விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7879 topics in this forum
-
ஆஸ்திரேலியா ஓபன் : முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற பெலாரஸ் வீராங்கனை christopherJan 28, 2023 18:23PM மெல்போர்னில் இன்று (ஜனவரி 28) நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் வென்று பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார். மெல்போர்னில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான இதில் சாம்பியன் பட்டத்தை தட்டிச்செல்வதற்காக டென்னிஸ் உலகின் முன்னணி வீரர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி மெல்போர்ன் ரோட் லேவர் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் கஜகஸ்தான் நாட்டைச் சே…
-
- 2 replies
- 711 views
- 1 follower
-
-
அங்குரார்ப்பண ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் இ20 உலகக் கிண்ணம் நாளை ஆரம்பம் By VISHNU 13 JAN, 2023 | 01:44 PM (நெவில் அன்தனி) ஐசிசி 19 வயதுக்குட்பட்ட இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட்டின் அங்குரார்ப்பண அத்தியாயம் தென் ஆபிரிக்காவில் 14ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. 16 அணிகள் பங்குபற்றும் அங்குரார்ப்பண 19 வயதுக்குட்பட்ட இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட்டில் மொத்தம் 41 போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த 16 அணிகளும் 4 குழுக்களாக வகுக்கப்பட்டு முதல் சுற்று லீக் போட்டிகள் நடத்தப்படும். ஏ குழுவில் அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இலங்கை, ஐக்கிய அமெரிக்கா ஆகிய அணிகளும் பி…
-
- 16 replies
- 934 views
- 1 follower
-
-
வருடத்தின் அதிசிறந்த ஐ.சி.சி. கிரிக்கெட் வீரர் பாபர் அஸாம் ! வீராங்கனை நட்டாலி சிவர் By VISHNU 26 JAN, 2023 | 03:37 PM (என்.வீ.ஏ.) வருடத்தின் அதிசிறந்த ஐ.சி.சி .கிரிக்கெட் வீரருக்கான சேர் ஜோன் கார்பீல்ட் விருதை பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அஸாம் வென்றெடுத்தார். வருடத்தின் அதிசிறந்த ஐ.சி.சி. கிரிக்கெட் வீராங்கனைக்கான ரஷேல் ஹேவோ விருது இங்கிலாந்தின் நட்டாலி சிவருக்கு கிடைத்துள்ளது. வருடத்தின் அதிசிறந்த ஐசிசி ஒரு நாள் கிரிக்கெட் வீரருக்கான விருதை பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அஸாம் இர்ணடாவது தொடர்ச்சியான தடவையாக வென்றெடுத்துள்ளார். வருடத்தின் அதிசிறந்த ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் வீரருக்…
-
- 6 replies
- 1.1k views
- 1 follower
-
-
பிரெஞ்சு கோப்பை கால்பந்தாட்ட போட்டியில்,PSG மற்றும் Pays de Cassel அணிக்களுக்கிடையேயான போட்டி நேற்று(23.01.2023) இரவு இடம்பெற்றது. இந்த போட்டியில் PSG அணி 7-0 என்றம் கோல் கணக்கில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. பிரெஞ்சு கோப்பை கால்பந்தாட்ட போட்டியில் PSG அணியின் நம்பிக்கை நட்சத்திரம் கைலியன் எம்பாப்பே பெரும் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். பிரான்சின் Lens நகரில் Stade Bollaert மைதானத்தில் இடம்பெற்ற 32 ஆவது சுற்றுப் போட்டியில் குறித்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. கைலியன் எம்பாப்பே போட்டி முழுவதும் மிகவும் தீவிரமாக விளையாடி மொத்தமாக 5 கோல்களை அடித்து சாதனை படைத்துள்ளார். புதிய சாதனை போட்டி ஆரம்பமான முதல் 28 நிமிடங்கள் எந்த பரபரப்பும…
