Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கதை கதையாம்

சிறுகதை | தொடர்கதை | நாடகம்

பதிவாளர் கவனத்திற்கு!

கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.

  1. ஒரு நிமிடக் கதை: சுற்றுலா “மேகலா..! அருணுக்கு லீவு விட்டாச்சு.. அப்பாவுக்கு போன் பண்ணி நாம கிராமத்துக்கு வர்றோம்னு சொல் லிடவா..?” சம்பத் கேட்டார். “ஹையா..! வசந்த் அண்ணாவோட நல்லா விளையாடலாம்..” - என்று அருண் உற்சாகமாய் சொல்ல, மேகலா மட்டும் “யோசிப்போங்க..” என்று பட்டும் படாமல் பேசினாள். “இதுல யோசிக்க என்ன இருக்கு” என்று கோபத்துடன் சொல்லிவிட்டு ஆபீசுக்கு கிளம்பினார் சம்பத். கிராமத்தில் சம்பத்தின் வயதான அப்பாவும் அம்மாவும் இருக்கிறார்கள். அண்ணன், விவசாயத் தைப் பார்த்துக் கொண்டு அங்கேயே இருக்கிறார். ஒவ்வொரு வருடமும் லீவுக்கு அருணை கூட்டிக்கொண்டு அங்…

    • 1 reply
    • 987 views
  2. வால்வாயணம் - சிறுகதை தென்றல் சிவக்குமார் - ஓவியம்: ரமணன் “உங்க அபார்ட்மென்ட்ல சிசிடிவி இல்லையா?” “இருக்குப்பா... அது எதுக்கு இப்ப?” - திகிலுடன் நான். “சிம்பிள்டி... டேப்ஸ் எடுத்துப் பார்த்துட்டு அதை ப்ரூஃபா வெச்சு லோக்கல் போலீஸ், இல்லன்னா மகளிர் காவல் நிலையம், அதுவும் வேணாம்னா ஹ்யூமன் ரைட்ஸ் வரைக்கும்கூட காக்ரோச் பண்ண முடியும்...” ‘அப்ரோச்’ என்று அவள் சொன்னதுதான் குழப்பத்தின் ஏதோ ஒரு சுழற்சியில் எனக்கு ‘காக்ரோச்’ என்று கேட்டது என்பது இந்நேரம் உங்களுக்குப் புரிந்திருக்கும். சுதாரிப்பதற்குள், “நம்ம கீதாவோட தம்பி லாயர்தான்... நா வேணா பேசிப் பார்க்கவா...” என்று அடுத்த சுற்றைத் தொடங்கினாள். வேறு வழியே இல்லாமல் “செகண்ட் கால்ல வினோத் வராருப்பா... அப…

  3. *****************மானசீகன்**************** நான் முதன்முதலாக சர்ச்சுக்குப் போனது ஒரு காதல் விவகாரமாகத்தான்.என்னுடைய நண்பன் மணிகண்டன் ஒரு கிறிஸ்டியன் பெண்ணைக் காதலித்தான். அவள் பெயர் கேத்தரின். பேரழகி, தேவதை என்பதெல்லாம் அவளைப் பொறுத்தவரை குறைப்பிரசவ வார்த்தைகள். அவள் முகபாவனைகளும், உடலசைவும், உடைகளின் சரசரப்பும் யாரும் அறியாத ஒரு மலரின் வாசனையை இந்த மண்ணில் பரப்பிக் கொண்டிருந்தன.. எல்லாவற்றையும் விட அவள் அழகாகப் பாடுவாள். மைக் முன்பாக அவளைப் பார்க்கையில் , ஒரு நீர்வீழ்ச்சி காலத்தின் கட்டளையால் உறைந்து நிற்பதைப் போலிருக்கும். பெரும்பாலும் எஸ். ஜானகியின் பாடல்கள்.அவள் குரலில் எப்போதும் ஒரு மென்சோகம் இழையோடும். எதிர்பாராத தருணங்களில் அதுவே ஒரு சிறுத்தையாக உரு…

