Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. மட்டக்களப்பில் கண்ணகி வழிபாட்டு முறைகள் - மூனாக்கானா கடல்சூழ் இலங்கைக் கயவாகு மன்னனால் இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட கண்ணகி வழிபாடானது இலங்கையின் கிழக்குக் கரையோரக் கிராமங்களில் தான் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் கண்ணகி கோயில்கள் உண்டு. இவற்றில் ஆரையம்பதி கிராமமும் ஒன்றாகும். கண்ணகி பற்றிய பழைய காவியங்கள் தோத்திரப் பாடல்களிலும், குயில் வசந்தன் பாடல்களிலும் ஆரைப்பற்றை என்ற பெயர் குறிப்பிடப்படவில்லை. ஆனால் மண்முனை என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது இங்கு கண்ணகி கோயிலில்லை. இதற்குக் காரணம் பல நூற்றாண்டுகளுக்கு முன் உலக நாச்சியாரின் இராச தானியாக இருந்த மண்முனையில் சில நூற்…

    • 0 replies
    • 1.1k views
  2. “கடைசியில புள்ள சாகும் வரைக்கும் வேலை செஞ்சிக் கொடுத்ததே… சாகும் வரைக்கும் செஞ்சிக் கொடுத்தானே… சாகுறதுக்கு 5 நாளைக்கு முதல் கூட புள்ள வேல செய்தானே. “2009 வைகாசி மாசம் 15ஆம் திகதி பின்னேரம் 4 மணியிருக்கும். “இப்படியொரு நிலம வந்திட்டதே…” ஓர் உண்மையான ஊடகப்பணியாளரின் – ஊடகவியலாளரது தாயின் இடைவிடா கதறல் இது. கொல்லப்பட்ட, காணாமல்போன, தாக்கப்பட்ட, அச்சுறுத்தப்பட்ட ஊடகவியலாளர்களின் பெயர்கள் எங்காவது பதியப்பட்டிருக்கும். அவர்களுக்காக நீதிகேட்டு எங்காவது, எப்போதாவது குரல் எழுப்பப்பட்டுவரும். விசாரணைகளும் நடத்தப்படும், ஒரு சிலருக்கு நன்கொடைகளும், ஏன் ஒரு சிலர் வெளிநாடுகளில் தஞ்சமும் அடைந்திருக்கின்றனர். ஆனால் இவர்கள் செய்த அதே சேவையை – வேலையை செய்துவந்த ஊடகப் ப…

    • 0 replies
    • 435 views
  3. TELO இயக்கப் போராளிகள் அழிக்கப்பட்டு 30ஆண்டுகளின் பின் : சபா நாவலன் 04/30/2016 இனியொரு. ஈழ விடுதலைப் போராட்டத்தில் தனி நபர்களைப் படுகொலை செய்வதனூடாக அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதென்பது 80 களில் பொதுவான கலாச்சாரமாக மாற்றமடைந்திருந்தது. ஒரு புறத்தில் அறிதலுக்கான தேடல்கள் நிறைந்த இளைஞர்கள் மத்தியதர வர்க்கங்களிலிருந்து உருவாகியிருந்தனர். மறுபுறத்தில் தனி மனிதத் தாக்குதல்கள், தனிமனிதப் படுகொலைகள் போன்றன சமூகத்தின் அங்கீகாரம் பெற்ற பொதுப் புத்தியாக மாற்ரமடைந்திருந்தது. தேசிய இன ஒடுக்குமுறைக்கு எதிரான தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டத்தின் ஒரே முழக்கம் அரசுக்கு எதிராக ஒன்றிணையுங்கள் என்பது மட்டும்தான். அதற்குமேல் அவர்களிடம் குறிப்பான சமூகப் பார…

