கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3075 topics in this forum
-
உறவுகளிற்கு வணக்கம் இது என்னுடைய இன்னும் ஓர் சிறியமுயற்சி. ஈழத்தமிழ் கலைஞர்கள் படைப்பாளிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் பற்றிய விபரங்களை கணணிமுலம் ஆவணப்பதிவாக்குவதே என்னுடைய நோக்கமாகும்.என்னுடைய இந்த நோக்கத்திற்கும் வழைமை போல உறவுகள் அனைவரினதும் ஆதரவும் இருக்கும் என நம்பிக்கையுடன் தொடங்குகிறேன். ஏற்கனவே பிரான்சில் வாழும் திரு வண்ணை தெய்வம் அவர்கள் காலங்கள் வாழ்த்தும் 300 ஈழத்துக்கலைஞர்கள் என்றொரு ஆவணத்தொகுப்பினை புத்தகமாக வெளியிட்டுள்ளார். அவரது அனுமதியுடன் அவரது புத்தகத்தில் இருந்தும் நண்பர்கள் உதவியுடனும் மற்றும் எனக்கு தெரிந்ததையும் உங்கள் ஆதரவுடன் ஆவணமாக்குகின்றேன். நன்றி சாத்திரி. முதலாவதாக நாடகக்கலைஞர் திரு முகத்தார் யேசுரட்ணம் அவர்கள் முகத்தார…
-
- 9 replies
- 2.7k views
-
-
மன்னவா மாலை கொடு வேலை முடிந்து களைப்புடன் வீடு வந்து சேர்ந்த காயத்திரியை ஓடிவந்து கட்டிக்கொண்ட பிரியா “அம்மா நாங்க வெளியில போவமா?” என்று கேட்டகவும் தன் ஒரே மகள் பிரியாவை வாஞ்சையுடன் அணைத்தபடி “நான் குளித்து உடுப்பு மாத்திப் போட்டு வாறன் இருவருமாகக் கடைக்குப் போகலாம்” என்ற காயத்திரியின் பதிலில் திருப்திப் பட்டவளாக குதூகலமாக அறைக்குள் ஓடிய மகளை பெருமூச்சுடன் பார்த்தபடி ஒருநிமிடம் நின்றவள் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள். சில வினாடிக்குள் அவள் மனதிலும் சில சலனங்கள். “என் பிரியாவை விட்டு நான் தூரமாகிவிடுவேனோ?” “சீ அப்படியெல்லாம் நடக்காது” இந்த ஜந்து வருடமாக பிரியாதான் என் வாழ்வில் ஒரேயொரு பற்றுக்கோடாக இருக்கிறாள். சிந்தனையுடன் குளியலறைக்குள் நுழைந்தவள் ஒரு பாட்டை முணும…
-
- 7 replies
- 2.4k views
-
-
அந்த ரயிலின் வருகையை எதிர்பாத்து இங்கை பலர் படுகிற பாடு இருக்கே சொல்லி மாளேலாது.இன்னும் சிறிது நேரத்தில் இந்த இந்தாம் நம்பர் மேடைக்கு காங்கேசன்துறையை நோக்கி புறப்பட இருக்கும் யாழ் தேவி வந்தடையும் என்று புகையிரத நிலைய ஒலிப்பெருக்கி மும்மொழிகளிலும் திரும்ப திரும்ப சொல்லி மனம் பாடம் பண்ணி கொண்டிருக்கிறது. அதுவும் தமிழை மிகவும் கடித்து துப்பி அறிவிப்பதால் என்னவோ அது வேறு மொழி போல காற்றில் பரவி கரைந்து கொண்டிருக்கிறது http://sinnakuddy.blogspot.com/2008/02/blog-post.html
-
- 6 replies
- 2.1k views
-
-
