விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7860 topics in this forum
-
பந்து வீச்சில் மிரட்டிய இலங்கை! அபாரமான பந்து வீச்சினால் இலங்கை அணி ஆப்கானிஸ்தானை 34 ஓட்டத்தினால் வீழ்த்தியுள்ளது. 12 ஆவது ஐ.சி.சி. உலகக் கிண்ணத் தொடரின் 7 ஆவது போட்டி இன்று மாலை 3.00 மணிக்கு திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை மற்றும் குல்படின் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே கார்டீபில் ஆரம்பமானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியானது 33 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 182 ஓட்டங்களை குவித்தபோது மழை குறுக்கிட்டது. இதன் பின்னர் மழை முடிவடைந்ததும் இரவு 8.30 மணியளவில் ஓவர்களின…
-
- 0 replies
- 804 views
-
-
பந்து வீச்சில் மிரள வைத்த இலங்கை! துடுப்பாட்டத்தில் சொதப்பியிருந்தாலும், பந்து வீச்சில் மிரள வைத்த இலங்கை அணி இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 20 ஓட்டத்தினால் வெற்றிபெற்றுள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 27 ஆவது போட்டி இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து, திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு லீட்ஸ் மைதானத்தில் ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 232 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. 233 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 47 ஓவருக்கு அனைத்து விக்கெட்டுக்களையும…
-
- 0 replies
- 879 views
-
-
மழையால் கைவிடப்பட்ட மூன்றாவது ஆட்டம்! இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையேயான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 16 ஆவது போட்டி திமுத் கருணாரத்ன தலைமையிலான இலங்கை மற்றும் மோர்தசா தலைமையிலான பங்களாதேஷ் அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு ஆரம்பமாகவிருந்தது. இந் நிலையில் அங்கு தொடர்ந்தும் மழை பெய்தமையினால் போட்டி நாணய சுழற்சிக்கூட மேற்கொள்ளாது கைவிடப்பட்டுள்ளது. இதனால் இவ்விரு அணிகளுக்கும் தலா ஒவ்வொரு புள்ளிகள் வழங்கப்பட்டது. நடைபெற்று வரும் உலகக் கிண்ணத் தொடரில் மழை காரணமாக கைவிடப்பட்ட மூன்றாவது போட்டி இது என்பதும் குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/58031
-
- 2 replies
- 914 views
-
-
மீண்டும் பாகிஸ்தானை வீழ்த்தி உலகக்கிண்ண கிரிக்கெட் போரில் வென்றது இந்தியா! உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில், எங்களை தோற்கடிக்கவே முடியாது என இந்தியக் கிரிக்கெட் அணி, மீண்டுமொரு முறை பாகிஸ்தான் அணிக்கு உணர்த்தியுள்ளது. இங்கிலாந்தில் தற்போது நடைபெற்றுவரும் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 22ஆவது போட்டியில், பரம எதிரி நாடுகளான இந்தியா அணியும், பாகிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்தின. நேற்று மென்செஸ்டர் ஓல்ட் ட்ரப்போர்ட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. நீலம் மற்றும் பச்சை வண்ண ஆடைகளால் மைதானத்தில் புடை சூழ்ந்திருந்த இரசிகர்கள் சத்தமிட்டு வீரர்களை உற்சாக படுத்த, பெரும் எதிர்பார்…
-
- 0 replies
- 652 views
-
-
முக்கிய போட்டியில் இலங்கை தோல்வி – தென்னாபிரிக்கா அபார வெற்றி! நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 35ஆவது போட்டியில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதின. செஸ்ரர் லே பகுதியிலுள்ள ரிவர்சைட் மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில் தென்னாபிரிக்கா அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வுசெய்தது. அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன ஓட்டங்கள் எதுவும் பெறாத நிலையில் ஆட்டமிழந்தார். எனினும் பின்னர் களமிறங்கிய வீரர்கள் நிதனமாக துடுப்பெடுத்தாடியபோதும், ஒரு கட்டத்தில் விக்…
-
- 0 replies
- 436 views
-
-
