Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. விம்பிள்டன் உட்பட பல டென்னிஸ் போட்டிகளில் மோசடி? விம்பிள்டன் போட்டிகள் உட்பட, உலகின் பல முன்னணி டென்னிஸ் போட்டிகளில், பந்தய மோசடி நடைபெற்றுள்ளன என்று சந்தேகப்படுவதற்கான ஆதாரங்கள், பிபிசி மற்றும் பஸ்ஃபீட் நியூஸ் ஆகியவை இணைந்து முன்னெடுத்த விசாரணையில் தெரியவந்துள்ளது. விம்பிள்டன் டென்னிஸ் போட்டியிலும் மோசடி என சந்தேகங்கள் எழுந்துள்ளன என பிபிசி கூறுகிறது. கடந்த பத்தாண்டுகளில்,கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவர்கள் உட்பட பலர், பந்தய மோசடியில் ஈடுபட்டு ஆட்டங்களில் தோல்வியடைந்தனர் எனும் சந்தேகத்தின் பேரில், டென்னிஸ் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர் என்று, இரகசிய ஆவணங்கள் மற்றும் கோப்புகள் காட்டுகின்றன. பல விளையாட்டு வீ…

  2. இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளராக கிரகம் போர்ட் இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளராக கிரகம் போர்ட் நியமிக்கப்பட்டுள்ளதாக கிரிக்கட் நிறுவனத்தின் தலைவர் கூறியுள்ளார். எதிர்வரும் பெப்ரவரி 01ம் திகதி முதல் 45 மாதங்களுக்கு அவர் இலங்கை கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=76495

  3. விராட் கோலியின் கோபத்துக்கு பின்னால் சிம்மராசியா? களத்தில் ஆக்ரோஷமாக நடந்துகொள்ளும் தன்னுடைய குணம், தனது குடும்பத்திலிருந்தே தனக்கு வந்ததாக இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார். ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்லுடனான ஜாலி உரையாடலின் போது கோலி இவ்வாறு தெரிவித்தார். மேலும் சச்சினே தான் கிரிக்கெட் விளையாட வந்ததற்கு மிகப்பெரிய காரணம் என்றும் அவர் கூறினார். நடந்து முடிந்த இந்திய-ஆஸ்திரேலிய தொடரில் வீரர்கள் பேட்டிகளிலும், போட்டிகளிலும் மோதிக்கொண்டாலும், கோலியும் மேக்ஸ்வெல்லும் சகஜமாகவும் ஜாலியாகவும் உரையாடிக்கொண்டனர். இந்திய அணியின் செயல்பாடு, கோலி – ஃபால்க்னர் உரையாடல், சச்சின், ஐ.பி.எல் என மேக்ஸ்வெல் கேட்ட கேள்விகளுக்கு கோலி பத…

    • 4 replies
    • 690 views
  4. புடினின் படத்துடனான ரி-சர்ட்டால் வெடித்தது சர்ச்சை February 19, 2016 துருக்கியின் இஸ்தான்புல் துருக்கிய கால்பந்து அணிக்கெதிரான போட்டியின்போது, ரஷ்ய கால்பந்து அணி வீரர் ஒருவர் முறையற்ற விதத்தில் நடந்துகொண்டதாக ஐரோப்பிய கால்பந்து சம்மேளனம் குற்றம்சாட்டியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற போட்டியின் பின்னர் ரஷ்ய வீரர் டிமிட்ரி டாராஸோவ், தனது அணியைக் குறிக்கும் ரி-சர்ட்டை கழற்றி, உள்ளே ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் படத்துடன் தான் அணிந்திருந்த ரி-சர்ட்டை காண்பித்துள்ளார். ரஷ்யாவுக்கும் துருக்கிக்கும் இடையில் பனிப்போர் நடைப்பெற்று வருகின்ற நிலையில், படத்துடன் கூடிய ரி-சர்ட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு, ஜ.எஸ் தீவிரவாதிகளுக…

