Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. கபில்தேவின் புதிய சவாலைச் சமாளிப்பதற்கு கவாஸ்கரை களமிறக்குகிறது இந்திய கிரிக்கெட் சபை [25 - ஆஉகுச்ட் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] இந்திய கிரிக்கெட் சபை (பி.சி.சி.ஐ.) விழித்துக் கொண்டுள்ளது. கபில்தேவ் தலைவராக உள்ள ஐ.சி.எல். அமைப்பின் சவாலை சமாளிக்க கவாஸ்கரை களமிறக்குகிறது . கவாஸ்கர் தலைமையில்` புரபொசனல் கிரிக்கெட் லீக்' என்ற புதிய அமைப்பு தொடங்கப்படவுள்ளது. இதன் சார்பில் உள்ளூரில் ருவென்ரி - 20 தொடரை நடத்த பி.சி.சி.ஐ. அதிரடியாக திட்டமிட்டுள்ளது. இரு கிரிக்கெட் அமைப்புகளுக்கும் இடையே வலுவான போட்டி உருவாகியிருப்பதால் கிரிக்கெட் வீரர்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது. உலகக் கிண்ணத் தோல்வியை அடுத்து இந்திய கிரிக்கெட் சபைக்குச் சவாலாக ஜீ.ரீ.வி. சார்பில் இந்தியன…

    • 0 replies
    • 969 views
  2. Twenty 20 உலக சம்பியன் துடுப்பாட்ட சுற்றுப்போட்டி: கால அட்டவணை. -Cricinfo-

    • 4 replies
    • 1.7k views
  3. இந்திய முன்னாள் கப்டனும் சுழற்பந்து வீச்சாளருமான பிஷன் சிங் பேடிக்கு எதிராக 750 மில்லியன் ரூபா நஷ்டஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்யப்போவதாக இலங்கையின் சுழற்பந்து வீச் சாளர் முத்தையா முரளிதரன் கூறியுள்ள அதேநேரம், முரளிதரனை நீதிமன்றில் சந்திக்கத் தயாரென பிஷன் சிங் பேடி கூறியுள்ளார். முரளியின் பந்துவீச்சு முறை குறித்து பிஷன் சிங் பேடி அவ்வப்போது குறைகூறி வந்த நிலையில், டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரரென்ற சாதனையை அடுத்த இரு மாதங்களில் முரளிதரன் முறியடிப்பாரென எதிர்பார்க்கப்படுகையில் முரளியின் பந்துவீச்சு முறையை பேடி மிக மோசமாகக் குறைகூறியுள்ளார். முரளி பந்தை எறிவதாகவும் அவரது பந்துவீச்சு முறையானது ஈட்டி எறிவது போன்றும் குண்டெறிவது போன்றுமிரு…

    • 2 replies
    • 1.4k views
  4. ஆஸ்ட்ரேலிய கிரிக்கெட் வீரர் ரிக்கி பாண்ட்டிங் பெயர் : ரிக்கி பாண்ட்டிங் பிறந்த தேதி : 19 - 12 - 1974 பிறந்த இடம் : தாஸ்மனியா டெஸ்ட் போட்டி போட்டிகள் - 110 சதம் - 33 ரன்கள் - 9,368 விக்கெட் - 05 ஒரு நாள் போட்டி போட்டிகள் - 280 சதம் - 23 ரன்கள் - 10,395 விக்கெட் - 03

    • 0 replies
    • 1.1k views
  5. முரளியின் பந்துவீச்சை மீண்டும் குறை கூறுகிறார் பிஷன்சிங்பேடி [09 - ஆஉகுச்ட் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் பந்தை எறிவதாக, பிஷன்சிங் பேடி கடுமையாக தாக்கியிருக்கிறார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மொத்தம் 1100 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியிருப்பவர் இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன். அவ்வப்போது அவரது பந்து வீச்சு, சர்ச்சையிலும் சிக்குவதுண்டு. இந்த நிலையில், அவரது பந்து வீச்சை இந்திய அணியின் முன்னாள் கப்டன் பிஷன்சிங் பேடி மீண்டும் வெளிப்படையாக விமர்சித்திருக்கிறார். பேடி அளித்த ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது; "முரளிதரன் பந்து வீசுவது, குண்டு எறிவது போலவும், ஈட்டி எறிவது…

