Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. 21 ஆண்டுகளுக்குப் பிறகு... ஃபிஃபா தர வரிசையில் டாப் 100ல் என்ட்ரி கொடுத்த இந்தியா! ஐபிஎல் போட்டிகளில் நாம் பிஸியாக இருக்கிறோம். ஆனால், இந்த நேரத்தில் நம் கால்பந்து அணி சைலன்டாக ஒரு சாதனையைச் செய்துள்ளது. ஃபிஃபா (FIFA) வெளியிட்டுள்ள சர்வதேச கால்பந்து தரவரிசையில் இந்திய அணி 100-வது இடத்தைப் பிடித்துள்ளது. 1996-ம் ஆண்டு 94-வது இடத்தை இந்திய அணி பிடித்திருந்தது. தற்போது வரை ஃபிஃபா தர வரிசையில், இந்தியாவின் சிறந்த நிலை அதுதான். கடந்த மாதம் வெளியிடப்பட்டிருந்த பட்டியலில், இந்திய அணி 101-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்திருந்தது. 64 ஆண்டுகளுக்குப் பிறகு மியான்மர் மண்ணிலேயே, அந்த அணியை வீழ்த்தியது, கம்போடியா அணியைச் சாய்த்தது ஆக…

  2. 21 ஆண்டுகால வக்கார் யூனுஸ் சாதனையை தகர்த்த அஸ்வின்,முரளியையும் முந்தினார். 21 ஆண்டுகால வக்கார் யூனுஸ் சாதனையை தகர்த்த அஸ்வின்,முரளியையும் முந்தினார். இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி சூழல் பந்து வீச்சாளரான அஸ்வின் ,வேகமான 200 டெஸ்ட் விக்கெட் சாதனையை படைத்த இரண்டாவது வீரரானார். கான்பூர் மைதானத்தில் இந்திய, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்த சாதனையை படைத்துள்ளார். இந்த டெஸ்ட்டுக்கு முன்னதாக 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அஸ்வின், 193 டெஸ்ட் விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய நிலையில் கான்பூர் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும்,2 வது இன்னிங்ஸில் இதுவரை 3 விக்கெட்டுகளையும் கைப…

  3. 21 ரன்னுக்குள் ஆல்அவுட் ஆக்கி இந்திய மகளிர் அணி உலக சாதனை! #AsiaT20 பேங்காக்கில் ஆசிய மகளிர் டி20 கோப்பைத் தொடர் நடந்து வருகிறது. இதில் இந்திய மகளிர் அணி, ஒரு போட்டியைக் கூடத் தோற்காமல் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. ஹர்மன் பீத் கவுர் தலைமையில் இந்திய மகளிர் அணி ஆசிய கோப்பையில் கலந்து கொண்டுள்ளது. மிதாலி ராஜ், ஜூலன் கோஸ்வாமி, மன்ஸி ஜோஷி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இந்திய அணியில் இடம்பெற்றிருக்கின்றனர். ஆசிய கோப்பையைப் பொறுத்தவரையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நேபால், தாய்லாந்து உள்ளிட்ட ஆறு அணிகள் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியோடு ஒரு முறை மொத வேண்டும். இம்முறையில் ஒவ்வொரு அணியும் தலா ஐந்து போட்டிகளில் விளையாடு…

  4. 21ஆம் நுாற்றாண்டின் இணையற்ற கிரிக்கெட் வீரராக சச்சின் தேர்வு! மெல்பர்ன்: 21 ஆம் நுாற்றாண்டின் மிகச்சிறந்த டெஸ்ட் வீரராக சச்சின் தெண்டுல்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு தெரிவித்துள்ளது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா இணையதளத்தில் நடத்திய வாக்கெடுப்பில் அவர் முதலிடம் பிடித்துள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. இந்த ஆன்லைன் வாக்கெடுப்பிற்கு முன்னதாக, கடந்த 2000 ஆம் ஆண்டுக்கு பிறகு கிரிக்கெட்டில் சாதித்த, 100 வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் இருந்து சிறந்த வீரர்களை தேர்வு செய்ய வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதில் சச்சினுக்கு 23 சதவீத வாக்கு கிடைத்தது. இரண்டாவது இடத்தை இலங்கை வீரர் சங்கக்காரா 14 சதவீத வாக்குகளுடன் பெற்றார். மூன்றாவது இடத்தை கி…

