Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. சீனாவின் புதிய போர்முறைக் கோட்டுபாடுகளின் விளைவு என்ன? – கேணல் ஆர் ஹரிஹரன் கேணல் ஆர் ஹரிஹரன் நவம்பர் மாதம் முதல் வாரம் நடந்த, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 19வது மத்திய செயற்குழுவின் ஐந்தாவது ப்ளீனரி கூட்டத்தில், பாதுகாப்பு அமைப்பு மற்றும் போர்ப்படைகளின் நவீன மயமாக்குதலை துரிதப்படுத்தி, ஒருங்கிணைந்த வளமான நாட்டை உருவாக்குவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து, சீனாவின் மத்திய ராணுவ கமிஷன் கடந்த நவம்பர் 7ந் தேதி, சீனாவின் புதிய போர்முறைக் கோட்பாடுகளை “ஒருங்கிணைந்த சீன மக்கள் விடுதலைப் படையின் போர்முறைகள்; ஓர் வரைவடிவு” என்ற பெயரில் சீனப் படைகளில் செயலாக்கத்தில் கொண்டு வந்தது. அதைப் பற்றி சீன பாதுகாப்பு அமைச்சகம் நவம்பர் 13ந…

  2. தேசியத்தின் பெயரில் யாழில் கூடும் சில சுயநலவாதிகள் -புருஜோத்தமன் தங்கமயில் மக்களை முட்டாள்களாக்கி, அவர்களின் தலையில் மிளகாய் அரைப்பது என்பது, உலகம் பூராகவும் ஆட்சியாளர்களினதும் அரசியல்வாதிகளினதும் நிலைப்பாடுகளில் ஒன்றாக இருக்கின்றது. அதிலும், தேர்தல்களை இலக்கு வைத்து இயங்கும் அரசியல்வாதிகள், எவ்வளவுதான் தரம் தாழ்ந்த, ‘தகிடு தத்தங்களுக்கும்’ தயாராக இருக்கிறார்கள். இதற்கு அண்மைய உதாரணமாக, தமிழ்த் தேசிய கட்சிகளின் ஒருங்கிணைவைக் குறிப்பிடலாம். தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், ஆரோக்கியமான எண்ணங்களையும் அதை நோக்கிய செயற்பாடுகளையும் வரவேற்பதற்கு, மக்கள் தயாராகவே இருக்கிறார்கள். ஆனால், அதற்கான வெளியை, அதிக சந்தர்ப்பங்களில் இல்லாமல் செய்வது, குறுகிய சுயநல நோ…

  3. எங்கே விட்டோமோ அங்கிருந்துதொடங்குவோம்- சிலம்பு December 3, 2020 முள்ளிவாய்க்கால் பேரழிவும், ஆயுத மௌனிப்பும் இடம் பெற்று பதினொரு ஆண்டுகள் கடந்து விட்டது. அடக்குமுறைகளும், ஒடுக்குமுறைகளும் பேரினவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட நிலையில், நாடாளுமன்ற முறை மூலமும், அறவழிப் போராட்ட நிலையில் நாடாளுமன்ற முறை மூலமும், அறவழிப்போராட்டங்கள் மூலமும் தமிழினம் தனது உரிமைகளைப் பெற முயன்று தொல்வியடைந்த நிலையில் தான் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தை தொடங்கினார்கள். ஆயுதப் போராட்டம் முகிழ்ந்த போது தான்1976 இல் மேத் திங்களில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. தமிழ் மக்களின் இரு பெரும் கட்சிகளான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசும், இலங்கைத் தமிழரசுக் கட…