  6. கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன்ஸ் கேம் என்ற நிலை மாறி முரடர்களின் ஆட்டமாக மாறி வருகிறதோ என்று கருதும் அளவிற்கு கிரிக்கெட் வீரர்களின் நடத்தை தரம் தாழ்ந்து வருகிறது. எந்த இரு அணிகள் மோதினாலும், கிரிக்கெட் மட்டைகளும் பந்தும் பேசுவது போய், வீரர்கள் ஒருவருடன் ஒருவர் மோதுவது, பேட்ஸ்மென்கள் மீது எதிரணியினர் வசை மாறிப் பொழிவது என்பதெல்லாம் மிகச் சாதாரணமாகிவிட்டது. ஆஸ்திரேலிய அணியினரே இம்மாதிரியான முரண்பட்ட நடத்தைக்கு வித்திட்டனர் என்று சுனில் கவாஸ்கர், டோனி கிரேக் உள்ளிட்ட முன்னாள் வீரர்களும், வர்ணனையாளர்களும் வெளிப்படையாகவே குற்றம்சாட்டும் அளவிற்கு இந்த வசைபாடல் (ஸ்லெட்ஜிங்) வளர்ந்துவிட்டது. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் ஸ்டீவ் வாஹ் இதுபோன்ற வசைமொழிகளை பயன்…

    • 1 reply
    • 1.2k views
  7. கிரிக்கெட்டை கேலிக்கூத்தாக்கும் எல்.பி.டபிள்யூ. தீர்ப்புகள் அடுத்த ஆண்டு தென் ஆப்ரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை போட்டிகளில் எல்.பி.டபிள்யூ., கேட்ச் ஆகியவற்றை துல்லியமாக அறிய தொலைக்காட்சி தொழில்நுட்பத்தை பயன்படுத்தப்போவதில்லை என்று சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி.) அறிவித்துள்ளது! கிரிக்கெட் ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தும் அறிவிப்பு இது. சமீப காலங்களில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் நடுவர்கள் வழங்கிய நேரடித் தீர்ப்புகள் பல சர்ச்சைக்குள்ளாகியுள்ளன. நடுவர்கள் மனிதர்களுக்கே உரித்தான "தவறும் தன்மையினால்" கிரிக்கெட் ஆட்டம் மிகவும் தடுமாறியது. பல சிறந்த ஆட்டக்காரர்கள் நடுவர்களின் தவறான முடிவுகளால் வெறுத்துப்போய் மட்டையை மைதானத்தில் ஓங்கி அடித்து த…

  8. ஆசிய கிண்ண உதைபந்தாட்டம் இறுதியாட்டத்தில் ஈராக் - சவூதி அணிகள் இன்று மோதுகின்றன ஆசிய நாடுகளின் உதைபந்தாட்ட அணிகளிடையே நடத்தப்பட்டு வரும் உதைபந்தாட்டப் போட்டியின் இறுதிப்போட்டி இன்று 29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஈராக் சவூதி அரேபிய அணிகளிடையே நடைபெறவுள்ளது. ஈராக்- தென்கொரியா அணிகளிடையே நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் ஈராக் அணி வெற்றிபெற்றது. இப்போட்டியின் ஆரம்பத்தில் கொரிய அணியே வெற்றிபெறுமென்று அவதானிகள் கருத்துத் தெரிவித்திருந்தனர். போட்டி ஆரம்பமாகி இடைவேளை வரை இரு அணிகளும் கோல்கள் எதனையும் போடவில்லை. இடைவேளையின் பின்னர் போட்டி ஆரம்பமானதும் ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றபோதிலும், இரு அணிகளும் பல கோல்கள் போடும் கட்டங்களை அடுத்தடுத்து தவறவ…

