விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7840 topics in this forum
-
தமிழில் வர்ணனை செய்து உலகின் பல மில்லியன் மக்களின் மனதை வென்ற ரசல் ஆர்னல்ட் இலங்கை அணியின் முன்னாள் இடதுகை துடுப்பாட்ட வீரரும் தற்போதைய பிரபல கிரிக்கெட் வர்ணனையாளருமான ரசல் ஆர்னல்ட் இலங்கை இந்திய டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் தமிழில் கள அறிக்கை (pitch report) வழங்கியதன் மூலம் உலகம் பூராகவும் உள்ள தமிழ் மக்களின் மனதை வென்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://twitter.com/SriniMama16/status/934350376219828224 இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 3 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் 3 …
-
- 1 reply
- 3.3k views
-
-
இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பயன் மியூகின் (FC Bayern München ) அணி! ஜேர்மன் கிண்ண கால்பந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டிக்கு பயன் மியூகின் அணி முன்னேறியுள்ளது. ஜேர்மன் கிண்ண கால்பந்தாட்ட தொடர் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இப் போட்டியில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், லெவகுசன் கழகத்தை 6 க்கு 2 என்ற கோல் கணக்கில் பயன் மியூனிக் கழகம் வெற்றிகொண்டது. இந்தப் போட்டியின் முதல் பாதியில் 3 மற்றும் 9 ஆவது நிமிடங்களில், ரெபேர்ட் லவண்டொஸ்கி இரண்டு கோல்களைப் போட்ட நிலையில், பயன்மியூனிக் கழகம் முன்னிலை பெற்றது. 16 ஆவது நிமிடத்தில் வெலகுசன் கழகம் சார்பில் கோல் ஒன்று போடப்பட்ட போதிலும், முதல் பாதியில் 2 க்கு 1 என்ற கோல் கணக்கி…
-
- 1 reply
- 801 views
-
-
கோலியை தேடிச்சென்று ஒரு ஷாம்பைன் பாட்டிலை இருவரும் பகிர்ந்து குடிப்போம்; சச்சின் நெகிழ்ச்சி: எதற்குத் தெரியுமா? சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி : கோப்புப்படம் - படம்: ஏஎப்ஃபி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை நேரில் தேடிச் சென்று ஒரு ஷாம்பைன் பாட்டில் மதுவை இருவரும் பகிர்ந்து குடிப்போம் என்று சச்சின் டெண்டுல்கர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ஏன், எதற்காக விராட் கோலியை தேடிச்செல்வேன் என்பதை மும்பையில் சமீபத்தில் நடந்த போரியா மஜும்தாரின் ‘லெவன் காட்ஸ் அன்ட் ல பில்லியன் இந்தியன்ஸ்’ புத்தக வெளியீட்டு விழாவில் சச்சினும், விராட் கோலியும் சுவாரஸ்யமாகப் பகிர்ந்து கொண்டனர். …
-
- 0 replies
- 478 views
-
-
பலத்த எதிர்பார்ப்புகளுடன் மேற்கிந்திய தீவுகளுக்கு பயணமாகிய இலங்கை மேற்கிந்திய தீவுகள் அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்வது மிகப் பெரிய சவாலாக இருந்தாலும், இலங்கை அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் தமது திறமைகளை வெளிப்படுத்தினால் இந்த தொடரை வெற்றி கொள்ள முடியம் என இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் தெரிவித்தார். மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியுடனான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியினர், நேற்று (25) இரவு கரீபியன் தீவுகள் நோக்கி பயணமாகினர். அத்துடன், தனது தந்தையின் திடீர் மரணத்தையடுத்து மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் தொடரிலிருந்து த…
-
- 0 replies
- 398 views
-
-