-
- 6 replies
- 771 views
- 1 follower
-
-
100 ரன்களை வாரி வழங்கி மோசமான சாதனை படைத்த நியூசி. வீரர்! இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி பந்துவீச்சாளர் ஜேக்கப் டஃப்பி(jacob duffy), 10 ஓவர்களில் 100 ரன்களை வழங்கி சாதனை படைத்துள்ளார். கடைசி ஒருநாள் போட்டி நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே நேற்று மத்தியப்பிரதேசம் இந்தூரில் 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்றது. ஏற்கெனவே முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றிருந்ததால் இன்றைய போட்டியிலும் வெல்லும் முனைப்புடன் களமிறங்கியது. ஆறுதல் வெற்றியையாவது பெற வேண்டும் என்ற நோக்கில் நியூசிலாந்து களம் கண்டது. இதையடுத்து, நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. அதன்படி, ம…
-
- 1 reply
- 817 views
- 1 follower
-
-
நீயா நானா விருது நிகழ்ச்சியில் தமிழகவீரர் பந்துவீச்சாளர் நடராஜனுக்கு பரிசு வழங்கி கெளரவபடுத்தியுள்ளனர். இது வெறும் பந்துவீச்சாளர் என்பதற்காக கொடுக்கப்பட்டதல்ல. கிரிக்கட்டில் தனக்கு கிடைத்த வருமானத்தை தனது ஊர் கிராமத்து இளைஞர்களும் விளையாடி பெயர் பெற வேண்டுமென்று தனது ஊரிலேயே பொது மைதானம் அமைத்து இலவசமாக பயிற்சிகள் வழங்கிவருகிறார். இவ்வளவு நாளாக செய்த முயற்சியின் பலனாக ஏறத்தாள 20 பேர்வரை தெரிவு செய்யப்பட்டு பல்வேறு இடங்களிலும் விளையாடுகிறார்கள்.
-
- 1 reply
- 823 views
- 1 follower
-
-
ஒரே பந்தில் 16 ரன்களை அடித்த ஆஸ்திரேலிய வீரர்: எப்படி சாத்தியமானது? பட மூலாதாரம்,GETTY IMAGES 5 மணி நேரங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பேஷ் தொடரில் தனித்துவமான சாதனை ஒன்று படைக்கப்பட்டுள்ளது. சிட்னி சிக்சர்ஸ் அணிக்காக விளையாடிய ஸ்டீவன் ஸ்மித் ஒரே பந்தில் 16 ரன்களை விளாசியுள்ளார். இது நம்புவதற்குக் கடினமாக இருக்கலாம். ஆனால் நடந்திருக்கிறது. ஹோபர்ட்டில் நடந்த போட்டியில் இந்த அரிதான சாதனை படைக்கப்பட்டுள்ளது. பும்ரா, ஷமியை விஞ்சி இந்தியாவின் பிரமாஸ்திரமாகிறாரா முகமது சிராஜ்?16 ஜனவரி 2023 அதிக சதம்: சச்சினை வேகமாக நெருங்கும் விராட் கோலி10 ஜனவரி …
-
- 0 replies
- 597 views
- 1 follower
-
-
உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்திய இந்தியாவின் 'துல்லியத் தாக்குதல்' பட மூலாதாரம்,HOCKEY INDIA/TWITTER 13 ஜனவரி 2023, 15:38 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒடிஷா மாநிலத்தில் தொடங்கிய உலகக் கோப்பை ஹாக்கியின் முதல் போட்டியில் ஸ்பெயின் அணியை இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. தொடக்கம் முதலே ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி வீரர்கள் 12 நிமிடத்தில் ஒரு பெனால்ட்டி கார்னர் வாய்ப்பைப் பெற்றார்கள். அதை இந்திய வீரர்கள் அற்புதமாகக் கோலாக மாற்றினார்கள். 26-ஆவது நிமிடத்தில் ஸ்பெனின் டி பகுதிக்குள் அற்புதமாக பந்தைக் கடத்தி வந்த இந்திய வீரர்கள் மற…
-
- 2 replies
- 792 views
- 1 follower
-
-
