விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7857 topics in this forum
-
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மாவன் அத்தப்பத்து நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால உதவி பயிற்சியாளராக ருவான் கல்பகே நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. அயர்லாந்து, இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்கவுக்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டு இலங்கை அணி விளையாடும் போட்டிகளுக்கே இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை மேலும் தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/articles/2014/04/25/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE…
-
- 0 replies
- 420 views
-
-
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் நீல் சண்முகம் தனது 74 ஆவது வயதில் காலமானார். அண்மைக்காலமாக உடல்நலக்குறைவில் இருந்து வந்த நிலையிலேயே கடந்த செவ்வாய்க்கிழமை காலமானார். இலங்கைக்கு அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து கிடைப்பதற்கு முன்னர் அணியில் இடம்பெற்றிருந்த நீல் சண்முகம் 1964 இல் பாகிஸ்தானுக்கு எதிராக பி. சரவணமுத்து ஓவல் மைதானத்திலும் இந்தியாவுக்கு எதிராக அஹமதாபாத்திலும் உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் வெற்றிகளைப் பதிவு செய்த மைக்கல் திசேரா தலைமையிலான இலங்கை (சிலோன்) அணியில் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2014/04/25/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E…
-
- 0 replies
- 394 views
-
-
இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட துடுப்பாட்ட வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜயவர்தன ஆகியோருக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் சபையினால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நடந்து முடிந்த இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை நிறைவுசெய்துகொண்டு நாடு திரும்பிய இவர்கள், கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போது தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பிலேயே இந்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த ஒழுக்காற்று நடவடிக்கை தொடர்பில் நேற்று (21) நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான தீர்மானத்தை எடுக்குமாறு ஒழுக்காற்றுக்குழுவிடம் …
-
- 2 replies
- 1.4k views
-
-
தென் கொரியாவுக்கு எதிராக இவ் வார இறுதியில் நடைபெறவுள்ள ஆசிய ஐந்து நாடுகள் (ஏஷியன் ஃபைவ் நேஷன்ஸ்) பிரதான பிரிவு றக்பி போட்டியில் பங்குபற்றும் பொருட்டு இலங்கை றக்பி அணி நேற்றிரவு அங்கு புறப்பட்டுச் சென்றது. ஆசிய றக்பி தரப்படுத்தலில் முதல் ஐந்து இடங்களை வகிக்கும் ஜப்பான், ஹொங் கொங், தென் கொரியா, பிலிப்பைன்ஸ், இலங்கை ஆகிய நாடுகள் இப் போட்டியில் லீக் அடிப்படையில் ஒன்றையொன்று எதிர்த்தாடும். இப் போட்டிகளை முன்னிட்டு இலங்கை றக்பி தெரிவுக் குழுவினரால் 23 வீரர்கள் அடங்கிய இலங்கை றக்பி குழாம் பெயரிடப்பட்டுள்ளது. கொழும்பில் கடந்த வருடம் நடைபெற்ற செரெண்டிப் மும்முனை சர்வதேச றக்பி போட்டிகளில் இரண்டாம் இடத்தைப் பெற்ற இலங்கை அணிக்கு தலைவராக விளையாடிய நாமல் ராஜபக்ஷ, தற்போத…
-
- 0 replies
- 519 views
-
-
அதிபர் சபாலிங்கதிற்கு அருகில் இருப்பவர் யோகி ,அவர் நேர் பின்னே பெனியனுடன் நிற்பவர் பொன்னம்மான் .
