அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
இலங்கையில், மிகப் பெரிய கொழும்பு சாரணர் கெம்போறி http://static2.tamilmirror.lk/assets/uploads/image_711db83884.jpgகொழும்பு சாரணர்களின் வருடாந்த முதன்மை நிகழ்வு 55 ஆவது தடவையாக டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி தொடக்கம் 29 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கிறது. இலங்கையில் இவ்வாறான ஒரு நிகழ்வு நடைபெறுவது இது முதன்முறையாகும். முழுமையான மெய்நிகர் பல நாள் நிகழ்வான இந்த 55 ஆவது கொழும்பு கெம்போறி 2020 நிகழ்வானது சிங்கிதி, குருளை, கனிஷ்ட சாரணர், சிரேஷ்ட சாரணர், திரிசாரணர் மற்றும் தலைவர்கள் உள்ளடங்கிய 4500 இற்கும் மேற்பட்ட சாரணர்களின் பங்கேற்போடு நடைபெறவிருக்கிறது. 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற, ஆண்டு 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 200/200 புள்ளிகளைப் பெற்றுள்ள பத்து மாணவர்களில் ஒருவரான…
-
- 0 replies
- 995 views
-
-
மாலைத்தீவு மையவாடியா? -எம்.எஸ்.எம். ஐயூப் இலங்கையில், கொவிட்- 19 நோயால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை, மாலைத்தீவில் அடக்கம் செய்ய வசதி செய்து கொடுக்க வேண்டும் என, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மாலைத்தீவு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தாரா? மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷஹீத், தமது ‘டுவிட்டர்’ கணக்கில், வெளியிட்டு இருந்த ஒரு தகவலின்படி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அவ்வாறானதொரு கோரிக்கையை விடுத்துள்ளார். ‘இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபயவின் வேண்டுகோளுக்கு இணங்க, கொவிட்-19 நோயால் உயிரிழக்கும் இலங்கை முஸ்லிம்களின் இறுதிக் கிரியைகளை, மாலைத்தீவில் நடத்தும் விடயத்தில், இலங்கைக்கு உதவும் முகமாக, ஜனாதிபதி சொலிஹ் உரிய அதிகாரிகளுடன் பேச்ச…
-
- 0 replies
- 704 views
-
-
ஜெனிவா அரங்கு – தமிழ் தலைமைகள் என்ன செய்யப்போகின்றன? - யதீந்திரா எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கை விவகாரம் மீண்டும் ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் விவாதிக்கப்படவுள்ளது. இலங்கையில் ராஜபக்சக்கள் மீளவும் அதிகாரத்தை கைப்பற்றியிருக்கின்ற நிலையில், இலங்கையின் மனித உரிமைகள் சார் விவகாரமும் மீளவும் பேசுபொருளாகியிருக்கின்றது. இலங்கையின் இறுதி யுத்தம் முடிவுற்றதைத் தொடர்ந்து, யுத்தம் முடிவுற்ற அதே மே மாத இறுதியில் இலங்கை அரசாங்கத்தை பாராட்டி ஜ.நா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது. அப்போது 29 நாடுகள் அந்த பாராட்டும் தீர்மானத்தை ஆதரித்திருந்தன. ஆனால் மிகக் குறுகிய காலத்தில் அவ்வாறு பாராட்டுத் தெரிவித்த நாடுகளில் பல, இறுதி யுத்தம் தொடர்பில் இலங்…
-
- 0 replies
- 385 views
-
-
