Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. ஐ.சி.சி. டெஸ்ட் அணியில் இடம்பிடித்த ரங்கன ஹேரத் சர்வதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள 2016 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி. டெஸ்ட் அணியில் இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் இடம்பிடித்துள்ளார். ஆண்டுக்கு ஒருமுறை ஐ.சி.சி. டெஸ்ட் அணி அறிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் இந்த வருடம் அறிவி்க்கப்பட்டுள்ள ஐ.சி.சி. டெஸ்ட் அணியில் இலங்கை அணியைச் சேர்ந்த ரங்கன ஹேரத் மற்றும் இந்திய அணியைச் சேர்ந்த அஸ்வின் ஆகியோர் சுழற்பந்துவீச்சாளர்களாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஐ.சி.சி.டெஸ்ட் அணியின் தலைவரான இங்கிலாந்து அணியின் டெஸ்ட் தலைவர் அலஸ்ரியா குக் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஐ.சி.சி. தெரிவுசெய்துள்ள 2…

  2. ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை: டாப்-10-ல் இந்திய வீரர்கள் இல்லை ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் இந்திய வீரர்கள் ஒருவர் கூட முதல் 10 சிறந்த வீரர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை. டேவிட் வார்னர், யூனிஸ் கான் ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர். இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் கண்ட முதல் பாகிஸ்தான் வீரர் யூனிஸ் கான் 4 இடங்கள் முன்னேறி 7-வது இடம் பிடித்துள்ளார். தோல்வி கண்ட ஆஸ்திரேலிய அணியின் ஒரே சிறந்த பேட்ஸ்மென் டேவிட் வார்னர் 4-ஆம் இடத்திற்கு முதல் முறையாக முன்னேறியுள்ளார். டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் இலங்கை வீரர் சங்கக்காரா தொடர்ந்து முதலிடம் வகிக்கிறார். டிவிலியர்ஸ், சந்தர்பால், வார்னர், அஞ்சேலோ மேத்யூஸ், ஹசிம் ஆம்லா, யூனிஸ் கான், ராஸ் டெய்லர், ஜோ ரூட், …

  3. ஐ.சி.சி. தரப்படுத்தல் : இருவகை போட்டிகளிலும் ஆஸி முதலிடம் Thu, 05/01/2014 - 16:37 ஐ.சி.சியின் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் அவுஸ்திரேலிய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. 5 ஆண்டுக்கு பிறகு அவுஸ்திரேலிய அணி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்துக்கு வந்துள்ளது. அதேபோல் ஒருநாள் போட்டியிலும் அவுஸ்திரேலிய அணி முதல் இடத்தை தக்க வைத்துள்ளது. டெஸ்ட் தர வரிசையில் தென்னாபிரிக்கா 2ஆவது இடத்திலும், இங்கிலாந்து 3ஆவது இடத்திலும் உள்ளன. பாகிஸ்தான் அணி 4ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. 3ஆவது இடத்தில் இருந்த இந்திய அணி 2 இடங்கள் பின்தள்ளி 5ஆவது இடத்தில் உள்ளது. இலங்கை அணி 7 ஆவது இடத்திலுள்ளது. ஒருநாள் போட்டி தரவரிசையில் இந்திய அணி 2ஆவது இடத்திலுள…

  4. ‍ஐ.சி.சி. தலைமை நிர்வாக அதிகாரி மனு சாவ்னி பதவி நீக்கம் சர்வதேச கிரிக்கெட் நிர்வாகம், மனு சாவ்னியை உடன் அமுலாகும் வகையில் தலைமை நிர்வாக அதிகாரி பதவியிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது. ஐ.சி.சி தலைவர் கிரெக் பார்க்லே தலைமையில் வியாழக்கிழமை நடந்த அவசர கூட்டத்தில் வாரியம் இந்த முடிவை எடுத்தது. இந்த முடிவு முறையான வாக்கெடுப்புக்கு முன்வைக்கப்படவில்லை, ஆனால் குழுவில் உள்ள எந்தவொரு பணிப்பாளரும் இதற்கு ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்றும் நம்பப்படுகிறது. இதற்கிடையில், ஐ.சி.சி வாரியத்துடன் நெருக்கமாக பணியாற்றும் தலைமைக் குழுவின் ஆதரவுடன் செயல்படும் தலைமை நிர்வாக அதிகாரியாக ஜெஃப் அலார்டிஸ் கடமைகளை பெறுப்பேற்பார் என்றும் ஐ.சி.சி. கூறியுள்ளது. சக ஊழியர்களுட…