ரொனால்டோ, மெஸ்ஸி, எம்பாப்பே, நெய்மர்: கால்பந்து உலகில் அதிக சம்பளம் யாருக்கு? பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் இன்றைய கால்பந்து உலகின் தலைசிறந்த 4 வீரர்கள் ஒரே போட்டியில் விளையாடியதைக் கண்ட மகிழ்ச்சியில் அரபு உலகம் திக்குமுக்காடிப் போயுள்ளது. அந்த நான்கு பேரின் ஆட்டத்தைப் போலவே, அவர்கள் வாங்கும் சம்பளம் குறித்த ஒப்பீடும் கால்பந்து ரசிகர்களிடையே சுவாரஸ்யமாகப் பகிரப்படுகிறது. சர்வதேச கால்பந்து அரங்கில் கடந்த 2 தசாப்தங்களாகத் தவிர்க்க இயலாத பெயராக ரொனால்டோ - மெஸ்ஸி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். உலகின் மூலை முடுக்கெல்லாம் இருவரின் பெயர்களும் ரசிகர்களால் உச்சரிக்கப்படுகின…
-
- 0 replies
- 385 views
- 1 follower
-
-
12 மில்லியன் டொலர் இழப்பு: உசைன் போல்ட்டை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிதி மோசடி… உசைன் போல்ட் தன்னுடைய முதலீட்டுக் கணக்கிலிருந்து மில்லியன் கணக்கான டொலரை இழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. உலகப் புகழ்பெற்ற ஓட்டப் பந்தய வீரரான உசைன் போல்ட், முதலீட்டு நிறுவனம் ஒன்றில் பல மில்லியன் டொலரை முதலீடு செய்திருந்தார். இந்த நிலையில், உசைன் போல்ட் தன்னுடைய முதலீட்டுக் கணக்கிலிருந்து மில்லியன் கணக்கான டொலரை இழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், ஜமைக்காவின் கிங்ஸ்டனைத் தளமாகக் கொண்ட குறித்த முதலீட்டு நிறுவனம், கடந்த ஜனவரி 12ஆம் திகதி ஓர் அறிக்கை …
-
- 3 replies
- 471 views
-
-
ரிஷப் பண்ட் டக் அவுட்டில் என்னோடு இருக்க வேண்டும்… ரிக்கி பாண்டிங் ஆசை! ரிஷப் பண்ட் சமீபத்தில் விபத்தில் சிக்கி அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளதால் அவர் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்தார். இம்மாத தொடக்கத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் உத்தரகாண்ட் அருகே ரூர்க்கி பகுதியில் சாலையில் முன்னர் காரில் சென்றுக் கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு கட்டையில் மோதி கார் தீப்பிடித்தது. படுகாயமடைந்த ரிஷப் பண்ட் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு அபாய கட்டத்தை தாண்டியுள்ளார். இதையடுத்து அவருக்கு மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறத…
-
- 0 replies
- 611 views
-
-
மெஸி, ரொனால்டோ, எம்பாப்பே கோல் புகுத்தினர்: றியாத் அணியை 5:4 விகிதத்தில் பிஎஸ்ஜி வென்றது By SETHU 20 JAN, 2023 | 12:14 PM சவூதி அரேபியாவில் நடைபெற்ற, பரீஸ் செயின்ற் ஜேர்மைன் அணிக்கும் (பிஎஸ்ஜி), அல் நாசர் - அல் ஹிலால் கழகங்களின் வீரர்கள் இணைந்த றியாத் ஆல் ஸ்டார்ஸ் கூட்டு அணிக்கும் இடையிலான கால்பந்தாட்டப் போட்டியில் நட்சத்திர வீரர்களான லயனல் மெஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ கிலியன் எம்பாப்பே ஆகியோர் கோல் புகுத்தினர். இப்போட்டியில் பிஎஸ்ஜி அணி 5:4 கோல்களால் வென்றது. ரொனால்டோ, எம்பாப்பே ஆகியோர் தலா 2 கோல்களைப் புகுத்தியமை குறிப்பிடத்தக்கது. றியாத் நகரிலுள்ள மன்னர் பஹத் அரங்கில் நேற்றிரவு இப்போட்டி நடைபெற்றது. …
-
- 0 replies
- 442 views
- 1 follower
-
-
