ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143312 topics in this forum
-
நினைவுச்சின்னத்தை இடித்தழித்த அதிகாரிகளே அதனை மீள அமைப்பது குறித்து கேள்வி January 12, 2021 யுத்தத்தில் இறந்தவர்களை நினைவுகூரும் வகையில் யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்ட நினைவுச்சின்னத்தை இடித்தழிக்க முன்னின்ற பல்கலைக்கழக துணைவேந்தர், மூன்று நாட்களுக்குப் பின்னர் அதனை மீள அமைக்க அடிக்கல் நாட்டியமைத் தொடர்பில் இலங்கையின் முன்னணி ஆசிரியர் சங்கங்களில் ஒன்று கேள்வி எழுப்பியுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை இடித்தழித்த துணைவேந்தர், அதனை மீள அமைக்க அடிக்கல் நாட்டியமை, இடிபாடுகளை வழிபட்டு, ஸ்தோத்திர பாடல்களைப் பாடியமை வடக்கின் ஊடகவியலாளர்கள் அறிக்கை இட்டிருந்தனர். ஜனவரி 8, வெள்ளிக்கிழமை இரவு யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்…
-
- 0 replies
- 265 views
-
-
(எம்.நியூட்டன்) யாழ்ப்பாணத்தில் 149.3 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை ஆராய்ச்சி நிலைய பொறுப்பதிகாரி பிரதீபன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலையிலிருந்து மழையுடன் கூடிய காலநிலை காணப்படுகின்றது நேற்றுமுன்தினம் காலையிலிருந்து தற்போது வரை யாழில் 149.3மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது யாழ் நகரப் பகுதியிலேயே அதிகளவு மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்த பொறுப்பதிகாரி மேலும், 24 மணித்தியாலத்திற்கு இந்த மழையுடன் கூடிய காலநிலை தொடரும் வடபகுதியில் 100 மில்லி மீற்றர் எதிர்பார்க்கப்படுகிறது. காற்று 40-50 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் தெரிவித்தார். குறித்த மழையுடன் கூடிய காலநிலை கா…
-
- 0 replies
- 235 views
-
-
மேலும் 165 உக்ரேனியர்கள் இலங்கை வந்தடைந்தனர் Digital News Team 2021-01-12T18:38:21 உக்ரேனியன் ஏர்லைன்ஸ்(பி.க்கியூ 555) விமானமூடாக இன்று 165 சுற்றுலாப் பயணிகள் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர். இலங்கை சுற்றுலாத் துறையை புதுப்பிக்கும் அரசாங்கத் திட்டத்தின் கீழ் நாட்டை வந்தடைந்த உக்ரேனின் ஏழாவது குழு இது என்பது குறிப்பிடத்தக்கது. Thinakkural.lk
-
- 0 replies
- 399 views
-
-
புதிய வருடத்தில் ஆறு மாத காலத்தை இலங்கையர்கள் தியாகம் செய்ய வேண்டும் -பவித்ரா Digital News Team 2021-01-12T17:58:20 புதிய வருடத்தில் எதிர்வரும் ஆறு மாத காலத்துக்குள் அனைத்து இலங்கையர்களும் பெரும் தியாகங்களைச் செய்ய வேண்டும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி வலியுறுத்தினார். ஒரு வளமான நாட்டைக் கட்டியெழுப்ப புதிய வருடத்தில் எதிர்வரும் ஆறு மாத காலத்துக்குள் அனைத்து இலங்கை யர்களும் பெரும் தியாகங்களைச் செய்ய வேண்டும் என்று சுகாதார அமைச்சர் தெரிவித்தார். கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்கச் சரியான சுகா தார வழிமுறைகளைப் பின்பற்றி அரசாங்கத்தின் கொ ரோனா கட்டுப்பாட்டுத் திட்டத…
-
- 0 replies
- 842 views
-
-
மட்டு – வைத்தியசாலை ஊழியர்களுக்கு கொரோனா தொற்று – மக்களுக்கு எச்சரிக்கை 27 Views மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர்களில் 21 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தேவையின்றி வைத்தியசாலைக்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு பணிப்பாளர் கணேசலிங்கம் கலாறஞ்சினி வேண்டுகோள் விடுத்துள்ளார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர், “கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, திருகோணமலை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, கல்முனை தெற்கு, சாய்ந்தமருது, உகன ஆகிய ஆறு வலயங்கள் சிவப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு வைத்த…
-
- 0 replies
- 328 views
-
-