100 ரன்களை வாரி வழங்கி மோசமான சாதனை படைத்த நியூசி. வீரர்! இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி பந்துவீச்சாளர் ஜேக்கப் டஃப்பி(jacob duffy), 10 ஓவர்களில் 100 ரன்களை வழங்கி சாதனை படைத்துள்ளார். கடைசி ஒருநாள் போட்டி நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே நேற்று மத்தியப்பிரதேசம் இந்தூரில் 3ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்றது. ஏற்கெனவே முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றிருந்ததால் இன்றைய போட்டியிலும் வெல்லும் முனைப்புடன் களமிறங்கியது. ஆறுதல் வெற்றியையாவது பெற வேண்டும் என்ற நோக்கில் நியூசிலாந்து களம் கண்டது. இதையடுத்து, நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. அதன்படி, ம…
-
- 1 reply
- 750 views
- 1 follower
-
-
கபில் தேவின் 175 ரன் இன்னிங்ஸைக் கண்டு மிரண்டு போனேன்: கிரேம் ஹிக் 1983 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்திய அணியில் கேப்டன் கபில் தேவ் 175 ரன்கள் எடுத்ததை நேரில் பார்த்து மிரண்டு போனேன் என்று ஜிம்பாப்வே நாட்டுக்காரரான முன்னாள் இங்கிலாந்து பேட்ஸ்மென் கிரேம் ஹிக் கூறியுள்ளார். கிரேம் ஹிக் வயது அப்போது 17. ஜிம்பாப்வேயிற்கு டெஸ்ட் தகுதி கிடைக்கவில்லை. கபில் 175 ரன்கள் அடித்த போட்டியின் போது கடைசி 10 ஓவர்கள் ஜிம்பாப்வே அணிக்கு பதிலி வீரராக பீல்டிங் செய்துள்ளார் கிரேம் ஹிக். இந்த அனுபவம் பற்றி கிரேம் ஹிக் பகிர்ந்து கொண்ட போது, “அவர் ஆட்டததைப் பார்த்து மிரண்டு போனேன், கபிலின் பேட்டிங் என்னை வியப்பில் ஆழ்த்தியது. கடைசி 10 ஓவர்கள் நான் பத…
-
- 0 replies
- 355 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டியில் நேபாள கிரிக்கெட் அணி வரலாற்றுச் சாதனைகளைப் படைத்துள்ளது. 42 நிமிடங்களுக்கு முன்னர் இப்படி ஒன்று இதுவரை நடந்ததும் இல்லை, இனி நடக்குமா என்றும் தெரியாது என்று கூறும் வகையில் நேபாள கிரிக்கெட் அணி வீரர்கள் தங்களது உக்கிரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு கிரிக்கெட் போட்டியில் நேபாள கிரிக்கெட் அணி வரலாற்றுச் சாதனைகளைப் படைத்துள்ளது. அதிக வேகமான அரைச் சதம், அதி வேகமான சதம் என, டி20 போட்டியில் 300 ரன்கள் என அந்த அணி படைத்த உலகச் சாதனைகள் கிரிக்கெட் உலகை பிரமிக்க வைத்திருக்கின்றன. …
-
- 1 reply
- 342 views
- 1 follower
-
-
கிரிக்கெட் துறையில் சிக்கல்களைத் தீர்ப்பதற்கு இதுவே தருணம் முரளிதரன், மஹேலவும் ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளனர் - புதிய இடைக்கால நிர்வாகக் குழுத்தலைவர் சிதத் வெத்தமுனி கூறுகிறார் ''கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்று பல்லாண்டுகளாக மகிழ்ச்சியுடன் பொழுதைக் கழித்துவரும் என்னிடம் இடைக்கால நிர்வாக சபைத் தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு அமைச்சர் கேட்டபோது நான் சற்று தயங்கினேன். ஆனால் கிரிக்கெட் விளையாட்டின்மீது அவர் கொண்டுள்ள அக்கறையானது என்னை மிகவும் கவர்ந்தது. அவரது தந்தையைப் போன்றே (முன்னாள் அமைச்சர் மறைந்த காமினி திசாநாயக்க) அவரிடம் கிரிக்கெட் விளையாட்டுத்துறையின் மீது காணப்படும் அக்கறை என்னை மிகவும் கவர்ந்தது. கிரிக்…
-
- 1 reply
- 398 views
-
-
இங்கிலாந்தில் சங்கா சதம் இங்கிலாந்தின் சரே பிராந்திய அணிக்காக நேற்று களமிறங்கிய குமார் சங்கக்கார ஆட்டமிழக்காமல் 112 ஓட்டங்களை பெற்றுள்ளார். சரே பிராந்திய அணிக்காக ஒப்பந்த அடிப்படையில் விளையாடிவரும் சங்கா, கிளமோர்கன் அணிக்கெதிரான போட்டியிலேயே சதம் அடித்துள்ளார். இதே அணிக்காகவே கெவின் பீட்டர்சன் தன் மீள் வருகைக்காக விளையாட ஆரம்பித்துள்ளார். அவர் 19 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் சரே அணி, முதல் நாள் நிறைவில் 3 விக்கெட்களை இழந்து 363 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. 109 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுள்ள ஸ்டீவன் டேவிஸ் மற்றும் குமார் சங்ககார ஆகியோர் இணைந்து 213 ஓட்டங்களை பெற்றுள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/144318#sthash.O5…