  4. நானே கொல்லப்பட்டேன்!(நிமிடக்கதை) மட்டக்களப்பு நகரமே அன்றுகாலைப் பொழுதைப் பறிகொடுத்திருந்தது. காந்தியின் சிலை வெண்துணியால் மறைக்கப்பட்டிருந்தது. எதிர்க்கட்சித்தலைவர் கட்சித்தலைவர் பேச்சாளர் என அனைவரையும் நித்திரைத் தூக்கத்திலே இருந்து எழுப்பிக்கொண்டுவந்ததுபோல் தோன்றியது. காந்தி இன்றுதான் இறந்தாரோ என்ற ஐயம் ஏற்படுமளவில் அவர்களது முகம் சோகமே உருவாகக் காட்சியளித்தது. அவர்களின் முன்னால் சில காவல்துறையினரும் இந்தியத்துணைத்தூதர் பாதுகாப்பு அதிகாரிகளென நின்றுகொண்டிருந்தனர். காவல்துறை ஆய்வாளர்களால், பலமணிநேரமாகியும் கண்டுபிடிக்கவே முடியவில்லை காந்தியின்கண்ணிலிருந்து வழியும் குருதிக்கான கரணியத்தை. மோப்பநாயொன்று குருதிபடிந்த இலையொன்றோடு வந்தது.எந்த மரத்து இலை என்று பார்த்த எங்…

    • 8 replies
    • 1.5k views
  5. ஜனனம்! “பேரன் பிறந்ததை மகிழ்வோடு பதிவுசெய்ய வந்திருக்கேன்” என்று சொல்லியும், எனக்குப் பழக்கமான அந்த அலுவலர், “கொஞ்சம் வெளியே வெயிட் பண்ணுங்க. இவர் வேலை முடிஞ்சு போனப்புறம் உள்ளே வாங்க!” என்று கண்டிப்பாகச் சொல்லி, என்னைத் துரத்தாத குறையாக அனுப்பிவிட்டார். ‘சரிதான்... என் முன்னாடி லஞ்சம் வாங்கக்கூச்சம் போல!’ என்று நினைத்தபடி வெளியே வந்தேன். வெளியே நின்றிருந்த ஒருவர், “என்ன சார், டெத் கேஸைப் பதிவு பண்ணப் போனவர் இன்னும் உள்ளேதான் இருக்காரா?” என்று கேட்டதும், என் நெஞ்சில் சாட்டை அடி விழுந்தது. மகிழ்ச்சி பதிவாகும் நேரத்தில் நெருடல் வேண்டாமே என்றுதான் என்னை வெளியே அனுப்பியிருக்கிறார். http://www.eegarai.net

  6. Started by நவீனன்,

    பிணக்கு - ஜெயகாந்தன் மெட்டியின் சப்தம் டக்டக்கென்று ஒலித்தது. வளையொலி கலகலத்தது. கூடத்தில் எட்டு வயதுப் பேரன் முத்து வலது புறமும், நான்கு வயதுப் பேத்தி விஜி இடது புறமும் நித்திரையில் ஆழ்ந்திருக்க, நடுவே படுத்திருந்த கைலாசம் பிள்ளை தலையை உயர்த்திப் பார்த்தார். கையில் பால் தம்பளருடன் மருமகள் சரஸா மகனின் படுக்கை அறைக்குள் நுழைவது தெரிந்தது. தன் மீது விழுந்த பார்வையால் சரஸாவின் தலை கவிழந்தது. கிழவருக்குக் கொஞ்சம் குறும்பு அதிகம் தான்! கைலாசம் பிள்ளையின் பார்வை அவளைப் பின்தொடர்ந்து சென்றது. அவள் அறைக்குள் நுழைந்தாள். ‘கிரீச்’சென்ற ஒலியுடன் கதவு மூடியதும், மேலே செல்ல முடிய…

