கதை கதையாம்
சிறுகதை | தொடர்கதை | நாடகம்
கதை கதையாம் பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, நாடகம் சம்பந்தமான பகுதிகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், நாடகம் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனையவை தரமான படைப்புக்களை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். வணிக எழுத்துக்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.
3071 topics in this forum
-
இஞ்சாருங்கோ கெதியா வெளிக்கிடுங்கோ கல்யாணத்துக்கு நேரம் போகிறது நான் என்ன சீலையோ உடுக்கிறதோ இல்ல முகத்துக்கு பெயிண்டா அடிக்கிறது உனக்குத்தான் நேரம் போகும் எனக்கு வேட்டிய சுத்தி கட்டினனா ஒரு சேட்டை போட்டனா வேலை முடிஞ்சுது நீ தான் வெளிக்கிட மூணு மணித்தியாலம் எடுக்கும் இந்த பேச்சுக்கு ஒன்றும் கொறைச்சல் இல்ல நான் இன்னும் கொஞ்ச நேரத்தில வாரன் புள்ளய பார்த்துக்கங்க சரி நீ கெதியா வா. ம்கும் கெதியா வாரதுகளா என்று ஒரு படத்தை பார்த்து முடிக்கலாம் இவள் வார வரைக்கும் என்று டீவியை தொறந்தால் விஜய் டீவில ஒரு புறோக்கிரம் கோபிநாத் குட்டையை குழப்பி கொண்டிருக்கிறார் ஒரு புள்ள கெலிகொப்ட்ர கேட்கிறது இன்னொன்று 50 பவுண் கேட்கிறது இன்னொன்று நல்ல வீடு கேட்கிறது இதுகளை ஏன் பெத்து இருக்கு என்று ம…
-
- 5 replies
- 1.3k views
-
-
தரிசனம் -இளங்கோ கிருஷ்ணன் இன்று காலை நான் கடவுளைப் பார்த்தேன். சரி, சிரிக்க வேண்டாம். நிஜமாகவே பார்த்தேன் என்று நான் சொன்னால் நீங்கள் நம்பத்தான் வேண்டும். ஏனென்றால், நான் கதாசிரியன். கதாசிரியன் சொல்வதை நம்பத் தொடங்குவதுதான் கதை கேட்பதன் முதல் தகுதி. சரி, கடவுளைப் பார்த்தேன் என்றேன் அல்லவா? எங்கு பார்த்தேன் என்று சொல்லவில்லையே, கோயம்பேடு மார்க்கெட்டில்தான் தரிசனம். அதுவும் ஒருமுறை அல்ல; இரு முறை. அதை தரிசனம் என்று சொல்லலாமா தெரியவில்லை. என் கண் எதிரே தட்டுப்பட்டார். அதுவும் நான் எதிர்பார்க்காத நேரத்தில். எத்தனையோ கோடி பக்தர்கள் எத்தனை எத்தனையோ வழிகளில் தேடித் திரிகிறார்கள். நாள்தோறும் ஆறுகால பூஜை செய்து, விரதம் இருந்து, சஷ்டி படித்து, சபரிமலைக்கு மாலை போட்…
-
- 0 replies
- 1k views
-
-
பவானி மச்சாள் – சிறுகதை – இராகவன் பவானி மச்சாள் எங்கடை ஊரிலை இருக்கிற ஒரேயொரு முற்போக்குவாதி யாரெண்டு கேட்டால் அப்பவும் இப்பவும் எப்பவுமே அது சற்குணம் மாமாதான். அவரோடை ஒரேயொரு பொம்பிளைப்பிள்ளையான அம்பிகா மச்சாள் ஓயெல் படிச்சு கொண்டிருந்த மூட்டம் ஒரு நாள் , “அப்பா நான் கராட்டி பழகப் போறன்” எண்டு சொன்னாள். “அதுக்கென்ன பிள்ளை” எண்டு சற்குணம் மாமா சர்வசாதாரணமாய் சொல்ல சிந்தா மாமிதான் ஆட்லெறி செல் விழுந்து வெடிச்சமாதிரி அதிர்ந்து போனா. “இதென்ன நாசமறுப்பு. ஒரு குமர்பிள்ளை கதைக்கிற கதையைப் பார். கராட்டி பழகப் போறாவாம் கராட்டி. அதுக்கு இவரும் ஒத்தூதுறார்.” எண்டு சிந்தாமாமி அளப்பரிக்க தொடங்கீட்டா. “அதுக்கு நீயேனப்பா அளப்பரிக்கிறாய்? அவள் ஆச…
