Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. தர்சினி சிவலிங்கத்தினால்... ஆசிய கிண்ணத்தை வென்ற, சிங்களம்... அவரை புறக்கணித்தது. சிங்களவன் இப்படத்தை முகநூல்களில் பகிர்கிறான் என்றால் எங்கட தமிழருக்கு எங்கே போய்விட்டது அறிவு ? தர்சினி சிவலிங்கம் இல்லாவிடில் இந்த சிறீலங்கா அணியினால் காலிறுதி போட்டிக்கேனும் சென்றிருக்கமுடியாது . கடந்த தடவையும் ஆசிய கிண்ணத்தை வென்றது தர்சினி சிவலிங்கத்தினாலேயே . இம்முறையும் அவரில்லாமல் கிண்ணத்தை வென்றே இருக்கமுடியாது . நூற்றுக்கு 98 வீதமான கோல்களை அவரே போட்டிருந்தார் . தர்சினி சிவலிங்கம் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று அவுஸ்ரேலியாவிலுள்ள பிரபல கழகமொன்றுக்கு விளையாடிக்கொண்டிருந்த நேரத்தில் சிறீலங்கா அணி அனைத்துப்போட்டிகளிலும் படுதோல்வியடைந்துகொண்டிருந்தது .இ…

  2. ஆசிய வலைப்பந்து கிண்ணம் இலங்கை வசம்! 2022 ஆசிய வலைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் அணியை வீழ்த்தி இலங்கை அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. சிங்கப்பூரில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் வலைப்பந்தாட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில் சிங்கப்பூர் அணியை 63க்கு 53 என்ற புள்ளிக்கணக்கில் இலங்கை வீரர்கள் வீழ்த்தினர். ஆசிய வலைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இலங்கை அணி வெல்வது இது 6வது முறையாகும என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, சிங்கப்பூரை தோற்கடித்து ஆசிய வலைப்பந்து சாம்பியனாக தெரிவு செய்யப்பட்ட இலங்கை வலைப்பந்தாட்ட அணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். http://tamil.a…

  3. ஆசிய வலைப் பந்தாட்டத்தில், இந்தியாவை... இலகுவாக வீழ்த்தியது, இலங்கை. தர்ஜினி சிவலிங்கம்... 75 முயற்சிகளில் 72 புள்ளிகளை, பெற்றுக் கொடுத்திருந்தார். சிங்கபூரில் இன்று(3) ஆரம்பமாகியுள்ள ஆசிய இந்தியாவை 102 – 14 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்திய இலங்கை அணி இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டது. ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரில் இன்றைய தினம் மூன்று போட்டிகள் நடைபெற்றன. இந்த நிலையில், இலங்கை அணியானது இந்தியாவை இரண்டாவது போட்டியில் எதிர்கொண்டது. மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பித்த இந்தப்போட்டியில் இலங்கை அணி ஆரம்பம் முதல் தங்களுடைய ஆதிக்கத்தை வெளிப்படுத்தியது. முதல் கால்பகுதியில் இலங்கை அணி 34 புள்ளிகளை பெற்றுக்கொண்டத…

  4. 16 வருடங்களின் பின் மாலைதீவுகளை வீழ்த்திய இலங்கை அணி தெற்காசிய கால்பந்தாட்ட அரை இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதி 10 SEP, 2022 | 06:33 AM (நெவில் அன்தனி) கால்பந்தாட்டப் போட்டியின் முழு நேரத்தில் 16 வருடங்களின் பின்னர் மாலைதீவுகளை முதல் தடவையாக வீழ்த்திய இலங்கை 17 வயதிற்குட்பட்ட தெற்காசிய கால்பந்தாட்ட அரை இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது. கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் மாலைதீவுகளுக்கு எதிராக வெள்ளிக்கிழமை (9) இரவு மின்னொளியில் நடைபெற்ற ஏ குழுவுக்கான கடைசிப் போட்டியில் மாலைதீவுகளை 1 - 0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி கொண்டதன் மூலமே இலங்கை அரை இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது. …

