அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9274 topics in this forum
-
-
- 5 replies
- 999 views
-
-
தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளும் ஈழத்தமிழர்களும்… 15 Views 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 நாள் தமிழ்நாட்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அதனால் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தல் களத்தில் நிற்கின்றன. அந்தக் கட்சிகள் தேர்தல் அறிக்கையின் வழியாக வாக்குறுதிகளைக் கொடுக்கின்றன. அதில் சிலவற்றை செயல்படுத்த முடியும். சிலவற்றை செயல்படுத்த முடியாதவை. இதில் ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளையும், எதிர்பார்ப்புகளையும், சவால்களையும் தங்களது தேர்தல் அறிக்கைகளில் பதிவு செய்திருக்கின்றனர். இவ்வாறு தேர்தல் அறிக்கையில் சேர்ப்பதின் நோக்கம் என்னவென்று ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும். இந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றவையின் செயலாக…
-
- 0 replies
- 541 views
-
-
அனைத்துலக அரங்கில் சிறிலங்காவுக்கு ஏற்பட்ட தோல்வியாக, ஐ.நா மனித உரிமைச்சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அமைந்துள்ளதென தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இந்த தோல்வி தமிழர்களுக்கு நீதியாக மாறவில்லை என்பதோடு பொறுப்புக்கூறலை சிறிலங்கா அரசிடமே கொடுக்கின்ற ஓர் வலுவற்ற தீர்மானம் என தெரிவித்துள்ளது.ஐ.நா மனித உரிமைச்சபையில் பிரித்தானியா தலைமையிலான கூட்டுநாடுகளால் முன்வைக்கப்பட்ட சிறிலங்கா தொடர்பிலான தீர்மானத்துக்கு A/HRC/46/L.1 ஆதரவாக 22 நாடுகளும், எதிராக 11 நாடுகளும் வாக்களித்திருந்தன. வாக்கெடுப்பில் 14 பங்கேற்கவில்லை.அண்மைக்காலத்தில் அனைத்துலக அரங்கொன்றில் சிறிலங்காவுக்கு ஏற்பட்ட தோல்வியாக இது இருந்தாலும், முன்னைய தீர்மானங்களை விட, வலுவற்ற நீர்த்துப்போன ஓர் தீர்மானமாக…
-
- 2 replies
- 637 views
- 1 follower
-
-
இளையோர்களே எழுமின்! இனஒதுக்கலை ஒழிமின்!- சூ.யோ. பற்றிமாகரன் 5 Views ஐக்கிய நாடுகள் சபையின் இவ்வாண்டுக்கான மையக் கருத்து, ஈழத்தமிழர் இனஒதுக்கலின் நூற்றாண்டின் அழைப்பாகவுமாகிறது நடுகல்லிலும் கூட இனஒதுக்கல் செய்வது சிறீலங்கா என்பதற்கான சான்று ஐக்கிய நாடுகள் சபை இவ்வாண்டின் உலக இனஒதுக்கல் ஒழிப்புத் தின (21.03.21) மையப்பொருளாக “இன ஓதுக்கலை ஒழித்திட இளையவர்கள் எழுமின்” என்பதை அமைத்து இன ஒதுக்கலுக்கு எதிராக இளையவர்களை விழித்தெழுந்து போராடுமாறு அழைப்பும் விடுத்துள்ளது. கோவிட் -19இற்கு பின்னரான இன்றைய காலத்தில் சிறீலங்கா உட்பட உலகநாடுகள் பலவற்றிலும் கோவிட் பரவல் கூட இனஒதுக்கலை வேகப்படுத்தப் பயன்படுத்தப்பட்டு வரும் சூழலுக்கு ஏற்றவகையில…
-
- 0 replies
- 454 views
-
-
-
- 4 replies
- 713 views
-
-