-
- 6 replies
- 2.6k views
-
-
வாழ்வெனும் பெருங்கனவு! - சிறுகதை லைலா எக்ஸ், ஓவியங்கள்: ஸ்யாம் 1 அந்த அமைதியான மாலைப் பொழுதில் கழிவறைக்குள் தென்னை விளக்குமாற்றால் சரசரவெனக் கூட்டிக் கழுவும் சத்தம், பள்ளியின் வராந்தா முழுவதும் ஒலித்தது. அரை மணி நேரத்துக்கும் மேலாகக் கேட்ட சத்தம், முழுவதுமாக நின்றுபோன சற்றுநேரத்தில் வெறும் பக்கெட்டை ஒரு கையிலும், பொருள்கள் நிறைந்திருந்த பக்கெட்டை மற்றொரு கையிலும் எடுத்துக்கொண்டு, பள்ளியின் கழிவறையிலிருந்து வெளியே வந்தாள் வித்யா. அந்த பக்கெட்களிலிருந்து ஒரு சொட்டு நீர்கூட, அவள் நடந்துவந்த வராந்தாவில் சிந்தவில்லை. இத்தனைக்கும் அவள் கைகளிலிருந்த அழுத்தமான பிளாஸ்ட்டிக் பக்கெட்டின் விளிம்பு பிளந்துகொண்டிருந்தது. அதில் சிறிய விரிசல் ஒன்றும் இருந்தது. அதன் …
-
- 0 replies
- 2.3k views
-
-
பள்ளத்தாக்கு - அகரமுதல்வன் தூர்கிற பாழ்கிணற்றைப் போல இரவுத் தூசியால் பூமி கறுத்தது. சுருண்டு கிடக்கப்பழகிவிட்ட பாம்புக்குட்டியின் தோலில் நிலவு மின்னியது. தலைகீழாய்த் தொங்குவதற்காய் உயர்ந்த கிளைகளைத் தேடிப்பறக்கின்றன கோணம் பிசகிய வவ்வால்கள். முற்றத்தில் பனையின் நிழல் சரிகிறது. தெய்வீகம் போலிருக்கிறது பனை அசைவதை நிழலாய்ப் பார்க்க. இந்தப் பொழுதுகளில் கண்ணுக்குப்புலப்படாத அற்புதங்கள் பலமாகத் திரிந்தாலும் சுவடுகளை விடுவதில்லை. முழுமைக்கு ஆசைப்படாத மேகம் நிலவின் முன்னே கலைந்து அரிதாய் மிஞ்சுகிறது. வானத்திலிருந்து நிலத்திற்கு கோடிழுக்கும் நட்சத்திரங்கள் எங்கே புதைகின்றன. அமைதி! யாவும் முழுமையடையும் அமைதி. அவள் கருப்பட்டியோடு தேத்தண்ணீர் கொண்டு வந்திருந்தாள். சூடு என்…
-
- 0 replies
- 1.6k views
-
-
ஒரு நிமிடக் கதை: அதுதான் காரணம் ‘‘இதப் பாரு விஜி. என்ன சொல்லுவியோ தெரியாது. உங்க அம்மாவை ஊருக்கு கிளம்பச் சொல்லு’’ - கத்தினான் ரமேஷ். ‘‘எங்க அம்மான்னா உங்களுக்கு இளக்காரமா போச்சோ?’’ - பதிலுக்கு கேட்டாள் விஜயா. வெளியே சென்று தண்ணீர்ப் பானையை தூக்கி வந்த விஜயாவின் அம்மா கங்கா, இவர்கள் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டு அதிர்ந்து போனாள். விஜயாவுக்கு தலைப் பிரசவம் முடிந்து பச்சை உடம்புக்காரி என்பதால் அவளுக்கு சில நாட்கள் துணையாக இருக்கலாம் என்று கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்திருந்தாள். தான் இங்கே இருப்பது மருமகனுக்கு பிடிக்கவில்லையோ என்று நினைத்த…