  5. ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப் – அரை இறுதியில் இலங்கை தொடரும் தர்சினியின் கோல் மழை சிங்கப்பூர் ஓ சி பி சி உள்ளக அரங்கில் நடைபெற்றுவரும் 11 நாடுகளுக்கு இடையிலான ஆசிய வலைபந்தாட்ட சம்பியன்ஷிப்பில் தோல்வி அடையாத ஒரே ஒரு அணியாக அரை இறுதியில் விளையாடுவதற்கு இலங்கை தகுதி பெற்றுள்ளது.ஹொங்கொங் அணிக்கு எதிராக வியாழக்கிழமை (08) நடைபெற்ற இரண்டாவது சுற்று போட்டியில் 62 – 51 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றிபெற்றது. போட்டியின் முதலிரண்டு ஆட்டநேர பகுதிகளில் மிகத் திறமையாகவும் வேகமாகவும் விளையாடி கோல்களை இலகுவாக குவித்த இலங்கை, கடைசி இரண்டு ஆட்ட நேர பகுதிகளில் ஹொங்கொங்கின் கடும் சவாலை எதிர்கொண்டது. …

  6. இலங்கையின்... 19 வயதுக்குட்பட்ட, கிரிக்கெட் அணிக்குள் நுழையும்... மற்றொரு தமிழ் வீரர்! தோமியன் 1ஆவது XI துடுப்பாட்ட அணியின் துணைத் தலைவர் கனிஸ்டன் குணரத்னம், இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட அணியில் விளையாடத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் மாகாண போட்டியில் சிறப்பாக செயற்பட்டதன் பின்னணியில் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர், இந்த வார இறுதியில் 19 வயதுக்குட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியுடன் இங்கிலாந்திற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். தோமியன் துணைக் தலைவரும், தொடக்க வேகப்பந்து வீச்சாளருமான கனிஸ்டன் குணரத்னம், சமீபத்தில் முடிவடைந்த இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட…

  7. வடமாகாண பளுதூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற வவுனியா வீராங்கனைகள் By T YUWARAJ 05 SEP, 2022 | 04:42 PM K.B.சதீஸ் வடமாகாண ரீதியில் இடம்பெற்ற பளுதூக்கும் போட்டியில் வவுனியா மாவட்ட பெண்கள் பிரிவு இரண்டாம் இடத்தினையும், ஆண்கள் பிரிவு மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளனர். யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நேற்று (04.09.2022) இடம்பெற்ற பளுதூக்கும் போட்டியில் பெண்கள் பிரிவில் வவுனியாவை சேர்ந்த தி.கோசியா 45 kg எடைப்பிரிவில் 71kg தூக்கி 3ஆம் இடத்தையும், கு.குழவிழி 59kg எடைப்பிரிவில் 83kg தூக்கி 2ஆம் இடத்தையும், பா.செரோண்யா 71kg எடைப்பிரிவில் 90kg தூக்கி 3ஆம் இடத்தையும் பெற்றுள்ளனர். அத…

  8. செரீனா வில்லியம்ஸ்: உணர்ச்சிப் பெருக்குடன் விடைபெற்றார் 'ராணிகளின் ராணி' ஜோனாதன் ஜுரேகோ பிபிசி ஸ்போர்ட் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, செரீனா வில்லியம்ஸ், ஒற்றையர் பிரிவில் 23 வெற்றிகளைப் பெற்ற அவருடைய 27 ஆண்டுக்கால தொழில்முறை டென்னிஸ் வாழ்வில் இதுவே தனது இறுதிப் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார். நியூயார்க்கில் பரபரப்பான இரவில் ஆஸ்திரேலியாவின் அஜ்லா டோம்ஜனோவிச்சிடம் தோல்வியடைந்த பிறகான உணர்ச்சிகரமான சூழலுக்கு நடுவே, செரீனா வில்லியம்ஸ் டென்னிஸ் ஆட்டதுக்கு விடை கொடுத்தார். ஒற்றையர் பிரிவில் 23 கிராண்ஸ்லாம…

