Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பாராளுமன்றில் இன்று உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கொவிட்-19 காரணமாக இறப்பவர்களை அடக்கம் செய்ய அரசாங்கம் அனுமதியளிப்பதாக அறிவித்தார். கொவிட் -19 கழிவு நீரில் பரவ முடியாது என்று அமைச்சர் சுதர்ஷினி பெர்னாடோபுள்ளேயின் கூற்றைத் தொடர்ந்து கொவிட்-19 நோயாளிகளின் தகனம் குறித்து அறிக்கை வெளியிடுமாறு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போதே பிரதமர் மேற்கண்டவாறு பதில் கூறினார். Thinakkural.lk

  2. 400க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்தனர் http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2020/03/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81.jpg உக்ரைன் மற்றும் கஜகஸ்தானிலிருந்து 400 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட இரண்டு விமானங்கள் இன்று (வியாழக்கிழமை) நாட்டை வந்தடைந்தன. குறித்த இரண்டு விமானங்களும் மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் தரையிரங்கியுள்ளன. கஜகஸ்தானிலிருந்து 235 சுற்றுலாப் பயணிகளுடனான விமானமும் 179 சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட விமானம் உக்…

  3. 2019 உ/த மாணவர்களின் வெட்டுப்புள்ளி பாதிப்பை நிவர்த்தி செய்ய 540 புதிய மாணவர்களுக்கு பல்கலை அனுமதி (சி.எல்.சிசில்) 2019 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி பல்கலைக் கழக இசட் வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் ஒரு தொகுதி மாணவர்களுக்கு அநீதி ஏற்பட்டுள்ளமையை சரி செய்ய 540 புதிய மாணவர்களை பல்கலைக்கழகங்களில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் நேற்று பாராளு மன்றில் வெளியிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். அதன்படி, நீதித்துறை நடைமுறைக்கு மதிப்பளிக்கும் …

  4. தமிழ் மக்களைப் பயமடையச் செய்யவே படைகளையும், பொலிஸாரையும் அரசாங்கம் ஏவுகிறது- சி.வி. by : Litharsan எங்களுடைய மக்களைப் பயமடையச் செய்யவேண்டும் என்பதற்காகவே அரசாங்கம் தங்களுடைய படைகளையும், பொலிஸாரையும் ஏவி, பயங்கரவாதச் சட்டம் ஊடான கைதுகள் இடம்பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள தமது உறவினர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு, கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் சி.வி.விக்னேஸ்வரனை, யாழில் உள்ள கட்சி அலுவல…

  5. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, தமிழ் பாதுகாப்பு பிரிவினர் மீது நம்பிக்கை இல்லை – மஹிந்த தரப்பு! தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, தமிழ் பாதுகாப்பு பிரிவினர் மீது நம்பிக்கை இல்லை போல தனக்கு தோன்றுகின்றது என ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(வியாழக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு அதிகாரிகளாகவும், பொலிஸ் அதிகாரிகளாகவும் தமிழர்கள் இலங்கையில் கடமையாற்றி வருகின்றனர். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழர்களை பாதுகாப்புக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள…

  6. பொறுப்புக்கூறல் கடமையிலிருந்து இலங்கை நழுவ முடியாது :பிரித்தானியத் தூதுவர் (சி.எல்.சிசில்) ஐக்கிய நாடுகள் மனித உரிமை கள் சபையின் கூட்டத் தொடரின்போது, இலங்கையின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் நடவடிக்கைகளைப் பிரிட்டன் இம்முறை புதிய பிரேரணை ஊடாக முன்னெடுக்கும்.பொறுப்புக்கூறல் கடமையிலிருந்து இலங்கை ஒருபோதும் நழுவ முடியாது என இலங்கைக்கான பிரித்தானியத் தூதுவர் சாரா ஹல்டன் தெரிவித்தார். இலங்கைக்கான பிரித்தானியத் தூதுவரின் அழைப்புக்கிணங்க தமிழ்த் தேசியக் கூட் டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் கொழும்பில் நேற்று அவரைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இலங்கை அரசின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் விதமாகத…