  4. அமெரிக்க பாதுகாப்பு வட்டாரங்களுக்கு ஆலோசனை வழங்கிய கோட்டபாயவின் சிங்களப் பேராசிரிய நண்பர்: இலங்கை அரசு விடுதலைப் புலிகளை ஐ.நா. பயங்கரவாத பட்டியலில் சேர்க்கவேண்டும் என்கிறார் குணரட்ணா தீவுக்குள் புலிகளைப் போற்றுவோருக்கு புனர்வாழ்வு கொடு, புலம்பெயர் தமிழர்களைப் பட்டியலிடு என்றும் மதியுரை! ஜே.வி.பியின் முடக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தைப் போல் அல்லாமல் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் மீளுருவாக்கப்படுவதற்கு வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும், குறிப்பாக அவ்வியக்கத்தின் தலைவர் வே பிரபாகரன் அவர்களைப் போற்றுகின்ற மரபு புலம்பெயர் தமிழர்களாலும் அமைப்புகளாலும் முன்னெடுக்கப்படுவதால், இலங்கைத் தீவுக்குள்ளும் அடுத்த தலைமுறையின…

    • 0 replies
    • 640 views
  5. ஆளுமையற்ற தலைமைகள் ???

    • 0 replies
    • 829 views
  6. முஸ்லிம் நாடுகளின் மெத்தனப் போக்கு மொஹமட் பாதுஷா தென்னாசிய நாடுகள் உள்ளடங்கலாக, உலகின் பல நாடுகளிலும் ஆட்புலப் பிராந்தியங்களிலும் முஸ்லிம்கள் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர். அவர்கள் இராணுவ ஆக்கிரமிப்பு சார்ந்த இனவாதம், மதவாதம் ரீதியான ஒடுக்கு முறைகளுக்கு உள்ளாகி வருகின்றனர். நிலைமைகள் இவ்வாறு இருந்த போதிலும், முஸ்லிம் நாடுகள் இவற்றைப் பெரிதாகக் கண்டுகொள்ளாமல், ஒருவித மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்து வருகின்றன. முஸ்லிம்கள் மீது என்னதான் நெருக்குவாரங்களைப் பிரயோகித்தாலும், கேட்பதற்கு யாருமில்லை என்ற தைரியத்தை உலக பொலிஸ்காரர்கள், நாட்டாமைகள் தொடக்கம் உலக அரசியலின் புல்லுருவிகள் வரை, எல்லோருக்கும் ஏற்படுத்த இது காரணமாகி இருக்கின்றது எனலாம். …

  7. இனம் சார்பாக ஜனாதிபதியுடன் பேசுவதில் தவறில்லை...

  8. சீனாவின் வேட்டை நிலத்தில் டோவாலின் இலக்கு வெற்றிபெறுமா? - யதீந்திரா கடல் பாதுகாப்பு தொடர்பான உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்றிற்காக இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் குமார் டோவல் இலங்கை வந்திருக்கின்றார். இந்த விடயம் தொடர்பில் ஆராய்வது எனது நோக்கமல்ல. டோவால் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், முன்னைநாள் இந்திய உள்ளக புலனாய்வு அமைப்பின் இயக்குனராக (Intelligence Bureau) இருந்தவர். இதற்கப்பால் அவர் தொடர்பில் அதிகம் விடயங்கள் வெளியில் வருவதில்லை. மிகவும் அரிதாக நிகழ்வுகளில் தோன்றுவதால், அரிதாகப் பேசும் டோவால் அண்மைய நிகழ்வொன்றில் – இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுமாக இருந்தால் இந்தியா நிச்சயம் இந்திய மண்ணியிலும் அதே வேளை வெளிநாட்டு மண்ணிலும் சண்டையிடும் எ…

  9. சட்டத்தரணி எனும் உத்தியோகம் என்.கே. அஷோக்பரன் “பிரபல்யமற்ற நிலைப்பாடுகள் சார்பாகவும் வாதாடுவதுதான், சட்டத்தரணிகளின் கடமை” - போல் க்ளெமெண்ட், ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் மன்றாடியார் நாயகம். நேற்றைய தினம், சமூக ஊடகங்களில் பரவலான ஒரு செய்தி, என் கண்களையும் எட்டியது. கொவிட்-19 பெருந்தொற்றுக்கு உள்ளாகி மரணித்தவர்களின் உடலங்கள், எரிக்கப்பட வேண்டும் என்ற அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து, முஸ்லிம் மக்களின் சார்பாக, அடிப்படை மனித உரிமை மீறல் மனுக்கள் சில, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடந்தவாரம் இவை விசாரணைக்கு வந்தபோது, குறுக்கீடு செய்யும் மனுதாரர் ஒருவர் சார்பில் ஆஜராகும் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, சுயதனிமைப்படுத்தலில் இருப்பதா…

