நிகழ்தல் அறிதல்
நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்
நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.
639 topics in this forum
-
திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்தப் பொங்கல் விழா இன்று சிறப்புற இடம்பெற்றது. https://newuthayan.com/story/15/பத்திரகாளி-அம்பாள்-ஆலயத-2.html
-
- 1 reply
- 666 views
-
-
சர்வதேச ஊடக சுதந்திர தினம் (நா.தினுஷா) சர்வதேச பத்திரிகை சுதந்திர தினம் இன்றாகும். இந்த வருடத்துக்கான பத்திரிகை சுதந்திரத்துக்கான சர்வதேச பட்டடியலில் இலங்கை 126 ஆவது இடத்தை பிடித்துள்ளதுடன் இந்தியாவை விட 14 ஆவது இடத்தில் முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 1993 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் மூன்றாம் திகதி சர்வதேச பத்திரிகை சுதந்திர தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த ஆண்டு கொண்டாடப்படும் பத்திரிகை சுதந்திர தினத்தினமானது தேர்தல்கள் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றில் ஊடகங்களில் பங்களிப்பு எனும் பிரதான தொனிப்பொருளில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கதது. இதேவேள…
-
- 0 replies
- 690 views
-
-
குருநகர் புனித யாகப்பர் ஆலய பெரிய வெள்ளி April 20, 2019 யாழ்ப்பாணம் – குருநகர் பிரதேசத்தில் உள்ள புனித யாகப்பர் ஆலயத்தில் பெரிய வெள்ளி ஆராதனைகள் நேற்று (19.04.2019) மாலை வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இவ்வாராதனையில் ஆண்டவரை சிலுவையில் அறைந்து இறைமகன் இயேசு சிலுவையில் மரிக்கும் காட்சியைத் தொடர்ந்து அவரின் உடலை சிலுவையில் இருந்து இறக்கி மக்கள் அஞ்சலிக்காக ஆலயத்துக்குள் எடுத்துச்செல்லும் காட்சியும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அதிகமான மக்கள் மிகவும் பக்தியோடும் இறை பற்றோடும் கலந்து கொண்டு இறைவன் யேசுவின் ஆசீரையும் பெற்றனர். படங்கள்: ஐ.சிவசாந்தன் http://globaltamilnews.net/2019/118669/
-
- 0 replies
- 911 views
-
-
அனைவருக்கும்.... உளம்கனிந்த, சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்.
-
- 9 replies
- 6.7k views
-
-
பங்குனித் திங்கள் பொங்கல் உற்சவத்தின் இறுதித் திங்கள் இன்று என்பதால் மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்பாள் கோவிலில் அடியார்களின் வருகை பெருமளவில் காணப்பட்டன. அதிகாலை 5.00 மணி தொடக்கம் கோவிலின் நாலாபுறமும் பொங்கல் வைத்து தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதில் அடியார்கள் ஈடுபட்டனர். https://newuthayan.com/story/15/பொங்கல்-பானைகளால்-நிரம்ப.html
-
- 0 replies
- 651 views
-
-
திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவின் தேர்த் திருவிழா இன்று இடம் பெற்றது. https://newuthayan.com/story/13/திருக்கோணேஸ்வரர்-ஆலய-தேர.html
-
- 1 reply
- 694 views
-
-
உலக முட்டாள்கள் தினம் – எப்படி வந்தது என்பதைத் தெரிந்து கொள்வோமா? சிறுவர் முதல் பெரியவர்கள் வரை வித்தியாசம் இல்லாமல் மற்றவர்களை ஏமாற்றியும், முட்டாள்கள் ஆக்கியும் கொண்டாடும் ஏப்ரல் முதல் நாளை முட்டாள்கள் தினம் என்று சொல்கிறோம். இந்த நாள் எப்படி வந்தது என்பதைத் தெரிந்து கொள்வோமா? கி.பி. 16-ம் நூற்றாண்டுவரை ஐரோப்பா கண்டத்திலுள்ள பல நாடுகளில் ஏப்ரல் 1-ம் திகதிதான் புத்தாண்டாகக் கடைபிடிக்கப்பட்டது. இப்போது ஜனவரி முதல் நாளை புத்தாண்டாகக் கொண்டாடுகிறோம் இல்லையா? அதுபோல அப்போது ஏப்ரல் முதல் நாளை கொண்டாடினார்கள். அப்போதைய ஜூலியன் நாட்காட்டியில் அப்படித்தான் சொல்லப்பட்டிருந்தது. 1582-ம் ஆண்டு பிப்ரவரி 29-ம் திகதி புதிய காலண்டரை 13-ம் கிரிகோரி என்ற திருத்தந்…
