விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7879 topics in this forum
-
ஐசிசி ஒருநாள் தரவரிசை: வழக்கம்போல் அசைக்க முடியாத இடத்தில் கோலி, பும்ரா Published : 17 Mar 2019 17:51 IST Updated : 17 Mar 2019 17:51 IST பி.டி.ஐ துபாய் ஐசிசி ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் பேட்ஸ்மேன் வரிசையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து முதலிடத்திலும், பந்துவீச்சில் பும்ரா தொடர்ந்து முதலிடத்திலும் இருந்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சமீபத்தில் நடந்து முடிந்த ஒருநாள் தொடரில் 310 ரன்கள் குவித்தார் கோலி இதனால், தரவரிசையில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். துணைக் கேப்டன் ரோஹித் சர்மா, இந்த தொடரில் 202 ரன்கள் சேர்த்ததால், தரவரிசையில் தொடர்ந்து 2-வது இடத்தில் நீடி…
-
- 0 replies
- 904 views
- 1 follower
-
-
இறுதி நேரப் பரபரப்பில் அசத்தலாக ஆடி வெற்றியைத் தனதாக்கிக் கொண்டது யாழ் சென்.ஜோன்ஸ் கல்லூரி. March 17, 2019 யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, தேசிய அணியில் விளையாடும் இரண்டு வீரர்களை உள்ளடக்கிய தனது அணியுடன் களமிறங்கிய போதும், களத்தடுப்புகளில் இழைத்த தவறுகளால் வெற்றியைத் தவறவிட்டது. 221 என்ற இலக்கை மத்திய கல்லூரி நிர்ணயிக்க, 48 பந்துப் பரிமாற்றங்களில் 8 இலக்குகளைப் பறிகொடுத்து வெற்றியைச் சுவைத்தது சென்.ஜோன்ஸ் கல்லூரி. யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணிக்கும் இடையிலான 17ஆவது ஒரு நாள் ஆட்டம், சென்.ஜோன்ஸ் கல்லூரி மைதானத்தில் நேற்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்றது. துட…
-
- 0 replies
- 859 views
-
-
யாழ்ப்பாணம் கல்வி வலய மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான 20 வயது பிரிவு பெண்களுக்கான கால்பந்தாட்டத் தொடரில் யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர் மட அணி கிண்ணம் வென்றது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம் பெற்ற இறுதியாட்டத்தில் யாழ்ப்பாணம் திருக்குடும்ப கன்னியர் மட அணியை எதிர்த்து குருநகர் சென்.ஜேம்ஸ் மகளிர் வித்தியாலய அணி மோதியது https://newuthayan.com/story/14/திருக்குடும்ப-கன்னியர்-ம.html
-
- 0 replies
- 546 views
-
-
அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற வூசூ குத்துச்சண்டை போட்டியில் வவுனியாவைச் சேர்ந்த வீரர்கள் வடமாகாண ரீதியில் கலந்து கொண்டு 15 பதக்கங்களை தமதாக்கி கொண்டனர். கண்டி மாநகரசபை மண்டபத்தில் பாடசாலை ரீதியாக நடைபெற்ற வூசூ குத்துச் சண்டை போட்டியில் வவுனியாவை சேர்ந்த பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டு 09 தங்கப்பதக்கங்களையும், 06 வெள்ளிப்பதக்கங்களை வென்று வட மாகாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். https://newuthayan.com/story/11/15-பதக்கங்களை-வென்ற-வவுனிய.html
-
- 0 replies
- 533 views
-
-
யாழ்ப்பாணம் கல்வி வலய மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான 16 வயது பிரிவு ஆண்களுக்கான .கால் பந்தாட்ட தொடரின் இறுதியாட்டத்தில் யாழ்ப்பாணம் கல்வி வலய மட்ட சம்பியனானது யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி. ஆட்ட நேர முடிவில் யாழ்ப்பாணம் சென்.பற்றிக்ஸ் கல்லூரி அணி 4:2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. லியோ சிறப்பான கோல் பதிவைச் செய்தார். https://newuthayan.com/story/11/சென்-பற்றிக்ஸ்-கல்லூரி-அ.html