மேலும், மேலும் பலவீனமடையும் தமிழர் அரசியல் - யதீந்திரா தமிழர் அரசியல் அதிகம் அதிகம் பலவீனமாகிக் கொண்டிருக்கின்றது. இதற்கு வெளியிலிருப்பவர்கள் எவரும் காரணமல்ல. மாறாக, தமிழர் அரசியல் தமிழர்களாலேயே பலவீனப்படுத்தப்படுகின்றது. அண்மையில் போராட்டம் என்னும் பெயரில் மேற்கொள்ளப்பட்ட சில நிகழ்வுகளும் அதனைத் தொடர்ந்து இடம்பெறும் விவாதங்களும், இதற்கு சிறந்த உதாரணமாகும். பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரை – என்னும் சுலோகத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட ஜனநாயக பேரணியில் மக்கள் தன்னியல்பாகவே பெருமளவில் திரண்டிருந்தனர். 2009இற்கு பின்னர் இடம்பெற்ற மிக முக்கியமானதொரு தன்னியல்பான எழுச்சியாக பொத்துவில் தொடங்கி பொலிகண்டியை குறிப்பிடலாம். ஆனால் அதன் பின்னர் இடம்பெற்ற சம்ப…
-
- 0 replies
- 413 views
-
-
சிறீலங்காவிற்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கு தமிழர்கள் விளக்கங்கள் அளிக்காததேன்? 40 Views இவ்வாண்டுக்கான ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தின் 46ஆவது அமர்வுக்கான ஆண்டறிக்கையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் தலைவி, சிறீலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமெனப் பரிந்துரைத்திருத்தார். கூடவே சிறீலங்காவில் யுத்தக்குற்றங்கள், மனிதாயத்திற்கு எதிரான குற்றங்கள், மனித உரிமை வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் எனச் சான்றாதாரப்படுத்தப்பட்டு உள்ளவர்கள் மேல் உலக நாடுகள் பயணத்தடைகள், பொருளாதாரத் தடைகளை விதித்து அனைத்துலகச் சட்டங்களை, ஒழுங்குகளை, முறைமைகளை நடைமுறைப்படுத்த உதவவேண்டும் எனவும் சுட்டிக்காட்டிய…
-
- 1 reply
- 625 views
-
-
ஆசியாவை முன்னிலைப்படுத்தல்: பழைய போத்தலில் புதிய கள் -தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ சில நாள்களுக்கு முன்பு, அமெரிக்கா வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்களில் ஒருவர் தனது டுவிட்டரில் பின்வருமாறுகுறிப்பிட்டிருந்தார்; ‘21ஆம் நூற்றாண்டின் வரலாற்றின் பெரும்பகுதி, ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் தான் எழுதப்படும்’. இக்கூற்று மிகவும் முக்கியமானது. டொனால்ட் ட்ரம்பின் காலத்தில் மோதல் நிலையை அடைந்த அமெரிக்க-சீன உறவு, ஜோ பைடனின் தலைமைத்துவத்தில் புதிய கட்டத்தை அடைகிறது. பைடன் ஓபாமா காலத்து ‘ஆசியாவை முன்னிலைப்படுத்தலை’ (Pivot to Asia) மீண்டும் கையில் எடுக்கிறார். சீனாவைக் கையாள்வது தொடர்பில், அமெரிக்காவின் புதிய அரசாங்கம் சவால்களை எதிர்நோக்கியுள்ளது. இருந்தபோதும், ஆசியாவின் …
-
- 0 replies
- 362 views
-
-
[url=https://postimages.org/][img]https://i.postimg.cc/nzhFTJDf/image.png[/img][/url]
-
- 7 replies
- 1k views
- 1 follower
-
-