  7. பொத்துவில் - பொலிகண்டி பேரணியில் பங்கேற்றோரை சிறையில் அடைப்போம் - அமைச்சர் சரத் வீரசேகர.! பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணியில் கலந்துகொண்டவர்களுக்கு எதிராக வழக்குகளைத் தாக்கல் செய்வோம்." - இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். அத்தோடு, பேரணியில் கலந்துகொண்டவர்களின் வாகனங்களைப் பறிமுதல் செய்து அவர்களைச் சிறையில் அடைப்போம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:- "இவ்வாறான போராட்டங்கள் - பேரணிகள் குறித்து எமக்கு முன்னரே புலனாய்வுத் தகவல்கள் கிடைத்து விடு…

  8. எமது பொலிஸ், இராணுவத்தினரை கொலை செய்த கருணா, பிள்ளையானுக்கு எவ்வாறு இராணுவ பாதுகாப்பு வழங்க முடியும்?-எதிர்க்கட்சி உறுப்பினர்கள் By கிருசாயிதன் February 11, 2021 பேரணியில் கலந்துகொண்ட காரணத்தால் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. அவரின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு மீண்டும் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உட்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டனர். பாராளுமன்றத்தில் நேற்று (10) எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச விசேட கூற்றொன்றை முன்வைத்து தெரிவிக்கையில், தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் எம். ஏ.சுமந்திரனுக்கு வழங்கப்பட்டிருந்…

    • 1 reply
    • 404 views
  9. மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரை அபகரிப்பு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு! மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு, மாதவனை பகுதியில் மேய்ச்சல் தரை அபகரிப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைப் பகுதியில் அத்துமீறிய அபகரிப்புத் தொடர்பான வழக்கு இன்று (வியாழக்கிழமை) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே எதிர்வரும் 26ஆம் திகதி வரை வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். பிரதிவாதிகள் சார்பில் ஒருவர் மாத்திரமே இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த நிலையி…

  10. யானைகளினால் வயல் நிலங்களும் பயன்தரும் மரங்களும் அழிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை 13 Views இயற்கை அனர்த்தங்களினால் தொடர்ச்சியான பாதிப்புகளை எதிர்கொண்டுவரும் மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள், செயற்கையாக ஏற்படுத்தப்படும் அழிவுகளையும் எதிர்கொள்ளவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடிமுன்மாரி,முதலைமடுவட்டை பகுதியில் யானைகளினால் வயல் நிலங்களும் பயன்தரும் மரங்களும் அழிக்கப்பட்டு வருவதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். கூட்டம் கூட்டமாக வரும் யானைகள் தொடர்ச்சியாக அழிவுகளை ஏற்படுத்திவருவதாகவும் விவசாயிகள் கவலை தெர…

  11. போராட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு சுமந்திரன் துரோகமிழைத்துள்ளார் – கஜேந்திரகுமார் 20 Views தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனது நாடாளுமன்ற உரையின் போது, எத்தனையோ சவால்கள் எதிர்ப்புகள் நெருக்கடிகள் இடையூறுகள் காணப்பட்ட நிலையிலேய பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டத்தில் கலந்துகொண்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை கொச்சைப்படுத்தி அவர்களுக்கு பெரும் துரோகமிழைத்துள்ளார் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார் கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது- …

  12. விமல் வீரவன்சவின் தேசிய சுந்திர முன்னணி கட்சியில் வெளிநாட்டு உளவாளிகள் இருவர் பணியாற்றுகின்றனர் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேனுக பெரோ குற்றஞ்சாட்டியுள்ளார். பெரமுனவின் தலைவராக மஹிந்த ராஜபக்சவை நீக்கிவிட்டு கோத்தாபய ராஜபக்சவை தலைவராக நியமிக்க வேண்டும் என அமைச்சர் விமல் வீரவன்ச கருத்து வெளியிட்டதை தொடர்ந்து ஆளும் தரப்பினரிடையே சர்ச்சை எழுந்துள்ளது. விமல் வீரவன்ச மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் – பெரமுன! இந்நிலையிலேயே வெளிநாட்டு உளவாளிகளிடம் பணம் பெற்று பணியாற்றும் இருவர் விமலுடன் இருப்பதாக பெரமுன குற்றஞ்சாட்டியுள்ளது. விமலுடன் வெளிநாட்டு உளவாளிகள் – பெரமுனவினர் திடீர் தாக்குதல்! – உதயன் | UTHAYAN (newuthayan.com)

