விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7857 topics in this forum
-
இங்கிலாந்து (England) அணித்தலைவர் ஒலி போப்(Ollie Pope), 147 ஆண்டுகள் பழமையான டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யாரும் படைக்காத சாதனையை படைத்துள்ளார். அதாவது வெவ்வேறு அணிகளுக்கு எதிராக தனது முதல் ஏழு டெஸ்ட் சதங்களை அடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். தனது 49வது போட்டியில் விளையாடிய அவர், ஓவல் (Oval) மைதானத்தில் இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போதே இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். புதிய சாதனை இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான 3வது டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகின்றது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் 103 ஓட்டங்களை அடித்த ஒல்லி போப் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்துள்ளார். தொடரின் முதல…
-
- 0 replies
- 389 views
- 1 follower
-
-
பட மூலாதாரம், Duif du Toit/Gallo Images/Getty Images கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் மணி நேரங்களுக்கு முன்னர் தென்னாப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாக் காலிஸ் இன்று அரைசதம் அடித்திருக்கிறார். பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என கிரிக்கெட்டின் அனைத்து ஏரியாக்களிலும் ஜொலித்த அவருக்கு இன்றோடு ஐம்பது வயது ஆகிறது. சுமார் 19 ஆண்டுகள் சர்வதேச அரங்கில் விளையாடிய அவரது பயணத்தை எண்களின் வாயிலாக அலசுவோம். ஏனெனில், "நம்பர்களை வைத்துப் பார்த்தால் ஒரு முழுமையான கிரிக்கெட்டர் என்பதற்கு மிக அருகில் வருவது காலிஸ்தான்" என்று டிராவிட்டே கூறியிருக்கிறார்! பட மூலாதாரம், Cameron Spencer/Getty Images டெஸ்ட் கிரிக்கெட்டில் காலிஸ் 166 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் காலிஸ், 55…
-
- 0 replies
- 197 views
- 1 follower
-
-
இந்துக்களின் சமருக்கு 3ஆவது வருடமாக ஜனசக்தி நிறுவனம் பிரதான அனுசரணை 03 FEB, 2025 | 03:05 PM (நெவில் அன்தனி) யாழ். இந்து கல்லூரிக்கும் பம்பலப்பிட்டி (கொழும்பு) இந்து கல்லூரிக்கும் இடையிலான 14ஆவது வருடாந்த 'இந்துக்களின் சமர்' யாழ். இந்து கல்லூரி மைதானத்தில் இம் மாதம் 7ஆம், 8ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இளைஞரையும் விளையாட்டுத்துறையையும் ஊக்குவிக்கும் நன்னோக்குடன் இந்துக்களின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டிக்கு ஜனசக்தி குழுமம் (JXG) தொடர்ச்சியான மூன்றாவது வருடமாக பிரதான அனுசரணை வழங்குகிறது. இந்த வருட அத்தியாயம் கொழும்பில் நடைபெறுவதாக இருந்த போதிலும் பம்பலப்பிட்டி இந்து கல்லூரியின் வேண்டுகோளுக்…
-
- 5 replies
- 626 views
- 1 follower
-
-
14வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் சேர்பிய வீரர் நொவாக் ஜொகோவிக் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் சம்பியன் பட்டத்தை சேர்பியாவைச் சேர்ந்த நட்சத்திர டென்னிஸ் வீரர் நொவாக் ஜொகோவிக் வென்றெடுத்தார். ஆர்ஜன்டீன வீரர் ஜுவான் மார்டின் டெல் போர்ட்டோவிற்கு எதிராக அமெரிக்க நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவிலும் இலங்கை நேரப்படி இன்று அதிகாலையிலும் நிறைவடைந்த ஆடவர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் 6ற்கு 3 ; 7ற்கு 6 ; 6ற்கு 3 என நேர் செட்களில் வெற்றியீட்டினார் நொவாக் ஜொகோவிக். இந்த வெற்றி அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டிகளில் அவர் ஈட்டிய மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாக அமைந்துள்ள அதேவேளை ஒட்டுமொத்தமாக அவர் வென்றெடுத்துள்ள கிராண்ட்ஸ்லாம் பட்…
