நிகழ்தல் அறிதல்
நிகழ்வுகள் | கொண்டாட்டங்கள் | விழாக்கள் | சந்திப்புகள்
நிகழ்தல் அறிதல் பகுதியில் அவசியமான நிகழ்வுகள், கொண்டாட்டங்கள், விழாக்கள், சந்திப்புக்கள் பற்றிய தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும். யாழ் களத்தில் விளம்பரம் செய்ய விரும்பின் கட்டண விபரங்களை அறிய நிர்வாகத்துடன் தொடர்புகொள்ளலாம்.
636 topics in this forum
-
- யாழ் அஸீம் - உங்களிடம் பறித்தெடுத்த நெஞ்சக் கனவுகளை நினைவுப்புதையல்களை உங்களது பிள்ளைகளின் எதிர்கால வரலாற்றை மண்ணின்மேல் உங்களது மதலைத் தமிழ் ஏன் மறைந்ததென்ற அங்கலாய்ப்பில் உங்களது முன்னோர்களின் எலும்புச் செல்வங்கள் உறங்குகின்ற ஈமப்புகை குழிகளை வாழையடி வாழையென உங்கள் தலைமுறைகளை அல்லாஹூ அக்பர் என ஆர்ப்பரித்த பள்ளிவாசல்களை எல்லாம் முன்வைத்து மன்னிப்பீர் என்று வாய்விட்டலறாமல் எல்லாம் அபகரித்து நட்பில்லாச் சூரியனின் கீழ் உப்புக்களர் வழியே ஓடென்று விரட்டிவிட்ட குற்றமெதுவுமறியா இக்குணக்குன்று மானிடர்கள் ஐந்து வருடங்கள் கண்ணீரும் சோறும் கலந்தே புசிக்கின்றனர். …
-
- 7 replies
- 1.3k views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் நூறாவது ஆண்டின் இறுதி நிகழ்வுகள் இன்று இடம் பெற்றன. யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் நூறாவது ஆண்டின் இறுதி நிகழ்வுகள் இன்று இடம் பெற்றன. கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற நிகழ்வில் விருந்தினர்கள் ஆலய வழிபாட்டுடன் வரவேற்கப்பட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன. இதன் போது கலாசாலையின் முன்னாள் அதிபர்கள் கௌரவிக்கப்பட்டு நூறாவது ஆண்டு நினைவையொட்டிய 25 ரூபாய் பெறுமதி கொண்ட தபால் முத்திரை ஒன்றும் வெளியீடு செய்துவைக்கப்பட்டது. அத்துடன் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் அதிபர் ச.லலீசனால் நூறாவது ஆண்டு நூல் ஒன்றும் வெளியீடு செய்துவைக்கப்பட்டது. நிகழ்வில் அமைச்சர் …
-
- 0 replies
- 415 views
-
-
Toronto Tamil International Film Festival 2023 நான்காவது Toronto சர்வதேச தமிழ் திரைப்பட விழா வழமைக்கு மாறாக இம்முறை சிறப்புற நடைபெற ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. 14 நாடுகளிலிருந்து 400 இற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் , குறுந்திரைப்படங்கள் தெரிவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து 60 படங்கள் காட்சிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளன. எமது நிகழ்வின் ஆரம்ப நிகழ்வு Markham Civic centre 1 01 Town centre Blvd Markham இல் September 8, 2023 அன்று 7 pm to 11 pm இடம்பெறும் அதைத்தொடர்ந்து September 9 & 10 ஆம் திகதிகளில் York Cinemas திரை அரங்கில் மதியம் 12 pm முதல் இரவு 11 pm வரை தெரிவு செய்யப்பட்ட திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்படும்.…
-
- 1 reply
- 432 views
-
-
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா கொடியேற்றம்! வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந் திருவிழா இன்றைய தினம் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ளது. எதிர்வரும் 13ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும், மறுநாள் 14ஆம் திகதி காலை தீர்த்த திருவிழா இடம்பெற்று, அன்றைய தினம் மாலை கொடியிறக்க திருவிழா இடம்பெறும். https://athavannews.com/2023/1345998
-
- 4 replies
- 389 views
