நிகழ்தல் அறிதல்
நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்
நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.
638 topics in this forum
-
சிட்னியில் Laughing'o laughing நகைச்சுவை நாடகங்கள் வரும் சனி 30.01.2009ல் நடைபெறவுள்ளது. 4 வது வருடமாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில் சேகரிக்கப்படும் நிதி தாயாகத்தில் மனிதாபிமான உதவிகளுக்கே செலவு செய்யப்பட்டு வருகிறது. 4 வது வருடமாக சென்ற மாதம் அக்டோபரில் நடைபெற்ற இந்நிகழ்வில் 1500 இருக்கைகள் கொண்ட அரங்கில், நுளைவுச்சீட்டினைப் பெறமால் ஏமாற்றத்துடன் திரும்பியவர்களுக்காக 2வது முறையாக இந்நிகழ்வு வரும் சனிக்கிழமை நடைபெறுகிறது.
-
- 0 replies
- 822 views
-
-
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய தேர்த்திருவிழா! பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவையொட்டி நேற்று தேர்த்திருவிழா இடம்பெற்றது. திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா கடந்த 24 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இதன் போது உற்சவ மூர்த்திகளுக்கு வசந்த மண்டபத்தில் பூஜைகள் இடம் பெற்றன. அதனை தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் உள் வீதி வலம் வந்து கொடித் தம்ப பூஜை இடம் பெற்று அதனை தொடர்ந்து கொடி தாம்பத்திற்கு அபிஷேகம் செய்து ஆராதனைகள் இடம்பெற்றது. பின்னர் சுப வேளையில் கொடியேற்றம் இடம்பெற்றது. திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு கருணாநந்த குருக்கள் தலைமையில் கொடியேற்றம் இடம்பெற்றது. அதனைத் …
-
- 0 replies
- 455 views
-
-
கனடா ரொறண்டோ நகரில் உலகத் தமிழ் இணைய மாநாடு! உத்தமம் எனும் உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் சார்பில் 16வது உலகத் தமிழ் இணைய மாநாடு எதிர்வரும் 25 முதல் 27 வரை, கனடா நாட்டின் ரொரண்டோ நகரில் நடைபெறுகிறது. இம்மாநாட்டின் கருத்தரங்கில் படிப்பதற்காக அனுப்பப்பட்ட 90-க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளில் 34 கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. "கற்றல் கற்பித்தல், பேசுவதை புரிந்து கொள்ள உதவும் ஒலி-வரி வடிவமாற்ற நுட்பங்கள், தகவல் கிடங்குகள், வணிகப் பயன்பாடு, மின்னூல்கள் ஆகியவை தொடர்…
-
- 0 replies
- 518 views
-
-
கவிஞரும் நடிகருமான ஜெயபாலன் உடன் தமிழ் முஸ்லிம் இலக்கியவாதிகள் சந்திப்பு ! By Shayithan.S (அஷ்ரப் ஏ சமத்) மறைந்த தலைவா் எம்.எச்.எம். அஷ்ரப்புடன் இலக்கிய நட்புடன் பழகியவரும் கவிஞருமான ஜெயபாலனுடன் கடந்த வாரம் இந்தியாவில் இருந்து இலங்கை வந்திருந்தாா். அவருடன் கொழும்பில் உள்ள தமிழ் முஸ்லிம் இலக்கியவாதிகள் எழுத்தளாா்கள் நட்புறவுச் சந்திப்பு நிகழ்வு ஒன்று நேற்று (22) வியாழக்கிழமை கொழும்பு 2 ல் உள்ள தாருஸ்ஸலாம் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வு முஸ்லிம் காங்கிரஸ் தலைவா் ரவுப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது. இச்சந்திப்பில் முஸ்லிம் மீடீயா போரத்தின் தலைவி புர்ஹான் பீபி இப்திக்காா், மற்றும் கவிஞா் டொக்டா் தாசீம் அகமத், மேமன் கவி, கவிஞா் ஹசீர், கின…
-
- 0 replies
- 282 views
-
-