  7. சாக்கடலில் சேற்றுக்குளியல் ஜோர்தானுக்கான சுற்றுப் பயணத்திப்போது மத்­தி­ய­கி­ழக்கு பிராந்­தி­யத்­தில் உல்­லாசப் பய­ணி­களின் சுவர்க்கம் என்று அழைக்­கப்­ப­டு­கின்­ற­தான நாடு­களின் வரி­சையில் இஸ்­லா­மி­யர்­களைப் பெரும்­பான்­மை­யாகக் கொண்­ட­மைந்­துள்ள நாடாக ஜோர்தான் திகழ்­கின்­றது. சம்­பி­ர­தா­ய­பூர்­வ­மான பாரா­ளு­மன்றக் கட்­ட­மைப்பைக் கொண்டு மன்னர் ஆட்­சியின் கீழான இயக்­கத்­தி­லுள்ள ஜோர்தான் அம்மான் எனும் பெயரை தலைநக­ராகக் கொண்­டுள்­ளது. மிகப் பிர­மாண்­ட­மா­னதும் எழில்­மிக்­கதும் அதே­நேரம் கண்­கவர் கட்­டட அமைப்­பு­களை கொண்­ட­மைந்­துள்ள ஜோர்தான் நாட்டின் பிர­தம அமைச்­ச­ராக ஹனி அல்– முல்கி காணப்­ப­டு­கிறார். கீழ்­சபை, மே…

  8. மரியாதை இருப்பதிலே நல்ல சட்டையாகப் பார்த்து இஸ்திரி போட்டுக்கொண்டிருந்தேன். ‘‘என்னம்மா… கல்யாணத்துக்குக் கிளம்பலயா…?’’ வெளியே அப்பாவின் குரல் கேட்டது. வாசலில் பாத்திரம் துலக்கிக்கொண்டிருந்த சாந்தியிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. கட்டாயம் ‘இல்லை’ என்று தலையாட்டி இருப்பாள், என்று யோசிக்கும்போதே அப்பாவின் குரல் சத்தமாக ஒலித்தது. ‘‘ஏன்டா… கூட்டிட்டு போல?’’ ‘‘நா மட்டும்தான் போறேன்...” ‘‘ஏன்? அது எங்க போவுது வருது. இந்த கிராமத்திலே பிறந்து இங்கேயே வாக்கப்பட்டு கிடக்கு. அதுக்கும் ஆசை இருக்காதா? புள்ளைகளுக்கும் பராக்கா இருக்கும்...’’ ‘‘வேணாம்ப்பா. வெயில் ஜாஸ்தியா இருக்கு. ஞாயிற்றுக்கிழமை வேற… பஸ்ஸெல்லாம் கூட்டமா இருக்கும்...’’ பேசிக்கொண்டே சட்டையை மாட்டிக்கொண்டேன். பாத்தி…

  9. ஏவல் - சிறுகதை நாஞ்சில் நாடன், ஓவியங்கள்: ஸ்யாம் ‘எட்டு, பத்து மாசமாச்சு... இப்படி ஓட்டம் தொடங்கி. சின்னப்பாடா? வில்லுக்கீறி எங்கே கெடக்கு, வீரகேரளமங்கலம் எங்கே கெடக்கு?’ சலிப்பாய்ச் சலித்தபடி இலுப்பாற்றுப் பாலத்தின் கீழே, பாறைமேல் சலசலத்தோடும் வெள்ளத்தின் ஓசையும், தலைக்கு மேல் நித்திலம் பூத்த கருங்கோட்டுப் புன்னை கவித்திருந்த மையிருட்டுமாகக் கால் நீட்டிப் படுத்தது ஏவல். நேரம் நள்ளிரவும் மறிந்து கீச்சான்களின் சில்லொலி. தூரத்தில் ஆழ்ந்த மோனத்தில் திளைத்திருந்தது தாடகை மலை. பாலத்தின் கீழே, கல்லுக்கட்டுச் சுவரோரம், சின்ன முக்கோணக் கல்லில், மஞ்சளை அப்பிய பீடத்தில் குடியிருந்த பாலத்தடி மாடன் எழுந்து, ஏவல் பக்கத்தில் குத்துக்காலிட்டு அமர்ந்தார். அவருக்கு…