நிரபராதியென நீரூபிக்கும் வாய்ப்பு மறுக்கப்படுவது அநீதி- தொடரும் அரசியல் கைதியின் போராட்டம் 28 Views மேன்முறையீட்டு வழக்குகள் இரண்டிலும் துரித விசாரணை சாத்தியமில்லையாயின், பிணை அனுமதி பெற ஆவண செய்து தருமாறு கோரி புதிய மகசின் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதியான இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் சபை உறுப்பினர் கனகசபை தேவதாசன் கடந்த 06.01.2021 அன்று முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இவருடைய உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் அவரது கோரிக்கையை நிறைவேற்ற உரிய தரப்பு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது உறவுகளிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளதாக அவரின் உறவுகள் ‘குரலற்றவரின் குரல்’ அம…
-
- 0 replies
- 315 views
-
-
இனப்பிரச்சினை என்று கூறி கொண்டு தமிழ் அரசியல்வாதிகள் அரசியல் இலாபம் தேடி கொள்கிறார்கள் – காமினி லொகுகே இனப்பிரச்சினை என்று கூறி கொண்டு தமிழ் அரசியல்வாதிகள் அரசியல் இலாபம் தேடிக் கொள்கிறார்கள் என போக்குவரத்து அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதில் வழங்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் காமினி லொகுகே மேலும் கூறியுள்ளதாவது, தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்று கூறிக் கொள்பவர்கள் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. நாட்டில் இனப்பிரச்சினை என்பதொன்று கிடையாது. 2009ஆம் ஆண்டுடன் இனப்பிரச்சினை முடிவுக்கு கொண்டு வரப்பட்டு தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப…
-
- 0 replies
- 592 views
-
-
யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடித்து அழிக்கப்பட்டு வருவதாக யாழ். பல்கலை செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக அப்பகுதியில் பொது மக்கள் கூடுவதாகவும் பதற்றமான ஒரு சூழல் நிலவுவதாகவும் தெரியவருகின்றது. இதனை உறுதிப்படுத்துவதற்கு யாழ். துணைவேந்தரின் ஊடகப்பிரிவு மற்றும் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளை தொடர்புகொண்ட போது யாரும் பதில் அளிக்கவில்லை. முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்ட போரில் உயிரிழந்த பல்கலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நினைவாக யாழ். பல்கலை வளாகத்தில் மாணவர்களால் இந்த நினைவிடம் அமைக்கப்பட்டது. யாழ். பல்கலை நிர்வாகத்தின் அனுசரணையுடன் முன்னெடுக்கப்பட்ட கட்டுமானப் பணிகளை இடை நிறுத்துமாறு உயர்கல்வி அமைச்சும் பல்கலை மாணியங்கள் …
-
- 132 replies
- 11.2k views
-
-
போர் முடிந்து 11 வருடங்களாகியும் வட, கிழக்கில் முன்னேற்றம் இல்லை – ஐ.நா. வதிவிடப் பிரதிநிதியிடம் விக்கி 18 Views இலங்கையின் ஐக்கிய நாடுகள் வதிவிட பிரதிநிதி ஹெனா சிங்கரைச் சந்தித்த யாழ். மாவட்ட எம்.பி.யும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன், அவருடன் விரிவான பேச்சுக்களை நடத்தியுள்ளார். நேற்று வண்பகல் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கையின் வதிவிட பிரதிநிதி ஹெனா சிங்கரின் அழைப்பின் பேரில் விக்னேஸ்வரன் அவரின் அலுவலகத்திற்கு சென்று சந்தித்தார். அப்போது பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. போரின் பின்னரான வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமை, தேர்தலின் பின்னர் அங்கு காணப்படும் நிலைமை, கட்சிகளின் நிலவரம், அவர்களிடையேய…
-
- 0 replies
- 427 views
-
-
குண்டுதாரியின் உடற்பாகங்களை இந்து மயானத்தில் புதைத்ததற்கு எதிராகப் போராடிய எங்களை பொலிசார் தாக்கியதுடன் பொய்யான குற்றம் சுமத்தி வழக்குத் தாக்குதல் – அமைச்சர் வியாழேந்திரன் (கனகராசா சரவணன்) தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்களை இந்து மயானத்தில் புதைத்ததற்கு எதிராக பொதுமக்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டம் செய்தபோது எங்களைத் தாக்கிய பொலிசார் எம் மீது பொய்யான குற்றச்சாட்டு சுமத்தி நீதிமன்றில் வழக்குத் தாக்குதல் செய்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு சீயோன் தேவாலய தற்கொலை குண்டுதாரியின் உடற்பாகங்களை இந்து மயானத்தில் புதைத்ததற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வி…