சந்துருக்கொண்டான் படுகொலையின் நினைவுநாள் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு மட்டக்களப்பு சந்துருக்கொண்டான் படுகொலையின் 29ஆவது ஆண்டு நினைவு தினம் உணர்வுபூர்வமான அனுஷ்டிக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக சத்துருக்கொண்டான் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியருகே இந்த நினைவேந்தல் நிகழ்வு நேற்று (திங்கட்கிழமை) மாலை நடைபெற்றது. படுகொலைசெய்யப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், அரசியல்வாதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதன்போது நினைவுத்தூபியில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திக்கான பிரார்த்தனைகளும் முன்னெடுக்கப்பட்…
-
- 0 replies
- 356 views
-
-
சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் வாணி விழாவும் முத்தமிழ் விழாவும் October 13, 2018 சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் வாணி விழாவும் முத்தமிழ் விழாவும் 13.10.2018 சனிக்கிழமை காலை இடம்பெற்றது. அதிபர் ந.சர்வேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பழைய மாணவரும் கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி அதிபருமாகிய செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் கலந்து கொண்டார். தமிழ்த்தினப் போட்டிகளில் பாடசாலைக்குப் பெருமை சேர்த்த மாணவர்கள் மற்றும் வாணிவிழாவையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்கள் சான்றிதழ்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டனர். மாணவர்களின் கலை நிகழ்வுகள் பல இடம்பெற்றன. http://globaltamilnews.net/2018/99298/
-
- 0 replies
- 383 views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
நெல்லியடி மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழா! நெல்லியடி மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழா இன்று வெகுவிமர்சையாக இடம் பெற்றுள்ளது. இன்றைய முதலாம் நாள் நிகழ்வாக காலை மாணவர்களின் துவிச்சக்கர வண்டி பவனியும் பனம் கன்றுகள் நடும் நிகழ்வும் இடம்பெற்றன. அத்துடன் நூறாவது ஆண்டை முன்னிட்டு நினைவு முத்திரையும் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. ஊர்தி பவனியில் இராணுவ பீரங்கி ஒன்று கடோற் அணியினரால் உருவாக்கப்பட்டு அதுவும் காட்சியாகக் கொண்டு செல்லப்பட்டது. பாடசாலை அதிபர் கிருஸ்ணகுமார் தலமையில் இடம் பெற்ற இந்நிகழ்வுகளில் பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று இருந்தனர். https://ath…
-
- 0 replies
- 405 views
-
-
புங்குடுதீவு பெருங்காடு கோயில் வயல் ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் மகாகும்பாபிசேகம்
-
- 0 replies
- 473 views
-
-
மஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 140ஆவது பிறந்ததின நிகழ்வு முன்னெடுப்பு மஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 140ஆவது பிறந்ததின நிகழ்வு யாழ். அரசடிவீதியில் அமைந்துள்ள மஹாகவி பாரதியாரின் நினைவுத் தூபியில் இடம்பெற்றது. இன்று (ஞாயிற்க்கிழமை) யாழ். இந்திய உதவித்தூதகத்தின் எற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ். இந்திய உதவித்தூதுவர் ராகேஸ் நட்ராஜ் ஜெயபாஸ்கர் கலந்துகொண்டு பாரதியாரின் உருவச்சிலைக்கான மலர்மாலையினை அணிவித்தார். குறித்த நிகழ்வில் யாழ். இந்திய உதவித்தூதரத்தின் சிரேஸ்ட அதிகாரி ஏ.கிருஸ்ணமூர்த்தி, தமிழ் சங்கத்தின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். https://athavannews.com/2022/1314950