  13. ததேமமு நா. உ. திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் நாடாளுமன்ற உரை (Feb 09, 2021): சுருக்கமாக : திரு. சுமந்திரன் குறிப்பிட்ட 10 கோரிக்கைகளுக்கு மேலதிகமாக 4 முக்கிய உப கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டே பேரணி இடம்பெற்று அதில் 60,000க்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். அவையாவன : 1. வடக்கு கிழக்கு - தமிழர், முஸ்லீம்களின் தாயகம். 2. தமிழரை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கவேண்டும். 3. அவர்களுக்கு தன்னாட்சி உரிமை உண்டு. 4. இலங்கையில் இடம்பெற்ற/இடம்பெற்றுவரும் இனப்படுகொலை தொடர்பாக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கும் சர்வதேச பொறுப்புக்கு கூறல் பொறிமுறைக்கும் பரிந்துரைத்தல். இவை எதிர்த் தரப்பில் உள்ளவர…

  14. பாதுகாப்பு படைகளினால் அபகரிக்கப்பட்ட காணிகள் தொடர்பில் சாணக்கியன் எம்பி பிரதமரிடம் கேள்வி எழுப்பிய போது தேசிய பட்டியல் எம்பி சுரேன் ராகவன் குறுக்கீடு செய்து, அவரை கேள்வி எழுப்புவதை தடுக்க முயற்சித்த சம்பவம் இன்று (10) நாடாளுமன்றில் இடம்பெற்றது. இதன்போது கோபமடைந்த சாணக்கியன், “பல உறுப்பினர்கள் இடைமறித்து என்னை கதைக்க விடாமல் செயற்படுகின்றனர். இங்கே நான் கேட்கும் கேள்விகள் மக்களால் எனக்கு வழங்கப்பட்டு கேட்க வைக்கப்படும் கேள்விகள். இவற்றை நான் இங்கு கேட்பதற்கான முழு உரிமையும் உண்டு. என்னை குழப்பாதீர்கள். சுரேன் ராகவன் தயவு செய்து உங்களுடைய வேலை எதுவோ அதனை செய்யுங்கள். நீங்கள் எனக்கு எதிராக கதைக்க விடாமல் செய்வதற்கு நீங்கள் பிரதமர் அல…

    • 1 reply
    • 1k views
  15. உருவானது ‘பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை மக்கள் பேரெழுச்சி இயக்கம்’ பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சி பேரணி ஏற்பாட்டாளர்களினால் ‘பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரை மக்கள் பேரெழுச்சி இயக்கம்’ என்ற பெயரில் அமைப்பொன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. ஏற்பாட்டாளர்கள் தரப்பில் வேலன் சுவாமிகள், அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங், மட்டக்களப்பு சிவில் அமைப்பின் சிவயோகநாதன் ஆகியோர் யாழ். ஊடக அமையத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தனர். https://newuthayan.com/உருவானது-பொத்துவில்-தொட/

  16. உலகில் அதிகமாக விஷத்தினை உண்ணும் நாடு இலங்கை – விசேட வைத்திய நிபுணர் உலகில் அதிகமாக விஷத்தினை உண்ணும் நாடு இலங்கை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் அனுருத்த பாதெணிய தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற கருத்தரங்கொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “நாம் உண்ணும் உணவுகளின் தரவுகளுக்கு அமைய உலகில் அதிகப்படியான விஷத்தினை இலங்கையர்கள் உண்கின்றனர். இவ்விடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அமைச்சர்கள் உள்ளதால் நான் ஒரு கோரிக்கை விடுக்கிறேன். நாம் 2010ஆம் ஆண்டில் இருந்து இந்நாட்டில் விஷத்தினை சேர்க்க வேண்டாம் என கோருகிறோம். நாடாளுமன்றம் உங்களின் க…