  5. 21ஆம் நூற்றாண்டின் முதல் சர்வதேச கிரிக்கெட் வீராங்கனை 21ஆம் நூற்றாண்டின் முதல் சர்வதேச கிரிக்கெட் வீராங்கனை என்ற பெருமையை அயர்லாந்து வீராங்கனை கேபி லூயிஸ் பெற்றுள்ளார். 13 ஆண்டுகள் 166 நாட்களே நிரம்பிய கேபி லூயிஸ் சீனியர் கிரிக்கெட் அணிக்கு ஆடிய, 21ஆம் நூற்றாண்டில் பிறந்த முதல் கிரிக்கெட் வீராங்கனை ஆவார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 20 ஓவர் கிரிக்கெட் சர்வதேச போட்டியில் இவர் அயர்லாந்துக்காக தன் முதல் போட்டியில் ஆடினார். இவரது முதல் போட்டி அபாரமாக அமையவில்லை. இவர் 5 ரன்கள்தான் அடித்தார். தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு எதிராக அயர்லாந்து மகளிர் அணி படுதோல்வியைச் சந்தித்தது. அடுத்த போட்டியில் 12 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். அந்தப் போட்டியிலும் அய…

  6. 22 வருட சாதனையை முறியடிப்பாரா யூனுஸ்கான் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையேயான 3 டெஸ்ட், 4 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் கொண்ட கிரிக்கெட் போட்டி தொடர் அபூதாபியில் இன்று ஆமை்பமாகிறது. இந்த தொடரின் 3 போட்டிகள் கொண்ட முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. மிஸ்பா உல் ஹக் தலைமையிலான பாகிஸ்தான் அணி, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய உற்சாகத்துடன் இந்த போட்டியில் பங்கேற்கிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர் யூனுஸ்கான் மேலும் 19 ஓட்டங்கள் எடுத்தால், டெஸ்ட் போட்டியில் அதிக ஓட்டங்கள் குவித்த பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை கடந்த 22 ஆண்டுகளாக தக்க வைத்து இருக்கும் முன்னாள் தலைவர் ஜாவித் மியாண்டட் (124…

  7. சுற்றுலா நியூசிலாந்து அணியுடன் நடைபெறவுள்ள இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி 6 நாட்கள் கொண்ட போட்டியாக நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் கண்டிப்பாக ஓய்வு நாள் ஒன்று உண்டு. இதனால் டெஸ்ட் போட்டி 6 நாட்கள் நடைபெற்று வந்தது. கடந்த 2008ஆம் ஆண்டு டாக்காவில் நடந்த டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி 6 நாட்கள் விளையாடியது. அப்போது அந்நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றதால் அந்த குறிப்பிட்ட நாள் ஓய்வு நாளாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையில் இதுபோன்ற அரிய நிகழ்வு நடைபெற உள்ளது. இலங்கை அணி கடந்த 2001-ம் ஆண்டு சிம்பாப்வே அணிக்கு எதிராக 6 நாட்கள் கொண்ட டெஸ்…

  8. 23 தங்கம் வென்ற பெல்ப்ஸ் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு மைக்கேல் பெல்ப்ஸ் ரியோ ஒலிம்பிக்கில் நேற்று நடைபெற்ற ஆடவர் 4x100 மீட்டர் தொடர் நீச்சல் போட்டியில் மைக்கேல் பெல்ப்ஸ் தலைமையிலான அமெரிக்க அணி தங்கப் பதக்கம் வென்றது. 31 வயதாகும் பெல்ப்ஸ் ரியோ ஒலிம்பிக்கில் 5 தங்கம், ஒரு வெள்ளிப் பதக்கம் குவித்துள்ளார். ஒட்டுமொத்தமாக அவர் இந்தப் ஒலிம்பிக் போட்டியோடு 23 தங்கப் பதக்கங்களை வேட்டையாடி உள்ளார். 2004-ல் நடைபெற்ற ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் தொடங்கி இதுவரையில் 23 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 28 பதக்கங்களை வென்றுள்ளார் பெல்ப்ஸ். இந்நிலையில் இந்த ஒலிம்பிக் போட்டியோடு ஓய்வு பெறுவதாக பெல்ப்ஸ் அறிவித்துள்…