தனி நாடு கோரிக்கை வெற்றி பெற என்ன வழி? 8 ஆகஸ்ட் 2017 பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, பாகிஸ்தானில் இருந்து பலுசிஸ்தான் பிரிந்து தனிநாடாக வேண்டும் என்பது பலூச் மக்களின் கோரிக்கை உலகின் பல நாடுகளில் தனிநாடு வேண்டும் என்ற கோரிக்கைகளும், மோதல்களையும் பார்க்கமுடிகிறது. இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் வசிக்கும் பலூச் மக்கள், 'பலுச்சிஸ்தான்' என்ற தனிநாடு வேண்டும் என்று விரும்புகின்றனர். பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தானில் வசிக்கும் பட்டான் சமூகத்தினர், 'பக்தூனிஸ்தான்' கோருகின்றனர். பல தசாப்தங்களாக தொடரும் காஷ்மீர் விடுதலைக்கான போராட்டங்கள், சீனாவின் ஷி…
-
- 14 replies
- 2.1k views
-
-
கோவிட் – 19இன் பின்னரான கூட்டு உருவாக்க அரசியலில் உலகமும் ஈழத்தமிழரும் – சனநாயகத்தின் அரசியலில் முதுநிலை அறிஞர் சூ.யோ. பற்றிமாகரன் 68 Views 2020ஆம் ஆண்டு உலக அரசியலிலும் ஈழ அரசியலிலும் ‘புளொக்ஸ்’ என்று ஆங்கிலத்திலும் ‘கூட்டு’ எனத் தமிழிலும் சுட்டப்படும் அரசியல் முறைமையை மீண்டும் அரசியல் வழக்கு முறையாக்கியுள்ளது. சீனாவின் சில்க் பாதைத் திட்டத்தின் வெற்றி, அதனைத் தரைவழி, கடல்வழி உலகச் சந்தையை ஆட்டிப்படைக்கும் பொருளாதாரப் பலத்தைச் சீனாவுக்கு அளித்து வருகிறது. இதனை கோவிட் – 19 வீரியின் தொற்றுப் பரவல் கூடப் பெரிதாகப் பாதிக்கவில்லை. இதன் காரணமாக உலக வல்லாண்மை நிலையில் சீனாவின் மேலாண்மை பூதாகரமான வளர்ச்சியைக் கண்டுள்ளது. இதனை நேருக்க…
-
- 0 replies
- 329 views
-
-
-
- 3 replies
- 944 views
-
-
இன உறவைப் பலப்படுத்த நல்ல தருணம் -மொஹமட் பாதுஷா ‘தனியாக மேய்கின்ற ஆடுகளை, ஓநாய்கள் வேட்டையாடி விடுகின்றன’ என்று சொல்வார்கள். ஒற்றுமையின் பலத்தைச் சொல்வதற்கு இதுபோல, வேறுபல பழமொழிகளும் பயன்பாட்டில் உள்ளன. உண்மைதான், ஒரு சமூகம் தனக்குள் உள்ளகமாக ஒன்றுபடுவது மட்டுமன்றி, பிற சமூகங்களுடனும் இணக்கப்பாட்டோடு பயணிப்பது கூட, தமது அபிலாஷைகளை வென்றெடுப்பதற்குப் பெரும் பக்கத் துணையாக அமையும். இலங்கைச் சூழலில், சிறுபான்மைச் சமூகங்களான முஸ்லிம்களும் தமிழர்களும் பொதுவான விடயங்களில், புரிந்துணர்வுடனும் பரஸ்பர ஒத்துழைப்புடனும் செயற்பட வேண்டிய அவசியம் உள்ளது. அதேபோன்று, பெரும்பான்மை மக்களில் கணிசமானோர், இனவாதத்தின் பின்னால் போகின்றவர்கள் அ…
-
- 0 replies
- 625 views
-
-
கால அவகாசம் என்னும் துரோகத்திற்கு தயாராகிறதா கூட்டமைப்பு.? பொதுவாழ்வில் இருப்பவர்கள், எப்போதும் விமர்சனங்களை செவிமடுக்க வேண்டும். கீழிலிருந்து வரும் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் உள்ளீர்க்க வேண்டும். அவைகளிலிருந்து தமது கருத்துருவாக்கங்களை ஏற்படுத்தி கொள்ளுதல் வேண்டும். மாபெரும் தலைவர்களும் பெரும் மாற்றங்களை உருவாக்கிய மனித ஆளுமைகளும் மக்களின் மனங்களிலிருந்தே சாதனைக்கும் மாற்றங்களுக்குமான தீரக்கதரிசனங்களை உருவாக்கியிருக்கிறார்கள். அதுவே வாழ்வுக்கான கற்றலும் அடிப்படையுமாகும். இன்று நம் சூழலில் இச்சிந்தனை எப்படி இருக்கிறது? இலங்கையில் ஒரு ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. அத்துடன் நாடாளுமன்றத் தேர்தலும் நடந்து முடிந்துள்ளது. தென்னிலங்கையைப் பொறுத்தவரையில் …
-
- 30 replies
- 2.8k views
- 1 follower
-
-
