ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143643 topics in this forum
-
பிரேரணை நிறைவேற்றப்படுவதை உறுதிப்படுத்துங்கள் – கூட்டமைப்பு கோரிக்கை 2 Views இலங்கைக்கு எதிரான புதிய பிரேரணையை நிறைவேற்றுவதை உறுதி செய்ய உறுப்பு நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. தற்போதைய நிலைமையில் எந்த ஒரு விடயத்திலும் அரசாங்கம் விடுதலைப் புலிகளைத் தொடர்புபடுத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இலங்கை அரசின் இணை அனுசரனையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இருந்து விலகுவதாகவும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட அறிக்கையை நிராகரிப்பதாகவும், வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்திருந்த நிலையில், அவர் தெரிவித்த கருத்து தொடர்பாக தமிழ்த…
-
- 2 replies
- 413 views
-
-
ஜெனிவா குறித்த சம்பந்தனின் நிலைப்பாட்டை ஏற்பதற்கு ரெலோ மறுப்பு – செல்வம் அறிவிப்பு 2 Views ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரதான நாடுகளினால் முன்வைக்கப்பட்டுள்ள 46/01 இலக்கப் பிரேணையை அதன் தற்போதைய நகல் வடிவத்தில் ஏற்று அங்கீகரிக்குமாறு அங்கத்துவ நாடுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், அதன் தலைவர் இரா.சம்பந்தன் விடுத்த கோரிக்கையுடன் தாங்கள் உடன்படவில்லை என்று கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான ரெலோ தெரிவித்துள்ளது. ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பியும், அக்கட்சியின் பேச்சாளர் சுரேந்திரன் குருசாமியும் இந்தத்தகவலை தெரிவித்தனர். சம்பந்தனின் கருத்து கூட்டமைப்பின் நில…
-
- 1 reply
- 386 views
-
-
அம்பாறை – பாண்டிருப்பு திரௌபதி அம்மன் ஆலய முன்றலில் முன்னெடுக்கப்படும் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் இருந்து விலகி இருக்குமாறு, அதில் பங்கேற்ற ஆறு பேருக்கு நீதிமன்றத் தடையுத்தரவு பொலிஸாரினால் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டம் நேற்று ஆரம்பமாகி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், கல்முனை தலைமையகப் பொலிஸ் நிலையப் பதில் பொறுப்பதிகாரி இந்திக்க உதயங்கர தலைமையிலான பொலிஸ் குழு நீதிமன்றத் தடையுத்தரவை இன்று (6) மாலை வழங்கியுள்ளது. அத்துடன், கல்முனை நீதிவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட கட்டளையினை அவ்விடத்தில் பொலிஸார் வாசித்துக் காட்டினர். இதன்போது, அம்பாறை மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் உள்ளிட்ட …
-
- 0 replies
- 592 views
-
-
நானோ இந்த அரசாங்கமோ ஈஸ்டர் ஞாயிறை விற்று அதிகாரத்துக்கு வரவில்லை. ஈஸ்டர் தாக்குதலை எம் மீது சுமத்தி அரசியல் இலாபம் பெற சிலர் முயற்சிக்கின்றனர். இந்த தாக்குதல் 2019ம் ஆண்டு நடந்தது. இவ்வாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்று (6) இடம்பெற்ற நிகழ்வில் இதனை தெரிவித்தார். மேலும், “ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால, பிரதமர் ரணில் உள்ளிட்ட அரசே பொறுப்பு. சிலர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி மீது இதனை சுமத்திவிட்டு தப்பிக்க முயற்சிக்கின்றனர். 19வது திருத்தத்தை கொண்டு வந்து அவரது அதிகாரத்தை குறைத்தோர் இப்போது மௌனமாக உள்ளனர். தாக்குதலுக்கு பொறுப்பானோர் யார் என்பது ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையில் தெளிவா…
-
- 2 replies
- 1.1k views
-
-
ஆர்.யசி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரும் பிரேரணை மீது நடத்தப்படும் வாக்கெடுப்பில் நாம் தோற்றாலும் கூட சர்வதேச நாடுகள் இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் அதிகாரத்தை வழங்கப்போவதில்லை. யார் வலியுறுத்தினாலும் போர் குற்றங்கள் தொடர்பில் எந்தவொரு விசாரணையையும் நடத்த இடமளிக்க மாட்டோம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். இந்த விடயங்களில் இந்தியா இப்போது அமைதியாக இருந்தாலும் இறுதி நேரத்தில் எமக்கு ஆதரவாகவே செயற்படுவார்கள் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போ…
