துயர் பகிர்வோம்
இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்
துயர் பகிர்வோம் பகுதியில் இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
637 topics in this forum
-
ரமேஷ் பிரேதன் நினைவஞ்சலி jeyamohanSeptember 28, 2025 ரமேச்ன் 2023 விஷ்ணுபுரம் விழாவில் ரமேஷ் பிரேதன் சென்ற 25 செப்டெம்பர் அன்று இரவு ஒரு கவிதையை எழுதி தன் முகநூலில் வலையேற்றியிருந்தார். அது ஒரு காதல் கவிதை. அதன்பின் சில மணிநேரங்களில் மயக்கமுற்றிருக்கக் கூடும்.கடுமையான இதய அடைப்பு மற்றும் ரத்த அழுத்த உயர்வு. உடனடியாக 26 காலையில் மருத்தவமனையில் சேர்க்கப்பட்டார். 27 செப்டெம்பர் 2025 மாலை 520க்கு உயிர்பிரிந்தது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது முதல் நம் நண்பர்கள் உடனிருந்தனர். ஒவ்வொரு மணிநேரத்திற்கும் செய்திகளை அளித்தனர். முதல் நாளிலேயே ரமேஷ் மீள்வது அரிதினும் அரிது என்று கூறிவிட்டனர். மூளையில் முழுமையான ரத்தக்கசிவு. உள்ளுறுப்புகள் செயலிழந்துகொண்டிருந்தன. இதயம் நின்று ந…
-
- 2 replies
- 244 views
- 1 follower
-
-
“மேதகு” படத்தின் இசையமைப்பாளர் பிரவீன் குமார் காலமானார்.
-
- 3 replies
- 243 views
-
-
https://www.newsweek.com/jane-goddall-dead-conservationist-institute-chimpanzees-latest-updates-10813647 கடந்த 60 ஆண்டுகளாக சிம்பன்சிகள் (Chimps) எனப்படும் மனிதக் குரங்குகள் பற்றி நடத்தையியல் ஆய்வுகளை மேற்கொன்டு வந்த ஜேன் குடால் நேற்றுக் காலமானார். ஏராளமான பெண் விஞ்ஞானிகளுக்கு ஊக்கமாக இருந்தவர். சிம்பன்சிகளின் நடத்தையியலைக் கொண்டு பல ஆபிரிக்க நாடுகளில் சிம்பன்சிகளை அழியாமல் பாதுகாக்கும் செயல்திட்டங்களை உருவாக்க உதவியவர். மிகவும் எளிமையான பிரபலம். கொண்டாடப் பட வேண்டிய வாழ்வு இவருடையது!
-
-
- 3 replies
- 229 views
- 1 follower
-
-
ஊடகவியலாளர் செல்வரத்தினம் ரூபனின் 14 ஆவது ஆண்டு நினைவேந்தல்! இறுதிக்கட்ட யுத்தத்தின் போது உயிர் நீத்த ஊடகவியலாளர் செல்வரத்தினம் ரூபனின் 14 ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ். பொன்னாலையில் நேற்று மாலை உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. பொன்னாலை வெண்கரம் இலவச படிப்பகத்தில் மாலை நான்கு மணியளவில் ஊடகவியலாளரும் சமூக செயற்பாட்டாளருமான பொன்ராசா தலைமையில் குறித்த நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது. இதன்பொழுது ஒரு நிமிட அக வணக்கம் செலுத்தப்பட்டு ஊடகவியலாளர் செல்வரத்தினம் ரூபனின் திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஊடகவியலாளர் பொன்ராசா, வெண்கரம் படிப்பகத்தின் ஆசிரியர்கள், மாணவர்கள், ஊடகவியலாளர் ரூபனின் உறவினர்கள், பொன…
-
- 0 replies
- 224 views
-
-