மே.இ.தீவுகளை துவம்சம் செய்த வங்கப்புயல் ! மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுக்களினால் அசத்தலாக வெற்றிபெற்றுள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 23 ஆவது போட்டி ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள், மோர்தசா தலைமையிலான பங்களாதேஷ் அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு டவுன்டனில் ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய மேற்கிந்தியத்தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 321 ஓட்டங்களை குவித்தது. 322 என்ற இமாலய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 41.3 ஓவரில் 3 விக்கெட்டுக்களை இழந்து மேற்கிந்…
-
- 0 replies
- 714 views
-
-
மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி அவுஸ்ரேலியா 15 ஓட்டங்களால் வெற்றி! நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை 15 ஓட்டங்களால் அவுஸ்ரேலிய அணி வெற்றிகொண்டது. உலகக் கிண்ணத் தொடரின் 10ஆவது போட்டியில் அவுஸ்ரேலியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின. நொற்றிங்கமில் உள்ள ரென்ட் பிரிஜ் மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வுசெய்தது. அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலிய அணி, 49 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 288 ஓட்டங்களைப் பெற்றது. அணி சார்பாக, கௌல்ரர் நைல் 92 ஓட்டங்களையும், ஸ…
-
- 2 replies
- 1.3k views
-
-
மேற்கிந்திய தீவுகள் அணியே அரையிறுதி வாய்ப்பை தட்டி பறித்தது: பாகிஸ்தான் தலைவர் குமுறல் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் மேற்கிந்திய தீவுகளிடம் அடைந்த தோல்வி தான், அரையிறுதி வாய்ப்பினை இழப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தது என பாகிஸ்தான் அணியின் தலைவர் சப்ராஸ் அஹமட் தெரிவித்துள்ளார். லண்டன்- லோட்ஸ் மைதானத்தில் நேற்று நடைபெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 43ஆவது போட்டியில், பங்களாதேஷ் அணியும் பாகிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் பாகிஸ்தான் அணி 94 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இப்போட்டியில் 300இற்கும் அதிகமான ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றால் மாத்திரமே அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலையில், இப்போட்டியில் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. எனின…
-
- 1 reply
- 577 views
-
-
ரொஹித் சர்மா அதிரடி சதம்: 6 விக்கெட்டுகளால் இந்தியா வெற்றி! தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ரொஹித் சர்மாவின் அதிரடி ஆட்டத்தின் உதவியுடன் இந்திய அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 8ஆவது போட்டியில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதின. சௌத் அம்ரனிலுள்ள, ரோஸ் பௌல் மைதானத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற இப்போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அந்தவகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி, இந்திய பந்துவீச்சாளர்களின் மிரட்டலான பந்துவீச்சுக்கு மத்தியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 227…
-
- 0 replies
- 422 views
-
-
வாய்ப்பினை தக்க வைத்த பாகிஸ்தான்! நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி தொடரில் அரையிறுதி வாய்ப்பினை தக்க வைத்துள்ளது. ஐ.சி.சி.யின் 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 33 ஆவது போட்டி கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூஸிலாந்து மற்றும் சர்ப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு பேர்மிங்கமில் ஆரம்பமாகவிருந்தது. எனினும் மழை காரணமாக போட்டி சற்று நேரம் தாமதமாகவே ஆரம்பமாகியது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 237 ஓட்டங்களை குவித்தது. 238 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்…
-
- 0 replies
- 631 views
-
-