-
- 1 reply
- 424 views
-
-
7வது நாளாக நல்லூர் பின் வீதியில் தொடரும் உணவு தவிர்ப்புப் போராட்டம் 34 Views இன்றைய தினம் 7வது நாளாக நல்லூர் பின் வீதியிலே சுழற்சி முறையில் உணவு தவிர்ப்புப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் இணைந்து ஆரம்பித்த இந்த உணவு தவிர்ப்புப் போராட்டம், தற்பொழுது வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் பங்களிப்போடு தற்பொழுது நல்லூரிலே சுழற்சி முறையில் நடைபெற்று வருகின்றது. Video Player 00:00 00:18 …
-
- 0 replies
- 308 views
-
-
மியன்மார் நிலைமை நாளை இங்கேயும் வந்துவிடக்கூடாது – கரு ஜயசூரிய எச்சரிக்கை 28 Views மியன்மாரின் ஜனநாயக விரோதஇராணுவ அடக்கு முறையில் அந்நாட்டு இளைஞர்கள் கொல்லப்பட்டுவருகின்றனர். அதிகார மோகமே இதற்கான காரணமாகும், இந்த நிலைமை நாளை இலங்கைக்கும் வந்து விடக்கூடாது என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். சுயாதீன ஆணைக்குழுக்கள் மீது அரசியல் தலையீடுகள் ஏற்பட ஆரம்பித்துவிட்டன. இவ்வாறான நிலையில் மாகாண சபை தேர்தலை நடத்தக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் நிகழ்கால செயற்பாடுகள், மாகாணசபை தேர்தலுக்கான நகர்வுகள் குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார். அவர் ம…
-
- 0 replies
- 343 views
-
-
இலங்கையில் பாரதிய ஜனதாக் கட்சி - யாழ்ப்பாணத்தில் அறிவிப்பு.! இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி எனும் பெயரில் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் புதிய கட்சி ஒன்று உதயமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு கட்சியின் தலைவர் வி.முத்துசாமியினால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது மேலும் தெரிவிக்கையில்.... இலங்கை பாரதிய ஜனதாக்கட்சி என்ற புதிய அரசியல் கட்சி ஒன்றை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்தக் கட்சி அரசியல் என்ற முன்னிலைப்படுத்தாது. அந்த அரசியலுக்கு தமிழ் பேசும் மக்களை தயார்ப்படுத்தும் அல்லது பக்குவப்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுக்கும். கட்சியின் தலைவராக…
-
- 16 replies
- 1.6k views
- 1 follower
-
-
அமெரிக்க இராஜாங்க செயலாளரினால் வழங்கப்படும் IWOC விருதுக்கு ரனிதா ஞானராஜா தெரிவு! By கிருசாயிதன் March 6, 2021 இலங்கையின் சட்டத்தரணியும் மனித உரிமை செயற்பாட்டாளருமான ரனிதா ஞானராஜா, அமெரிக்க இராஜாங்க செயலாளரினால் வழங்கப்படும் ‘International Women of Courage‘ விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.விருது வழங்கும் விழா எதிர்வரும் 8 ஆம் திகதி காணொளி தொழில்நுட்பத்தினூடாக நடைபெறவுள்ளது.உலகில் தைரியமிக்க பெண்களை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகின்றது.இதன்போது, அமெரிக்காவின் முதல் பெண்மணி Dr. ஜில் பைடன் தெரிவு செய்யப்பட்ட பெண்களின் சாதனைகளை அங்கீகரித்து தனது கருத்துக்களை பகிரவுள்ளார்.ரனிதா ஞானராஜா, அச்சுறுத்தல் மற்றும் சவால்களுக்கு மத்தியில் நாட்டில்…
-
- 1 reply
- 578 views
-
-
கூட்டமைப்பை விட்டு சென்றவர்கள் மீண்டும் இணைய வேண்டும்! - சந்திரநேரு சந்திரகாந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டுச் சென்றவர்கள் அந்தக் கட்டமைப்புக்குள்ளே மீண்டும் வந்து இணைந்து ஒற்றுமைப்பட வேண்டும். போராட வேண்டும். அதனை விடுத்து புதிய அமைப்பை, கட்சியை உருவாக்குவது ஒரு ஏமாற்று வேலைத்த திட்டமாகவே இருக்கும் என்று அம்பாரை மாவட்ட முன்னாள் எம்பி சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்தார். இன்று (5) கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், “பல கட்சிகளாக நாங்கள் பிரிந்து போகப் போக பேரினவாத சக்திகளுக்கும் அரசுக்கும் எங்களைப் பிரிப்பதற்கு இலகுவாகிப் போய்விடும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைமையி…
-
- 0 replies