  5. இங்கிலாந்து முதலிடம் ; இலங்கை எட்டாமிடம் ஐ.சி.சி. ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் புள்ளிகள் அடிப்படையில் முதல் இடங்களை பிடித்த அணிகள், பந்து வீச்சாளர், துடுப்பாட்ட வீரர் மற்றும் சகலதுறை ஆட்டக்காரர்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது. 12 ஆவது சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரானது நிறைவடைந்துள்ள நிலையிலேயே மேற்படி பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் 125 புள்ளிகளுடன் இங்கிலாந்து அணி முதலில் இடத்திலும், துடுப்பாட்டத்தில் 886 புள்ளிகளுடன் விராட் கோலியும், பந்து வீச்சில் 809 புள்ளிகளுடன் பும்ரா முதலாவது இடத்திலும் உள்ளனர். * ஒருநாள் அணிப் பட்டியில் : 1. இங்கிலாந்து - 125 2. இந்தியா - 122 3. நியூஸிலாந்து - 122…

    • 0 replies
    • 560 views
  6. ஐ.சி.சி. மனநிலை குறித்து அயர்லாந்து கேப்டன் போர்ட்டர்பீல்ட் வருத்தம் 2019 உலகக்கோப்பை போட்டிகளுக்கு 10 டாப் அணிகள் மட்டுமே விளையாடுமாறு செய்யும் ஐசிசி திட்டத்தின் மீது பரவலான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் அயர்லாந்து கேப்டன் போர்ட்டர்ஃபீல்ட் ஐசிசி நிர்வாகிகளின் மனநிலை பற்றி மிகுந்த வருத்தம் தெரிவித்துள்ளார். அசோசியேட் அணிகளுக்கான வாய்ப்புகள் ஏற்கெனவே குறைக்கப்பட்டு வரும் நிலையில் உலகக்கோப்பை, ஐசிசி போட்டிகளில் மட்டுமே அந்த அணிகள் ஆடி வருகின்றன. தற்போது அதிலிருந்தும் இந்த வளரும் அணிகளை கழற்றி விடும் முடிவு குறித்து போர்ட்டர்ஃபீல்ட் கூறும்போது, "வெறும் டாப் 10 அணிகளுக்கு மட்டுமே நடத்தப்பட்டால் அதனை உலகக்கோப்பை என்று அழைக்க முடியாது. எப்போதும் …

  7. ஐ.சி.சி. யின் உலக அணி அறிவிப்பு : சங்காவும் இடம்பிடிப்பு 2015 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் கனவு அணியை ஐ.சி.சி இன்று அறிவித்துள்ள அதேவேளை, இலங்கை அணியின் நட்சத்திரம் குமார் சங்கக்காரவும் உலகக் கிண்ண அணியில் இடம்பிடித்துள்ளார். உலகக் கிண்ண கிரிக்கெட் அணிக்கு நியூசிலாந்து அணியின் தலைவர் பிரண்டன் மெக்குலம் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 44 நாட்களாக இடம்பெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணியை மூலைக்கல்லாக நின்று வழிநடத்திய மெக்குலம் 4 அரைச்சதங்களை பெற்றதுடன் 328 ஓட்டங்களை குவித்துள்ளார். ஐ.சி.சி. யின் கனவு அணியில் நியூசிலாந்து அணி வீரர்கள் ஐவரும் அவுஸ்திரேலிய அணி வீரர்கள் மூவரும் தென்னாபிரிக்க வீரர்கள் இருவரும் இலங்கை வீரர் ஒருவ…

  8. ஐ.சி.சி. யின் டெஸ்ட் அணித் தலைவராக மெத்தியூஸ் நடப்பாண்டுக்கான ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளை ஐ.சி.சி. இன்று அறிவித்துள்ளது. டுபாயில் அமைந்துள்ள ஐ.சி.சி.யின் தலைமையகத்தில் வைத்து ஐ.சி.சி.யின் தலைவரும் இந்திய அணியின் முன்னாள் தலைவருமான அனில் கும்ளே இதனை தெரிவித்தார். அந்தவகையில் டெஸ்ட் அணித் தலைவராக இலங்கை அணித் தலைவர் ஏஞ்சலோ மெத்தியூஸ{ம் ஒருநாள் அணித் தலைவராக இந்திய அணித் தலைவர் மகேந்திர சிங் டோனியும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அணித் தலைவர் உட்பட குமார் சங்கக்கார, ரங்கன ஹேரத் ஆகிய மூவர் இலங்கை அணி சார்பாக டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ளதுடன் ஒருநாள் அணியில் அஜந்த மெண்டிஸ் மாத்திரம் இடம்பெற்றுள்ளார். இதேவேளை, கடந்த 2006 ஆம்ஆண்டு முதல் 7 முறை ஐ.சி.சி.யின் டெஸ்ட் அணியில…