-
- 0 replies
- 993 views
-
-
கிளிநொச்சியில் ஊடகவியலாளர் சத்தியமூர்த்தியின் நினைவேந்தலும் நூல் வெளியீடு மறைந்த ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியின் 10ஆம் ஆண்டு நினைவேந்தலும், நூல் அறிமுகமும் இன்று (சனிக்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி ஊடகவியலாளர்களும், நண்பர்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள குறித்த நிகழ்வு கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் ஊடகவியலாளர் கஜன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், யாழ் போதனா மருத்துவமனை பணிப்பாளர் திரு.த.சத்தியமூர்த்தி, கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் உறுப்பினர்கள், முன்னாள் வட. மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், உறுப்பினர்களான த.குருகுலராஜா, சு.பசபதிப்பிள்ளை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டதுடன், ”ஜெனிவா மாயைகளும், உண்மைகளும்” எனும் தலைப்பில் நிலாந்தன் அரசி…
-
- 0 replies
- 412 views
-
-
யாழில் காண்பியல் கண்காட்சி March 6, 2019 யாழில் காண்பியல் கண்காட்சி நடைபெற்றுவருகின்றது. பல்கலைகழக படிப்பை நிறைவு செய்த மாணவர் குழு ஒன்று “சிவன் ஆர்ட்டீஸ்” எனும் தொனிப்பொருளில் குறித்த கண்காட்சியினை நடாத்தி வருகின்றனர். யாழ்.கார்கீல்ஸ் சதுக்கத்தில் 2ஆம் மாடியில் இன்று புதன் கிழமை முதல் குறித்த கண்காட்சி நடைபெறுக்கின்றது. கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளவை விற்பனை செய்யப்படவுள்ளன. காண்பியல் கலையின் பல பரிமாணங்களையும் மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் முகமாகவே இக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர் http://globaltamilnews.net/2019/115310/
-
- 0 replies
- 765 views
-
-
‘உலக தாய் மொழிகள் தினமும் உள்ளுர் உணவின் மொழியும் – 2019 திருமதி வானதி பகீரதன் January 28, 2019 கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 21ம் திகதி உலக தாய் மொழி தினத்தை நிறுவக வளாகத்தில் நிறுவகப் பணிப்பாளர் கலாநிதி. சி. ஜெயசங்கர் தலைமையில் நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளது. இந் நிகழ்வினை சிறப்புற நடத்துவதற்கான பூர்வாங்க வேலைகள் அனைத்தையும்; மொழி கற்கைகள் அலகின் விரிவுரையாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம் இதுவரை இரண்டு தடவைகள் இத் தினத்தினை ஒழுங்கமைப்புச் செய்து மிகவும் சிறப்பான முறையில் நடாத்தியுள்ளதோடு இந் நிறுவகத்தை உலக அறிஞர்கள், ஆய்வாள…
-
- 0 replies
- 1k views
-
-
கம்பர்மலை வித்தியாலயம் – கொம்மந்தறை இன்று வைரவிழாக் கொண்டாடியது யாழ், வடமராட்சிக் கல்வி வலயத்தில் கொம்மந்தறை என்ற கிராமத்தில் அமைந்துள்ள கம்பர்மலை வித்தியாலயத்தின் 60 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு வித்தியாலயத்தின் வைரவிழா வித்தியாலய மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றுள்ளது. வித்தியாலயத்தின் வைரவிழாவுக்கு பிரதம விருந்தினராக இந்திய துணைத்தூதர் ச. பாலச்சந்திரன் அழைக்கப்பட்டிருந்தார். அதிபர் வ. ரமணசுதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வித்தியாலய மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் “மருதமஞ்சரி” என்ற விழாமலர் வெளியீடும் இடம்பெற்றது. சிறப்பு விருந்தினர்களாக, வடமராட்சி கல்வி வலயப் பணிப்பாளர் யோ.ரவீந்திரன், ஓய்வுநிலை கல்வி வலயப் பணிப்பாளர் சி.நந்தகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர். …
