Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வழக்கை துரிதப்படுத்துங்கள் அல்லது என்னை தூக்கிலிடுங்கள் November 23, 2020 வழக்கை துரிதப்படுத்துங்கள் அல்லது என்னை தூக்கிலிடுங்கள் என தமிழ் அரசியல் கைதி ஒருவர் ஜனாதிபதியிடம் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார். புதிய மகசீன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதியான கனகசபை தேவதாசன் எனும் அரசியல் இவ்வாறு ஜனாதிபதியிடம் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார். கைதியால் அனுப்பப்பட்ட கடிதம் இணைக்கப்பட்டுள்ளது. #அரசியல்கைதி #தூக்கிலிடுங்கள் #மகசீன்சிறை #தேவதாசன் https://globaltamilnews.net/2020/153412/

  2. மாவீரர்கள் மற்றும் மக்களுக்கான அஞ்சலியை மக்கள் ஏதோ ஒரு வகையில் மேற்கொள்ளுவர்கள்- சாள்ஸ் நிர்மலநாதன் – காணொளி மன்னார் நிருபர் மாவீரர் தினத்தை நினைவு கூறுவதற்கு வடக்கு கிழக்கில் அரசாங்கம் பல்வேறு தடைகளை விதித்துள்ள போதும் தமிழ் மக்களக்காக உயிர் நீத்த மாவீரர்கள் மற்றும் மக்களுக்கான அஞ்சலியை மக்கள் ஏதோ ஒரு வகையில் மேற்கொள்ளுவர்கள் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்; கடந்த…

  3. பாடசாலைகளை பாதுகாக்கும் அமைப்பு போராட்டம்? 37 Views பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்வதில் மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறி பாடசாலைகளை பாதுகாக்கும் அமைப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது. நுவரெலியாவில் நடைபெற்ற இப்போராட்டத்தின் போது, வெட்டுப்புள்ளிகளை நிர்ணயிக்கின்ற பொழுது உரிய நடைமுறை கடைபிடிக்கப்படவில்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த போராட்டம் தொடர்பாக பாடசாலைகளை பாதுகாக்கும் அமைப்பின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் ராமராஜ் தெரிவித்துள்ளதாவது, “இறுதியாக நடைபெற்ற க.பொ.த.உயர்தர பரீட்சையானது புதிய பாடத்திட்டத்திற்கு அமைவாகவும் பழைய பாடத்திட்டத்திற்கு அமைவாகவுமே இரண்டு…

  4. காரைதீவில் 25 மீற்றருக்குட்பட்ட கடலோர சட்டவிரோத கட்டிடங்கள் தகர்ப்பு! November 24, 2020 (காரைதீவு சகா) காரைதீவு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட மாளிகைக்காடு கடலோரத்திலுள்ள சட்டவிரோதக் கட்டிடங்கள் மீன்வாடிகள் (23) திங்கட்கிழமை அகற்றப்பட்டன. கடலோரத்தில் 25மீற்றருக்குட்பட்ட கட்டிடங்களே முதற்கட்டமாக கனரக வாகனத்தால் அகற்றப்பட்டன. இதற்கான உத்தியோகபூர்வ அறிவித்தல்கள் குறித்த மீனவர்களுக்கு ஒரு மாத காலத்துக்கு முன்னரே பிரதேச செயலகத்தால் அனுப்பப்பட்டிருந்தன. அநேகமான மீனவர்கள் அந்த அறிவித்தலுக்கமைவாக தத்தமது கட்டிடங்களை அகற்றியிருந்தனர்.அவ்விதம் அகற்றப்படாத கட்டிடங்களே நேற்று பிரதேசசபையின் கனரக வாகனங்கள் மூலம் தகர்க்கப்பட்டு அகற்றப்பட்டன. காலை 10 ம…

  5. நியமனத்தில் அநீதி - வெளிநாட்டு பல்கலைக்கழக பட்டதாரிகளின் கோரிக்கை.! பட்டதாரிகள் நியமனத்தில் நிராகரிக்கப்பட்ட வெளிநாட்டு பட்டதாரிகள் தங்களுக்கான நியமனத்தை வழங்குங்கள் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இலங்கை வெளிநாட்டு பட்டதாரிகள் ஒன்றியத்தினால் பட்டதாரிகள் நியமனத்தில் நிராகரிக்கப்பட்ட வெளிநாட்டு பட்டதாரிகள் அம்பாறை அட்டாளைசேனை பகுதியில் நடாத்திய இன்று(22) ஞாயிற்றுக்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டனர். மேலும் கருத்து தெரிவிக்கையில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பட்டதாரிகளை இந்த அரசாங்கம் அண்மையில் வழங்கிய நியமனங்களில் இணைத்துக் கொள்ளாமல் …