வெளியேறத் தயாரான மேற்கிந்தியத்தீவுகள் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 125 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவி, தொடரிலிருந்து வெளியேறுவதற்கான வாய்ப்பினை உறுதி செய்தது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 34 ஆவது போட்டி ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத்தீவுகள் மற்றும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு மான்செஸ்டரில் ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 268 ஓட்டங்களை குவித்தது. 269 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த மேற்கிந்தியத்தீவுகள் அணி இந்திய அணியின் பந்து வ…
-
- 0 replies
- 397 views
-
-
பங்களாதேஷிடமும் ஏமாந்த ஆப்கான்! பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 62 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியுள்ளது. ஐ.சி.சி. 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 31 ஆவது போட்டியில் மோர்தசா தலைமையிலான பங்களாதேஷ், குல்படீன் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு சவுதம்டனில் ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தேர்வுசெய்ய பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 262 ஓட்டங்களை பெற்றது. 263 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த ஆப்கானிஸ்தான் அணி 47 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 200 ஓட்…
-
- 0 replies
- 410 views
-
-
பழி தீர்த்த பாகிஸ்தான் ! இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 14 ஓட்டத்தினால் வெற்றிபெற்று தொடர் தோல்விக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது. 12 ஆவது சர்வதேச உலகக் கிண்ணத் தொடரின் ஆறவாது லீக் போட்டி இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து, சர்ப்ராஸ் அஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இன்று மாலை 3.00 மணிக்கு நோட்டிங்கமில் ஆரம்பமானது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 348 ஓட்டங்களை குவித்தது. 349 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் …
-
- 3 replies
- 1.2k views
-
-
கிரிக்கெட் உலகக்கோப்பையை வெல்ல இந்தியாவுக்குக் கிடைத்திருக்கும் 'புதிய ஆயுதங்கள்' கட்டுரை தகவல் எழுதியவர்,விதான்ஷு குமார் பதவி,விளையாட்டு செய்தியாளர், பிபிசி இந்தி 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ANI இந்தூரில் நடந்த போட்டியில் இந்திய அணி 90 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை தோற்கடித்து, தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது. கூடவே ஐ.சி.சி. ஒருநாள் தர வரிசையில் முதலிடத்தையும் இந்திய அணி பிடித்தது. ஐசிசி தர வரிசையில் இந்தியா 114 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இங்கிலாந்து 113 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், ஆஸ்திரேலியா 112 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், நி…
-
- 5 replies
- 735 views
- 1 follower
-
-
கிரிக்கெட் உலகில் பந்து பறித்த முதல் இந்திய உயிர்: ராமன் லம்பா பற்றிய சில தகவல்கள்! இந்திய கிரிக்கெட் உலகை அதிர வைத்த இந்த துர் சம்பவம் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி 20-ம் தேதி நிகழ்ந்தது. மிகச்சிறந்த பீல்டரான ராமன் லம்பாவிடம் ஒரு கெட்ட பழக்கமும் இருந்தது. அதாவது பேட்ஸ்மேனுக்கு வெகு அருகில், ஹெல்மெட் போடாமல் பீல்டிங் செய்யும் அந்த பழக்கம்தான் அவரது உயிரையும் பறித்தது. டாக்காவில், அபாகானி கிரிரா சக்ரா அணிக்காக ராமன் லம்பா விளையாடி வந்தார். வங்க தேச பிரீமியர் டிவிஷன் இறுதி ஆட்டத்தில், முகமதன் ஸ்போர்ட்டிங் அணியுடன் ராமன் லம்பாவின் அணி மோதியது. முகமதன் ஸ்போர்ட்டிங் பேட்ஸ்மேன், மெக்ராப் ஹொசைன் அடித்த பந்து, ஃபார்வட் லெக் திசையில் நின்றிருந்த ராமன் …
-
- 0 replies