-
- 0 replies
- 574 views
-
-
15 பந்துகளில் அரை சதம் விளாசிய வாஷிங்டன் சுந்தர் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பந்தை பவுண்டரிக்கு விரட்டும் தூத்துக்குடி ஆல்பர்ட் டூட்டி பேட்ரியாட்ஸ் அணி வீரர் வாஷிங்டன் சுந்தர். - படம்: கே.பிச்சுமணி டிஎன்பிஎல் தொடரின் 2-வது சீசன் இறுதிப் போட்டிக்கு தூத்துக்குடி ஆல்பர்ட் டூட்டி பேட்ரியாட்ஸ் அணி முன்னேறியது. நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் அந்த அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தியது. தொடக்க வீரரான வாஷிங்டன் சுந்தர் 15 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற…
-
- 0 replies
- 512 views
-
-
15 மாத தடைக்குப் பிறகு நாளைமறுநாள் மீண்டும் களம் இறங்குகிறார் மரியா ஷரபோவா ஊக்கமருந்து பயன்படுத்தியதற்கான தண்டனை காலம் முடிந்து 15 மாதங்களுக்குப்பின் மீண்டும் டென்னிஸ் அரங்கில் புதன்கிழமை களமிறங்குகிறார் மரியா ஷரபோவா. ரஷியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா. கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின்போது தடைவிதிக்கப்பட்ட மெல்டோனியம் என்ற ஊக்கமருந்தை பயன்படுத்திய தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து அவருக்கு 15 மாதம் தடைவிதிக்கப்பட்டது. இந்தத் தடை தற்போது நீங்கியுள்ளது. இதனால் அவர் மீண்டு…
-
- 6 replies
- 629 views
-
-
15 வது ஆசிய விளையாட்டு நான்கு வருடத்திற்கொருமுறை நடக்கும் இப்போட்டி தற்போது கத்தார் தலைநகரமான டோஹா வில் மிக கோலாகலமாக 1-12-2006 வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது அதில் 45 நாடுகளுக்கும் மேல் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது தொடர்ந்து நடை பெறும் இப்போட்டி 15 நாட்கள் வரை நீடிக்கும். விரும்பியவர்கள் இந்த இடத்திற்கு சென்று எந்த நாடு என்ன மெடல்களைப் பெற்றுள்ளது என்பதைக் கண்டறியலாம் http://www.dohaasiangames.org/gis/me...InfoMedal.aspx
-
- 0 replies
- 1k views
-
-
லண்டன்: 15 வயது சிறுமியுடன் உறவு கொண்டதாக வந்த புகாரின் பேரில் இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரரான ஆடம் ஜான்சன் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த வீரருக்கு வயது 27 ஆகும். இங்கிலாந்து அணிக்காக 12 போட்டிகளில் ஆடியுள்ளார் ஜான்சன். இதுகுறித்து துர்ஹாம் போலீஸார் கூறுகையில், 16 வயதுக்குட்பட்டவர்களுடன் உறவு வைத்துக் கொள்வது சட்டப்படி குற்றமாகும். தற்போது ஆடம் ஜான்சன் மீது 15 வயது சிறுமியுடன் உறவு கொண்டதாக புகாரும், சந்தேகமும் வந்துள்ளது. அதன் பேரில் அவர் கைது செய்யப்பட்டுளளார். தற்போது அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்றனர். இந்த நிலையில் விசாரணை முடியும் வரை ஆடம் ஜான்சன் கால்பந்துப் போட்டிகளில் விளையாடுவதிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சுன…
-
- 0 replies
- 293 views
-
-