-
- 0 replies
- 644 views
-
-
மசூதி துப்பாக்கி சூடு – பங்களாதேஸ் கிரிக்கெட் அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயணம் ரத்து March 15, 2019 நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில், பங்களாதேஸ் கிரிக்கெட் வீரர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியதைத் தொடர்ந்து அந்த அணியின் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பங்களாதேஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்ற நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள ஹேக்லி ஓவல் மைதானத்தில் நாளை ஆரம்பமாக உள்ளது. இந்நிலையில், இன்று தொழுகைக்காக கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மைதானத்தின் அருகே உள்ள மசூதிக்கு சென்றிருந்தபோது மசூதிக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பலர…
-
- 0 replies
- 641 views
-
-
டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாவுள்ள புதிய விதிமுறைகள் டெஸ்ட் கிரிக்கெட்டில் பல மாற்றங்களை கொண்டுவருவதற்கு எம்.சி.சி., ஐ.சி.சி.யிடம் சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. கிரிக்கெட் ஆட்டங்களில் விதிமுறைகளை மாற்றுவதிலும், புதிய நுணுக்கங்களை புகுத்துவதிலும் லண்டனை மையமாக கொண்டு செயல்படும் எம்.சி.சி. உலக கிரிக்கெட் குழு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த குழுவில் இந்நாள், முன்னாள் வீரர்கள், நடுவர்களும் இடம் பெற்றுள்ளனர். இந் நிலையில் மைக் கேட்டிங் தலைமையிலான எம்.சி.சி. உலக கிரிக்கெட் குழுவின் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் இரண்டு நாட்கள் நடந்தன. இதன்போது எம்.சி.சி. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடர்பாக ஐ.சி.சி.யிடம் கீழ் கண்ட பரிந்துரைகளை முன்வைத்தன. * நேரத…
-
- 0 replies
- 729 views
-
-
மீண்டும் சர்வதேச அரங்கில், தமிழீழ கொடியுடன் தமிழர்களின் வீரத்தை.... உலகுக்கு உணர்த்திய தமிழன்.
-
- 5 replies
- 1.3k views
-
-
இலங்கையை பந்தாடிய தென்னாபிரிக்கா 6 விக்கெட்களால் வெற்றி! இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்கா அணி 6 விக்கெட்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்எலிசபத் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 39.2 ஓவர்களில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 189 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி சார்பாக இசுறு உதான 78 ஓட்டங்களையும், அவிஷ்க 29 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் அன்ரிச் நொர்டே 3 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் பின்னர் 190 ஓட்டங்கள் வெற்றி இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென்னாபிர…
-
- 0 replies
- 919 views
-
-
இந்தியா 35 ஓட்டங்களால் தோல்வி – சொந்த மண்ணில் ஒருநாள் தொடரையும் இழந்தது! இந்தியா – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான 5 ஆவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 35 ஓட்டங்களால் தோல்வியடைந்து, ஒருநாள் தொடரையும் இழந்துள்ளது. இந்தியா – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரரில் முதல் நான்கு போட்டிகளில் இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகளைப் பெற்றுள்ள நிலையில், 5-வதும் இறுதியுமான போட்டி டெல்லியில் நடைபெற்றது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய அவுஸ்ரேலியா அணி 9 விக்கெட்களை இழந்து 272 ஓட்டங்களை பெற்றது. அவ்வணி சார்பாக உஷ்மான் கவாஜா 100 …