  9. 236 ரன்களை சேஸ் செய்து புதிய சாதனை படைத்த குப்தில்- லாதம் ஜோடி! ஒருநாள் போட்டியில், 236 ரன்களை ஒரு விக்கெட் கூட இழக்காமல் சேஸ் செய்து நியூசிலாந்து அணி புதிய சாதனையை படைத்துள்ளது. நியூசிலாந்தின் தொடக்க வீரர்கள் குப்தில் 116 ரன்களும், லாதம் 110 ரன்களும் அடித்து இந்த புதிய சாதனை நிகழ்த்தினர். முதல் ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து அணி நிர்ணயித்த 303 ரன்களை ஜிம்பாப்வே அணி சேஸ் செய்து எளிதாக வெற்றி பெற்றது. ஹராரே நகரில் நடந்த 2வது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணி, 235 ரன்களை எடுத்தது. இதனை நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களே அடித்து முடித்து விட்டனர். இதனால் நியூசிலாந்து அணி, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஒருநாள் போட்டியில் ஒரு ஜோட…

  10. விந்தைமிகு தருணத்தில் உத்தியோகபூர்வ க்ளாஸ்கோ 2026 சின்னம் ஃபின்னி அறிமுகப்படுத்தப்பட்டது 24 JUL, 2025 | 05:00 PM (நெவில் அன்தனி) ஐக்கிய இராச்சியத்தின் க்ளோஸ்கோவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள 23ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கான உத்தியோகபூர்வ ஃபின்னி சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2026 ஜூலை 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழாவின் 23ஆவது அத்தியாயம் க்ளாஸ்கோ 2026 பொதுநலவாய விளையாட்டு விழா என அழைக்கப்படுகிறது. இந்த விழா ஆரம்பமாவதற்கு சரியாக ஒரு வருடத்திற்கு முன்னர் இந்த சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது விசேட அம்சமாகும். தூய்மை, அப்பாவித்தனம், ஆண்மை மற்றும் சக்தியைப் பிரதிபலிக்கும் பெருமைமிகு க்ளாஸ்வேஜியன் யுனிகோன் ஃபின்னி என அழைக்கப்படும் இந்த சின்னம், ஜூலை…

  11. 24 தடவை எவரஸ்ட் சிகரத்தில் ஏறி நேபாள வீரர் சாதனை காத்மாண்டு இமயமலையில் உள்ள உலகின் மிக உயரமான எவரஸ்ட் சிகரத்தில் 24 முறை ஏறி நேபாள வீரர் காமி ரிடா ஷெர்பா உலக சாதனை படைத்துள்ளார். உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரமாகும்.கடல் மட்டத்திலிருந்து 8848 மீட்டர் உயரத்தில் எவரெஸ்ட் சிகரம் அமைந்துள்ளது. நேபாளத்தை சேர்ந்த மலையேறும் வீரர் காமி ரிடா ஷெர்பா 50. இவர் ஏற்கனவே 22 முறை எவரஸ்ட் சிகரத்தில் ஏறியுள்ளார். 23வது முறையாக கடந்த 15ல் எவரஸ்ட் சிகரத்தில் ஏறினார். இந்நிலையில் இந்திய காவல்துறையை சேர்ந்த மலையேறும் குழுவினருடன் எவரெஸ்ட் சிகரத்துக்கு ஷெர்பா மீண்டும் புறப்பட்டார். நேற்று காலை 6:38 மணிக்கு இந்திய குழுவினருடன் எவரெஸ்ட் சிகரத்தை சென்றடைந்தார். …

  12. 24 மணி நேரம்.. 2 நாடுகள்... 10 விக்கெட்டுகள்: மலிங்காவின் அயராதப் பந்து வீச்சு Published : 04 Apr 2019 18:36 IST Updated : 04 Apr 2019 18:36 IST ஐபிஎல் கிரிக்கெட்டுக்கு அனுப்புங்கள் என்ற பிசிசிஐ கோரிக்கைக்கு அடிபணிந்து மலிங்காவை மும்பை இந்தியன்சுக்காக இலங்கை கிரிக்கெட் வாரியம் ரிலீஸ் செய்தது. மலிங்கா நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக பிரமாதமாக வீசி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆனால் உடனடியாக இலங்கை புறப்பட்டார். ஏனெனில் அங்கு உலகக்கோப்பை இலங்கை அணியைத் தேர்வு செய்வதற்கான முன்னோட்ட சூப்பர் ஃபோர் புராவன்ஷியல் 50 ஓவர் கிரிக்கெட் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது, இது முடிந்துதான் அவர் ஐபிஎ…