-
- 1 reply
- 343 views
-
-
பிரித்தானிய பிரஜைகள் தவிர ஏனைய நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கைக்கு வர அனுமதி பிரித்தானியா பிரஜைகளை தவிர ஏனைய நாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தரலாம் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளால் கொரோனா வைரஸ் தாக்கம் பரவலடையாது என்றும் உக்ரைன் நாட்டு பயணிகள் நாட்டுக்கு வருவதை தடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். கொரோனா வைரஸ் தாக்கம் எப்போது முடிவுக்கு கொண்டுவரப்படும் என குறிப்பிட முடியாது என்றும் எனவே கொரோனா தாக்கத்தினால் எழுந்துள்ள சவால்களை சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு மத்தியில் வெற்றிக்கொள்ளவேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். இரத்தினபுரி மாவட்ட செயலக பிரிவில் இடம்பெற்ற நகர அ…
-
- 0 replies
- 310 views
-
-
பண்ணையாளர்களை விடுவிக்ககோரியும் தாக்கப்பட்டதை கண்டித்தும் கரடினாறு பொலிஸ் முன்பாக ஆர்ப்பாட்டம் Admin January 9, 202110:10 pm மட்டக்களப்பு மயிலத்தமடு மற்றும் மாதவனை பகுதியில் பண்ணையாளர் ஆறு பேர் தாக்கப்பட்டு விகாரையொன்றில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சம்பவத்தினை கண்டித்தும் கடத்தப்பட்ட பண்ணையாளரை விடுவிக்க நடவடிக்கையெடுக்குமாறு வலியுறுத்தியும் இன்று மாலை கரடியனாறு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மயிலத்தமடு மற்றும் மாதவனை இப்பகுதியில் நேற்று ஆறு பண்ணையாளர்களை அடித்து கட்டிவைத்து அவர்களை தடுத்துவைத்துள்ளது தொடர்பில் இன்று பண்ணையாளர்களின் உறவினர்கள் கரடியனாறு பொலிசில் முறைப்பாடு செய்துள்ளனர். பின…
-
- 5 replies
- 491 views
-
-
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி இடித்தழிக்கப்பட்ட செய்தியை கேட்டு மனம் உடைந்து விட்டதாக கனடா வெளிவிவகார அமைச்சர் François-Philippe Champagne தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவிடம் ஒன்று மாணவர்களால் அமைக்கப்பட்டது. இந்நிலையில், குறித்த நினைவுத் தூபி கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடித்தழிக்கப்பட்டுள்ளது. இதன் போது பல்கலைக்கழக வாயில் மூடப்பட்டு எவரும் உட்செல்ல அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை. குறித்த நினைவுத் தூபி இடிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். …
-
- 0 replies
- 544 views
-
-
பொலிஸ் படையில்150 சட்டத்தரணிகள் தலைமைப் பரிசோதகர்களாக நியமிக்கப்படுவர் Digital News Team பொலிஸ் படையில் 150 சட்டத்தரணிகளை தலைமைப் பரிசோதகர்களாக சேர்க்க அனுமதி வழங்குமாறு நீதியமைச்சர் அலி சப்ரி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கை பொதுமக்களுக்கு மிகவும் வினைத்திறனான சட்டசேவையை வழங்கும் ஒரு முயற்சியாக இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண, சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ருவான் குணசேகர, ஜனாதிபதி ஆலோசகர் யூ.ஆர். டி சில்வா, நீதியமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர்(சட்டம்)பியுமந்தி பீரிஸ் ஆகியோர் முன்னிலையில் இது குறித்து இன்று நீ…
-
- 0 replies
- 422 views
-
-
கிண்ணியா மாஞ்சோலைப் பகுதிக்கு பயணத்தடை Digital News Team திருகோணமலை கிண்ணியாவிலுள்ள மாஞ்சோலை கிராம சேவகர் பிரிவு பகுதிக்கு இன்று(11) பயணத்தடை விதிக்கப் பட்டுள்ளது. கொவிட்-19 தொற்றாளர்கள் ஐவர் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த உடனடியாக பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை அடுத்து அப்பிரதேச வதிவாளர்களுக்கு விரைவான அன்டிஜென் சோதனைகள் மற்றும் பிசிஆர் சோதனைகளை நடத்த மூன்று குழுக்களை நியமிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. Thinakkural.lk
