Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. இவரைப் போய் அடுத்த டெண்டுல்கர்னு சொல்லிட்டாரே ரமீஸ் ராஜா! பெங்களூரு: ரசிகர்களைப் பொறுத்தவரை, நீங்கதான் அடுத்த சச்சின் டெண்டுல்கர்... இது பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா விராத் கோஹ்லியைப் பார்த்துக் கூறிய வார்த்தை... நடப்பு உலகக் கோப்பைப் போட்டி ஒன்றின் இறுதியில், கோஹ்லியிடம் இப்படிக் கூறியிருந்தார் ரமீஸ். ஆனால் இவரைப் போய் அடுத்த சச்சின் என்று சொல்லி விட்டாரே என்று முகம் சுளிப்பது போலத்தான் நடந்து வருகிறார் கோஹ்லி. எதுக்கெடுத்தாலும் கோபம், முரட்டுத்தனம், சண்டையில் இறங்குவது என்று கோஹ்லியைப் பற்றி புகார் வராத நாளே இல்லை என்பது போல அடாவடியாக நடந்து வருவது கோஹ்லியின் குணாதிசயமாக மாறியுள்ளது. உண்மையில் கோஹ்லி இன்னும் பக்குவப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். வரு…

  2. இவானோவிக் அதிர்ச்சி தோல்வி கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அவுஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நேற்று காலை ஆரம்பமானது. இதில் உலகின் 5ஆம் நிலை வீராங்கனையான அனா இவானோவிக் (செர்பியா) ஆரம்ப சுற்றிலேயே அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார். செக் குடியரசுவைச் சேர்ந்த லூசி 1-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் இவானோவிக்கை வீழ்த்தினார். 3ஆம் நிலை வீராங்கனையான ஹிமோனா ஹெலப் (ருமேனியா) 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் இத்தாலி வீராங்கனை கர்னை வீழ்த்தி 2ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றார். இதேவேளை இந்திய வீரர் யூசிபாம்ப்ரி முதல் சுற்றிலேயே வெளியேறினார். 6ஆம் நிலை வீரர் ஹெண்டி முர்ரே (இங்கிலாந்து) 6-3, 6-4, 7-6 (7-3) என்ற நேர்செட் கணக்கில் பாம்பரியை வீழ்த்தினார். http:/…

  3. இவ்வாண்டின் முதலாவது டெஸ்ட் போட்டி நாளை ஆரம்பம் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையில் நாளை ஆரம்பமாகும் 2 ஆவது டெஸ்ட் போட்டி இவ்வாண்டின் முதலாவது டெஸ்ட் போட்டியாக கிரிக்கெட் நாட்காட்டியில் இடம்பெறவுள்ளது. இப் போட்டி நாளை 3 ஆம் திகதி சனிக்கிழமை நியூசிலாந்தின் வெலிங்டனில் ஆரம்பமாகவுள்ளது. அஞ்சலோ மெத்தியூஸ் தலைமையில் இலங்கை அணியில் கௌஷால் சில்வா, திமுத்து கருணாரத்ன, குமார் சங்கக்காரஈ லஹிரு திரிமன்னே, நிரோஷன் திக்வெல்ல, பிரசன்ன ஜயவர்தன, தரிந்து கௌஷால், தம்மிக்க பிரசாத், எரங்க, சுரங்க லக்மால், துஷ்மந்த சமீர, தினேஷ் சந்திமல், நுவன் பிரதீப் மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோர் இப்போட்டியில் களமிறங்கவுள்ளனர். நியூசிலாந்து அணியில் பிரட்டன் மெக்கலம்- டொம் லெதம்- ஹமீஷ் ருத…

  4. இஷான் கிஷன்: ரோஹித்துக்கு பதில் களமிறங்கி இரட்டை சதம் விளாசிய இளம் புயல் கட்டுரை தகவல் எழுதியவர்,அஷ்ஃபாக் பதவி,பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES புலி 8 அடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும் என்பார்கள். அப்படித்தான் இன்றைய ஒருநாள் ஆட்டத்தில் நடந்திருக்கிறது. ரோஹித் சர்மாவுக்கு கையில் காயம். அவருக்கு பதிலாக மாற்று வீரர் ஒருவரை களமிறக்க வேண்டும். வெறும் 10க்கும் குறைவான ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ள இஷான் கிஷன் ரோஹித்துக்கு பதிலாக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க தேர்வானார். அதற்கு பின்னர் நடந்த அதிரடிகள் தனிக்கதை. …

