Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. கோஹ்லியின் சதம் வீணானது! -மேற்கிந்திய தீவுகள் அணி அபார வெற்றி! இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கான 3 ஆவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்தி தீவுகள் அணி 43 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான இப்போட்டி புனே, மஹராஷ்டிரா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் நாணயற் சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. அந்த வகையில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 283 ஓட்டங்களைப் பெற்றது. மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் ஷை ஹோப் 95 ஓட்டங்களையும், அஷ்லி 40 ஓட்டங்க…

  2. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக, தொடர்ந்து 4 சதங்கள் அடித்து சங்ககாரா உலக சாதனை! ஹோபர்ட்: ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றிலேயே முதல் முறையாக, தொடர்ச்சியாக 4 போட்டிகளில் சதம் அடித்து, புது உலக சாதனை படைத்துள்ளார், இலங்கையின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குமார் சங்ககாரா. உலக கோப்பையில், இன்று இலங்கையும், ஸ்காட்லாந்தும் மோதின. முதலில் பேட்டிங் செய்த இலங்கை, அபார ரன் குவிப்பில் ஈடுபட்டது. இலங்கையின் குமார் சங்ககாரா இந்த போட்டியில் சதம் அடித்து அசத்தினார். நாலாவது சதம் உலக கோப்பை தொடரில் அவர், பதிவு செய்யும் தொடர்ச்சியான 4வது சதம் இதுவாகும். முன்னதாக, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 3 நாடுகளுக்கு எதிராக தொடர்ச்சியாக, சங்ககாரா சதம் அடித்திருந்தார். முதல் வீரர் இன்…

  3. பிரெஞ் ஓப்பன் டெனிஸ் தொடரின் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, ரஷ்யாவின் மரியா ஷரபோவா அசத்தல் வெற்றி பெற்றனர். ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் ரஷ்யாவின் மாரட் சபினும் முதல் சுற்றில் அமெரிக்காவின் ஆன்டி ரோடிக்கும் அதிர்ச்சித் தோல்வியடைந்தனர். நான்கு கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான பிரெஞ் ஓப்பன் டெனிஸ் தொடர் பாரிஸில் நடக்கிறது. நேற்று முன்தினம் நடந்த பெண்கள் ஒற்றையர் முதல் சுற்றுப் போட்டியில் தரவரிசையில் மூன்றாவது இடம்பிடித்துள்ள ரஷ்யாவின் மரியா ஷரபோவா 41 ஆவது இடத்தில் இருக்கும் பிரான்ஸின் எமிலிலோயிடை எதிர்கொண்டார். அசத்தலாக விளையாடிய ஷரபோவா முதல் செட்டை 6-3 என வென்றார். தொடர்ந்து அபாரமாக ஆடிய இவர் இரண்டாவது செட்டை கடும் போராட்டத்துக்குப் பின் 7…

    • 0 replies
    • 875 views
  4. சங்கா மேலும் ஒருவருடம் நாட்டுக்காக விளையாட வேண்டும் : விளையாட்டுத் துறை அமைச்சர் இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்டவீரரும் விக்கெட் காப்பாளருமான குமார் சங்கக்கார நாட்டுக்காக மேலும் ஒருவருடமாவது விளையாடவேண்டுமென விளையாட்டுத்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார். குமார் சங்கக்கார, இடம்பெற்று முடிந்த உலகக் கிண்ண போட்டிகளுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த நிலையிலேயே விளையாட்டுத்துறை அமைச்சர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/articles/2015/04/01/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9…

  5. சமநிலையில் முடிந்தது முதல் போட்டி இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வயின்றி முடிவுக்கு வந்துள்ளது. இவ் விரு அணிகளுக்கிடையேயான போட்டி கடந்த சனிக்கிழமை வெலிங்டகனில் ஆரம்பமானது. இப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 282 ஓட்டங்களையும், நியூஸிலாந்து அணி 578 ஓட்டங்களையும் பெற்றது. இதன் பின்னர் 296 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி நேற்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 259 ஓட்டங்களை குவித்தது. சிறப்பாக ஜோடி சேர்ந்து துடுப்பெடுத்தாடிய குசால் மெண்டிஸ் 116 ஓட்டத்துடனும், மெத்தியூஸ் 117 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காது இலங்கை அணிக்கு வலு சேர்த்தனர். …