-
- 1 reply
- 393 views
-
-
3வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தானை வென்ற தென்னாபிரிக்கா தொடரில் 2-1 என முன்னிலை January 26, 2019 பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 13 ஓட்ட வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. ஏற்கனவே இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இரு அணிகளும் 1-1 என சமநிலையில் இருந்த இந்நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்றையதினம் செஞ்சூரியனில் நடைபெற்றது. இதில் நாணயச்சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்த நிலையில் நிர்ணயிக்…
-
- 0 replies
- 301 views
-
-
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி.. டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பவுலிங்! ஹராரே: ரஹானே தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் இரு டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே சென்றுள்ளது. முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இன்று டாசில் வென்ற ஜிம்பாப்வே முதலில் ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்துள்ளது. டோணி தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் வங்காளதேசத்துக்கு எதிராக ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. இதனால் ஜிம்பாப்வே தொடரில் அனைத்து ஆட்டத்திலும் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இந்திய அணிக்கு உள்ளது. அவ்வாறு வெற்றி பெற்றால்தான் ஒருநாள் தரவரிசையில் இந்தியாவால் 2வது இடத்தில் நீடிக்க முடியும். ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணியில், வழக்கமான கேப்டன் ட…
-
- 17 replies
- 602 views
-
-
“El Clásico” என்பது Spain நாட்டில் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாக நடந்து வரும் இரு கழகங்களிற்கிடையிலான உதைபந்தாட்ட போட்டி என்பதை விட போர் என்றே சொல்லலாம். El Clasico ஆனது Real Madrid மற்றும் FC Barcelona அணிகளிற்கிடையில் நடக்கும் ஆட்டத்தை குறிக்கும். Coca Cola குளிர்பாணத்தில் உலக புகழ் போல் El Clasico உதைபந்தாட்டத்தில் உலகறிந்த ஒரு ஆட்டம். 109 ஆண்டுகளில் 240ற்க்கு மேற்பட்டஆட்டங்களை தாண்டிய இந்த வரலாற்றை வரிசைப்படி பார்ப்போம். 1902 - 1906 இந்த இரு கழகங்களிற்கிடையிலான முதலாவது போட்டி 13. Mai 1902 அன்று நடைபெற்றது. Real Madrid கழகம் உருவாகி ஒரு சில மாதங்களே ஆகி இருந்தது. FC Barcelona கழகம் கடந்த 3 ஆண்டுகளிற்க்கு முன்னமே உருவாகியிருந்தது. உலகையே கவர்ந்திழுக்…
-
- 2 replies
- 1.3k views
-
-
ரூ.60 லட்சத்துக்கு விலை போன பிராட்மேன் சட்டை! சிட்னி: ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரிக்கெட் ஜாம்பவான் பிராட்மேன் விளையாட்டின்போது அணிந்த சட்டை ரூ.60 லட்சத்துக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரிக்கெட் ஜாம்பவான் மறைந்த பிராட்மேன் பயன்படுத்திய பொருட்கள் அனைத்தையும் அந்நாட்டு அரசு அருங்காட்சியகத்தில் பத்திரமாக பாதுகாத்து வருகிறது. இதில் உள்ள பிசேர் எனப்படும் பச்சை கலர் மேல் சட்டை 60 லட்ச ரூபாய்க்கு விற்பனையாகி உள்ளது. 1936–37ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஆசஷ் டெஸ்ட் தொடரில் பிராட்மேன் பயன்படுத்தி இருந்த மேல் சட்டைதான் அது. தற்போது அதிக தொகைக்கு விற்பனையாகியுள்ளது. http://www.vikatan.com/news/article.php?aid=52117