  5. போதைப்பொருள் குற்றச்சாட்டில் முன்னணி வீராங்களை மரியா ஷரபோவா தற்காலிக நீக்கம் முன்னாள் முதல்தர டென்னிஸ் வீராங்கனையான ரஷ்யாவின் மரியா ஷரபோவா(28) போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானதையடுத்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ளவிருந்த நிலையில் அவருக்கு போதைப் பொருள் சோதனை நடத்தப்பட்டது. அதில் மரியா ஷரபோவா தோல்வியுற்றுள்ளார். ஷரபோவா போதைப் பொருள் பயன்படுத்தியது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. விதிமுறைகளுக்கு எதிரான அளவு அதிகமாக மெக்னீசியம் எடுத்துக் கொண்டமை கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 10 வருடங்களாக அவர் போதைப் பொருள் பயன்படுத்தி வந்துள்ளார் என்பது சோதனையில் தெரியவந்துள்ளது. இதனைய…

  6. ஐக்கிய அமெரிக்க தேசிய கால்பந்தாட்ட லீக்கின் தேசிய கால்பந்தாட்ட மாநாட்டின் சம்பியன்களுக்கும், அமெரிக்க கால்பந்தாட்ட மாநாட்டின் சம்பியன்களுக்குமிடையே நடைபெறும் சுப்பர் போலில் கடந்தாண்டுக்கான பருவகாலத்தில் கன்ஸாஸ் சிற்றி சீஃப்ஸ் அணி சம்பியனானது. ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் மியாமி கார்டின்ஸில் நேற்று அதிகாலை நடைபெற்ற குறித்த 54ஆவது சுப்பர் போலில், தேசிய கால்பந்தாட்ட மாநாட்டின் சம்பியன்களான சான் பிரான்ஸிஸ்கோ போர்ட்டினைர்ஸ் அணியும், அமெரிக்க கால்பந்தாட்ட மாநாட்டின் சம்பியன்களான கன்ஸாஸ் சிற்றி சீஃப்ஸ் அணியும் மோதின. இந்நிலையில், மூன்றாவது காற்பகுதி முடிவில் 20-10 என்ற புள்ளிகள் கணக்கில் சான் பிரான்ஸிஸ்கோ போர்ட்டினைர்ஸ் முன்னிலையில் காணப்பட்டிருந்தபோதும், …

    • 0 replies
    • 690 views
  7. குமார் சங்கக்கார இங்கிலாந்து கழக போட்டியில் சதம்: இலங்கை அணியின் நட்சத்திர முன்னாள் வீரர் குமார் சங்கக்கார இங்கிலாந்து கழக மட்டப் போட்டியில் சதமடித்து சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்தின் சர்ரே கழகத்தின் சார்பில் குமார் சங்கக்கார விளையாடி வருகின்றார். ஓவல் மைதானத்தில் சமர்செட் கழகத்திற்கு எதிரான போட்டியில் சங்கக்கார 171 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளார். இதுவரை சங்கக்கார சரே அணிக்காக 22 இன்னிங்ஸ்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓட்டங்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/131438/language/ta-IN/article.aspx

  8. இலங்கையுடன் மோதப் போகும் ஆஸி அணி இதுதான் ஜூலை மாதம் இலங்கையுடன் மோதவுள்ள அவுஸ்திரேலிய 15 வீரர்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் அணியில் மிட்செல் ஸ்டார்க், மோய்சஸ் ஹென்றிக்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். காயம் காரணமாக பீட்டர் சிடில், ஜேம்ஸ் பேட்டின்சன் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் அணித் தேர்வுக்கு பரிசீலிக்கப்படவில்லை. மேலும் ஜேக்சன் பேர்ட், நேதன் கூல்டர்-நைல் ஆகிய வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்பின்னுக்கு நேதன் லயன், ஸ்டீஃபன் ஒகீஃப் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி பல்லேகல மைதானத்தில் ஜூலை 26-ம் திகதி தொடங்குகிறது. இதன்படி இலங்கையை எதிர்கொள்ளவுள்ள அவிஸ்திரேலிய அணியில், ஸ்டீவன் ஸ்…

