Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. இந்தியா - நியூ ஸிலாந்து முதல் இருபது20 போட்டி கைவிடப்பட்டது By DIGITAL DESK 3 18 NOV, 2022 | 02:22 PM இந்தியா மற்றும் நியூ ஸிலாந்து அணிகளுக்கு இடையிலான, சர்வதேச இருபது20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. நியூ ஸிலாந்தின் வெலிங்டன் நகரில் இன்று வெள்ளிக்கிழமை இப்போட்டி நடைபெறவிருந்தது. எனினும், மழை காரணமாக ஒரு பந்துதானும் வீசப்படாத நிலையில் போட்டி கைவிடப்பட்டது. இந்தியா, நியூ ஸிலாந்து அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட இருபது20 சர்வதேச போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இத்தொடரின் 2 ஆவது போட்டி நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை மவுன்ட் மவுன்கானுய் நகரில் நடைபெறவுள்ள…

  2. ஹர்திக் பாண்ட்யா: வேதனை, வறுமையில் இருந்து உச்சத்துக்கு வந்தவரின் கதை கட்டுரை தகவல் எழுதியவர்,சுரேஷ் மேனன் பதவி,விளையாட்டு செய்தியாளர் 10 நவம்பர் 2022, 06:18 GMT புதுப்பிக்கப்பட்டது 43 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மிகச் சிறந்த வீரரான கபில் தேவ் ஓய்வு பெற்றபின், அவருக்குப் பதிலாக சதம் அடிக்கக்கூடிய வேகப்பந்து வீச்சாளரைத் தேடத் தொடங்கியது இந்திய கிரிக்கெட் அணி. சேத்தன் சர்மா, அஜித் அகர்கர் முதல் இர்பான் பதான், புவனேஷ்வர் குமார் வரை பலர் இந்த இடத்தைப் பிடிக்கப் போட்டியிட்டனர். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றனர் - உதாரணமாக, அகர்கர…

  3. முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை வென்றது அவுஸ்திரேலியா By DIGITAL DESK 3 17 NOV, 2022 | 04:56 PM இங்கிலாந்துடனான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட்களால் வெற்றியீட்டியது. அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் இன்று இப்போட்டி நடைபெற்றது. அவுஸ்திரேலியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த இருபது20 உலகக்கிண்ணத் தொடரில் இங்கிலாந்து அணி சம்பியனாகியது. அத் தொடரின் பின்னர் பட் கம்மின்ஸ் தலைமையிலான அவுஸ்திரேலிய அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும்; 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரில் விளையாடி வருகின்றன. இன்று நடைபெற்ற…

  4. 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான சின்னம் அறிமுகம் By DIGITAL DESK 3 16 NOV, 2022 | 12:31 PM அடுத்த ஒலிம்பிக். மற்றும் பராலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான உத்தியோகபூர்வ சின்னங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அடுத்த ஒலிம்பிக் விளையாட்டு விழாவும் மாற்றுத் திறனாளிகளுக்கான பராலிம்பிக் விளையாட்டு விழாவும் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளன. இப்போட்டிகளுக்கான உத்தியோகபூர்வ சின்னங்களை, பாரிஸ் நகரில் திங்கட்கிழமை நடைபெற்ற வைபவத்தில் சர்வதேச ஒலிம்பிக் குழு வெளியிட்டது. பிரிஜியன் கெப் (Phrygian cap) எனும் பழங்கால தொப்பிகளின் அடிப்படையில் 2024 பாரிஸ் ஒலிம்பிக், பராலிம்பிக் சின்னங்கள் உருவாக்கப்பட்டுள…