15 வயது பெண்கள் சமபோஷ உதைபந்தாட்டம் தெல்லிப்பளை மகாஜன இரண்டாமிடம் இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட சம்மேளனத்தால் சமபோஷா கிண்ணத்திற்காக 15 வயது பெண்கள் அணிகளுக்கிடையே தேசியமட்டத்தில் நடாத்தப்பட்ட உதைபந்தாட்டத் தொடரில் யா/மகாஜனக் கல்லூரி இரண்டாமிடம் பெற்றுள்ளது. சிலாபம் வென்னப்பு அல்பேர்ட் பீரிஸ் விளையாட்டு அரங்கில் இன்று(07.11.2016) நடைபெற்ற இறுதிப்போட்டியில் குருநாகல்/ நிக்கம்பிட்டிய வித்தியாலயத்தை எதிர்கொண்டது மகாஜனா. இதில் 1:0 என்ற கோல் கணக்கில் நிக்கம்பிட்டிய வித்தியாலயம் வெற்றிபெற, மகாஜன இர ண்டாமிடத்தை பெற்றது. http://www.onlineuthayan.com/news/19855
-
- 0 replies
- 377 views
-
-
டெஸ்ட் போட்டிகளில் 15,000 ரன்களைக் கடந்தார் சச்சின் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டிகளில் 15 ஆயிரம் ரன்களை எடுத்த முதல் வீரர் என்ற புதிய சாதனையை புரிந்துள்ளார். மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக நடக்கும் முதல் டெஸ்டின் மூன்றாவது நாளில் இந்தியாவின் இரண்டாவது இன்னிங்சில் சச்சின் டெண்டுல்கள் தனது 28 ஆவது ரன்னை எடுத்தபோது அவர் இந்த மைல்கல்லை எட்டினார். அதிக எண்ணிக்கையிலான ஒரு நாள் போட்டிகளிலும், டெஸ்ட் போட்டிகளிலும் பங்கேற்றுள்ள சச்சின் டெண்டுல்கள் பங்கேற்கும் 182 ஆவது டெஸ்ட் போட்டி இதுவாகும். ஒரு நாள் போட்டிகளிலும், டெஸ்ட் போட்டிகளிலும் அதிக அளவு ரன்களையும், அதிக அளவு சதங்களையும் அடித்த வீரர் என்ற சாதனையை ஏற்கனவே அவர் புரிந்துள்ளார். இது…
-
- 0 replies
- 676 views
-
-
150வது ஆண்டு விழா - எத்தனை கோடி இன்பம் வைத்தாய் ஈடன் கார்டன்ஸ்! கிரிக்கெட் வரலாற்றில் மூன்று மைதானங்கள்தான் மற்ற எல்லா மைதானங்களை விடவும் அதிக அங்கீகாரமும் கவுரவமும் பெற்றுள்ளன. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் (எம்.சி.ஜி), இங்கிலாந்தின் லார்ட்ஸ் மற்றும் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ். இந்தியாவின் பெருமைமிக்க மைதானமான ஈடன் கார்டன்ஸூக்கு இந்த வருடத்தோடு 150 வயது. அதற்குச் சிறப்பு சேர்ப்பதற்காகத்தான் இந்தியா, இலங்கை இடையிலான ஒருநாள் போட்டி நாளை (வியாழன்) இங்கு நடக்கிறது. மைதானமான பூந்தோட்டம் ஒரு பூந்தோட்டம், ஆடுகளமாக மாற்றப்பட்டதுதான் ஈடன் கார்டன்ஸ். 1836 முதல் 1842 வரை இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ஆக்லாண்ட் பிரபுவின் தங்கைகள் எமிலி மற்றும் ஃபேனி ஈடன் ஆகிய இருவரும்…
-
- 0 replies
- 417 views
-
-
151 கால கவுண்டி கிரிக்கெட் வரலாற்றில் 501 ரன்கள் குவித்து புதிய சாதனை! கவுண்டி கிரிக்கெட் போட்டியில் ஒரு ஜோடி 501 ரன்கள் குவித்து புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது. இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி கிரிக்கெட் போட்டியில், லாங்ஷயர் கிரிக்கெட் அணியும் கிளமார்கன் அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய லாங்ஷயர் அணி 698 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதில் 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தென்ஆப்ரிக்க வீரர்கள் பீட்டர்சன் 286 ரன்களையும் ஆஷ்வெல் பிரின்ஸ் 261 ரன்களையும் எடுத்தனர். இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 501 ரன்கள் சேர்த்தது. இது கவுண்டி கிரிக்கெட் வரலாற்றில் ஒரு ஜோடி அடித்த அதிகபட்ச ரன்கள் ஆகும். 151 கால வரலாற்றில் ஒரு ஜோடி 500 ரன்களை கடப்பதும் இதுவே முதல் …
-
- 0 replies
- 914 views
-
-