  9. ஒரே போட்டியில் முதலிடத்தை பெற்ற இலங்கை! சாதனை முறியடிப்பு! இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற ஆசிய கிண்ண ரி20 போட்டியில் இலங்கை அணி 2 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்திருந்தது. இந்த வெற்றியை தொடர்ந்து இலங்கை அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் பங்களாதேஷ் அணி தொடரில் இருந்து வௌியேறுகிறது. இந்நிலையில், நேற்றைய போட்டியில் இலங்கை அணி 184 என்ற வெற்றி இலக்கை 19.2 ஓவர்களில் கடந்திருந்தது. இது ஐக்கிய அரபு அமீரகத்தில் இதுவரை இடம்பெற்ற ரி20 போட்டிகளில் அணியொன்று கடந்த பாரிய வெற்றி இலக்காகும் என ஐசிசி அறிவித்துள்ளது. இதற்கு முன்னர் 2016 ஆம் ஆண்டு ஐக்கிய …

  10. ஆசிய கோப்பை: கிரிக்கெட்டை விட இந்தியா-பாகிஸ்தான் உறவுகள் ஆதிக்கம் செலுத்தும் போட்டி அப்துல் ரஷீத் ஷக்கூர் பிபிசி செய்தியாளர், கராச்சி 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரசிகர்கள் பார்க்க விரும்பும் அனைத்தும் நடந்து வருகின்றன. சனத் ஜெயசூர்யாவின் ஆக்ரோஷமான பேட்டிங், முரளிதரன் மற்றும் அஜந்தா மென்டிஸ் ஆகியோரின் மாயாஜால பந்துவீச்சு மற்றும் அனைத்திற்கும் மேலாக உலகையே மெய்சிலிர்க்க வைக்கும் பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பரபரப்பான பந்தயம். கிரிக்கெட்டின் இந்த இரண்டு பாரம்பரிய போட்டியாளர்களும் இந்த மா…

  11. கால்பந்தாட்ட தடையை நீக்கிய ஃபிஃபா! – இந்தியாவில் நடைபெறுகிறது பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து! இந்திய கால்பந்து கூட்டமைப்பு ஃபிஃபா விதித்த தடை நீக்கப்பட்டதால் இந்தியாவில் பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து நடைபெற உள்ளது. உலகம் முழுவதும் உள்ள கால்பந்து கூட்டமைப்புகளை ஒருங்கிணைத்து சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு சம்மௌனமான பிபா கால்பந்து போட்டிகளை ஒன்றிணைக்கிறது. சமீபத்தில் இந்திய கால்பந்து கூட்டமைப்பின் நிர்வாகத்தை கலைத்த உச்சநீதிமன்றம், கூட்டமைப்பிற்கு தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகள் நியமிப்பதற்காக 3 பேர் கொண்ட கமிட்டியை அமைத்தது. புதிய நிர்வாகிகள் நியமனம் வரை இந்த 3 பேர் குழுவே கால்பந்து கூட்டமைப்பை நிர்வகிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. …

    • 0 replies
    • 312 views
  12. FIFA உலக கோப்பை 2022: கத்தாரில் நடைபெறும் போட்டி - முழு விவரம் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,DEFODI IMAGES 2022 FIFA உலக கோப்பை கால்பந்து போட்டியை கத்தார் நடத்துகிறது. மத்திய ஆசியாவில் உள்ள ஒரு நாட்டில் ஃபிஃபா உலகக் கோப்பை நடைபெறுவது இதுவே முதல் முறை. நவம்பர் 21-ஆம் தேதி தொடங்கவுள்ள உலகக் கோப்பை போட்டி 28 நாட்கள் நடைபெறவுள்ளது. மொத்தம் 64 போட்டிகள் நடைபெறும். அதன் இறுதிப்பந்தயம் டிசம்பர் 18 அன்று நடைபெறும். இந்த உலகக் கோப்பை தொடர்பான முக்கிய விஷயங்களை தெரிந்து கொள்வோம்: 2022 FIFA உலகக் கோப்பையில் எத்தனை நாடுகள் பங்கேற்கும்? இந்த 22-ஆவது ஃபிஃபா உலகக் கோப்பையில் பங்கேற்க கடந…