  5. ஐ.பி.எல். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் பொல்லார்ட் : பயிற்சியாளராக இணைத்தது மும்பை By DIGITAL DESK 2 16 NOV, 2022 | 10:34 AM ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கிரான் பொல்லார்ட் அறிவித்த மறுநொடியே, அவரை பயிற்சியாளராக நியமித்துள்ளதாக மும்பை இந்தியன்ஸ் அறிவித்தது. மேற்கிந்தியத் தீவுகள் அணியின் அதிரடி துப்பாட்ட வீரர் கிரான் பொல்லார்ட். இவர் மிதவேகப்பந்து வீச்சாளரும் கூட. இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரின்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்தார். தொடர்ந்து அந்த அணிக்காக விளையாடி வந்தார். இந்த ஆண்டுடன் சுமார் 13 ஆண்டுகள் தொடர்ந்து இடம் பிடித்தார். அடுத்த ஆண்டு தொடருக்கான வீரர்கள்…

  6. 12 வருடங்களின் பின் ஐ.சி.சி. கிரிக்கெட் போட்டித் தொடரை நடத்தும் வாய்ப்பு இலங்கைக்கு By DIGITAL DESK 5 16 NOV, 2022 | 11:57 AM (எம்.எம்.சில்வெஸ்டர்) 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐ.சி.சி. 19 வயதுக்குட்பட்ட இ‍ளையோர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரை நடத்தும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்துள்ளது. இதன்படி, 12 வருடங்களுக்கு பின்னர் ஐ.சி.சி. கிரிக்கெட் போட்டித் தொடரொன்றை நடத்தும் வாய்ப்பு இலங்கைக்கு கிடைத்துள்ளது. இலங்கை கடைசியாக 4 ஆவது ஐ.சி.சி. இருபதுக்கு 20 உலகக் கிண்ண போட்டித் தொடரை 2012 ஆம் ஆண்டில் நடத்தியிருந்தது. அதற்கு முன்னதாக 2011 இல் இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகியவற்றுடன் இணைந்து உலகக் கிண்…

  7. மென்செஸ்டர் யுனைடெட்டிலிருந்து நான் விலக நிர்ப்பந்திப்பதற்கு சிரேஷ்ட அதிகாரிகள் முயற்சி: ரொனால்டோ By DIGITAL DESK 3 15 NOV, 2022 | 10:16 AM மென்செஸ்டர் யுனைடெட் கழகத்திலிருந்து விலகுவதற்கு அக்கழகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் தன்னை நிர்ப்பநதிப்பதாக பிரபல வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ கூறியுள்ளார். அக்கழகத்தின் பயிற்றுநர் எரிக் டென் ஹக் மீது தனக்கு மதிப்பு எதுவும் இல்லை எனவும் ரொனால்டோ கூறியுள்ளார். பிரிட்டனின் டோக் ரீவி அலைவரிசையில், பியர்ஸ் மோர்கன் அன்சென்ஸர்ட் நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை (13) அளித்த செவ்வியொன்றிலேயே ரொனால்டோ இப்பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 37 வயதான கிறிஸ்டியானா ரொனால்டோ 5 தடவைகள் பெலன…

  8. டி-20 உலகக்கோப்பை: இந்திய அணி அறிவிப்பு! JegadeeshSep 12, 2022 17:56PM ஷேர் செய்ய : ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் ஐசிசி டி20 உலகக் கோப்பை மற்றும் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணிகளை பி.சி.சி.ஐ இன்று (செப்டம்பர் 12 ) அறிவித்துள்ளது. இதில் தமிழக வீரர்களான தினேஷ் கார்த்திக் மற்றும் அஸ்வின் ஆகிய இருவரும் இடம் பெற்றுள்ளனர். ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஆர். அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படே…