டென்னிஸ் ராஜாவுக்கு ஆஸ்திரேலியாவில் நேர்ந்த தாங்க முடியாத துயரம் பட மூலாதாரம்,GETTY IMAGES 18 ஜனவரி 2023 2023ஆம் ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் 2வது சுற்றிலேயே நடப்பு சாம்பியன் ரஃபேல் நடால் தோல்வி கண்டு வெளியேறினார். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெற்ற 2வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவின் மெக்கன்ஸி மெக்டொனால்ட்- நடப்பு சாம்பியனும் தரவரிசைப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளவருமான ரஃபேல் நடால் ஆகியோர் மோதினர். இடுப்பு வலியால் அவதிப்பட்ட நடால் இந்த ஆட்டத்தில் மெக்கன்ஸியை எதிர்த்து ஆடுவதில் கடும் சிரமங்களை எதிர்கொண்டார். வி…
-
- 0 replies
- 443 views
- 1 follower
-
-
அதிக சதம்: சச்சினை வேகமாக நெருங்கும் விராட் கோலி பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்து சச்சின் நிகழ்த்தியிருந்த சாதனையை நெருங்கி வரும் விராட் கோலி, அவரது வேறு சில சாதனைகளை முறியடித்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி இருபது ஓவர் தொடரை ஏற்கனவே இழந்துவிட்டது. இருபது ஓவர் தொடரில் விளையாடாத விராட் கோலி, அந்த அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் களமிறங்கியுள்ளார். முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் - சுப்மன் கில் ஜோடி சிறப்பான தொடக்கம் தந்ததால் மூன்…
-
- 5 replies
- 883 views
- 1 follower
-
-
இந்திய இருபது - 20 அணிக்கு ஹார்திக் பாண்டியா தலைவர் ; ஒருநாள் அணிக்கு மீண்டும் ரோஹித் ஷர்மா தலைவர் By DIGITAL DESK 5 28 DEC, 2022 | 12:29 PM (என். வீ. ஏ.) இலங்கைக்கு எதிராக புதுவருடத்தில் நடைபெறவுள்ள இருவகை சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் தொடர்ககளை முன்னிட்டு இந்தியாவின் இருபது கிரிக்கெட் 20 அணிக்கு ஹார்திக் பாண்டியாவும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு ரோஹித் ஷர்மாவும் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இருபது 20 அணியின் உதவித் தலைவராக சூரியகுமார் யாதவ்வும் ஒருநாள் கிரிக்கெட் அணியின் உதவித் தலைவராக ஹார்திக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிரடி துடுப்பாட்ட விக்கெட் காப்பாள…
-
- 27 replies
- 1.6k views
- 1 follower
-
-
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் புதிய தலைவராக ஜே. ஸ்ரீரங்கா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கைக் கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் நிர்வாகக் குழுவுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. தலைவர் பதவிக்கான தேர்தலில் ஜே.ஸ்ரீரங்கா 27 வாக்குகளையும் ஜகத் ரோஹன 24 வாக்குகளையும் பெற்றனர். இதன்படி ஜே.ரங்கா அதிக வாக்குகளைப் பெற்று தலைவராக தெரிவாகியுள்ளார். இதேவேளை முன்னாள் தலைவர் யூ.எல். ஜஸ்வர் புதிய தலைவர் பதவிக்குப் போட்டியிடத் தகுதி பெறவில்லை. https://thinakkural.lk/article/233786
-
- 0 replies
- 729 views
-
-
புதிய சாதனைகளைப் படைத்த பாபர் அஸாம் By SETHU 27 DEC, 2022 | 11:50 AM நியூ ஸிலாந்துடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில், பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அஸாம் சதம் குவித்ததுடன் பல சாதனைகளையும் முறியடித்தார். கராச்சியில் நேற்று ஆரம்பமான இப்போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இப்போட்டியில், மைக்கல் பிராஸ்வெல் வீசிய பந்தில் சிக்ஸர் அடித்து தனது 9 ஆவது சதத்தை பாபர் அஸாம் பூர்த்தி செய்தார். 280 பந்துகளில் ஒரு சிக்ஸர், 15 பவுண்டறிகள் உட்பட 161 ஓட்டங்களை அவர் குவித்தார். இதன்மூலம் ஒரு வருடத்தில் அனைத்து வகையான போட்டிகளிலும் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரரானார் பாபர் அஸாம். 2…