- 237 views
-
-
தற்காலிகமாக நிறுத்தப்பட்ட போராட்டத்தை இளைஞன் ஒருவர் பொறுப்பேற்று இரண்டாவது நாளாக முன்னெடுத்துள்ளார். March 6, 2021 அம்பாறை மாவட்டத்தில் சுழற்சி முறையில் நடக்கும் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் பங்குபற்றியவர்களுக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற கட்டளைக்கு அமைய தற்காலிகமாக நிறுத்தப்பட்ட போராட்டத்தை இளைஞன் ஒருவர் பொறுப்பேற்று இரண்டாவது நாளாக முன்னெடுத்துள்ளார். இன்று (6) பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய முன்றலில் குறித்த போராட்டமானது 2 ஆவது நாள் இவ்விளைஞனின் பங்குபற்றலுடன் ஆரம்பமாகி உள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை(5) காவல்துறையினா் குறித்த இடத்திற்கு சென்று நீதிமன்ற கட்டளையை போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை பெற்று கொள்ளுமாறு வற்புறுத்த…
-
- 0 replies
- 379 views
-
-
கட்சியை விட்டு நீக்க வேண்டியது கஜேந்திரனையே ! 47பக்கத்தில் அறிக்கை சமர்ப்பித்த பார்த்தி! March 6, 2021 தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து நீக்க வேண்டியது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனையே என யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் தெரிவித்துள்ளார். யாழ். மாநகர சபையில் அங்கம் வகிக்கும் மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி, மணிவண்ணனுக்கு ஆதரவாக செயற்படும் 10 உறுப்பினர்களை பதவி வறிதாக்கபட்டுள்ளதாக தேர்தல் அலுவலகம் அறிவித்துள்ள நிலையில் அது தொடர்பில் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபனிடம் கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , யாழ்ப்பாணம் மாநகர சபையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி சார்பா…
-
- 0 replies
- 248 views
-
-
பெண் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் -யாழ். ஊடக மன்றம் கண்டனம்! 25 Views யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் ஊடகவியலாளர் சுமித்தி தங்கராசாவிற்கு தென்னிலங்கையை சேர்ந்த அரசியல் கட்சி ஒன்றின் உறுப்பினர் ஒருவரால் இன்று விடுக்கப்பட்ட அச்சுறுத்தலுக்கு யாழ் ஊடக மன்றம் தனது வன்மையான கண்டனத்தை தெரிவிக்கின்றது. தென்னிலங்கை அரசியல் கட்சி ஒன்றினைச் சேர்ந்த உறுப்பினர் அருண் சித்தார்த் என்பவரால் ஒருங்கமைக்கப்பட்ட பேரணி ஒன்று இன்று 2020.03.05 யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது. அப்போது அப் பேரணி குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் சுமித்தி தங்கராசா தனது கடமையை செய்துள்ளார். அவரது கடமைக்கு இடையூறு விளைவிக்கும் விதமாக குறித்த அருண் சித்தார…
-
- 0 replies
- 265 views
-
-
வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில், லசந்தா மகள், அகிம்ஸா எழுதிய. கொழும்பை நெளிய, வைத்துள்ள கடிதம். 2007ம் ஆண்டு, இலங்கையின் சுயாதீன ஊடகவியலாளர்களில் ஒருவரான எனது தந்தை லசந்தா விக்ரமதுங்கே, அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்சே அரசாங்க நிதியில் 10 மில்லியனுக்கும் அதிகமான தொகையை மோசடி செய்த ஆயுத ஒப்பந்தத்தை அம்பலப்படுத்தினார். அவதூறு குற்றச்சாட்டுக்கு ஆளான ராஜபக்சே அவரை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றார். அதன்பிறகு, எனது தந்தை தலைமை ஆசிரியராக இருந்த, சண்டே லீடரின் அச்சகம், நள்ளிரவில் முகமூடி அணிந்த கும்பலால் தாக்கப்பட்டது. ஊழியர்கள் இருவர் தாக்கப்பட்டனர், பத்திரிகைகளுக்கு தீ வைக்கப்பட்டது. ஜனவரி 8, 2009 அன்று, ஊழல் நிறைந்த ஆயுத ஒப்பந்தம் குறித்து எனது த…
-
- 5 replies
- 1.3k views
-
-
பாராளுமன்ற உறுப்பினர் திரு M.A. சுமந்திரன் அவர்களுடனான T tv யினரின் "பருவகால கலந்துரையாடல்
-
- 1 reply
- 527 views
-
-