  13. டி20 உலகக் கோப்பை போட்டி: எங்கு எப்போது நடைபெறுகிறது? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,JONATHAN DIMAGGIO இந்த வருடம் அக்டோபர் மாதம் ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ளன. முதல் போட்டி அக்டோபர் 16ஆம் தேதியும், இறுதிப் போட்டி நவம்பர் 13ஆம் தேதியும் நடைபெறுகின்றன. டி20 உலகக் கோப்பையில் எத்தனை அணிகள் கலந்து கொள்கின்றன? இந்தப் போட்டியில் மொத்தம் 16 அணிகள் கலந்து கொள்கின்றன. அதில் 12 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள நான்கு அணிகள் தகுதிப் போட்டியின் வழியாக தேர்ந்தெடுக்கப்படவுள்ளன. நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அணிகள் குரூப் 1 மற்றும் குரூப் 2ஆக…

  14. ஜூடோவில் தங்கம் வென்ற மாற்றுத்திறனாளி சௌந்தர்யா - தடைகளைத் தகர்த்து சாதித்தது எப்படி? 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஏற்காட்டில் உள்ள குண்டூர் மலை கிராமத்தைச் சேர்ந்தவர், மாற்றுத்திறனாளி மாணவி சௌந்தர்யா. இவர் இந்திய அளவிலான ஜூடோ விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இவரது தந்தை சிவனேசன், தாய் மலர்க்கொடி. இவர்கள் ஏற்காட்டில் கூலி வேலை செய்து வருகிறார்கள். செளந்தர்யாவுக்கு கேட்கும் மற்றும் பேசும் திறன் இல்லை. அதனால் அவர் சேலம் அயோத்தியா பட்டினம் பகுதியில்உள்ள தமிழக விழி இழந்தோர் சங்கத்தினர் நடத்தும் தங்கும் விடுதியில் தங்கி உடையாப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு ஜூடோ விளையாட்டில் ஆ…

  15. விராட் கோலிக்கு இந்த நிலைமையா? சோகத்தில் ரசிகர்கள்! Aug 20, 2022 06:27AM இந்திய அணி வீரர் விராட்கோலி சர்வதேச போட்டிகளில் ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் ஆகஸ்ட் 19ஆம் தேதியுடன் 1000 நாட்களை கடந்துள்ளார். ஒவ்வொரு தலைமுறைகளின் இந்திய கிரிக்கெட் அணியின் பெயரை சர்வதேச அளவில் பெருமையுடன் உச்சரிக்க வைக்கும் வகையில் விளையாடும் வீரர்கள் உருவாவது உண்டு. கபில்தேவ், கவாஸ்கர், சச்சின், கங்குலி, தோனி என்ற அந்த வரிசையில் தன் பெயரை சிறப்பாக விளையாடி பதித்தவர் தான் விராட்கோலி. உலக அரங்கில் அடுத்தடுத்து பல சாதனைகள் படைத்து நம்பர் 1 வீரராக வலம் வந்தவர் தான் விராட் கோலி.சச்சினுக்கு அடுத்தபடியாக அவரது சாதனையை முறியடிக்க வந்தவர் என்று எதிர்ப்பார்க்கப்பட்டவர். …

  16. ஃபிஃபாவின் தடையால் இந்திய கால்பந்து வீராங்கனைகளுக்கு என்ன பாதிப்பு? ஜானவி மூலே பிபிசி மராத்தி 17 ஆகஸ்ட் 2022 பட மூலாதாரம்,INDRANIL MUKHERJEE/AFP படக்குறிப்பு, ஃபிஃபாவின் இடைநீக்க நடவடிக்கையால் இந்திய மகளிர் கால்பந்து அணி வீராங்கனைகள் கடுமையாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. "உலக கோப்பைக்காக நான் மிகவும் உற்சாகமாக இருந்தேன். நான் அணியில் இடம் பெறவில்லை, ஆனால் விளையாட்டுகளைப் பார்க்கப் போகிறேன். உலக கோப்பையை நடத்துவது நம் நாட்டிற்கு ஒரு பெரிய கெளரவம். ஆனால் இப்போது அது நடக்காது என்ற நிலை வந்திருப்பது என்னை வ…