  9. வார்னர் 156 ரன்கள்; நியூஸிலாந்து 147 ஆல் அவுட்: தொடரை 3-0 என கைப்பற்றிய ஆஸ்திரேலியா சாப்பல்-ஹேட்லி ஒருநாள் தொடர் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணி. | படம்: ஏஎப்பி. மெல்பர்னில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான 3-வது, இறுதி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 117 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு நியூஸிலாந்தை 3-0 என்று ‘ஒயிட்வாஷ்’ செய்தது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா வார்னரின் 156 ரன்கள் பெரும்பங்களிப்புடன் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 264 ரன்கள் எடுக்க நியூஸிலாந்து படுமோசமாக ஆடி 36.1 ஓவர்களில் 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 117 ரன்களில் தோல்வி அடைந்து ஒயிட்வாஷ் ஆனது. …

  10. கிளப் லீக்: பெங்கால் பேட்ஸ்மேன் அவுட்டாகாமல் 413 ரன் அடித்து சாதனை கிளப் லீக் போட்டியில் மேற்கு வங்காள பேட்ஸ்மேன் பங்கஜ் ஷா அவுட்டாகாமல் 413 ரன்கள் அடித்து சாதனைப் படைத்துள்ளார். மேற்கு வங்காள கிரிக்கெட் சங்கம் சார்பில் முதல் டிவிஷன் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பரிஷா ஸ்போர்ட்டின் அணி சார்பில் 28 வயதான பங்கஜ் ஷா 44 பவுண்டரிகள், 23 சிக்சர்கள் மூலம் அவுட்டாகாமல் 413 ரன்கள் குவித்துள்ளார். 6-வது விக்கெட்டுக்கு அஜ்மிர் சிங் (47) உடன் இணைந்து 203 ரன்களும், 7-வது விக்கெட்டுக்கு ஷ்ரேயன் சக்ரபோர்ட்டி (22) உடன் இணைந்து 191 ரன்களும் குவித்தார். இவரது அபார ஆட்டத…

  11. 39 சிக்ஸ், 14 பவுண்டரியுடன் டி20 போட்டியி்ல முச்சதம் விளாசிய டெல்லி வீரர் டி20 கிரிக்கெட் போட்டியில் 39 சிக்சர்களுடன் முச்சதம் அடித்து டெல்லி பேட்ஸ்மேன் வரலாற்று சாதனைப் படைத்துள்ளார். டெல்லியில் கிளப் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் மாவி லெவன் - பிரென்ட்ஸ் லெவன் அணிகளுக்கு இடையிலான போட்டியில் மாவி லெவன் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரராக பேட்ஸ்மேனும், விக்கெட் கீப்பரும் ஆன மோகித் அலாவத் களம் இறங்கினார். தொடக்கம் முதலே பிரென்ட்ஸ் லெவன் அணியின் பந்து வீச்சாளர்களின் பந்தை சிக்சருக்கும் பவுண்டரி…

  12. தென்ஆப்பிரிக்கா தொடர்: நியூசிலாந்து அணியில் கப்தில், ரோஞ்சி சேர்ப்பு தென்ஆப்பிரிக்கா தொடருக்கான நியூசிலாந்து அணியில் காயத்தில் இருந்து மீண்ட கப்தில், ரோஞ்சி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். தென்ஆப்பிரிக்கா அணி நியூசிலாந்து சென்று மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாட இருக்கிறது. முதலில் ஒரேயொரு போட்டி கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. அதன்பின் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்கிறது. முதல் டி20 மற்றும் இரண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் காயத்தில் இருந்து மீண்ட…