  10. மரணங்களை நினைவுகூரல்: அரசியலும் அபத்தமும் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இலங்கையின் மூன்று தசாப்தகால யுத்தத்தில் இழக்கப்பட்ட உயிர்கள் ஒவ்வொன்றும் மதிப்பிற்குரியவை. அவ்வுயிர்களை நினைவுகூருவதற்கான உரிமையை, யாரும் ஒருவருக்கும் தரவும் முடியாது; மறுக்கவும் முடியாது. தனது தந்தையை, சகோதரனை, சகோதரியை, பிள்ளையை நினைவுகூர அன்புக்குரியவர்களுக்கு உரிமையுண்டு. அது கேள்விகளுக்கு அப்பாற்பட்டது. ஆனால், இந்த நினைவுகூரலை மய்யப்படுத்தி நடக்கும் அரசியலும் அதன் அபத்தமும், விரிவாகவும் விமர்சன ரீதியாகவும் பேசப்பட வேண்டியது. மிகுந்த உணர்வுபூர்வமான இந்த நினைவுகூரல்கள், இப்போது மே 18ஆகவும் மாவீரர் தினமாகவும் சுருங்கியுள்ளன. ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டத்தின் வழித்தடத்தில், இழக்கப…

  11. சுமந்திரனின் மாற்றம்... -கபில் “ஆயுதப் போராட்டத்தை, ஆதரிக்கவில்லை என்று கூறிவந்த- அந்த வழிமுறையை நிராகரிப்பதாக கூறிவந்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நினைவேந்தல் களத்துக்கு வந்தமை ஆச்சரியமான மாற்றம் தான்” மாவீரர் நாள் நினைவேந்தல் கடந்த பல ஆண்டுகளைப் போலன்றி, இந்தமுறை மீண்டும், வீட்டு முற்றங்களுக்குள்ளேயோ, அல்லது வீடுகளுக்குள்ளேயோ முடக்கப்பட்டிருக்கிறது. 2009இல் இருந்து- விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், போராட்டம் சார்ந்த நினைவேந்தல் நிகழ்வுகளைப் பகிரங்கமாக நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. ஆங்காங்கே சிலர் உதிரிகளாக நினைவேந்தல்களை நடத்தினாலும், அவை கூட்டுத் திரட்சியாக இருக்கவில்லை. 2015 ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் தொடங்கி, 2019 ஆட்சி …

  12. நினைவேந்தல் உள்ளதா உரிமை? -என்.கண்ணன் “உள்நாட்டு நீதிமன்றங்களின் மூலம் தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை பெற்றுக் கொடுக்க முடியாது போனால், அடுத்த கட்டமாக சர்வதேச நீதிமன்றங்களை அல்லது சர்வதேச ரீதியாக நீதியைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்புகளை பயன்படுத்தியிருக்க வேண்டும்” “திலீபன் நினைவேந்தலுக்கு தடைவிதிக்கப்பட்ட பின்னர், ஒன்று சேர்ந்து பேச ஆரம்பித்த பத்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் சரி, சட்ட விற்பன்னர்களான தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் சரி, நினைவேந்தல் விவகாரத்தை சட்ட ரீதியாக தீர்ப்பதற்கு முயற்சிக்கவில்லை” தியாகி திலீபன் நினைவேந்தலுக்காக தொடங்கப்பட்ட போராட்டம், மாவீரர்நாள் நினைவேந்தலுக்காகவும் தொடர்ந்திருக்கிறது. மரணித்தவர்களை நினை…