  5. ஈடன் கார்டனில் கபிலுடன் விளம்பர ஷூட்: பிட்சை ஆர்வத்துடன் பார்வையிட்ட தோனி ஈடன் கார்டன்ஸில் கபில்தேவ், தோனி. - படம். | பிடிஐ. டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும் டெஸ்ட் மீதான ஆர்வத்தை காட்டும் விதமாக தோனி, இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் நடைபெறும் கொல்கத்தா ஈடன் கார்டன் பிட்சை ஆர்வத்துடன் பார்வையிட்டார். கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கபில்தேவுடன் விளம்பர படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்ட தோனி பிட்ச் பராமரிப்பாளர் சுஜன் முகர்ஜியிடம் பேசினார். பிட்ச் தயாரிப்பை தோனி பாராட்டியதாக முகர்ஜி பிற்பாடு தெரிவித்தார். ஷூட்டிங் தேவைகளுக்காக தோனியும் கபில…

  6. ஈடன் கார்டனில் மணியடிக்கும் கபில்தேவ்: டாஸ் போடுவதற்கு தங்க நாணயம் கொல்கத்தாவில் நடைபெற உள்ள நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் மணியடித்து தொடங்கி வைக்கிறார். இந்தியா-நியூஸிலாந்து அணிகள் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வரும் 30-ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது. இந்தப் போட்டி இந்திய அணி தனது சொந்த மண்ணில் விளையாடும் 250-வது ஆட்டமாகும். இதை யொட்டி இரு அணிகளை கவுரவிக்கவும் பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதுதவிர போட்டியை பாரம் பரிய லார்ட்ஸ் மைதானம் போல மணியடித்து தொடங்கவும் திட்ட மிடப்பட்டுள்ளது. போட்டி தினத் தன்று காலை கபில்தேவ், சிறப்பாக வ…

  7. ஈடன் கார்டன் என்னும் கிரிக்கெட்டின் சொர்க்கபுரியில் நடந்த 10 சுவாரஸ்ய நிகழ்வுகள்! கடந்த 2011ம் ஆண்டு உலகக்கோப்பையை இந்தியா வான்கடே மைதானத்தில் வென்றது. அதற்கடுத்து 2016ம் ஆண்டில் இந்தியாவில் உலகக்கோப்பை டி20 போட்டி நடைபெறவுள்ளது. அதன் இறுதி போட்டிக்கான மைதனாத்தையும் மற்ற மைதானங்களையும் ஐசிசி அறிவித்தது. இறுதி போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் ஆட்டம் நடைபெறும் மைதானங்கள் எப்போதுமே கிரிக்கெட் ரசிகர்களோடு ஒரு உணர்வுப்பூர்வமான தொடர்பை ஏற்படுத்தி இருக்கும். அப்படிபட்ட மைதானங்களில் ஒன்றுதான் ஈடன் கார்டன் மைதானம். இந்தியாவின் மிகச்சிறந்த ஆடுகளங்களில் இதுவும் ஒன்று. 1864 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இந்த மைதானம், இன்று 150 ஆண்டுகள…

  8. ஈடன் கார்டன் மைதானத்துக்கு ஸ்டீவ் வாஹ் புகழாரம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானம் இந்திய துணைக் கண்டத்தின் லார்ட்ஸ் என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாஹ் புகழாரம் சூட்டி யுள்ளார். இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானம் கிரிக்கெட் டின் மெக்காவாகத் திகழ்கிறது. இந்த நிலையில் அந்த மைதானத்தோடு ஈடன் கார்டனை ஒப்பிட்டுள்ள ஸ்டீவ் வாஹ், “இந்தியாவில் நான் கடைசியாக சுற்றுப்பயணம் மேற் கொண்ட தொடரில் ஈடன் கார்டனில் விளையாடியபோது 5 நாட்களுமே 90 ஆயிரம் இருக்கைகள் கொண்ட அந்த மைதானம் நிரம்பி வழிந்தது. அந்த மைதானம் இந்திய துணைக் கண்டத்தின் லார்ட்ஸ் என்பதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கு அது மிகவும் வியப்பான மைதானம் ஆகும். அங்கு சதமடித்த நான் அதிர்ஷ்…