டைகர் பிலிம்ஸ் பெருமையுடன் வழங்கும் மற்றுமொரு திரைகாவியம் "புதிய சிவப்பு ரோஜாக்கள்"... (கண்டிப்பா வயது வந்தவர்களிற்கு மட்டுமே குழந்தைகள் மற்றும் கர்பிணி பெண்கள் தயவு செய்து பார்க்க வேண்டாம்...) கதாநாயகன் - இளைய தளபதி சுண்டல் (டைகர் பிலிம்சின் தனித்துவ கதாநாயகன்) இவருடன்..... *மக்கள் திலகம் திரு.கலைஞன்.. *நடிகர் திலகம் திரு.கந்தப்பு.. *கெளரவவேடத்தில் கனவுநாயகன் மருமோன்.. மேலும் புதுமுக நடிகர்களின் அட்டகாசமான நடிப்பில் மலர்ந்துள்ள திரைகாவியம்... வெளுறிய முகபரப்பில் உறைந்து போனது விழி! பூக்களும்,நிலவும்,கனவுகளும் கையூடு உதிர்ந்து கொட்ட கிடிநடுங்கி ஒரத்தே ஒதுங்கி உயிருக்காய் இறைஞ்சியது வாழ்க்கை!! "புதிய சிவப்பு ரோ…
-
- 50 replies
- 7.6k views
-
-
ஊருக்குப் போனேன்- பாகம் 4 (இறுதிப் பாகம்) -வாசுதேவன் இதுதானா என் வீடு ? இத்தனைவருட காலமாகக் காணக் கனவு கண்டு கொண்டிருந்த என் வீடு இதுதானா ? முற்றத்தில் தென்னைமரமில்லாமல், வேப்பமரமில்லாமல்,வேலியில் பூவரசமரமில்லாமல், கடதாசிப்பூக்கள் இல்லாமல், முருங்கைமரங்கள் இல்லாமல், புல்பூண்டு சூழக் கிடந்த இது என் வீடா ? என் வீட்டிற்கு வடக்குப் பக்கத்தில் ஒரு வீடு இருந்தது. அதையடுத்து இன்னும் பல வீடுகள் இருந்தன. அதைத் தொடர்ந்து பனங்கூடல் இருந்ததே ? என் வீட்டிற்குத் தெற்குப் பக்கத்தில் ஒரு வீடு இருந்தது . அதைத்தொடர்ந்து இன்னும் பல வீடுகள் இருந்தன. என் வீட்டு வேப்பமர உச்சியிலிருந்து பார்த்தாலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரையும் வீடுகள் இருந்தனவே ? என் வீடு என்பது நாற்திசையும் பரந்திர…
-
- 9 replies
- 2.4k views
-
-
வெண்ணிலா வானத்தில் முழுமதி ஒளிவீசிக் கொண்டிருந்தது. அன்று போயா விடுமுறை. எங்கும் கடைகள் மூடப்பட்டிருந்ததால் வீதி வெறிச்சோடிக் கிடந்தது. அந்த அகலமான வீதியில் தன்னந்தனியாக நடந்துகொண்டிருந்த அருணிற்கு சொந்த மண்ணின் காற்றைச் சுவாசிப்பது சுகமாகவே இருந்தாலும் சுதந்திரக் காற்றை எப்போ சுவாசிக்கப் போகிறோம் என்று அங்கலாய்ப்பாகவே இருந்தது. ஜந்து வருடங்களாக திரைகடலோடித் திரவியம் தேடிவிட்டு நேற்றுத்தான் அருண் நாடு திரும்பி இருந்தான். தன் சொந்தமண்ணில் நடைபெற்றுவரும் அவலங்களை அப்பப்போ செய்திகள் மூலம் அறிந்த அருணிற்கு மனதுக்குள் இனம் புரியாத ஏதோ ஒரு உணர்வு. ஒரு விதமாக ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டு தனது நாட்டிற்குத் திரும்பி வந்தாலும் தன் அன்னையையும் தங்கைகளையும் பார்க்க இன்னும் வழ…
-
- 4 replies
- 2.1k views
-
-