-
- 0 replies
- 450 views
-
-
இராணுவத் தொப்பி அணிந்து விளையாடிய இந்திய அணி மீது நடவடிக்கை வேண்டும் – பாகிஸ்தான் கோரிக்கை அவுஸ்ரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இராணுவத் தொப்பி அணிந்து விளையாடிய இந்திய அணி வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது. பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை அமைச்சர் மெஹ்மூத் குரேஷி ஐ.சி.சி.யிடம் இன்று (சனிக்கிழமை) இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். இந்தியா-அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி ராஞ்சியில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் இராணுவத் தொப்பியுடன் களமிறங்க இந்திய அணி முடிவு செய்தது. இதன்படி வீரர்கள் இராணுவத் தொப்பியுடன் விளையாடினர். இந்நிலையில், இராணுவ தொப்ப…
-
- 1 reply
- 729 views
-
-
யாழ்ப்பாணம் சாவகச்சேரி மகளிர் கல்லூரியின் தரம் 3 தரம் 4 மாணவர்கள் தேசிய நிலை செயற்பட்டு மகிழ்வோம் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளனர். கண்டி போகம்பர மைதானத்தில் இடம்பெற்ற தேசிய நிலை செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட கல்லூரியின் தரம் 3 தரம் 4 மாணவர்கள் போட்டிகளில் வெண்கலப் பதக்கங்கள் பெற்றுச் சாதனை படைத்துள்ளனர். https://newuthayan.com/story/13/சாவகச்சேரி-மகளிர்-கல்லூ-2.html
-
- 0 replies
- 385 views
-
-
மூன்று முரை உலக சாம்பியன் பட்டத்தை வென்ற சைக்கிள் பந்தய வீராங்கனை மரணம் உலக சாம்பியன் பட்டம் வென்ற அமெரிக்க சைக்கிள் பந்தய வீராங்கனை கெல்லி கேட்லின் மரணம் அடைந்தார். அமெரிக்காவின் பிரபல சைக்கிள் பந்தய வீராங்கனை கெல்லி கேட்லின் மரணம் அமெரிக்காவைச் சேர்ந்த அணைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. உயிரிழந்த சைக்கிள் பந்தய வீராங்கனை கெல்லி கேட்லின் வயது 23 , இவர் 3 முறை (2016, 2017, 2018) உலக சாம்பியன் பட்டத்தை வென்றார். 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற அமெரிக்க அணியில் அங்கம் வகித்தவர். இந்நிலையில், கெல்லி கேட்லின் கடந்த வியாழக்கிழமை மரணம் அடைந்ததாக அவரது சகோதரர் சமூக வலைத்தளம் மூலம் தகவல் வெளியிட்டார். சைக்கிள் பந்தயத்தில…
-
- 0 replies
- 540 views
-
-
யாழ்ப்பாணம்தென்மராட்சி வலய பாடசாலைகளுக்கு இடையிலான 16 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான கரப்பந்தாட்டப் போட்டியில் கைதடி நாவற்குழி அ.த.க. பாடசாலை பெண்கள் அணி வெற்றிபெற்றது. சாவகச்சேரி மகளிர் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இறுதியாட்டத்தில் நடப்பாண்டு சம்பியனான கைதடி முத்துக்குமாரசுவாமி பாடசாலை அணியை எதிர்த்து கைதடி நாவற்குழி அ.த.க பாடசாலை அணி மோதியது. 15 :11 என்ற செற் கணக்கில் கைதடி நாவற்குழி அ.த.க பாடசாலை சம்பியன் கிண்ணத்தை தமதாக்கி கொண் டது. https://newuthayan.com/story/17/நாவற்குழி-அ-த-க-மகளிர்-அணி.html
-
- 0 replies
- 460 views
-
-
பதிவு செய்யப்பட்ட.இளைஞர்கழகங்களுக்கிடையே நடத்தப்பட்ட ஆண்கள் பெண்களுக்கான எல்லே இறுதிப்போட்டியில் அளவெட்டி கலைவாணி இளைஞர் கழக பெண்கள் அணி சம்பியனாகியது. மல்லாகம்.ஆர்.டி.எஸ்.மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் அளவெட்டி கலைவாணி இளைஞர் கழக பெண்கள் அணியும், சென்சேவையர் இளைஞர் கழக பெண்கள் அணியும் மோதிக் கொண்டன. https://newuthayan.com/story/16/எல்லேயில்-கலைவாணி-அணிக்க.html