-
- 3 replies
- 735 views
-
-
கொஞ்சம் அதிகம் இனிப்பு சிறுகதை :எஸ்.ராமகிருஷ்ணன்ஓவியங்கள்: ஸ்யாம்நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு... அருள்செல்வத்தின் போன் நம்பரை ஸ்டீபன் அனுப்பியிருந்தான். கன்னையா அதைத் தனது செல்போனில் பதிவுபண்ணி வைத்துக்கொண்டான். காலையில் மீன் மார்க்கெட் அருகில் ஸ்டீபனைப் பார்த்தபோது, அருள்செல்வத்தைப் பற்றி அவன்தான் சொன்னான். பூந்தண்டலத்தில் மூன்றரை வருடங்களாக விற்க முடியாமல் கிடந்த நிலம். எப்படியாவது ஒரு பார்ட்டியைப் பிடித்து விற்றுக்கொடுத்தால், கமிஷன் மட்டும் இரண்டரை லட்சம் தருவதாக ஷெட்டி சொல்லியிருக்கிறான். அருள்செல்வத்தை எப்படியாவது பேசி மடக்கிவிட வேண்டும். இந்த இரண்டு ஆண்டுகளில் எத்தனையோ நபர்களை அழைத்துக்கொண்டு போய் இடத்தைக் காட்டி…
-
- 0 replies
- 1.9k views
-
-
வினை விதித்தவன்... பட்டுக்கோட்டை ராஜா இவர்களின் தெருவில் திறக்கப்பட்டு வெற்றிகரமாய் வருமானம் பார்த்துக் கொண்டிருக்கும் டாஸ்மாக்கை மூடவேண்டும் என்கிற கோரிக்கையுடன் இளநகை, வாசு இருவருமாய் அதிகாலை நேரத்திலேயே ஆத்மநாதனைப் பார்க்க வந்துவிட்டார்கள். அவர் வீட்டைவிட்டு வெளியே கிளம்பிவிட்டால் பிறகு அவரைச் சந்திப்பது கடினம் என்று வாசு எச்சரிக்கை செய்திருந்தான். ஆத்மநாதன் சமூக ஆர்வலர். அதனாலேயே திருமணத்தை மறுத்தவர். ஊரில் எங்கு தப்பு நடந்தாலும் தயங்காமல் தட்டிக் கேட்பவர். இவரைப் பார்த்தாலே அரசியல்வாதிகளின் வயிறு கலங்கும். சார்பதிவு அதிகாரியாய்ப் பதவி உயர்வு பெற்று நல்ல வருமானத்தில் இருந்தவர், தன் அலுவலகத்தில் இருக்கும் ஊழல்பெருச்சாளிகளின் கொட்டம் காணத் தாங்காமல் வேல…
-
- 2 replies
- 1.2k views
-
-
யானை வீட்டுக்காரி - சிறுகதை எஸ்.செந்தில்குமார் - ஓவியங்கள்: செந்தில் சாவித்திரி, அலுவலகத்தில் இருந்து வெளியேறி மெயின்ரோட்டுக்கு வந்தபோது இருட்டிவிட்டது. அவளது அலுவலகத்தில் இருந்து பேருந்து நிறுத்தத்துக்கு அரைமணி நேரம் நடந்து, இரண்டு பெரிய சந்துகளைக் கடந்து கடைவீதிக்கு வர வேண்டும். நடைபாதை ஓரத்தில் விற்கும் காய்கறிகளையும் துணிகளையும் வேடிக்கை பார்த்தபடி வேலை முடிந்துவரும் ஜனங்களுடன் ஜனங்களாக வரிசையாக நடந்து, சந்நதித் தெருவுக்குள் நுழைய வேண்டும். இரவில் சந்நதித் தெரு நெரிசலாக இருக்கும். இரவு ஏழு மணிக்குப் பிறகு அவளது வீட்டுக்குப் போக பேருந்து வசதி குறைவு. இரண்டு ஷேர்ஆட்டோக்கள் மாறிப்போக வேண்டும். ஷேர்ஆட்டோவில் போவதற்குப் பதிலாக நடந்தே வீட்டுக்குச் …