நான் யாழில் புலம்பெயர் தேசத்தில் நடந் உண்மைச்சம்பவங்கள் பலவற்றை முன்னர் கதையாக்கியிருந்தேன் அவற்றின் பதிவுகள் வைத்திருக்கவில்லை இந்தக் கதையும் நான் யாழில் போட்டிருந்ததுதான் இன்று கூகிழில் மேய்ந்த பொழுது இந்தக் கதை கிடைத்தது இப்போ பல புதியவர்கள் யாழில் இருப்பதால் திரும்ப இதை இணைக்கிறேன் நன்றி புதன்கிழமை, 31 ஆவணி 2005 யாழ் பட்டால்த்தான் கடிதம் எழுதிக்கொண்டிருந்த சிவா கதவை யாரோ திறக்கும் சத்தம் கேட்டு எட்டிப்பார்த்தான். "எட சண்முகநாதன், நான் ஆரோ கள்ளர் கள்ளத்திறப்பு போட்டு கதவைத் திறக்கிறாங்கள் எண்டு நினைச்சன். எங்கையடா ஒருகிழமை லீவுஎண்டனி... அதுக்கு பிறகு நாலு நாளா ஆளைக் காணேல்லை. உன்ரை கான்ட் போனுக்கும் அடிச்சுப்பாத்தன். வேலை செய்யேல்லை. என்னடா உன்ரை கோல…
-
- 8 replies
- 2.1k views
-
-
அறிமுகம் அனைவருக்கும் வணக்கம்! "போர் உலா" என்ற நூலை எழுதிய மாவீரன் கப்டன் மலரவனுக்கு(லியோ) (காசிலிங்கம் விஜிந்தன், யாழ்ப்பாணம்) இந்த செல்வன் தொடர்கதையை கண்ணீர்க் காணிக்கையாக சமர்ப்பிக்கின்றேன். கதையில் ஏதாவது குற்றங்கள், குறைகள், இலக்கணம் மற்றும் எழுத்துப்பிழைகள், மற்றும் வேறு ஏதாவது தவறுகள் இருந்தால் அடியேனை பொறுத்து அருளும்படி மாண்புமிகு வாசகர் பெருமக்களை பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன். நன்றி! அன்புடன், கலைஞன் குறிப்பு 01: இங்கு வரும் பல பாத்திரங்களிற்கு யாழ்கள உறவுகளின் பெயர்களே வைக்கப்பட்டுள்ளது. உங்கள் பெயரிலும் ஒரு பாத்திரம் இங்கு உருவாக்கப்படுவதை நீங்கள் விரும்பினால் கீழே உள்ள இணைப்பை சொடுக்கி அங்கு உங்கள் விருப்பத்தை எழுதிவிடு…
-
- 37 replies
- 9.1k views
-
-
Voracious in my appetite for the uncertain and unknown, I do not whine for paradise as Ovid did, expelled from Rome .-Baudelaire. சபிக்கப்பட்ட கவிஞன் ஷார்;ஸ் போதலயர். 'புல்லின் இதழ்கள்' (Leaves of grace) என்ற தலையங்கம் எவ்வாறு வோல்ட் விற்மனை உடனடியாக நினைவுக்குக் கொண்டுவருகிறதோ , அவ்வாறே 'துன்பத்தின் பூக்கள்' (Fleurs du mal) என்று கூறியவுடன் ஷார்ல் போதலயர் என்ற நாமம் ஞாபகத்தின் மேற்பரப்பில் மிதக்கவாரம்பிக்கிறது. ஏழு வயதில் தந்தையை இழந்து, தாயே தன் பிரபஞ்சமென்று அடங்காத பாசங்கொண்டு வாழ்ந்த சிறுவன் ஷார்ல் அவளின் இரண்டாந்தாரத் திருமணத்தின் போது தான் இரண்டாந்தரம் அனாதையாக்கப்பட்டதாக உணர்கிறான். தனக்கும் தாய்க்குமான பிரத்தியேகப் பாச உறவில் வேறொரு உறவு புகுந்து…
-
- 0 replies
- 836 views
-
-