-
- 0 replies
- 794 views
-
-
தமிழக அறிஞர் பலரின் பங்கேற்புடன் நல்லூரில் சிலப்பதிகார விழா : January 17, 2019 யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் தமிழ்நாடு தமிழ்ஐயா கல்விக் கழகமும் தமிழ் ஆடற்கலை மன்றமும் இணைந்து நடத்தும் இருநாள் சிலப்பதிகார முத்தமிழ் விழா நாளை(18.01.2019) வெள்ளிக்கிழமையும் மறுநாள் சனிக்கிழமையும் காலை மாலை அமர்வுகளாக நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் இடம்பெறவுள்ளது. நிகழ்வில் தமிழக பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 25 இற்கும் மேற்பட்ட அறிஞர்கள் பங்கேற்கவுள்ளனர். http://globaltamilnews.net/2019/110194/
-
- 0 replies
- 580 views
-
-
வல்வெட்டித்துறை, கடற்கரையை.. அலங்கரித்த விதவிதமான பட்டங்கள். தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு வல்வெட்டித்துறையில் பட்டம்விடும் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டி நேற்று (செவ்வாய்க்கிழமை) வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் நடத்தப்பட்டது. அதன்போது பல்வேற விதமான பட்டங்கள் வானில் பறக்கவிடப்பட்டன. குறிப்பாக ஆகாயம், கடல் மற்றும் தரைகளில் தாக்குதல் நடத்தக்கூடியவாறு டாங்கியின் அமைப்பில் வடிவமைக்கப்பட்ட பட்டம் ஒன்று வானில் பறக்கவிடப்பட்டது. குறித்த பட்டம் வானில் பறந்தபோது, கூடியிருந்த மக்கள் அனைவரும் கரகோஷம் எழுப்பி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் விதவிதமான முறைகளில் வடிவமைக்கப்பட்ட பல்வேறு பட்டங்களும் வானில் பறக்கவிடப்பட்டன. அ…
-
- 1 reply
- 1.1k views
-
-
யாழ் இந்துவின் பொங்கல் திருவிழா 2019 January 12, 2019 எதிர்வரும் பொங்கல் திரு நாளில் ஓர் கலாசார சங்கமம்.. யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர்களின் ஏற்பாட்டில், கல்லூரி அதிபர் திரு சதா நிமலன் அவர்களின் தலைமையில் காலை 9.30 மணிமுதல் பொங்கல் நிகழ்வுகளுடன் கூடிய கலாச்சார, சுதேசிய விளையாட்டுக்களை உள்ளடக்கிய நிகழ்வுகள் நாடாத்தப்படவுள்ளது, காலை 10.00 மணிக்கு யாழ் இந்துக் கல்லூரியில் இருந்து சிலம்பாட்டம், பொய்க் கால் குதிரை ஆட்டம், மாட்டு வண்டி பவனி ஆகிய பாரம்பரிய அம்சங்களுடன் கூடிய கலாசார நடைபவனி யாழ் நகரினை வலம்வரும்… தொடர்ந்து கலாச்சார நிகழ்வுகளின் ஆற்றுகைகள் யாழ் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெறும். தமிழர் தலை நிமிர் கழகத்தின் பொங்கல் திர…
-
- 0 replies
- 529 views
-
-
“கருத்துக்களால் களமாடுவோம் “ January 8, 2019 தமிழ் தேசிய பிரச்சனைக்கு ஜனநாயக வழிமுறைகளினூடாக தீர்வும். தமிழ் தலைமைகளின் வகிபாகமும் எனும் தொனிப்பொருளில் “கருத்துக்களால் களமாடுவோம் ” எனும் அரசியல் கருத்தரங்கு யாழில் நடைபெறவுள்ளது. யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் எதிர்வரும் சனிக்கிழமை மாலை 03 மணியளவில் குறித்த கருத்தரங்கு நடைபெறவுள்ளது. கோப்பாய் ஆசிரியர் கலாசாலை பிரதி அதிபர் ச. லலீசன் தலைமையில் நடைபெறவுள்ள இக் கருத்தரங்கில் வல்வெட்டித்துறை சிவன் கோவில் பிரதம குரு பிரம்மஸ்ரீ ப.மனோகரக்குருக்கள் , தென்னிந்திய திருச்சபை பேராயர் டானியல் தியாகராஜா , யாழ்.பல்கலைகழக பொருளியல் பீட பேராசிரியர் கலாநிதி சு.சிவகுமார் , யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்…
-
- 0 replies
- 648 views
-
-