  10. 10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: ஸ்யாம் கடன் ``அக்கா, உன் புதுப் புடைவையைப் பத்து நிமிஷம் கடன் கொடுக்கா... புரொஃபைல் போட்டோ எடுத்துட்டு திருப்பிக் கொடுத்துடுறேன்'' என்றாள் தங்கை. - நந்தகுமார் மனசு 'என்னமோ.. தெரியல... ரிசார்ட்ல தங்கினா தேவலாம்ன்னு மனசு அடிச்சிக்குது' என்றார், ஆளுங்கட்சி எம்எல்ஏ. - வி.வெற்றிச்செல்வி தீர்ப்பு நண்பர்களின் சண்டையைச் சுமுகமாக்க ஐடியா கொடுத்தார் அப்பா, “பிரகாஷ் ஃபேஸ்புக் ஐ.டிக்கு ஒரு ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் கொடுடா சுந்தர்!” - விகடபாரதி புரிதல் கையில் பிரியாணிப் பொட்டலத்தைப் பார்த்ததும் ``அப்பா, குடிச்சுட்டு வந்திருக்கார்'' என்றது குழந்தை. - வேம்பார் மு.க.இப்ராஹிம் பேய…

  11. கார்குழலி ‘சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தன் இந்தளவா கீழ்த்தரமாக இறங்கிவிட்டான்?’ கேள்வியை கண்களில் தேக்கியபடி புலவர் தண்டியை பல்லவ இளவரசனான ராஜசிம்மன் நோக்கியது ஒரே ஒரு கணம்தான். அதற்குள் ‘ஓம் நமச்சிவாய... ஓம் நமச்சிவாய...’ என சபையில் இருந்த அனைவரின் உதடுகளும் ஏக காலத்தில் உச்சரிக்கத் தொடங்கின. இளவரசனை அணைத்தபடி புலவர் தண்டியும் சிவநாமாவளியை உச்சரிக்கத் தொடங்கினார். ராஜசிம்மனின் உள்ளத்தில் பக்தியோ, சிவ ஸ்வரூபமோ இப்போது இல்லை. கோபம் எரிமலையாய் கொந்தளித்துக் கொண்டிருந்தது. புலவர் தன் கைகளில் பிரசாதமாக அளித்த நாகலிங்க புஷ்பத்தை மெல்லத் திறந்தான். உள்ளே பொன், வெள்ளி, செம்பினால் செய்யப்பட்ட பல்லவ நாணயம் மின்னியது. முன்புறம் ரிஷப உ…

  12. ஒரு நிமிடக் கதை- ஏக்கம் உணவு இடைவேளைக்கான மணி ரீங்காரமிட்டது. மழலையர் பள்ளிக்குள் ஸ்வேதா சாப்பாடு கூடையுடன் நுழையும்போதே வாட்ச்மேன் தடுத்தார். “ம்மா, இன்னைக்கு கரஸ்பாண்டன்ட் வந்திருக்காங்க. நீங்க உங்க குழந்தைக்கு சாப்பாடு ஊட்டி விடறதை பார்த்தாங்கன்னா பிரச்சினை ஆயிடும். ப்ளீஸ், சாப்பாட்டை எங்கிட்ட கொடுத்துட்டு போயிடுங்க!” என்று கெஞ்சினார். “என்னப்பா சொல்ற. என் மகளை இங்க சேர்த்ததில் இருந்து நான்தான் அவளுக்கு சாப்பாடு ஊட்டி விட்டுட்டுப் போறேன். அதுவுமில்லாம, ஹெச்.எம். என் கூட படிச்ச தோழி. யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க” என்று அவரை அலட்சியப்படுத்திவிட்டு உள்ளே சென்ற ஸ்வேதா தனக்காக காத்திருந்த மகளுக்கு சாப்பாடு ஊட்ட ஆ…

  13. "நாளைக்கு செந்தளிப்பா இன்னும் அழகா இருக்கோணும் அம்மா சீக்கிரம் படனை" அம்மா சொல்லிவிட்டு கதவை மெதுவாக மூடி சென்றாள். அவள் அப்படித்தான் நடந்தால் நிலமதிராது. இரண்டு அண்ணன்கள் செல்லமாய் வளர்ந்த எனக்கு கொஞ்சம் துடுக்குதான். ஒருமுறை பள்ளி ஆசிரியை அடித்ததை அறிந்து அவருடன் சண்டைக்கு போன அப்பா என் மேல் துரும்பு விழுந்தாலும் துடித்து போகும் பாசம் .எனது சந்தோசமே அவரது சந்தோசமென வாழ்கிற ஜீவன். எல்லோரும் தூங்கிவிட்டார்களா.. அப்படி அமைதியாக இருக்கிறது. அந்த நிசப்தத்திலும் என் இதயத்தின் துடிப்பு எனக்கு கேக்கிறது. ஏன் இந்த படபடப்பு? ஏன் இந்த சலனம்? நாளைக்கு எனக்கு திருமணம் மாப்பிள்ளை இலண்டன். எல்லா இலட்சணங்களும் குணங்களும் கலந்த கலவை போல. ஏன…