-
- 2 replies
- 589 views
-
-
அயர்லாந்து, ஆப்கானிஸ்தான், உள்ளிட்ட அசோசியேட் அணிகளும் டெஸ்ட் கிரிக்கெட்டிற்குள் நுழையும் புதிய திட்டத்தை ஐசிசி வகுத்திருப்பது வாக்கு அரசியலே தவிர டெஸ்ட் கிரிக்கெட்டை வளர்ப்பதாக அது அமையாது என்று இயன் சாப்பல் கடுமையாக சாடியுள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள பத்தி ஒன்றில் கூறியிர்ப்பதாவது: முதலில் ஏற்கனவே விளையாடிக்கொண்டிருக்கும் அணி, டெஸ்ட் கிரிக்கெட் நடத்தப்படும் விதம் ஆகியவற்றை முன்னேற்றும் வழியை ஐசிசி பார்க்கவேண்டும், புதிய அணியை இந்த நிலையில் கொண்டு வருவது அதன் வேலையாக இருக்க முடியாது. மேலும் புதிய அணி சேர்க்கை என்ற இந்த அலங்காரப் பேச்சு, மற்றும் திட்டம் ஏற்கனவே இருக்கும் அணிகளில் எதுவும் தகுதி இழக்கச் செய்யப்படமாட்டாது என்பதை தெளிவாக பறை சாற்றுகிறது. அயர்…
-
- 0 replies
- 469 views
-
-
அடுத்த மாதம் வங்களாதேஸ்சில் நடக்க இருக்கும் T20 உலக கிண்ண போட்டி அட்டவனை...மொத்தம் 16 நாடுகள் இந்த உலக கிண்ணப் போட்டியில் கலந்து கொள்ளினம்...அதிலும் கொங் கொங் நேபாள் போன்ற நாடுகளுக்கு இது தான் முதல் T20 உலக கிண்ணப் போட்டி...பொறுத்து இருந்து பாப்போம் இந்த முறை யாருக்கு கிண்ணம் என்று
-
- 212 replies
- 11k views
-
-
பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.) தொடர் தொடங்க இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் போதிய அனுசரணையாளர் கிடைக்காத சோகத்தில் உள்ளனர் அணி நிர்வாகிகள். பல்வேறு சர்ச்சைகளை கடந்து, ஏழாவது பிரிமியர் தொடர் ஏப். 16 ஆம் திகதி ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடங்குகிறது. புனே அணி விலகியதை அடுத்து இம்முறை சென்னை, மும்பை உட்பட மொத்தம் 8 அணிகள் மட்டும் பங்கேற்கின்றன. இதனிடையே டில்லி அணி வீரர்கள் அணியும் ‘ஜெர்சியில்’ இடம்பெற இன்னும் அனுசரணையாளர்கள் கிடைக்கவில்லை. கடந்த ஆண்டில் இருந்த சில தனியார் நிறுவனங்களும் இம்முறை ஆர்வம் காட்டவில்லை. கடந்த முறை 15 ஆக இருந்த பஞ்சாப் அணியின் அனுசரணையாளர் எண்ணிக்கை 4 ஆக குறைந்துவிட்டது. ஐதராபாத் அணிக்கும் 4 அனுசரணையாளர்கள் தான் உள்ளனர். பனசொனிக் நிறுவன இயக்குனர்…
-
- 0 replies
- 612 views
-
-
ஐ.சி.சி.யின் முப்பெரும் நாடுகள் குறித்த முறைமையானது சர்வதேச கிரிக்கெட்டின் மூச்சை நிறுத்திவிடும் என பிரித்தானியாவின் 2014ஆம் ஆண்டின் விஸ்டென் கிரிக்கெட் சஞ்சிகையின் 151ஆவது அல்மனாக் பதிப்பில் கடுமையாக சாடியுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐ.சி.சி) அதிகாரம் மற்றும் வருமானத்தில் இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய மூன்று முப்பெரும் நாடுகள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. இத்திட்டம் இந்தியாவின் அதிகாரத்தினால் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த முப்பெரும் நாடுகள் குறித்து கடந்த புதன்கிழமை வெளியான கிரிக்கெட்டின் பைபிள் என வர்ணிக்கப்படும் விஸ்டென் சஞ்சிகையின் 151ஆவது பதிப்பில் இந்தியாவின் ஆதிக்கத்தில் உருவான 'காலணித்துவ…
-
- 2 replies
- 705 views
-
-
'சர்வதேச இருபது-20, ஓய்வுக்கான காலம் நெருக்குகின்றது" மஹேலவும் ஓய்வு இலங்கை அணியின் முன்னாள் அணித் தலைவரும் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான மஹேல ஜயவர்தன சர்வதேச இருபது-20 போட்டிகளிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இலங்கை அணியின் சாதனை நாயகன் குமார் சங்கக்கார ஓய்வை அறிவித்துள்ள நிலையில் மஹேல ஜயவர்தனவும் தனது ஓய்வை அறிவித்துள்ளார். பங்களாதேஷில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இருபது-20 உலகக் கிண்ணத் தொடருன் ஓய்வு பெறுவதாக அவரும் குறிப்பிட்டுள்ளார். ஐசிசி. யின் உத்தியோகபூர்வ டுவிட்டர் இணையத்தளத்திலேயே மஹேல ஜயவர்தனவின் ஓய்வு தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளதோடு மஹேல மற்றும் சங்கக்கார ஆகியோர் இருபது-20 உலக கிண்ணத் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணியின் ஜேர்சியுடன் ஜோடிய…