    • 53 replies
    • 3.5k views
  4. எமது இனத்தைப் பல வல்லூறுகள் ஒரே நேரத்தில் மென்று தின்று கொண்டிருக்கின்றன! அவற்றை வரிசைப் படுத்தினால், வரிசை நீண்டுகொண்டே செல்கின்றது! எல்லோரும் அங்கலாய்க்கிறோம்! ஆதங்கப் படுகின்றோம்! ஆனால்..எங்களில் எத்தனை பேருக்கு...எமது உண்மையான வரலாறு தெரியும் என்று கேட்டால் , ஒருவரிடமும் சரியான பதிலிருக்காது என்பதே உண்மை! இதில் வெட்கப் பட எதுவுமேயில்லை! ஏனெனில் எமது வரலாறு வேண்டுமென்றே பல சந்தர்ப்பங்களில் எரிக்கப்பட்டும், திரிக்கப் பட்டும் வந்துள்ளது! பின் வரும் காணொளியை..ஒரு முறை நேரம் கிடைக்கும் போது,,கேட்டுப் பாருங்கள்! எமது வரலாறு கொஞ்சமாவது தனது தனது முகத்திரையை விலக்கும் என்பது எனது கருத்து! இயலுமாயின் தொடர்ந்தும் இணைக்க முய…

  5. Jaffna Kingdom Documentary - Part 01 (யாழ்ப்பாண இராச்சியம் - பகுதி 1)

  6. Started by Athavan CH,

  7. திட்டமிட்ட அழிப்பின் பின்புலம் : நீதிமன்றத்திலிருந்து… சுன்னாகம் நிலத்தடி நீர் கழிவு எண்ணெயால் நஞ்சாக்கப்பட்டமை இனஅழிப்பு மல்லாகம் நீதிமன்றில் பொதுச் சுகாதார பரிசோதகரால் தெரிவிப்பு சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவெண்ணை கலந்து வலிகாமப்பகுதி நீர்வளம் நஞ்சாக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் நலன் சார்ந்து மல்லாகம் நீதிமன்றில் தெல்லிப்பழை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் இராஜமேனகனால் 2014.10.30 அன்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்ந்தும் நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய தினம் (19.04.2016) அழைக்கப்பட்ட போது பிரசன்னமாகயிருந்த வடமாகண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் வடமாகாண சபையால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவானது ஐங்கரநேசன் என்ற தனிநபரால் அமைக்கப்படவில்லை என்றும் அமைச்சர் ஐங்கர…

  8. ராஜதானி நிலையத்திலிருந்து செய்தி வெளியீடு. யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய சேதங்கள். யாழ்ப்பாணத்து அருங்காட்சியகமானது மிகவும் ஏழ்மையான நிலையில் பல விலை மதிக்கமுடியாத பொருட்கள் யாவும் புறக்கணிக்கப்பட்டு பராமரிப்பின்றி உள்ளது. எவருமே முன்வந்து நமது சரித்திர ஆவணங்களை பாதுகாக்கவோ அவற்றை விலையேறப்பெற்றதாக காண்பிக்கவோ ஆர்வம் காட்டவில்லை. ஆனால் தம்பகொலபட்டுன, நாகதீப விகாரை கந்தரோடை என இத்தகைய இடங்கள் யாவும் பழுதுபார்க்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டு இராணுவங்களினால் பாதுகாக்கப்பட்டும் வருகின்றது. ஆனால் நம் சரித்திர ஆவணங்களோ மற்றும் இடங்களோ பலர் மத்தியில் புறக்கணிக்கப்பட்டு நம் சரித்திர தடயங்கள் யாவும் வருங்காலங்களில் அழிந்துபோகும் அபாயம் உள்ளது. …

    • 0 replies
    • 669 views
  9. யாழ்ப்பாண நூலகமும் பரோபகாரி செல்லப்பாவும் தமிழருவி த. சிவகுமாரன் பரோபகாரி செல்லப்பாவின் 120ஆவது பிறந்தநாளை (24.02.2016) ஒட்டி இக்கட்டுரை பிரசுரமாகிறது யாழ்ப்பாண மக்களுக்கு ஒரு நூலகம் தேவை என்ற சிந்தனை 1933ஆம் ஆண்டில் புத்தூர் மேற்கைச் சேர்ந்த 'சக்கடத்தார்' கே.எம்.செல்லப்பா என்ற படித்த கனவான், பரோபகாரியின் மனதில் உதித்தது. தென் கிழக்காசியாவிலேயே குறிப்பிடத்தக்க கலைக்கோவிலாக இலங்கைக்கு குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கே பெருமை சேர்ப்பதாக ஒரு காலத்தில் விளங்கியது. யாழ்ப்பாணப் பொதுசன நூலகம். 1981 ஜூன் முதலாந்திகதி தீமூட்டி எரிக்கப்பட்டு பேரழிவுக்குட்பட்டது. இந்த கலைக்கோவில். சாதி, இன, மத, வேறுபாடின்றி அனைவருக்கும் இரவு பகலாக சேவையாற்றிய, சகலரது அறிவுப்பசி…