-
- 0 replies
- 2.7k views
-
-
மரியாதை - ஒரு நிமிடக் கதை திருமண மண்டபத்துக்குள் நுழைந்தவுடன் “வாங்க சார்..” என்று வரவேற்ற வேலு வின் மகனைப் பார்த்து லேசாய் எரிச்சலடைந்தேன். பதினாறு வயதிருக்கும். அவன் மட்டும் தனியே நின்று வரவேற்றுக் கொண்டிருந்தான். அருகில் பெரிய மனிதர்கள் யாருமில்லை. ‘வர்றவங்கள வாசல்ல நின்னு வரவேற்கணும்கிற பண்பு தெரியாம என்ன விசேஷம் நடத்துறாங்க... சின்ன பையனை நிறுத்தியிருக்கிறாங்களே’ என்று நினைத்துக் கொண்டேன். “அப்பா எங்கேப்பா..?’’ வேலுவின் மகன் சுரேஷிடம் கேட்டேன். “சாப்பாட்டு கூடத்துல நிக்கிறாங்க சார்’’ என்றான். மேடையில் இருந்த புதுமணத் தம்பதியருக்…
-
- 1 reply
- 2k views
-
-
ஒரு நிமிடக் கதை: நாணயம் காலை நேர நெரிசலில் குமார் பஸ்ஸில் ஏறினான். தினமும் பைக்கில் அலு வலகம் சென்று வருபவன், அன்று வண்டியை சர்வீஸுக்கு விட்டதால் வேறு வழி இல்லாமல் பேருந்து பயணம். அன்று நல்ல முகூர்த்த நாள் வேறு. பேருந்தில் உட்காரக் கூட இடம் இல்லாமல் நின்று கொண்டே வந்தான். ‘டிக்கெட், டிக்கெட்’ என்றபடி நடத்துநர் வந்தார். குமார் பத்து ரூபாய் தாளை கொடுத்து “முனிசிபல் ஆபீஸ் ஸ்டாப் கொடுங்க” என்றான் . நடத்துநர் டிக்கெட்டையும் , மீதி சில்லறை யும் கொடுத்தவாறு கூட்டத்தில் முன்னே நகர்ந்து விட்டார். குமார் சில்லறையை எண்ணி பார்த்த போது, ஒரு பத்து ரூபாய் தாளும், இரண்டு ரூபாய் நாணயமும் இருந்தது…
-
- 0 replies
- 774 views
-
-
சொந்தம் கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்த கருத்து வேறுபாடுகள் பெரும் விரிசலாக வளர்ந்து நின்றபோது சித்தார்த்தும், சியாமளாவும் மனம் இணங்கிப் பிரிந்து போவது என முடிவெடுத்தனர். ஆறு மாத இடைவெளியில் இருவருக்கும் விவாகரத்தை உறுதி செய்த நீதிபதியிடம், ‘‘மகள் சசி எனக்குத்தான் சொந்தம்’’ என சியாமளாவும், ‘‘எனக்குத்தான் சொந்தம்’’ என சித்தார்த்தும் வாதம் செய்தனர். ஒரு நிமிடம் யோசித்த நீதிபதி, ‘‘இதை உங்க மகளிடமே கேட்டுடுவோம். ஏன்னா அவ இப்போ மேஜர்!’’ என்று சசியை அழைத்தார். ‘‘நீ அம்மாகூட இருக்கியா? இல்ல, அப்பாகூட இருக்கியாம்மா?’’ - கேட்டார் நீதிபதி.‘‘அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து இருந்தப்பதான் அவங்க எனக்கு அப்பாவும் அம்மாவும். நானும் அப்போதான் அவங்களுக்குச் சொந்தம். அவங்கதான் பிரிஞ்சிட்ட…
-
- 0 replies
- 744 views
-
-