  6. 1,000 ரூபாயை வழங்க மறுக்கும் தோட்ட கம்பெனிகளின் ஒப்பந்தம் இரத்து – அரசாங்கம் எச்சரிக்கை தோட்டத் தொழிலாளர்களுக்கு அதிகபட்சம் 1,000 ரூபாய் ஊதியத்தை வழங்க மறுக்கும் தோட்ட நிறுவனங்களுடனான ஒப்பந்தம் மீளாய்வு செய்யப்படும் அல்லது நிறுத்தப்படும் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 2021 ஜனவரி முதல் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த ஊதியம் 1,000 ரூபாயாக ஆக உயர்த்தப்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 2021 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழிந்தார். இருப்பினும் தங்களுக்கு ஏற்பட்ட பெரும் இழப்புகளுக்கு அரசாங்கத்தினால் மானியம் வழங்கப்படாவிட்டால் 1,000 ரூபாயை செலுத்த ஒப்புக்கொள்ள மாட்டோம் என தோட்ட நிறுவனங்கள் கூறியிருந்தன. இந்நிலையில் இந்த விடயம் தொ…

  7. சூறாவளியால் மாற்றம் அடையும் வடக்கு, கிழக்கு – கனமழைக்கு வாய்ப்பு: மக்களுக்கு எச்சரிக்கை வடக்கு, கிழக்கு உள்ளிட்ட கரையோர பகுதிகள் இன்னும் 24 மணிநேரத்தில் சூறாவளியால் மாற்றம் அடைவதால் பாதிப்பு ஏற்படக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது என வளிமண்டல ஆராட்சி திணைக்கத்தின் யாழ்.பிராந்திய பொறுப்பதிகாரி பிரதீபன் தெரிவித்துள்ளார். இதனால் காற்றின் வேகம், கடும் மழை, இடி, மின்னல் தாக்கங்களில் இருந்து பொது மக்களும் கடற்றொழிலாளர்களும் தங்களை பாதுகாத்துக்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் தெரிவித்துள்ள அவர், “தற்போது வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தம், எதிர்வரும் 6 மணித்தியாலங்களில் தாழமுக்க வலையமாக மாற்றமடையும் சாத்தியம் உள்ளது. இது 24 மணித்தியால…

  8. அடக்கம் செய்வதற்கு அழுத்தம் கொடுத்ததாக நிரூபித்தால் பதவியை இராஜினாமா செய்ய தயார்- நீதி அமைச்சர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த எமது உறவினரை அடக்கம் செய்வதற்கு அழுத்தம் கொடுத்ததாக எவரும் நிரூபித்தால் பதவியை இராஜினாமா செய்ய தயாரென நீதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதாரண, இரத்மலானையில் கொரோனாவில் உயிரிழந்த தனது உறவினரை புதைக்க அமைச்சர் தலையீடு செய்ததாகவும் முதலில் பொசிடிவ் ஆன பெண்ணுக்கு இரண்டாவது தடவை பி.சி.ஆர் பரிசோதனை நடத்தி நெகடிவ் ஆக மாற்றி அவரை புதைக்க நடவடிக்கை எடுத்ததாகவும் அண்மையில் குற்றம் சுமத்தி இருந்தார். இந்நிலையில் அதற்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் …

  9. வாழ வேண்டியவர்களை கல்லறைகளாக்கிவிட்டு மயானங்களை துப்புரவு செய்கின்றனர் - டக்லஸ் தேவானந்தா (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) தமிழ் மக்கள் மத்தியில் வரவு செலவு திட்டம் தொடர்பாக வீணான புரளிகளைக் பரப்பி சுயலாப அரசியல் நடத்துகின்ற தரப்பினர், வாழ வேண்டியவர்களை கல்லறைகளாக்கி விட்டு தற்போது மயானங்களை துப்பாரவாக்குகின்றார்களே தவிர மக்களின் துயரங்களை துப்புரவு செய்ய தயாரில்லை என கடற்றொழில் அமைச்சர் டகள்ஸ் தேவானந்தா சபையில் தெரிவித்தார். 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். அவர் மேலும் கூறுகையில், இந்த வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ள விடயத்தினை ப…

  10. புட்டு, வடை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? நாடாளுமன்றில் சிறீதரன் உரை