-
- 0 replies
- 345 views
-
-
இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது தென்னாபிரிக்கா இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தென்னாபரிக்க அணி 71 ஓட்டங்களினால் வெற்றிபெற்று தொடரை 3:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள லசித் மலிங்க தலைமையிலான இலங்கை அணி தென்னாபிரிக்க அணியுடன் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட கிரக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஜோகன்னஸ்பர்க்கில் கடந்த 03 ஆம் திகதி இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டுக்களினாலும், செஞ்சூரியனில் 06 ஆம் திகதி இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் 113 ஓட்டத்தினாலும் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்றது. இந் நிலையில் தொடரின் மூன்றாவது போட்டி நேற்று டர்பனில் பகலரவு …
-
- 0 replies
- 487 views
-
-
தவான் அதிரடி சதம் – 358 ஓட்டங்களை குவித்தது இந்தியா! இந்தியா மற்றும் அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையிலான 4 ஆவது ஒருநாள் போட்டியில் அவுஸ்ரேலிய அணிக்கு 359 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொஹாலி மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்தியா அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அதன் படி களமிறங்கிய இந்தியா அணி ஷிகர் தவானின் அதிரடி சதத்தின் உதவியுடன் 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 352 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அவ்வணி சார்பாக ஷிகர் தவான் 143 ஓட்டங்களை ரிஷாப் பந்த் 36 ஓட்டங்களையும், விஜய் சங்கர் ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் பட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளையும், ஜெய் ரிச்சர்ட்சன் 3 வ…
-
- 1 reply
- 806 views
-
-
-
'வடக்கின் போர்' நாளை ஆரம்பம் 'வடக்கின் போர்' என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான நூற்றாண்டு கால கிரிக்கெட் போட்டி நாளைய தினமான 7ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகி 3 நாள்கள் நடைபெறுகின்றது. 113ஆவது இன்னிங்ஸ் போட்டியான இது இம்முறையும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டியின் பாதுகாப்பு இரண்டு கல்லூரி சமூகத்தாலும் பொலிஸாரிடம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், மதுபோதை அல்லது போதைப் பொருள்கள் பாவனையுள்ள எவரும் போட்டியைப் பார்க்க அரங்குக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பதோடு, போதையில் அடாவடியில் ஈடுபடுவோர் தண்டிக்கப்படுவர் என கூறப்பட்டுள்ளதோடு, இப் போட்டி தொடர்பான செய்தியாளர்கள் சந்தி…
-
- 2 replies
- 879 views
-
-
ரன்கள் எடுக்கத் திணறிய ஆஸி.; மந்தமான பிட்சில் இந்திய பவுலிங் அசத்தல்: இந்தியாவுக்கு 237 ரன்கள் இலக்கு Published : 02 Mar 2019 18:19 IST Updated : 02 Mar 2019 18:19 IST இரா.முத்துக்குமார் ஹைதராபாத் படம்.| பிடிஐ. ஹைதராபாத்தில் நடைபெறும் முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியினால் விருப்பத்துக்கேற்ப ரன்கள் குவிக்க முடியாமல் 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 236 ரன்கள் என்று மட்டுப்பட்டது. பும்ராவிடம் ஏரோன் பிஞ்ச் டக் அவுட் ஆன பிறகே ஆஸ்திரேலியாவினால் எழும்ப முடியவில்லை. ஷமி தொடக்கத்தில் 4 ஓவர்கள் 6 ரன்கள் என்று நெருக்க, ஆஸி.மிடில் ஆர்டரை ஸ்பின்னர்கள் கவனித்துக் கொள்ள ஆஸ்திரேலிய பே…