  9. அன்பார்ந்த யாழ்கள வாசகர்களே... என்னால் வெட்டி ஒட்டப்படும் சிறு..சிறு.. அன்றாட கிரிக்கட் செய்திகளால் யாழ்கள விளையாட்டுத் திடலை குப்பை மேடாக்காமல் தடுப்பது எப்படி என்ற சிந்தனையில் உருவான கருவே..இந்த புதிய திரி. யாழ்கள உறுப்பினர்களே... இது இன்றைய கிரிக்கட் செய்திகளை விவாதிக்கும் களம். உங்கள் வாதத்திறமையால் இந்தக்களத்தை வெறுமனே அரட்டைக்களமாக மாற்றாது சிறந்த விவாதக்களமாக மாற்றுவது உங்கள் பொறுப்பு. அன்றாட சிறிய கிரிக்கட் செய்திகள் இங்கு விவாதத்திற்கு எடுததுக் கொள்ளப்படுவதால் புதிய செய்திகளையும் நீங்கள் இணைக்கலாம். இங்கு பதிவை மேற்கொள்பவர்கள் நிர்வாகத்தினது அன்பான அறிவுறுத்தல்களை கவணத்திற்கொள்ளவும்.

  10. சீனாவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் ரஷ்ய டெனிஸ் அணியில் ஷரபோவா இல்லை? [25 - Jஉல்ய் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் ரஷ்யாவின் டெனிஸ் அணியில் இடம்பெற்று விளையாட வேண்டும் என்று மரியா ஷரபோவா கனவு கண்டுகொண்டிருக்கிறார். ஆனால், ரஷ்ய டெனிஸ் அணித் தலைவர் ஷமீல் தர்பிஷசேவ் விடுத்துள்ள எச்சரிக்கையைப் பார்க்கும்போது அது சாத்தியம் இல்லையென்ற சந்தேகம் ஏற்படுகிறது. இத்தாலியை எதிர்த்து செப்டெம்பர் 15 ஆம், 16 ஆம் திகதிகளில் விளையாடவுள்ள பெடரேஷன் கிண்ண டெனிஸ் அணியில் மரியா ஷரபோவா இடம்பெறுவது சந்தேகமே என்று கூறிவிட்டார் அணித் தலைவர் தர்பிஷசேவ். கடந்தவாரம் அமெரிக்காவுக்கு எதிராக அரையிறுதி டெனிஸ் போட்டி தொடங்குவதற்கு ம…

    • 0 replies
    • 844 views
  11. கிரிக்கெட் ஆட்டக்களமும் அறிவுரைகளும் முன்பை விட தற்போது, கிரிக்கெட்டில் ஆட்டகளம் பற்றிய பிரச்சனைகள் அதிகம் அலசப்படுகின்றன. தெ.ஆ. துவக்க ஆட்டக்காரரும், தற்போதைய வர்ணனையாளருமான பேரி ரிச்சர்ட்ஸ், இந்தியாவின் நாயகனான சச்சின் டெண்டுல்கரை, துணைக் கண்ட செத்தகள ஆட்டக்காரர் என வர்ணித்தது நினைவிருக்கலாம். ஆனால் டெண்டுல்கர் அடித்த சதங்களில் சரிபாதி சதங்கள் அவர் வர்ணிக்கும் மேலெழும்பும் ஆட்டக்களத்தில் அடித்ததே என்பது அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எப்பொழுதும் இல்லாமல் இந்த செத்தகளம், நல்லகளம் என்ற பேச்சும், அறிவுரைகளும் அதிகமாக இப்பொழுது வழங்கப்படுகிறது. ஏன்? 1960-களில் இங்கிலாந்தில் உள்ள ஆட்டகளம் எல்லாமே மிக மோசமான மண் கலவையால் மிருதுவாகவும், பந்துகள் மிகத…