  14. கண்ணாடிப் பந்து - சிறுகதை நர்சிம் - ஓவியங்கள்: ஸ்யாம் “லைஃப்... நம்ம எல்லோருக்கும் மூணு பந்துகளைத் தந்திருக்கு. அதுல ரெண்டு... ரப்பர் பந்துகள். ஒண்ணு... கண்ணாடிப் பந்து. You know what all?” நான் உற்சாகமாகவும் கம்பீரமாகவும் மாதாந்தர பிராஞ்ச் மீட்டிங் நடத்தும் போதெல்லாம், பணியாளர்கள் ரொம்ப ஆர்வமாகப் பங்குபெறுவார்கள் அல்லது பங்குபெறச் செய்துவிடுவேன். நான் புத்தகங்களில் படித்த, அவதானித்த, என் பாஸிடமிருந்து கற்றுக்கொண்ட... என எல்லாவற்றையும் கலந்துகட்டி அவர்களுக்குச் சொல்லி, மோட்டிவேட் செய்வதில் கைதேர்ந்தவன் எனும் பெயர் பெற்றிருந்தேன். `அந்த மூன்று பந்துகள் என்னென்ன?’ என்பதுபோல் புருவம் உயர்த்தினேன்... எனக்கு எ திரே அமர்ந்து என்னைப் பார்த்துக்…

  15. அறை எண் 22 சோவென விழும் அருவியின் இரைச்சல் பொங்கியெழும் ஆனந்தத்தையும் தரவல்லதாக இருந்தது. நீண்ட நேரம் அதன் நீரலையில் ஆடியிருக்க வேண்டும். தலைமுடி பிடரியோடு ஒட்டியிருந்தது. ஆடைகள் ஈரமாக உடலைக் கவ்விக் கொண்டிருந்தன. ஈரத்தை உதறி முடிக்கும் முன் நீர்ச்சுழி மலை முகட்டின் எல்லை நோக்கி உந்தத் தொடங்கியது. மாபெரும் உந்தலால் திடீரென கீழே விழ... பள்ளம் பள்ளம்... விழுகையில் ஒரு கணம் மூச்சு நின்றுவிடுவது போல் ஒரு நெஞ்சடைப்பு. திடீரென சுவாசம் முட்டித் திரும்புகையில் ஒரு நீண்ட ஆற்றின் அலைகளில் அடித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தாள் சொப்னா. ஆற்றின் இரு மருங்கிலும் புதர்கள், நாணல்கள், கோரைப்புற்கள். நீரின் நடு நடுவே பாறைத்திட்டுக்கள். பாறைகளின் மேல் மோதிக் கொள்ளாம…

    • 1 reply
    • 1.4k views
  16. யார் ஏழை ❓❓❓��? ஒரு பணக்கார அம்மா துணி கடைக்குப் போய்_கடைக்காரரிடம் எனது மகனுக்கு திருமணம்' ஆகவே எனது வீட்டில் வேலைசெய்யும் பணிப்பெண்ணிற்கு கொடுக்க மிக குறைந்த விலையில் ஒரு சேலை கொடுங்கள் என்று வாங்கிச் செல்கிறார்..❗ சற்று நேரத்திற்கு பிறகு அதே கடைக்கு அந்த வீட்டு பணிப்பெண் �வருகிறார் கடைக்காரரிடம் என் முதலாலியின் பையனுக்கு கல்யாணம் அதனால் எனது முதலாளி அம்மாவுக்கு பரிசாக கொடுப்பதற்கு உங்க கடையில் மிக உயர்ந்த விலையுடைய சேலைகளை எடுத்துப்போடுங்கள் என்று பார்த்து மிக உயர்ந்த விலையுடைய ஒரு சேலையை வாங்கிச் செல்கிறார்..❗ இதில் யார் பணக்காரர்...❓ 3'ஸ்டார் ஹோட்டலில் தங்கி இருக்கும் சுற்றுலாவிற்கு வந்த ஒரு பணக்காரவீட்டு 6 மாத குழந்தையின் அம்மா, ஹோட்டல் மேலாளரிடம் …