- 1 follower
-
-
நல்லூர் கந்தனின் வருடாந்த பெருந்திருவிழா பூஜைகள் தொடர்பான அட்டவணை வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா நாளை திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இது ஆடி அமாவாசைக்கு அடுத்த 06ம் நாள் ஆரம்பிக்கப்படும். சுற்றுலாப் பயணிகளின் சுற்றுலா விசாக்களை விரைவாகப் பெற்றுக் கொள்வதற்கும் சிரமங்கள் இன்றி வருகை தருவதற்கும் இலங்கை அரசாங்கம் தடைகளை தளர்த்தியுள்ளது. இந்த நிலையில் பெருமளவான மக்கள் நல்லூர் கந்தன் தரிசனத்திற்கு வருகைத் தருவார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. நாளை ஆரம்பமாகியுள்ள மகோற்சவ பெருவிழா எதிர்வரும் 25 நாட்களுக்கு இடம்பெறவுள்ளது. வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளை ஆரம்பமாகவுள்ள நிலை…
-
- 0 replies
- 282 views
-
-
நெல்லியடி மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழா! நெல்லியடி மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழா இன்று வெகுவிமர்சையாக இடம் பெற்றுள்ளது. இன்றைய முதலாம் நாள் நிகழ்வாக காலை மாணவர்களின் துவிச்சக்கர வண்டி பவனியும் பனம் கன்றுகள் நடும் நிகழ்வும் இடம்பெற்றன. அத்துடன் நூறாவது ஆண்டை முன்னிட்டு நினைவு முத்திரையும் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. ஊர்தி பவனியில் இராணுவ பீரங்கி ஒன்று கடோற் அணியினரால் உருவாக்கப்பட்டு அதுவும் காட்சியாகக் கொண்டு செல்லப்பட்டது. பாடசாலை அதிபர் கிருஸ்ணகுமார் தலமையில் இடம் பெற்ற இந்நிகழ்வுகளில் பழைய மாணவர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று இருந்தனர். https://ath…
-
- 0 replies
- 398 views
-
-
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய தேர்த்திருவிழா! பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவையொட்டி நேற்று தேர்த்திருவிழா இடம்பெற்றது. திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா கடந்த 24 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இதன் போது உற்சவ மூர்த்திகளுக்கு வசந்த மண்டபத்தில் பூஜைகள் இடம் பெற்றன. அதனை தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் உள் வீதி வலம் வந்து கொடித் தம்ப பூஜை இடம் பெற்று அதனை தொடர்ந்து கொடி தாம்பத்திற்கு அபிஷேகம் செய்து ஆராதனைகள் இடம்பெற்றது. பின்னர் சுப வேளையில் கொடியேற்றம் இடம்பெற்றது. திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு கருணாநந்த குருக்கள் தலைமையில் கொடியேற்றம் இடம்பெற்றது. அதனைத் …
-
- 0 replies
- 450 views
-
-
யாழில். இடம்பெற்ற முத்தமிழ் விழா !! யாழ்ப்பாணப் பெட்டகம் – நிழலுருக் கலைக்கூடம் அமைப்பின் ஏற்பாட்டில் உலக பண்பாட்டுத் தினத்தினை முன்னிட்டு முப்பெருந்தமிழ் விழா இடம்பெற்றது யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் சபாலிங்கம் அரங்கில் நேற்று யாழ் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா தலைமையில் இடம்பெற்றது. பிரதம விருந்தினர்களாக யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் அ.சிவபாலசுந்தரன், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தலைவர் முனைவர் க.சுபாஷினி ஆகியோரும் கலந்துகொண்டனர். இதன்போது கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பல்வேறு துறைகளிலும் சேவைகள் செய்த பலருக்கும் விருதுகள் வழங்கி வைக்கப்பட்டது. https://athavanne…
-
- 0 replies
- 275 views
-
-
வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் 200 ஆவது ஆண்டினை முன்னிட்டு சைக்கிள் பவணி! வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் 200ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு கல்லூரியின் 200ஆவது முன்னிட்ட நிகழ்வின் ஒரு பாகமாக வட்டுகோட்டை யாழ்ப்பாண கல்லூரியினரால் விசேட துவிச்சக்கர வண்டி பவனி ஒன்று இன்று இடம்பெற்றது. இன்று காலை 7:00 மணியளவில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் யாழ். போதனா வைத்தியசாலையின் முன்பாக அமைந்துள்ள யாழ்ப்பாணகல்லூரி உயர்பட்டபடிப்புக்கள் பிரிவில் கல்லூரியின் அதிபர் ருஷிரா குலசிங்கம் தலைமையில் குறித்த நிகழ்வு ஆரம்பமானது. மத வழிபாடுகளோடு ஆரம்பமான நிகழ்வில் 200 வது ஆண்டு நிறைவினை முன்னிட்டு 200 மரக்கன்றுகளை நாட்டும் செயற்திட…
-
- 2 replies
- 518 views
-
-
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று! கத்தோலிக்க புனித திருத்ததலமாகிய கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம், இன்று (சனிக்கிழமை) நடைபெறுகின்றது. கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம் நேற்று மாலை நான்கு மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இதனை தொடர்ந்து பாதை சிலுவை ஆலயத்தை சுற்றி வலம் வரும் நிகழ்வும் இடம்பெற்றது. இந்தநிலையில், இன்று காலை 7 மணியளவில் யாழ் மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் தலைமையில் திருப்பலி. ஒப்புக்கொடுக்கப்பட்டது. 60 நாட்டு படகுகள் மூலமாகவும், 16 இழுவை மடி படகுகள் மூலமாகவும் இந்தியாவிலிருந்து 2100 பக்தர்களும், இலங்கையிலிருந்து கடற்படையினரின் படகுகள் மூலம…
-
- 1 reply
- 447 views
-
-
குமாரபுரத்தில் தமிழ் மக்கள் மீதான படுகொலை இடம்பெற்று இன்றோடு 27 ஆண்டுள் !! 1996ஆம் ஆண்டு, திருகோணமலை குமாரபுரத்தில் தமிழ் மக்கள் மீதான படுகொலை இடம்பெற்று இன்றோடு 27 ஆண்டுகளாகின்றன. வீடுகளுக்குள் புகுந்த இராணுவத்தினர் கண்மூடித்தனமாக மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் சிறுவர்கள், பெண்கள் உட்பட அப்பாவி மக்கள் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு 20 வருடங்களாக இடம்பெற்றுவந்த நிலையில், 2016ஆம் ஆண்டு குற்றம்சாட்டப்பட்ட இராணுவத்தினர் அனைவரும் அநுராதபுரம் மேல்நீதிமன்றத்தின் சிங்கள ஜூரிகள் கொண்ட சபையால் விடுதலை செய்யப்பட்டிருந்தனர். இத்தனைக்கும் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட இராணுவத்…
-
- 0 replies
- 303 views
-
-
திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல்! திருகோணமலை கடற்கரைப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி மாலை திருகோணமலை கடற்கரை பகுதியில் பொழுது போக்குகிற்காக கூடியிருந்த ஐந்து மாணவர்களும் காந்தி சிலை சுற்று வட்டத்திற்கு அருகாமையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர். குறித்த சம்பவம் இடம்பெற்று 17 ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில் அவர்களை நினைவு கோரும் முகமாக திருகோணமலை வாழ் பொது மக்களால் ஒன்றிணைந்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. https://athavannews.com/2023/1318418
-
- 1 reply
- 352 views
-
-