    • 0 replies
    • 603 views
  10. (படுவான் பாலகன்) அம்பிளாந்துறையில் சித்திரைப் புத்தாண்டை சிறப்பித்து ஊஞ்சல் விழாவும் கலாசார விளையாட்டு நிகழ்வும் வியாழக்கிழமை கதிரவன் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. அம்பிளாந்துறை கதிரவன் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மிகவும் நீண்டகாலமாக கிராமத்தில் அமைந்துள்ள வாகை மரத்தில் ஊஞ்சில் இட்டு தேங்காய் உடைக்கப்பட்டு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் ஊஞ்சலினை ஆரம்பித்து வைத்தார். பின் பெரியவர்கள், சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள் பாரம்பரிய பாடல்களைப்பாடி ஊஞ்சல் ஆடி மகிழ்ந்தனர். விளையாட்டு கழகத்தின் தலைவர் கு.நமசிவாயம் தலைமையில் இடம்பெற்ற ஊஞ்சல் நிகழ்வினை தொடர்ந்து மிட்டாய் ஓட்டம், முட்டி உடைத்தல், கிடுகு பின்னுதல், தேங்காய் திர…

    • 0 replies
    • 944 views
  11. இரு இளைஞர்கள் , ஒருவர் சிறைசாலை உத்தியோகத்தர் (வயது 23) மற்றவரும் அரச சேவையில் இருந்து கொண்டு பண்டைய கலையை அழிய விடாமல் இந்த சிறு வயதில் சிறப்பாக பாடுகிறார்கள். இவர்கள் பிரபல நாட்டுபுற பாடகர் தில்லையம்பலம் சிவலிங்கம் அவர்களிடம் பயிற்ச்சி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இவர்களின் கலைப் பணி மேலும் வளர வாழ்த்துக்கள் நீங்களும் கேட்டு மகிழுங்கள்

    • 0 replies
    • 963 views
  12. அமரர் T .பத்மநாதன் தோற்றம் : 10.02.1934 மறைவு : 06.11.1992 (உதைபந்தாட்டப் பயிற்சியாளர், நூலகப்பொறுப்பாளர். தெல்லிப்பழை மகாஜனாக்கல்லூரி) மகாஜனாக்கல்லூரியின் உதைபந்தாட்டப் பயிற்சியாளர் திரு .T.P.பத்மநாதன் 06.11.1992 அன்று மாரடைப்பால் காலமானார். "மகாஜன" என்கின்ற கிராமத்துப் பாடசாலையை உதைபந்தாட்டவெற்றிகளின் மூலம் அகில இலங்கையிலும் புகழ் பரவி நிற்கச் செய்தவர், திரு.T.பத்மநாதன். 1960ஆம் ஆண்டிலிருந்து மகாஜனாவின் நூலகப்பொறுப்பாளராகவும், உதைபந்தாட்ட, கொக்கி பயிற்சியாளராகவும் சேவையாற்றி ஒய்வுபெற்றவர் T.P. கட்டுடை மானிப்பாயை பிறப்பிடமாகக் கொண்டாலும் தெல்லிப்பழையைத் தன் சொந்தக்கிராமமாக ஏற்று 30 ஆண்டுகளுக்கு மேலாக கல்லூரிக்கும், கிராமத்துக்கும் என்றும் வற்றாத புகழினை…