-
- 8 replies
- 643 views
- 1 follower
-
-
இந்திய கிரிக்கெட்டில் அதிக திறமையுடன் இருப்பது பிரச்னையா? - இந்திய அணி எதிர்கொள்ளும் சிக்கல்கள் கட்டுரை தகவல் எழுதியவர்,சுரேஷ் மேனன் பதவி,விளையாட்டுத் துறை எழுத்தாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியா ஐசிசி கோப்பையை வென்று பத்து ஆண்டுகள் ஆகின்றன. இந்தியாவில் வரும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெறவுள்ள நிலையில், இரண்டு கேள்விகள் முக்கியத்துவம் பெறுகின்றன. முதலாவது, மகேந்திர சிங் தோனியின் இறுதி சிக்ஸர் 2011 உலகக் கோப்பையில் இந்தியாவின் வெற்றியின் நிலையான பிம்பமாக மாறிய பிறகு தற்ப…
-
- 0 replies
- 470 views
- 1 follower
-
-
டெஸ்ட் சம்பியன்ஷிப் 2023 இறுதி ஆட்டத்திற்கு நான்கு முனை போட்டி 09 JAN, 2023 | 04:50 PM (நெவில் அன்தனி) இங்கிலாந்தின் லண்டன் ஓவல் விளையாட்டரங்கில் இந்த வருடம் நடைபெறவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் விளையாடுவதற்கான தகுதியைப் பெற நான்கு முனை போட்டி நிலவுகிறது. அவுஸ்திரேலியா, இந்தியா, இலங்கை, தென் ஆபிரிக்கா ஆகிய நான்கு அணிகளுக்கு இடையிலேயே இறுதி ஆட்ட வாய்ப்பிற்கான போட்டி நிலவுகிறது. இந்த நான்கு அணிகள் சம்பந்தப்பட்ட கடைசி டெஸ்ட் தொடர்கள் எதிர்வரும் பெப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ளன. சதவீத புள்ளிகள் அடிப்படையில் தற்போது முதல் 4 இடங்களில் இருக்கும்…
-
- 1 reply
- 324 views
- 1 follower
-
-
சௌதி அரேபியாவில் பெரும் பணத்துடன் புதிய வரலாறு படைக்கும் ரொனால்டோ பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் போர்ச்சுகல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சௌதி அரேபியாவின் அல்-நாசர் கால்பந்து கிளப்பில் இணைந்துள்ளார். வரும் 2025-ஆம் ஆண்டுவரை அந்த கிளப்பில் ஆடுவதற்கு அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மான்செஸ்டர் யுனைட்டட் கிளப்பில் இருந்து சர்ச்சைக்குரிய வகையில் ஏற்கெனவே வெளியேறிவிட்ட ரொனால்டோ சௌதி அரேபிய கிளப்பில் இணைய இருப்பதாக ஏற்கெனவே செய்திகள் வந்து கொண்டிருந்தன. சவுதி அரேபிய கிளப்பில் ஆடுவதற்காக கால்பந்து வரலாற்றில் இதுவரை யாரும் வாங்காத சம்பளத்தை ரொனால்டோ…
-
- 20 replies
- 1.3k views
- 1 follower
-
-
கிலியன் எம்பாப்பே பிரெஞ்சு கால்பந்து கூட்டமைப்பின் தலைவருக்கு எதிராகப் பேசியது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES 9 ஜனவரி 2023, 04:27 GMT பிரெஞ்சு கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் நோயல் லு கிரேட், தேசிய அணிக்குப் பயிற்சியளிப்பது குறித்து விவாதிக்க அழைத்தால், அழைப்பை எடுக்க மாட்டார் என்று முன்னாள் மிட்ஃபீல்டர் ஜினுடீன் ஜுடான் குறித்துப் பேசினார். அவருடைய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜினுடீன் ஜிடானுக்கு ஆதரவாக பிரெஞ்சு அணியின் முன்கள ஆட்டக்காரர் கிலியன் எம்பாப்பே குரல் கொடுத்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது. பிரெஞ்சு கால்பந்து கூட்டமைப்பு கடந்த சனிக்கிழமையன்று தலைமை பயிற்சியாளர் டி…