October 01, 2015 1979ல் Cemetryக்கு அந்த பக்கமிருக்கும் Primary school gateக்கால நுழைந்து 1990ல் Cemetryக்கு இந்த பக்கமிருக்கும் Main gateக்கால வெளிக்கிட மட்டும், பரி யோவானில் கழித்த பொழுதுகள் இனிமையானவை, பசுமையானவை. பரி யோவானின் பரந்த வளாகத்திற்குள் சந்தித்த மனிதர்கள் ஒவ்வொருவரும் வாழ்க்கையை செதுக்கிய உன்னத சிற்பிகள், அதனுள் நடந்த சம்பவங்கள் அனைத்தும் வாழ வழிகாட்டிய வாழ்க்கைப் பாடங்கள். அந்த காலத்தில் பரி யோவானின் Primary school மிகவும் குளிர்ச்சியானது...அங்கு இருக்கும் பெரிய மரங்களால் மட்டுமல்ல, அங்கு கற்பிக்கும் இளம் ஆசிரியைகளாலும் தான். சுண்டுக்குளி மகளீர் கல்லூரியில் AL முடிக்கும் மாணவிகள் அடுத்த வருடம் பரி யோ…
-
- 3 replies
- 2.3k views
-
-
கொமர்ஸ்காரர் ஒரு தனி ரகம், அவர்களும் ஒரு வகை மன்னர்கள் தான், சப்பலில் அல்ல, A/L வாழ்க்கையை அனுபவித்ததில் அவர்கள் தான் உண்மையான A/L மன்னர்கள். படிப்போடு நல்லா பம்பலடிக்கவும், ஸ்டைலா பெட்டையளை சுழற்றவும் தெரிந்த, சூப்பர்காய்கள். O/L முடித்து கொமர்ஸ் படிக்க வாற குறூப்புகள் பலவகை. முதலாவது குறூப் கொமர்ஸில் கண்டதும் கொண்ட காதலால் படிக்கவாற கோஷ்டி. O/L ல் அநேகமா ஒகஸ்ரின் மாஸ்டர் மாதிரி ஆக்களிட்ட படிச்சு, கணக்கியலில் வசியப்பட்டு வாற சனம். இவர்கள் கண்ணும் கருத்துமாய் படிப்பார்கள். பள்ளிக்கூடத்திலும் tuitionலும் ஒரு சொல்லு விடாமல் notes எடுப்பார்கள், part 1 க்கு வேற part 2 க்கு வேற, schoolற்கு வேற tuitionற்கு வேற என்று கன கொப்பிகள் வைத்திருப்பா…
-
- 5 replies
- 1.8k views
-
-
புலி பதுங்குவது... எழுத்தாளர் முன்கோபி தன் வீட்டின் பக்கவாட்டு அறையிலிருந்து வாசலை மீண்டும் ஒரு முறை எட்டிப் பார்த்தார். அரை மணி முன்பு பார்த்த அந்த இரு குண்டர்களும் சிகரெட்டைக் கையில் வைத்துக்கொண்டு இன்னமும் அங்கேயேதான் நின்று கொண்டிருந்தனர். வயிற்றைக் கலக்கியது எழுத்தாளருக்கு. காட்சி புரியாதவர்களுக்காக சின்ன அறிமுகம். எழுத்தாளர் முன்கோபி தமிழ் கூறும் நல்லுலகம் புகழும் ஒரு வீரமான எழுத்தாளர். அறச்சீற்றம் கொண்டவர். சமூகக் கொடுமைகளைச் சாடுவதில் அவருக்கு நிகர் அவர்தான். ஆனால், அவர் யாரைக் குறிப்பிட்டுச் சொல்கிறார் என்று படிப்பவர்களுக்கும் புரியாது, அவருக்கும் தெரியாது. சென்ற வாரம் பக்கத்துத் தெருவில் இருந்த ஒரு கந்து வட்டிக்காரனைப் பற்றிக் காரசாரமாக எழுதியிருந்தார். அ…
-
- 0 replies
- 885 views
-
-