    • 0 replies
    • 589 views
  13. தமிழர்கள் ஒரு தேசமாக சிந்தித்தாலேயே தமிழர்களுக்கான விடிவு சாத்தியம் அதனை அடைவதற்கு தாயகம்,புலம்பெயர் தமிழர்,தமிழகம் என மூன்று தளங்களும் ஒன்றாக இணைந்து பணியாற்றுவதன் ஊடாகவே தமிழர்களுக்கான ஒரு விடிவை பெற்றுக்கொள்ள முடியும் என அரசியல் ஆய்வாளரும் எழுத்தாளருமான நிலாந்தன் அவர்கள் கனடாவில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் தெரிவித்துள்ளார். கனடாவில் இடம்பெற்ற புலம்பெயர் உறவுகளுடனான கலந்துரையாடலின் போது கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றியபோதே தாயக அரசியல் நிலவரம்,மற்றும் போர்க்குற்ற விசாரணையினை எவ்வாறு அரசால் கொண்டுசெல்லப்படப்போகின்றது என்பது தொடர்பிலும் நீண்ட உரை ஒன்றினை ஆற்றியிருந்தார் அந்த உரையினை உங்களுக்காக இணைக்கிறோம். …

  14. இலங்கையின் வரலாறு Posted By: RenikaPosted date: October 04, 2015in: இலக்கியம், கட்டுரை புராதன இலங்கை தற்காலத்தில் இலங்கையில் தமிழர் சிறுபான்மையினராக வாழ்கின்றனர். ஆனால் அதிபூர்வீக இலங்கையில் தமிழர்கள் மாத்திரமே வாழ்ந்து வந்தனர் என்பது வரலாற்று உண்மையாகும். அவர்களது சமயம் சைவசமயமாகவே இருந்தது. இராமாயணம் போன்ற இதிகாச இலக்கியங்கள் வாயிலாககும் புராணங்கள் வாயிலாகவும் இவ்வுண்மை அறியக் கூடியதாக இருக்கின்றது..எனவே இலங்கை தமிழரின் முதுசொத்து எனலாம். இதுயாராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாத உண்மையாகும். இந்த உண்மையை வெளிப்படுத்துவதே இந் நூலின் நோக்கமாகும். இனவெறி பிடித்த சிங்கள ஆட்சியாளர்கள், இலங்கை முழுவதும் தங்களுக்கே உரியதென்றும் தமிழர்கள் கூலிவேலை செய்வத…

    • 0 replies
    • 3k views
  15. கொழும்புமிரருக்காக ஜெரா) நாய், பூனை, கோழி இவைகள் தான் வழமையான செல்லப்பிராணிகள். ஆனால் பாரம்பரியமான விவசாயிகளின் வீடுகளில் நாம்பன்கள்தான் செல்லப்பிராணிகள். நாம்பன்கள் என்றால், பார்க்க பயமூட்டும் ஏரி புடைத்த, தொடை அகன்ற, வளைந்து – முறுக்கேறிய ஈட்டிமுனைக் கொம்புகளை மாடுகளைத் தான் குறிப்பிடுகின்றனர். மாவெள்ள, (வெள்ளை) கறுப்பு, சிவல (சிவப்பு), பூச்சி (கறுப்பும் வெள்ளையும் கலந்தது) நிறங்களில் நாம்பன்கள் வளர்க்கப்படுகின்றன. நாம்பன்கள் வயல்களில் உழவு செய்யவும், மாட்டு வண்டில்பளில் பாரமிழுக்கவும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இவ்வாறான மனித முன்னேற்றத்துக்கான நடவடிக்கைளில் நாம்பன்களைப் பயன்படுத்தும் முறை இன்று, நேற்று அறிமுகமாகி, அருகி வரும் ஒன்றல்ல. ஆசிய பண்பாட்டில், இற்…

    • 1 reply
    • 1.1k views
  16. வட்டுவாகல் என்கிற அழகான தனி கிராமத்தின் பெருமைகளையும், சிறப்புக்களையும் உள்ளடக்கியதான ஆவணப்படம் திணைவெளியீட்டகத்தின் நான்காவது ஆவணப்படமாக வெளிவந்துள்ளது. ஒரு ஆவணப்படத்துக்கான தேடலில் இறங்குகின்றபோது கிடைக்கின்ற தகவல்களும் காட்சிகளும் இன்னமும் மகிழ்வான, அற்புதமான விடயங்களை சேகரித்து ஈழத்து,புலம்பெயர் உறவுகளுக்கு வரலாற்றோடு ஒன்றிய போர்க்கால வடுக்களையும் தொட்டு செல்கிறது இவ் ஆவணப்படும். வட்டுவாகல் என்றழைக்கப்படுகின்ற அந்தக்கிராமத்திற்கான சரியான பெயர் என்ன, அந்த மக்களின் வாழ்க்கை முறைத் தத்துவம் என்ன போன்ற பல கேள்விகளுக்கு பல சந்ததிகளுக்கு முன்பான கதைகளை எதிர்காலச் சந்ததிகளுக்காக சேமித்த…