  13. 240 பக்க புத்தகம்.. எல்லோரும் இதை பின் பற்றியே ஆகணும்.. ஐபிஎல் அணிகளுக்கு பிசிசிஐ கிடுக்கிப்பிடி.! மும்பை : 2020 ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் மாதம் துவங்க உள்ளது. பிசிசிஐ அதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளது கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நடுவே நடக்க உள்ள ஐபிஎல் தொடர் என்பதால் பிசிசிஐ கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக வீரர்கள் மற்றும் ஊழியர்களின் உடல்நலனை பாதுகாக்க வேண்டிய கடமையும் உள்ளது. முன்னெச்சரிக்கை பெருந்தொற்று நோயான கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். அனைத்து ஐபிஎல் அணிகள், வீரர்கள், ஊழியர்கள் என அனைவரும் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை விதிமுறைகளை வகுத்து வருகிறது பிசிசிஐ. …

    • 1 reply
    • 792 views
  14. நியூஸிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அவுஸ்திரேலிய அணி வெற்றிபெற்று டெஸ்ட் தொட‍ைரை தனதாக்கியுள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி அவுஸ்திரேலிய அணியுடன் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பேர்த்தில் இடம்பெற்ற முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 296 ஓட்டங்களினால் வெற்றிபெற்று, தொடரில் முன்னிலை பெற்றிருந்தது. இந் நிலையில் இரு அணிகளுக்கிடையேயான இரணடாவது டெஸ்ட் போட்டி கடந்த 26 ஆம் திகதி மெல்போர்னில் ஆரம்பமாகி இடம்பெற்று வந்தது. இதில் முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலிய அணி 467 ஓட்டங்களை குவிக்க, பதிலுக்கு நியூஸிலாந்து அணி 148 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 319 ஓட்டங்களினால் …

    • 0 replies
    • 388 views
  15.  24ஆம் திகதி அஜ்மலுக்கு அக்கினிப் பரீட்சை விதிமுறைகளுக்கு முரணாகப் பந்துவீசுகிறார் என்பது நிரூபிக்கப்பட்டதால் பந்துவீசுவதற்கு தடைசெய்யப்பட்டிருக்கும் பாகிஸ்தான் அணி வீரர் சயிட் அஜ்மல், வரும் 24ஆம் திகதி சென்னையில் நடைபெறவிருக்கும் ஐ.சி.சி.யின் பந்துவீச்சுப் பரிசோதனையில் பங்குகொள்கிறார். இந்தப் பரிசோதனைக்கு கடந்த டிசெம்பர் மாதம் 7ஆம் திகதி முதலில் நிர்ணயிக்கப்பட்டிருந்தபோதிலும் அஜ்மல் முழுமையாகத் தயாராகாததால், திகதியை பின்போடுமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை கோரிக்கை விடுத்திருந்தது. அதனையடுத்து ஐ.சி.சி.யினால் ஜனவரி 24 இற்கு பரிசோதனை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்தப் பரிசோதனையில் அஜ்மல் தனது புதிய பந்துவீச்சுமுறை, விதிகளுக்கு அமைவானது என நிரூபிப்பாராகவிருந்தால் அவர்ம…

  16. 25 ஆவது சதமடித்த ரிக்கி பொண்டிங் சதச் சாதனையில் 2 ஆவது இடத்தில் [21 - December - 2007] [Font Size - A - A - A] அவுஸ்திரேலிய கப்டன் ரிக்கி பொண்டிங் ஒரு நாள் போட்டிகளில் 25 ஆவது சதத்தை அடித்து, சதச் சாதனையில் 2 ஆவது இடம்பிடித்துள்ளார். சர்வதேச ஒரு நாள்போட்டியில் 41 சதம் அடித்து இந்திய வீரர் டெண்டுல்கர் முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்ததாக இலங்கை வீரர் சனத்ஜெயசூரிய 25 சதம் அடித்து 2 ஆவது இடத்தில் இருந்தார். அவுஸ்திரேலிய கப்டன் ரிக்கி பொண்டிங் 24 சதம் அடித்து 3 ஆவது இடத்திலிருந்தார். தற்போது நியூசிலாந்து அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் சதம் அடித்து ரிக்கி பொண்டிங் 24 சதத…