சீனாவை எதிர்க்க விரும்பாத தமிழ்த் தேசிய தலைமைகள் - யதீந்திரா இலங்கை தொடர்பான புதிய பிரேரணையின் இறுதி வரைபு, மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. அடுத்த வாரம் இது தொடர்பான இறுதி விவாதங்கள் இடம்பெறவுள்ளன. இந்த விவாதங்களின் போது, இலங்கையை பாதுகாக்கும் தலைமைப் பொறுப்பை சீனா எடுத்துக் கொள்ளும். ஏற்கனவே இது தொடர்பில் சீனா பகிரங்கமாக அறிவித்திருக்கின்றது. இலங்கையின் மீது புதியதொரு பிரேரணை என்னும் வாதம் மேலொழுந்த நாளிலிருந்து சீனா மிகவும் உறுதியான நிலையில் அதனை எதிர்த்து வந்திருக்கின்றது. இந்த விவகாரம் இலங்கையின் உள்விவகாரம். எனவே இதில் வெளியார் தலையீடு செய்ய வேண்டியதில்லை. இலங்கையை நாங்கள் நம்புகின்றோம். அதன் உள் விவகாரங்களை கையாளும் திறன் …
-
- 0 replies
- 559 views
-
-
புவிசார் அரசியல் இராஜதந்திரத் தளம் குறித்த விழிப்புணர்வும் விசுவரூபமெடுத்துள்ள வினாவும்- பி.மாணிக்கவாசகம் 86 Views இலங்கை பற்றிய ஐ.நா மனித உரிமைப் பேரவையின் பிரேரணை வரைபை முற்றாக்குகையில் காரசாரமான நிலைமகள் எழுந்திருக்கின்றன. அண்மையில் வெளியாகிய அதன் ஆரம்ப வரைபு தமிழ்த்தரப்பை பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியிருந்ததைக் காண முடிந்தது. ஆயினும் அந்த வரைபை அப்படியே ஏற்றுக்கொள்வதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அறிக்கை வடிவில் தெரிவித்திருந்தார். கடுஞ்சொற்களையும், கடும் குற்றச்சாட்டுக்களையும் கொண்டிருந்த ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மிச்சல் பச்லெட்டின் வாய்மொழி அறிக்கையை நிராகரித்து இலங்கையின் வெளியுறவுத்துறை …
-
- 0 replies
- 351 views
-
-
அம்பிகையின் போராட்டம் இனி நம் கையில் - கவிஞர் தீபச்செல்வன் இந்த உலகில் மனிதாபிமானம் குறித்து எந்த பிரக்ஞையும் இல்லாத காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பது பெருத்த அச்சத்தையே தருகின்றது. உண்மையில் 2009ஆம் ஆண்டில் இந்த உலகின் கண்களுக்கு முன்பாக ஈழத் தமிழ் மக்கள் கொன்றழிக்கப்பட்ட போது, அந்த இனப்படுகொலையை நிகழ்த்திய ஸ்ரீலங்கா அரசின் இனஒடுக்குமுறை வன்மத்தை மாத்திரம் நாம் எதிர்கொள்ளவில்லை. மாறாக, இந்த உலகில் மனிதாபிமானம் செத்துவிட்டது என்பதையும் நாம் உணரத் தலைப்பட்டுள்ளோம். கொத்துக் கொத்தாக மக்கள் கொல்லப்பட்டபோது அதனை தடுத்து நிறுத்தாத இவ் உலகம் எப்படியானது? அதன் தொடர்ச்சியைத்தான் நாம் இன்னமும் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். ஈழத் தமிழ் மக்களிற்கு இழைக்கப்பட்ட…
-
- 0 replies
- 437 views
-
-
அரசியல் அதிகாரத்தை பகிர்வதற்கான உறுதிப்பாட்டை நிறைவேற்றுங்கள் திருத்தப்பட்ட, இலங்கைதொடர்பான தீர்மான வரைபில் வலியுறுத்தல் ஐ.நா மனித உரிமைகள் பேரவை (யு.என்.எச்.ஆர்.சி) இலங்கை குறித்த திருத்தப்பட்ட தீர்மானத்தை வெளியிட்டுள்ளது.கொரோனா வைரசினால் இறந்தமுஸ்லி ம் களை கட்டாயமாக தகனம் செய்வது குறித்த கவலைகள் புதிய திருத்த வரைபில் உள்ளன. கொரோனா வைரஸ் நோய்க்கான (COVID-19) தொற்றுநோய்குறித்த நடவடிக்கைகள் மதம் அல்லது நம்பிக்கையின் சுதந்திரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது மற்றும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான நடைமுறையில் ஓரங்கட்டப்படுதல் மற்றும் பாகுபாட்டை அதிகப்படுத்தியுள்ளதாகவும் திருத்தப்பட்ட வரைபு கவலையை வெளிப்படுத்துகிறது. கோவி…