-
- 10 replies
- 1.3k views
- 1 follower
-
-
கிளிநொச்சி உருத்திரபுரத்தை சேர்ந்த செல்வி தினகராசா சோபிகா, செல்வி நடராசா வினுசா என்பவர்கள் தேசிய றோல் போல் அணியில் தெரிவாகி 21.02.2019 தொடக்கம் 24.02.2019 வரை இந்தியாவில் இடம்பெற்ற ஆசிய கிண்ணபோட்டியில் விளையாடி கிளிநொச்சிக்கு மட்டுமல்ல இலங்கைக்கே பெருமையை தேடித்தந்திருக்கிறார்கள். இலங்கை அணி மூன்றாம் இடத்தையும்,நடராசா வினுசா என்பவர் சிறந்த பந்து காப்பாளர் என்ற விருதையும் பெற்றுக்கொண்டனர். இவர்களையும் இவர்களை பயிற்றுவித்த கிளிநொச்சியை சேர்ந்த திரு. விக்ரர் சுவாம்பிள்ளை அவர்களையும் கிளிநொச்சி மாவட்டம் சார்பாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் திரு சுந்தரம் அருமைநாயகம் பாராட்டுகளை தெரிவித்தார். http://www.virakesari.lk/article/51418
-
- 0 replies
- 375 views
-
-
கடல் அலை சறுக்கில் அசத்தும் இலங்கை பெண்கள் 6 மார்ச் 2019 இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடலலைகளில் சறுக்கி சாகசம் புரிந்த அந்தப் பெண்ணின் பெயர் - ரவீந்திர ராஜா பேபி ராணி. 'அறுகம்பே விமன் சர்ஃப் கிளப்' உறுப்பினர் என்று, தன்னை அவர் அறிமுகம் செய்து கொண்டார். கடலில் அலை சறுக்கில் ஈடுபடும் பெண்களுக்கென இலங்கையில் முதன் முதலாக உருவாக்கப்பட்டுள்ள …
-
- 0 replies
- 1.1k views
- 1 follower
-
-
துடுப்பாட்டத்தில் சோபிக்க தவறியமையால் அடுத்த தோல்வி இலங்கைக்கு எதிராக இரண்டாவது போட்டியில் தென்னாபிரிக்க அணி 113 ஓட்டங்களினால் வெற்றிபெற்றுள்ளது. தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள லசித் மலிங்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணாயனது தென்னாபிரிக்க அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கடந்த 03 ஆம் திகதி ஜோகன்னஸ்பர்க்கில் நடத்த முதலாவது ஆட்டத்தில் தென்னாபிரிக்க அணி 8 விக்கெட்டுக்களினால் இலகுவாக வெற்றி பெற்று தொடரில் முன்னிலையில் இருக்க, இரண்டாவது ஒருநள் போட்டி இன்று இலங்கை நேரப்படி மாலை 4:30 க்கு செஞ்சூரியனில் ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித் தலைவர் மலிங்க களத்தடுப்பை தெரிவு …
-
- 0 replies
- 340 views
-
-
விஜய் சங்கர்: "இந்திய கிரிக்கெட் அணிக்கு தேர்வானது எனது கனவின் முதல்படி" சிவக்குமார் உலகநாதன்பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைFACEBOOK தமிழக ரஞ்சி கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான 26 வயதாகும் விஜய் சங்கர், திருநெல்வேலியில் பிறந்தவர். சிறுவயது முதல் அவர் சென்னையில் குடும்பத்துடன் வசி…
-
- 0 replies
- 812 views
- 1 follower
-
-
ஆஸி.யின் வெற்றியை தட்டிப் பறித்த பும்ரா, விஜய் சங்கர் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. ஐதராபாத்தில் நடந்த முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை உள்ளது. இந்த நிலையில் இந்தியா-அவுஸ்திரேலியாவுக்கிடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாக்பூரில் இன்று இலங்கை நேரப்படி 1:30 க்கு ஆரம்பமானது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணித் தலைவர் முதலில்…
-
- 0 replies
- 733 views
-