  9. மகளிர் றக்பி உலகக் கிண்ணத்தை நியூ ஸிலாந்து வென்றது By DIGITAL DESK 3 12 NOV, 2022 | 05:53 PM மகளிர் றக்பி உலகக் கிண்ண சுற்றுப்போட்டியில் நியூ ஸிலாந்து அணி சம்பியனாகியது. நியூ ஸிலாந்தின் ஆக்லாந்து நகரில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் 34-31 புள்ளிகள் விகிதத்தில் இங்கிலாந்து அணியை நியூ ஸிலாந்து வென்றது. இச்சுற்றுப்போட்டியில் 12 நாடுகள் பங்குபற்றின. இன்றைய இறுதிப் போட்டியை சுமார் 40,000 பேர் நேரில் பார்வையிட்டனர், 1991 முதல் நடைபெறும் மகளிர் றக்பி உலகக் கிண்ண போட்டிகளில் நியூ ஸிலாந்து 6 ஆவது தடவையாக சம்பியனாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெற்ற 3 ஆம் இடத்துக்கான ப…

  10. பளு தூக்கலில் பதக்கங்களை வென்று சாதித்த மாணவிகள் By NANTHINI 12 NOV, 2022 | 12:35 PM பளு தூக்கும் போட்டியில் இரண்டு வெண்கல பதக்கங்களையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் பெற்று, வவுனியா மாவட்டத்துக்கும் பளு தூக்கல் கழகத்துக்கும் மூன்று மாணவிகள் பெருமை சேர்த்துள்ளார்கள். இலங்கை பளு தூக்குதல் சம்மேளனத்தால் (Sri Lanka Weightlifting Federation) இம்மாதம் 10, 11ஆம் திகதிகளில் பொலன்னறுவையில் நடத்தப்பட்ட தேசிய பளு தூக்குதல் சம்பியன்ஷிப் 2022 (National Weightlifting Championship 2022) போட்டியில் வவுனியா பளு தூக்கல் கழகத்தை சேர்ந்த தி.கோசியா (youth) இரண்டாம் இடத்தையும், நி.சுஸ்மிதாகினி (senior) மூன்றாம் இடத்தையும்,…

  11. உலகக் கிண்ண வாய்ப்பு கத்தாருக்கு வழங்கப்பட்டமை தவறு: பீபா முன்னாள் தலைவர் பிளாட்டர் By DIGITAL DESK 3 09 NOV, 2022 | 11:14 AM 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியை நடத்தும் உரிமை கத்தாருக்கு வழங்கப்பட்டமை ஒரு தவறு என சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனத்தின் (FIFA - பீபா) முன்னாள் தலைவர் செப் பிளாட்டர் கூறியுள்ளார். 2018 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளின் உலக கிண்ணக் கால்பந்தாட்டப் போட்டிகளை நடத்தும் நாடுகளை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு 2010 ஆம் ஆண்டு ஏககாலத்தில் நடைபெற்றது. 2018 ஆம் ஆண்டு போட்டிகளை நடத்தும் உரிமையை ரஷ்யா பெற்றது. 2022 ஆம் ஆண்டின் போட்டிகளை நடத்தும் உரிமையைப் பெறுவதற்கு இறுதியாக கத்…

  12. அவுஸ்திரேலிய பகிரங்க கனிஷ்ட டென்னிஸ் தகுதிகாண் சுற்றில் இலங்கையின் கீரன் வைரவநாதன் 08 NOV, 2022 | 09:35 PM (நெவில் அன்தனி) மெல்பர்னில் அடுத்த வருடம் (2023) நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டிக்கு முன்னோடியாக ஜப்பானில் நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய பகிரங்க கனிஷ்ட தகுதிகாண் சுற்றில் பங்குபற்றுவதற்கு இலங்கையின் கனிஷ்ட முதல் நிலை வீரர் கீரன் வைரவநாதன் தகுதிபெற்றுள்ளார். இந்த தகுதிகாண் சுற்று ஜப்பானின் யோக்காய்ச்சி டென்னிஸ் அரங்கில் நவம்பர் 13ஆம் திகதியிலிருந்து 16ஆம் திகதிவரை நடைபெறும். இந்தத் தகுதிகாண் சுற்றில் பங்குபற்ற ஆசிய கடல்சூழ் (Asia/Oceania) பிராந்தியத்திலிருந்து 16 வீரர்களும் 16 வீராங்கனைகளும் அழைக்கப…