    • 0 replies
    • 1.3k views
  12. சர்வதேச கால்பந்து தரவரிசை பிரேசில் அணி மீண்டும் முதலிடத்தில் [20 - Jஉல்ய் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] சர்வதேச கால்பந்து தரவரிசை பட்டியலில் பிரேசில் அணி முதலிடத்திலுள்ளது. கோபா- அமெரிக்க வெற்றிக் கிண்ணத்தை கைப்பற்றிய பிரேசில் அணி 6 மாதத்துக்குப் பின் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது. ஆர்ஜன்ரீனா 2 ஆம் இடத்திலும் இத்தாலி 3 ஆம் இடத்திலுமுள்ளன. தெற்காசியாவை பொறுத்தவரை மாலைதீவு அணி முதலிடத்திலுள்ளது. இதற்கடுத்ததாக இலங்கை அணி உள்ளது. இந்த உலகத் தரவரிசையில் ஓரிடம் பின்னடைவு பெற்று 162 ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது இந்தியா. கடந்த மாதம் வெளியிடப்பட்ட பட்டியலில் இந்தியா 3 இடங்கள் முன்னிலை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆசிய…

    • 0 replies
    • 931 views
  13. கோபா- அமெரிக்க கால்பந்து இறுதியாட்டம் சாம்பியன் கிண்ணத்தை பிரேசில் கைப்பற்றியது [17 - July - 2007] கோபா அமெரிக்க கால்பந்தாட்ட இறுதியாட்டத்தில் பிரேசில் அணி ஆர்ஜென்ரீனாவை தோற்கடித்து சாம்பியன் கிண்ணத்தைக் கைப்பற்றியது. கோபா- அமெரிக்கக் கிண்ண கால்பந்துப் போட்டி வெனிசுலாவில் நடந்தது. இதன் இறுதிப்போட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு நடைபெற்றது. இதில் தற்போது சாம்பியனான பிரேசில் - ஆர்ஜென்ரீனா ஆணிகள் மோதின. பிரேசில் வீரர்களின் அபாரமான ஆட்டத்திற்கு ஈடுகொடுத்து விளையாட முடியாமல் ஆர்ஜென்ரீனா வீரர்கள் திணறினார்கள். ஆட்டம் தொடங்கிய 4 ஆவது நிமிடத்தில் பிரேஸில் முதல் கோலைப் போட்டது. கனிஷ்ட வீரர் பாப்டிஸ்டா இந்தக் கோலை அடித்தார். 40 ஆவது நிமிடத்தில் ஆர்ஜென்ரீனா …

    • 0 replies
    • 972 views
  14. பிரேசில் கால்பந்து வீரர் ககா ரூ. 635 கோடிக்கு ஒப்பந்தம்? [24 - Jஉனெ - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] பிரேசில் கால்பந்து அணியின் முன்னணி வீரர்களில் ஒருவர் ககா. இவர் இத்தாலியில் உள்ள ஏ.சி.மிலன் கழகத்துக்காக விளையாடி வருகிறார். 2011 ஆம் ஆண்டு வரை அவரது ஒப்பந்தம் அந்தக் கழகத்தில் இருக்கிறது. இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டில் உள்ள ரியல் மாட்ரிட் கழகம் ககாவை தங்கள் கழகத்தில் ஒப்பந்தம் செய்ய விரும்புகிறது. இதற்காக ரூ.635 கோடி தர இருப்பதாக அந்த கழகம் அறிவித்துள்ளது. மிலன்கழகத்தில் இருந்து ரியல் மாட்ரிட் கழகத்துக்கு மாறுவது குறித்து ககா இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. ரியல் மாட்ரிட் கழகத்தின் ஒப்பந்தத்தில் ககா கையெழுத்திட்டால் கால்பந்து வரலாற்றில் அதிகமான பணம் பெ…