  13. ஆசிய மெய்வல்லுனருக்கான தெரிவுப்போட்டிகள்: வடக்கின் நட்சத்திரம் புதிய இலங்கை சாதனை 800 மீற்றர் ஓட்டப்போட்டியில் கடற்படையின் கயந்திகா அபேரத்ன இலங்கை சாதனையைப் படைத்தார். இந்த சாதனைக்காக அவர் 02 நிமிடங்கள் மற்றும் 2.55 விநாடிகளை எடுத்துக்கொண்டார். வடக்கின் நட்சத்திரமான அனிதா ஜெகதீஸ்வரன் மகளிருக்கான கோலூன்றிப் பாய்தலில் 03.45 மீற்றருக்குத் தாவி புதிய இலங்கை சாதனையைப் புதுப்பித்தார். மகளிருக்கான முப்பாய்ச்சலில் விதுஷா லக்ஷானி மற்றுமொரு இலங்கை சாதனையை நிலைநாட்டினார். 13.67 மீற்றருக்கு தாவிய அவர் இந்த சாதனையைத் தன்வசப்படுத்தினார். இந்த சாதனைகளுடன் ஆசிய மெய்வல்லுனர் போட்டிகளுக்கான தெரிவுப்போட்டிகள்…

  14. ஆண்டர்ஸனில் இருந்து ராகுல் வரை ஆர். அபிலாஷ் லார்ட்ஸில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்டில் நான் மிகவும் ரசித்த ஒரு விசயம் ஆண்டர்ஸனின் பந்து வீச்சு. அதற்கு அடுத்து ராகுலின் ரசிக்கத்தக்க, ரொம்ப ஸ்டைலான மட்டையாட்டம். 1 ) ஆண்டர்ஸன் மிதவேக வீச்சாளர்களிடையே ஒரு உன்னதமான கலைஞன் என்று சொல்லலாம். அவரால் வழக்கமான seam up பந்து வீச்சில் ஈடுபட முடியும். குளிரும் மந்தமான வானிலையும் கொண்ட காலைப் பொழுதில், மாலை வேளையில் நான்காவது ஸ்டம்பில் போட்டு ஸ்விங் பண்ண முடியும். பகற்பொழுதில் ஐந்தாவது ஸ்டம்பில் பொறுமையாக வீசி ரன்களை கட்டுப்படுத்த முடியும். பேட்ஸ்மேனை வைடாக செல்லும் பந்தை துரத்த வைத்து அவுட் ஆக்க முடியும். உள்ளே வெளியே…

  15. பார்சிலோனாவிற்காக மெஸ்சி 38 முறை ஹாட்ரிக் கோல் அடித்து சாதனை லா லிகாவில் எஸ்பான்யல் அணிக்கெதிராக ஹாட்ரிக் கோல்கள் அடித்ததன் மூலம் பார்சிலோனாவிற்கு மெஸ்சி 38 முறை ஹாட்ரிக் அடித்து சாதனைப் படைத்துள்ளார். லா லிகா தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் பார்சிலோனா - எஸ்பான்யல் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியது முதலே பார்சிலோனா வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக நட்சத்திர வீரர் மெஸ்சி அபாரமாக விளையாடினார். ஆட்டத்தின் 26, 35 மற்றும் 67-வது நிமிடங்களில் அடுத்தடுத்து மூன்று கோல்கள் அடி…

  16. சிவகுருநாதன் ஞாபகார்த்த கிண்ணத்தை சுவீகரித்த ஆனந்த கல்லூரி Tamil சிவகுருநாதன் ஞாபகார்த்த கிண்ணத்தை சுவீகரித்த ஆனந்த கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, கொழும்பு ஆனந்த கல்லூரி ஆகிய இரு பாடசாலைகளுக்கிடையிலான சிவகுருநாதன் ஞாபகார்த்தக் கிண்ணம், பனிக்கர் தனபாலசிங்கம் ஞாபகார்த்த கேடயத்துக்கான கிரிக்கெட் போட்டி இன்றையதினம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. 50 ஓவர்களைக் கொண்டிருந்ததாக அமைந்திருந்த இந்தப்போட்டியில் ஆனந்த கல்லூரி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி தனது ஆரம்ப வ…