152 ஆண்டுகளில் முதல் முறை: 18 ரன்களில் ‘ஆல்அவுட்’; 12 நிமிடங்களில் ‘சேஸிங்’: இங்கிலாந்து கவுண்டியில் சுவாரஸ்யம் பெகன்ஹம் சிசிஅணி வீரர்கள் தோல்வி அடைந்து வெளியேறிய காட்சி இங்கிலாந்தில் கவுண்டி அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் ஒரு அணி 49 நிமிடங்களில் 18 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியது. 18 ரன்களை 12 நிமிடங்களில் எதிரணி சேஸிங் செய்ய ஆட்டம் ஒரு மணிநேரத்தில் முடிவுக்கு வந்துள்ளது. இங்கிலாந்து கவுண்டி அணி வரலாற்றில் குறைவாக எடுக்கப்பட்ட ஸ்கோர் இதுவாகும், குறைவான நேரத்தில் சேஸிங் செய்யப்பட்டதும் இதுவாகும். இங்கிலாந்தின் கென்ட் மாநிலத்தில் ஷெப்பார்ட் நீம் கென் கிரிக்கெட் கிளப் சார்பில் கவுண்…
-
- 0 replies
- 231 views
-
-
152 ஓட்டங்களுடன் சுருண்டது தென் ஆபிரிக்கா By SETHU 17 DEC, 2022 | 06:37 PM அவுஸ்திரேலியாவுடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் 152 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது. அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் இன்று இப்போட்டி ஆரம்பமாகியது. முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்க அணி வீரர்களில் கைல் வெரெய்ன் மாத்திரை அரைச்சதம் (64) குவித்தார். அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்களில் நேதன் லியோன் 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மிட்செல் ஸ்டார்க் 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். ஸ்கொட் போலன்ட் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும பட் கம்மின்ஸ் 35 ஓட…
-
- 1 reply
- 664 views
- 1 follower
-
-
153 ஓட்டங்களுக்குள் சுருண்டது மே.இ.தீவுகள் ; 224 ஓட்டத்தினால் இந்தியா அபார வெற்றி இந்தியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி அடுத்தடுத்த ஆட்டமிழப்பினால் 153 ஓட்டங்களுக்குள் சுருண்டு, 224 ஓட்டங்களினால் தோல்வியை தழுவிக் கொண்டது. இந்திய மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கிடையேயான ஐந்து போட்கடிகள் கொண்ட ஒருநாள் தொடரின் நான்காவது போட்டி மும்பையில் இன்று பிற்பகல் 1:30 க்கு ஆரம்பமாகியது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித் தலைவர் விராட் கோலி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். அதற்கமைவாக முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணியிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் அபாரமாக துடுப்பெடுத்தாடி 5 விக்கெட்டுக்களை இழந்த…
-
- 0 replies
- 360 views
-
-
[size=4]சனிக்கிழமை இடம்பெற்ற 400 மீட்டர் மெட்லி போட்டியில் அவர், புதிய உலக சாதனை ஒன்றை நிலைநாட்டினார். அந்தப் போட்டியின் இறுதி ஐம்பது மீட்டரை அவர், ஆடவர் பிரிவின் வெற்றியாளரை விட வேகமாக நீந்திக் கடந்தார்.[/size] [size=4][/size] [size=4]அதனையடுத்து, அவர் ஊக்க மருந்தைப் பயன்படுத்தியிருக்கலாமென அமெரிக்க பயிற்றுனர் ஒருவர் தெரிவித்திருந்தார். போட்டியில் வெற்றி பெறும் அனைவரும் ஊக்க மருந்துச் சோதனைக்கு முகம் கொடுக்கவேண்டியுள்ளது. ஷிவென், ஊக்க மருந்துப் பரிசோதனைக்கு முகம் கொடுத்தாரெனவும், அவர் பரிசோதனையில் வெற்றி பெற்றாரெனவும் குறிப்பிட்ட பிரித்தானிய ஒலிம்பிக் சங்கத் தலைவர், ஷிவெனின் திறமை பாராட்டப்படவேண்டுமென கூறினார். சீன ஒலிம்பிக் விளையாட்டுக் குழு, …
-
- 10 replies
- 1.2k views
-
-
16 வயதின் கீழ் தேசிய கால்பந்தாட்ட அணியில் ஆறு வட மாகாண மாணவிகள் அடுத்த வருடம் இடம்பெறவுள்ள ஆசிய கால்பந்தாட்ட சம்மேளனத்தின் 16 வயதின்கீழ் பெண்களுக்கான கால்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடருக்கான தகுதிகாண் போட்டிகள் முதற்தடவையாக இலங்கையில் நடைபெறவுள்ளது. இதில் பங்குபற்றவுள்ள இலங்கை அணியில் யாழ். மாவட்டப் பாடசாலைகளைச் சேர்ந்த ஆறு மாணவிகளும், குருநகால் மாவட்ட பாடசாலைகளைச் சேர்ந்த ஏழு மாணவிகளும் இடம்பெற்றுள்ளனர். நாளை (15) முதல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை கொழும்பு CR&FC மைதானத்தில் நடைபெறவுள்ள ஆசிய சம்மேளன கிண்ண, 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கால்பந்தாட்டத் தொடரின் குழு ஏ இற்கான தகுதிகாண் போட்டிகளில் வரவேற்பு நாடான இலங்கையுடன், சீனா,…