மாந்தை மேற்கு பிரதேசத்தில் இடம் பெற்ற ஒளி விழா நிகழ்வு : December 28, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் மன்னார் மாவட்டச் செயலகம் மாந்தை மேற்கு பிரதேச செயலகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த ஒளி விழா நிகழ்வு நேற்று (27) மாலை மாந்தை மேற்கு பிரதேச சபை மைதானத்தில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் செல்லத்துரை கேதீஸ்வரன் தலைமையில் இடம் பெற்றது. குறித்த நிகழ்விற்கு விருந்தினர்களாக மன்னார் மறைமாவட்ட ஆயர் கலாநிதி இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை, வடமாகாண ஆளுநர் ரெஜினோட் குரே , வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீன்,வடக்கு மாகாண பிரதம செயல…
-
- 0 replies
- 598 views
-
-
அகில இலங்கை சைவப்புலவர் சங்கம் நடத்தும் 58 ஆவது பட்டமளிப்பு விழாவும் சைவமாநாடும் December 14, 2018 அகில இலங்கை சைவப்புலவர் சங்கம் நடத்தும் 58 ஆவது பட்டமளிப்பு விழாவும் சைவமாநாடும் 15.12.2018 சனிக்கிழமை முற்பகல் 8.30 மணியளவில் வண்ணை நாவலர் மகாவித்தியாலய மண்டபத்தில் அகில இலங்கை சைவப்புலவர் சங்கத் தலைவர் சைவப்புலவர் மு.திருஞானசம்பந்தபிள்ளை தலைமையில் நல்லை ஆதீன இரண்டாவது குரு மகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் திரு முன்னிலையில் இடம்பெறவுள்ளது. நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து நாகரீகத்துறை தலைவர் கலாநிதி சுகந்தினி சிறிமுரளிதரனும், சிறப்பு விருந்தினர்களாக சிவஸ்ரீ து.கு.ஜெதீஸ்வரக்குருக்கள் ,…
-
- 0 replies
- 662 views
-
-
தொண்டைமானாற்றில் கலை இலக்கிய விழா December 11, 2018 பருத்தித்துறை பிரதேச செயலகம் நடத்தும் கலை இலக்கியப் பெருவிழாவின் ஏழாம் நாள் நிகழ்வுகள் (11.12.2018) செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு செல்வச்சந்நிதி செல்லையா ஐயர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தலைமைக் கிராம அலுவலர் எஸ். சிவலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத் துறை அமைச்சின் செயலாளர் சி. சத்தியசீலனும் சிறப்பு விருந்தினராக கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசனும் கலந்து கொண்டனர். கலாசார உத்தியோகத்தர் பொன்.சுகந்தன் நிகழ்வுகளை நெறிப்படுத்தினார். . சைவப்புலவர் கலாபூஷணம் ச.உருத்திரேஸ்வரன், கலாபூஷணம் வெ. மு…
-
- 0 replies
- 554 views
-
-
இணுவில் கிராமத்தில் நடைபெற்ற முன்பள்ளிக் கலைவிழா December 9, 2018 மழை காலம் முடிந்து குளிர் தொடங்கும் மார்கழி மாதமிது.மாதங்களில் மார்கழியை உன்னதமானதெனப் போற்றுகின்றனர். மார்கழி பள்ளி செல்ல முனைகின்ற சிறுவர்களுக்கு மிகவும் முக்கியமான மாதம் எனலாம். புதிய வகுப்புக்குச் செல்லுகின்ற நிகழ்வு பெரும்பாலும் மார்கழியிலேயே நடைபெறுகிறது. குழந்தையாய் வீட்டோடு இருந்தவர்கள் கல்வி உலகத்தைக் காண விழைகின்றதற்குத் திறவுகோலாக முன்பள்ளிகள் காணப்படுகின்றன. என்னைப் பொறுத்தவரை முன்பள்ளியை நான் நாற்றுமேடை என்பேன்.விதைகளைக் கன்றுகள் என்ற நிலைக்குத் தயாராக்குகின்ற செயற்பாடுகளே முன்பள்ளிகளின் பணியாகக் காணப்படுகின்றது. சமூகத்தில் ஆழமாகச் சென்று மனித வாழ்வின் ஒவ்வொரு கணங்களில…
-
- 0 replies
- 356 views
-
-
சிறப்புற இடம்பெற்ற யாழ். தமிழ்ச்சங்கத்தின் நாவலர் விழா December 2, 2018 யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் கரிகணன் பதிப்பகத்தாருடன் இணைந்து முன்னெடுத்த நாவலர் விழா நேற்று சனிக்கிழமை (01.12.2018) பிற்பகல் 4 மணிக்கு நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்க உபதலைவர் சொல்லின் செல்வர் இரா.செல்வவடிவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கரிகணன் நிறுவன முகாமைத்துவப் பணிப்பாளர் சி.ராஜ்குமார் தம்பதியர் மங்கலவிளக்கேற்றினர். யாழ். இந்துக் கல்லூரி மாணவர் வசந்தகுமார் கஜானன் தமிழ்த்தெய்வ வணக்கப்பாவையும் நாவலர் வழிபாட்டுப் பாக்களையும் இசைத்தார். தமிழ்ச்சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் பா.பாலகணேசன் வரவேற்புரையையும் தமிழ்ச்சங்கத்த…