-
- 0 replies
- 492 views
-
-
(நா.தனுஜா) உயிரிழந்த அப்பாவிப் பொதுமக்களை நினைவுகூருவதில் அரசாங்கத்திற்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை என்று அமைச்சர் சரத் வீரசேகர கூறியிருக்கிறார். அவ்வாறெனில், எதிர்வரும் மே மாதம் எவ்வித அடக்குமுறைகளோ சட்டரீதியான தடைகளோ இன்றி போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கு தமிழர்கள் அனுமதிக்கப்படுவார்களா? என்று மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் கேள்வி எழுப்பியிருக்கிறார். அவர் மேலும் கூறியிருப்பதாவது: நினைவுத்தூபியின் ஊடாக அப்பாவிப் பொதுமக்களை நினைவுகூருதல் என்ற போர்வையில் பயங்கரவாதிகளே நினைவுகூரப்படுகின்றனர் என்பதற்கான ஆதாரம் என்ன? அதேபோன்று போரின்போது உயிரிழந்தவர்களைத் தமிழர்கள் நினைவுகூருவதில்…
-
- 0 replies
- 507 views
-
-
ஒரு போர்க்குற்றவாளி என கோட்டபாய நிரூப்பித்துவிட்டார் – அனந்தி சசிதரன் 57 Views தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரனைப் பற்றி, கோட்டாபய ராஜபக்ஷ கூறியமை தொடர்பில், வட மாகாண முன்னாள் அமைச்சரும், ஈழத்தமிழர் சுயாட்சிக் கழக செயலாளருமான அனந்தி சசிதரன், தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டு தனது கருத்தை பிபிசி தமிழிடம் தெரிவிக்கையில், “எவ்வளவு மன வக்கிரமுடையவராக இருந்திருந்தால், இவ்வாறான ஒரு செய்தியை சிங்கள மக்கள் மத்தியில் – இனவாதத்தைப் பரப்பும் நோக்கில் அவர் கூறியிருப்பார் என்று புரிகிறது. உண்மையில் தேசியத் தலைவர் பிரபாகரனை இவர் கொன்றிருந்தால், இந்திய அரசுக்கு ஏன் இவர் மரண சான்றிதழை வழங்கவில்லை என்கிற கேள்வியை நாங்கள் முன்வை…
-
- 1 reply
- 632 views
-
-
கிளிநொச்சி இரணைமடு குளத்தின் அனைத்து வான் கதவுகளும் 12" அளவில் திறக்கப்பட்டுள்ளதாக நீர்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும், குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், தாழ்நில பகுதிகளிலுள்ள கிராமங்களான பன்னங்கண்டி, முரசுமோட்டை ,ஊரியான் ,கண்டாவளை போன்ற கிராமங்களில் உள்ள மக்களை அவதானமாக இருக்கும்படி மாவட்ட இர்முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது. இரணைமடு குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறப்பு..! | Virakesari.lk
-
- 0 replies
- 346 views
-
-
யாழ். பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்டமைக்கு கண்டத்தை வெளியிடும் வகையில் இன்று வடக்கு,கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அனைத்து தமிழ் கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் இணைந்து அழைப்பு விடுத்திருந்தன. அந்தவகையில், வடக்கு, கிழக்கு பகுதிகளில் பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதேவேளை, குறித்த ஹரத்தாலுக்கு முஸ்லிம் சமூகத்தினரும் தமது ஆதரவை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி கடந்த வெள்ளிக்கிழமை இடித்தழிக்கப்பட்ட நிலையில் , மீண்டும் அதே இடத்தில் தூபியினை நிறுவும் நோக்குடன் யாழ். பல்கலைக…
-
- 0 replies
- 548 views
-
-
‘மனநிலையை இழந்துள்ள கோட்டா’ நாட்டில் நடக்கும் முறைகேடுகள் தொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது மனநிலையை இழந்திருக்கவேண்டும் என்று, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டில் சீனி விலை அதிகரிக்கும் போதோ, அல்லது நிர்யணிக்கப்பட்ட விலையை விட, வர்த்தகர்கள் அதிக விலையில் விற்பனை செய்தாலோ, ஏன் ஜனாதிபதி அப்போது மனநிலையை இழக்கவில்லை என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். ஜனாதிபதி இவ்வாறான சந்தர்ப்பங்களில் விரைவான நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டார் என்று கூறியுள்ள அவர், அப்படியாயின், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள…