    • 0 replies
    • 1.1k views
  15. பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் பாப் உல்மர் கொலை செய்யப்படவில்லை என்றும், அவரது மரணம் இயற்கையாக நிகழ்ந்தது என்றும் ஜமைக்கா நாட்டின் பொலிஸார் செவ்வாய்கிழமை மாலை அறிவித்தனர். கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தான் நாட்டு கிரிக்கெட் அணி உலகக் கோப்பை போட்டியிலிருந்து வெளியேற்றபட்ட பிறகு பாப் உல்மர் தமது ஹோட்டல் அறையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது மரணம் குறித்து முதலில் ஒரு மருத்துவர் நடத்திய மருத்துவ ஆய்வில், பாப் உல்மர் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் மூன்று பேர் கொண்ட மருத்துவ குழுவினர் நடத்திய ஆய்வு முன்னைய ஆய்வை நிராகரித்தது. உல்மரின் மரணம் தொடர்பான ஒவ்வொரு விடயமும் தொழில் ரீதியாக புலனாய்வு …

  16. கிரிக்கெட் பயிற்சியாளர் பதவியை நிராகரித்தார் போர்டு-எம்புரேவும் எஸ்கேப் ஜூன் 12, 2007 லண்டன்: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியை ஏற்க இயலாது என தென் ஆப்பிரிக்காவின் கிரகாம் போர்டு கூறி விட்டார். அதேபோல, இங்கிலாந்தின் ஜான் எம்புரேவும் பயிற்சியாளர் பதவியை ஏற்க முடியாது என்று கூறி விட்டார். இதனால் இந்திய கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளரைத் தேர்வு செய்ய வாரியத் தலைவர் சரத்பவார் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு டேவ் வாட்மோர், அர்ஜூன ரணதுங்கா உள்ளிட்ட பலருடைய பெயர்களைப் பரிசீலித்தது. இறுதியில் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கிரகாம் போர்டு, இங்கிலாந்தின் ஜான் எம்புரே ஆக…

  17. ஈ.எஸ்.பி.என். நிறுவனம் கிரிக்இன்போ இணையத்தளத்தை தங்களது வியாபார நோக்கத்திற்காக வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளனர் -verakesary- ESPN buys Cricinfo Web site from Wisden Group MUMBAI (Reuters) - Walt Disney Co.'s (DIS.N: Quote, Profile, Research) ESPN has bought cricket Web site Cricinfo from the Wisden group, ESPN and Cricinfo said in a statement on Monday. Financial details of the deal were not disclosed. "Growing our business in the online world is vital," said Russell Wolff, managing director of ESPN International. "Cricinfo will be a strong addition to ESPN," he said in the statement. Founded in 1993, Cricinfo reaches more than 7 mil…

    • 0 replies
    • 2.3k views
  18. இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கடந்த சனிக்கிழமையன்று நியமிக்கப்பட்ட தென்னாப்ரிக்காவை சேர்ந்த கிரஹாம் ஃபோர்டு அந்த பொறுப்பை ஏற்க மறுத்துள்ளார். இங்கிலாந்தில் கெண்ட் கிரிக்கெட் அணிக்கு பயிற்சியளிப்பதையே தான் தொடர்ந்து விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்க தாம் அழைக்கப்பட்டால், அந்த பணியை தாம் ஏற்றுக்கொள்ள விரும்புவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான சையத் கிர்மானி தமிழோசையிடம் தெரிவித்தார்.

    • 2 replies
    • 1.3k views
  19. இங்கிலாந்தில் ஒரு கிரிக்கெட் அணி இடைவிடாமல் தொடர்ச்சியாக 34 மணிநேரம் கிரிக்கெட் விளையாடி கின்னஸ் சாதனை படைத்திருக்கிறது. இங்கிலாந்தில் உள்ள நோர்தம்பர்லேண்டில் ரெட்ரோ ஸ்போர்ட்ஸ் கிளப் உள்ளது. இங்குள்ள கிரிக்கெட் வீரர் டேவிட் கிரிப்பித்ஸ் என்பவர் கடந்த டிசம்பர் மாதம் ஆஸ்மா நோயால் பாதிக்கப்பட்டு இறந்துபோனார். அவரது நினைவாகவும், கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கிலும் ரெட்ரோ கிளப் கிரிக்கெட் போட்டியை நடத்தியது. பகல்- இரவு என்று தொடர்ந்து 34 மணிநேரம் கிளப் வீரர்கள் கிரிக்கெட் ஆடினார்கள். இரவில் மழை பெய்தது. குளிர்ந்த காற்று வீசியது. ஆனால், அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் விளையாடினார்கள். இதற்கு முன் அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் உள்ள கிரிப்பித்ஸ் பல்கலைக்…