  9. ஐ.சி.சி. வருமானம் பகிர்வு: இந்தியாவிற்கு 405 மில்லியன் டாலர்: இங்கிலாந்துக்கு 139 மில்லியன் ஐ.சி.சி. வருமானம் பகிர்வில் இந்தியாவிற்கு 405 மில்லியன் டாலர் கிடைக்க இருக்கிறது. இங்கிலாந்துக்கு 139 மில்லியன் கொடுக்க ஐ.சி.சி. சம்மதம் தெரிவித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் வாரியம் நடத்தும் தொடர் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் கிடைக்கிறது. இந்த வருமானங்கள் அனைத்து நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கும் பிரித்து கொடுக்கப்படும். இதில் இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்கள் அதிக அளவில் வருமானம் பகிர்வு பெற்றிருந்தது. இதற்கு தற்போதைய ஐச…

  10. ஐ.சி.சி. விருது : ஸ்டீவன் ஸ்மித், டி வில்லியர்ஸ் கைப்பற்றினர் ! இந்த ஆண்டுக்கான ஐ.சி.சி. விருதுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித்துக்கு கவுரவமிக்க கேரி சோபர்ஸ் விருது வழங்கப்பட்டுள்ளது. இதே ஸ்டீவன் ஸ்மித்துக்குதான் இந்த ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்கான விருதும் வழங்கப்பட்டுள்ளது. தென்ஆப்ரிக்க ஒருநாள் அணியின் கேப்டன் டி வில்லியர்ஸ், சிறந்த ஒரு நாள் போட்டி வீரருக்கான விருதை தட்டிச் சென்றுள்ளார். இந்த விருதை இவர் 2வது முறையாக பெறுகிறார். ஜோகனஸ்பர்க்கில் நடந்த டி20 ஒருநாள் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 56 பந்துகளில் 116 ரன்கள் விளாசிய டுப்லெசிக்கு சிறந்த டி20 வீரருக்கான விருது வழங்க…

  11. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், இந்த ஆண்டுக்கான ஐ.சி.சி. விருதுகளின் வெற்றியாளர்களை அறிவித்துள்ளது. இந்நிலையில் அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஜோன்சன், ஐ.சி.சி.யின் சிறந்த டெஸ்ட் வீரர் மற்றும் 2014 ஆம் ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் ஆகிய இரு விருதுகளைத் தட்டிச் சென்றுள்ளார். இதில் முக்கிய விருதுகள் எதையும் இலங்கை அணி வீரர்களில் ஒருவர் கூட பெறவில்லை. இந்த ஆண்டிற்கான மக்கள் விருப்ப விருதுக்கு இந்திய வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ஐ.சி.சி. ஒருநாள் அணியில் இலங்கை வீரர்கள் சார்பாக அஜந்த மெண்டிஸின் பெயர் மாத்திரமே இடம்பெற்றுள்ளது. ஒருநாள் அணித்தலைவராக இந்திய அணித் தலைவர் டோனி அறிவிக்கப்பட்டுள்ளார். விருது பெற்ற…

  12. ஐ.சி.சி., தரவரிசை:அஷ்வின் ‘நம்பர்–9’ துபாய்: ஐ.சி.சி., டெஸ்ட் பவுலர்களுக்கான ரேங்கிங்கில் (தரவரிசை) இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் 9வது இடத்துக்கு முன்னேறினார். பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இந்தியாவின் ஷிகர் தவான் 32வது இடம் பிடித்தார். டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது. இதில் பவுலர்களுக்கான ரேங்கிங்கில் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் 12வது இடத்தில் இருந்து 9வது இடத்துக்கு முன்னேறினார். இவர், இலங்கைக்கு எதிரான காலே டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 10 விக்கெட் கைப்பற்றினார். இந்திய வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா 21வது இடத்தில் உள்ளார். …