ஊருக்குப் போனேன்- பாகம் 3. வாளியில் முகர்ந்திருந்த தண்ணீரில் முகத்தைக் கழுவவும் , இருளில் நின்ற பசுவில் எல்லை கெட்ட நேரத்தில் கறந்து காய்ச்சிய பால் கைக்கெட்டியது. அம்மாவின் கையால் சமைத்ததினால் அறுசுவைபெற்ற உணவை உண்டதும் ஆறுதல் உண்டாகியது. தூய இருளில் நட்சத்திரங்கள் கவிந்த வானம் முன்னைய நாட்களை முன் நிறுத்தி மாய வித்தை காட்டியது. மணிக்கணக்கில் சலிப்பின்றிப் பார்த்தவாறே நட்சத்திரங்களை விசாரம் செய்யும் இளமைக்காலப் பொழுதுகள் ஐரோப்பிய வெளிச்சம் நிறைந்த நகர இரவுகளில் காணக்கிடைப்பதில்லை. ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்குச் செய்த பயணமல்ல இது, ஒரு பிரபஞ்சத்திலிருந்து இன்னொரு பிரபஞ்சத்திற்கு நடத்திய பாய்ச்சல் என உள்மனம் கூறியது. ஒரு லாம்பின் உருண்ட கண்ணாடிச் சு…
-
- 4 replies
- 1.7k views
-
-
அக்கினிச் சிறகுகள் அன்று காலையிலேயே விழிப்பு ஏற்பட்ட மதுசாவிற்கு தலை பாரமாய்க் கனத்தது. நெற்றிப் பொட்டு விண்விண் என்று வலித்தது. இரவு முழுவதும் புரண்டு புரண்டு படுத்தவள் சற்றுக் கண்ணயரவும் அனுவின் அழுகுரல் கேட்கவும் சரியாக இருந்தது. குழந்தையை அள்ளி அணைத்து பாலூட்டி மறுபடியும் தொட்டிலில் கிடத்தியவள் கோப்பி ஒன்று சூடாகக் குடித்தால் நன்றாக இருக்குமென்று நினைத்தாள். “கோப்பி குடிக்காட்டி என்ன செத்தா போயிருவன்” மனம் வெறுமையில் துடித்தது. குழந்தை அனுவைத் திரும்பிப் பார்த்த கண்கள் குளமாகியது. எத்தனை நாளைக்குத்தான் இந்த அவஸ்தை. மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் கணவன் என்ற அந்தஸ்த்தைப் பெற்ற மோகன் தினமும் வேலைக்குப் போய்விட்டு விடிந்ததும் வந்து கட்டிலில் விழுந…
-
- 9 replies
- 2.4k views
-
-
நினைவழியா நாட்கள் அந்த விடிகாலைப் பொழுதின் அமைதியைக் குலைத்தபடி விமானச் சத்தங்கள் காதைப் பிளந்தன. அதிகாலைப் பொழுதில் ஏற்பட்ட இந்த நிலையால் அரைத் தூக்கத்தில் எழுந்த எமக்கு என்ன செய்வது? எதை எடுப்பது? ஓடுவதா? அல்லது பங்கருக்குள் ஒளிவதா? எதையும் சிந்தித்துச் செயலாற்ற சந்தர்ப்பம் இதுவல்ல. கையிலகப்பட்ட ஒன்றிரண்டு உணவுப் பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு வீதிக்கு விரைந்தோம். வீதியெங்கும் மக்கள் தம் உயிரைக் காக்க ஓடிக் கொண்டிருந்தனர். இடைக்கிடை குத்திட்ட விமானங்களிலிருந்து குண்டுமழை பொழியும் போது குப்புறப் படுத்து விழுந்து எழும்பி ஓடிக்கொண்டிருந்தோம். எப்படியோ பக்கத்துக் கிராமத்திலிருந்த ஓர் ஆலயத்தை அண்மித்து அதற்குள் அடைக்கலமாகிக் கொண்டோம். அன்றுமுதல் ஆலயம் அகதிமுகாமாகியது…
-
- 4 replies
- 1.8k views
-
-