  13. அஜித் டோவாலின் கொழும்பு விஜயத்தின் பிரதான நோக்கம் என்ன? பொம்பியோவைத் தொடர்ந்து காய் நகர்த்தும் ‘டில்லி’ இலங்கையில் இந்தோ — பசுபிக் மூலோபாயத்தை மேம்படுத்துவதற்கு இந்தியா கடுமையாக முயற்சிக்கிறது. முத்தரப்பு கடல்சார் ஒத்துழைப்பு மகாநாட்டுக்காக கடந்த வெள்ளிக்கிழமை இந்தி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் கொழும்புக்கு மேற்கொண்ட விஜயம் இந்தோ — பசுபிக் ஒத்துழைப்புக்கு இலங்கையை நெருக்கமாக கொண்டுவருவதற்கான நோக்கத்தைக் கொண்டதாகும் என்று இந்தியாவின் பிரபலமான இணையத்தள செய்திச் சேவைகளில் ஒன்றான ‘த பிறின்ற் ‘ கூறியிருக்கிறது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ இலங்கைக்கு வருகைதந்த ஒரு மாத காலத்திற்குள் அஜித் டோவாலின் விஜயம் இடம்பெற்றிருப்பதால்…

  14. மாவீரர் நாள் 2020 – நிலாந்தன்… November 29, 2020 நினைவுகூர்தல் பொதுவாக இரண்டு வகைப்படும் முதலாவது தனிப்பட்ட நினைவு கூர்தல். இரண்டாவது பொது நினைவு கூர்தல். தனிப்பட்ட நினைவு கூர்தல் எனப்படுவது ஒருவர் அல்லது ஒரு குடும்பம் இறந்து போனவரை தனிப்பட்ட முறையில் நினைவு கூர்வது. அது தனிநபர் உரிமை தொடர்பானது. அதற்கு அரசியல் பரிமாணம் ஒப்பீட்டளவில் குறைவு. பண்பாட்டு பரிமாணமும் உளவியல் பரிமாணமும்தான் அதிகம். ஆனால் பொது நினைவு கூர்தல் என்பது முழுக்க முழுக்க அரசியல் பரிமாணத்தைக் கொண்டது. பண்பாட்டு உளவியல் பரிமாணத்தைக் கொண்டது. அது ஒரு மக்கள் கூட்டத்தின் கூட்டுரிமை சம்பந்தப்பட்டது. ஒரு பொது நினைவு கூர்தலின்போது ஒரு பொது இடத்தில் மக்கள் ஒன்று திரண்…

  15. வீதிக்கு இறங்காத அரசியல்வாதிகளும் வீதிக்கு இறங்கிய மக்களும் தாயகன் இலங்கையை கொரோனா கொத்தணிகள் ஆக்கிரமித்து வரும் நிலையில் மேல் மாகாணமே மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அதிகமான உயிரிழப்புக்களையும் அதிக தொற்றாளர்களையும் கொண்ட ஆபத்து வலய மாவட்டமாக கொழும்பு அடையாளப்படுத்தப்பட்டு பல பகுதிகள் ஒரு மாத காலத்துக்கும் மேலாக தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ளன கொழும்பு மாவட்டத்தில் மட்டக்குளி, மோதர, வாழைத்தோட்டம் , கொட்டாஞ்சேனை , ஆட்டுப்பட்டித் தெரு ,பொரளை ,புளுமெண்டல் ,கரையோர பொலிஸ் , மாளிகாவத்தை ,தெமட்டகொட ,கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டு முடக்கப்பட்டுள்ளதுடன் மட்டக்குளியின் மெத்…