  6. சர்வதேச கராத்தே போட்டியில் 62 வயதான இலங்கையருக்கு தங்கப்பதக்கம்! அமெரிக்காவில் அண்மையில் நடைபெற்ற 22 ஆவது சர்வதேச கராத்தே சம்பியன்ஷிப் சுற்றுப்போட்டியில் இலங்கையரான செல்லதுரை கணேசலிங்கம் தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். 62 வயதான கணேசலிங்கம், இப்போட்டியில் தன்னிலும் பாதி வயதுகொண்ட போட்டியாளர்களை தோற்கடித்து இப்பதக்கத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது பிரிட்டனில் வசித்து வருகிறார். அமெரிக்காவின் இண்டியானா மாநிலத்தில் இச்சுற்றுப்போட்டி நடைபெற்றது. ஓய்வுபெற்ற நிதி ஆலோசகரான கணேசலிங்கம், ‘நான் தங்கப்பதக்கம் வெல்வேன் என நான் ஒருபோதும் எண்ணவில்லை. இந்த வயதில் நான் ஓய்வு பெற்றிருப்பேன் என எண்ணிருந்தேன் என கணேஷ் கூறியுள்ளார். தனக்கு 23 வயதாக இருந்தபோத…

  7. பாக்., வீரருக்கு 2 ஆண்டு தடை * ஊக்கமருந்து விவகாரத்தில் நடவடிக்கை கராச்சி: ஊக்கமருந்து பிரச்னையில் சிக்கிய பாகிஸ்தான் அணி வீரர் ரேஜா ஹசனுக்கு இரண்டு ஆண்டு தடை விதிக்கப்பட்டது. பாகிஸ்தானின் இளம் வீரர் ரேஜா ஹசன், 22. ஒரே ஒருநாள் போட்டி, 10 சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கடந்த ஜனவரி மாதம் நடந்த உள்ளூர் ‘பென்டாங்குலர்’ கோப்பை தொடரின் போது நடத்தப்பட்ட சோதனையில், ஹசன் ‘கோகைன்’ என்ற தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து பயன்படுத்தியது தெரியவந்தது. இதுகுறித்த விசாரணைக்கு 14 நாட்களுக்குள் வர வேண்டும் என, கடந்த மார்ச் 24ல் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு (பி.சி.பி.,) விடுத்த அழைப்பை, ஹசன் ஏற்கவில்லை. விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்து வந்த இவர், லாகூர் ஓட்டல் ஒன்ற…

  8. முதல் பந்திலிருந்தே அடிக்க வேண்டும் என்றாலும் தயார்: முரளி விஜய் முரளி விஜய். | கோப்புப் படம். டெஸ்ட் போட்டிகளில் வேறொரு தளத்துக்கு உயர்ந்துள்ள முரளி விஜய், தற்போது ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தனது தேர்வு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த முரளி விஜய், ஈ.எஸ்.பி.என்.-கிரிக் இன்போ இணையதள பேட்டியில் கூறும் போது, “அந்தந்த கிரிக்கெட் வடிவத்துக்குத் தக்கவாறு என்னை வெளிப்படுத்திக் கொள்ள போகிறேன், டெஸ்ட் போட்டிகளில் இயல்பான ஆட்டத்தை கட்டுப்படுத்திக் கொள்வேன் என்று ஏன் கூறினேன் என்றால், அங்கு எதிரணியினருக்கு நிரூபிக்க வேண்டிய தேவை எதுவும் இல்லை. சீரான முறையில் ரன்களை எடுக்க வேண்டும் என்பதே டெஸ்டில் குறிக்கோள். அதற்காக எனது இயல்பான ஆட்டத…