ஊருக்குப் போனேன் - பாகம் 2 நயினைதீவை அடியாகக் கொண்ட அந்த இளைஞன், நான் வெளிநாட்டிலிருந்து வருகிறேன் எனப் புரிந்து கொண்டு கேள்விகள் கேட்க ஆரம்பித்தான். பின்னர், கேள்விகள் தீர்ந்து போனதோ என்னவோ, 23 வயது நிரம்பிய அவ்விளைஞன் தன் வாழ்க்கையைப் பற்றிக் கூறினான். வறுமைப்பட்ட குடும்பம், பெண்சகோதரங்கள், அவர்களின் திருமணம், இயக்கத்தில் இறந்து போன தம்பி ... ஓ ! சபிக்கப்பட்டவர்களே. சபிக்கப்பட்டவர்களே ! எப்போதுதான் உங்கள் சிறுமைகளை விட்டொழிவீர்கள் ? எப்போதுதான் பெண்களுடன் பிறக்கும் ஆண்களுக்கு விடுதலையளிப்பீர்கள் ? எப்போதுதான் பெண்களைச் சீதனம் வாங்கி "வாழ்வு கொடுக்கும்" பண்டங்களாகக் கருதாது விடுவீர்கள் ? சீதனம் கொடுக்கச் சொத்துத் தேடப் பரதேசம் போனவர்களே, உங்களில் எத்தனை பேர் நீங்…
-
- 4 replies
- 1.7k views
-
-
எப்போதாவது வந்துபோகும் ஞாபகம் தான் ஆனால் கார்த்திகை மாதமானால் எப்படியாவது மறக்காமல் வந்துவிடும்.மறந்துபோக வேண்டுமே என்று எங்கோ என்னுள் புதைத்து வைத்த அந்த புதைக்கப் பட்ட ஞாபகம் இன்றும் என்மனதில் வந்து என்னை கிளறி விட்டுப் போனது... குமரப்பா புலேந்திரன் உட்பட பன்னிருவேங்கைகளை இந்திய அமைதிப்படை கைதுசெய்து அவர்களை சிங்கள அரசிடம் ஒப்படைக்க முற்பட்ட சமயம் தமது கொள்கையின் படி சயனைற் அருந்தி உயிர்துறந்தனர். அதற்குப் பின்னர்தான் இந்திய அமைதிப் படைக்கு எதிரான யுத்தம் வெடித்தது. இறுதியாக கோப்பாய் எனும் இடத்தில்தான் நேருக்கு நேர் யுத்தம் நடந்ததென்று நினைக்கின்றேன் பின்னர் புலிகள் தமது தாக்குதல்களின் வியூகத்தை மாற்றி அமைத்துக் கொண்டனர். இருந்தாலும் குண்டுகளின் சத்தங்கள் தொடர்ந…
-
- 24 replies
- 5k views
-
-
நண்பர்களே, வருடங்கள் பல தாண்டி வீடு வருதல் என்பது ஒரு துன்பகரமான அனுபவம். பிறந்த வீடு மட்டுமே வீடு என எண்ணும் ஒரு உணர்வு என்னுடன் ஒட்டிக்கொண்டேயிருக்கிறது. பல வீடுகளைக் கடந்து போக வாழ்க்கை எம்மைத் தண்டிக்கிறது என்பது உண்மைதான். இருப்பினும் இளமையும், பெற்றார் அரவணைப்பும் சகோதரர்துவ வாழ்க்கையும் கனவுகளும் எனச் செறிந்த குழந்தை பருவம் எமது வாழ்வின் தலைநகரம். நாம் எங்கு சென்ற போதும் எம்மைத் தொடருவதும் அதுதான். "நான் பயணிப்பதற்கு ஏறி அமர்ந்த எல்லாத் தொடரூந்து வண்டியுடனுடம் சமாந்தரமாக யாழ்தேவியும் ஓடிக்கொண்டிருக்கிறது" என ஒரு கவிதையில் நான் எழுதியிருக்கிறேன். இவ்வகையில் மிகப்பிந்திய காலங்கடந்து நான் எனது நாட்டுக்கும் வீட்டுக்கும் செல்ல நேர்ந்த அனுபவத்தை தங்களு…
-
- 2 replies
- 1.4k views
-
-
கண்ணோடு காண்பதெல்லாம் ..... வினாயகம் வேகமாக வீதியோர நடைபாதையில் நடந்துகொண்டிருந்தார். குளிர்கால ஆரம்பத்தின் அறிகுறியாய் மெல்லிய குளிர்காற்று சில் என்று முகத்தில் மோதியது. பாடசாலை ஆரம்பித்து விட்டதால் வீதியின் இருமருங்கும் பாடசாலை மாணவரின் அவசர ஓட்டமும், தம்மைக் காப்பகத்தில் விடுவதற்காக அழைத்துச் செல்லும் பெற்றவரின் கையை இறுகப் பற்றியபடி விழிகளில் வழியும் ஏக்கப் பார்வையுடன் செல்லும் மழலைகள் மறுபுறமும், எதையும் பார்க்கவோ ரசிக்கவோ நேரமின்றி கையில் கோப்பிக் கோப்கைகளுடன் ஓடிக்கொண்டிருக்கும் வேலைக்குச் செல்வோரின் அவசரமும், வீதியில் வரிவரியாகச் செல்லும் வாகன வரிசைகளும் ரொறன்ரோவின் காலைநேரக் காட்சிகளாக கண்முன் விரிந்திருந்தன. வினாயகம் ஒருவினாடி தன…