  13. ஐ.சி.சி., தலைவர் முஸ்தபா ராஜினாமா புதுடில்லி: ஐ.சி.சி., தலைவர் பதவியை வங்கதேசத்தின் முஸ்தபா கமால் திடீரென ராஜினாமா செய்தார். சர்வதேச கிரிக்கெட் (ஐ.சி.சி.,) கவுன்சில் தலைவர் முஸ்தபா கமால். இவர் வங்கதேசத்தை சேர்ந்தவர். சமீபத்திய, உலக கோப்பை தொடரின் காலிறுதியில், இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின. அப்போது, இந்திய வீரர் ரோகித் சர்மாவுக்கு ‘நோ–பால்’ வழங்கிய விவகாரத்தில் அம்பயர்கள் சதி இருப்பதாக, முஸ்தபா சர்ச்சை கிளப்பினார். இதில் சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு, தலைவர் என்று முறையில் நான்தான் கோப்பை வழங்க வேண்டும். ஐ.சி.சி., சேர்மன் சீனிவாசன் வழங்கியது விதிமுறை மீறல் எனவும் புகார் தெரிவித்திருந்தார். இப்படி பல பிரச்னைகளால், கோபமடைந்த முஸ்தபா, ஐ.சி.சி.,யில் …

    • 2 replies
    • 394 views
  14. ஐ.சி.சி.,க்கு எதிராக புது அமைப்பு * கிரிக்கெட் அரங்கில் அதிர்ச்சி புதுடில்லி: ஐ.சி.சி.,க்கு போட்டியாக புதிய கிரிக்கெட் அமைப்பை ஏற்படுத்தும் முயற்சிகள் நடக்கின்றன. இதன் சார்பில் ‘டுவென்டி–20’ தொடர் ஒன்றையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. உலக கிரிக்கெட் அமைப்பை நிர்வாகம் செய்வது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,). இதன் விதிமுறை, அட்டவணைப்படி தான் போட்டிகள் நடக்கும். இதன் அங்கீகாரம் இல்லாமல் 2007ல் கபில் தேவ் தலைமையில் இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐ.சி.எல்.,) அமைப்பு உருவானது. இதன் சார்பில் நடந்த ‘டுவென்டி–20’ போட்டிகளில் பல வீரர்கள் பங்கேற்றனர். உடனடியாக விழித்துக் கொண்ட இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,), 2008ல் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) அமைப்…

  15. ஐ.சி.சி.தலைவர் சொன் மரணம். சர்வதேச கிரிக்கெட் கௌன்ஸில் தலைவர் பெர்சி சொன் தனது 57 ஆவது வயதில் நேற்று மரணமடைந்தார். தென்னாபிரிக்காவின் கேப்டவுன் நகரில் உள்ள டர்பன் வில்லி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே நேற்று மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. பெருங்குடல் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டபோது திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதை அடுத்தே அவர் அவசர சிகிச்சை பிரிவுக்கு அனுமதிக்கப்பட்டார். சர்வதேச கிரிக்கெட் கௌன்ஸிலின் தலைவரான பெர்சி சொன் முன்னாள் தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை தலைவராகவும் செயல்பட்டவராவார். நிறவெறியால் பாதிக்கப்பட்ட காலத்தில் தென்னாபிரிக்க கிரிக்கெட்டை ஒருங்கிணைத்ததில் பெர்சி சொன் முக்கிய இடம் வகிக்கிறார். அத்துட…

    • 2 replies
    • 1.5k views
  16. ஐ.சி.சி.யின் டெஸ்ட் அணிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியீடு! by : Anojkiyan கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த டெஸ்ட் அணிகளின் தரவரிசைப் பட்டியலை, சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு தொடருக்கும் பிறகு, சிறப்பாக விளையாடும் அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டு வருகிறது. இதன்படி, தற்போது டெஸ்ட் அணிகளின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சரி தற்போது, தரவரிசை பட்டியலை பார்க்கலாம். இந்த பட்டியலில், இந்தியக் கிரிக்கெட் அணி 116 மதிப்பீட்டு புள்ளிகளுடன் தொடர்ந்தும் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. நியூஸிலாந்துக் கிரிக்கெட் அணி இரண்ட…

    • 0 replies
    • 397 views
  17. ஐ.சி.சி.யின் புதிய தரவரிசை.... இலங்கை - அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் பல்லேகலையில் நடைபெற்றது. இதில் இலங்கை அணி அவுஸ்திரேலியாவை 106 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதற்கு அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரங்கனா ஹேரத்தும் முக்கிய காரணமாக இருந்தார். முதல் இன்னிங்சில் 49 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுக்களை கைப்பற்றிய அவர், 2-வது இன்னிங்சில் 54 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். 9 விக்கெட்டுக்கள் கைப்பற்றியதால் ஹேரத் ஐ.சி.சி.யின் தரவரிசையி்ல 9-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். தற்போது அவர் 749 புள்ளிகளுடன் அந்த இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய வீரர் அஸ்வின் 876 புள்ளிகளுடன் முதல் இடத்திலும…