  9. பாகிஸ்தான் இருபது 20 அணிக்கு அவ்றிடி தலைவர் பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் நடைபெறவுள்ள இரண்டு போட்டிகளைக் கொண்ட சரவ்தேச இருபது 20 கிரிக்கெட் போட்டிக்கான பாகிஸ்தான் அணியின் தலைவராக ஷஹித் அவ்றிடி தொடர்ந்தும் செயற்படவுள்ளார். பாகிஸ்தான் இருபது 20 கிரிக்கெட் குழாம் நேற்று அறிவிக்கப்பட்டது. இலங்கைக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியில் விளையாடிவரும் மொஹமத் ஹவீஸ், மொஹமத் இர்ஃபான், ஷொயெப் மாலிக் ஆகியோர் இருபது 20 கிரிக்கெட் குழாமிலும் இடம்பெறுகின்றனர். பாகிஸ்தான் இருபது 20 கிரிக்கெட் குழாம்: ஷஹித் அவ்ரிடி (அணித் தலைவர்), சர்வ்ராஸ் அஹ்மத் (உதவி அணித் தலைவர்), அஹ்மத் ஷேஹ்ஸாத், அன்வர் அலி, இமாத் வசிம், மொஹமத் ஹவீஸ், மொஹமத் இர்வான், மொஹமத் …

  10. பென் ஸ்டோக்ஸுக்கு அநீதி இழைத்ததை ஆஸி. வீரர்கள் ஒரு நாள் உணர்வர்: மெக்கல்லம் நியூஸி. கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம். | படம்: ராய்ட்டர்ஸ். பென் ஸ்டோக்ஸின் சர்ச்சைக்குரிய அவுட் விவகாரத்தில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் தவறிழைத்து விட்டார் என்கிறார் பிரெண்டன் மெக்கல்லம். களத்தடுப்புக்கு இடையூறு செய்ததாக 2-வது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அவுட் கொடுக்கப்பட்டது குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் மீது நியூஸிலாந்து கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம் அதிருப்தி தெரிவித்துள்ளார். டெய்லி மெயிலில் மெக்கல்லம் இது பற்றி எழுதிய பத்தியில், “ஸ்மித் முறையீடு செய்ய வேண்டாம் என்ற முடிவை எடுத்திருக்கலாம், இதன் மூலம் அவரது தலைமையில் கிரிக்கெட் ஆட்டத்தை அதன் நல்லுணர்வுடன…

  11. கிராண்ட் ஸ்லாம் விநோதம்: வென்றார்...சென்றார்! நியூயார்க்: இத்தாலியின் பிளேவியா பென்னெட்டா, அமெரிக்க ஓபன் மகளிர் ஒற்றையர் பட்டத்தை கைப்பற்றிய கையோடு ஓய்வு அறிவித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் இத்தாலி வீராங்கனை 33 வயது நிரம்பிய பென்னட்டா சகநாட்டு வீராங்கனை ராபர்ட்டா வின்சியை எதிர்கொண்டார். இந்த போட்டியில் 7-6 (7-4), 6- 2 என்ற செட் கணக்கில் பென்னட்டா வெற்றி பெற்றார். இதன் மூலம் உலகிலேயே அதிக வயதில் மகளிர் ஒற்றையர் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற வீராங்கனை என்ற பெருமை பென்னட்டாவுக்கு கிடைத்தது. பெனட்டா தனது டென்னிஸ் வாழ்க்கையில் வென்ற முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டமும் இதுதான். இந்த போட்டி முடிந்த கையோடு டென்னிசில் இருந்து விடை பெறுவதா…

  12. இந்தியாவிடம் ஏன் கெஞ்ச வேண்டும்...? -சாகித் அப்ரிடி கோபம் இந்தியாவுடன் கிரிக்கெட் விளையாடுவதற்கு பதிலாக வேறு நாட்டு அணிகளை பாகிஸ்தானுக்கு அழைத்து வந்து போட்டிகளை நடத்தலாம் என்று பாகிஸ்தான் அணி வீரர் சாகித் அப்ரிடி தெரிவித்துள்ளார். எல்லையோரத்தில் தாக்குதலை நிறுத்தினால் மட்டும்தான் பாகிஸ்தான் அணியுடன் கிரிக்கெட் விளையாடுவது பற்றி யோசிக்க முடியும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் பதிலளித்து விட்டது. ஆனால் பாகிஸ்தான் வாரியம், டிசம்பரில் அமீரகத்தில் வைத்து இந்திய அணியுடன் போட்டித் தொடரை நடத்த யோசித்து வருகிறது. 2015-2023 ஆம் ஆண்டுகளுக்கிடையே 6 தொடர்கள் வரை விளையாட இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியங்கள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. பல பிரச்னைகள் காரணமாக இதற்கு இந்திய அர…