வரவு செலவு வாக்கெடுப்பும் – வழுக்கிய ‘தமிழ்’ கட்சிகளும் – செய்தி ஆக்கம்- பிரபா 120 Views தமிழ் மக்களின் தேசிய விடுதலைக்கு குரல்கொடுப்பதாக கூறிக்கொண்டு சிறீலங்காவின் நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பல தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்கள் தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்றும் வண்ணமே அமைந்துள்ளது. சிறீலங்கா அரசின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் மூன்றாவது கட்ட வாசிப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. கடந்த 10 ஆம் நாள் இடம்பெற்ற இந்த வாக்கெடுப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரனும் கலந்துகொள்ளவில்லை. எனினும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்ப…
-
- 0 replies
- 377 views
-
-
(நேர்காணல்: ஆர்.ராம்) பாராளுமன்றில் ஆளும், எதிர் தரப்பால் ஜனநாயக மறுப்பு ஐ.நா.வில் புதிய பிரேரணையால் மட்டும் நன்மை கிட்டாது தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒருங்கிணைவு போலியானது தமிழ் மக்களின் ஆணை தம்மிடமுள்ளதாக கூறும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொறுப்புக்கூறல் விடயத்தில் மேற்குலக, இந்திய நலன்களுக்கு உட்பட்டு அவர்களின் முகவர்களாக செயற்படுகின்றதே தவிர தமக்கு ஆணை வழங்கிய மக்களின் நலன்களில் இறுக்கமாக செயற்படவில்லை என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, http://cdn.vir…
-
- 1 reply
- 598 views
-
-
அமெரிக்காவிடம் கடும் நிபந்தணை – சிங்களப் புத்திஜீவிகள் பரிந்துரை ஜே பைடன் நிர்வாகம் ஜெனீவா மனித உரிமைச் சபையில் மீளவும் இணைந்து இலங்கைக்குக் கடும் அழுத்தம் கொடுக்கும் என்றோ, குறைந்தபட்சம் போர்க்குற்றம் குறித்த சர்வதேச விசாரணை நடக்கும் என்றோ எதிர்ப்பார்க்க முடியாது. ஆனால் ஐ.நா பாதுகாப்புச் சபையின் தீர்மானம் ஒன்றுக்கான முன்மொழிவுக்கு ஈழத்தமிழர்கள் தயாராகி, இலங்கை மேற்கொண்ட குற்றங்கள் அனைத்தினதும் குற்றங்களுக்கான சர்வதேச நீதியைக் கோரத் தலைப்பட வேண்டும். 0 அ.நிக்ஸன் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியைக் கவிழ்த்து 2015ஆம் ஆண்டு மைத்திரி- ரணில் அரசாங்கத்தை அமைப்பதற்குப் பாடுபட்டிருந்த பொது அமைப்புகளில் ஒன்றான தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்ற…
-
- 0 replies
- 628 views
-
-
தொடர்ந்து துரத்தும் புலிக் கனவு -சுபத்ரா - “12 ஆண்டுகளுக்குப் பிறகும், புலிகளின் கொள்கை பற்றி எச்சரிக்கப்படுகிறது. அது உயிர்ப்புடன் தான் இருக்கிறது என்ற அச்சம் ஏற்படுகிறது என்றால், அவர்களை மௌனிக்கப் பயன்படுத்தப்பட்ட இராணுவ வழிமுறை சரியானதா என்ற கேள்வி எழுகிறது” “தமிழ் மக்களின் பிரச்சினையின் பிரதிபலிப்புத் தான் தமிழீழ விடுதலைப் புலிகள். தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டிருந்தால், விடுதலைப் புலிகள் தோற்றம் பெற்றிருக்க முடியாது” உலகிலேயே யாரும் செய்யாத காரியத்தை இலங்கை இராணுவம் செய்திருப்பதாகவும், தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற வல்லமை வாய்ந்த அமைப்பு ஒன்றை வேறெந்த நாடும் அழித்ததில்லை என்றும், கடந்த 11 ஆண்டுகளாக சிங்களத் தலைவர்களும் இராணுவ அதிகாரி…