    • 1 reply
    • 1.2k views
  20. இங்கிலாந்து - பிரேசில் அணிகள் மோதிய பரபரப்பான சிநேகபூர்வ கால்பந்தாட்டம் டிராவில் முடிந்தது. இங்கிலாந்து - பிரேசில் அணிகளிடையே சிநேகபூர்வ சர்வதேச கால்பந்து போட்டி லண்டன் வெம்லே புதிய ஸ்ரேடியத்தில் நடந்தது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கான முன்னாள் கப்டன் டேவிட் பெக்காம் களமிறங்கினார். கடந்த ஆண்டு நடந்த உலகக்கிண்ணப் போட்டியில் காலிறுதி ஆட்டத்தில் தங்களது அணி தோல்வி அடைந்ததால் கப்டன் பதவியிலிருந்து விலகிய பெக்காம், 11 மாதங்களுக்குப்பின் முதல் முறையாக தனது சொந்த அணிக்காக ஆடினார். அவரது வருகை உள்ளூர் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. ஸ்ரேடியத்தில் 88 ஆயிரத்து 745 ரசிகர்கள் குவிந்திருந்தனர். பிரேசில் அணியும் நட்சத்திர வீரர்களுடன் களமிறங்கியது. தொடக்கம் முதல…

    • 3 replies
    • 1.2k views
  21. புதிய ஒப்பந்தம் குறித்து இந்திய சிரேஷ்ட வீரர்களுடன் கிரிக்கெட் சபையின் 2 பேர் கொண்ட குழு 11 ஆம் திகதி ஆலோசிக்கவுள்ளது. உலகக் கிண்ண தோல்வியின் எதிரொலியாக இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு இருந்த பழைய ஒப்பந்த முறை அடியோடு ரத்து செய்யப்பட்டது. அந்த முறையில் ஏ, பி, சி என்று மூன்று பிரிவாக வீரர்கள் தரம் பிரிக்கப்பட்டு முறையே 50 இலட்சம், 35 இலட்சம், 20 இலட்சம் ரூபா ஆண்டுக்கு ஊதியமாக வழங்கப்பட்டது. இதற்குப் பதிலாக தற்போது புதிய ஒப்பந்தத்தை இந்திய கிரிக்கெட் சபை வகுத்துள்ளது. இதன்படி பாகுபாடின்றி அனைத்து வீரர்களுக்கும் சமமாக 5 இலட்சம் ரூபா ஊதியம் வழங்கப்படும் என்று கிரிக்கெட் சபை அறிவித்தது. மேலும், ஒவ்வொரு போட்டி மற்றும் தொடர்களில் கிடைக்கும் வெற்றி அடிப்…

    • 0 replies
    • 846 views
  22. பிரெஞ் ஓப்பன் டெனிஸ் தொடரில் ரஷ்ய வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஷரபோவா, கஸ்னெட்சோபா, சபினா என ரஷ்ய வீராங்கனைகள் நான்காவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். பிரான்ஸின் அமெலி மவுரி ஸ்மோ அதிர்ச்சித் தோல்வியடைந்தார். ஆண்டின் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் தொடரான பிரெஞ் ஓப்பன் டெனிஸ் தொடர் பாரிஸில் நடக்கிறது. நேற்று முன்தினம் நடந்த பெண்கள் ஒற்றையர் மூன்றாவது சுற்றுப் போட்டியில் `நம்பர் -2' வீராங்கனை ரஷ்யாவின் மரியா ஷரபோவா, சகநாட்டு வீராங்கனை அலா குட்ரியாவ்சேவாவை எதிர்கொண்டார். முதல் செட்டை 6-1 என எளிதாக தன்வசப்படுத்திய ஷரபோவா இரண்டாவது செட்டிலும் அசத்தினார். இதை 6-4 என கைப்பற்றினார். இறுதியில் 6-1, 6-4 என்ற செட்களில் வெற்றி பெற்று, நான்காவது சுற்றுக்குள் நுழைந்தார்…