-
- 0 replies
- 901 views
-
-
-
-
- 0 replies
- 1k views
-
-
சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று ! இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, மட்டக்களப்பு மனித உரிமைகள் என்றால் எல்லா மனிதர்களுக்கும் உரிய அடிப்படையிலான உரிமைகளையும், சுதந்திரங்களையும் குறிக்கின்றன. ஒரு மனிதன் அமைதியான அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கு என்னவெல்லாம் தேவையோ அவற்றை மனித உரிமைகள் எனக் கருதலாம். இவற்றில் அடிப்படைத் தேவைகளான நீர், உணவு, உறைவிடம் போன்றவற்றுடன் கொலை செய்யப்படாமலும். சித்திரவதை செய்யப்படாமலும். அவமதிக்கப்படாமலும் வாழ்வதற்கான உரிமையும் இதில் உள்ளடக்கப்படுகிறது. இரண்டாம் உலக மகா யுத்தம் முடிவடைந்ததும் வெற்றி பெற்ற நாடுகள் 1945 இல் உக்ரேனில் யால்டா மாநாட்டில் கலந்து கொண்ட போது, உலக சமாதானத்தைப் பாதுகாக்க தவறிவிட்ட சர்வதேச சங்கத்த…
-
- 0 replies
- 548 views
-
-
லண்டனில் பண்டாரவன்னியன் குறும்பட வெளியீடு
-
- 0 replies
- 663 views
-
-
"கனவு மெய்ப்படும்" / பாரதியாரின் நினைவாக, அவர் விரும்பிய தலையங்கத்தில் ஒரு சிறுகதை [நினைவிடத்தில் உள்ள கல் பலகை மற்றும் அவரது இறப்புச் சான்றிதழில் உள்ள தகவல்களின்படி, தமிழ்க் கவிஞர் செப்டம்பர் 12 ஆம் தேதி காலமானார். ஆனால், மாநில அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதியை 'மகாகவி தினமாக' அறிவித்தது.] "மனதிலுறுதி வேண்டும், வாக்கினி லேயினிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும், நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்; கனவு மெய்ப்பட வேண்டும், கைவசமாவது விரைவில் வேண்டும்;" [பாரதியார்] கனவுகளின் அடித்தளம் விருப்பத்தின் விளைவு என்பது உளவியல் ஆய்வாளரான சிக்மண்ட் பிராய்டு [Sigmund Freud] என்பாரின் கரு…
-
- 0 replies
- 197 views
-
-
திருக்குறள் விழா April 17, 2021 முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலகமும் கல்வி பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த திருக்குறள் விழா நேற்று (16-04-2021) மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றுள்ளது . மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் செல்வி றஞ்சனா நவரத்தினம் தலைமையில் நடைபெற்ற இந்த திருக்குறள் விழாவில் முதன்மை விருந்தினராக முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் க. விமலநாதன் கலந்துகொண்டு விழாவின் ஆரம்ப சுடரினை ஏற்றி வைத்ததுடன் திருவள்ளுவர் சிலைக்கு மலர் மாலை அணிவித்தாா். இதனைத் தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் நடைபெற்றன இதில் திணைக்கள தலைவர்கள் அரச உத்தியோகத்தர்கள் உயர் அதிகாரிகள் பாடசாலை மாணவர்கள் சமய தொண்டர்கள் பொதும…
-
- 0 replies
- 721 views
-
-