யாழ். வட்டு இந்துக் கல்லூரியில் நடைபெற்ற ஆறுமுகநாவலரின் இருநூறாவது பிறந்ததின நிகழ்வு! ஆறுமுகநாவலரின் இருநூறாவது பிறந்ததின நிகழ்வு, இன்று (வெள்ளிக்கிழமை) யாழ். வட்டு இந்துக் கல்லூரியின் சோமசுந்தரப்புலவர் அரங்கத்தில் நடைபெற்றது. யாழ். வட்டு இந்துக் கல்லூரியும் சங்கானைக் கல்விக்கோட்டமும் சங்கானை பிரதேச செயலகமும் இணைந்து இந்நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர். வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் அதிபர் அ.ஆனந்தராஜா அவர்கள் தலைமை தாங்கிய இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். இந்திய துணைத் தூதுவர் ஸ்ரீமன் ராகேஷ் நட்ராஜ் அவர்கள் கலந்துகொண்டார். கலை கலாச்சார முறைப்பாடி தவில் நாதஸ்வரம் இசைக்க பொம்மலாட்டத்துடன் விருந்தினர்கள் அழைத்து வரப்பட்ட…
-
- 0 replies
- 215 views
-
-
மருதனார்மடம் ஆஞ்சநேயர் தேர்த்திருவிழா! யாழ்ப்பாணம் – மருதனார்மடம் அருள்வளர் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் ஆலய இரதோற்சவப் பெருவிழா இன்றைய தினம் (வியாழக்கிழமை) காலை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. https://athavannews.com/2022/1316687
-
- 1 reply
- 652 views
-
-
மஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 140ஆவது பிறந்ததின நிகழ்வு முன்னெடுப்பு மஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 140ஆவது பிறந்ததின நிகழ்வு யாழ். அரசடிவீதியில் அமைந்துள்ள மஹாகவி பாரதியாரின் நினைவுத் தூபியில் இடம்பெற்றது. இன்று (ஞாயிற்க்கிழமை) யாழ். இந்திய உதவித்தூதகத்தின் எற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ். இந்திய உதவித்தூதுவர் ராகேஸ் நட்ராஜ் ஜெயபாஸ்கர் கலந்துகொண்டு பாரதியாரின் உருவச்சிலைக்கான மலர்மாலையினை அணிவித்தார். குறித்த நிகழ்வில் யாழ். இந்திய உதவித்தூதரத்தின் சிரேஸ்ட அதிகாரி ஏ.கிருஸ்ணமூர்த்தி, தமிழ் சங்கத்தின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். https://athavannews.com/2022/1314950
-
- 0 replies
- 891 views
-
-
திருநெல்வேலி பரமேஸ்வராக் கல்லூரியின் நூற்றாண்டு விழா சிறப்பு மலர் வெளியீடு! திருநெல்வேலி பரமேஸ்வராக்கல்லூரியின் நூற்றாண்டு விழா சிறப்பு மலர் வெளியீடு எதிர்வரும் நவம்பர் 11 ஆம் திகதி பிற்பகல் 3.00 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ளது. பரமேஸ்வராக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் யாழ்பாணக் கிளை ஏற்பாட்டில், பேராசிரியர் சுபதினி ரமேஸ் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா பிரதம விருந்தினராகவும், வாழ்நாள் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர். வரலாற்றுச் சிறப்புகளைக் கொண்ட பரமேஸ்வரா கல்லூரி நூற்றாண்டு வ…
-
- 0 replies
- 491 views
-
-
இலங்கைத் தமிழ் சினிமாக் கலைஞர்களுக்கான மாபெரும் விருதுக் கொண்டாட்டம்! இலங்கைத் தமிழ் சினிமாக் கலைஞர்களுக்கான மாபெரும் விருதுக் கொண்டாட்டம் “குவியம் விருதுகள் 2022” நிகழ்வு இன்று (29) சனிக்கிழமை யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் (யாழ். மத்திய கல்லூரிக்கு அருகில்) இடம்பெறவுள்ளது. மாலை 05 மணிக்கு ஆரம்பமாகும் இந்த விழாவில் கலைஞர்களுக்கான செங்கம்பள வரவேற்பைத் தொடர்ந்து விருது வழங்கும் நிகழ்வு ஆரம்பமாகும். பல கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற காத்திருக்கின்றன. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கலந்து கொள்கின்றார். …
-
- 0 replies
- 350 views
-
-