-
- 2 replies
- 609 views
-
-
வங்கதேசத்தில் நடந்த இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இலங்கை வென்றுள்ளது. மீர்புரில் நடந்த இறுதியாட்டத்தில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியாவை இலங்கை எளிதில் வீழ்த்தியது இந்த ஆட்டத்தோடு சர்வதேச இருபது ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுகின்ற குமார சங்ககா,ர தனது கடைசி ஆட்டத்தில் அரைசதம் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இருபது ஓவர் கிரிக்கெட்டில் இலங்கை உலகக் கோப்பையை வெல்வதென்பது இதுவே முதல் முறை. ஓய்வுபெறுகின்ற மற்றொரு மூத்த ஆட்டக்காரரான மஹேல ஜெயவர்த்தனவும் 24 ரன்களை எடுத்து அணியை வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்றிருந்தார். இந்திய அணி நிர்ணயித்த 131 ரன்கள் இலக்கை இலங்கை மட்டைவீச்சாளர்கள் இரண்டு ஓவர்கள் மீதமிருக்க எட…
-
- 1 reply
- 646 views
-
-
பாகிஸ்தானை கடைசி 5 ஓவர்களில் சாத்தி எடுத்து பிறகு முதல் 6 ஓவரில் அந்த அணியை போட்டியிலிருந்தே விலக்கிய மேற்கிந்திய அணியின் கொண்டாட்டங்கள் பெரிதாக இல்லை. ஆனால் ஆஸ்ட்ரேலியாவை வீழ்த்தியபோது வெஸ்ட் இண்டீஸ் அணி டான்ஸ், கூத்து என்று கடுமையாக கொண்டாட்டங்களை வெளிப்படுத்தியது. இதற்குக் காரணம் 'மரியாதை மரியாதை' என்கிறார் மேற்கிந்திய ஆல்ரவுண்டர் வைன் பிராவோ. இது குறித்து அவர் கூறியதாவது: "ஆஸ்ட்ரேலியாவென்றால் நாங்கள் பொங்கி விடுவோம், காரணம் உங்களுக்கே தெரியும் என்று நினைக்கிறேன், அந்தப் போட்டி எங்களுக்கு ஒரு முக்கியமான போட்டி, நாங்கள் எங்களுக்கே எங்களை நிரூபித்துக் காட்டுவதிலும், ஆஸ்ட்ரேலியர்களுக்கும் சில பாடங்களைக் கற்றுக் கொடுக்கவும் தீவிரம் காட்டினோம். அதாவது முடிவில் நாம் க…
-
- 2 replies
- 787 views
-
-
பேயார்ன் முனிக் சாம்பியன் மார்ச் 26, 2014. பெர்லின்: ஹெர்தா பெர்லின் அணிக்கு எதிரான பன்டஸ்லிகா( bundesliga ) தொடரின் லீக் போட்டியில் வெற்றி பெற்ற பேயார்ன் முனிக் அணி சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தது. ஜெர்மனியில் உள்ளூர் கிளப் அணிகள் பங்கேற்கும் ஜெர்மன் பன்டஸ்லிகா கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் நேற்று நடந்த லீக் போட்டியில் பேயார்ன் முனிக், ஹெர்தா பெர்லின் அணிகள் மோதின. போட்டியின் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய முனிக் அணிக்கு டோனி கிராஸ் (6வது நிமிடம்), மரியோ (14) ஆகியோர் கோல் அடித்தனர். இதற்கு பெர்லின் அணி வீரர்களால் பதிலடி கொடுக்க முடியவில்லை. பின் இரண்டாவது பாதியில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில் பெர்லின் அணிக்கு ஏட்ரியன் (66) ஒரு கோல் அடித்…
-
- 4 replies
- 556 views
-
-
வெட்டலுக்கு ‘லாரஸ்’ விருது மார்ச் 26, 2014. கோலாலம்பூர்: உலகின் சிறந்த வீரருக்கான ‘லாரஸ்’ விருதை, ஜெர்மனி ‘பார்முலா–1’ கார்பந்தய வீரர் செபாஸ்டியன் வெட்டல் முதன்முறையாக பெற்றார். ‘லாரஸ் உலக விளையாட்டு விருது’ கடந்த 2000ம் ஆண்டு முதல், வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விருது பட்டியலுக்கு, உசைன் போல்ட்(தடகளம்), கிறிஸ்டியானோ ரொனால்டோ(கால்பந்து), ரபெல் நடால்(டென்னிஸ்), செரினா வில்லியம்ஸ்(டென்னிஸ்), இசின்பெயவா(தடகளம்) உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். விருது வழங்கும் விழா மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நேற்று நடந்தது. சிறந்த வீரருக்கான விருதை, ‘பார்முலா–1’ கார்பந்தயத்தில் தொடர்ந்து நான்கு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல், 26, வ…
-
- 0 replies
- 524 views
-
-
-