-
- 0 replies
- 494 views
-
-
16 வயது ஆப்கான் ஸ்பின்னர் முஜீப் ஸத்ரானிடமிருந்து வித்தைகளைக் கற்க விரும்புகிறேன்: அஸ்வின் ஓபன் ரவிச்சந்திரன் அஸ்வின். - படம். | பிடிஐ. இந்திய ஒருநாள் அணியில் இடம்பெறாததால் தூக்கத்தை இழந்து விடாத அஸ்வின், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக பொறுப்பு சவாலானது என்றும் இந்திய அணிக்குத் திரும்புவதற்கு ஐபிஎல் கிரிக்கெட்டை நடைமேடையாகப் பயன்படுத்த மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார். “இந்த ஐபிஎல் தொடரை இந்திய அணிக்குள் திரும்புவதற்கான ஒரு நடைமேடையாக பாவிக்கப் போவதில்லை., ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் கிரிக்கெட்டுக்குள் என்ன மனநிலையில் நுழைந்தேனோ அதே மனநிலையில்தான் இப்போதும் இருக்கிறேன். இந்த ஐப…
-
- 0 replies
- 312 views
-
-
16 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு உயரம் பாய்தல்: மன்னார் மாணவன் தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு! மன்னார்- உயிர்த்தராசன்குளம் றோ.க.த.க பாடசாலை மாணவன் சி.விஜய், 16 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு உயரம் பாய்தலில் தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளார். யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற வடமாகாண மட்ட மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியில் வெற்றிபெற்று, தேசிய மட்ட போட்டிக்கு தெரிவானார். பயிற்றுவிப்பாளர் திரு.ஆ.கு.ரொசேன் செரூபா பீரிஸ், பாடசாலையின் அதிபர் வு.ஆனந்தன் மன்னார் வலயக்கல்விப் பணிப்பாளர் மற்றும் விளையாட்டுத்துறை பிரதிக் கல்விப்பணிப்பாளர் ஆகியோர், தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ள மாணவன் சி.விஜய் வாழ்த்த…
-
- 4 replies
- 746 views
-
-
02 Sep, 2025 | 12:51 PM சீனாவில் நடைபெறவுள்ள 16 வயதுக்குட்பட்ட டியான்யூ லியூபங் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் 16 வயதுக்குட்பட்ட இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட அணியும் பங்குபற்றவுள்ளது. இதனை முன்னிட்டு நடத்தப்பட்ட திறன்காண் தேர்வின்போது 16 வயதுக்குட்பட்ட பூர்வாங்க இலங்கை பாடசாலைகள் குழாத்தில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையைச் சேர்ந்த என். கெஸ்ரோன், கே. ஜெனிஸ்ரன் ஆகிய இருவரும் உள்வாங்கப்பட்டுள்ளனர். திறன்காண் தேர்வின்போது அவர்கள் இருவரும் சிறப்பாக விளையாடி திறமையை வெளிப்படுத்தியதன் அடிப்படையில் 16 வயதுக்குட்பட்ட இலங்கை பாடசாலைகள் குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். 16 வயதுக்குட்பட்ட டியான்யூ லியூபங் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி இம் மாதம் 20ம் திகதியிலிர…
-
- 0 replies
- 164 views
- 1 follower
-
-