போட்டோ பேங்கிற்கு எடுத்துச் செல்ல எனது பென்ஷன் ஆர்டர் புத்தகம் தேவைப்பட்டது. அறைக்குள் வந்து பீரோவைத் திறந்தேன். பள்ளி, கல்லூரிச் சான்றிதழ்கள் போன்ற முக்கியமானவற்றின் ‘பேக்’கில் வைத்திருந்தேன். அந்தப் புத்தகத்தை எடுக்கப் போகும்போது எனது பார்வையில் பட்டது ஒரு கார்டு சைஸ் போட்டோ. எடுத்துப் பார்த்தேன். நினைவு பின்னோக்கிச் சென்றது. நான் வேலை பார்த்த அலுவலகத்தில் அறிமுகமாகி, நல்ல பழக்கமானாள், லதா. ஒரு நாள் அவளிடம் ஆசையாகக் கேட்டேன், ‘‘ஸ்டூடியோவுக்குப் போய் நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு போட்டோ எடுத்துக்குவோமா?’’அந்தக் காலத்தில் இப்போது போல சர்வசாதாரணமாக போட்டோ எடுத்துக் கொள்ள செல்போனோ... செல்ஃபியோ கிடையாது. அவசரமாய் மறுத்தாள், ‘‘ஐயையோ…
-
- 0 replies
- 1k views
-
-
அந்தரச் செடி - சிறுகதை விஷால் ராஜா - ஓவியங்கள்: ஸ்யாம் அலுவலகம் முடிந்து பைக்கில் வீடு திரும்பியபோது, எதிர்வீட்டு வாசலில் சிலர் கூட்டமாக நின்றிருப்பதைக் கவனித்தேன். அந்த இடத்தில் இரைச்சலோடுகூடிய பதற்றமான அசைவுகள் தெரிந்தன. எனக்கு முதலில் அக்கறைகாட்டத் தோன்றவில்லை. கூட்டத்தை விலக்கிச் சென்ற ஒருவர், கடப்பாரையால் கதவை உடைத்துத் திறக்க முயல்வதைக் கண்டதும்தான் எனக்கும் தீவிரம் உறைத்தது. பைக்கை நிறுத்திவிட்டு அங்கே சென்றேன். வாசல் தூணையொட்டி பிரமைதட்ட நின்றிருந்தார் வீட்டுக்காரர். குழப்பத்திலும் பயத்திலும் எதையோ பற்றிக்கொள்ளத் தேடுவதுபோல் அவர் கண்கள் அகல விரிந்திருந்தன. அத்தனை பெரிய ஆகிருதி கையறுநிலையில் நிற்பதைப் பார்க்கவே கூசியது. நிர்க்கதி மிகுந்து பரித…
-
- 0 replies
- 2.2k views
-
-
ஒரு நிமிடக் கதை: குறையொன்றுமில்லை டாக்டர் அழைக்க, உள்ளே நுழைந்த பகவதியம்மாவுக்கு 60 வயதுக்கு மேல் இருக்கும். “சொல்லுங்கம்மா..! இன்னைக்கு உங்களுக்கு என்ன பிரச்சினை ..?” டாக்டரின் கிண்டல் புரிந்தாலும் பொருட் படுத்தாமல், “டாக்டர்..! எனக்கு ரெண்டு நாளாவே யூரின் சரியா போகலை. நிறமும் மஞ்சளா இருக்கு. மஞ்சள் காமாலையா இருக்குமோ..?” என்றார் பகவதியம்மா. “இது வெயில் காலம்.. நிறைய தண்ணி குடிங்க.. உஷ்ணத்துக்கே யூரின் மஞ்சளாத்தான் போகும்..” என்று டாக்டர் சமாதானம் சொன்னாலும் கேட்க மாட்டார். டெஸ்ட் எடுக்கச் சொல்லி பார்த்து விட்டுத்தான் போவார். பகவதியம்மாவை ஆறு மாதமாகத்தான் டாக்டருக்கு…
-
- 0 replies
- 811 views
-
-
10 செகண்ட் கதைகள் ஓவியங்கள்: பிரேம் டாவின்ஸி பிஸி! ``மேனேஜர் ரொம்ப பிஸி. போன் பண்ணா எடுக்க மாட்டார். வாட்ஸ்அப்ல மெசேஜ் பண்ணுங்க. உடனே பதில் போடுவார்'' என்றான் ராகுல். - கே.சதீஷ் ட்ரிப் ``இந்த சம்மர் லீவுக்கு, நல்ல ஒரு ரிசார்ட்டா பார்த்துத் தங்கணும்'' என மகன் சொன்னதும் திடுக்கிட்டார் அரசியல்வாதி. - கோ.பகவான் சமாளிப்பு ``படத்துல பெருசா கண் வெச்சுக்கிட்டு, நாக்கை நீட்டிக்கிட்டு வந்துச்சுல்ல... சத்தியமா அதாண்டா பேய்!'' என்றான், பேயைக் காட்டச் சொல்லி அழுத மகனிடம். - கோ.பகவான் பாராட்டு மகன் வரைந்த பெயின்டிங்கைப் பார்த்து வாய்விட்டுப் பாராட்டாத அப்பா, அதை அவன் ஃபேஸ்புக் புரொஃபைல் போட்டோவாகப் வைத்தபோது லைக் ப…