  9. ஈழத்தமிழன் துளசி தர்மலிங்கம் ரியோ ஒலிம்பிக்கில்..போட்டியில் வென்று பதக்கம் பெற்று வர உலகத்தமிழர்கள் வாழ்த்துகின்றோம். தனது 18வது வயதில் யேர்மனியின் குத்துச்சண்டை மேடைகளில் தோன்றிய துளசி தருமலிங்கம் இன்று கட்டார் நாட்டுக்காக விளையாடுகிறார். இலங்கையில் பருத்தித்துறை பிரதேசத்தில் உள்ள புலோலியைச் சேர்ந்த நளினி, தருமலிங்கம் தம்பதிகளின் மகனான துளசி(மாறன்) தர்மலிங்கம் கடந்த ஆண்டுவரை 120 குத்துச்சண்டை போட்டிகளில் பங்குபற்றி இருக்கின்றார். அதில் 75 வெற்றிகள், 6 சமநிலை கண்டிருக்கின்றார். உலகத்தரத்ததில் நடந்த போட்டியில் கால் இறுதிப் போட்டியை எட்ட முடியாவிட்டாலும், ஏழுமுறை நகரச்சுற்று வட்டத்திலும், ஆறு முறை நிடர்சாக்சன் (Nidersachsen) மாநிலத்தில் சம்பியனாகவும், ஒரு தடவை…

  10. ஈழத்தமிழ் இளைஞர்கள் மூவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இம் மாதம் 14 ஆம் திகதி நியூசிலாந்தில் நடைபெறவுள்ள 19 வயதிற்கு உட்பட்ட உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற ஈழத்தமிழர்கள் தாங்கள் வாழும் நாடுகளில் பல்வேறு துறைகளிலும் சாதனைகளை ஈட்டி தாய் நாட்டிற்கு பெருமை தேடிக்கொடுத்துவருகின்றார்கள். 19 வயதுக்கு உட்பட்ட உலகக்கிண்ணப் போட்டியில் கனடாவில் வசிக்கின்ற ஈழத்தமிழர் இளைஞர்கள் மூவர் கனேடிய அணி சார்பில் போட்டியில் ஈடுபட இருக்கின்றனர். காவியன் நரேஸ், சாமுவேல் கிரிசான் மற்றும் ஏரன் பத்மநாதன் ஆகிய மூன்று வீரர்களுமே களமிறங்கவுள்ளனர்.காவியன் நரேஸ் சிறந்த துடுப்பாட்ட வீரனாகவும் சாமுவேல் கிரிசான் சிறந்த சுழல் பந்து வீச்சாளராகவு…

  11. உங்களது சொந்த இன்னல்களில் திசரவை பாருங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கும் தனது எடை பற்றி பிரித்தானிய பத்திரிகைகள் நையாண்டியாக குறிப்பிட்டபோது, அன்ட்ரூ பிளிண்டொப் தனது சந்தர்ப்பம் வந்ததும் அதற்கு சரியான பதிலடி கொடுத்தார். இது இன்னல்களின்போது எப்படி முகம் கொடுப்பது என்று சகலதுறை வீரர்களுக்கு பாடம் கற்பித்து கொடுப்பது போல இருந்தது. 2001 ஆம் ஆண்டு குளிர்கால சுற்றுப் பயணத்தின்போது கிறிஸ்ட்சர்ச்சில் (Christchurch) 137 ஓட்டங்களை விளாசிய பிளின்டொப், தான் இங்கிலாந்தின் மிகச் சிறந்த சகலதுறை வீரரான செர் இயன் பொத்தமுடன் ஒப்பிட்டு பேசப்படுவதை கண்டார். அப்போது, ‘எடை அதிகரித்திருப்பதை மோசமாக கருதவில்லை’ என்று அவர் பிரித்தானிய பத்திரிகைகளுக்கு பதிலடியாக குறிப…

  12. தற்போது 18 வயதான இவரது சொந்த வாழ்க்கை மிகவும் சோகத்துக்கு உரியது. எந்த உதவியும் இல்லாமல் கடின உழைப்பு ஒன்றை மட்டுமே நம்பி இருந்த அவருக்கு இன்று வெற்றி தேவதையி்ன் கருணை பார்வை கிடைத்துள்ளது. http://vethuveettu.blogspot.com/2009/04/blog-post_7792.html