    • 2 replies
    • 1k views
  17. எப்படியிருக்கிறார் ஜெயக்குமாரி அக்கா? March 23, 2016 படம் | Selvaraja Rajasegar Photo, MAATRAM FLICKR ஊடகப்பரப்பிலும், காணாமல் போனவர்களைத் தேடியலையும் போராட்டக்கார்கள் மத்தியிலும் ஜெயக்குமாரி அக்கா என அறியப்பட்டவர்தான், ஜெயக்குமாரி பாலச்சந்திரன். இப்போதெல்லாம் எப்போதாவது நடக்கும் காணாமல் போனவர்களின் உறவுகள் நடத்தும் போராட்டங்களில் கூட ஜெயக்குமாரி அக்காவை காணமுடிவதில்லை. “தர்மபுரம் பள்ளிக்கூடத்துக்கு முன்னால் போற ஒழுங்கையில இறங்கினா பக்கத்திலதான் வீடு. யாரைக் கேட்டாலும் காட்டுவினம்” ஜெயக்குமாரி அக்காவின் இருப்பு பற்றி யாரைக்கேட்டாலும் இப்படித்தான் சொல்வார்கள். “தர்மபுரம் பள்ளிக்கூடத்தடியில இறங்கி, அதுக்கு முன்னால போற காபெட் றோட்டால நே…

    • 5 replies
    • 1.5k views
  18. EMERGING EELAM TAMIL CINIMA முழைவிடும் ஈழத்து தமிழ் சினிமா - வ.ஐ.ச.ஜெயபாலன் * யாழ் நண்பர்களே கீழே கருத்து பகுதியில் உங்களுக்குப் பிடித்த உலகத்தமிழரதும் ஏனையோரதும் குறும்படங்களை பதிவு செய்யுங்கள். * சில நாட்களின் முன்னம் இலங்கையில் இருந்து நண்பர் ஹசீன் (fb: Haseen Atham) என்னை தொலைபேசியில் அழைத்தார். இயக்குனர் ஹசீன் உதவி இயக்குனராக முதலில் தங்கர்பச்சனுடனும் பின்னர் ஆடுகளத்தில் வெற்றிமாறனுடனும் சிறப்பாகப் பணியாற்றி சினிமாவை கற்றுக்கொண்டவர். இப்போது அக்கறைபற்றில் வசிக்கும் ஹசீன் சிங்கள இனவாதிகளுக்கு அஞ்சி தமிழர்கள் பதிவு செய்ய தயங்கும் முன்னைநாள் போராளிகள் இன்று அனுபவிக்கும் துன்பங்களை விவரணப் படங்களாக பதிவுசெய்கிறார், அவரது துணிச்சலான வரலாற்று…

    • 0 replies
    • 1.2k views
  19. வைத்திய கலாநிதி இ.தெய்வேந்திரன் அவர்கள் காலமானார் என்ற செய்தி இதயத்தை நெருட வைப்ப தாகும். அவரின் இழப்பின் துயர் அவரை அறிந்த பலரை வாட்டவே செய்யும். அந்தளவுக்கு அவரின் மனித நேயப் பண்பும் சேவையுள்ளமும் மக்கள் மனங்களில் ஆழப் பதிந்துள்ளன. யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி என்ற பதவியை அலங்கரித்த டாக்டர் தெய் வேந்திரன் அவர்கள் மக்கள் இன்னல்பட்ட வேளை மக்களோடு மக்களாக இருந்து ஆற்றிய பணியை ஒரு போதும் மறந்துவிட முடியாது. யுத்த சூழல், போக்குவரத்து இன்மை, பொருளாதாரத்தடை என்ற நெருக்கடியான சூழலில் யாழ்.குடா நாட்டில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டபோது, சர்வதேச சுகாதார நிறுவனங்களுடன் டாக்டர் தெய்வேந்திரன் அவர்கள் தொடர்பு கொண்டு நிலைமைகளை தெளிவுபடுத்தி…

    • 0 replies
    • 600 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.