  17. ஒரு நிமிடக் கதை: மருமகள் அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லை என்று அண்ணனின் போன் வந்ததும் சங்கர் அப்பாவைப் பார்க்க கிராமத்துக்கு கிளம்பினான். ஆபீஸில் இருக்கும் போது போன் வந்ததால், மனைவி சித்ராவிடம் கூட சொல்லாமல் கிராமத்துக்கு சென்றான். அங்கிருந்து மனைவிக்கு போன் செய்து தான் ஊருக்கு வந்திருப்பதைச் சொன்னான் அடுத்தநாள் மாலை ஊரில் இருந்து கிளம்பி திங்கள்கிழமை நேராக அலுவலகத்துக்கு சென்றான் சங்கர். இரவு வீடு திரும்பியவனுக்கு அதிர்ச்சி. வீட்டில் மனைவி சித்ரா இல்லை. குழந்தைகள் பள்ளியை விட்டு வந்து பள்ளி சீருடையைக் கூட மாற்றாமல் தூங்கிக்கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்த சங்கருக்கு எரிச்சலாக வந்தது. வீட்டில…

    • 3 replies
    • 1.6k views
  18. மஞ்சள் குருவி! - சிறுகதை சிறுகதை - அனுராதா ஆனந்த் - ஓவியம்: ராஜேந்திரன் அந்தக் குறுகிய தார் சாலையில் நடக்கும்போது ஒரு விடுபடலை உணர முடிந்தது அவளால். ஒவ்வோர் அடியிலும் மேலே அப்பியிருந்த ஏதோ ஒன்று நெகிழ்ந்து விழுவது போல லேசாக உணர்ந்தாள். இரு பக்கமும் ஆசீர்வாதமாக ஆரஞ்சு வண்ண இலைகளைச் சொரிந்த மரங்கள், மாலை என்றாலும் கோடையின் உக்கிரத்துடன் அடிக்கும் வெயில், பாட்டொன்றை மெல்லியதான தன் அடிக்குரலில் பாடிக்கொண்டும், இடையிடையே நிறுத்தி பறவைகளின் கூப்பிடு ஓசையை அவளுக்கே உரிய பிரத்யேக நெற்றிச்சுருக்கலுடன் கேட்டுக்கொண்டும் உடன் நடந்து வரும் நிவேதா... இவையெல்லாம் சேர்ந்து அந்தப் பள்ளியின் உள் உள்ள இச்சாலைக்கு ஒரு சிறப்புத் தொனியை ஏற்றின. எப்படியாவது நிவேத…

    • 1 reply
    • 2.2k views
  19. ஏங்க.. “ஏங்க....” அமானுஷ்யமான குரலைக் கேட்டு பதறிப்போய் சட்டென்று கழுத்தில் வெட்டிக் கொண்டேன். கொஞ்சம் ஆழமான வெட்டு. ரத்தம் கொப்பளித்தது. “எத்தனை தடவை சொல்லியிருக்கேன்... ஷேவிங் பண்ணறப்ப பிசாசு மாதிரி கத்தாதேன்னு...” எரிந்து விழுந்தபடி வெட்டுப்பட்ட இடத்தில் ‘கலோன்’ தடவினேன். தீயாய் எரிந்தது. “சொல்லித் தொலை. எதுக்கு இப்படி ‘ஏங்க ஏங்க’ன்னு உயிரை எடுக்கறே?” “உங்க பொண்ணு என்னா சொல்றான்னு கேளுங்கன்னு கூப்பிட்டா இப்படி பைத்தியக்காரன் மாதிரி கத்தறீங்களே?” பதிலுக்கு இளவரசியும் சீறினாள். நேரடியாக சொல்ல மாட்டாள். கூடவே ஒரு ‘மாதிரி’யையும் இணைப்பாள். சொன்ன மாதிரியும் ஆச்சு. சொல்லாத மாதிரியும் ஆச்சு. அப்பாவும், அம்மாவும் மாறி மாறி கத்துவதைப் பார்த்து ஷாலு மிரண்டா…