-
- 0 replies
- 320 views
-
-
ஜெனீவாவும் நிலைமாறுகால நீதியும் தமிழர் அரசியலும் -என்.கே. அஷோக்பரன் ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில், இலங்கை தொடர்பான தனது அறிக்கையை சமர்ப்பித்த ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிஷேல் பச்சலட், “உள்நாட்டு யுத்தம் முடிந்து, 12 ஆண்டுகள் கடந்த பிறகும் கூட, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைப்பது உறுதிப்படுத்தப்படவில்லை. கடந்த காலங்களில் நிலவிய அதே அடக்குமுறை, துன்புறுத்தல் போன்றவை தொடர்கின்றன” என்று குறிப்பிட்டிருந்தமை முக்கியத்துவம் பெற்றிருந்தது. இதற்குப் பதிலளித்திருந்த இலங்கையின் வௌிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, “உயர்ஸ்தானிகரின் அறிக்கையை இலங்கை அரசு நிராகரிக்கிறது. உறுப்பு…
-
- 0 replies
- 403 views
-
-
இலங்கைத் தீர்மானத்தின் மீதான மனிதவுரிமைச் சபை உறுப்பு நாடுகளின் நிலைப்பாடும் அதன் இறுதி உள்ளடக்கமும் 84 Views எதிர்வரும் வாரங்களில் இலங்கைத் தீர்மானத்தின் மீதான மனிதவுரிமைச் சபை உறுப்பு நாடுகளின் வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், பொதுவாக உறுப்பு நாடுகள் பிற நாடுகளை மையப்படுத்தி மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் குறித்து எவ்வாறு தமது முடிவுகளை எடுக்கவுள்ளார்கள் என்பதனை அறிந்துகொள்வது அவசியமானது. இம்முறையும் மனித உரிமைச் சபையில் கடந்தகாலங்களைப் போலவே இலங்கை தொடர்பான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்புத் தொடர்பான விடயத்தில் நாடுகள் கொள்கையளவிலும், பூகோளப்பிராந்திய அளவிலும் வேறுபட்டு நிற்கின்றன. பொதுவாக நாடுகள் தொடர்பான …
-
- 0 replies
- 478 views
-
-
-
- 1 reply
- 491 views
-
-
தாயின் பசி – நிலாந்தன்! March 14, 2021 “ஐநா எனப்படுவது எங்கள் எல்லோரையும் இணைக்கும் ஒரு அற்புதமான கருத்து. அது மேலும் பலம் அடைவதை மேலும் சிறப்பானதாகஉறுதியான நிலைப்பாடுடைய ஒன்றாக வருவதை விரும்புகிறேன். ஆனால் இப்பொழுதும் ஐ.நா.மனித உரிமைகளோடு தொடர்பே இல்லாத அரசியல் நலன்களின் செல்வாக்குக்கு உள்ளாகிறது. அது ஐநாவை அமைப்பு ரீதியாக ஊழல் மிகுந்தது ஆக்கிவிட்டது. நான் நம்புகிறேன் நாங்கள் ஐநாவை மக்களுக்கு சேவை செய்யும் ஒன்றாக மாற்றவேண்டும். அரசியல்வாதிகளுக்கு சேவை செய்யும் ஒன்றாக அல்ல. எனது படம் ஆகிய Quo Vadis Aida ஐநாவின் முடிவுகளின் சுயாதீனம் மற்றும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான உறுதியான நிலைப்பாடு குறித்த கேள்விகளை எழுப்ப உதவும் என்று நான் …
-
- 0 replies
- 412 views
-
-