- 608 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், நவீன் நெஜி பதவி, பிபிசி செய்தியாளர் 21 நவம்பர் 2023 மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை வெல்லும் இந்திய கிரிக்கெட் அணியின் கனவு கனவாகவே முடிந்துள்ளது. போட்டி முழுவதும் சிங்க மனதுடன் விளையாடிய இந்திய அணி, ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலியாவின் முன் ஆதரவற்ற நிலையில் காணப்பட்டது. இறுதிப் போட்டியில் கிட்டத்தட்ட ஒருதலைப்பட்சமாக வெற்றி பெற்று ஆறாவது முறையாக உலகக் கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா. போட்டி முடிந்ததும், ரோகித் சர்மா, விராட் கோலி, முகமது ஷமி உள்ளிட்ட இந்திய வீரர்கள் அனைவரும் சோகமான முகத்துடன் படிக்கட்டுகளில் ஏறி டிரஸ்ஸிங் ரூமுக்கு திரும்பிக் க…
-
- 0 replies
- 185 views
- 1 follower
-
-
கிரிக்கெட் உலகில் யாருமே அணியாத ஜேர்சியுடன் களமிறங்கும் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி.. சுதேசிய ஜேர்சி தொடர்பான முழு விபரம் ! விளையாட்டு இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது தொடரில் களமிறங்கவுள்ள அவுஸ்திரேலிய அணி புதியதொரு மேலங்கியுடன் (ஜேர்சி) களமிறங்குகிறது. அதாவது அவுஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணியானது முதல் முறையாக சுதேசிய கருப்பொருளை உள்ளடக்கிய ஜேர்சியுடன் களமிறங்குகிறது. சுதேசிய கருப்பொருளை உள்ளடக்கிய குறித்த ஜேர்சியானது புகழ்பெற்ற 1868 பழங்குடி கிரிக்கெட் சுற்றுப் பயணத்தின் கதையை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது. அவுஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணியானது தேசிய மகளிர் அணியினை முன்னிலைப்படுத்தி…
-
- 2 replies
- 770 views
-
-
கிரிக்கெட் என்ற விளையாட்டுக்கு மூத்த மகன் பிறந்த தினம் இன்று! கிரிக்கெட் என்ற விளையாட்டுக்கு டெஸ்ட் கிரிக்கெட்தான் மூத்த மகன்... இவருக்குதான் ஒருநாள், டி20 என இரு சகோதரர்கள். கடந்த 1884ஆம் ஆண்டு இதே நாளில்தான் முதல் டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகள் இடையே நடந்த போட்டியில், இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடந்த1983ஆம் ஆண்டு இந்திய அணி, இந்த மைதானத்தில்தான் உலகக் கோப்பையை முதல் முறையாக வென்றது. அதற்கு பின் லார்ட்ஸ் என்ற வார்த்தை இந்தியர்களுக்கு மிகவும் பிடித்துப் போன, பழகிப் போன வார்த்தையாகி விட்டது. வாழ்நாளில் ஒரு முறையாவது லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடிவிட வேண்டுமென்பதுத…
-
- 0 replies
- 361 views
-
-
கிரிக்கெட் பயிற்சியாளர் பதவியை நிராகரித்தார் போர்டு-எம்புரேவும் எஸ்கேப் ஜூன் 12, 2007 லண்டன்: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியை ஏற்க இயலாது என தென் ஆப்பிரிக்காவின் கிரகாம் போர்டு கூறி விட்டார். அதேபோல, இங்கிலாந்தின் ஜான் எம்புரேவும் பயிற்சியாளர் பதவியை ஏற்க முடியாது என்று கூறி விட்டார். இதனால் இந்திய கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளரைத் தேர்வு செய்ய வாரியத் தலைவர் சரத்பவார் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு டேவ் வாட்மோர், அர்ஜூன ரணதுங்கா உள்ளிட்ட பலருடைய பெயர்களைப் பரிசீலித்தது. இறுதியில் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கிரகாம் போர்டு, இங்கிலாந்தின் ஜான் எம்புரே ஆக…
-
- 0 replies
- 1k views
-
-
கிரிக்கெட் கௌன்சிலின் பிரதித் தலைவர் இலங்கை வருகிறார்.. சர்வதேச கிரிக்கெட் கௌன்சிலின் பிரதித் தலைவர் இம்ரான் க்வாஜா நாளை (09.05.2023) இலங்கை கிரிக்கெட்டில் அரசியல் தலையீடு பற்றிய குற்றச்சாட்டு குறித்த உண்மையைக் கண்டறிவதற்கு இலங்கை வரவிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது. இதன்போது அவர் விளையாட்டுத் துறை அமைச்சர், இலங்கை கிரிக்கெட் அதிகாரிகள் மற்றும் ஏனைய தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அரசியல் தலையீடு குறித்து இலங்கை கிரிக்கெட் சபையிடம் இருந்து வந்த தொடர்ச்சியான முறைப்பாட்டை அடுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை செயலாளர் ஜெய் ஷா தலைமையிலான மூவர் கொண்ட குழுவை ஐ.சி.சி நியமித்ததாக கூறப்படுகிறது. …
-
- 1 reply
- 316 views
-
-