  17. The Hundred இங்கிலாந்தில் முதன்மைக் கழகங்களுக்கிடையே தற்போது பிரசித்தி பெற்ற கிரிக்கெட்டாக உருவெடுத்திருக்கிறது 100 கிரிக்கெட். இந்த கிரிக்கெட்டில் ஒரு போட்டில் விளையாடும் இரண்டு அணிகளுக்கும் தலா 100 பந்துப் பரிமாற்றங்கள் வழங்கப்படும். இதில் அதிகூடிய ஓட்டமெடுக்கும் அணி வென்றதாகக் கருதப்படும். இந்தப் போட்டியில் ஒரு பந்து வீச்சாளர் 5 அல்லது 10 பந்துப் பரிமாற்றங்களை தொடர்ந்து செய்யலாம். மொத்தம் ஒரு பந்து வீச்சாளர் 25 பந்துப் பரிமாற்றங்களே செய்ய முடியும். ரி20 க்கு போட்டியாக உருவான இந்த 100 கிரிக்கெட்.. தற்போது மெதுமெதுவாக பிரசித்தம் பெற்று வருவதோடு நடப்பு ஆண்டுக்கான போட்டிகள் இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதில் ஆண்களுக்கான அணிகள்.. பெ…

  18. செஸ் ஒலிம்பியாட்: பிரமாண்ட நிறைவு விழாவில் பதக்கங்களுடன் குதூகலித்த இளம் வீரர்கள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@FIDE_CHESS படக்குறிப்பு, முதலிடத்தில் உள்ள இந்தியா 'ஏ' மகளிர் அணி, 11வது மற்றும் இறுதி சுற்றில் அமெரிக்காவிடம் 1-3 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்து தங்கப்பதக்க நம்பிக்கையை தகர்த்தது. 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சென்னை முதல் முறையாக நடத்திய பிறகு, ஜவாஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான முறையில் அதன் நிறைவு விழா நடைபெற்றது. தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், இந்திய ஃபிடே துணைத் தலைவர் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்ட பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். …

  19. யது பாஸ்கர் கிளிநொச்சியில் மாபெரும் மரதன் ஓட்டப்போட்டி இடம்பெற்றது. குறித்த போட்டியானது வடக்கு மாகாணம் தழுவி வீரர்களை அடையாளம் காணும் வகையில் முன்னெடுக்கப்பட்டது. இரணைமடுவிலிருந்து, பரந்தன் வரையான குறித்த மரதன் போட்டியில் 300க்கும் மேற்பட்ட ஆண் பெண் இருபாலரும் கலந்து கொண்டனர். குறித்த போட்டியில் வெற்றி பெற்றவர்களிற்கு பெறுமதி மிக்க பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டது. குறித்த போட்டியில் ஆண் குழுவில் கிளிநொச்சியை சேர்ந்த எஸ்.கீரன் முதல் இடத்தினை பெற்றார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த கே.ஜெயந்தன் இரண்டாம் இடத்தினையும், வவுனியாவை சேர்ந்த எஸ்.கிந்துசன் மூன்றாம் இடத்தினையும் பெற்றனர். பெண்கள் குழுவில், வவுனியாவை சேர்ந்த எஸ்.கேமப்பிரியா முதல் இடத்தினை பெற்றுக்கொண…

  20. கதிர் தேசிய ரீதியான பளு தூக்கல் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் புதிய சாதனை! தேசிய ரீதியில் கடந்த 06ஆம் திகதி பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற போட்டியில் 25 மாவட்டங்களையும் சேர்ந்த 44க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து ஒரே ஒருவராக யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியை சேர்ந்த சற்குணராசா புசாந்தன் கலந்து கொண்டு மூன்று பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் மூன்றிலும் வென்று , மூன்று தங்க பதக்கங்களை பெற்றுக்கொண்டுள்ளார். 120 கிலோவிற்கு மேற்பட்டோருக்கான பிரிவில் கலந்து கொண்ட இவர், squat பிரிவில் 330 கிலோ கிராமையும் , benchpress பிரிவில் 175 கிலோ கிராமையும், deadlift பிரிவில் 261 கிலோ கிராமையும…