01 FEB, 2025 | 05:02 PM பேராசிரியர் அம்பலம் புஸ்பநாதன் 1964 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 24ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்டத்தில் பருத்தித்துறை அல்வாய் நகரில் உள்ள வதிரிக் கிராமத்தில் பிறந்தார். யா.தேவரையாளி இந்துக்கல்லூரியில் தரம் ஒன்று முதல் உயர்தரம் வரை தனது பாடசாலைக் கல்வியை நிறைவுசெய்தார். 1989இல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வியாபார நிர்வாக இளங்கலைப் பட்டத்தையும், 1996 இல் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பட்டப் பின் படிப்பாக முகாமைத்துவத்தில் டிப்ளோமாவையும், 2008இல் சீனாவின் சியாமென் பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ விஞ்ஞானத்தில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றார். 2006 இல் சீனாவின் சியாமென் பல்கலைக்கழகத்தில் சிறந்த சர்வதேச மாணவ…
-
- 0 replies
- 212 views
- 1 follower
-
-
போப் பிரான்சிஸ் காலமானார்! உலக கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. 88 வயதான போப் பிரான்சிஸ் மூச்சுக் குழாய் அழற்சியால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து,இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெலி மருத்துவமனையில் கடந்த பெப்பிரவரி மாதம் 14-ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எடுக்கப்பட்ட சிடி ஸ்கேன் பரிசோதனையில், நுரையீரல் இரண்டிலும் நிமோனியா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, அவருக்கு அண்டிபயோடிக் மருந்துகள் அளிக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் தொடர்ச்சியாக இருந்துவந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1429008
-
- 1 reply
- 202 views
-
-
Published By: DIGITAL DESK 3 20 JUN, 2025 | 12:56 PM தினக்குரல் உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகளில் நீண்டகாலமாக கருத்தோவியராக பணியாற்றிய அம்மையப்பபிள்ளை யோகமூர்த்தி (கார்ட்டூனிஸ்ட் மூர்த்தி) உடல் நலக் குறைவினால் வியாழக்கிழமை (19) காலமானார். அன்னாரின் பூதவுடல் புஞ்சி பொரளை லங்கா மலர் சாலையில் காலை 9 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளை சனிக்கிழமை (21) பிற்பகல் 2 மணிக்கு இறுதிக்கிரியைகள் நடைபெற்று பொரளை மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இலங்கை பத்திரிகை பேரவையும் இணைந்து வழங்கும் 2023 ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதை கடந்த வருடம் பெற்றிருந்ததுடன், கருத்தோவிய படைப்புகளுக்காக 4 விருது…
-
-
- 3 replies
- 196 views
- 1 follower
-
-
இனப் பிரச்சினைகளை தீர்க்க கடினமாக உழைத்தவர் இரா.சம்மந்தன்; ச.குகதாசன் எம்.பி 06 JUL, 2025 | 02:48 PM இலங்கையில் இனப் பிரச்சினைகளை தீர்க்க கடினமாக பாடுபட்டு உழைத்தவரே மறைந்த தலைவர் இராஜவரோதயம் சம்மந்தன் என இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் தெரிவித்தார். மறைந்த பெருந் தலைவர் இரா.சம்மந்தனின் முதலாவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (06)இடம் பெற்றது இதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், 1976ம் ஆண்டு முதல் 2023 வரை மிகவும் நெருக்கமாக அவருடன் பணியாற்றியுள்ளேன் 1933 பெப்ரவரி 05ல் இராஜவரோதயனுக்கு இரண்டாவது மகனாக பிறந்த இரா.சம்மந்…
-
- 2 replies
- 173 views
- 1 follower
-
-