வடக்கின் போர் என வர்ணிக்கப்படும் பாடசாலைகளுக்கிடையிலான துடுப்பாட்ட போட்டிகள் ஆரம்பமாக உள்ள நிலையில் கல்லுரி மாணவர்கள் யாழ்.நகர வீதிகளில் இசை வாத்தியங்களோடு நிதி சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். - See more at: http://onlineuthayan.com/News_More.php?id=542892713707566447#sthash.V9LwSHlP.dpuf
-
- 69 replies
- 4.6k views
-
-
மார்ஷ் சதம்: மீண்டது ஆஸி., பிப்ரவரி 12, 2014. செஞ்சுரியன்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஷான் மார்ஷ் சதம் கைகொடுக்க, ஆஸ்திரேலிய அணி சரிவிலிருந்து மீண்டது. தென் ஆப்ரிக்கா சென்றுள்ள ஆஸ்திரேலியா அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி செஞ்சுரியனில் நேற்று துவங்கியது. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் கிரேம் ஸ்மித் ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். ஆஸ்திரேலிய அணியில் துாலன் அறிமுக வீரராக வாய்ப்பு பெற்றார். ஸ்டைன் வேகம்: ஆஸ்திரேலிய அணிக்கு ரோஜர்ஸ், வார்னர் ஜோடி மோசமான துவக்கம் தந்தது. முதலில் ரோஜர்ஸ் 4 ரன்களில் அவுட்டானார். ஸ்டைன் வேகத்தில் வார்னர் (12) கிளம்பினார். துாலன் (27), கேப்டன் கிளார்க் (23) விரைவில் நடையை கட்டினர். இதனால…
-
- 18 replies
- 818 views
-
-
இங்கிலாந்தை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ் மார்ச் 01, 2014. ஆன்டிகுவா: இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பொறுப்பாக ஆடிய இங்கிலாந்து வீரர் மைக்கேல் லம்ப் சதம் வீணானது. வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இங்கிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி ஆன்டிகுவாவில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து கேப்டன் ஸ்டூவர்ட் பிராட், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார். திணறல் துவக்கம்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு போவல் (5) மோசமான துவக்கம் கொடுத்தார். மற்றொரு துவக்க வீரர் டுவைன் ஸ்மித் (24) பெரிய அளவில் சோபிக்கவில்லை. அடுத்து வந்த கிர்க் எட்வர்ட்ஸ் (10), டேரன் பிராவோ (2) சொற்ப ரன்னி…
-
- 4 replies
- 643 views
-
-
மூன்று போட்டிகள் கொண்ட முதலாவது போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் அணி 27 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. சுழல் பந்து வீச்சாளர்கள் விருந்தினர் அணிக்கு தலை வலி கொடுத்துள்ளார்கள். மேற்கு இந்திய தீவுகள் : 170/3 இங்கிலாந்து: 143/9 ஆட்ட நாயகன்: மார்லன் சாமுவல் http://www.espncricinfo.com/west-indies-v-england-2013-14/engine/match/636536.html
-
- 0 replies
- 462 views
-
-
ஆசிய கோப்பை : இந்தியா.பாக்., மோதல் பிப்ரவரி 19, 2014. மிர்புர்: ஆசிய கோப்பை தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. இதில் ‘பரம எதிரி’களான இந்தியா, பாகிஸ்தான் அணிகள் வரும் மார்ச் 2ம் தேதி மோதுகின்றன. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏ.சி.சி.,) சார்பில், 12வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் வரும் பிப்., 25ம் தேதி முதல் மார்ச் 8ம் தேதி வரை நடக்கிறது. இதில் ‘நடப்பு சாம்பியன்’ பாகிஸ்தான், இந்தியா, இலங்கை, வங்கதேசம் அணிகளுடன், முதன்முறையாக ஆப்கானிஸ்தான் அணி பங்கேற்கிறது. இத்தொடருக்கான அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி ஒவ்வொரு அணிகளும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை ‘ரவுண்டு ராபின்’ முறையில் லீக் சுற்றில் மோதும். லீக் சுற்றின் முடிவில், புள்ளிப்பட்டியலில் முதலிரண்…
-
- 57 replies
- 3.9k views
-
-