  17. விடுதலைப்புலிகள் தொடர்பில் புகழ்ந்து பேசினால் கடும் தண்டனை! வருகிறது சட்டம் இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்டுள்ள நிலையில் அந்த அமைப்பு தொடர்பாகவோ அல்லது அதன் தலைவர் தொடர்பாகவோ நாடாளுமன்றில் பேசும் எம்பிக்களுக்கு எதிராக கடுமையான தண்டனையை விதிக்கும் வகையில் சட்டமொன்றை கொண்டு வர பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. விடுதலைப்புலிகள் அமைப்பு மற்றும் அதன் தலைவர் குறித்து சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், சபைக்குள் புகழாரம் சூட்டும் வகையில் பேசுவதாக தெரிவிக்கப்படும் நிலையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜேர்மன் நாடாளுமன்றத்திற்குள் ஹிட்லர் தொடர்பில் கருத்துரைப்பதற்கு தடை விதிக்கப…

  18. சுமந்திரன், சாணக்கியன் இல்லாவிட்டால் போராட்டம் பொத்துவிலில் முடிந்திருக்கும்! என்கிறார் சிவாஜி பொத்துவில்-பொலிகண்டிப் பேரெழுச்சிதனிப்பட்டவர்களின் வெற்றி அல்ல! தமிழினத்தின் வெற்றி என்கிறார் சிவாஜி பொத்துவில் முதல் கொலிகண்டி வரையான பேரெழுச்சியின் வெற்றி, தனிப்பட்டவர்களின் வெற்றியல்ல எனவும், எல்லோரும் இணைந்த இனத்தின் வெற்றி என்றும் வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். அத்துடன், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லாமலிருந்தால் இந்த வெற்றியை அடைந்திருக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இ…

  19. பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி: வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை இடம்பெற்ற பேரணியில் கலந்துகொண்ட அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினருக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பேரணியில் பங்குபற்றிய சிலருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் கீழ் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் மூன்று பொலிஸ் நிலையங்களினால் ‘பி’ அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. ஏற்கனவே பேரணிக்கு தடைகோரி பருத்தித்துறை, நெல்லியடி மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸார் விடுத்த கோரிக்கைக்கு அமைய நீதிமன்றம் வழங்கிய தடை உத்தரவு மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து இந்த ‘பி’ அறிக்கைகள் த…

  20. வடக்கில் நடந்த பேரணி குறித்து கொழும்பு ஊடகங்கள் கவனம் செலுத்தாமை ஏன்? – அமெரிக்கா கேள்வி! பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி குறித்து கொழும்பை தளமாகக் கொண்ட ஊடகங்கள் கவனம் செலுத்தாமை ஏன் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விடயம் குறித்து தனது ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், “அமைதிவழிப் போராட்டம் என்பது அடிப்படை ஜனநாயக உரிமைகளில் ஒன்றாகும். இவ்வாறான அமைதிவழிப் போராட்டங்களுக்கு செவிசாய்க்க வேண்டும். அவர்களின் கவலைகள் குறித்து அவதானம் செலுத்த வேண்டும். பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி குறித்து தமிழ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமையை அவதானித்தேன். ஆனால் கொழும்பைத் தளமாகக் கொண்ட ஊடகங்கள் இது குறித்து ஏன் க…

    • 2 replies
    • 841 views
  21. இலங்கை சிறைகளில் அரசியல் கைதிகள் என்று யாரும் இல்லை: பிரதமர் அறிவிப்பு இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகள் என்று யாரும் இல்லை என்று பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று இரா.சாணக்கியன் எம்.பியினால் அரசியல் கைதிகள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு கூறினார். இலங்கையின் தண்டனைச் சட்டக் கோவையின்படியோ அல்லது நாட்டின் சட்டங்களுக்கமையவோ கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் அரசியல் குற்றங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எவரும் இல்லை என்று பிரதமர் இதன்போது தெரிவித்துள்ளார். -(3) …