கந்தசஷ்டி விரதம் ஆரம்பம்! சைவசமயத்தவர்கள் கடைப்பிடிக்கின்ற விரதங்களில் மிக முக்கியமான விரதமாக கந்தசஷ்டி விரதம் விளங்குகின்றது. கந்தசஷ்டி விரதம் நேற்று(புதன்கிழமை) ஆரம்பமான நிலையில் யாழ்.மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் பெருமளவான பக்த அடியவர்கள் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தனை அவதானிக்க முடிகிறது. மாவிட்டபுர கந்தசுவாமி பெருமானுக்கு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை அரிச்சனை வாழ்த்து தோத்திரம் என ஆகம முறைப்படி வழிபாடுகள் நடாத்தப்பட்டிருந்ததுடன், காலை 10 மணியளவில் வசந்த மண்டப பூஜை இடம்பெற்று கந்தசுவாமி பெருமான் மயில் வாகனத்தில் உள்வீதியுலா வருகைதந்து பக்த அடியார்களுக்கு அளுள்பாலித்திருந்தார். https://athavannews.com/2022/1307096
-
- 0 replies
- 254 views
-
-
நிமலராஜனின் 22ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழில்! யாழில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 22ஆம் ஆண்டு நினைவு தின நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் (புதன்கிழமை) அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் , ஊடக அமையத்தில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. அதன் போது மலர்மாலையை மூத்த ஊடகவியலாளர்களான கு. செல்வக்குமார் மற்றும் த. வினோஜித் ஆகியோர் திருவுரு படத்திற்கு அணிவித்தனர். அதனை தொடர்ந்து, குரலற்றவர்களின் குரல் அமைப்பின் தலைவர் கோமகன் சுடரேற்றியதை தொடர்ந்து, ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மலரஞ்சலி செலுத்தினர். போர் சூழலில் யாழில் இருந்து , துணிவாக ஊடகப்பணியாற்றியவர் மயில்வாகனம் நி…
-
- 0 replies
- 271 views
-
-
கொக்குவில் பிரம்படி படுகொலை நினைவேந்தல்! யாழ்ப்பாணம் கொக்குவில் பிரம்படி பகுதியில் இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் 35ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றது. படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக ஆடியபாதம் வீதி , பிரம்படியில் அமைந்துள்ள நினைவு தூபி முன்பாக இன்றைய தினம் (புதன்கிழமை) நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. படுகொலையானவர்களின் உறவுகள் நினைவேந்தலில் கலந்து கொண்டு உயிரிழந்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர். கடந்த 1987ஆம் ஆண்டு ஒக்டொபர் மாதம் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் இந்திய இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட “ஒப்பரேசன் பவன்” நடவடிக்கை மூலம் அப்பகுதியை சேர்ந்த சுமார் 50 க்கும் மேற்பட்டோரை இந்திய இராணுவத…
-
- 13 replies
- 1.1k views
-
-
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் விஜயதசமி – மானம்பூ உற்சவம்! முப்பெரும் தேவியரும் ஒன்றிணைந்து ஆதிசக்தியாகக் காட்சி தரும் விஜயதசமியான இந்நன்நாளில், வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் சிறப்பு பூஜை இடம்பெற்றது. விஜயதசமி – மானம்பூ உற்சவம் இன்று (புதன்கிழமை) காலை 6.45 மணிக்கு பக்தி பூர்வமாக இடம்பெற்றது. காலை 6.45 மணிக்கு வசந்த மண்டப பூசையுடன் இடம்பெற்று குதிரை வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி வெளிவீதி உலாவந்ததுடன் மானம்பூ உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது. நவராத்திரியில் முதல் மூன்று நாட்கள் துர்கா தேவியையும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமிதேவியையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிதேவியையும் வழிபடுவ…