  13. உங்கள் ஆறுதல்களும் ஆதரவுகளும் என்னை மிகவும் எளியவனாக்கி விட்டது: ஸ்டீவ் ஸ்மித் நெகிழ்ச்சி ஸ்டீவ் ஸ்மித். - கோப்புப் படம். | ஏ.பி. பந்தைச் சேதப்படுத்தல் சர்ச்சையில் சிக்கி 12 மாதங்கள் தடைபெற்ற ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தற்போது ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பிய நிலையில் இன்ஸ்டாகிராமில் உற்சாக ட்வீட் செய்துள்ளார். தற்போது தான் செய்த தவறுகள், ஆஸ்திரேலிய மக்கள் தன் மீது அடைந்துள்ள கோபம், ஆதரவு என்று அனைத்துக்கும் பதில் அளித்து பதிவிட்டுள்ளார் ஸ்டீவ் ஸ்மித். “எனக்கு வந்த இ-மெயில்கள், கடிதங்கள், ஆதரவுக்குரல்கள் நம்ப முடியவில்லை. இந்த ஆதரவுக்குரல்கள், ஆறுதல்கள் என்னை எளிய மனிதனாக்கி …

  14. உங்கள் நாட்டில் பிட்ச் பற்றி நாங்கள் கேள்வி கேட்க மாட்டோம்; எங்கள் நாட்டில் நீங்களும் கேட்காதீர்கள்: ரவி சாஸ்திரி படம்.|கெட்டி இமேஜஸ். நடப்பு இந்திய அணி பிட்ச்கள், தட்பவெப்பம் பற்றி புகார்களையும், சாக்குபோக்குகளையும் கூறும் அணியல்ல, அதில் எங்களுக்கு நம்பிக்கையில்லை என்று இந்திய அணி தலைமைப் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்தார். செம்ஸ்போர்டில் 3 நாள் பயிற்சி ஆட்டத்துக்கு முன்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: எனது கொள்கை எளிமையானது. உங்கள் நாட்டில் நாங்கள் பிட்ச் பற்றி கேள்விகள் கேட்கமாட்டோம், எங்கள் நாட்டில் நீங்களும் கேட்காதீர்கள் என்பதே. இந்தத் தொடரில் ஒரு விஷயத…

  15. உங்கள் பொன்னான வாக்குகளை அவுஸ்திரேலியாவுக்கு போடுங்கள் http://news.bbc.co.uk/sport2/hi/cricket/6599659.stm

  16. உசேன் போல்ட் மீண்டும் சாம்பியன் : இடுப்பு வலி சிறுத்தையின் வேகத்தை குறைக்கவில்லை ! சீனாவில் நடைபெற்று வரும் உலகத் தடகளப் போட்டியில் 100 மீட்டர் ஓட்டத்தில் ஜமைக்கா வீரர் உசேன் போல்ட் மீண்டும் தங்கம் வென்றார். சீனாவின் பெய்ஜிங் நகரில் 15வது உலகத் தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 100 மீட்டர் ஓட்டத்தில் ஜமைக்காவின் உசேன் போல்ட், அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லினுக்கிடையே கடும் போட்டி நிலவியது. எனினும் பந்தய தலைவை 9.79 வினாடிகளில் கடந்து உசேன் போல்ட் மீண்டும் சாம்பியன் ஆனார். கடந்த சில மாதங்களாக உசேன் போல்ட் இடுப்பு வலியால் அவதிப்பட்டு வந்தார். இதனால் 100 மீட்டர் ஓட்டத்தை 10 வினாடிகளுக்குள் அவர் கடந்து விடுவாரா? என்ற கேள்வி அவரது ரசிகர்களுக்…

  17. உசேன் போல்ட்டை கீழே தள்ளிவிட்ட கேமராமேன் (வீடியோ): பெய்ஜிங் அதிர்ச்சி சம்பவம் சீனாவின் பெய்ஜிங் நகரில் உலகத் தடகளப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. 100 மீட்டர் ஓட்டத்தில் உசேன் போல்ட் 9.79 வினாடிகளில் கடந்து சாம்பியன் ஆனார். இந்நிலையில் 200 மீட்டர் ஓட்டத்திலும் தங்கம் வென்றார். வெற்றி உற்சாகத்தில் மைதானத்தில் குழுமி இருந்த ரசிகர்களுக்கு கைகொடுத்த வண்ணம் போல்ட் வந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்வை படம் பிடித்த டி.வி. கேமராமேன் ஒருவர் தவறுதலாக பின்பக்கத்தில் போல்ட் மீது மோதிவிட்டார். இதில் நிலைதடுமாறிய போல்ட் தலைகுப்புற கீழே விழுந்தார். ஆனாலும் தனது ஸ்டைலில் 'டைவ்' அடித்து எழுந்த உசேன் போல்ட், மீண்டும் சாதாரணமாக ரசிகர்களின் வாழ்த்துக்களை பெற்று சென்றார். http://www.vik…