  11. எம் செல்வங்களின் தியாகத்தில் யாரும் அரசியல் இலாபம் தேட முனைய வேண்டாம் ! பசீர் காக்கா November 20, 202012:21 pm மாவீரர் அறிவிழி (வீரச்சாவு 26.04.2009) யின் தந்தையாகிய முத்துக்குமார் மனோகர் ஆகிய நான் எதிர்வரும் மாவீரர் நாளையொட்டி சில விடயங்களை சக மாவீரர் குடும்பங்கள் மற்றும் உணர்வாளர்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். உலகையே ஆட்டிப்படைக்கும் கெரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மேலதிகமாக இனவாத வைரஸையும் நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. நாட்டின் பல்வேறு சட்டங்களும் அதன் உண்மையான நோக்கிலிருந்து திசை திரும்பி தமிழருக்கு எதிராகப் பாய்வது போலவே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் அதன் இலக்கிலிருந்து திசை திரும்புவதை அவதானிக்க முடிகின்றது. யுத்தம் முடிந்து ப…

  12. தமிழினத்தின் தேசிய வாழ்வு நிலைப்பதற்காக வீரர்களை நினைவு கொள்வதை தடுக்க முடியுமா? – உறவுகள் கேள்வி by : Dhackshala http://athavannews.com/wp-content/uploads/2020/11/Missing-Person.jpg தமிழ் இனத்தின் தேசிய வாழ்வு நிலைப்பதற்காகத் தமது சொந்த வாழ்வை ஈகம் செய்த சுதந்திர வீரர்களை நினைவு கொள்வதை தடுக்க முடியுமா? என வடக்கு கிழக்கு வலிந்து காணாமலக்கப்பட்டோரின் உறவுகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் எங்கள் பிள்ளைகளை நாங்கள் நினைவிற்கொள்வதை எவரும் தடுக்கமுடியாது எனவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பணிப்பாளர் திருமதி பத்மநாதன் கருணாவதி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இ…

  13. சுமந்திரனின் நகர்த்தல் பத்திரம் நிராகரிப்பு – மன்னாரில் மாவீரர் தின தடை உத்தரவு நீடிப்பு! by : Jeyachandran Vithushan http://athavannews.com/wp-content/uploads/2020/11/DSC_0600-720x450.jpg ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தாக்கல் செய்த நகர்தல் பத்திரம் நிராகரிக்கப்பட்டதுடன் மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தினத்தை நினைவு கூறுவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவும் நீடிக்கப்பட்டுள்ளது. மன்னார் நீதிமன்றத்தினது தடை உத்தரவிற்கு எதிராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் மன்னார் மாவட்ட சட்டத்தரணிகள் இணைந்து இன்றைய தினம் நகர்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். மன்னார் நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் இன…

  14. தமிழகத்தில் சிக்கியிருப்போரை நாட்டிற்கு அழைத்து வர திட்டம் கொவிட் 19 காரணமாக நாட்டிற்கு திரும்ப முடியாமல் தமிழகத்தில் சிக்கியிருபோரை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு நடடிவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாட்டிற்கு வருவதற்கு விரும்புகின்றவர்கள் தொடர்பான விபரங்களை அறியத் தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். பல்வேறு தேவைகள் நிமித்தம், இந்தியாவிற்கு – குறிப்பாத தமிழகத்திற்கு சென்றிருந்த நிலையில் கொவிட் 19 காரணமாக ஏற்பட்ட கொறோனா பரவலினால் ஏற்பட்ட போக்குவரத்து தடங்கல் காரணமாக சுமார் 1500 பேர் வரையில் தமிழகத்தில் அவதிப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையிலேயே அமைச்சரினால் குறித்த அறிவிப்பு வெளி…

  15. வீடுகளிற்கு முன்பாக ஒளிதீபம் ஏற்றுங்கள்- மயூரன் மக்களிடம் கோரிக்கை by : Yuganthini http://athavannews.com/wp-content/uploads/2020/11/theepam.jpg வீடுகளிற்கு முன்பாக ஒளி தீபம் ஏற்றி, சிவப்பு மஞ்சள் கொடிகளை காட்சிப்படுத்தி உணர்வுபூர்வமாக மாவீரர் நினைவேந்தலை அனுஸ்டிக்குமாறு முன்னாள் வட.மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் கோரிக்கை விடுத்துள்ளார். மாவீரர் தினத்தினை நடாத்துவதில் ஏற்ப்படுத்தப்படும் தடைகள் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை தடுக்கும் விதத்தில் பேரினவாத அரசு, நீதிமன்றத்தின் ஊடாகவும் படையினர் ஊடாகவும் பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வருகின்றது. …