கொரோனா தொற்றால் உயிரிழந்த மேலும் 7 பேரின் சடலங்கள் இன்று ஓட்டமாவடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை 9 சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். கொவிட் 19 தொற்றினால் மரணமாவோரின் சடலங்களை நல்லடக்கம் செய்ய முடியும் சென்ற வர்த்தமானி அறிவித்தலின் பின்னர் முதலாவது சடலம் நல்லடக்கத்திற்காக அடக்கத்திற்கான இடமாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஓட்டமாவடி மஜ்பா புரத்திற்கு இன்று மாலை எடுத்துச்செல்லப்பட்டது. மட்டக்களப்பு கோட்டைமுனையைச் சேர்ந்த 72 வயதுடைய பெண்ணின் ஜனாசா கொவிட் தொற்றினால் மரணமடைந்து ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில் காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டு அங்கு ஜனாசாத் தொ…
-
- 0 replies
- 302 views
-
-
மஹிந்த கொடுத்த வக்குறுதிதான் இப்போது கழுத்தை நெரிக்கிறது – லக்ஷ்மன் கிரியெல்ல 29 Views ஜெனீவா மனிதவுரிமைகள் பேரவைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொடுத்த உறுதிமொழியே தற்பொழுது பாறாங்கல்லை போன்று எம்மடைய கழுத்தை நெரிக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார். அதேவேளை, சர்வதேசம் வரை இந்த விவகாரத்தை கொண்டு சென்றது மஹிந்த தரப்பினர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: “யுத்தம் நிறைவடைந்ததையடுத்து பன்கீன் மூன் இலங்கைக்…
-
- 0 replies
- 537 views
-
-
ஆட்சிக்கு வர இன்றைய அரசுக்கு, ஈஸ்டர் தாக்குதல் உதவியுள்ளது – மனோ கணேசன் 39 Views உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்ற ஈஸ்டர் தாக்குதலை பயன்படுத்தி, இன்றைய அரசாங்கம், எமது அன்றைய அரசாங்கத்தை வீழ்த்தி, ஆட்சியை பிடித்தது. ஆகவே இந்த தாக்குதல், இன்றைய அரசுக்கு அரசியல்ரீதியாக உதவியுள்ளது. ஆகவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் நன்மை பெற்றது, இன்றைய இலங்கை அரசாங்கம்தான். இந்த கோணத்தில், இது பற்றி விசாரிக்கப்பட வேண்டும். அப்போதுதான் பல உறங்கும் உண்மைகள் வெளிவரும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் உரையாற்றிய மனோ எம்பி மேலும் கூறியதாவது, எமது பல…
-
- 1 reply
- 368 views
-
-
மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை வழக்கு ஒத்தி வைப்பு 21 Views மட்டக்களப்பு மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை வழக்கு எதிர்வரும் ஜுன் மாதம் 02 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மயிலத்தமடு,மாதவனை மேய்ச்சல் தரை அபகரிப்பு தொடர்பில் மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் பண்ணையாளர்களினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.என்.அப்துல்லாவினால் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஏற்கனவே பிரதிவாதிகளுக்கான தமது கருத்துகளை பதிவுசெய்வதற்கான தவணை வழங்கப்பட்டிருந்ததாகவும் இன்றைய தினம் 13வது 14வது பிரதிவாதிகள் தமது கருத்துகளை பதிவுசெய…
-
- 0 replies
- 306 views
-
-
ஐ.நா. பிரேரணையை தோற்கடிக்கும் முயற்சியில் அரசாங்கம் மும்முரம் ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையை தோற்கடிப்பதற்கான தீவிர முயற்சிகளில் அரசாங்கம் இறங்கியுள்ளது. இது தொடர்பாக பல்வேறு உறுப்பு நாடுகளுடனும் அரசாங்கம் தொடர்ச்சியாக இராஜதந்திர ரீதியில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதுடன், ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை மீதான வாக்கெடுப்பில் இலங்கைக்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றது. ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பல்வேறு உறுப்பு நாடுகளுக்கும் இது தொடர்பாக கடிதங்களை அனுப்பியுள்ள நிலையில், அமைச்சர் தினேஷ் குணவர்தன தொடர்ச்சியாக கொழும்பில் உள்ள மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நா…
-
- 3 replies
- 605 views
-
-