-
- 0 replies
- 784 views
-
-
ஒரு நிமிடக் கதை: நம்பிக்கை கார் பழுதடைந்திருந்ததால், ஆட்டோவில் பயணித்தாள் சாவித்திரி. இது வரை எத்தனை கர்ப்பிணிப் பெண்களை இலவசமாக பிரசவத்திற்கு அழைத்து போயிருக்கிறாய்? ஆட்டோ டிரைவர் கோவிந்தனிடம் ஆவலோடு கேட்டாள். குறைஞ்சது இருபது பேராவது இருக்குமாம். உன்னோட மனைவி இந்த ஆட்டோவில் ஏறியிருக்காங்களா? தினமும் ஒரு ரவுண்டு வருவா கர்ப்பிணி பெண்கள் அமர்ந்த ஆட்டோவில் உட்கார்ந்தாலாவது ஒரு குழந்தை பிறக்காதாங்கற ஆதங்கம் தான் அதுக்கு காரணம். கோவிந்தனின் பதிலில் நம்பிக்கையும் ஏமாற்றமும் கலந்திருந்தது. அந்த பிரசவ ஆஸ்பத்திரியின் முன் ஆட்டோவை நிறுத்த சொல்லி தன் விஸிட்டிங் கார்டை அவனிடம் கொடுத்தாள். நீ செய்றது பெரிய தொண்டு உன் மனைவியின் நம்பிக்கை வீண் போகாமலிருக்க நீயும்.…
-
- 0 replies
- 781 views
-
-
முறிவு - சிறுகதை எம்.கோபாலகிருஷ்ணன் - ஓவியங்கள்: கோ.ராமமூர்த்தி “நான்தான் ஆஸ்பத்திரியில இருக்கும் போதே சொன்னேன்ல... `வீட்டுக்கு அழைச்சுட்டு வர்றதுக்கு முன்னாடியே பார்த்துக்க ஆள் ஏற்பாடு பண்ணிடலாம்’னு. இப்ப வந்து என்ன பண்றதுன்னு என்கிட்ட கேட்டா நான் என்ன சொல்றது? அதான் தங்கச்சிமார்க மூணுபேர் இருக்காங்கல. ஆள் மாத்தி ஆள் வந்து அவங்களே பார்த்துக்கட்டும். என்கிட்ட வந்து எதையும் கேக்காதீங்க. வேளாவேளைக்கு ஆக்கிவெக்கிறேன். வேற என்ன வேணாலும் சொல்லுங்க. செய்றேன். இதுமட்டும் என்கிட்ட கேக்காதீங்க. அவ்ளோதான்” - விஜயாவின் குரல் தணிவாக ஒலித்தது. உண்ணம்மாள் தலையைத் திருப்பி ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள். இளங்கோ அடங்கிய குரலில் பேசுவதும், விஜயா பதில் சொல்வது…
-
- 0 replies
- 3.5k views
-
-
அம்மா - சிறுகதை வழக்கறிஞர் சுமதி, ஓவியங்கள்: ம.செ., எனக்குக் கல்யாணம். மாப்பிள்ளை பிடித்திருக்கிறது. அப்பா எனக்காக ரொம்பப் பிரயத்தனப்பட்டு இந்த மாப்பிள்ளையைத் தேடிக் கண்டுபிடித்தார். நல்ல படிப்பு - பெரிய வேலை, பெரிய படிப்பு - நல்ல வேலை என்ற வழக்கமான தேடல் தளங்களுக்குப் போகாமல், நான், என் ரசனை, என் எதிர்பார்ப்பு; அதுபோலவே மாப்பிள்ளை, அவர் ஆசைகள், கற்பனைகள் எல்லாவற்றையும் அலசித் தேடிப்பார்த்து எங்கள் இருவரையும் அறிமுகப்படுத்தினார். நாங்கள் தீவிரமாக நம்பும் விஷயங்கள், எந்தக் காரணத்தைக்கொண்டும் விட்டுக்கொடுக்க முடியாத எங்கள் விருப்பங்கள் மற்றும் எங்கள் லட்சியங்களை ஒளிவு மறைவு இல்லாமல் பேசச் சொன்னார். நாங்கள் இருவரும் தேவைகளுக்கும் சந்தர்…