ஜெனீவா மைய அரசியல் அல்லது வெளியாருக்காக காத்திருத்தல்- நிலாந்தன் 46 ஆவது கூட்டத்தொடர் தொடங்கிவிட்டது. அதற்கு முன்னும் பின்னுமாக தாயகத்திலும் டயஸ்போராவிலும் போராட்டங்கள் தொடங்கிவிட்டன. ஜெனிவாவை மையமாகக் கொண்டு ஒரு போராட்டச் சூழல் தாயகத்திலும் டயஸ்போராவிலும் சிறிதளவுக்கு தமிழகத்திலும் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம் அரசியல்வாதிகள் தங்களுக்கிடையே கூடிக் கதைத்து புதிய கூட்டணிகளை உருவாக்குவது பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். இது எல்லாவற்றையும் ஊடகங்கள் உருப்பெருக்கி சூடாக்கி விற்றுக் கொண்டிருக்கின்றன. மொத்தத்தில் ஜெனிவாவை நோக்கி ஒரு கொதிநிலை உருவாக்கப்படுகிறது. தமிழ்ச் சமூகத்தின் கூட்டு உளவியல் ஜெனிவாவை நோக்கி குவிமையப்படுத்தப்பட்டிருக்கிறது. …
-
- 13 replies
- 772 views
-
-
அடக்கு முறைகளுக்கு அஞ்சாது மக்கள் எழுச்சி பெற வேண்டும் – -மட்டு.நகரான் 86 Views இலங்கையில் தமிழ்பேசும் சமூகம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து வடகிழக்கு சிவில் சமூக அமைப்புகள், வடகிழக்கில் உள்ள தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் மற்றும் அமைப்புகள் இணைந்து முன்னெடுத்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டம் நடைபெற்று 20தினங்களை கடந்துள்ள நிலையில், அது தொடர்பிலான பல்வேறு சம்பவங்கள் அண்மைக்காலமாக நடைபெற்றுவருவதை காணமுடிகின்றது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டமானது பல்வேறு இடறுபாடுகள், அடக்குமுறைகளை மீறி நடைபெற்றதானது தெற்கிலும், சர்வதேசத்திலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை உரக்கச்சொல்லியிருக்கின்றதே உண்மையான வ…
-
- 0 replies
- 783 views
-
-
அரசியல் ரீதியான அணுகுமுறையை சர்வதேச சமூகம் கைவிட வேண்டும் – ஒக்லன்ட் நிறுவன நிகழ்வில் விக்கி 71 Views “சர்வதேச சமூகம், இலங்கை விடயத்தில் இனிமேலும் அரசியல் ரீதியான அணுகுமுறையைப் பின்பற்றாமல் மனித உரிமைகள் அடிப்படையிலான ஒரு அணுகுமுறையைக் கடைப்பிடித்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மனித உரிமைகள் சபை ஆணையாளர் பச்லட் அம்மையாரின் அறிக்கை அத்தகைய மனித உரிமைகள் அடிப்படையிலான ஒரு அணுகுமுறையை கொண்டிருக்கின்றது. ஆனால், தற்போது, மனித உரிமைகள் சபையில் சமர்பிக்கப்படவிருக்கும் பூஜ்ய அறிக்கை அரசியல் அணுகுமுறை அடிப்படையில் அமைந்திருக்கின்றது” இவ்வாறு குற்றஞ்சாட்டியிருக்கின்றார் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி.விக…
-
- 1 reply
- 375 views
-
-
அரசியலாகும் அப்பாவிகளின் இரத்தம் -எம்.எஸ்.எம். ஐயூப் சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர், 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி (உயிர்த்த ஞாயிறு தினம்) மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள், மூன்று உல்லாசப் பிரயாண ஹோட்டல்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத் தாக்குதலை வழிநடத்தியவர்கள் யார் என்பது? அதைப் பற்றி அக்கறை கொண்டுள்ள அனைவரும் தற்போது எழுப்பும் கேள்வியாகும். அத்தாக்குதலைப் பற்றி விசாரணை செய்வதற்காக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையின் மூலம், அது தெரியவரும் எனப் பலர் எதிர்ப்பார்த்த போதிலும், அவ்வாறான எந்தத் தகவலும் அந்த அறிக்கையில் இருக்கவில்லை. அந்த அறிக்கையில், அவ்வாறான தகவல்கள் இருக்கும் எனக் கத்தோலிக்க திருச்…