-
- 22 replies
- 4.7k views
-
-
புத்தனிற்கு ஒரு ஆசை யாழ்கள உறவுகள் நிறைவேற்றுவார்கள் என்று ஒரு நம்பிக்கை அதாவது படைபாளி என்று ஓர் கட்டுரை அல்லது தொடர்கதை ஆரம்பிக்க உள்ளேன் உங்களது ஆதரவை நாடி நிற்கிறேன். அன்று வெள்ளிகிழமை வார இறுதி சஞ்சிகைகளிற்காக படைப்புகளை படைத்து கொண்டிருந்தான் சிவா இயற்கை தனது இயற்கையான குணங்களை வெளிபடுத்தியது திடிரேன மனிதர்கள் போல மணம் மாறியது வெயில் அடித்தது திடிரேன மழை கொட்டியது அத்துடன் பனிசாரலும் தூவின சிட்னியில் சிவா ஒரு சிறந்த எழுத்தாளன்,இலக்கியவாதி பலராலும் போற்றபடும் ஓர் படைபாளி சொந்த பெயரிலும் எழுதுவார் புனைபெயரிலும் எழுதுவார் பாடசாலையில் படிக்கும் போதே அவனிற்கு கதை,கட்டுரைகள் எழுதுவது என்றால் அவனுக்கு ரொம்பவே பிடித்த விடயம் அதிலும் புராண கதைகள்,ஆத்மீக கதைகள் என்றால…
-
- 11 replies
- 2.4k views
-
-
நினைத்தாலும் மறக்க முடியாதவை - அஜீவன் நடந்து வந்த பாதையை பெரும்பாலும் யாரும் திரும்பிப் பார்ப்பதில்லை நடந்து கொண்டிருப்பவனுக்கு அது தேவையில்லை ஆனால் நடக்க முடியாமல் போனாலோ இல்லை திரும்பி வர நேர்ந்தாலோ மட்டுமே அது குறித்து சிந்திக்கிறோம் புதிய ஒருவரை சந்திக்கும் போது அவருக்கு நம்மை அறிமுகம் செய்ய வேண்டி வருகிறது இல்லை பழைய சினேகிதங்களை சந்திக்கும் போது கடந்த காலத்தில் நடந்தவற்றை நினைத்து சிரிக்கவோ அல்லது அழவோ வேண்டிய நிலை ஏற்படுகிறது நல்ல நிகழ்வுகள் குறைவாகவே மனதில் பதிவாகிறது தாக்கங்களும் வேதனைகளும் மட்டும் மனித மனங்களின் போக்க முடியாத கறையாகி அல்லது வடுவாகி காயமாகி விடுகிறது வயதாகும் போ…
-
- 42 replies
- 11.1k views
-
-
பூசணிப்பழம் - விஜயாலயன் பருத்தித்துறைச் சந்தை சதுரமான நாற்சார் கட்டிடத்தில இயங்கிய காலம்.... நாற்சார் கட்டடத்தினுள்ள நடுவில காய்கறிச் சந்தையும், உட்புறமா சுத்திவர பலசரக்கு சாமான்கள் விக்கிற சில்லறைக்கடைகளும், வெளிப்பக்கத்தில மற்றக் கடைகளும், சுத்திவர மூண்டு பக்கமும் விசாலமான ஒரு வழி தார் ரோட்டுகளும், நாலாவது பக்கத்தில பஸ்ராண்டும், மீண்டும் சுத்திவர கடைகளும், அலுவலகங்களும், ஒதுக்கமா மீன்சந்தையும் எண்டு சுத்தமான, அழகான, சிறிய நகரம் பருத்தித்துறை. பருத்தித்துறையில இருந்து யாழ்ப்பாணத்திற்கு கடற்கரை ஓரமா 751 ஆம் இலக்க பஸ்களும், வடமராட்சியை ஊடறுத்து 750 ஆம் இலக்க பஸ்களும் எண்டு 10 நிமிசத்திற்கொரு பஸ் வெளிக்கிடும். இன்னும் யாழ்ப்பாணத்திற்குள்ளேயே தாளையடி, காங்கே…