கிரிக்கெட் சபையின் நடவடிக்கையாலேயே மலிங்க பதவி விலகினார் இலங்கை கிரிக்கெட் சபையின் நடவடிக்கை காரணமாக, இலங்கையின் இருபதுக்கு-20 அணியின் தலைமைப் பொறுப்பிலிருந்து லசித் மலிங்க விலகினார் என முன்னாள் பிரதம தேர்வாளர் கபில விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சரின் அதிரடி நடவடிக்கையால் பதவி விலக்கப்பட்ட தேர்வுக்குழுவின் தலைவராக இருந்த கபில விஜேகுணவர்தன, பதவி விலக்கப்பட்ட விதம் குறித்தும் விமர்சனங்களை முன்வைத்தார். 'பொருத்தமான எந்தவிதக் காரணங்களையும் வெளிப்படுத்தாது, நாங்கள் பதவி விலக்கப்பட்டமை குறித்து ஊடகங்களுக்கு அறிவிக்கப்பட்டமை தொடர்பில் நாம் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்தோம்" என அவர் தெரிவித்தார். திங்கட்கிழ…
-
- 0 replies
- 400 views
-
-
கிரிக்கெட் சர்ச்சைகள் பலவற்றால் பொண்டிங்கின் துடுப்பாட்டத்தில் பாதிப்பு [18 - February - 2008] [Font Size - A - A - A] கிரிக்கெட் சர்ச்சைகள் பலவற்றால் ரிக்கி பொண்டிங்கின் துடுப்பாட்டம் பாதிக்கப்பட்டுள்ளதாக கில்கிறிஸ்ட் கூறியுள்ளார். முக்கோண கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் கப்டன் ரிக்கி பொண்டிங்கின் ஆட்டம் மிகவும் மோசமாக உள்ளது. அவரது சராசரி 10 ஆகத்தான் உள்ளது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அவர் சோபிக்கவில்லை. பல்வேறு சர்ச்சைகளில் தான் கப்டன் ரிக்கி பொண்டிங்கின் ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளதாக துணைக் கப்டன் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது; ரிக்கி பொண்டிங்குக்கு எல்லா வீரர்களைப் போல் பல பிரச்சினைகள் என்றாலும…
-
- 0 replies
- 864 views
-
-
கிரிக்கெட்டில் இந்தியப் பள்ளி மாணவர்கள் உலக சாதனை கிரிகெட்டில் உலக சாதனைப் படைத்த இந்திய மாணவர்கள் இந்தியப் பள்ளி மாணவர்கள் இருவர் கிரிக்கெட் விளையாட்டில் உலக சாதனைப் படைத்துள்ளார்கள். முஹமது ஷைபாஸ் தும்பி மற்றும் மனோஜ் குமார் ஜோடி செகந்தராபாதில் 13 வயதிற்கு உட்பட்டவர்களுக்கானப் போட்டியில் நாற்பது ஓவர்களில் 721 ஓட்டங்களை எடுத்து இந்தச் சாதனையை படைத்துள்ளனர். உலக அளவில், ஒரு நாள் போட்டிகளில் ஜோடியாக எடுத்த ஓட்டங்களிலும் சரி, மிகப்பெரிய அளிவில் ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்றதிலும் சரி, இது தான் மிக அதிகமானது என கிரிக்கெட் விளையாட்டின் புள்ளி விபர நிபுணர்கள் கூறியுள்ளார்கள். இவர்கள் இவ்வாறு எடுத்த ஓட்டங்களை கண்ட எதிர் அணியினர் 21 ஓட்டங்கள…
-
- 4 replies
- 1.6k views
-
-
கிரிக்கெட் சாதனைகள் தெரியும்... வீரர்களுக்கு நடந்த சோதனைகள் தெரியுமா? #FunnyWickets கிரிக்கெட்... வியர்க்க விறுவிறுக்க கடைசிப் பந்து வரை போராடி வெற்றிபெற்ற அனுபவங்கள் எல்லா அணிகளுக்கும் இருக்கும். அதேபோல் எல்லா அணிகளிலுமே `அடப் பாவத்த' என்ற ரகத்தில் சில விக்கெட்டுகளும் விழுந்திருக்கும். அவற்றைப் பற்றிய ஓர் அலசல்! பாகிஸ்தானின் மிக முக்கியமான வீரர் இன்சமாமுக்கும் இப்படியொரு நிலை இருமுறை ஏற்பட்டிருக்கிறது. முதல் சம்பவம், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான தொடரின் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி 2006-ம் ஆண்டு நடந்தது. `களமிறங்கிக் கலக்கலாம்!' என்ற எண்ணத்தில், 19 ரன்களைக் கடந்துவிடுவார் இன்சமாம். அந்த நேரத்தில் `ரவுண்டாக 20 ஆக்கிவிடல…
-
- 0 replies
- 918 views
-
-
ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக இதுவரை 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த மோசடியின் மூளையாக செயல்பட்டவன் கிட்டி என்ற உத்தம்ஜெயின். இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் தங்களுடைய உண்மையான அடையாளத்தை மறைத்து போலியான மற்றும் கற்பனையான அடையாள ஆதாரங்களை கொடுத்து செல்போன் சிம்கார்டுகளை பெற்றுள்ளனர். பழைய சிம்கார்டுகளை அழித்து விட்டு மீண்டும் புதிய சிம் கார்டுகளை பெற்று தங்கள் செயல்களை தொடர்ந்துள்ளனர். கைப்பற்றப்பட்ட செல்போன் எண்களின் அழைப்பு விவரங்கள், மடிக்கணினி மற்றும் கணினி ஆகியவற்றில் பதிவாகி உள்ள தகவல்கள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த புரோக்கர்கள் தங்களுக்கு சாதகமான வகையில் பெட்டிங் அமைத்து சூதாடுபவர்களை தங்களுக்கு லாபம் ஏற்படும்…
-
- 9 replies
- 1.6k views
-