ஆசியக் கோப்பையைக் கைப்பற்றியது இலங்கை! [sunday, 2014-03-09 08:42:39] ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இலங்கை வென்றுள்ளது. நேற்றிரவு மீர்பூரில் நடந்த போட்டியின் இறுதியாட்டத்தில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை வீழ்த்தியுள்ளது. முதலில் மட்டைபிடித்த பாகிஸ்தான் அணியை இலங்கை அணியினர் 260 ரன்களில் கட்டுப்படுத்தியிருந்தனர். பாகிஸ்தான் அணியில் மூன்றாவது விக்கெட்டாக களமிறங்கிய ஃபவாத் ஆலம் சதம் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் மட்டைவீச்சின்போது விழுந்த ஐந்து விக்கெட்களையுமே இலங்கை வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா கைப்பற்றியிருந்தார்.இலங்கை அணி தனது மட்டை வீச்சில் சிறப்பான துவக்கத்தைக் கண்டது. துவக்க ஆட்டக்காரர் திரிமான்ன சதமடித்திருந்தார்…
-
- 3 replies
- 690 views
-
-
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான உலகத் தர வரிசையில் இடம்பெறும் தகுதியை ஆப்கானிஸ்தான் அணி புதிதாகப் பெற்றுள்ளது. ஆசியக் கோப்பை போட்டியில் வங்கதேச அணியை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டுக்கு சில ஆண்டுகள் முன்பே வந்துள்ள ஆப்கானிஸ்தான் அணி - சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையான ஐசிசியின் தர வரிசையில் 12ஆவது இடத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. பதினோராவது இடத்தில் அயர்லாந்து அணியும், அதற்கு முன்னால் டெஸ்ட் பந்தயங்களில் விளையாடும் தகுதி கொண்ட பத்து நாடுகளும் இந்த தர வரிசையில் இடம்பெற்றுள்ளன. வங்கதேசத்துக்கு எதிராக பெற்ற வெற்றிதான் டெஸ்ட் விளையாடும் நாடொன்றுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் பெறுகின்ற முதல் ஒரு நாள் வெற்றி ஆகும். ஒன்றாம் தேதியன்று ஃபதுல்லா நகரில் நடந்த ஆட்ட…
-
- 1 reply
- 428 views
-
-
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு ஆஸ்திரேலிய அணி முன்னேறியது. நேற்று நடந்த காலிறுதியில் வெஸ்ட் இண்டீசை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. மற்றொரு காலிறுதியில், தென் ஆப்ரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில், ஆப்கானிஸ்தானை தோற்கடித்தது. ஐ.சி.சி., சார்பில், 19 வயதுக்குட்பட்டோருக்கான 10வது உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) நடக்கிறது. நேற்று துபாயில் நடந்த காலிறுதியில், ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரமால் லீவிஸ், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். பூரன் சதம்:வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஹெட்மியர் (1), டாஜினரைன் சந்தர்பால் (4) மோசமான துவக்கம் கொடுத்தனர். அடுத்து வந்த சோலோஜனோ (1…
-
- 3 replies
- 628 views
-
-
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர்கள் மூவர் "சேர்" பட்டம் வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டுளனர். அன்டிகுவாவைச் சேர்ந்த ரிச்சி ரிச்சர்ட்ஸன், கேட்லி அம்ப்ரோஸ், அன்டி ரொபேர்ட்ஸ் ஆகியோரே இவ்வாறு மதிப்பளிக்கப்பட்டவர்களாவர். http://www.bbc.com/sport/0/cricket/26392726
-
- 3 replies
- 703 views
-
-
ஸோச்சி குளிர்கால ஒலிம்பிக்ஸ் 2014 வெள்ளியன்று தொடக்கம் குளிர்கால ஒலிம்பிக் 2014 ரஷ்யாவின் ஸோச்சி கடலோர-சுற்றுலா நகரில் வெள்ளியன்று அதிகாரபூர்வமாக தொடங்குகிறது. முன்னெப்போதும் நடந்திராத அளவுக்கு மிகப் பெரும் பணச் செலவில் இந்த விளையாட்டு விழா நடக்கிறது. சுமார் 40 ஆயிரம் பாதுகாப்பு பணியாளர்களுடன் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆரம்ப விழா தொடர்பான விபரங்கள் மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. விளையாட்டு வீரர்கள் அவர்களின் நாட்டு வரைபடங்களுடன் மைதானத்தின் மத்தியில் தோன்றுவார்கள் என்ற விபரத்தை மட்டும் ஏற்பாட்டாளர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இம்முறை வின்டர் ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள் பற்றிய பிரச்சாரங்கள் பல்வேறு கவலைகளால் மூழ்கடிக்கப்பட்…
-
- 49 replies
- 2.6k views
-