  22. சுமந்திரனின்... பாதுகாப்புக்கு, வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிரடிப் படை மீளப்பெறப்பட்டது! தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிரடிப் படை மீளப்பெறப்பட்டுள்ளது. நேற்றிரவு கிடைத்த திடீர் பணிப்பில் சிறப்பு அதிரடிப் படைப் பாதுகாப்பு மீளப்பெறப்பட்டுள்ளதாகவும், காரணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றும் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, சிறப்பு அதிரடிப் படையினரை வைத்து பேரணியில் பங்கேற்றமை உள்ளிட்ட சில நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்கு இவ்வாறு மீளப்பெற்றுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், பிரமுகர் பாதுகாப்புப் பிரிவு உத்தியோகத்தர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்தி…

  23. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவை கொல்ல முயன்ற குற்றவாளியை இந்தியா நாடுகடத்துமா? 10 Views சென்னையில் கைதான இலங்கையைச் சேர்ந்த கிம்புலா அலே குணா பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்பதால் தங்களிடம் ஒப்படைக்க பேச்சு நடப்பதாக இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகரா கூறினார். இலங்கையைச் சேர்ந்த கிம்புலா அலே குணா பல ஆண்டுகளாக தமிழகத்தில் பதுங்கி இருந்த நிலையில் கடந்த மாதம் சென்னையில் கைதானார். இந்த தகவலை இலங்கை அரசுக்கு இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அந்நாட்டு இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகரா நேற்று(8) கருத்துத் தெரிவிக்கையில், முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயகா 1999ஆம் ஆண்டு கொழும்பு நகரில் தேர்தல் பிரசாரத்…

  24. இன்று பாராளுமன்றத்தில் மலையக தோட்ட தொழிலாளரின் 1,000 ரூபா சம்பள உயர்வு தொடர்பாக நடைபெற்ற விவாதத்தின்போது கௌரவ. சுமந்திரன் அவர்கள் ஆற்றிய உரையின் தமிழ் சுருக்கம் வருமாறு, "அநேக காலமாக இவ் 1,000 அடிப்படை சம்பள உயர்வுக்காய் கோரிக்கை முன்வைத்தபோதும் அதிகரிக்கும் வாழ்க்கை செலவுடன் நோக்குகையில் தற்போது இது 2,000 ரூபாயாக இருத்தல் வேண்டும், இருப்பினும் அந்த 1,000 ரூபாய் உயர்வு கூட இன்னும் வழங்கப்படாதிருக்கின்றது. கடந்த சில நாட்களாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான நடை பயணத்தில் நாம் 10 கோரிக்கைகளை அரசாங்கத்திடம் முன்வைத்திருந்தோம். அவற்றுள் இந்த 1,000 ரூபா சம்பள உயர்வும் ஒன்றாகும். தகவலின் திரிபுகளை தவிர்க்கவும், பதிவு செய்துகொள்ளும் நோக்கத்திற்காகவும் அந்த 10 கோரி…

    • 0 replies
    • 321 views
  25. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நியாயம் கோரியும், இன்றும் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இனப்படுகொலையை தடுக்க வேண்டும் எனவும் கோரிக்கையை முன்வைத்தே பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையிலான தமிழர் எழுர்ச்சி பேரணி இடம்பெற்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சபையில் தெரிவித்ததை அடுத்து ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் எம்.பியுடன் வாக்குவாதப்பட்டனர். "இன்றும் இனப்படுகொலை" என்ற வார்த்தையை பயன்படுத்த முடியாது எனக்கூறி ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாதிட்ட போதிலும் தன்னால் இந்த வார்த்தையை மீளப்பெற முடியாது என கஜேந்திரகுமார் எம்.பி வாக்குவாதப்பட்டார். பாராள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.