-
- 0 replies
- 405 views
-
-
-
- 0 replies
- 612 views
-
-
தன்னம்பிக்கை நிறைந்த அறியாமை -என்.கே. அஷோக்பரன் கொவிட்-19 பெருந்தொற்று நோய்க்கு எதிரான மனிதகுலத்தின் போரில், மிகப் பலமானதோர் ஆயுதமான நோய்த்தடுப்பு மருந்தை மனிதன் தயாரித்து, கொஞ்சம் கொஞ்சமாக உலகம் எங்கிலும் உள்ள மக்கள் தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். இலங்கையில் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வதற்கான வரிசைகள், இன்று நீண்டு நிற்பதை நாம் அவதானிக்கிறோம். பலமணிநேரம் வரிசையில் காத்திருந்து, தடுப்பூசியைப் பெற்றுச் செல்லும் மக்களின் முகங்களில், பலமணிநேரம் வரிசையில் நின்றிருந்த களைப்பையும் மீறி, பாதுகாப்பு உணர்வு தரும் ஒரு வகையான சாந்தமான மகிழ்ச்சியைக் காணக்கூடியதாக இருக்கிறது. விரைவில் அனைவரும் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள வேண்டும். நிற்க! சில மாதங்களுக்…
-
- 1 reply
- 860 views
-
-
எப்போதோ கிடைக்க வேண்டிய ஆறுதல் -மொஹமட் பாதுஷா கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக மரணிக்கின்ற முஸ்லிம்களின் ஜனாஸாக்களை, நிலத்தில் அடக்கம் செய்யும் விடயத்தில், சுமூகமானதொரு தீர்வு எட்டப்பட்டுள்ளது. 11 மாதங்களாக இழுபறியாக இருந்த இவ்விவகாரத்தை, முடிவுக்கு கொண்டு வருவதற்காக அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளில் தடங்கல் ஏற்பட்டாலும் கூட, பின்னர் ஓட்டமாவடியில் நல்லடக்கம் செய்யும் வாய்ப்புக் கிடைத்துள்ளமை, பெரும் ஆறுதலான விடயமாகவுள்ளது. கொவிட்-19 நோய் தொற்றியுள்ளமை உறுதி செய்யப்படுகின்ற உடல்களை, அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்குமாறு, முஸ்லிம் சமூகம் கோரி வந்தது. உடல்களை நல்லடக்கம் செய்வது தொடர்பான, தமது மத நம்பிக்கைக்கு மதி…
-
- 0 replies
- 664 views
-
-
ஐநா பிரேரணையும் தமிழ்த்தரப்பின் பொறுப்பும்’ – பி.மாணிக்கவாசகம் 44 Views ஐநா மனித உரிமைப் பேரவையின் பிரேரணையை தமிழ் மக்கள் எதிர்கொள்வது எப்படி, அதனை எவ்வாறு கையாளலாம் என்பது இப்போது முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. பொறுப்பு கூறும் விடயங்களிலும் மனித உரிமை நிலைமைகள் மற்றும் நீதி, சட்டவாட்சி, சிவில் நிர்வாக, ஜனநாயக நிலைமைகளிலும் இலங்கையில் ஏற்பட்டுள்ள பின்னடைவு குறித்து ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் தனது அறிக்கையில் காரசாரமாக விபரித்திருந்தார். இதனால் அவருடைய அறிக்கை பரந்த அளவில் பெரும் கவனத்தை ஈர்த்திருந்தது. அரசாங்கம் உள்ளிட்ட பலதரப்பினருக்கு அது அதிர்ச்சியளிக்கத்தக்காக அமைந்திருந்தது. பாதிக்கப்பட்ட தரப்பினராகிய த…
-
- 0 replies
- 286 views
-