-
- 0 replies
- 1.2k views
-
-
இந்தச் சுவடுகளின் பின்னால் - அல்லையூர்சி.விஜயன் (இத்தாலி) அவளைப் பார்த்தால் யாரெனத் தோன்றும்! அவளுக்கு வயது பத்து. பார்த்தால் கண்கள் ஏமாந்துதான் விடுகின்றது! உணர்ச்சிகளின் கூட்டு மனித வடிவம். அப்படியாயின் அவள் யார்? வண்ணத்துப் பூச்சியின் காலங்கள் போலவே வாழவேண்டிய வயது! இந்த வாழ்க்கைக்கு யார் பொறுப்பு? வீதியிலுள்ள குப்பை கூளங்களையெல்லாம்...... துருவித் துருவி பார்க்கிறாளே! இவள் மனதை யார் துருவுவார்? இவளின்று சோகங்களுக்குச் சொந்தக்காரி...... ஏக்கங்களுக்கு எஜமானி. இவள் வெளிச்சங்களை நிராகரித்தவள் அல்ல...... வெளிச்சம்தான் இவளை நிராகரித்தது! 'மனதுக்கும், நினைவுக்கும் ஒரே பாதை!" நம்புகின்றீர்களா? காற்று வழி வரும் வாசம் மாதிரி..... கால் தூண்டும் இடமெல்லாம் இவளைக் காணலாம். பசிய…
-
- 0 replies
- 1k views
-
-
அக்கினிச் சிறகுகள் அன்று காலையிலேயே விழிப்பு ஏற்பட்ட மதுசாவிற்கு தலை பாரமாய்க் கனத்தது. நெற்றிப் பொட்டு விண்விண் என்று வலித்தது. இரவு முழுவதும் புரண்டு புரண்டு படுத்தவள் சற்றுக் கண்ணயரவும் அனுவின் அழுகுரல் கேட்கவும் சரியாக இருந்தது. குழந்தையை அள்ளி அணைத்து பாலூட்டி மறுபடியும் தொட்டிலில் கிடத்தியவள் கோப்பி ஒன்று சூடாகக் குடித்தால் நன்றாக இருக்குமென்று நினைத்தாள். “கோப்பி குடிக்காட்டி என்ன செத்தா போயிருவன்” மனம் வெறுமையில் துடித்தது. குழந்தை அனுவைத் திரும்பிப் பார்த்த கண்கள் குளமாகியது. எத்தனை நாளைக்குத்தான் இந்த அவஸ்தை. மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் கணவன் என்ற அந்தஸ்த்தைப் பெற்ற மோகன் தினமும் வேலைக்குப் போய்விட்டு விடிந்ததும் வந்து கட்டிலில் விழுந…
-
- 1 reply
- 3.7k views
-
-
சேவல் கூவிய நாட்கள் (குறுநாவல்) வ.ஐ.ச.ஜெயபாலன் (நாவல் எழுதும் முயற்சிக்கு முன்னோடியாக செக்குமாடு மற்றும் சேவல்கூவிய நாட்கள் குறுநாவல்களை எழுதினேன். கணயாழியில் வெளிவந்தது. என் நாவல் முயற்ச்சியில் உங்கள் கருத்துக்கள் ஆலோசனைகள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன் ) ஏனோ எனக்கு உருப்படியாக சிறுகதைகள் எழுத வரவில்லை. பேனா எடுத்ததுமே எனது நீண்ட வாழ்வில் கண்ட கேட்ட கருதிய எல்லாமே முந்தி அடித்துக்கொண்டு தாளில் குதித்து விடுகின்றன. அவை ஒவ்வொன்றுமே நல்ல சிறுகதையாக வளரக்கூடிய வாழ்வின் பதியங்கள்தான். எனினும் அவற்றை ஒரு சிறுகதையாக வளைத்துப் போடுவது எனக்கு இன்னமும் கைவரவில்லை. சொல்ல வந்த கதை நல்லபடி ஆரம்பித்து, சிறுகதையின் எல்லைகளைத் தாண்டிப் பெருகி எங்கெங்கோ சென்று, பின்னர் எழு…