  13. இலங்கை அணியின் களத்தடுப்பில் கவனம் செலுத்தவேண்டியுள்ளது - பயிற்றுநர் சில்வர்வூட் 07 NOV, 2022 | 10:01 PM (நெவில் அன்தனி) ஐசிசி இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியிலிருந்து நிறைய நேர்மறையான விடயங்களை எடுத்துக் கொண்டதாகவும் ஆனால், சில அம்சங்களில் குறிப்பாக களத்தடுப்பில் முக்கிய கவனம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுநர் கிறிஸ் சில்வர்வூட் தெரிவித்தார். இங்கிலாந்துக்கு எதிரான சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் தோல்வி அடைந்த பின்னரே இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுநர் கிறிஸ் சில்வவூட் இதனைத் தெரிவித்தார். இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் எந்த அணிகளை…

  14. இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றியில் ராகுல் டிராவிட்டின் பங்கு என்ன? நிதின் ஸ்ரீவeஸ்தவா பிபிசி செய்தியாளர், மெல்போர்னில் இருந்து (ஆஸ்திரேலியா) 39 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் இருந்து அடிலெய்டுக்கு குவான்டாஸ் ஏர்வேஸ் விமானம் புறப்பட்டது. விமானம் முழுவதுமாக நிரம்பியிருந்தது. இந்திய கிரிக்கெட் அணியும் அதே விமானத்தில் இருந்தது. ஒரு நாள் முன்னதாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணியின் எல்லா வீரர்களும் சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். ஆனால் எகானமி பிரிவில் கார்னர் சீட்ட…

  15. டி20 உலகக் கோப்பை: விராட் கோலி வேதனையை சாதனைகளாக மாற்றி மறுபிறவி எடுத்தது எப்படி? நிதின் ஸ்ரீவத்ஸவ் பிபிசி செய்தியாளர், ஆஸ்திரேலியாவிலிருந்து 53 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,TREVOR COLLENS நல்ல காலமும் கெட்ட காலமும் மாறி மாறி வருவது இயல்பு தான். காலத்தை விட வலுவானது எதுவுமில்லை. காலம் தலைகீழாக மாறவும் அதிக நேரம் பிடிக்காது. இந்த சொலவடை பழையது தான். ஆனால், நிஜ வாழ்க்கையில், நாம் அனைவரும் அடிக்கடி சந்திக்கும் உண்மை தான் இது. இந்திய கிரிக்கெட்டில் இதற்குப் பல எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன. விராட் கோலி தற்போது இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். 2…

  16. 2022 உலக கோப்பை உதைப்பந்தாட்டத்தில் 5 புதிய விதிகள் இணைக்கப்பட்டுள்ளன.

  17. நேமார் மீதான மோசடி குற்றச்சாட்டுகளை கைவிட்டனர் ஸ்பானிய அதிகாரிகள் By DIGITAL DESK 3 01 NOV, 2022 | 05:38 PM பிரேஸில் கால்பந்தாட்ட நட்சத்திரமான நேமார், பார்சிலோனா கழகத்தில் இணைந்தமை தொடர்பாக அவர் மீது சுமத்தப்பட்டிருந்த மோசடி குற்றச்சாட்டுகளை ஸ்பானிய அதிகாரிகள் கைவிட்டுள்ளனர். இக்குற்றச்சாட்டுகள் தொடர்பில், 30 வயதான நேமார், அவரின் பெற்றோர் உட்பட 8 பேருக்கு எதிராக ஸ்பெய்னின் பார்சிலோனா நகரிலுள்ள நீதிமன்றமொன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது. இவ்வழக்கில் 2 வருட சிறைத்தண்டனை மற்றும் 10 மில்லியன் யூரோ அபராதம் ஆகியன விதிக்கப்பட வேண்டும் என ஸ்பானிய அதிகாரிகள் முன்னர் கோரியிருந்தனர். எனினும் வியப்பளிக்கும் வக…