  21. உத்வேகம் தரும் வீராங்கனை அமுதா: செயற்கை காலுடன் பாரா பேட்மின்டன் விளையாட்டில் சாதிக்கும் பெண் ஹேமா ராக்கேஷ் பிபிசி தமிழ் 4 ஆகஸ்ட் 2022, 06:15 GMT தமிழ்நாட்டைச் சேர்ந்த அமுதா இன்று பாரா பாட்மின்டன் போட்டி உலக தரவரிசையில் 9 வது இடத்தில் உள்ளார். சிறுவயதில் ஏற்பட்ட விபத்தில் ஒரு காலை இழந்தாலும், தன்னம்பிக்கையை இழக்காமல் ஒரு சர்வதேச வீராங்கனையாக இவர் மாறியது எப்படி? 5 வயதில் விபத்து நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்தவர் அமுதா. இவரது 5 வயதில், பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது, எதிர்பாராத விதமாக பேருந்து ஒன்று மோதி விபத்துக்குள்ளானர். இந்த விபத்தில் படுகாயமடை…

  22. பொதுநலவாய விளையாட்டுத் தொடர்: 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீரர் யுப்புன் அபேகோன் வெண்கலப் பதக்கம்! பர்மிங்ஹாமில் நடைபெற்றுவரும் 22ஆவது பொதுநலவாய விளையாட்டுத் தொடரின், ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீரர் யுப்புன் அபேகோன் வெண்கலப் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். அலெக்ஸாண்டர் விளையாட்டரங்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், போட்டியை 10.14 செக்கன்களில் நிறைவு செய்து யுப்புன் அபேகோன் வெண்கலப் பதக்கம் வென்றார். இதன் மூலம் 92 வருட பொதுநலவாய விளையாட்டுத் தொடர் வரலாற்றில் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கைக்கு முதலாவது பதக்கத்தை வென்று கொட…

  23. காமன்வெல்த் 2022: பிரிட்டனில் இன்று தொடங்கும் போட்டியில் இந்தியாவின் பதக்க வாய்ப்பு எப்படி உள்ளது? 13 ஜூன் 2022 புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டுகள் இன்று இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் தொடங்குகிறது. காமன்வெல்த் போட்டிகள் என்றால் என்ன? காமன்வெல்த் அமைப்பின் உறுப்பு நாடுகளும் அதனை சார்ந்த பிராந்தியங்களுக்கும் இடையே நடைபெறும் விளையாட்டுப் போட்டியே 'காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி' என அழைக்கப்படுகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த காமன்வெல்த் போட்டிகள் நடைபெறும். இந்த ஆண்டு…

  24. சுல்தான் கான்: பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் சதுரங்க சாம்பியனான இந்திய பணியாள் அசோக் பாண்டே பிபிசி ஹிந்திக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,UNKNOWN CAMERAMAN OF 1932 படக்குறிப்பு, 1932 இல் பிரிட்டிஷ் செஸ் சாம்பியன்ஷிப்பை வென்ற பிறகு கோப்பையுடன் சுல்தான் கான் 1890 ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் பங்கேற்ற பத்தொன்பது வயது இளம் இந்திய வீரர் கோவிந்த் தீனாநாத் மட்காங்கர், தனது ஆட்டத்தால் ஆங்கிலேயர்களை திகைக்க வைத்தார். அவருக்குள்ளே ஒளிந்திருந்த திறமையை வல்லுநர்கள் கண்டனர். ஆனால் இரண்டு ஆண்டுகளில் மாட்காங்கர் சதுரங்கத்தை விட்டு…

  25. ஃபிபா உலகக்கோப்பை: மைதானங்களைப் பாதுகாக்க ட்ரோன்களை பயன்படுத்த திட்டம் கிறிஸ் வாலன்ஸ் தொழில்நுட்ப நிருபர் 25 ஜூலை 2022 பட மூலாதாரம்,FORTEM TECHNOLOGIES ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் வரும் நவம்பர் - டிசம்பர் மாதங்களில் கத்தார் நாட்டில் நடைபெற உள்ளது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த போட்டியில் 32 அணிகள் பங்கேற்க இருக்கின்றன. சர்வதேச அளவில் அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டு என்பதால் போட்டிக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்த உலகக்கோப்பை போட்டிக்கு பலத்த பாதுகாப்பு அளிக்க 'ட்ரோன்'கள் பயன்படுத்தப்படவுள்ளன. பாதுகாப்பு அச்சு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.