-
- 0 replies
- 460 views
-
-
படத்தின் காப்புரிமைSANKAR VARATHAPPAN/ FACEBOOK கிரிக்கெட் விளையாட்டின் மீதான தீராத காதலும், கடின உழைப்பும் ஒரு தமிழக இளைஞரை குவைத் தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பெற செய்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் பாச்சல் கிராமத்து இளைஞர்களுக்கான விளையாட்டு கிளப்பான பாச்சல் கிரிக்கெட் கிளப்பிலிருந்து தொடங்கியதுதான் கிரிக்கெட் வீரர் சங்கர் வரத்தப்பனின் சாதனைப் பயணம். 2019ம் ஆண்டு ஜூலை மாதம் சிங்கப்பூரில் நடைபெறவுள்ள ஆசிய நாடுகளுக்கான டி20 தகுதிச்சுற்று கிரிக்கெட் போட்டியில் குவைத் நாட்டின் தேசிய அணியில் ஓபனிங் பேட்ஸ்மானாக விளையாடவுள்ளார் தமிழகத்தை சேர்ந்த சங்கர். கைத்தறி நெசவாளர்கள் அதிகமுள்ள பாச்சல் கிராமத்தில் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதைவிட விசைத்தறி ஆலைகளுக்கு …
-
- 0 replies
- 1.2k views
-
-
எதிர்வரும் 2023 ஆம் ஆண்டுக்கான ஐ.சி.சி. 13 ஆவது ஆண்களுக்கான சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரானது இந்தியாவில் நடைபெறவுள்ளதாக ஐ.சி.சி. தகவல் வெளியிட்டுள்ளது. இத் தொடரானது 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 9 ஆம் ஆரம்பமாகி மார்ச் 26 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன் இறுதிப் போட்டியில் மும்பையில் இடம்பெறும். இந்தியா 1987, 1996 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் ஆசிய அண்டை நாடுகளுடன் இணைந்து சர்வதேச ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரை நடத்தியிருந்தது. எனினும் இம்முறை ஏனைய நாடுகளுடன் கைகோர்க்காது தனியாக இத் தொடரை நடத்துவது இதுவே முதற் தடவை என்பதும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/60491
-
- 0 replies
- 367 views
-
-
உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டி – நியூஸிலாந்து ஐந்தாவது முறையாக சம்பியனானது July 22, 2019 உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டியில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தி நியூஸிலாந்து அணி ஐந்தாவது முறையாக சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளது. 16 நாடுகள் பங்குபற்றும் உலகக் கிண்ண வலைபந்தாட்டப் போட்டி கடந்த 12 ஆம் திகதி இங்கிலாந்தினல் லிவர்பூல் எரினா உள்ளக அரங்கில் ஆரம்பமாகியிருந்தது. இந் நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் நியூஸிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் போட்டியிட்ட நிலையில் 52-51 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணி வென்று சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளது இதேவேளை பிளேஓப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை இங்கிலாந்து 58-42 என்ற…
-
- 0 replies
- 491 views
-
-
2015 அரச அதிபர் வெற்றிக்கிண்ணம்: யாழ். மாவட்ட செயலக அணியினர் வசம் யாழ். மாவட்ட செயலக நலன்புரிக் கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இவ்வருடத்திற்கான அரச அதிபர் வெற்றிக்கிண்ணத்தினை யாழ். மாவட்ட செயலக அணியினர் தனதாக்கிக் கொண்டனர். நேற்று முன்தினம் வேலணை மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இறுதி நிகழ்வுகளும், வெற்றி பெற்றோருக்கான பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றதுடன் புலமைப்பரிசிலில் சிறப்பு சித்தியை பெற்ற தீவக மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன. நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் உரையாற்றுகையில், பதினைந்து பிரதேச செயலக மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களிடையே நடாத்தப்படும் இவ்வெற்றிக் கிண்ண நிகழ்வு ஆறாவது வருட…