-
- 0 replies
- 437 views
-
-
அதிகாரப்பகிர்வுக்கு வந்துள்ள அச்சுறுத்தல் -என்.கண்ணன் ‘அதிகாரப் பகிர்வை சவாலுக்குட்படுத்தி விட்டு, சாதிய முரண்பாட்டைக் கிளறி, தப்பித்துக் கொள்ளும், அளவுக்கு யாழ்ப்பாணத்து அரசியல் சென்றிருக்கிறது’ மாகாண சபைகளை ஒழித்து விட்டு உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்களை வலுப்படுத்த வேண்டும் என்ற கருத்து, தற்போதைய அரசாங்கத்திடம் வலுவாக உள்ள நிலையில், இதே அரசாங்கம் தான், உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்களையும் பறித்தெடுக்கும் காரியத்தில் இறங்கியிருக்கிறது. உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்களை மதிக்காமல், செயற்படும் மத்திய அரசின் நிர்வாக அமைப்புகள், இதற்கு சவால் விடும் உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகத்தை அச்சுறுத்தும் வகையிலும் செயற்பட ஆரம்பித்துள்ளன. வலிகாமம் கிழக்கு பிர…
-
- 0 replies
- 346 views
-
-
நாட்டுப்பற்று எனும் ‘முகமூடி’ -என்.கே. அஷோக்பரன் பிரித்தானிய அறிஞர் சாமுவல் ஜோன்ஸன், “நாட்டுப்பற்று (patriotism) என்பது, அயோக்கியர்களின் கடைசிச் சரணாலயம்” என்று, 1775இல் தெரிவித்திருந்தார். இப்படிச் சொன்னதன் மூலம், உண்மையாகவும் நேர்மையாகவும் தன் நாட்டையும் மக்களையும் நேசிப்பவர்களை ஜோன்ஸன் குறை சொல்லவில்லை. மாறாக, நாட்டுப்பற்று எனும் முகமூடியைப் பயன்படுத்தும், ‘பசுத்தோல் போர்த்திய நரிகளையே’ அவர் கடிந்துகொண்டார். ஒவ்வொரு மனிதனுக்கும் தான், தன்னுடைய குடும்பம், தன்னுடைய சுற்றம், தன்னுடைய சமூகம், தன்னுடைய இனம், தன்னுடைய மொழி, தன்னுடைய மதம், தன்னுடைய பண்பாடு, தன்னுடைய கலைகள், தன்னுடைய அடையாளம் என்று, தான் சார்ந்தவை சார்ந்த பிரக்ஞையும் ஈர்ப்பும் பெருமையும் காணப்ப…
-
- 0 replies
- 476 views
-
-
ஈழத்தமிழர்களிடை பொறுப்புள்ள கூட்டமைவு அவசியம் 4 Views ஈழத்தமிழர்களுக்கு நல்லாட்சி, மனித உரிமைகள், வளர்ச்சிகள் என்னும் மூன்றுமே இன்றைய சிறீலங்கா அரசாங்கத்தால் உறுதி செய்யப்படாது உள்ளது என்பது வெளிப்படையான உண்மை. நாள்தோறும் கிடைக்கும் செய்திகளும், தகவல்களும், அறிக்கைகளும், வேண்டுகோள்களும் இதனை கள ஆய்வு நிலையிலும் உறுதிப்படுத்தி வருவதை உலக நாடுகளும், அமைப்புகளும் நன்கறிவர். இந்நிலையில், ஈழமக்களின் இந்த நாளாந்த வாழ்வியலை வார்த்தைப்படுத்தி, உள்ளதை உள்ளவாறு வெளிப்படுத்தும் ஊடகத் தலைமைகளோ, அரசியல் தலைமைகளோ இல்லாதிருக்கிறது. இதனாலேயே 21ஆம் நூற்றாண்டின் உலக வரலாற்றின் மிகக் கொடிய மனித இனஅழிப்பு என்று வரலாறு பதிந்துள்ள முள்ளிவாய…
-
- 0 replies
- 533 views
-
-
ஜெனீவா கூட்டத் தொடர் – வாய்ப்புக்களை தமிழ்த் தரப்புக்கள் எப்படிப் பயன்படுத்தப் போகின்றன? ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் ஆரம்பமாவதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ளன. அதனை கையாள்வதில் தமிழ்க் கட்சிகளிடையே ஒருமைப்பாடு ஏற்படுவதற்குப்பதிலாக முரண்பாடுகள் மேலோங்கிவருவதாகவே தெரிகின்றது. தமிழ்க் கட்சிகளிடையே கடந்த ஒரு வாரகாலமாக இடம்பெற்றுவரும் நகர்வுகள் இதனைத்தான் வெளிப்படுத்துகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏகபோகத்தை உடைத்து, கஜேந்திரகுமார் அணி, விக்கினேஸ்வரன் அணி என்பன பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றிருக்கும் நிலையில், தமிழ்க் கட்சிகள் ஜெனீவாவை ஒற்றுமையாக அணுக வேண்டும் என தமிழ் மக்கள்…