-
- 0 replies
- 833 views
-
-
யாழ் இந்துக் கல்லூரியின் செயன்முறைத் தொழில்னுட்பத் திறன்கள் கண்காட்சி November 30, 2018 யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி செயன்முறை தொழினுட்ப மன்றத்தினால் வருடாந்தம் ஒழுங்கு செய்யப்படுகின்ற செயன்முறைத் தொழில்னுட்பத் திறன்கள் கண்காட்சி கல்லூரி அதிபர் தலைமையில் 30.11.2018 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 9.00 மணியளவில் இடம்பெற்றது. கண்காட்சியில் மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், கல்லூரி ஆசிரியர்கள், அயற் பாடசாலை ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதில் மாணவர்களின் பல்வேறு துறை சார் புத்தாக்கங்கள் வெளிக்கொணரப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். இதனை மன்ற பொறுப்பாசிரியர் க.சுவாமிநாதனால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். http://globaltamilnew…
-
- 0 replies
- 507 views
-
-
மூத்த ஊடகவியலாளர்கள் கௌரவிப்பு November 18, 2018 யாழ்.ஊடக அமையத்தின் 6ஆம் ஆண்டு நிறைவு விழாவும், மூத்த ஊடகவியலாளர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இன்று ஞாயிற்றுக் கிழமை மாலை 6 மணிக்கு யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி மண்டபத்தில் நடைபெற்றது. யாழ்.ஊடக அமையத்தின் தலைவர் ஆ.சபேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் யாழில் நெருக்கடியாக சூழலில் அர்ப்பணிப்புடன் கடமையாற்றிய மூத்த ஊடகவியலாளர்களான ம.வ.கானமயில்நாதன், சண்முகராஜா யோகரட்ணம் (ராதேயன்), சின்னத்துரை தில்லைநாதன், ஆ.நா.சு.திருச்செல்வம், கந்தசாமி அரசரட்ணம், விநாயகம்பிள்ளை அற்புதானந்தன், மு.வாமதேவன், இளையதம்பி சற்குருநாதன்;, நா.யோகேந்திரநாதன் ஆகியோருக்கும் மற்றும் அமரர்களான அமரர்.சிதம்பரநாதன் திருச்செ…
-
- 0 replies
- 638 views
-
-
-
- 0 replies
- 585 views
-
-
மாந்தை மேற்கில் இடம் பெற்ற பிரதேச இலக்கிய விழா- 8 கலைஞர்களுக்கு விருதுகள் : November 3, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மாந்தை மேற்கு பிரதேசச் செயலக கலாச்சாரப் பேரவை மற்றும் கலாசார அதிகார சபை இணைந்து நடாத்திய ‘பிரதேச இலக்கிய விழா’ நேற்று (2) வெள்ளிக்கிழமை மாலை மன்-அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது. இதன் போது பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றதோடு,தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டது. யேசுதாசன் சாரா நீராஜா(சித்திரக்கலை),சி.பெலிக்ஸ் ஜெனிவர் (சித்திரக்கலை),எ.டெலிஸ்ரன் நிஸாந்(மிருதங்க இசை) ஆகிய மூவருக்கும் இளம் கலைமதி விருது …
-
- 0 replies
- 470 views
-
-
மாந்தையில் இடம் பெற்ற சர்வதேச முதியோர் – விசேட தேவையுடையோர் தின நிகழ்வு November 1, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச முதியோர் மற்றும் விசேட தேவையுடையோர் தினம் நேற்று புதன் கிழமை மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தில் இடம் பெற்றது. -மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றதுடன் முதியோர் மற்றும் விசேட தேவையுடையவர்களுக்கான பல்வேறு போட்டிகளும் இடம் பெற்றது. இதன் போது வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரனினால் வழங்கி வைக்கப்பட்டது. -குறித்த நிகழ்வில் விருந்தினராக மடு வலயக்கல்வி ப…
-
- 0 replies
- 466 views
-