-
- 0 replies
- 373 views
-
-
யாழ். வைத்தீஸ்வரா கல்லூரியில் புதிய கட்டிடத் தொகுதி திறந்து வைப்பு யாழ். வைத்தீஸ்வரா கல்லூரியில் புதிய வகுப்பறைக் கட்டிடத் தொகுதி இன்று (வியாழக்கிழமை) திறந்துவைக்கப்பட்டது. அண்மையிலுள்ள சிறந்த பாடசாலை எனும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டிடத் தொகுதி இன்று கடற்றொழில் அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா திறந்து வைத்தார். இதன்போது பாடசாலை அதிபர் வாசுகி தவபாலன் .வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.வரதீஸ்வரன், வட மாகாண கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமார், யாழ். வலயக் கல்வி பணிப்பாளர் மு.இராதாகிருஷ்ணன், ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2022/1301854
-
- 0 replies
- 299 views
-
-
கவிஞரும் நடிகருமான ஜெயபாலன் உடன் தமிழ் முஸ்லிம் இலக்கியவாதிகள் சந்திப்பு ! By Shayithan.S (அஷ்ரப் ஏ சமத்) மறைந்த தலைவா் எம்.எச்.எம். அஷ்ரப்புடன் இலக்கிய நட்புடன் பழகியவரும் கவிஞருமான ஜெயபாலனுடன் கடந்த வாரம் இந்தியாவில் இருந்து இலங்கை வந்திருந்தாா். அவருடன் கொழும்பில் உள்ள தமிழ் முஸ்லிம் இலக்கியவாதிகள் எழுத்தளாா்கள் நட்புறவுச் சந்திப்பு நிகழ்வு ஒன்று நேற்று (22) வியாழக்கிழமை கொழும்பு 2 ல் உள்ள தாருஸ்ஸலாம் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வு முஸ்லிம் காங்கிரஸ் தலைவா் ரவுப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது. இச்சந்திப்பில் முஸ்லிம் மீடீயா போரத்தின் தலைவி புர்ஹான் பீபி இப்திக்காா், மற்றும் கவிஞா் டொக்டா் தாசீம் அகமத், மேமன் கவி, கவிஞா் ஹசீர், கின…
-
- 0 replies
- 277 views
-
-
சுவாமி விவேகானந்தரின்... இலங்கை விஜயத்தின், 125 ஆவது ஆண்டு நிறைவு விழா... கொழும்பில்! சுவாமி விவேகானந்தரின் வரலாற்றுச் சிறப்புமிக்க இலங்கை விஜயத்தின் 125 ஆவது ஆண்டு நிறைவு விழாவுடன், இலங்கை இராமகிருஷ்ண மிஷனின் செயற்பாடுகள் பற்றிய ஆவணக் காணொளி வெளியீடும் எதிர்வரும் செப்ரெம்பர் 25 ஆம் திகதி, ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணிக்கு வெள்ளவத்தையில் அமைந்துள்ள கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந் நிகழ்வில் முக்கிய அதிதியாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயும், சிறப்பு அதிதியாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.ஸ்ரீசற்குணராஜாவும் கலந்து கொள்ளவுள்ளனர். இலங்கை இராமகிருஷ்ண மிஷனின் செயற்பாடுகள…
-
- 0 replies
- 200 views
-
-
கொக்கட்டிச்சோலை... தான்தோன்றீஸ்வரர் ஆலய, தேரோட்டம்! இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் சித்திர தேரோட்டம் ற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. கிழக்கு மாகாணத்தின் தேர் ஓடும் முதல் ஆலயம் எனும் பெருமையினையும் கொண்ட கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு கொக்கட்டிசோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் சித்திர தேரோட்டம் ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெகுவிமர்சையாக நடைபெற்றது. வடகிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் வரலாற்று சின்னமாகவும் தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டு பொக்கிசமாகவும் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம் ஆலயம் திகழ்கின்றது. ‘கல் நந்தி புல் உண்டு போர…
-
- 0 replies
- 674 views
-