  13. பிறந்த நாளில் ஓய்வு அறிவித்த வீரேந்திர சேவாக்! இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் வீரேந்திர சேவாக் இன்று ஓய்வு அறிவித்துள்ளார். தனது 37வது பிறந்த நாள் தினமான இன்று அவர் ஓய்வு பெற்றுள்ளார். கடந்த 2013ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு சேவாக்கிற்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. ஹைதரபாத் நகரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடியிருந்தார். இந்திய அணிக்காக 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள 8 ஆயிரத்து 586 ரன்களை பெற்றுள்ளார். அதோடு சேவாக், 251 ஒருநாள் போட்டிகளில் 15 சதங்கள் உள்பட 8 ஆயிரத்து 273 ரன்களை அடித்துள்ளார். வீரேந்திர சேவாக் ஆப்ஸ்பின்னும் வீசுவார். அந்த வகையில் 136 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியுள்ளார். தற்போது துப…

  14. ஹமில்டனை முந்திய ரோஸ்பேர்க் மெக்ஸிகோ கிரான்ட்பீறிக்ஸை முதலிடத்தில் தொடங்கும் வாய்ப்பை மெர்சிடஸ் அணியின் ஜெர்மனி சாரதியான நிக்கோ ரோஸ்பேர்க் பெற்றுள்ளார். தனது சக அணி வீரரான பிரித்தானியாவின் லூயிஸ் ஹமில்டனை 0.188 செக்கனால் தோற்கடித்தே ரோஸ்பேர்க் மெக்ஸிகோ கிரான்ட்பீறிக்ஸை முதலிடத்தில் ஆரம்பிக்கவுள்ளார். இறுதியாக இடம்பெற்ற நான்கு சுற்றுப் போட்டிகளிலும் ஹமில்டனை தோற்கடித்து முதலிடத்தில் பந்தயத்தை தொடங்கியிருந்தாலும் கடந்த மூன்று இறுதிச் சுற்றுக்களிலும் ஹமில்டனே வெற்றி பெற்றிருக்கும் நிலையில் இந்த நான்காவது முறையாவது ரோஸ்பேர்க் வெற்றி பெற எதிர்பார்த்துள்ளார். ஆரம்ப இடங்களுக்கான இந்தப் பந்தயத்தில் பெராரி அணியைச் சேர்ந்த ஜெர்மனியின் செபஸ்ட்டியன் விட்டல் மூன்றாவது இடத்தைப்…

  15. IND Vs BAN இஷாந்த் ஷர்மாவின் பேய் ஆட்டத்தில் வங்கதேசத்தை ‘ஒயிட் வாஷ்’ செய்த இந்தியா 7 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்து வந்த வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் வங்கதேசத்திற்கு எ…

  16. நாளை பீபா தலைவருக்கான தேர்தல் பீபாவின் அடுத்த தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நாளை வெள்ளிக்கிழமை (26), சுவிற்ஸர்லாந்தின் சூரிச் நகரில் இடம்பெறவுள்ளது. கடந்த 18 வருடங்களாக, கால்பந்தாட்ட உலகை ஆளும் கூட்டமைப்பின் தலைவராக இருந்த செப் பிளாட்டருக்கு, கடந்தாண்டு டிசம்பர் மாதம், எந்தவொரு பீபா நடவடிக்கையிலும் ஈடுபட எட்டு வருடத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரையே இத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படுபவர் பிரதியீடு செய்யவுள்ளார். மேற்படி பீபா தலைவருக்கான வாக்கெடுப்பில், பீபாவில் அங்கத்துவம் வகிக்கும் 209 அங்கத்துவ நாடுகளும் தலா ஒவ்வொரு வாக்குகளைக் கொண்டிருக்கின்ற நிலையில், இரகசிய வாக்களிப்பு நிலையத்தில் அவை தமது வாக்குகளை அள…

  17. இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்: அர்ஜுன ரணதுங்க இலங்கை கிரிக்கெட் அணிக்கு அரசியல் மற்றும் அதிகார மட்ட அழுத்தங்கள் இருப்பதனால் அணியில் இருக்கும் வீரர்களால் விளையாட்டில் சுதந்திரமாக செயற்பட முடியாத சூழல் இருப்பதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். அர்ஜுன ரணதுங்க இலங்கை கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்ற இருபது வருடங்களை கொண்டாடும் வைகயில், “96ஐ கொண்டாடுவோம்” என்ற தலைப்பில் முன்னெடுக்கப்படவுள்ள நிகழ்வுகள் தொடர்பில் இன்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இந்த செய்தியாளர் சந்திப்பில் 1996ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக்…