-
- 5 replies
- 3.3k views
-
-
அஸ்தமன வானில்....... இளவேனிற் காலத்து இதமான தென்றலின் தாலாட்டில் மேபிள் மரங்களெல்லாம் மெல்லச் சிலிர்த்துக் கொண்டன. பூங்காவின் வாங்கில் சாய்ந்து அமர்ந்திருந்த கற்பகத்தின் பார்வை அடிவானத்து அந்திச் சிவப்பில் லயித்துக்கிடந்தது. ஆங்காங்கு அருகருகே அமர்ந்திருந்த இளம்சோடிகள் தமக்குள் ஏதேதோ பேசிச் சல்லாபித்துக் கொண்டிருந்தனர். முதியவர் சிலர் தம்மால் முடிந்தளவு தூரம் நடந்துகொண்டிருந்தனர். பூச்சியங்களைத் தாண்டி புவியீர்ப்பு மையத்தைத் தொடும் குளிரில் விறைத்துக் கிடந்த உடல்கள் இங்கு சற்று தம்மை ஆசுவாசப்படுத்திக் கொண்டன. மழலைகள் புற்றரையில் பந்தை உருட்டுவதும் ஊஞ்சலில் ஆடி ஆடி அலுத்து மீண்டும் படிகளில் ஏறி ஏறி வழுக்குவதுமாக விளையாட்டில் முழு மூச்சாக ஈடுபட்டிருந்தனர். சி…
-
- 6 replies
- 1.7k views
-
-
செக்கு மாடு (குறுநாவல் ) பற்றிய குறிப்புகள் வ.ஐ.ச.ஜெயபாலன் செக்குமாடு குறுநாவல் ஒஸ்லோ பல்கலைக் களகத்தில் மானிட இயலில் கலாநிதிப் பட்ட (Phd) ஆய்வுகள் மேற்கொண்டிருந்தபோது கலாநிதி ஒய்விண்ட் புக்ளரூட்டால் எனது வாய்மொழி ஆங்கிலம் பெயர்பின்மூலம் நோர்வீஜிய மொழியில் மொழி பெயர்க்கப் பட்டது. அது அவரது (Life on the Outside - Oivid Fuglerud) ஆய்வில் விரிவாகப் பயன்படுத்தப் பட்டது. கனடாவைச் சேர்ந்த மானிடவியலாளரான தோழி றொபின் ஓக்லே என் வாய்மொழி ஆங்கில மொழிபெயர்ப்பினூடாக செக்குமாட்டை மொழியாக்கம் செய்தார்.(Beast of Burden (Chekku Madu): The Power of the Wandering Poet Among the Sri Lankan Tamil Diaspora Authors: R. Oakley; V. I. S. Jayapalan ) அவரது மொழியாக்கம் ஆங்கில உளவியல் சஞ்ச…
-
- 2 replies
- 1.5k views
-
-
கனவுகளின் கைப்பொம்மை ஸ்கூல் பஸ் மெதுவாக ஓடி தெருவின் வளைவில் இருந்த அவளது வீட்டின் முன் நின்றது. கதவுகள் வாய் திறக்க குழந்தைகள் சில குதூகலமாக ஒவ்வொருவராக வெளிப்பட்டனர். தம் குழந்தைகளின் வரவுக்காகக் இரண்டு மூன்று பெற்றவர்கள் காத்து நின்றனர். தம் அன்னையரின் கைகளை அணைத்து மகிழும் பிள்ளைகளை ஏக்கத்துடன் பார்த்தபடி பஸ் யன்னலில் சாய்ந்து அமர்ந்திருந்த மது இறுதியாக இறங்க மனமற்றவள் போல் மெதுவாக இறங்கினாள். அவளுக்கு ஏனோ மனம் வெறுமையாக இருந்தது. பூட்டியிருந்த வீட்டைத் திறந்தாள். அவளை வரவேற்க யாரும் இருக்க மாட்டார்களென்று அவளுக்குத் தெரியும். புத்தகச் சுமையை மெதுவாக மேசையில் இறக்கி வைத்தாள். உடைமாற்ற மனமற்றவளாய் சோபாவில் விழுந்தவள் ரீவியின் றிமோட்டை எடு…
-
- 3 replies
- 1.5k views
-