  18. விராட்கோலியின் ஹோட்டல் அறைக்குள் நுழைந்து வீடியோ எடுத்து வெளியிட்ட நபர் - கோலி அனுஸ்கா கடும் சீற்றம் By RAJEEBAN 31 OCT, 2022 | 12:45 PM தங்கள் ஹோட்டல் ரூமிற்குள் நுழைந்து அதனை படமெடுத்து வெளியிட்ட நபரை விராட்கோலியும் அவரது மனைவி அனுஸ்கா சர்மாவும் கடுமையாக சாடியுள்ளனர். தங்கள் அந்தரங்கம் மீறப்பட்டுள்ளது என இருவரும் தெரிவித்துள்ளனர். தங்களிற்கு மிகவும் பிடித்தமான வீரர் குறித்து இரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைவதும் பரபரப்பாவதும் அவர்களை சந்திப்பதற்கு துடிப்பதும் எனக்கு தெரியும் என வீடியோ ஒன்றை வெளியிட்டு விராட்கோலி சீற்றத்துடன் பதிவிட்டுள்ளார். நான் அதனை பாரட்டுவேன் ஆனால் இந்த வீடியோ பயங்கரமானது எனது அந்தரங…

  19. உலகக் கிண்ண செம்பியன்! இந்தியாவில் நடைபெற்ற 17 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணி, நடப்பு செம்பியன் பட்டத்தை ஞாயிற்றுக்கிழமை தக்க வைத்துக் கொண்டது. இறுதி ஆட்டத்தில் அந்த அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி, 2 ஆவது முறையாக செம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்த ஆட்டத்தில் கொலம்பிய அணி விஷயத்தில் விதி விளையாடியது. அந்த அணியின் அனா மரியா குஸ்மான் 82 ஆவது நிமிஷத்தில் தவறுதலாக ‘ஓன் கோல்’ அடிக்க, அது ஸ்பெயினுக்கு சாதகமாகிப் போனது. எஞ்சிய நேரத்தில் கொலம்பியாவுக்கு கோல் வாய்ப்பு கிடைக்காமல் போக, ஸ்பெயின் வாகை சூடியது. நைஜீரியா 3 ஆம் இடம் : இப்போட்டியில், 3 ஆவது இடத்துக்காக நடைபெற்ற ஆட்டத்தில் …

    • 0 replies
    • 374 views
  20. தேசிய பளு தூக்கல் போட்டியில் யாழ் இளைஞன்புதிய சாதனை By NANTHINI 30 OCT, 2022 | 01:50 PM தேசிய ரீதியில் கடந்த 29ஆம் திகதி கொழும்பு தனியார் விடுதியில் இடம்பெற்ற போட்டியில் 25 மாவட்டங்களையும் சேர்ந்த 56க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இந்த போட்டியில் யாழ்ப்பாணம் மாவட்டத்தின் சார்பாக யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியை சேர்ந்த சற்குணராசா புசாந்தன் கலந்துகொண்டு, மூன்று பிரிவுகளில் நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று, மூன்று தங்க பதக்கங்களை பெற்றுக்கொண்டார். 120 கிலோவுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் கலந்துகொண்ட இவர், squat பிரிவில் 335 கிலோ, benchpress பிரிவில் 183 கிலோ, deadlift பிரிவில் 275 கிலோ பளுக…