  20. Started by விகடகவி,

    ஒரு கோப்பை தேநீர் அருந்தினால் அருமையாக இருக்கும் என தோன்றியது. கைத்தொலைபேசியில் தலைபேசி வழி பாட்டு கேட்டுக்கொண்டிருந்த மனைவியிடம் டவாலி போல மூன்று முறை கேட்ட பின்னரும் அவள் அசைவதாயில்லை. பல்லாயிரத்தி பல நூற்றி சொச்சம் முறையாக அவள் மீது கோபம் வந்தது. "தேநீர் வருமா வராதா?" "ஆ..." காதிலிருந்ததை அகற்றி கேட்டாள். உள்ளே கோபம் வந்தாலும் அமைதியாய்.. "தேநீர் வருமா வராதா?" " தேநீர் எப்படி தானாய் வரும்?" இது நகைச்சுவையாய் தோன்றவில்லை "எனக்கு இப்போது தேநீர் வேண்டும்" "எனக்கும் இப்போது வைர அட்டிகை..தங்க காப்பு பட்டுசேலை எல்லாம் வேண்டும்..ஆசைப்படுவதெல்லாம் உடனே நடக்குமா என்ன" "சாதரண தேநீருக்கு என்ன எகத்தாளம்" "அப்படியா..சாதரண தேநீரா..நீங்களே தயாரித்து அருந்துங்கள்" …

  21. நன்மாறன்கோட்டை கதை சிறுகதை: இமையம், ஓவியங்கள்: செந்தில் ``நல்ல ஊரு சார். இங்க வேலை செய்றவங்க எல்லாருமே நல்ல மாதிரியான ஆளுங்கதான். நல்லா கோஆபரேட் பண்ணுவாங்க. கட்சிக்காரங்க, அரசியல்வாதி, உள்ளூர்க்காரங்கனு யாரும் ஸ்கூலுக்குள்ள வர மாட்டாங்க. நான் இந்த ஸ்கூலுக்கு வந்து பத்து வருஷமாச்சு. எந்தத் தொந்தரவும் இல்லை. ரிட்டையர்ஆகிறவரைக்கும் நீங்களும் இந்த ஊர்லயே ஓட்டலாம் சார். நன்மாறன்கோட்டைங்கிற பேருக்கு ஏத்த மாதிரி ஊரு ஆளுங்களும் இருப்பாங்க’’ என உடற்கல்வி ஆசிரியர் தனவேல் சொன்னார். ``அப்படியா?’’ என்று ராமன் கேட்டதோடு சரி. மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு பெற்று, இன்று காலையில்தான் கடலூர் மாவட்டத்திலிருந்து வந்து புதிய பள்ளியில் ராமன் சேர்ந்தி…

  22. மண்டை மாக்கான் சுகுணா பிறந்தது 1998-ல் மார்ச் மாதத்தில் விடிகாலையில் என்று அவளே என்னிடம் சொன்னபோது கணக்கில் தகராறு நிரம்பிய நான் விரல்களில் ஒவ்வொன்றாய்த் தொட்டு மனக்கணக்கு போட்டேன். இப்போது 2017ல் இருக்கிறோம் அல்லவா! எப்படியோ கல்யாணம் கட்டிக் கொள்ளும் வயதில் சுகுணா இருக்கிறாள். இங்கே சேலம் அம்மாபேட்டை காவல் நிலையத்திலோ அல்லது கோபி காவல் நிலையத்திலோ சுகுணாவும் முருகேசனும் மாலையும் கழுத்துமாக தஞ்சமடையும் வயதுதான். முருகேசன் என் பள்ளித் தோழன். கொளப்பளூர் நடுநிலைப்பள்ளியில் எட்டாவது வகுப்பு வரை என் பக்கத்திலேயே வகுப்பறையில் அமர்ந்து படித்தவன். மண்டை மாக்கான் என்றொரு பட்டப் பெயரும் பள்ளியில் அவனுக்கு இருந்ததாக ஞாபகம். மண்டை மாக்கான் என்ற பட்…