-
- 0 replies
- 312 views
-
-
நெருப்புடன் விளையாடுதல் பட மூலம், LAKRUWAN WANNIARACHCHI, AFP அவரது மகனின் உடலம் தகன அறையில் இடப்படுவதை பார்த்துக் கொண்டே, மொஹமட் பாஹிம் மயானத்திற்கு வெளியே நின்று, அழுது கொண்டிருந்தார். இறப்பின் பின்னர் ஜனாஸா எரிக்கப்படுதல் மற்றும் எந்தவித சிதைத்தல்களைத் தடைசெய்யும் நம்பிக்கை கொண்ட அந்த முஸ்லிம் மனிதர், “எனது குழந்தை தகனம் செய்யப்படுவதை எவ்வாறு நான் பார்த்துக் கொண்டிருக்க முடியும்” என வினவினார். பிறந்து சில நாட்களேயான அவர்களது மகன் மொஹமட் ஷயாக் லேடி றிஜ்வே வைத்தியசாலையில் அனுமதித்த பொழுது நிமோனியா தொற்று ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்ட பின் அவர்களது குடும்பம் அடி மேல் அடியைச் சந்தித்தது. பிறந்து 20 நாட்களேயான அப்பச்சிளம் சிசுவில் நடத்தப்பட்ட அன்டிஜென…
-
- 0 replies
- 664 views
-
-
-
- 0 replies
- 528 views
-
-
ஒரு புதிய யாப்புக்கான வாய்ப்புக்கள்? – நிலாந்தன் BharatiDecember 20, 2020 நிலாந்தன் ஒரு புதிய யாப்பை உருவாக்கப் போவதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு 20 ஆவது திருத்தத்தை கொண்டு வர முற்பட்ட வேளை அதற்கு சிறிய பௌத்த மகா சங்கங்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இரண்டு பலவீனமான சிறிய பௌத்த மகா சங்கங்களின் நாயக்கர்கள் யாப்பு திருத்தத்திற்கு பதிலாக ஒரு புதிய யாப்பை கொண்டு வரலாம் என்று கேட்டிருந்தார்கள். இதே கருத்தையே கத்தோலிக்க ஆயர்களின் சம்மேளனமும் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. இவ்வாறான ஒரு பின்னணியில் ராஜபக்சக்கள் தாங்கள் ஒரு புதிய யாப்பு கொண்டு வருவோம் என்று திட்டவட்டமாகவும் தெளிவாகவும் நாட்டுக்கு கூறத் தொடங்கினார்கள். அதன…
-
- 0 replies
- 395 views
-
-
சொல்லும் செயலும் தமிழரசியலும் ? நிலாந்தன்! December 20, 2020 ஈழவேந்தன் இப்பொழுது கனடாவில் இருக்கிறார். அவர் முன்பு நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்த பொழுது கிளிநொச்சியில் ஒரு சர்ச்சை எழுந்தது. ஈழவேந்தன் நாடாளுமன்றத்தில் ஆவேசமாக எதிர் தரப்பைச் சாடுவார். ஆனால் நாடாளுமன்ற கன்ரீனில் யாரை எதிர்த்து பேசினாரோ அவரோடு உட்கார்ந்திருந்து தேநீர் அருந்துவாராம். இது தொடர்பில் கிளிநொச்சிக்கு யாரோ முறைப்பாடு செய்திருக்கிறார்கள். இக்காலகட்டத்தில் ஈழவேந்தன் என்னை சந்தித்த பொழுது நான் அவரிடம் சொன்னேன் “மிதவாத அரசியல் என்றால் அப்படித்தான். ஆயுதப் போராட்டம் எதிரியின் இருப்பை அழிக்க நினைக்கும். ஆனால் மிதவாத அரசியல் அப்படியல்ல. எதிரியின் இருப்பை ஏற்றுக் கொள்ளும். பல்வகைமை…
-
- 2 replies
- 470 views
-
-