-
- 40 replies
- 5.3k views
-
-
மைக்கல் ஷூமாக்கர் குணமடைவதற்கான நம்பிக்கை உள்ளது - நெருங்கிய நண்பரான ரொஸ் பிரவுண் கூறுகிறார் பனிச்சறுக்கலில் ஈடுபட்டபோது படுகாயமடைந்த போர்மியூலா வன் முன்னாள் சம்பியனான மைக்கல் ஷூமாக்கர் குணமடைவதற்கான நம்பிக்கை இன்னும் உள்ளது என அவரின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான ரொஸ் பிரவுண் தெரிவித்துள்ளார். 2013 டிசெம்பர் மாதம் பிரான்ஸின் அல்ப்ஸ் மலைப்பகுதியில் பனிச்சறுக்கலில் ஈடுபட்டிருந்தபோது, மைக்கல் ஷூமாக்கர் விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்தார். அதையடுத்து, பிரான்ஸிலுள்ள வைத்தியசாலையில் 159 நாட்கள் கோமா நிலையில் இருந்த அவர், தற்போது சுவிட்ஸர்லாந்திலுள்ள தனது வீட்டில் சிகிச்சை பெற்று வருகிறார். …
-
- 0 replies
- 215 views
-
-
உலக இருபதுக்கு-20 தொடரில் அயர்லாந்துக்காக ராங்கின் எதிர்வரும் வருடம் இடம்பெறவுள்ள உலக இருபதுக்கு-20 தொடரில் மீண்டும் அயர்லாந்து அணிக்காக வேகப்பந்துவீச்சாளர் பொயிட் ராங்கின் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதியாக, 2012ஆம் ஆண்டு உலக இருபதுக்கு-20 தொடரில் அயர்லாந்து அணிக்காக பங்கேற்ற ராங்கின், அதன் பின்னர், 2013ஆம் ஆண்டுக்கும் 2014ஆம் ஆண்டுக்குமிடைப்பட்ட பகுதியில் இங்கிலாந்து அணிக்காக 11 போட்டிகளில் பங்கேற்றிருந்தார். அதன் பின்னர், இங்கிலாந்து அணியில் வாய்ப்புக்கள் கிடைக்காத நிலையிலேயே, தற்போது அவர் அயர்லாந்துக்கு மீளத் திரும்புகிறார். இதன்படி, இறுதியாக கடந்த வருடம் ஜனவர் மாதம் 17ஆம் திகதி இங்கிலாந்து அணிக்காக பங்கேற் ராங்கின், சர…
-
- 0 replies
- 328 views
-
-
2015 ல் அதிக சதம் அடித்து சங்கா சாதனை December 31, 2015 2015 ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் குவித்த வீரர்கள் பட்டியலில் இலங்கை கிரிக்கட் அணியின் நட்சத்திர வீரர் குமார் சங்ககார முதலிடத்திலுள்ளார். இந்த வருடத்தில் 14 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள சங்ககார 5 சதங்களை அடித்து இந்த சாதனையை படைத்துள்ளார். இவருடன் இணந்து வில்லியர்ஸூம் 5 சதங்களை அடித்து முதலிடத்திலுள்ளார். இவர்களுக்கு அடுத்ததாக அம்லா, டில்சான், டெய்லர், குப்தில், ஆகியோர் நான்கு சதங்களை அடித்து இரண்டாம் இடத்தை பெற்றுள்ளனர். குமார் சங்ககாரவில் 5 சதங்களுள் 2015 ஆம் ஆண்டு உலகக்கிண்ண போட்டியில் அவர் பெற்ற 4 சதங்களும் உள்ளடக்கம். ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 4 சதங்களை பெற்ற சாதன…
-
- 0 replies
- 487 views
-
-
சங்கக்கார தலைமையில் பாகிஸ்தான் செல்லும் எம்.சி.சி. Published by J Anojan on 2019-12-18 16:35:53 மெர்லிபோன் கிரிக்கெட் கிளப் 46 ஆண்டுகளுக்குப் பின்னர் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. குமார் சங்கக்கார தலைமையில் எம்.சி.சி. பாகிஸ்தானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வது விசேட அம்சமாகும். எம்.சி.சி. தலைமையில் ஓர் அணி பாகிஸ்தானுக்கு இதன்போது சுற்றுப் பயணம் மேற்கொண்டு, அங்கு லாகூரில் இடம்பெறும் போட்டிகளில் பங்கேற்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. கடந்த 2009 ஆம் ஆண்டு லாகூரில் இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதலின் பின்னர் பாகிஸ்தானின் கிரிக்கெடானது பெருமளவு வீழ்ச்சியடைந்திரு…