  17. 25 ஓட்டங்களுடன் விடை பெற்றார் மெக்கல்லம் நியூஸிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3வது நாளில் அவுஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 505 ஓட்டங்களைக் குவித்துள்ளது. பிறகு தொடர்ந்த நியூசிலாந்தின் 2-வது இன்னிங்ஸில், மெக்கல்லம், 25 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக்கொண்டார். நியூஸிலாந்தின் கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 65.4 ஓவர்களில் 370 ஓட்டங்களைப் பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக மெக்கல்லம் 79 பந்துகளில் 145 ஓட்டங்களையும், ஆண்டர்சன் 72 ஓட்டங்களையும் குவித்தனர். அவுஸ்திரேலியத் தரப்பில் நாதன் லயன் அதிகபட்சமாக 3 விக்கெ…

  18. 25 வருடகால தமிழ் - சிங்கள பகையை தீர்ப்பது மிகக் கடினம்" *மனம் திறந்து பேசுகிறார் சாதனை நாயகன் முரளி தமிழ்க் குழந்தைகளுக்கு கணினி மற்றும் ஆங்கில பாடங்களை கற்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ள உலக சாதனையாளரும், இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளருமான முத்தையா முரளிதரன், இலங்கையில் தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் இடையிலுள்ளது 25 வருடகால நீண்ட பகையெனவும் இந்த இடைவெளியை குறைப்பது மிகக் கடினமெனவும் தெரிவித்துள்ளார். `இந்தியன் எக்ஸ்பிரஸ்'ஸின் தலைமை ஆசிரியர் சேகர் குப்தா என்.டீ.ரீ.வியின் `வோக் த ரோக்' நிகழ்ச்சிக்காக முரளிதரனை நேர்கண்டிருந்தார். அந்த நேர்காணலில் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் குறித்தும் அதனால் தனது பெற்றோர் எதிர்நோக்…

  19. 26 அணிகள் பங்கேற்கும் உள்ளூர் முதல்தர கிரிக்கெட் போட்டிகள் இன்று ஆரம்பம் By Mohammed Rishad - இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இப்பருவகாலத்துக்கான (2019/20) உள்ளூர் முதல்தர கழகங்களுக்கிடையிலான Major A மற்றும் Major B கிரிக்கெட் போட்டித் தொடர்கள் இன்று (31) முதல் இடம்பெறவுள்ளன. நான்கு நாட்களைக் கொண்டதாக A மற்றும் B பிரிவுகளாக நடைபெறவுள்ள இம்முறை போட்டித் தொடரானது எதிர்வரும் ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதன்படி, மேஜர் ஏ பிரிவுக்கான போட்டிகள் 2 குழுக்களாக நடைபெறவுள்ளதுடன், அதில் இடம்பிடித்துள்ள 14 அண…

    • 0 replies
    • 537 views
  20. உலகக் கிண்ணத் தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்களினால் வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. உலகக் கிண்ணத் தொடரின் இரண்டாவது அயைிறுதி ஆட்டம் ஆர்ரோன் பிஞ்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணிக்கும், இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணிக்கிடையிலும் இன்று மாலை 3.00 மணிக்கு பேர்மிங்கமில் ஆரம்பமானது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடி 49 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 223 ஓட்டங்களை மாத்திரம் பெற்றனர். 224 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இங்கிலாந்து அணியின் ஆரம்ப வீரர்களான ஜோசன் ரோய் - ஜோனி பெயர்ஸ்டோ நல்லதொரு இணைப்பாட…