உலகைக் உலுக்கிய கறுப்பு ஜூலையின் 31 ஆவது ஆண்டை நினைவு கூறும் முகமாக டவுனிங் வீதியில் உள்ள பிரித்தானிய பிரதமர் அலுவலகத்தின் முன்பாக 23ஜூலை மாலை 4 மணி தொடக்கம் 8 மணி வரை நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன் நினைவு தினத்தில் பிரித்தானிய வாழ் அனைத்து தமிழ் உறவுகளையும் அணி திரளுமாறு பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுக்கின்றது. தமிழ் மக்கள் மீதான சிறீலங்கா அரசாங்கத்தின் தொடர்ச்சியான இனவழிப்பில் பெரும் உயிர், உடைமை இழப்பை ஏற்படுத்திய 1983 கறுப்பு ஜூலை 3000 இற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டும், பல்லாயிரக்கணக்கான பெறுமதியுள்ள சொத்துக்கள் அழிக்கப்பட்டு தென்னிலங்கையிலிருந்து அகதிகளாகத் துரத்தியடிக்கப்பட்டார்கள். 65 ஆண்டுகளுக்கும் மேலாக தொடச்சியாக சிங்கள …
-
- 0 replies
- 638 views
-
-
-
- 0 replies
- 2.1k views
-
-
கம்பர்மலை வித்தியாலயம் – கொம்மந்தறை இன்று வைரவிழாக் கொண்டாடியது யாழ், வடமராட்சிக் கல்வி வலயத்தில் கொம்மந்தறை என்ற கிராமத்தில் அமைந்துள்ள கம்பர்மலை வித்தியாலயத்தின் 60 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு வித்தியாலயத்தின் வைரவிழா வித்தியாலய மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றுள்ளது. வித்தியாலயத்தின் வைரவிழாவுக்கு பிரதம விருந்தினராக இந்திய துணைத்தூதர் ச. பாலச்சந்திரன் அழைக்கப்பட்டிருந்தார். அதிபர் வ. ரமணசுதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வித்தியாலய மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் “மருதமஞ்சரி” என்ற விழாமலர் வெளியீடும் இடம்பெற்றது. சிறப்பு விருந்தினர்களாக, வடமராட்சி கல்வி வலயப் பணிப்பாளர் யோ.ரவீந்திரன், ஓய்வுநிலை கல்வி வலயப் பணிப்பாளர் சி.நந்தகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர். …
-
- 0 replies
- 793 views
-
-
உலகளாவிய ரீதியில் நீதிவேண்டி உரிமை வேண்டித் தமிழர் நடாத்தும் கறுப்பு யூலை நினைவின் மாபெரும் ஒன்றுகூடல் கனடா அல்பர்ட் கம்பல் சதுர்க்கத்தில் நடைபெறவுள்ளது. இடம்: Albert Campbell Square (Scarborough Civic Center)) காலம்: யூலை 23, 2016 சனிக்கிழமை நேரம்: மாலை: 6:30 மணி 1983 யூலை ஆரம்பித்த தமிழினப்படுகொலை இன்று 33 ஆண்டுகள் கடந்தும் தொடர்கின்றது. தனது பொறுப்பில் இருந்து தொடர்ந்தும் தவறி நிற்கும் சர்வதேசத்தை அதன் மனிதநேயக் கடமைகளை ஆற்ற வைக்க நாம் தொடர்ந்தும் கடுமையாக உழைக்க வேண்டும். இது நாம் துவண்டு கிடக்கும் நேரமல்ல விவேகத்துடன் விரைந்து செயற்படும் காலம். இலங்கை சுதந்திரம் அடைந்தத…
-
- 0 replies
- 672 views
-
-
”குழு 24″” மலையக இளைஞர்களின், கருப்புச் சட்டை கவனயீர்ப்புப் போராட்டம்… October 20, 2018 1 Min Read இடம் : கொழும்பு, காலிமுகத்திடல் திகதி : 24.10.2015 புதன்கிழமை (பௌர்ணமி தினம்) நேரம் : காலை 10.00 தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை குறைந்தபட்சம் 1000 ரூபாவாக உயர்த்தக் கோரி, கொழும்பு காலிமுகத்திடலில் நடத்தப்படவுள்ள ”கருப்புச் சட்டை”” ஒன்றுகூடலுக்கு (கவனயீர்ப்புப் போராட்டம்) அனைத்து இளைஞர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். கொழும்பு காலிமுகத்திடலில் எதிர்வரும் 24ஆம் திகதி காலை 10 மணிக்கு கவனயீர்ப்பு கருப்புச் சட்டை ஒன்றுகூடல் ஒன்றை நடத்த இளைஞர்கள் திட்டமிட்டுள்ளனர். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளத்தை உய…
-