இலங்கை - ஒரு யுகத்தின் முடிவாகிப் போன 2020! - GTN December 19, 2020 விக்டர் ஐவன்… போதுமான அளவு கவனம் செலுத்தப்படாவிட்டாலும் இலங்கையில் 1948 இல் சுதந்திரத்துடன் ஆரம்பித்த யுகம் 2020 உடன் முடிவடைந்ததாகவே நான் கருதுகிறேன். நீண்ட கால காலனித்துவ ஆட்சியின் பின்னரான சுதந்திரத்தின் பின்னர் பிரித்தானியாவிடமிருந்து எங்களுக்கு வாரிசாகக் கிடைத்த அரசும் அதனுடன் தொடர்பான சமூக அரசியல் முறைமைகளும் முற்றாக வீழ்ச்சியடைந்து காலாவதியாகிப் போயுள்ளன என இதனைச் சுருக்கமாக எடுத்துச் சொல்லலாம். எமது எல்லைகள் எமக்குச் சுதந்திரம் தந்து விட்டுச் செல்லும் போது இலங்கைக்கு மரபுரிமையாகக் கிடைத்த முறைமைகளில் குறைபாடுகள் இருந்திருக்கலாம். இருந்தாலும் அதற்கு முன்னர் எம்மிடமிர…
-
- 0 replies
- 320 views
-
-
மாகாண சபைகளுக்கான தேர்தலும் ”கொரோனா இராஜதந்திரமும்” – தாயகன் புதிய அரசியலமைப்பில் மாகாண சபைகள் உருவாக்கத்தின் மூலாதாரமான 13 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நீக்கப்பட வேண்டும், மாகாணசபைகள் ஒழிக்கப்பட வேண்டும்,மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படக்கூடாது என அரசின் பங்காளிகளும் முக்கிய அமைச்சர்களும் போர்க் கொடிதூக்கியுள்ள நிலையில் அதற்கான நகர்வுகளையே மேற்கொண்டு வந்த கோத்தபாய ராஜபக்ச அரசு ,திடீரென 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்த முயற்சிப்பதன் பின்னணி என்ன? 0 தாயகன் மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தி, அதற்கான சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கட…
-
- 0 replies
- 501 views
-
-
-
- 3 replies
- 773 views
-
-
ஜெனிவாவா? சர்வதேச நீதிமன்றமா? மூன்றிலிரண்டு முடிவெடுக்கட்டும்! – பனங்காட்டான் பனங்காட்டான் ஆங்கிலத்தில் “ஸ்குயர் வண்” என்றொரு சொற்பதம் உண்டு. அதாவது, ஏதாவதொன்றில் முன்னேற முடியாது மீண்டும் தொடங்கிய இடத்துக்கு அல்லது முன்னைய இடத்துக்குச் செல்வதென்பது இதன் அர்த்தம். இலங்கைத் தமிழர் அரசியலில் இப்பதம் எப்போதும் சாகாவரம் பெற்றது. மீண்டும் ஜெனிவாக் கூட்டத்தொடர் பற்றியே தமிழரின் அரசியல் கட்சிகளும் அவர்களின் தலைவர்களும் பேச ஆரம்பித்துள்ளனர். இதற்காக ஒற்றுமை அல்லது இணக்கம் என்பது தேடப்படுகிறது. இலங்கை நாடாளுமன்ற அரசியலில் உதயமான முதலாவது தமிழர் அரசியல் கட்சி அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ். அதன் உருவாக்கத் தலைவர் (காலஞ்சென்ற) ஜி…
-
- 0 replies
- 1.1k views
-
-
தடையை நீக்கினால் தடம் பிறக்கும் – முனைவர் ஆ. குழந்தை, சென்னை 23 Views பிரித்தானிய நடுவர் மன்றம் கடந்த அக்தோபர் திங்கள் தமிழீழ விடுலைப் போராளிகளைக் கொண்ட விடுதலைப்புலி இயக்கத்திற்கு தடை விதித்திருப்பது தவறு என்ற தீர்ப்பு வழங்கியது. அதன் பிறகு சிங்கள பேரினவாத, பௌத்த இராணுவ அரசு தடையை நீக்கக் கூடாதென இங்கிலாந்து அரசை வலியுறுத்துகிறது. இந்திய அரசின் ஆதரவையும் பெற முயற்சிக்கிறது. 15. 11. 2020 ஞாயிறு அன்று கனடாவில் உள்ள ஒந்தாரியோ கொள்கை ஆய்வு மையம் தடையை நீக்குவதால் வரும் கற்பனை செய்யப்பட்ட ஆபத்துகளைப்பற்றி கருத்தரங்கு நடத்தியது. அதில் பிரகாசு ஆ. ஷா, மிசுக்கா குவ்சுகா, மனிசு ஆப்ரேட், நேவில் கேவாசு ஆகியோர் கலந்துகொண்டு கருத்த…
-
- 0 replies
- 542 views
-