    • 3 replies
    • 1.4k views
  21. 28 வருடங்களின் பின் FIFA உலகக் கிண்ணத்தில் எகிப்து 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்து தொடரில் விளையாடுவதற்கு அரபு உலகில் அதிகளவு மக்களைக் கொண்ட நாடாக விளங்குகின்ற எகிப்து தகுதி பெற்றுக்கொண்டது. ஆபிரிக்க கால்பந்து கூட்டமைப்பு நாடுகளுக்கான தகுதிகாண் போட்டிகளின் 3 ஆவது சுற்றில் 20 அணிகள் 5 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு தங்களது குழுக்களில் உள்ள மற்றைய அணிகளுடன் மோதிக்கொள்கின்றன. ஒவ்வொரு குழுவிலும் முதல் இடம் பெறும் அணி 2018 உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளில் விளையாடத் தகுதி பெறும் நிலையில், E குழுவில் நேற்று கொங்கோ அணியுடன் இடம்பெற்ற போட்டியில் லிவர்பூல் கழகத்துக்காக விளையாடி வருகின்ற எகிப்து அணியின் 25 வயதுடைய இளம் நட்சத்திர…

  22. 28 வருடத்திற்குப் பிறகு இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது பாகிஸ்தான் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 1990-ம் ஆண்டிற்குப் பிறகு தற்போதுதான் ஆஸ்திரேலியாவை இறுதிப் போட்டியில் வீழ்த்தியுள்ளது. #PAKvAUS ஜிம்பாப்வேயில் நடைபெற்ற முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் சேர்த்தது. பின்னர் 184 ரன்கள…

  23. 29 பட்டங்கள் வென்று ஜோகோவிச் சாதனை மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவர் பிரிவில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் மாஸ்டர்ஸ் தொடரில் 28 பட்டங்கள் வென்றிருந்த நடாலின் சாதனையை முறியடித்தார். ஸ்பெயினின் மாட்ரிட் நகரில் நடைபெற்ற இந்த போட்டியின் இறுதிச் சுற்றில் 2-ம் நிலை வீரரும் நடப்பு சாம்பியனும் ஆன இங்கி லாந்தின் ஆன்டி முர்ரேவை 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பட்டம் வென்றார் ஜோகோவிச். இந்த ஆட்டம் 2 மணி நேரம் 6 நிமிடங்கள் நடைபெற்றது. ஆன்டி முர்ரே தோல்வியடைந்ததால் டென்னிஸ் தரவரிசை பட்டியலில் 2-வது இடத்தை சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரிடம் பறிகொடுத்துள்ளார்…

  24.  2ஆவது தடவையாகவும் சம்பியனாகிய மகாஜன பெண்கள் கால்பந்தாட்ட அணி வடமாகாண கல்வி, விளையாட்டு மற்றும் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாண பாடசாலைகளின் அணிகள் மற்றும் வீர, வீராங்கனைகளுக்கிடையில் நடைபெற்று வரும் விளையாட்டுப் போட்டியின், 19 வயதுப்பிரிவு பெண்களுக்கான கால்பந்தாட்டப் போட்டியில், தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி அணி சம்பியனாகியது. பெண்கள் கால்பந்தாட்டப் போட்டிகள் 6, 7 மற்றும் 8ஆம் திகதிகளில், வவுனியா சிறுவர் பூங்கா மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் மாதகல் சென்.ஜோசப் றோமன் கத்தோலிக்க வித்தியாலயமும் மகாஜனக் கல்லூரியும் மோதின. முதற் பாதியாட்டத்தில் மகாஜனக் கல்லூரி வீராங்கனை என்.சானு தனது அணிக்கான முதலாவது கோலைப் பெற்றுக்கொடுத்தார். இரண்டாவ…

    • 2 replies
    • 450 views
  25. Published By: VISHNU 02 APR, 2024 | 10:06 PM (நெவில் அன்தனி) அவுஸ்திரேலியாவுக்கு எதிராக மிர்பூர், ஷியரே பங்ளா தேசிய விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (02) நடைபெற்ற இரண்டாவது மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் வீராங்கனை பரிஹா ட்ரிஸ்னா, ஹெட் - ட்ரிக் முறையில் விக்கெட்களை வீழ்த்தி வரலாறு படைத்தார். மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் அவர் பதிவு செய்த இரண்டாவது ஹெட்-ட்ரிக் இதுவாகும். அதன் மூலம் மகளிர் ரி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 2 ஹெட்-ட்ரிக்குகளைப் பதிவுசெய்த முதலாவது வேகப்பந்துவீச்ச வீராங்கனை என்ற வரலாற்றுச் சாதனையை பரிஹா படைத்தார். இரண்டு வருடங்களுக்கு முன்னர் மலேசியாவுக்கு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.