  16. நீதிமன்றத்துக்கு வந்த பிட்டு – நிலாந்தன் நிலாந்தன் “யுத்த காலங்களில் பிட்டும் வடையும் ரொட்டியும் தோசையும் சாப்பிட்ட தமிழ் மக்கள் இப்பொழுது பீட்சா சாப்பிடும் ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது” என்ற தொனிப்பட யாழ் மாவட்ட தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரியான பிரசாத் பெர்னாண்டோ யாழ் மேல் நீதிமன்றத்தில் கருத்துக் கூறியுள்ளார். மாவீரர் நாள் தொடர்பான ஒரு வழக்கில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார் அவர் அவ்வாறு கூறியது தவறு என்று சுமந்திரன் ஆட்சேபனை தெரிவித்ததையடுத்து நீதிமன்றம் வழக்கோடு சம்பந்தப்பட்ட விடயங்களை மட்டும் நீதிமன்றத்தில் கதைக்குமாறு பிரசாத் பெர்னாண்டோவிடம் அறிவுறுத்தி இருக்கிறது. அதன்பின் கடந்த புதன்கிழமை நடந்த நீதிமன்ற அமர்வின் போது கொழு…

  17. எல்.பி.எல் (LPL) கிரிக்கெட்டும் வடக்கு கிழக்கு விளையாட்டு வீரர்களின் எதிர்காலமும் (வே போல் பிரகலாதன்) நிலத்திலும் புலம்பெயர்ந்தும் வாழுகின்ற அனைத்து இலங்கை சார்ந்த மக்களும், விளையாட்டுப்பிரியர்களும் எதிர்பார்த்து காத்திருக்கும் லங்கா பிரேமியர் லீக் கிரிக்கெட் ஆட்டங்கள் வியாழன் 26/11/2020 இன்று ஆரம்பமாகவிருக்கிறது. இந்தியன் பிரேமியர் லீக் ஆரம்பிக்கப்பட்டு அது உலகளாவிய பெயரையும் ஈர்ப்பையும் விளையாட்டிலும் முதலீட்டிலும் பெற்று புகழடைந்த மாத்திரத்தில் Twenty20 என்ற கிரிக்கெட் …

  18. கொவிட்- 19 மரணங்கள்: ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய முஸ்லிம் சமூகம் அனுமதி கோருவது நியாயமானதா? அஷ்ஷெய்க் ஷிஹான் ஜவாத் இன்று கோவிட்- 19 காரணமாக மரணிக்கும் முஸ்லிம்களை தமது மார்க்கத்தின் அடிப்படையில் அடக்கம் செய்ய முஸ்லிம் சமூகம் அனுமதி வேண்டுவது பல்வேறு தளங்களில் வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. சமூகத்தின் பிடிவாதாமா? அல்லது இஸ்லாத்தின் பொருத்தமற்ற வழிகாட்டலினால் எழுந்துள்ள பிரச்சினையா? இந்த விவகாரத்தை வைத்து அரசியல் செய்யப்படுகிறதா? முஸ்லிம் சமூகம் வேண்டுமென்றே பழிவாங்கப்படுகின்றதா? என்று பல கேள்விகள் எழுப்பப்பட்டும் வருகின்றன. இந்நிலையில், கோவிட்- 19 காரணமாக மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்குமாறு…

  19. காந்திய தேசத்திடம் அரசியல் தீர்வுக்காக கையேந்துவது எவ்வகையில் அறம்’ 45 Views தமிழ் அரசியல் தலைமைகள் காந்திய தேசத்திடம் அரசியல் தீர்வுக்காக கையேந்துவது எவ்வகையில் அறமாகும் என ஜனநாயக போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது. ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப்பேச்சாளர் துளசி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், “உலகில் நடைபெற்ற அடக்கு முறைகளுக்கெதிரான அத்தனை போராட்டங்களும் வெற்றி பெற்றதின் பின்னர்தான் விடுதலைப் போராட்டமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதுவரையில் அவ்வகையிலான போராட்டங்கள் தீவிரவாதம் என்றும் பயங்கரவாதம் என்றும் முத்திரை குத்தப்பட்டு இழிவுபடுத்தப்பட்டதே வரலாறு. இலங்கை சுதந்திரத்திற்கு பின்னர் ஆட்சியாளர்கள் தமது ஆட்சியுரிமையை தொட…