-
- 0 replies
- 521 views
-
-
இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரில் தென்னாபிரிக்காவை அவுஸ்திரேலியா வீழ்த்தியது. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலாவது போட்டியை அவுஸ்திரேலியாவும், இரண்டாவது போட்டியை தென்னாபிரிக்காவும் வென்றிருந்த நிலையில், கேப் டெளணில் நேற்றிரவு நடைபெற்ற தீர்மானமிக்க மூன்றாவது போட்டியை அவுஸ்திரேலியா வென்றதன் மூலமே தொடரைக் கைப்பற்றியது. ஸ்கோர் விவரம்: நாணயச் சுழற்சி: தென்னாபிரிக்கா அவுஸ்திரேலியா: 193/5 (20 ஓவ. ) (துடுப்பாட்டம்: டேவிட் வோணர் 57 (37), ஆரோன் பின்ஞ் 55 (37), ஸ்டீவ் ஸ்மித் ஆ.இ 30 (15), மிற்செல் மார்ஷ் 19 (16) ஓட்டங்கள். பந்துவீச்சு: தப்ரையாஸ் ஷம்சி 1/25 [4], லுங்கி என்கிடி 1/33 [4], டுவைன் பிறிட்டோறியஸ் 1/42 [4], ககிஸோ றபாடா 1/42 [4], அன்றிச் நொர…
-
- 1 reply
- 638 views
- 1 follower
-
-
கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்ப்பதற்காக இலங்கைக்கான சுற்றுப்பயணத்தின் போது இலங்கைஅணி வீரர்களுடன் கைகுலுக்கப்போவதில்லை என இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட் தெரிவித்துள்ளார். இரண்டு டெஸ்ட் தொடரிற்காக இங்கிலாந்து அணி இலங்கைக்கு புறப்படுவதற்கு முன்னதாக ஜோ ரூட்டிடம் கொரோனா வைரஸ் குறித்து கேள்வி எழுப்பப்பட்டவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கை அணி வீரர்களுடன் இங்கிலாந்து வீரர்கள் கைகுலுக்கப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் தென்னாபிரிக்காவிற்கு எதிரான தொடரின் போது எங்கள் வீரர்கள் பலர் உடல்நலப்பாதிப்பிற்குள்ளானதை கருத்தில்கொள்ளும்போது உடல்ரீதீயான தொடுகையை குறைந்தளவிற்கே வைத்துக்கொள்வதன் அவசியத்தை நாங்கள் உணர்ந்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 322 views
-
-
பார்சிலோனா: ஜாம்பவான்களின் அணிக்கு சரிவு ஏன்? ஏதாவது ஒரு ஃபுட்பால் டீம் பேரு சொல்லுங்க – பார்சிலோனா. ஒரு ஃபுட்பால் பிளேயர் பேரு சொல்லு – மெஸ்ஸி. இந்தக் கேள்விகளுக்கு பெரும்பாலானோர் சொல்லும் பதில் இதுவாகத்தான் இருக்கும். காரணம் இவர்கள் ஐரோப்பாவின் நடப்பு சாம்பியன்கள் என்பதால் மட்டுமல்ல, கடந்த 10 ஆண்டுகளில் 22 கோப்பைகள் வென்று தன்னிகரற்ற அணியாக விளங்குவதால்தான். மெஸ்ஸி, இப்ராஹிமோவிக், தியரி ஹென்றி, நெய்மார், சுவாரஸ், சேவி, இனியஸ்டா, புயோல், வில்லா என உலகின் மிகப்பெரிய வீரர்களெல்லாம் இவ்வணிக்காக விளையாடியுள்ளனர். ஸ்பானிஷ் லா லிகா, கோபா டெல் ரே, ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக், ஐரோப்பிய சூப்பர் லீக், கிளப் உலகக்கோப்பை என அனைத்தும் தற்போது அவர…
-
- 0 replies
- 514 views
-
-
பந்துவீச்சாளர்களுக்கு ஏற்பட்ட உபாதையின் காரணமாகவே இலங்கை அணி தோல்வியுற்றது - அஞ்சலோ மெத்யூஸ் இங்கிலாந்து தொடரில் பந்துவீச்சாளர்களுக்கு ஏற்பட்ட உபாதையின் காரணமாகவே இலங்கை அணி தோல்வியை தழுவியதாக இலங்கை கிரிக்கெட் அணி தலைவர் அஞ்சலோ மெத்யூஸ் தெரிவித்தார். இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு நாடு திரும்பிய இலங்கை அணி,இங்கிலாந்து தொடர் குறித்து இலங்கை கிரிக்கெட் சபையில் இன்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பிலே மேற்கண்டவாறு மெத்யூஸ் தெரிவித்தார். இங்கிலாந்து சுற்று பயணத்தின் போது இலங்கை அணியின் சில வீரர்கள் தங்களின் திறன்களை மேலும் வலுவூட்டிக் கொண்டனர். அதில் தினேஷ் சந்திமால், தனுஷ்க குணதிலக மற்றும் குஷல் மென்டிஸ் ஆகியோர் அடங்குவதாக தெரிவித…
-
- 0 replies
- 245 views
-