    • 0 replies
    • 850 views
  23. கடல் மட்டத்திலிருந்து குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் போட்டியை நடத்தக்கூடாது எனும் அறிவிப்பை சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) கைவிடாவிட்டால், 2010 உலகக் கிண்ண தகுதிப் போட்டிகளில் பங்கேற்கமாட்டோம் என கொலம்பியா எச்சரிக்கை விடுத்துள்ளது. 2500 மீற்றர் (8200 அடி) உயரத்துக்கு மேலான பகுதிகளில் சர்வதேசப் போட்டிகளை நடத்துவதால் வீரர்கள் மருத்துவ ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். இதனால், அம்மாதிரியான இடங்களில் போட்டிகளை நடத்த தடை விதிக்கப்படுவதாக பிபா சமீபத்தில் அறிவித்தது. இதனால், அம்மாதிரி மலைப் பிரதேசங்களில் போட்டிகளை நடத்திவந்த நாடுகள் அதிர்ச்சியடைந்தன. அந்த அறிவிப்பை கைவிடக்கோரும் போராட்டத்தில் கொலம்பியாவும் குதித்துள்ளது. பெரு, ஈக்குவடோர் நாடுகளும் இந்த அறிவிப்பால் ம…

    • 0 replies
    • 826 views
  24. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொப் வூல்மர் மரணம் தொடர்பாக நிலவி வந்த சர்ச்சை முடிவுக்கு வருகிறது. அவரது மரணம் இயற்கையானது தான் என்று ஜமேக்கா பொலிஸார் அறிவிக்கவிருக்கிறார்கள். மேற்கிந்தியாவில் நடந்த உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் பயிற்சியாளர் பொப் வூல்மர் இறந்தார். ஜமேக்காவில் அவர் தங்கியிருந்த ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்துகிடந்தார். இது ெதாடர்பாக பாகிஸ்தான் வீரர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. முதல் கட்ட சோதனையில், வூல்மர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக ஜமேக்கா பொலிஸார் கூறினார்கள். இதனால், இந்த வழக்கு சூடுபிடித்தது. இருப்பினும், கொலையாளிகள் யாரும் சிக்கவில்லை. இதைத் தொடர்ந்து ஸ்கொட்லாந்து யார்ட் துப்பறியும் ந…

    • 0 replies
    • 718 views
  25. பங்களாதேஷ் தொடரில் வெற்றி வாகை சூடிய இந்திய வீரர்கள் ஒவ்வொருவரும் தலா 34 இலட்சம் ரூபா அள்ளிச் செல்கின்றனர். சமீபத்தில் பங்களாதேஷ் சென்ற இந்திய அணி டெஸ்ட், ஒருநாள் போட்டித் தொடரை கைப்பற்றியது. உலகக் கிண்ணத் தோல்விக்குப் பின் வீரர்களுக்கான சம்பள முறையை இந்திய கிரிக்கெட் சபை மாற்றியமைத்தது. வெற்றி அடிப்படையில் ஊக்கத் தொகை, போனஸ் அளிக்கப்படும் என தெரிவித்திருந்தது. இதன்படி பங்களாதேஷுக்கு எதிரான இரண்டு ஒருநாள் போட்டிகளில் வென்றதற்கு சம்பளமாக ஒவ்வொரு வீரருக்கும் 3 இலட்சம் ரூபா (ஒரு போட்டிக்கு 1.5 இலட்சம் ரூபா வீதம்) வழங்கப்படும். * ஊக்கத் தொகையாக 5 இலட்சம் ரூபா (வெற்றி பெற்ற இரண்டு போட்டிக்கு ரூபா 2.5 இலட்சம் வீதம்) வழங்கப்படும். விளையாடாத வீரர்கள் இதில் பா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.