மிருதங்க இசை வித்துவான் சண்முகரட்ணம் பிரணவநாதன் காலமானார் Posted on July 19, 2025 by தென்னவள் ஈழத்து இசைப்பாரம்பரியத்தின் முன்னோடிக் கலைஞர் மிருதங்க வித்துவான் சண்முகரட்ணம் பிரணவநாதன் காலமானார். அவர் கடந்த (16) ஆம் திகதி உடல்நலக் குறைவால் ஜேர்மனியில் காலமானார். 1951 ஓகஸ்ட் 13 ஆம் திகதி அன்று யாழ்ப்பாணம் உடுவிலில் இசைப்புலவர் சண்முகரட்ணம் மற்றும் ஜெயலக்ஷ்மி தம்பதியருக்கு மகனாகப் பிறந்த பிரணவநாதன், தனது தந்தையார் வழியிலேயே இசைப்புலைமை பெற்று, மிருதங்கக் கலையில் தேர்ச்சி பெற்று விளங்கினார். இலங்கையின் புகழ் பெற்ற கர்நாடக இசை வித்துவான் கலாசூடாமணி சண்முகராகவனின் இளைய சகோதரர் இவராவர். தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து ஜேர்மனி நாட்டில் வாழ்ந்து வந்த இவர் ஐரோப்பிய நாடுகளில் நடைப…
-
- 0 replies
- 129 views
-
-
தந்தை செல்வா என்று போற்றப்பட்டவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவருமான தந்தை செல்வாவின் (எஸ்.ஜே.வி. செல்வநாயகம்) மூத்த மகள் சுசீலாவதி வில்சன் தனது 97 ஆவது வயதில் கனடாவில் இறைவனடி எய்தினார். தந்தை செல்வாவின் மூத்த மகள் சுசீலாவதி (சுசீலி) வில்சனின் மறைவுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது. சுசீலாவதியின் மறைவு தொடர்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவரான தந்தை செல்வாவின் மூத்த மகள் சுசீலாவதி (சுசீலி) வில்சனின் மறைவுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றது. சுசீலி , தனது தாயாருடன் இணைந்து, 1950கள் மற்றும் 60களில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரச…
-
- 0 replies
- 121 views
-
-
லவ்ரா டால்மையர் Laura Dahlmeier இரு தடவைகள் யேர்மன் நாட்டிற்கு ஒலிம்பிக் போட்டியில் தங்க பதக்கத்தை பெற்று கொடுத்தவர்.7 தடவைகள் உலக சம்பியனாக வந்த சாதனையாளர் பாக்கிஸ்தானில் மலை ஏறுகின்ற போது விபத்தில் இறந்துவிட்டார்.இன்று உறுதிபடுத்தபட்டது. இப்படியான விபத்து சூழலில் தன்னை மீட்பதற்காக யாரும் தங்கள் உயிரைப் பணயம் வைக்கக்கூடாது என்றும் இப்படியான நிலையில் தனது உடலை மலையில் கை விட்டு செல்ல வேண்டும் என்பதே அவரது தெளிவான எழுத்துப்பூர்வ விருப்பமாக இருந்தது BBC SportLaura Dahlmeier: Olympic star dead after mountaineering a...Two-time Olympic champion Laura Dahlmeier dies aged 31 after a mountaineering accident in Pakistan.
-
- 0 replies
- 116 views
-
-
13 Nov, 2025 | 02:18 PM மலையகத்தின் மூத்த எழுத்தாளரும் ஆய்வாளருமான தி.இராஜகோபாலன் தனது 86ஆவது வயதில் காலமானார். லிந்துலை, துலாங்கந்தையை பிறப்பிடமாகக் கொண்ட இவர், மலையக சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்ட ஆளுமையாக தனது வாழ்நாள் முழுதும் விளங்கினார். வீரகேசரி வாரவெளியீட்டில் அவர் எழுதிய “சிரிக்கும் செவ்வந்தி பூ”, “கண்ணான கண்மணிக்கு கதை கேட்க ஆசை இல்லையோ” போன்ற தொடர்கதைகள் பெருமளவு வரவேற்பை பெற்றன. வீரகேசரிக்கு மட்டுமன்றி, பல பத்திரிகைகளுக்கு பல கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள், தொடர்களை இவர் எழுதினார். இவர் தமிழ் மொழியில் எந்தளவுக்கு ஆழமான அறிவைப் பெற்றிருந்தாரோ அதேபோன்று ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்றவர் ஆவார். இவரது பல படைப்புகள், ஆக்கங்கள் மலையக மண்ணின் எழுச்சி ம…
-
- 0 replies
- 57 views
- 1 follower
-