  18. இந்தியாவின் உசைன்போல்ட் என வர்ணிக்கப்படும் கர்நாடகாவின் எருதுகளுடன் ஓடும் ஓட்டப்பந்தய வீரர்சிறீனிவாஸ் கௌடா, தேசிய போட்டிகளில் கலந்துகொள்ளுமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோள்களை நிராகரித்துள்ளார். கம்பாலா என அழைக்கப்படும்  வயலிற்கு நடுவில் இரண்டு எருதுகளுடன் 142 மீற்றர் ஒடும்போட்டியில் சிறீனிவாஸ் கௌடா கலந்துகொண்டு சாதனை நிகழ்த்தியிருந்தார். 28 வயது கௌடா துடிப்பாக செயற்பட்டு முதல் 100 மீற்றரை 9.55 வினாடியில் கடந்தார். மொத்த தூரத்தை இவர் 13.62 வினாடிகளில் கடந்தார் இதேவேளை இவர் உசைன் போல்டின் உலக சாதனையையும் முறியடித்தார் இதன் காரணமாகஇவரை இந்திய ஊடகங்கள்இந்திய உசைன் போல்ட்என கொண்டாடுகின்றன. கௌடாவின் வெற்றி சமூக ஊடகங்கள் மூலமாகவும் ஊடகங்கள் மூலமாகவு…

  19. மின்னல் வேகத்தில் ஓடி ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கங்களை அள்ளிய உசைன் போல்ட் காதலியை ஏமாற்றிவிட்டு, பிளே போய் போல பிற பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. ரியோ ஓலிம்பிக்கில் 4x100 மீற்றர் ஓட்டப்பந்தையத்தில் தங்கம் வென்ற ஜமைக்காவின் உசைன் போல்ட், அதற்கு அடுத்த நாளான ஞாயிற்றுக்கிழமை தனது 30 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். அந்த கொண்டாட்டத்தின்போது பெண் ஒருவருடன் உசைன் போல்ட், ஆபாச நடனம் ஆடிய வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதற்கு மறுநாளே மற்றொரு பெண்ணுடன் படுக்கையில் மிகவும் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியானது. பெண்ணின் கன்னத்தில் உசைன் போல்ட் முத…

  20. உசைன் போல்ட்டின் வேகம் குறைகிறது? உசைன் போல்ட் 200 மீ ஓட்டத்தில் 20.29 விநாடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்த பிறகு. | படம்: ராய்ட்டர்ஸ். 200 மீ ஓட்டத்தில் 20.29 விநாடிகள் எடுத்துக் கொண்டது தன் வாழ்நாளின் மோசமான ஓட்டமே என்று கூறுகிறார் உசைன் போல்ட் 100 மீ, 200 மீ உலக சாதனைகளை தன் வசம் வைத்துள்ள ஜமைக்க அதிவேக ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட், ராண்டல் தீவில் நடைபெற்ற கிராண்ட் ப்ரீ 200 மீ ஓட்டத்தில் 20.29 விநாடிகளில் இலக்கை எட்டி வெற்றி பெற்றார். 6 முறை ஒலிம்பிக் தங்கம் வென்ற அதிவேக வீரரான உசைன் போல்ட்டின் 200 மீ உலக சாதனை 19.19 விநாடிகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அடிடாஸ் கிராண்ட் ப்ரீ 200 மீ ஓட்டத்தில் உசைன் போல்ட் 20.29 விநாடிகள் எடுத்துக் கொண்டுள்ளார்.…

  21. உடற் தகுதியை நிரூபித்து காட்டிய நுவன் குலசேகர, லசித் மாலிங்க விளையாட்டுத்துறை அமைச்சரின் வேண்டுக்கோளுக்கு இணங்க பயிற்சிக்குட்படுத்தப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கு நடத்தப்பட்ட 20 மீற்றர் ஓட்டப்போட்டியில், முதல் இடங்களை அணியின் சிரேஷ்ட வீரர்களான நுவன் குலசேகர மற்றும் லசித் மாலிங்க பெற்றுள்ளனர். சிம்பாப்வே மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரை கருத்திற் கொண்டு 30 பேர் கொண்ட பயிற்சிக் குழாமொன்றை இலங்கை கிரிக்கெட் சபை ஆரம்பித்துள்ளது. ஐ.சி.…

