன் , இ…

  24. தொல்லியல் திணைக்களத்தால் கிளிநொச்சியில் குறிவைக்கப்படும் மற்றுமொரு சிவனாலயம்..! கிளிநொச்சியில் அமைந்துள்ள உருத்திர புரீச்சகம் சிவனாலய வளாகத்தில் தொல்பொருள் ஆய்வுக்குரிய ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. அதன்படி எதிர்வரும் 23 ஆம் திகதி குறித்த பகுதியில் அகழ்வாராச்சி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த கோவில் வளாகம் இன்று (செவ்வாய்க்கிழமை) துப்பரவு செய்யப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த கோவில் அமைந்தள்ள வளாகத்தில் பௌத்த சின்னங்கள் காணப்புடுவதாக ஏற்கனவே தொல்பொருள் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலயைில் குருத்தூர் மலை விவகாரத்தின் பின்னர் குறித்த பகுதிக்கு பௌத்த துறவி ஒருவரும், பொலிஸாரும் சென்று பார்வையி…

  25. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வளங்களை சில அரசியல் வாதிகள் சூறையாடுவதற்கு சதி செய்து வருகின்றனர். இதை தடுத்து நிறுத்த மக்களை அணி திரளுமாறு முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம், வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா .துரைரெத்தினம் இன்று (16) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சுகாதாரம், கல்வி இரண்டையும் ஒரு சிலர் பணத்திற்காக விற்பதையும், கனியவளங்கள், உல்லாச துறைக்கான இடங்கள், ஆழ்கடல்மீன்பிடி, மணல் அகழ்வு, கால்நடைகள் கொள்வனவு, புதிய மதுபான சாலைகள் திறத்தல். அத்தோடு, அரசவளமான காணிகளை கையகப்படுத்துதல், மகாவலிக் காணி, வனவிலங்கு திணைக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.