  18. ஹிமிதுராவ ஈகிள்ஸ் அணியிடம் வீழ்ந்த சிவானந்த By Mohamed Azarudeen கிழக்கு மாகாண அணிகள் இடையே நடைபெற்றுவரும் டிவிஷன் – II ஒருநாள் கிரிக்கெட் தொடரில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (9) இடம்பெற்று முடிந்த போட்டியொன்றில் மட்டக்களப்பு சிவானந்த விளையாட்டுக் கழகத்தினை, அம்பாறையின் ஹிமிதுராவ ஈகிள்ஸ் கழகம் 93 ஓட்டங்களால் வீழ்த்தியுள்ளது. சிவானந்த கிரிக்கெட் கழகத்தின் சொந்த மைதானத்தில் ஆரம்பமாகிய இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சிவானந்த கழக அணியினர் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை விருந்தினர்களான ஹிமிதுராவ கிரிக்கெட் கழகத்திற்கு வழங்கியிருந்த…

  19. இங்கிலாந்து சென்றது இலங்கை இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையிலான முழுமையான கிரிக்கெட் தொடரொன்றுக்காக, இங்கிலாந்து நோக்கி இலங்கை அணி, இன்று புறப்பட்டுச் சென்றது. இங்கிலாந்து அணிக்கெதிரான 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், ஒற்றை இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டி ஆகியனவற்றிலும், அயர்லாந்துக்கெதிரான இரண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளிலும் இலங்கை அணி விளையாடவுள்ளது. இந்தத் தொடருக்காக விளையாடுவதற்கு முன்னர், இலங்கை அணியின் வீரர்கள், சுற்றுலா ஒப்பந்தமொன்றில் இலங்கை கிரிக்கெட் சபையுடன் கைச்சாத்திட்டனர். இலங்கை வீரர்களின் வருடாந்த ஒப்பந்தம், இவ்வாண்டு பெப்ரவரியிலேயே நிறைவடைந்த போதிலும், ஏப்ரல் வரை அது நீடிக்கப்பட்டிருந்தது. இந்நிலையி…

    • 1 reply
    • 643 views
  20. பாகிஸ்தானுக்கு ஆடுவதை விட இங்கிலாந்துக்கு ஆடலாம்: வெறுப்பில் ஜுனைத் கான் பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கான். | கோப்புப் படம்: ஏ.எஃப்.பி. பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கான் இங்கிலாந்தில் நிரந்தரமாகக் குடியேறி இங்கிலாந்து அணிக்கு ஆட பரிசீலித்து வருகிறார். தொடர்ந்து தன்னை பாகிஸ்தான் கிரிக்கெட் தேர்வு நிர்வாகம் ஒதுக்கி வருவதால் இந்த முடிவுக்கு வரவேண்டியுள்ளதாக ஜுனைத் கான் தெரிவித்தார். 71 டெஸ்ட் விக்கெட்டுகளுடன் தற்போதைய பாகிஸ்தான் வேகப்பந்து வரிசையில் இவர் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியவராக இருந்தாலும் தான் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக அவர் வெறுப்படைந்துள்ளார். கடந்த ஆண்டு ஜுனைத் கானுக்கு ஏற…

  21. அமெரிக்காவில் இந்திய, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் T20 போட்டி. அமெரிக்காவில் இந்திய, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் T20 போட்டி. T20 உலக கிண்ண சாம்பியன்களான மேற்கிந்திய தீவுகள் , மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான 2 T20 போட்டிகள் கொண்ட தொடர் அமெரிக்காவின் புளோரிடாவில் இடம்பெறவுள்ளன. இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான குறித்த T20 தொடரை அமெரிக்காவில் நடத்த இரு நாட்டு கிரிக்கெட் சபைகளும் இணங்கியுள்ளதாக இந்தியக் கிரிக்கெட் சபை இன்று அறிவித்துள்ளது. அமெரிக்காவின், பூளோரிடாவில் உள்ள சென்ட்ரல் புரோவார்ட் பூங்கா மைதானத்தில் இந்தியா – மேற்கு இந்திய தீவுகள் இடையிலான T20 தொடர் நடைபெறவுள்ளது. தற்போது இதே மைதானத்தில்தா…