  16. தீவகத்தின் அபிவிருத்தி அடுத்த படிநிலைக்கு நகருகிறது – அமைச்சர் டக்ளஸ் பெருமிதம் தீவகப் பிரதேசத்தின் அபிவிருத்தி அடுத்த படிநிலைக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அதாவது தீவகப் பிரதேசங்களுக்கு இடையிலான போக்குவரத்துவசதிகளை அதிகரித்து அபிவிருத்திக்கான அடிப்படைகளை உருவாக்கும் நோக்கில் ஊர்காவற்துறை – காரைநகருக்கு இடையிலான பாலத்தினை அமைப்பதற்கும், அராலி – குறிகட்டுவான் இடையிலான வீதியை கார்ப்பெட் வீதியாக மாற்றுவதற்குமான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். குறிப்பாக, 30 கிலோ மீற்றர் நீளமான அராலி – குற…

  17. மாவீரர் கனவு நிறைவேறும் வரை எங்களுடைய போராட்டங்களை தடுக்க முடியாது... தமிழ் இனத்தின் மீது அடக்குமுறை கூடக்கூட தமிழ் மக்களின் உணர்வுகளும் பன்மடங்காகக் கூடிச்செல்லும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ‘எம் மாவீரர்களின் கனவு நிறைவேறும் வரைக்கும் எங்களுடைய போராட்டங்களையும் நினைவுகூரல்களையும் யாரும் தடுக்க முடியாது’ என அவர் குறிப்பிட்டுள்ளார். மாவீரர் நிகழ்வு தொடர்பிலான நீதிமன்றத் தடையுத்தரவு மற்றும் வாகரை பொலிஸாரினால் அழைத்துச் செல்லப்பட்டமை தொடர்பாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் தெரிவிக்கையில், “வடக்கு கிழக்குப் பிரதேசங்களிலே மாவீரர்…

  18. ஆளும் கட்சியில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளை பாராளுமன்றில் திட்டுவோம்! இப்படியா மக்களிடம் வாக்கு கேட்டீர்கள்? – இராஜாங்கஅமைச்சர் வியாழேந்திரன் சீற்றம் November 22, 202012:43 pm (செங்கலடி நிருபர்) நாட்டின் ஒரு லட்சம் கிராமிய வீதிகளைஅபிவிருத்தி செய்தல் எனும் தொனிப்பொருளுக்கமைய மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேசசெயலாக பிரிவிற்குட்பட்ட தன்னாமுனை புனித வளனார் பிரதான வீதியானது 1 கி.மீ கிராமிய கொங்கிறீட் வீதியாக செப்பனிடும் ஆரம்பநிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் பிரதம அதிதியாக பங்கேற்கவுள்ளார்.மதகுருமார், மாவட்ட வீதி அபிவிருத்திஅதிகாரசபை பணிப்பாளர், உத்தியோகத்தர்கள், மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் குறித்தநிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.இதன் போது கருத்து…

  19. திவிநெகும நிதி மோசடி: பசிலுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடை நீக்கம் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்ட பயணத் தடையை நீக்குமாறு அதிகாரிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது. 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது, திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்துக்கு சொந்தமான நிதியை முறைக்கேடாக பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவத்தில் அவருக்க வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டிருந்தது. http://athavannews.com/திவிநெகும-நிதி-மோசடி-பசி-3/

  20. கோட்டா ஆட்சியில் இருக்கும் வரைக்கும் மாவீரர் நினைவேந்தலுக்கு இடமில்லை! - ஆளுங்கட்சி திட்டவட்டம்.! கோட்டாபய ராஜபக்ச, ஜனாதிபதியாக இருக்கும்வரை, மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்படமாட்டாது." - இவ்வாறு ஆளுங்கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மேஜர் பிரதீப் உந்துகொட தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:- "சில தமிழ் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் தங்கள் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகத் தமிழீழ விடுதலைப்புலிகளின் தாய…

    • 4 replies
    • 622 views
  21. தமிழ் மக்களின் உணவு பழக்கவழக்கத்தை இழிவுபடுத்தியமையை வன்மையாக கண்டிக்கிறேன்- அங்கஜன் தமிழ் மக்களின் உணவு பழக்கவழக்கத்தை இழிவுபடுத்தும் முகமாக யாழ்.நீதவான் நீதிமன்றில் கருத்து தெரிவித்த யாழ்.தலைமைப் பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்னாண்டோ கருத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும், யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த வெள்ளிக்கிழமை, யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸாரால், கடந்த காலங்களில் இடம்பெற்ற போர் சூழலில் உயிர்நீத்த தமிழ் உறவுகளுக்களுக்கான நினைவேந்தலை தடைசெய்ய கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. குறித்த வழக்கிற்காக முன்னிலை…