  20. பல தடைகளையும் தாண்டி கிழக்கில் மாவீரர் நாள் நினைவேந்தல்கள் -தென்னகன் 56 Views தமிழர் தேசம் இன்று கண்ணீருடனும் மனக்குமுறலுடனும் தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. எங்களுக்காக போராடிய எங்கள் உறவுகளின் நினைவைக்கூட நினைவுகூரமுடியாத வகையில் சிங்கள தேசம் இன்று தமிழர்களின் குரல் வளையினை நசித்துக் கொண்டிருக்கின்றது. தமிழர்களின் போராட்டம் என்பது வெறும் பயங்கரவாதப் போராட்டம் என்று கூறிக்கொண்டு அரசாங்கம் பல்வேறு வகையான பிரசாரங்களை முன்னெடுத்தாலும், தமிழ் மக்கள் மத்தியில் அந்த போராட்டமும் அதன் மூலம் ஏற்பட்ட இழப்புகளும் என்றும் நீறுபூத்த நெருப்பாகவே இருந்து வருகின்றது. யுத்தம் மௌனிக்கப்பட்டு 11வருடங்களைக் கடந்துள்ள …

  21. ஊடக ஒழுங்குமுறைக்கான வழிமுறைகள், கருத்துச் சுதந்திரத்தையும் விமர்சனங்களையும் தடுப்பதாகவே அமையும்- ஹரினி அமரசூரிய. November 27, 2020 8:20 am GMT http://athavannews.com/wp-content/uploads/2020/11/Harini-Amarasooriya-.jpg அரசாங்கத்தின் ஊடக ஒழுங்குமுறைக்கான வழிமுறைகள் என்பது, ஒழுங்குபடுத்துவதல்ல, மாறாக கருத்துச் சுதந்திரத்தையும் விமர்சனங்களையும் தடுப்பதாகவே அமையும் – JVPயின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய 25.11.20 ஆற்றிய வரவு செலவுத்திட்ட உரை – தமிழில் நடராஜா குருபரன். “ஊடகத்திற்கான ஒழுங்குமுறை வழிமுறைகளை அறிமுகப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கை ஆழ்ந்த கவலைக்குரியது, ஏனென்றால் இலங்கையில் வரலாற்று ரீதியாக இந்த அரசாங்கத்தின் …

  22. அரசியல் பலத்துடன் பாரிய சிங்களக் குடியேற்றம்; மட்டு மாவட்ட எல்லையில் நடப்பது என்ன? தென்பகுதியில் ஆட்சிக்கு வரும் சிங்களத் தலைவர்கள் கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டு தமிழ் பேசும் மக்களின் இனப்பரம்பரை குறைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுவந்தமை வரலாறு. அந்தவகையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலத்தமடு, மாதவனை பகுதியில் உள்ள மேய்ச்சல்தரை காணிகளை பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் அபகரிப்பதனால் அப்பிரதேச கால்நடை வளர்ப்போரின் ஜீபனோபாயத் தொழிலான பால்பண்ணைத்தொழில் பாதிப்படைந்துள்ளது. மாவட்டத்தின் எல்லை கால்நடைகளின் மேய்ச்சல் தரைக்க…

  23. மாவீரர் நினைவேந்தலும் அடையாளம் பேணலும் -புருஜோத்தமன் தங்கமயில் “சோறும் புட்டும் வடையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த தமிழ் மக்களுக்கு, பீட்சாவை (இத்தாலிய உணவு) சாப்பிடும் நிலையை உருவாக்கினோம்...’’ என்று யாழ். தலைமைப் பொலிஸ் பரிசோதகர் தெரிவித்திருக்கின்றார். மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு எதிராக, நீதிமன்றங்களின் ஊடாக, முற்கூட்டியே தடை உத்தரவுகளைப் பொலிஸார் பெற்று வருகிறார்கள். அது தொடர்பிலான வழக்கு விசாரணையொன்றின் போதே, யாழ். நீதவான் நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி, தமிழ் மக்களின் உணவுப் பழக்க வழக்கம் பற்றி, தன்னுடைய எகத்தாளமான கருத்தை முன்வைத்திருக்கிறார். இலங்கை அரச இயந்திரம், எவ்வளவு தூரம்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.