  23. அற்புதம் by மஹாத்மன் அந்த மூன்றுநாள் கூட்டத்தை ‘குருசெட்’ கூட்டமென்று அழைப்பார்கள். தமிழில் நற்செய்திக் கூட்டமென்றும் சுவிசேஷக் கூட்டமென்றும் சுகமளிக்கும் கூட்டமென்றும் பெயர் பெற்றது. வெள்ளி, சனி, ஞாயிறு மாலையில் தொடங்கி முன்னிரவில் முடிவடையும். இந்த விசேஷக் கூட்டத்திற்காக ஒரு மாதத்திற்கு முன்பே ஆயத்த வேலைகள் செய்யப்படும். மூப்பர் பிரிவில் உள்ளவர்கள்தான் வேலைகளைப் பங்கிட்டுக் கொடுப்பர். சபை காரியங்களில் உற்சாகமாக ஈடுபடுத்திக் கொள்வோரிடம் விசேஷக் கூட்டத்தைக் குறித்தான கைப்பிரதிகள் கட்டுக்கட்டாக கொடுக்கப்படும். இவர்கள் சுற்று வட்டாரத்திலுள்ள எல்லாத் தோட்டங்களுக்கும் கம்பங்களுக்கும் பக்கத்துப் பட்டணங்கள் வரையிலும் வீடு வீடாகச்சென்று கொடுத்துவிட்டு வரு…

  24. ஒரு நிமிடக் கதை: மன்னிப்பு “இப்படி கவனம் இல்லாம ஜியாமெட்ரி பாக்ஸைத் தொலைச்சுட்டு வந்து நிக்கிறியே. இது தப்பு கோகுல். இருந்தாலும் உன்னை மன்னிச்சுடறேன். நாளைக்கு வேற ஜியாமெட்ரி பாக்ஸ் வாங்கித் தர்றேன்” என்று மகனிடம் தன் மனைவி ரேவதி சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தான் கணேசன். ரேவதி இப்படிச் சொல்வது முதல்முறை அல்ல. சில வருடங்களாகவே அவள் கோகுலிடம் இப்படித்தான் நடந்து கொள்கிறாள். ஒருமுறை கோகுல் கணக்குப் பாடத்தில் தோல்வியடைந்தபோது இப்படித்தான் அவனைத் திட்டிவிட்டு, பிறகு அவனிடம் மன்னிப்பதாகச் சொன்னாள். படிக்காமல் விளையாடிவிட்டு வந்தாலும், வீட்டுப் பொருட்களைச் கைதவற…

  25. ய்ய்யீஈஈஈ! - சிறுகதை ரேவதி முகில் - ஓவியம்: பிரேம் டாவின்ஸி சிரித்துக்கொண்டிருந்த பாண்டியின் கன்னத்தில் அழுத்தி முத்தமிட்ட அம்மா, கையிலிருந்த கடிதத்தை மீண்டும் வாசித்தாள். வத்தலக்குண்டில் புதிதாகத் தொடங்கியிருந்த ஜவுளிக்கடையிலிருந்து வந்திருந்த கடிதம் அது. பாண்டிக்குப் பொங்கலுக்கு டவுசர் சட்டை வாங்கிய போது ஒரு பரிசு கூப்பன் கொடுத்தார் கள். குலுக்கலில் தங்களது கூப்பனுக்கு கலர் டி.வி பரிசு விழுந்திருப்பதாகவும், வருகிற சனிக்கிழமை மாலை வந்து பரிசைப் பெற்றுக்கொள்ளுமாறும் அதில் எழுதியிருந்தது. அதற்குள் தெருவில் சேதி பரவியிருந்ததால், வந்து விசாரித்துப் போனார்கள். பரிசு விழுந்த கதையை வாய் ஓயாமல் எல்லோருக்கும் சொல்லிக் கொண் டிருந்தாள் மயிலத்தை. பாண்டி பிறந்தபோ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.