-
- 0 replies
- 7.5k views
-
-
இது மிஷின் யுகம் - புதுமைபித்தன் சிறுகதை நான் அன்று ஒரு முழ நீளம் பெயர்கொண்ட - ஹோட்டல்காரர்களுக்கும் நாடகக்காரர்களுக்குந்தான் வாயில் நுழையாத பெயர் வைக்க நன்றாகத் தெரியுமே - ஹோட்டலுக்குச் சென்றேன். உள்ளே எப்பொழுதும் போல் அமளி; கிளாஸ், ப்ளேட் மோதும் சப்தங்கள். 'அதைக் கொண்டுவா, இதைக் கொண்டுவா!' என்ற அதிகாரங்கள்; இடையிலே உல்லாச சம்பாஷணை; சிரிப்பு. போய் உட்கார்ந்தேன். "ஸார், என்ன வேண்டும்?" "என்ன இருக்கிறது?" என்று ஏதோ யோசனையில் கேட்டு விட்டேன். அவ்வளவுதான்! கடல்மடை திறந்ததுபோல் பக்ஷணப் பெயர்கள் செவித் தொளைகளைத் தகர்த்தன. "சரி, சரி, ஒரு ப்ளேட் பூரி கிழங…
-
- 0 replies
- 2.3k views
-
-
ஒரு கப் காப்பி - இந்திரா பார்த்தசாரதி ராஜப்பா திடீரென எழுந்து உட்கார்ந்தான். அவன் உடம்பு வியர்வையினால் நனைந்திருந்தது. பக்கத்தில் இருந்த பழுப்பேறிய சாயத் துண்டினால் முதுகைத் துடைத்துக்கொண்டான். என்ன விசித்திரமான சொப்பனம். ’வனாந்திரமான இடம். பாம்புப் புற்று போல் ஓங்கி வளர்ந்திருந்த மண்மேடிட்ட பெரிய குகைகள். அவன் தனியாக அந்தப் பிரதேசத்தின் வழியாகப் போய்க் கொண்டிருக்கிறான். அங்கு நிலவிய நிசப்தம் ஒரு பாரமாகச் சூழ்ந்து அவன் நெஞ்சை அழுத்தியது. குகைகளிலிருந்து பாம்புகள் புறப்பட்டுத் தன்னைத் தாக்க வருமோ என்ற பயம் அவனை வேகமாக நடக்கத் தூண்டியது. குகைகளில் பாம்பு இல்லை. திடீரென்று அவற்றிலிருந்து கூட்டம் கூட்டமாக ஜனங்கள் வெளியே வந்தார்கள். அனைவரும் முடவ…
-
- 1 reply
- 1.5k views
-
-
பச்சைக் கனவு - லா.ச.ராமாமிர்தம் முதுகு பச்சையாய்க் கன்றிப் போகக் காயும் வெய்யிலில் முற்றத்தில் உட்கார்ந்துகொண்டு நேற்றிரவு கண்ட கனவை மறுபடியும் நினைவில் எழுப்ப முயன்றான். கனவற்ற தூக்கமே என்றுமில்லை. எனினும் விடிந்ததும் அக்கனவுகள் மறந்துவிடும். ஆயினும் நேற்றிரவு கண்ட கனவு அப்படியல்ல. பச்சைக் கனவு. உடல் மேல் உரோமம் அடர்ந்தது போன்று, பசும் புற்றரை போர்த்து நின்ற நான்கு மண் குன்றுகள். அவை நடுவில் தாமரை இலைகளும் கொடிகளும் நெருங்கிப் படர்ந்த ஒரு குளம், சில்லிட்ட தண்ணீரில் காலை நனைத்துக் கொண்டு அண்ணாந்து படுத்திருந்தான். கைக்கெட்டிய தூரத்தில் பச்சைக் கத்தாழையும் அதன் பக்கத்தில் சப்பாத்திப் புதரும், மேல், ஒரு பச்சை வண்டு ரீங்காரித்துக் கொண்டே வந்து …
-
- 2 replies
- 1.7k views
-