  21. வாசிம் அக்ரம்: ஓய்வுக்கு பிறகு கோகைன் போதைக்கு அடிமையானதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் அதிர்ச்சி தகவல் 43 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், தான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் கோகைன் போதைக்கு அடிமையானதாக கூறியுள்ளார். ஆனால், முதல் மனைவி இறந்த பின்னர் அதில் இருந்து விடுபட்டதாகவும் அவர் கூறியுள்ளார். புகழ்பெற்ற வேகப்பந்து வீச்சாளரான வாசிம், 2003ம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். சர்வதேசப் போட்டிகளில் 900 விக்கெட்டுகளை எடுத்தவர் இவர். தனது வாழ்க்கை வரலாற்று நூலில் வாசிம்(56), உலகம் மு…

  22. இந்திய கிரிக்கெட் அணியில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம ஊதியம் - சம வருவாய் கிடைக்குமா? எம். மணிகண்டன் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES "இந்திய கிரிக்கெட் அணியில் பெண் வீராங்கனைகளுக்கும் ஆண் வீரர்களுக்கு நிகரான சம்பளம் வழங்கப்படும்" என அறிவித்திருக்கிறார் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஜெய் ஷா. வாரியத்தின் அறிவிப்பை பெண் வீராங்கனைகளும் பிறரும் வரவேற்றுள்ளனர். "இது பெண்கள் கிரிக்கெட்டில் அதிக அளவில் தேர்வு ஆவதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கை," என்கிறார் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள ஹேமலதா. அண்மையில் ஆசிய கோப்பையை …

  23. இந்தியா-பாகிஸ்தான்: கிரிக்கெட்டை காயப்படுத்தும் போர்களும் அரசியலும் சௌதிக் பிஸ்வாஸ் பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா அண்மையில் தெரிவித்த ஒரு கருத்தால் பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கோப்பை போட்டிகளில் இந்தியா பங்கேற்பது குறித்து சந்தேகம் எழுந்திருக்கிறது. இந்தத் தொடரை இந்தியா புறக்கணித்தால் அது சர்வதேச கிரிக்கெட்டை பிரித்துவிடும் என்றும், இந்தியாவில் நடைபெறும் 2023ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் பங்கேற்பதைப் பாதிக்கும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கவலை தெரிவித்துள்ளது. நா…

  24. ரோஜர் பின்னி: "இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு வாய்த்த நல்லவர்" சுரேஷ் மேனன் விளையாட்டு எழுத்தாளர் 19 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,THE HINDU இவர் மிகவும் நல்லவர் எனக் கூறும் இவருடைய பல நண்பர்கள் இவரை 'ரோஜர் மைக்கேல் ஹம்ப்ரி பின்னி' என்று முழு பெயரில் அழைக்கவே விரும்புகிறார்கள். பல ஆண்டுகளாக இருந்த உறுதியற்ற தன்மை, பணக்கார விளையாட்டு நிர்வாகக் குழுவை சம்பந்தப்படுத்திய நீதிமன்ற வழக்குகள் போன்றவற்றுக்கு பிறகு, ரோஜர் பின்னி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக வருவது காலத்துக்கு ஏற்றது, மிகவும் அவசியமானது. பிசிசிஐ தலைவராக அலுவல்ப…

  25. ஆசிய கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அடுத்த இலக்கு உலகக் கோப்பை 9 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ANI இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மறக்க முடியாத தருணங்களில் ஒன்று 2011ஆம் ஆண்டின் ஆண்களுக்கான ஒருநாள் போட்டி உலகக்கோப்பையின் இறுதிப் போட்டி. அதன் இறுதிப் பந்தில் நடந்த அதிரடியின் உணர்வுகளை, நேற்று இந்திய மகளிர் கிரிக்கெட் அணியும் உண்டாக்கியது. பேட்ஸ்மேனின் கோட்டை தாண்டி, லாங் ஆனில் இந்தியாவின் உலகக் கோப்பை வெற்றியை உறுதி செய்த சிக்சரை அடித்துவிட்டு தோனி நின்றிருந்தார். அதேபோல், 11 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று வங்கதேசத்தின் சில்ஹெட்டில் நடந்த ஆசிய கோப்பையின் இறுதிப் போட்டியில் ஸ்மிருதி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.