-
- 0 replies
- 249 views
- 1 follower
-
-
அங்குரார்ப்பண மகளிர் ஐபிஎல்; அணிகளை வாங்க முன்வருமாறு பிசிசிஐ அழைப்பு By DIGITAL DESK 5 05 JAN, 2023 | 02:55 PM (என்.வீ.ஏ.) அங்குரார்ப்பண மகளிர் இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ள அணிகளை வாங்குவதற்கு முன்வருமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அழைப்பு விடுத்துள்ளது. கடந்த வருடம் வரை 3 அணிகளுக்கு இடையில் மகளிர் இருபது 20 செலஞ் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டுவந்தது. மகளிர் இருபது 20 செலஞ் கிரிக்கெட் போட்டியில் சுப்பநோவாஸ், வெலோசிட்டி, ட்ரெய்ல்ப்லேஸர்ஸ் ஆகிய அணிகள் பங்குபற்றின. இந்த வருடம் முதல் தடவையாக மகளிர் இண்டியன் பிறீமியர் லீக் போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் …
-
- 0 replies
- 324 views
- 1 follower
-
-
100 ஆவது டெஸ்ட்டில் 200 ஓட்டங்களைக் குவித்தார் டேவிட் வோர்ணர் By SETHU 27 DEC, 2022 | 02:59 PM தென் ஆபிரிக்க அணியுடனான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வோர்ணர் இரட்டைச் சதம் குவித்தார். இது டேவிட் வோர்ணரின் 100 ஆவது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. மெல்பேர்னில் நேற்று ஆரம்பமான இப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 189 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது. அவ்வணியின் சார்பில் மார்கோ ஜேன்சன் (59), கைல் வெரேய்ன் (52) மாத்திரம் அரைச்சதம் குவித்தனர். அவுஸ்திரேலிய பந்துவீச்சாளர்களில் கெமரேன் கிறீன் 27 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தி…
-
- 4 replies
- 677 views
- 1 follower
-
-
பேலேயின் பெயரில் ஒவ்வொரு நாட்டிலும் கால்பந்தாட்ட அரங்கு: பீபா கோரிக்கை By SETHU 04 JAN, 2023 | 09:33 AM உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டிலும் கால்பந்தாட்ட அரங்கு ஒன்றுக்கு, பிரேஸில் கால்பந்தாட்ட ஜாம்பவான் பேலேயின் பெயரை சூட்டுமாறு கோரிக்கை விடுக்கப்படும் என சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனம் (பீபா) தெரிவித்துள்ளது. கால்பந்தாட்டத்தின் மன்னன் என வர்ணிக்கப்படும் பேலே, கடந்த வியாழக்கிழமை தனது 82 ஆவது வயதில் காலமானார். பேலேயின் இறுதிக்கிரியைகள், அவரின் பிரேஸிலின் சான்டோஸ் நகரில் உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை (இலங்கை, இந்திய நேரப்படி இன்று அதகாலை) நடைபெற்றன. இந்நிலையில், பேலேயின் பூதவுடலுக்கு…
-
- 1 reply
- 318 views
- 1 follower
-
-
கால்பந்து மன்னர் பெலே காலமானார் பட மூலாதாரம்,GETTY IMAGES 4 மணி நேரங்களுக்கு முன்னர் கால்பந்து மன்னர் என்று அழைக்கப்படும் பிரேசில் நாட்டைச் சேர்ந்த பெலே தனது 82-ஆவது வயதில் காலமானார். கால்பந்து உலகம் கண்ட மிகச் சிறந்த வீரர்களுள் முதன்மையானவர் என்று பெலே கருதப்படுகிறார். 1950-களின் இறுதியில் தொடங்கி 21-ஆண்டுகள் கால்பந்து ஆடிய பெலே 1363 போட்டிகளில் ஆடி 1,281 கோல்களை அடித்திருக்கிறார். இவற்றில் தனது நாட்டுக்காக 92 சர்வதேசப் போட்டிகளில் அவர் அடித்த 92 கோல்களும் அடங்கும். கால்பந்து வரலாற்றில் உலகக் கோப்பை வென்ற அணியில் 3 முறை இடம்பெற்ற ஒரே வீரர் இவர் மட்டும்தான். 1958, 1962, 197…
-
- 11 replies
- 489 views
- 1 follower
-