  22. உடற்தகுதி குறித்து கேள்வி எழுப்பிய திலிப் வெங்சர்க்காருக்கு டோனி பதிலடி நீண்ட நாட்கள் விளையாடாமல் இருக்கும் டோனியின் உடற்தகுதி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு டோனி பதிலடி கொடுத்துள்ளார். இந்திய அணியின் தலைசிறந்த கேப்டனாக திகழ்ந்தவர் மகேந்திர சிங் டோனி. இவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று வி்ட்டார். இதனால் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். இதனால் அவருக்கு அதிக அளவில் ஓய்வு கிடைக்கிறது. இந்த ஓய்வு நேரத்தில் உள்ளூர் தொடர்களில் அவர் விளையாடுவதில்லை. இதனால் ஓய்வை கழித…

  23. உடற்பயிற்சியும், உபாதையும் விளையாட்டில் எவ்வாறு தாக்கம் செலுத்தும்? அண்மைக்காலமாக இலங்கை கிரிக்கெட் அணி மிக மோசமான சரிவுப் பாதையில் பயணிக்கின்றமை யாவரும் அறிந்த உண்மை. அத்தகைய வீழ்ச்சிக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் வீரர்களின் தொடர்ச்சியான உபாதைகளினால் ஒரு நிலையான அணியை தெரிவு செய்ய முடியாமல் போனமையும் ஒரு முக்கிய காரணம் என்பது நிதர்சன உண்மையாகும். பொதுவாக உலக விளையாட்டு அரங்கினை நோக்கும்போது அவ்விளையாட்டுக்களில் ஜாம்பவான்களாக கொடி கட்டிப் பறந்த மற்றும் பறக்கின்ற பல வீரர்களை நோக்கினால், அவர்கள் உடல் உபாதைகளுக்கு உள்ளாகும் வீதம் மிக மிகக் குறைவு. அதற்கு உதாரணங்களாக இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் விராத் கோஹ்லி, கால்பந்து உலக…

  24. உடல் எடையை குறைப்­ப­தற்­காக ஓட ஆரம்­பித்­தவர் 24 மணித்­தி­யா­லங்­களில் 319 கி.மீ. ஓடி உலக சாதனை By VISHNU 26 SEP, 2022 | 01:00 PM லித்­து­வே­னி­யாவைச் சேர்ந்த ஓட்ட வீரர் அலெக்­ஸாண்டர் சோரோகின், 24 மணித்­தி­யா­லங்­களில் 319.6 கிலோ­மீற்றர் தூரம் ஓடி புதிய உலக சாதனை படைத்­துள்ளார். 41 வய­தான சோரோகின் சானியா எனும் பெய­ரிலும் அழைக்­கப்­ப­டு­கிறார். 24 மணித்­தி­யா­லங்­களில் அதிக தூரம் ஓடும் ஐரோப்­பிய சம்­பி­யன்ஷிப் போட்டி இத்­தா­லியின் வெரோனா நகரில் அண்­மையில் நடை­பெற்­றது. இப்­போட்­டியில் 319.6 கிலோ­மீற்றர் ஓடிய சோரோகின், முத­லிடம் பெற்­ற­துடன் புதிய உலக சாதனை படைத்தார். சரா­ச­ரி­யாக மணித்­தி­யா­லத்­துக்கு …

  25. சிங்கப்பூரின் உடல் கட்டழகர் பிரதீப் சுப்ரமணியம், முய் தாய் (Muay Thai) எனும் குத்துச்சண்டைப் போட்டியின் போது மரணமடைந்தமை இயற்கையானதே என்று அரசாங்கத் தரப்பு மரண விசாரணையில் உறுதியாகியுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் திகதி இடம்பெற்ற குத்துச் சண்டைப் போட்டியில் 32 வயதான பிரதீப் சுப்ரமணியம் கலந்துகொண்டார். இந்நிலையில், குறித்த போட்டியில் 41 வயது ஸ்டீவன் லிம்முடன் போட்டியிட்டார். போட்டி இடம்பெறுவதற்கு முன்னர் நடைபெற்ற வைத்தியப் பரிசோதனைகளில் பிரதீப்பின் உடல்நிலை சீராக இருந்தது, அதில் எந்தக் குறையும் இல்லை என்பதை வைத்தியர்கள் உறுதி செய்தனர். அத்துடன், தமக்கு உடல் ரீதியாக எந்தப் பாதிப்பும் இல்லை என்று உறுதியளித்த பின்னரே, பிரதீப் போட்டியில் கலந…

    • 0 replies
    • 1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.