  22. இலங்கை உள்ளிட்ட நாடுகளில் காணாமல் ஆக்கப்படுதலை முடிவுக்குகொண்டு வருக: அமெரிக்காவில் தீா்மானம்.! இலங்கை உட்பட உலகெங்கும் பலவந்தமாக ஆட்கள் காணாமல் ஆக்கப்படுவதை முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுத்து அமெரிக்க காங்கிரஸ் சபை உறுப்பினர்கள் பிராட் ஷெர்மன் மற்றும் ஜேமி ரஸ்கின் ஆகியோர் சபையில் தீர்மானம் ஒன்றை முன்வைத்துள்ளனர். இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்கள் தொடர்பில் நீதி கோரியும் பொறுப்புக் கூறலை வலியுறுத்தியும் 1,300 நாட்களுக்கு மேலாகப் போராடிவரும் காணாமலாக்கப்பட்டோர் உறவுளின் போராட்டம் குறித்தும் இந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டுமென வலியுறுத்தி அரச படைகள் மற்றும் ஏனைய தரப்புக்களின் அச்சுறுத்தல்களையும் துன…

  23. கொரோனா முடக்கலால் தலைகீழாக மாறிவிட்ட வாழ்க்கை கிறிசாந்தினி கிறிஸ்டொபர்- சண்டே டைம்ஸ் கொரோனா வைரசின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்துவதற்காக நாட்டின் சில பகுதிகளில் நடைமுறைக்கு வந்த முடக்கல் நிலை மூன்றாவது வாரத்தை கடந்து நீடிக்கின்றது. இதன் காரணமாக மக்கள் மத்தியில் அமைதியின்மையும் மன அழுத்தங்களும் அதிகரித்துள்ளன. மட்டக்குளி தெமட்டகொட பேலியகொட கட்டுநாயக்கா போன்ற பகுதிகளை சேர்ந்த மக்கள் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தங்கள் வாழ்க்கையை முடக்கிவிட்டன என தெரிவித்துள்ளதுடன் தாங்கள் வேலையற்றவர்களாக மாறிவிடுவோம் என அச்சம் வெளியிட்டுள்ளனர். கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தினை சேர்ந்த ஆடைத்தொழிற்சாலை பணியாளர்களை பிரதிநிதித்துவ…

  24. மாவீரர் நாள் நினைவு கூருவது குறித்து கலந்துரையாடல் 26 Views தமிழ்த்தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் – மாவீரர் துயிலும் இல்லங்கள் சார்ந்த நினைவேந்தல் ஏற்பாட்டு குழுவினருக்கும் இடையிலான சந்திப்பு வடமாகாணசபை அவைத்தலைவர் சிவிகே சிவஞானம் அவர்களின் அலுவலகத்தில் நடைபெற்றது. இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் சார்பில் சிவிகே சிவஞானம், உதயன் பத்திரிகை குழும தலைவர் ஈஸ்வரபாதம் சரவணபவன், நாடாளுமன்ற உறுப்பினர் சி வி விக்கினேஸ்வரனின் பிரதிநிதியாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ரெலோ சார்பாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் மற்றும் தீவகம் சாட்டி மாவீரர் துயிலுமில்ல நினைவேந்தல் ஏற்பாட்டு குழு சார்பாக…

  25. கோப்பாயில் மாவீரர் நாள் கடைப்பிடிக்க துப்பரவு செய்த காணியை ஆக்கிரமித்தது இராணுவம் கோப்பாய் துயிலும் இல்லம் முன்பாக மாவீரர் நாள் கடைப்பிடித்த காணியில் இராணுவம் திடீரென முகாம் அமைத்து அப்பகுதியையும் ஆக்கிரமித்துள்ளது. கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த பகுதி இராணுவத்தினரின் நிரந்தர இராணுவ முகாம் உள்ளமையால் அதன் அருகில் உள்ள ஒரு காணியில், துயிலும் இல்ல மாதிரி அமைத்து ஆண்டுதோறும் மாவீரர்களை அஞ்சலித்த நிலையில், இந்த ஆண்டும் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இந்தக் காணியைத் துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இவ்வாறு துப்பரவு செய்யப்பட்ட காணியில் இம்முறையும் மாவீரர் நாள் நினைவேந்தல் நி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.