தமிழர்களின் நலன்சார்ந்து சிறந்த முடிவை இந்தியா எடுக்க வேண்டும் சுரேஷ் க.பிறேமச்சந்திரன் இந்தியா இலங்கைக்கு சகல விடயங்களிலும் விட்டுக்கொடுத்தே செயற்பட்டு வந்துள்ளது. தமிழ் மக்கள் நலன்சார்ந்த விடயத்திலும் அத்தகைய போக்கைக் கடைப்பிடிக்காமல் தமிழ் மக்களின் இருப்பைக் காப்பதற்கும் தாம் விரும்பியபடி தமிழர்கள் கௌரவமாக வாழ்வதற்கும் இந்தியா நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப் பேச்சாளருமான சுரேஷ் க. பிறேமச்சந்திரன் ஊடக அறிக்கையின் மூலம் இந்திய அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார். அவரது அறிக்கையின் முழுவிபரம் வருமாறு: இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்தே இந்தியா இலங்கை அரசாங்கத்திற்க…
-
- 0 replies
- 220 views
-
-
விடுதலைப்புலி உறுப்பினர்களுடன் தொடர்புடைய வழக்குகளை விரைவாக நிறைவு செய்வது தொடர்பில் தீர்மானம் By சயனொளிபவன் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள, முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுடன் தொடர்புடைய வழக்குகளை விரைவாக நிறைவு செய்வது தொடர்பில் சட்டமா அதிபர் ஆராய்ந்து வருவதாக இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அறிக்கைக்கு இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள பதில் அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன், பயங்கரவாத தடைச் சட்டத்தின் சரத்துகள் மீள்பரிசீலனை செய்யப்படவுள்ளதாகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு அரசாங்கம் அறிவித்துள்ளது.மேலும், பயங்கரவாதத்துக்கு எதிரான சட்ட வரைவு …
-
- 0 replies
- 253 views
-
-
ஜெனீவா மாநாட்டில் இலங்கை தொடர்பான தீர்மானம் என்ன? March 4, 2021 ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது அமர்வில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இந்த நாட்களில் ஊடகங்களில் பரவலாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இலங்கைக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ எந்தவொரு தீர்மானமும் முன்வைக்கப்படவில்லை என்றாலும், நாட்டில் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கான வரைபுத் தீர்மானம் குறித்து இந்த வாரம் விவாதங்கள் ஆரம்பமாகியுள்ளன. பூச்சிய வரைபு என அழைக்கப்படும் இதற்கு மார்ச் 11 வரை திருத்தங்களை முன்வைக்க முடியும். இறுதி வரைபுக்கான வாக்கெடுப்பு மார்ச் 22ஆம் திகதி இடம்பெறவுள்ளது. பெப்ரவரி 19ஆம் திகதி ஐக்கிய நாடுக…
-
- 0 replies
- 367 views
-
-
இலங்கையில் இரண்டு வயது குழந்தைக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக தகவல்! நாட்டில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக BBC சிங்கள செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது. பிரமுகர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி வழங்கும் நிலையத்தில், அரசியல்வாதிகளின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பிரமுகர்கள் என பலரும் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த பிரமுகர்களுக்கான தடுப்பூசி வழங்கும் நிலையத்தில் பணியாற்றும் சுகாதார ஊழியர் ஒருவரின் தகவலை அடிப்படையாக கொண்டு இந்த விடயம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், நாட்டில் வயதானவர்கள் மற்றும் கொரோனா தொற்று பரவக்கூடிய ஆப…
-
- 0 replies
- 303 views
-
-
பயங்கரவாதத் தடைச் சட்டம் மறுபரிசீலனை செய்யப்படும்- ஐ.நா.வுக்கு பதிலளித்துள்ளது இலங்கை! பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) ஏற்பாடுகள் மறுபரிசீலனை செய்யப்படவுள்ளதாக, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு அரசாங்கத்தால் பதிலளிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் ஆட்சேபனை தெரிவித்து வெளியிட்ட பதில் அறிக்கை தற்போது வெளியிட்டுள்ளது. இலங்கையின் முழுமையான பதிலை, இணையத்தில் வெளியிடக்கோரி இலங்கை அரசாங்கம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் எழுதியிருந்தது. இதன்படி, ஐ.நா. வெளியிட்டுள்ள பதிலில், “பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைபு குறித்த ஏற்பாடுகள் தொடரப்படவில்லை என இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டது. ந…
-
- 0 replies
- 236 views
-