  18. ஐ.சி.சி.யின் முக்கிய விருதுகள் மூன்றை கைப்பற்றினார் விராட் கடந்த 2018 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி.யின் மிக முக்கிய மூன்று விருதுகளை பெற்று இந்திய அணியின் தலைவர் விராட் கோலி வரலாற்று சாதனை படைத்துள்ளார். அதன்படி கடந்த ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரராக தெரிவு செய்யப்பட்டு, சேபர்ஸ் கிண்ணத்தை கைப்பற்றியுள்ளதுடன், சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் தலைவராக செயற்பட்டு ஒரேயாண்டில் மூன்று விருதுகளை கைப்பற்றிய முதல் வீரர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 30 வயதாகும் விராட் கோலி கடந்த 2018 ஆம் ஆண்டு 14 சர்வதேச ஒருநாள் இன்னிங்ஸுக்களில் களமிறங்கி 1202 ஓட்டங்களை …

  19. ஐ.சி.சி.யின் முப்பெரும் நாடுகள் குறித்த முறைமையானது சர்வதேச கிரிக்கெட்டின் மூச்சை நிறுத்திவிடும் என பிரித்தானியாவின் 2014ஆம் ஆண்டின் விஸ்டென் கிரிக்கெட் சஞ்சிகையின் 151ஆவது அல்மனாக் பதிப்பில் கடுமையாக சாடியுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐ.சி.சி) அதிகாரம் மற்றும் வருமானத்தில் இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய மூன்று முப்பெரும் நாடுகள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. இத்திட்டம் இந்தியாவின் அதிகாரத்தினால் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த முப்பெரும் நாடுகள் குறித்து கடந்த புதன்கிழமை வெளியான கிரிக்கெட்டின் பைபிள் என வர்ணிக்கப்படும் விஸ்டென் சஞ்சிகையின் 151ஆவது பதிப்பில் இந்தியாவின் ஆதிக்கத்தில் உருவான 'காலணித்துவ…

    • 2 replies
    • 706 views
  20. ஐ.சி.சி.யை கேள்வி கேட்ட இலங்கை பெண் சர்­வ­தேச கிரிக்கெட் கவுன்­சி­லான ஐ.சி.சி.-யிடம் டுவிட்­டரில் இலங்கைப் பெண் எழுப்­பிய கேள்வி அனை­வ­ரையும் சிந்­திக்க வைத்­துள்­ளது. இந்­திய கிரிக்கெட் அணித்­த­லைவர் விராட் கோஹ்­லியும் பொலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்­மாவும் சமீ­பத்தில் காதல் திரு­மணம் செய்து கொண்­டனர். இது­கு­றித்து பிர­ப­லங்கள், கிரிக்கெட் நட்­சத்­தி­ரங்கள் பலரும் வாழ்த்து தெரி­வித்து வந்த நிலையில் சர்­வ­தேச கிரிக்கெட் கவுன்­சி­லான ஐ.சி.சி.-யும் தனது டுவிட்டர் பக்­கத்தில் வாழ்த்து தெரி­வித்­தி­ருந்­தது. இதனை கவ­னித்த இலங்கை பெண் ஒருவர் ஐ.சி.சி.யிடம் -நியா­ய­மான கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். அதில், கோஹ்­லி–-­அ­னுஷ்கா திரு­ம…

  21. ஐ.சி.சியின் விதிமுறைகளை தொடர்ச்சியாக மீறிவரும் இலங்கை அணி சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) விதிமுறைகளை மீறும் வகையில் அண்மைக்காலமாக தொடர்ந்து மந்த கதியில் பந்துவீசி வருவது இலங்கை அணிக்கு மிகப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தற்போது நடைபெற்றுவரும் முத்தரப்பு T-20 தொடரில் பங்களாதேஷ் அணிக்கெதிராக கடந்த சனிக்கிழமை நடைபெற்ற லீக் போட்டியில் இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களை வீசுவதற்கு அதிக நேரத்தை எடுத்துக் கொண்டது. இது போட்டியை தாமதப்படுத்தும் செயல் என ஐ.சி.சியின் மத்தியஸ்தர் கிரிஸ் ப்ரோட் குற்றம் சாட்டியிருந்தார். இதன்படி, ஐ.சி.சியின் வீரர்கள் ஒழுங்குமுறைக் கோவைகளி…