-
- 0 replies
- 432 views
-
-
பதவி மோகத்திற்காகவே துணை வேந்தர் நினைவுத்தூபியை இடித்தார்- யோகேஸ்வரன் குற்றஞ்சாட்டு by : Yuganthini பதவி மோகத்திற்காகவே யாழ்.பல்கலைத் துணை வேந்தர் நினைவுத்தூபியை இடித்தார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் குற்றஞ் சாட்டியுள்ளார். மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஊடக சந்திப்பில் யோகேஸ்வரன் மேலும் கூறியுள்ளதாவது, “2009 முள்ளிவாய்க்காலில் யுத்தம் மௌனித்ததன் பிற்பாடு தமிழ் மக்கள் அநாதைகளாக்கப்பட்ட நிலையில், எங்கள் தமிழ் உயர் அதிகாரிகளும் பதவிமோகம் மற்றும் பதவியை தக்கவைக்கவேண்டும் என்பதற்காக தமிழர்கள் இதுவரைப்பட்ட …
-
- 0 replies
- 474 views
-
-
ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை வழக்கு - தீர்ப்பு எதிர்வரும் புதன்கிழமை தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பிலான வழக்கினை தொடர்ந்து நடாத்த முடியாது என சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மட்டக்களப்பு மேல் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் எதிர்வரும் புதன்கிழமை குறித்த வழக்கு தொடர்பான தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். குறித்த சம்பவம் தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர்…
-
- 0 replies
- 314 views
-
-
பிள்ளையான் மீதான வழக்கை கைவிடுமாறு சட்டமா அதிபர் திணைக்களம் உத்தரவு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பாக பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் மீது இடம்பெற்று வந்த வழக்கு விசாரணையை கைவிட சட்டமா அதிபர் திணைக்களம் முடிவுசெய்துள்ளது. அதன்படி பிள்ளையான் மீதான வழக்கு விசாரணையை கைவிடுமாறு சட்டமா அதிபர் திணைக்களம் மட்டக்களப்பு மேல் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு செயலாளரும், சட்டத்தரணியுமான நிஷார ஜெயரத்ன தெரிவித்துள்ளார். ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்ட பிள்ளையானுக்கு கடந்த நவம்பர் மாதம் பிணை வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டார். தம…
-
- 0 replies
- 663 views
-
-
உண்ணாவிரதம் கைவிடப்பட்டாலும் ஹர்த்தாலை முழுமையாக கடைப்பிடியுங்கள் - யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்திருந்த உணவு தவிர்ப்பு போராட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் இ.அனுசன் தெரிவித்துள்ளார். அத்தோடு "போராட்டத்தின் வடிவங்கள் மாறலாம் போராட்டங்கள் எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கும்" எனவும் இ.அனுசன் மேலும் தெரிவித்துள்ளார். இன்று (11.01.2021) யாழ்.பல்கலைக்கழகம் முன்பாக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இ.அனுசன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்.... யாழ்.பல்கலைக்கழகத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்கால் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்ட…
-
- 0 replies
- 344 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் தலையீடு காரணமாக கிழக்கு மாகாண மக்களின் மிக முக்கிய பிரச்சினைகளில் ஒன்றுக்கு தீர்வு கிடைத்துள்ளது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காணப்படுகின்ற புதிய இருதயவியல் பிரிவின் ஆய்வகத்திற்கு (Cardiology Unit - Cardiac Catheterization Laboratory) இரு கிழமைகளில் வர இருந்த வைத்திய இயந்திர உபகரணங்களை (இதய வடிகுழாய் மற்றும் ஆஞ்சியோகிராம்) இடைநிறுத்தி அதனை களுத்துறை மாவட்டத்திற்கு மாற்றியமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இது தொடர்பான விடயத்தினை கையாளும் விவகாரம் இரா.சாணக்கியனிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்மந்தனினால் வழங்கப்பட்டது…
-
- 9 replies
- 1.3k views
-