16 வருடங்களின் பின் மாலைதீவுகளை வீழ்த்திய இலங்கை அணி தெற்காசிய கால்பந்தாட்ட அரை இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி 10 SEP, 2022 | 06:33 AM (நெவில் அன்தனி) கால்பந்தாட்டப் போட்டியின் முழு நேரத்தில் 16 வருடங்களின் பின்னர் மாலைதீவுகளை முதல் தடவையாக வீழ்த்திய இலங்கை 17 வயதிற்குட்பட்ட தெற்காசிய கால்பந்தாட்ட அரை இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது. கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் மாலைதீவுகளுக்கு எதிராக வெள்ளிக்கிழமை (9) இரவு மின்னொளியில் நடைபெற்ற ஏ குழுவுக்கான கடைசிப் போட்டியில் மாலைதீவுகளை 1 - 0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி கொண்டதன் மூலமே இலங்கை அரை இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது. …
-
- 0 replies
- 229 views
- 1 follower
-
-
162 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுக்களும் சரிந்தன ; தொடர்ந்தும் தடுமாறும் தென்னாபிரிக்கா Published by J Anojan on 2019-10- இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 162 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுள்ளது. இந்தியா- தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 497 ஓட்டங்களை எடுத்திருந்த நிலையில் இந்திய அணித் லைவர் விராட் கோலி ஆட்டத்தை டிக்ளே செய்தார். இந்தியா சார்பில் ரோகித் சர…
-
- 1 reply
- 400 views
-
-
17 டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வியை சந்திக்காத இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தொடர்ச்சியாக 17 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது இல்லை என்ற சாதனையை சமன் செய்ததுள்ளது. இதை பற்றி விரிவாக பார்க்கலாம். * டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தொடர்ச்சியாக 17 போட்டிகளில் தோல்வியை சந்தித்தது இல்லை என்ற சாதனையை நேற்று சமன் செய்தது. கடைசியாக 2015-ம் ஆகஸ்டு மாதம் காலேவில் நடந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணி, அதன் பிறகு தோல்வ…
-
- 0 replies
- 292 views
-
-
17 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஜனா நோவோட்னா புற்றுநோயால் மரணம் 17 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டம் வென்ற செக் குடியரசு டென்னிஸ் வீராங்கனை ஜனா நோவோட்னா புற்றுநோயால் மரணமடைந்தார். அவருக்கு வயது 49. செக்குடியரசு நாட்டின் முன்னாள் டென்னிஸ் வீராங்கனை ஜனா நோவோட்னா. முன்னாள் நம்பர் 2 வீராங்கனையான இவர், 17 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை பெற்று சாதனைப் படைத்துள்ளார். 49 வயதான இவர் புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என பெண்கள் டென்னிஸ் அசோசியேசன் செய்தி வெளியிட்டுள்ளது. இரட்டையர் பிரிவில் கொடிகட்டிப் பற…
-
- 0 replies
- 439 views
-
-
(நெவில் அன்தனி) 17 வயதுக்குட்பட்ட இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையில் நடைபெறவுள்ள 3 ஒருநாள் மற்றும் இரண்டு 4 நாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான இலங்கை குழாத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இந்த குழாத்தில் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரி வீரர் விக்னேஸ்வரன் ஆகாஷ் இடம்பெறுகின்றமை சிறப்பம்சமாகும். ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட 17 வயதுக்குட்பட்ட பிராந்திய (மாகாணம்) அணிகளுக்கு இடையிலான போட்டியில் பிரகாசித்ததன் அடிப்படையிலேயே ஆகாஷுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது. 17 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் தலைவராக கொழும்பு ஆனந்த கல்லூரி வீரர் கித்ம வித்தானபத்திரன நியமிக்கப்பட்டுள்ளார். உப தல…
-
- 9 replies
- 812 views
- 1 follower
-