    • 1 reply
    • 346 views
  22. ஐ.பி.எல் ஏலத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்ட இலங்கை அணி வீரர்கள் ஐ.பி.எல் ஏலத்திலிருந்து அனைத்து இலங்கை அணி வீரர்களும் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு இலங்கை அணிக்கு நேற்று ( 10) முதல் தடை விதிக்கப்படுவதாக ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்நிலையிலேயே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச கிரிக்கெட் சபை கூட்டம் சர்வதேச கிரிக்கெட் சபையின் கூட்டம் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரையில் அஹமதாபாத்தில் இடம்பெறவுள்ளது. இந்தநிலையில் சர்வதேச கிரிக்கெட் சபை இலங்கை கிரிக்கெட் டின் தலைவராக சம்மி சில்வாவையே, அங்கீகரித்துள்ளதாக ‘கிரிக் இன்ஃபோ’ செய்தி வெளியிட்…

  23. ஐ.பி.எல் தொடருக்காக டெஸ்ட் போட்டிகள் புறக்கணிக்கப்படுகின்றனவா? #IPL `நேர்த்தியான கிரிக்கெட் போட்டிகளை ரசிக்க வேண்டுமெனில், டெஸ்ட் கிரிக்கெட்டைப் பாருங்கள்' என்றுதான் பலரும் சொல்வர். `அத்தகைய கிரிக்கெட் போட்டிகளின் எதிர்காலம் என்னவாகும்?' என்ற கேள்வியும் வெகுநாள்களாகவே விவாதிக்கப்பட்டுவருகிறது. இப்போது அந்தச் சந்தேகம் வலுப்பெற்றுள்ளது. ஐந்து நாள்கள் போட்டி என்பது, ரசிகர்களுக்கு ஒருவித சலிப்பை ஏற்படுத்துகிறது. டெஸ்ட் போட்டிகள் பெரும்பாலானோர் தங்கள் பணிகளில் இருக்கும் நேரத்தில் நடைபெறுவதால் அவற்றை காண்பதற்கான நேரம் கிடைக்கவில்லை எனப் பலரும் காரணம் சொன்னாலும், ஐந்து நாள்கள் முடிவுக்காகக் காத்திருக்கும் பொறுமையை நாம் இழந்துவிட்டோம் என்றே சொல்ல …

  24. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஐ.பி.எல் போட்டியிலிருந்து நீக்குவது குறித்து விவாதிக்க பி.சி.சி.ஐ-யின் அவசர செயற்குழு கூட்டம் ஜூன் 10ந் தேதி கூடுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ் குந்தரா சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஒப்புக் கொண்டதை அடுத்து அந்த அணிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவர் ஐ.பி.எல் சூதாட்டம் மூலம் 3 ஆண்டுகளில் ரூ.1 கோடி வரை இழந்ததாக டெல்லி போலீஸ் குற்றம்சாட்டியுள்ளது. அந்த அணியின் மற்றொரு உரிமையாளரும், குந்தராவின் மனைவியான நடிகை ஷில்பா ஷெட்டியும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பரபரப்பு புகார் எழுந்துள்ளது. ஐ.பி.எல் அணியின் உரிமையாளர் சூதாட்டத்தில் ஈடுபட்டால் அந்த அணி நீக்கப்படும் என விதி இருப்பதால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐ.பி.எல் போட்டிகளிலிருந்து நீக்…

    • 0 replies
    • 351 views
  25. ஐ.பி.எல்: இதுவும் ஒரு விளையாட்டுதான் - ராஜ்ப்ரியன் ஐ.பி.எல் என்ற மூன்று எழுத்து, பாரத தேசத்தின் பாராளுமன்றம் முதல் பட்டி தொட்டி வரை பேசும் விஷயமாகிவிட்டது. ஐ.பி.எல் பாராளுமன்றத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. ஒரு அமைச்சரின் பதவியையும் காவுவாங்கியுள்ளது. காரணம் இதன் பின்னால் நடந்த திரை மறைவு விவகாரங்கள் வெளியே வந்தததால்தான். 2008ல் தான் முதன் முதலில் ஐ.பி.எல் 20-20 மேட்ச் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஐதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணி, பெங்களுர் ராயல் சேலஜ்ஜர்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணி என 8 அணிகள் உருவாக்கப்பட்டது. இந்த அணிகள் சந்தையில் ஆடு, மாடுகள் ஏலம் விடப்படுவதை போல …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.