  22. நின்ற இருதயம் மீண்டும் இயங்கியது: பாக். முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹனீப் முகமது உயிர் பிழைத்த அதிசயம் பாகிஸ்தான் லெஜண்ட் ஹனீப் முகமது. | படம்: தி இந்து ஆர்கைவ்ஸ். 6 நிமிடங்கள் நின்று போன இருதயம் மீண்டும் மருத்துவர்கள் முயற்சியால் உயிர் பெற்றது, இறந்து பிழைத்த பாக். முன்னாள் கிரிக்கெட் லெஜண்ட் ஹனீப் முகமது. பாகிஸ்தான் கிரிக்கெட் ‘லெஜண்ட்’ ஹனீப் முகமது இறந்து விட்டார் என்று மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டது, ஆனால் சரியாக 6 நிமிட மருத்துவ முயற்சிக்குப் பிறகு இருதயம் செயல்படத் தொடங்கிய அதிசயம் நிகழ்ந்துள்ளது. இவருக்கு வயது 81. கராச்சியில் உள்ள அகாகான் மருத்துவமனையில் இறந்து விட்டார் என்று மருத்துவர்களால் அறிவிக்கப்பட்ட பிறகு 6 …

  23. சச்சின், சேவக் சாதனையை முறியடித்தார் அஸ்வின்! மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்று முன்னிலை வகித்தது.நான்காம் போட்டி வியாழன் அன்று தொடங்கியது. மேற்கு இந்தியத் தீவுகள் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாட ஆரம்பித்தார்கள். முதல் நாள் அரை மணி நேரம் தாமதமாக ஆரம்பிக்கப்பட்ட போட்டியில் மழை குறுக்கிட 22 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. அடுத்த நான்கு நாட்கள் மழை பெய்யாத போதும் ஆட்டம் நடைபெறவில்லை. மழையால் சேதமடைந்த மைதானத்தை, மீட்டெடுக்க முடியாமல் தொடர்ந்து நான்கு நாட்களும் வெறுமனே கழிந்தது. இறுதியாக , போட்டி டிராவில் முடித்துக்கொள்வதாக அறிவிக்க…

  24. சிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் தொடரின் தலைவராக உபுல் தரங்க சிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடருக்கான இலங்கைக்குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒருநாள் அணியின் தலைவராக உபுல் தரங்க தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இதேவேளை அணியின் உபத் தலைவராக குசால் ஜனித் பெரேரா தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஒருநாள் தொடருக்கான இலங்கைக்குழாம் இதோ... 1. தனஞ்சய டி சில்வா 2. குசல் ஜனித் பெரேரா (உபத் தலைவர்) 3. நிரோஷன் டிக்வெல்ல 4. உபுல் தரங்க (தலைவர்) 5.குசால் மெண்டிஸ் 6. செஹான் ஜயசூரிய 7. அசேல குணவர்தன 8. சசித்ர பத்திரன 9. நுவான் குலசேகர …

  25. ஊடகங்களை உதைந்தார் மெஸ்ஸி உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளுக்கான தகுதிகாண் போட்டிகள் இடம்பெற்றுவரும் நிலையில், மோசமான பெறுபேறுகள் காரணமாக விமர்சனங்களைச் சந்தித்திருந்த ஆர்ஜென்டீன அணி, கொலம்பிய அணிக்கெதிரான வெற்றியைப் பெற்றுவிட்டு, ஊடகங்களைப் புறக்கணித்துப் போராட்டம் நடத்தியது. உலகக் கிண்ணத் தகுதிகாண் போட்டிகளில் முதற்போட்டியில் வென்ற ஆர்ஜென்டீன அணி, அதன் பின்னர் இடம்பெற்ற 4 போட்டிகளில், வெற்றியைப் பெறத் தவறியிருந்தது. அதில் இறுதி 2 போட்டிகளிலும் தோல்வியடைந்திருந்தது. முன்னதாக, ஜூன் மாதம் இடம்பெற்ற கோப்பா அமெரிக்கத் தொடரின் இறுதிப் போட்டியிலும், ஆர்ஜென்டீன அணி தோல்வியடைந்திருந்தது. இதையடுத்து, ஆர்ஜென்டீன அணி மீது, கடுமையான விம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.