- 0 replies
- 1.1k views
-
-
"உண்மையை நிலைநாட்டுங்கள்! / உண்மையை நம்புங்கள்!!" [கருப்பு ஜூலையை முன்னிட்டு] எங்கே மனம் அச்சமின்றி இருக்கிறதோ எங்கே தலை நிமிர்ந்து இருக்கிறதோ எங்கே அறிவு சுதந்திரமாக இருக்கிறதோ எங்கே உலகம் குறுகிய பார்வையால் சிதைந்து பிரிந்து போகாமல் இருக்கிறதோ எங்கே உண்மையின் ஆழத்தில் இருந்து வார்த்தைகள் பிறக்கிறதோ எங்கே அயராத முயற்சி சோர்வுயின்றி முழுமை நோக்கி கரங்களை நீட்டுதோ எங்கே பகுத்தறிவின் தெளிவான நீரோடை பாலைவன மணலில் வழி தவறிப் போகவில்லையோ எங்கே எப்பொழுதும் விரியும் சிந்தனையும் செயலும் மனதை முன்னோக்கிச் செலுத்துகிறதோ அந்த சுதந்திர சொர்க்கத்திற்கு என் தந்தையே என் நாட்டை விழித்தெழச் செய்யுங்கள்! [தமிழாக்கம்: கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] “Where the mind is with…
-
- 0 replies
- 106 views
-
-
இன்று ஆடி அமாவாசை இன்று ஆடி அமாவாசை அப்பா இல்லாதாவர்கள் விரதம் பிடிக்க வேணுமாம். எனக்கு இதைப்பற்றி கனக்க தெரியாது. தேடுதல் வேட்டை நடாத்திய போது வீக்கிபீடியாவில் பெற்றது. நீங்களும் வாசியுங்கோ. ஆடி அமாவாசை இந்து சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமும் சிறப்பானதுமான தினமாகும். ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசை ஆடி அமாவாசை விரதம் எனச் சிறப்புப் பெறுகின்றது. வானவியல் கணிப்பின் படி சூரியனும் சந்திரனும் ஒரே இராசியிற் கூடுகின்ற போதுள்ள காலம் அமாவாசை ஆகும். சூரியனைப் "பிதிர் காரகன்" என்கிறோம். சந்திரனை "மாதுர் காரகன்" என்கிறோம். எனவே சூரியனும் சந்திரனும் எமது பிதா மாதாக்களாகிய வழிபடு தெய்வங்களாகும். சூரிய பகவான் ஆண்மை, ஆற்றல், வீரம் என்பவற்றை எல்லாம் எமக்குத் தரவல்லவர். சந…
-
- 0 replies
- 1.4k views
-
-
நயினாதீவு, ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தின்... திருவிழா ஆரம்பம்! வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் – நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழா நேற்று (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்தும் 15 தினங்கள் சிறப்புற இடம்பெறவுள்ள இவ்வாலய மஹோற்சவப் பெருவிழாவில் எதிர்வரும் 11 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு சப்பறத் திருவிழாவும், 12 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை இரதோற்சவமும் மறுதினம் புதன்கிழமை காலை தீர்த்தோற்சவமும் நடைபெறவுள்ளன. https://athavannews.com/2022/1289022
-
- 0 replies
- 330 views
-
-
கிளிநொச்சியில் 16ம் திகதிமுதல் நீதனின் 'விடிவின் நிறங்கள்' - பண்டார வன்னியன் Tuesday, 09 January 2007 15:55 சமர்க்களத்தில் படுகாயமடைந்து நவம்அறிவுக்கூடத்தில் இணைக்கப்பட்ட போராளியொருவன் தனது இரண்டாவது ஓவியக்கண்காட்சியை எதிர்வரும் 16ம் திகதி கிளிநொச்சியில் நடத்தவிருகின்றான். கலை இலக்கிய வட்டாரங்களில் நீதன் என அறியப்படுகின்ற இவன் மன்னார் அடம்பனைச் சேர்ந்த பிரான்சிஸ் சந்திரரேசகரன் ஆவான் ஓவியம,; சிற்பம், வார்ப்புக்கலை, மரச்சிற்பக்கலை, கணணிவரைகலை என்பவற்றோடு தபேலா வாத்தியத்தையும் பயின்றிருக்கின்ற நீதன் நீர்வர்ணம், தைலவர்ணங்களில் தான் வரைந்த 35 ஒவியங்களைக் காட்சிப்படுத்தவிருக்கின்றா
-
- 0 replies
- 1k views
-