  17. இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி: கெய்ல் அணிக்கு திரும்பியது கூடுதல் பலம் - ஹோல்டர் வெஸ்ட்இண்டீஸ்- இங்கிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் போட்டி தொடரில் அதிரடி வீரர் கிறிஸ்கெய்ல் இடம் பெற்றுள்ளது கூடுதல் பலம் என வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் கூறியுள்ளார். வெஸ்ட்இண்டீஸ்- இங்கிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் போட்டி தொடர் இன்று தொடங்கியது. சம்பள பிரச்சினை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அணியில் ஓரம் கட்டப்பட்டு இருந்த அதிரடி வீரர் கிறிஸ்கெய்ல், சாமுவேல்ஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் கூறியதாவது:- கிறிஸ்கெய்ல் அணிக்கு திரும்பியது உண்மையிலேயே கூடுதல் பலமாகும். எதிர்பார…

  18. சாஹலின் வெற்றியை அடுத்து லெக் ஸ்பின்னராகிறாரா அஸ்வின்? விஜய் ஹசாரே டிராபியில் குஜராத்துக்கு எதிராக லெக்ஸ்பின் (ரிஸ்ட்) வீசிய அஸ்வின். - படம். | ஆர்.ரகு. இந்திய ஒருநாள் போட்டி அணியிலிருந்து நீக்கப்பட்ட ரவிச்சந்திரன் அஸ்வின் எப்போதும் பரிசோதனை முறை பந்துவீச்சில் ஆரம்பம் முதலே சிறந்து விளங்குவது குறிப்பிடத்தக்கது. ஆரம்ப காலக்கட்டத்தில் அவர் ஆஃப் ஸ்பின்னை ஒரு திடீர் பந்தாகவே வைத்திருந்தார். ஆனால் ஒருநாள் போட்டிகளில் இரண்டு முனைகளிலும் இருவேறு பந்துகளில் வீச வேண்டியுள்ளதால் பந்து பெரும்பாலும் புதிதாகவே இருப்பதால் விரல்களால் ஸ்பின் செய்யும் வீச்சாளர்கள் குறைந்த ஓவர் போட்டிகளில் பழமையாகக…

  19. ஸ்காட்லாந்து கிளாஸ்கோவில் நடந்து வரும் காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்று வேலூர் வீரர் சதீஷ்குமார் சாதனை படைத்துள்ளார். 71 நாடுகள் கலந்து கொண்ட 20 ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஸ்காட்லாந்து கிளாஸ்கோவில் நடந்து வருகிறன. இதில் வேலூர் சத்துவாச்சாரி புது தெருவைச் சேர்ந்த இந்திய வீரர் சதீஷ் குமார் சிவலிங்கம் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளார். சதீஷ்குமாரின் தந்தை சிவலிங்கம் முன்னாள் ராணுவ வீரர். இவர் தற்போது விஐடி பல்கலைக்கழகத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். தாய் தெய்வானை. சதீஷ்குமாரின் தந்தை சிவலிங்கமும் பளுதூக்கும் வீரர். இவர் 1985 முதல் 87 வரை நடந்த தேசிய பளுதூக்கும் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இவர…

  20. உலகக் கோப்பையில் அதிக கோல்கள் அடித்த கால்பந்து வீரர் குளோஸ் ஓய்வு உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அதிக கோல்கள் அடித்த ஜெர்மன் வீரர் மிரோஸ்லாவ் குளோஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். பிரேசில் நாட்டில் சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஜெர்மன் அணி அர்ஜென்டினாவை வீழ்த்தி கோப்பையை வென்றது. அந்த அணியில் இடம்பெற்ற 36 வயதான குளோஸ், உலகக்கோப்பையில் தனது 16-வது கோலை பதிவு செய்தார். இதன்மூலம் உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்திருந்த பிரேசில் வீரர் ரொனால்டோவை (15 கோல்) முந்தி சாதனை படைத்தார் க்ளோஸ். 1990க்குப் பிறகு உலகக்கோப்பையை வென்ற மகிழ்ச்சியில் ஜெர்மன் வீரர்கள் உள்ள நிலையில், அணியின் முன்னணி வீரரான குளோஸ் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு …

  21. சகோதரனின் கிரிக்கெட் வாழ்க்கையை பாக்.கிரிக்கெட் சபை சீரழிக்கின்றது : கம்ரான் அக்மல் சசோதரனுக்கு விக்கெட் காப்பளர் பணியைக் கொடுத்து அவரது கிரிக்கெட் வாழ்க்கையை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வாளர்களும் நிர்வாகிகளும் சீரழிக்கின்றனரென கம்ரான் அக்மல் குற்றம் சாட்டியுள்ளார். கம்ரான் அக்மல் கடந்த 2010 ஆம் ஆண்டு பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளார். அதேபோல் கடந்த ஆண்டிலிருந்து ஒருநாள் போட்டிக்கான அணியில் அவர் இடம்பெறவில்லை. இந்நிலையில் பாகிஸ்தான் தேர்வாளர்கள் தனது சகோதரர் மற்றும் அணியில் நடு வரிசை துடுப்பாட்டக்காரராக உள்ள உமர் அக்மலின் கிரிக்கெட் வாழ்க்கையை கெடுக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து கம்ரான் அக்மல் தெரிவிக்கையில், ஒருநாள் ம…

  22. The return of the English Disease? உலககோப்பை கால்பந்து போட்டியும் அதன் பின் உள்ள ஆபத்து அரசியலும் “காலடியில் வந்து சேரும் பந்து என்னுடையதல்ல, அது என் குழுவினுடையது என்று எப்போதும் நினை. நீதான் கோல் போட வேண்டுமென ஒரு போதும் நினைக்காதே. உனக்குப் பெரும் தடைகள் சூழ்ந்து வரும்போது, பந்தை மேல் எடுத்துச் செல்ல வசதியுடன் உன் சக ஆட்டக்காரர்கள் காத்துக் கொண்டிருப்பதை ஒரு கணமும் மறக்காதே”. - சுந்தரராமசாமி ( ஜே.ஜே. சில குறிப்புக்களில்) - மீண்டும் உலக கால்பந்து போட்டியொன்று ஆரம்பமாகியுள்ளது. உலகின் பெரும்பாலான மக்கள் அதனால் பின்னப்பட்ட மாய வலையின் பிரமிப்பிலிருந்து விடுபடாமல் குடும்பங்கள், வேலைகள், நோய்கள், கடன் சுமைகள் என அனைத்து பிரச்சினைகளையும் மறந்து அதில் லயிக்க ஆ…

  23. புது விதிமுறைகளுடன் '100 பந்து கிரிக்கெட்' இங்கிலாந்து கிரிக்கெட் சபையினால் 100 பந்துகள் கொண்ட கிரிக்கெட் போட்டி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இது குறித்து ஏற்கனவே தகவல் தெரிவித்திருந்த இங்கிலாந்து கிரிக்கெட் சபை, இதன் விதிமுறைகளை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு இன்னிங்ஸும் தலா 100 பந்துகளை கொண்டதாக இருக்கும். அத்துடன் ஒவ்வொரு 10 பந்திற்கும் இடையில் பந்து வீசும் திசை மாறும். ஒரு பந்து வீச்சாளர் தொடர்ச்சியாக ஐந்து அல்லது 10 பந்துகளை பறிமாற்றம் செய்வதுடன் ஒரு பந்து வீச்சாளர் அதிகபட்சமாக 20 பந்துகளை பறிமாற்றம் செய்யலாம். அத்துடன் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இப் போட்டி முறையானது அறிமுகப்படுத்தப்படும் எனவும் இங்கில…

  24. முதல் இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸுக்காக 2 விக்கெட்டுக்களை இழந்து 215 ஓட்டங்களை குவித்துள்ளது. அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது அவுஸ்திரேலியாவுடன் மூன்று இருபதுக்கு 20, நான்கு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இருபதுக்கு 20 தொடர் ஏற்கனவே சமநிலையில் முடிவடைந்துள்ள நிலையில், நடைபெற்று முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளும் 1:1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந் நிலையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி இன்று மெல்போர்னில் ஆரம்பானது. இப் போட்டியில் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.